Page 156 of 210 FirstFirst ... 56106146154155156157158166206 ... LastLast
Results 1,551 to 1,560 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1551
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகம் பல திறமையான தலைவர்களைத் தந்துள்ளது. ஆனாலும், காமராஜரையும் எம்ஜிஆர் அவர்களையும் மறுபடி மறுபடி நினைத்துக் கொள்கிற அளவிற்கு வேறு யாரையும் நினைவு கொள்வதில்லை. அரசியல் காரணங்களுக்காக வேறு சிலர் வந்து போகலாம். ஆனால் இவ்விருவரையும் தரக்குறைவாக பேசுகிறார்கள் குறைவு. எம்ஜிஆர் பிரபலமான சினிமா நடிகர் என்பதற்காக மட்டுமே மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்பது தவறு.
    இருவரும் ஒரு மகத்தான காரியம் செய்தார்கள். ஏழைக் குழந்தைகளுக்கு வயிறார உணவிட்டார்கள்.
    இருவருமே படிக்காதவர்கள். வறுமை. ஆனால் இருவரும் தாங்கள் தான் படிக்கவில்லையே, மற்றவர்கள் ஏன் படிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. தாங்கள் பெரிதாக படிக்க முடியாததற்கு என்ன காரணம் என்று யோசித்து, அந்த நிலைமை இன்னொரு ஏழைக் குழந்தைகளுக்கு வரக்கூடாது என்று நினைத்தனர்.
    எம்ஜிஆர் சத்துணவு திட்டம் கொண்டு வந்தபோது அறிவுஜீவிகள் எதிர்ப்பது மட்டுமல்லாமல் கிண்டல் செய்தனர். 120 கோடி ரூபாய் தண்டம் என்று பிரசாரம் செய்தனர்.இந்த நாற்பது வருடங்களில் உணவு செரித்து விட்டது. ஆனால் பள்ளிக்கூடத்தைக் கனவிலும் நினைக்க முடியாத லட்சக்கணக்கான ஏழைகளுக்கு கல்வியறிவு கிட்டி விட்டது.
    மதிய/சத்துணவு திட்டங்களுக்கு முன்பும் கூடத்தான் அந்த 120 கோடி ரூபாய் கஜானாவில் இருந்திருக்க வேண்டும். அந்தப் பணம் எந்த வகையில் செலவிடப்பட்டது, என்ன வளர்ச்சி காணப்பட்டது என்று பிரச்சாரகர்கள் யாரேனும் இன்று கூற முடியுமா?

    எம்ஜிஆர் அவர்கள் பள்ளிக்கல்வி சொற்பமாகக் கிடைக்கப் பெற்றவர். ஒரு உண்மை சம்பவம், தானே அனுபவிக்கப் பெற்ற என் வயதான நண்பர் கண் கலங்கிச் சொன்னது. இவர் பல வருடங்கள் முன்பு அரசுத் துறையில் தலைமை என்ஜினீயராக ஓய்வு பெற்றவர். 1978ம் வருடம், என் நண்பர் ஒரு ஜூனியர் என்ஜினீயர். நாகை அருகே வடிகால் வெட்டும் முயற்சியில் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அவர் வேலை செய்யும் இடத்தில் அருகாமையில் சாலை போடும் பணி மும்முரமாக நடந்து வந்தது.
    அன்று ஞாயிற்றுக்கிழமை. இரண்டு துறைகளிலும் வேலை நடக்க வில்லை. இவர் மட்டும் மேற்பார்வையிட வந்து கிளம்பும் தருவாயில் பெரும் பரபரப்பை பார்த்தார். விசிரித்தபோது முதல்வர் அந்த வழியாக இன்னும் அரை மணியில் வரப்போவதாகக் கூறினார்கள். விஷயம் காட்டுத்தீ போல் பரவி அருகாமையில் இருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூடிவிட்டது. என் நண்பர் அவரது பரம விசிறி. அவரும் கூட்டத்தைப் பிளந்து தரிசனத்திற்காக நின்று கொண்டார். சாலையில் வேலையின் காரணமாக ஆங்காங்கே தார் டின்களும், உபகரணங்களும், ஏழெட்டு டின் நிறைய தண்ணீர் நிரம்பிக் கிடந்தன. எம்ஜிஆர் வந்து விட்டார். திரளான கூட்டத்தைக் கண்டதும், என்ன தோன்றியதோ வாகனத்தை நிறுத்தி, ஒரு சிறு கணம் பொதுவாக நலம் விசாரித்தார். அப்புறம் சட்டென்று திரும்பி உதவியாளரிடம், "ஆமாம்.. ரோடு போடறாங்களே.. ஏன் இன்னிக்கு யாரையும் காணோம்"
    அவர் பணிவாக, " ஐயா.. இன்றைக்கு விடுமுறை"
    "ஓ.. கவர்மெண்ட் விடுமுறையோ? நாமள்ளாம் கவர்மெண்ட் இல்லை போல" என்று கூறிக் கொண்டே யாராவது பணியாளர்கள் இருக்காங்களான்னு பாருங்க என்றார். Gr...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1552
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Hema மேடம் நன்றி. இந்த மழைக் கோட்டு செய்தியை நான் சட்டென கடந்து போனேன்.ஆனால் அதற்கு பின்னால் இருந்த கஷ்டங்களை எம்.ஜி.ஆரின் உடையலங்கார நிபுணர் எம்.ஜி.முத்து விளக்கியபோது அதன் கஷ்டம் புரிந்தது.எப்படி தயாரிப்பது என்பதற்கான மாடலே அவரிடம் இல்லை.திக்கான தார்ப்பாய் அதிக எடை.மடித்து வைக்க முடியவில்லை.அதன் பிறகு தான் புதிதாக வந்த ப்ளாஸ்டிக் ஷீட்டுகள் வாட்டர் ப்ரூஃப் என தெரிந்தது.மடக்கி வைக்க எளிதாக இருந்தது.நேரான ஓப்பனா சைடு ஓப்பனா?. சந்தேகம்.சைடு தான் பெட்டராகத் தெரிந்தது.நடக்கும்போது எளிதாக இருக்க மெனக்கெட வேண்டியிருந்தது.கடைசியில் அசத்தலான வடிவம் வரும்வரை எம்.ஜி.ஆர்.விடவேயில்லை.அதன் பிறகு தான் கம்பெனிகளுக்கே அந்த ஐடியா வந்தது.இந்த மொழியைச் சேர்ந்தவர் இந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற பாகுபாடெல்லாம் அவரிடம் இல்லை.இல்லாதோர் எல்லோரும் ஓரினம் என்பது தான் அவரது கருத்து.சினிமா நடிகராக அவரை நாம் பார்ப்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்பது அவரது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். .......ASFayaz...

  4. #1553
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Boopathy சார் எவ்வளவு தான் பேசினாலும் சிலரை திருப்திப்படுத்துவது கடினம்.அவர்களது ஆழ் மனதின் ஆழமான வடுவை அவர்களால் மட்டுமே நீக்க முடியும்.அரசியலில் அவரது வெற்றிடம் அப்படியே இருப்பது போலவே திரையுலகிலும் அந்த வெற்றிடம் அப்படியே தான் இருக்கிறது.நலிவுற்ற பல கலைஞர்கள் இப்போதும் எம்.ஜி.ஆர்.திரும்ப வரமாட்டாரா என ஏங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.இப்போதைய ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது அதே வெற்றிடம் இங்கும் தெரிகிறது....ASF...

  5. #1554
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Fayaz ஸார், மனமார்ந்த வாழ்த்துக்கள் ����காலையில் இருந்து காத்திருந்த எதிர்பார்ப்பு நிறைவேறியது ���� மக்கள் திலகம் MGR தமிழ் திரைத்துறைக்கும் அரசியல் களத்திலும் ஒரு சகாப்தம் என்று உணரும்போது, உங்களால் அவருக்காக எழுதப்படும் பதிவுகளும் சரித்திர சகாப்தமே �� எவ்வளவு செய்திகள், சம்பவங்கள், அவர் குனநலன் கூறும் நினைவு கோர்வைகள் ��சைக்கிள் ரிக்ஷாவில் ஒரு கொள்கையாக நான் இதுவரை பயணம் செய்தது இல்லை, லக்னோ, ராய்ப்பூர் நகரங்களில் இருந்தபோதும், வசித்தபோதும் ஒரு நாளும் மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் அவலம், அதுவும் உயிரோடு இருக்கும்போது எனக்கு உடன்பாடு இல்லை. இறந்தபின் வேறு வழியில்லை, இப்போது அதற்கும் வண்டிகள் வந்து விட்டது. பொன்மனசெம்மல் பெயருக்கேற்ப பொன் மனம் கொண்டவரே ������...Hema Viswanath...

  6. #1555
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அதற்குள் என் நண்பர் ஆர்வக்கோளாறினால் முன் வந்தார். மக்கள் திலகத்திடம் அளவளாவக் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிட அவர் விரும்பவில்லை.
    மக்கள் திலகம் அவரை ஏன் இறங்கப் பார்த்து யாருப்பா தம்பி நீ என்றார். இவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, தான் என்ஜினீயர் என்றும் கூறிக் கொண்டார்.
    ஓ.. அப்படியா.. என்று உதவியாளர் பக்கம் திரும்பி, "இந்தப் பையனை உடனடியாக சஸ்பெண்ட் பண்ணிடுங்க" என்று கூறிவிட்டு, கோபமாக இவரிடம் திரும்பி"இதுதான் ரோடு போடுற லட்சணமா" என்று கூறியவாறே காரில் ஏறி விட்டார். செம்பருத்தி போலிருந்த அந்த முகம் மேலும் சிவந்து விட்டிருந்தது.
    என் நண்பருக்கு இதென்னடா வீண்வம்பு என்று தோன்றுகிறது. அழுகை நெஞ்சை முட்ட, மக்கள் திலகத்தை நெருங்க முயல, உதவியாளர் தடுத்து, "அதான் ஐயா சொல்லியாச்சு இல்லே... அதுக்கு மறு உத்தரவு கொடுக்க ஆண்டவனாலேயே முடியாது. ஆமா.. உன் பேரென்ன சொன்னே"
    இவர் சொன்னவுடன், "என்ன பாய், நமாஸ்லாம் ஒழுங்கா பண்றவன்னு நெத்திலேயே தெரியுது.. நமாஸ் பண்ணா மட்டும் போறுமா.. நியாயமா நடந்துக்க வேண்டாமா" என்றார்.
    என் நண்பர் அவரை மேக்கரித்து, காரில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த முதல்வரிடம் சென்றார். அழுகிற குரலில், "ஐயா.. இந்த ரோடு வேலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பக்கத்தில் வாய்க்கால் மராமத்து செய்வதில் ஈடுபட்டிருக்கிறவன்" என்றார்.
    அவர் நம்பவில்லை. அப்படியா.. ஆனா என் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாயே?
    ஐயா.. நான் என்ஜினீயர்.. ஆர்வக்கோளாறினால் நான் எல்லா வேலையையும் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன்.. அந்த மாதிரி தெரிஞ்ச விசயத்தை தான் கூறினேன். நான் தங்களின் தீவிர விசிறி. இதுவரை நேரில் பார்த்ததில்லை என்பதால் ஓடி வந்தேன். பேச சந்தர்ப்பம் என்றார் கிடைத்ததும் விட மனசில்லாததால் எனக்குத் தெரிந்ததைக் கூறினேன் என்றார்.
    ஒருக்கணம் கூட தாமதிக்கவில்லை எம்ஜிஆர். கார் கதவைத் திறந்து சரேலென்று இறங்கி, என் நண்பரின் கையைப் பிடித்து மன்னிப்பு கோரினார்.*காருக்குள் தானே துழாவி, தனக்கு வேறெங்கோ யாரோ போட்ட சந்தனமாலை ஒன்றை தன் கையாலே அவருக்கு அணிவித்து, தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டார்.
    "என்ன பலம் அவருக்கு? எலும்பெல்லாம் நொறுங்கிவிடும்போல ஆனால் மிகப்பிடித்ததாக இதமாக இருந்தது அந்த வலி என்று பின்னாட்களில் என் நண்பர் நினைவு கூறினார்....gr...

  7. #1556
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு முனைவர் பட்டத்துக்குறிய ஆய்வு கட்டுரை போல் அமைந்தது என்றால் மிகையாகாது. அவரை அழகாக தாங்கள் வர்ணித்த முறை அப்படியே என்னை அந்த பள்ளி,கல்லூரி நாளில் அவரை எப்படி ரசித்து மகிழ்ந்தோம் என்பதை நினைவு படுத்தியது. ஒரு உற்சாகம் உத்வேகம் அவரால் உண்டாகும். இங்கே பல நண்பர்கள் அவரை ரசித்து அவரின் பெருமைகளை உணர்ந்து கொண்ட நிகழ்வை இன்று கண்கூடாக பார்க்கின்றேன். அவரை விமர்சனம் செய்த சகோதரா சகோதரிகள் இன்று மனதார புகழ்ந்து கைதட்டும் போது அவரின் மதிப்பு வெறும் நடிப்பை தாண்டி நிற்பதை உணர முடிகிறது.
    அருமையான கட்டுரை எழுத வைத்த அந்த மக்கள் திலகம் அவர்களின் நினைவு என்றும் நம்முடன் நிலைத்து நிற்கும்.
    நன்றி வணக்கம் நண்பரே.
    தொடரட்டும்... Prabhakaran Mdu.........

  8. #1557
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றும் அணையாத ஒளி விளக்கு #எம்_ஜி_ஆர்! – நினைவுநாள்!
    டிசம்பர் 24,

    எம்.ஜி.ஆர் என்ற மனிதர்..

    புரட்சி நடிகராக,

    மக்கள் திலகமாக,

    நடிக மன்னராக,

    வசூல் சக்கரவர்த்தியாக,

    மூன்றெழுத்து மந்திரமாக,

    பொன்மனச் செம்மலாக,

    மக்களின் இதயக்கனியாக,

    ஏழைகளின் ஒளிவிளக்காக,

    தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக,

    மன்னாதி மன்னனாக…

    வாழ்ந்து… மறைந்து… இன்றும் புவி போற்றிடும் புரட்சித் தலைவராக திகழ்கிறார். வாழ்க்கைச் சக்கரத்தில் படிப்படியாக தமது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்த ஒரே துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கடவுள் முருகன் புகழ் பாட பாட நா மணக்கும். அது போல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழ் எழுத எழுதவார்த்தை இனிக்கும். வாழும் காலத்தில் இவர் காணாத சவால்களும் இல்லை சறுக்கல்களும் இல்லை. மறைந்த காலத்தில் இவரைப் போல் சரித்திரம் படைத்தவர் யாருமில்லை என்று உலகமே இன்றும் வியந்து நிற்கிறது. வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் வாங்க வேண்டும் இவர போலயார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்று அவர் பாடிய வரிகள் அவருக்கே மிக பொருத்தம்.

    எம்.ஜி.ஆர். திரையுலக சாதனைகள்

    சதிலீலாவதி திரைபடத்தின் மூலம் சினிமாவின் திரைவாசலை அடைந்த எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. எம்.ஜி.ஆர் நடித்து 100 நாட்களையும் மீறி வெற்றிக் கண்ட படங்கள் 86 படங்கள், வெள்ளிவிழா கண்டவை 12, இவர் இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படமும் என் அண்ணன் படமும் 300 நாட்கள் திரையரங்கம் கண்டன என்பது குறிபடதக்கவையாகும். கடைசி படம் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன். இவற்றில் 17 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அத்தனையும் வெற்றிப்படங்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் மூலம் முதன் முதலில் வண்ணப் படத்தைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருதுபெற்ற முதல் தமிழ்படம் எம்.ஜி.ஆர். நடித்த மலைக்கள்ளன். இவர் நடித்த படங்களில் தெலுங்கு மொழிகளிக்கு மாற்றம் கண்ட படங்கள் 60, இந்தி மொழிக்கு மாற்றம் கண்டவை 9 படங்கள் ஆகும். எம்.ஜிஆர். நடித்த அதிக படங்களை இயக்கிய பெருமை ப.நீலகண்டன் , எம்.ஏ திருமுகத்தையும் சாரும். அதிக படங்களை தயாரித்த நிறுவனம் தேவர் பிலிம்ஸ். அதிக படங்களுக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதமும் மகாதேவனும் ஆவர். எம்.ஜி.ஆர் இவர் இயக்கிய படங்கள் மூன்று. நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகியவையாகும்,

    இவரது நடிப்பில் வந்த படங்கள் நாடோடி மன்னன், அரசிளங்குமாரி , மந்திரிகுமாரி, பணத்தோட்டம் , தாயிக்கு பின் தாரம், பாசம், திருடாதே, அடிமைப்பெண் ,ஆனந்தஜோதி, மன்னாதி மன்னன், நம்நாடு, ஒளிவிளகு தாயைக் காத்த தனயன், அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், இப்படி எல்லாமே முத்தான படங்களாகஅமைந்தன. அன்றையக் காலகட்டத்தில் பானுமதி, டி.ஆர்.ராஜகுமாரி, சாவித்திரி, பத்மினி, செளகார்ஜானகி,சரோஜாதேவி,ஜெயலலிதா, கே.ஆர். விஜய, காஞ்சனா, லதா, மஞ்சுளா, லெட்சுமி என்று பெரும்பாலும் எல்லா நடிகைகளுடன் நடித்துவிட்டார் இவர்களில் ஜெயலலிதா 28 படங்களில் நாயகியாகவும், சரோஜா தேவி 26 படங்களில் நாயகியாகவும் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளனர்.

    எம்.ஜி.ஆரின் திரையுலக வில்லன்கள்

    தமிழகத்தின் தியேட்டர்களில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என். நம்பியாராகத்தான் இருக்கமுடியும். ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் எம்.ஜி.ஆரை அவர் அடிக்கும்போது கதறியவர்கள், அந்த நேரத்தில் நம்பியார் கையில் கிடைத்தால் குதறியிருப்பார்கள். ‘நான் ஆணையிட்டால் என்று வாத்தியார் கிளம்பி நம்பியாரை அடிக்கும் போது ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று. பழி உணர்வைத் தீர்த்துக் கொண்ட திருப்தி. திரையில் நம்பியாரின் அருமையான வில்லத்தனத்தாலே, நிஜத்தில் தனது ஹீரோயிஸத்தை வளர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். கருப்பு வெள்ளைக் காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. எப்போதுமே எம்.ஜி.ஆர். – நம்பியாரின் கூட்டணி என்றால் வசூல்மழைதான். பி.எஸ் வீரப்பா, எஸ் அசோகன் போன்றோரும் இந்த கூட்டணியில் சேர்ந்தவர்கள் தான்.

    எம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் & பாடல்களும்

    சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான சிந்தனைகளையும், ஒழுக்கம் தரும் பண்புகளையும் தமது படங்களின் கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவ்ர் எம்.ஜி.ஆர். அநாகரீக வார்த்தைகளை பேசுதல். புகைபிடித்தல், குடிபழக்கம் போன்றவறை தமது படங்களில் முற்றார் தவிர்த்த இவர் நடிகர் என்பதையும் மீறி, சமுதாய பற்றாளராகவும் பரிணாமித்தார். எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தன.

    நாடோடி: படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அத தர முடியும்.

    நம்நாடு: எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.

    தாயைக் காத்த தனயன்:பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.

    ஆயிரத்தில் ஒருவன்: யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.

    விவசாயி: நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.

    கணவன்: சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது.

    சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு போர் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..

    வேட்டைக்காரன் – உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

    நாளை நமதே – நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி சென்றால் நாளை நமதே

    நம்நாடு – அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.

    உலகம் சுற்றும் வாலிபன் – சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.

    திருடாதே – திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!

    மன்னாதி மன்னன் : அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..

    படகோட்டி : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.

    இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற கூட்டம் உண்டு.

    எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். கவிஞர் வாலி, பாபநாசம் சிவன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, அ.மருதகாசி, ஆலஙகுடி சோமு ஆகியோர் எம்.ஜி.ஆரின் பாடகளில் மூலம் மக்களைக் கவர்ந்தவர்களாவர்

    அ முதல் அஃகு வரை....ns...

  9. #1558
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    டேய் சைமா! உன் 10வ*து வ*ய*தில் அதிமுக*வை ஆட்சிக்க*ட்டிலில் அம*ர்த்திய* புர*ட்சித்த*லைவ*ர் நீ வ*ய*துக்கு வ*ரும்வ*ரை (21 வ*ய*துக்குள்) மூன்று முறை தொட*ர்ச்சியாக* த*மிழ*க*த்தை ஆண்ட* ஒரே முத*ல்வ*ர்..நீ அர*சிய*லில் அனா,ஆவ*ன்னா ப*டிப்ப*த*ற்கு முன்பே டாக்ட*ரேட் பெற்ற*வ*ர் புர*ட்சித்த*லைவ*ர்..

    அவ*ர*து ஆட்சி #பொற்கால*மாக* இருந்த*தால்தான் ம*க்க*ள் நினைவுக*ளில் இன்றும் வாழ்கிறார்..என்றும் வாழ்வார்..

    உன்கையில் நாட்டை கொடுத்தால் #க*ற்கால*த்திற்கு கொண்டுவிடுவாய் என்ப*தால் தான் சிங்கிள் டீக்கு கூட* வ*ழியில்லாம*ல் நிற்கிறாய்! நீ த*லைவ*னாக* கூறிக்கொண்டு திரியும் பிர*பாக*ர*னின் வ*ர*லாற்றைப்ப*டி..புர*ட்சித்த*லைவ*ரை எந்த* அள*வு உய*ர்வாக* ம*தித்தார் என்ப*து புரியும்..ஒரு தொகுதியிலாவ*து டெபாசிட் வாங்க* திராணி உண்டா? நாவை அட*க்கு..உன் வ*ண்ட*வாள*ங்க*ள் எல்லாம் த*ண்ட*வாள*ம் ஏறும்...Shnm...

  10. #1559
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்ன செய்தார் எம்ஜியார்?!
    -------------------------------------------------------

    -ஜாதி என்பது கொடுமையானது...

    அதைவிட கொடுமையானது...

    ஜாதி சான்றிதழ் வாங்குவது ...

    அந்த் ஜாதி சான்றிதழ் கொடுக்கும் அதிகாரம்

    வட்டாட்சியருக்கு உள்ளது... அந்த வட்டாட்சியர்...

    கிரம முன்சிப் கர்ணம் அதற்கு.. மேல் வருவாய்

    ஆய்வாளர் ...இவர்களின் பரிந்துரையின்பேரில்...

    சம்பந்தபட்ட.. நபருக்கு சாதி சான்றிதழ்

    கொடுப்பார்..இதில் வட்டாட்சியர்....

    வருவாய் ஆய்வாளர்... இவர்கள் பிரச்சினை இல்லை...

    காரணம் அவர்கள் அரசு அதிகாரிகள்...

    ஆனால் இந்த கர்ணம் முன்சிப் என்பவை

    கவுரவ பதவிகள்...அந்த கவுரவ பதவிகளில்

    இருந்தவர்கள் மேல் ஜாதிகாரர்கள் ஆண்டகைகள்

    ..இவனுங்க ஜாதி சான்றுக்கு வரும் குடிமக்களை

    புழுவை விட கேவலமாக நடத்துவார்கள் ...

    யாரையும் மரியாதையாக விளிக்க மாட்டர்கள் ஏன்டா...

    என்னடா... என்று அவர் எவ்வளவு வயதில் பெரியவராக

    இருந்தாலும் ஒருமையிலேயே "டா" போட்டு

    ..விளிப்பார்கள் ..இந்த "அல்லக்கை" முண்டங்களை

    ஒரே உத்தரவில் வீட்டுக்கு அனுப்பி அந்த இடத்தில்

    தமிழக தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு எழுதிய

    இளைஞர்களை நியமனம் செய்தார்...

    இன்று பல லட்சம் தமிழக இளைஞ்சர்கள்...

    பல ஜாதிகாரர்கள்... அரசு அதிகாரிகள் ...

    என்று மரியாதையுடன் வலம் வருவதற்கு....

    "எம்ஜியார்"தான் காரணம் என்றும் இருப்பார்...

    "எம்ஜியார்"

    வாழ்க தமிழ்... Matheswaran...

  11. #1560
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவு தேவை?’ன்னு கேட்டார்.

    ‘3 ஆயிரம் தேவைப்படுது’ன்னு சொன்னேன். கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்.

    காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன்.

    அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்.
    ‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்.

    நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ன்னு கேட்டார்.

    ‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்.

    ‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டார். ‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்.

    ‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’ன்னு கேட்டார்.

    ‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்.

    ‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்.

    ‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்.

    ‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்குறேன். அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.

    அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன். இப்பவும்
    எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது. "

    Nallathambi (son of Kalaivanar N.S.Krishnan) அவர்கள் ஆல்பத்திலிருந்து.......

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •