Page 158 of 210 FirstFirst ... 58108148156157158159160168208 ... LastLast
Results 1,571 to 1,580 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1571
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இப்புவியில்_ஒப்பில்லை

    கத்தி வீசிய போதும் கலங்கவில்லை,

    உலகம் சுற்றும் வாலிப*ன் ப*ட*த்தின் எடிட்டிங்கின் போது மின்வெட்டை ஏற்படுத்தி கஷ்டம் கொடுத்த
    போதும்,சுணங்கவில்லை,

    துப்பாக்கிக்குண்டு தொண்டையை
    கிழித்த போதும் கொண்ட லட்சியத்தில் குறைந்து விடவில்லை,

    தன்னால் உயர்ந்தவரே தன்னை நீக்கியபோது தளர்ந்துவிட வில்லை,

    காரணம் இல்லாது கழக அரசை இந்திராகாந்தி
    கலைத்த போதும் க*ல*ங்கிவிடவில்லை,

    இரண்டே பாராளுமன்ற தொகுதியில் வெற்றிய*டைந்து முப்பத்தேழு தொகுதியில் மொத்தமும் இழப்பு என்றபோதும் முடங்கிவிட வில்லை,

    கழகத்தின் ஆட்சி நடக்கையிலேயே
    கருணாநிதி கட்சி உள்ளாட்சித் தேர்தலில்
    கணிசமாக ஜெயித்த போதும்
    குழம்பி விடவில்லை,

    நம்மிடம் இருந்தோரே நமது கழகம் தொடங்கி தன்னை எதிர்த்தபோதும்
    தயங்கிவிட வில்லை,

    பிணி வந்து தம்மை பணி செய்யாது தடுத்த போதும் பணிந்துவிட
    வில்லை,

    ஐஸ் பெட்டியில் உறங்குகிறார் என்று
    அவதூறு பாப்பிய போதும் ஆவேசம் கொள்ளவில்லை,

    மலையாளி என்றெல்லாம் மட்ட ரக தாக்குதலுக்கு மனம்
    நோக*வில்லை..

    துளைக்க வந்த துப்பாக்கி ரவைக்கும்
    தொண்டையிலே இடம் தந்த
    தொண்டை நாட்டு வள்ளல் துவண்டு விடவில்லை,

    இமாலய வெற்றி வந்த போதும் இறுமாப்பு இல்லை,

    தடைகள் வந்த போதும் தடுமாற்றம் இல்லை,

    வாரி கொடுத்த வள்ளல் கரங்கள்
    ஒருநாளும் வற்றி விடவில்லை,

    ஓடி ஓடி உழைத்து ஊருக்கே கொடுத்த
    ஒப்பில்லா தலைவருக்கு இப்புவியில்
    ஒப்புமையும் இல்லை,

    எனவே தான் வருடங்கள் கரைந்தாலும்
    வளர்பிறை சந்திரனாய் நிலைத்த புகழ் கொண்ட நிகரில்லா புனிதருக்கு,
    ஈடில்லை இணையில்லை,

    திண்டுக்க*ல் வெற்றியில் தொட*ங்கி இறுதியில் நெல்லையில் வெற்றி அடைந்த*போதும் த*லைக்க*ண*ம் ஏற்றிய*தில்லை..

    ப*ங்க*ளாவில் வாழும் நிலை வ*ந்த*போதும் ப*ழைய* வாழ்க்கையை ம*ற*ந்தாரில்லை..

    முத*ல்வ*ராக* இருந்த*போதும் த*ன*து சிகிச்சை செல*வை அர*சே ஏற்க* முய*ன்றாரில்லை..

    நீங்கள் காட்டிய இருவிரல் இயக்கத்திற்கோ
    அன்றும்,இன்றும்,என்றும்,
    குறையில்லை.

    ப*கிர்ந்து திருத்த*ப்ப*ட்ட* ப*திவு............prn...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1572
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்.—வள்ளல்
    இருந்தாய் எனுமொரு நிரந்தரம்.
    கோடியிலொருவன் மனிதன்-எம்மில்
    கூடி வாழ்ந்த அதிசயம்.

    வண்ணமும் எண்ணமும் தங்கம்—நீ
    வாழ்ந்த வரையும் சிங்கம்.
    இன்னமும் உன்னையும் வெல்ல—இனி
    என்றும் பிறப்பார் இல்லை.

    கடவுள் தானவன் முதலாளி—அவன்
    கண்டதில் நீயொரு தொழிலாளி.
    கொடுப்பது எல்லாம் கொடுத்தான்.—அவன்
    கொடுத்ததை எல்லாம் கொடுத்தாய்.

    மரணம் என்பது உனக்கில்லை—இந்த
    மண்ணும் மரணம் ஆவதில்லை.
    இன்னும் அள்ளிக் கொடுக்கிறாய்—என்றும்
    ஏழையின் மனங்களில் சிரிக்கிறாய்.

    இருந்த போது இழித்தோரும்—உயிர்
    துறந்த போது பாடினர்.
    இன்றும் உன் முகம் காட்டாமல்-ஓட்டு
    எவர்தான் துணிவரோ கேட்டுத்தான்!.

    மறைந்தும் வழங்கும் வள்ளலே—உனை
    மறைத்திட எது எழும் இமயமே!
    நிறைத்தும் உன்புகழ் போற்றுமே!---தன்
    திரைகளால் பாடி வங்கமே!...Ai.Das...

  4. #1573
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர் பதிவு - உ...த்தமன் 6
    ----------------------------------------------
    சென்ற பதிவில் "வேட்டைக்காரனி"ன் வேட்கையை பார்த்த நாம் இந்த வாரம் "நவராத்திரி"யும் "முரடன் முத்து"வும் "படகோட்டி"யிடம் பட்ட பாட்டை பார்க்கலாம். "நவராத்திரி" வி.சி.அய்யனின் 100 வது படம் அல்லவா? கைபிள்ளைகள் உற்சாகமாக பில்ட்-அப் வேலையை
    ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை உலகத்திலேயே எந்த நடிகனும் 9 வேடங்களில் நடித்ததில்லை ஆ,ஊ என்று கயிறு திரித்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் இதற்கு முன்னால் 1950 களில் 11 வேடங்களில் கலக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் படமான "திகம்பர சாமியாரி"ல் நம்பியார் 11 வேடங்களில் தோன்றியதோடு மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.
    படமும் போரடிக்காமல் விறுவிறுப்பாக நகரும். நம்பியார் ஒரு போதும் 11 வேடங்களில் நடித்ததை பெருமையாக சொன்னதில்லை. ஒரு வேடத்தில் நடித்தாலே நம்மை இம்சை படுத்தும் அய்யனின் கைஸ்கள் 9 வேடம் கிடைத்தால் நம்மை விடுவார்களா? பல வேடங்களில் அதிகமான குளோஸப் காட்சிகளில் வந்து அய்யன் நம்மை பயமுறுத்திப் பார்த்தார்.

    ஆனால் ஜோஸப் தியேட்டரில் தீபாவளியன்று வெளியான இந்தப் படத்தோடு "முரடன் முத்து" என்ற பந்துலு படம் காரனேஷனில் வெளியாகி வெகு விரைவில் பெவிலியனுக்கு திரும்பியது. பாலகிருஷ்ணாவில் "உல்லாச பிரயாணம்" என்ற. Ssr நடித்த படம் வெளியாகி 10 நாளில் முக்தி அடைந்து விட்டது. எங்க ஊர் தாஜ்மகால் சார்லஸில் புரட்சி நடிகரின் "படகோட்டி" வெளியாகி ஒட்டு மொத்த கவனத்தையும் தன்பால் ஈர்த்துக் கொண்டது.

    அதுவும் மீனவர் குல மக்களின் தேசிய பாடலான 'தரைமேல் பிறக்க வைத்தான்' அவர்களை பரவசப்படுத்தியது.
    ஒட்டு மொத்த மீனவர்குலமும் சார்லஸில் சங்கமமாயினர் என்றே
    சொல்லலாம். முதன்முதலில் நான் குடும்பத்தை விட்டு என் நண்பனுடன் அதுவும் வெளிவந்து 25 நாட்களுக்கு பிறகு சென்று பார்த்ததை தனிபதிவாக போட்டிருக்கிறேன். படம் பார்த்த பிரமிப்பு எனக்கு இன்று வரை தொடர்கிறது என்றே சொல்ல வேண்டும்.

    அதன்பின் எத்தனை தடவை படகோட்டியை பார்த்தேன் என்ற ஞாபகம் இல்லை. 1968 ல் ஒரு தடவை ஜோஸப்பில் வெளியாகி தலைவரின் புதுப்படங்களை வெல்லும் அளவு கூட்டம். அய்யனின் பல புதிய படங்களை காலில் போட்டு சவட்டியது என்றே சொல்ல வேண்டும். ஆனால் எம்ஜிஆர் படத்தை 50 நாட்கள் ஓடவிடாமல் செய்வதற்கு கைஸ்கள் நல்ல தந்திரம் செய்வார்கள். மீதம் இருக்கின்ற மூன்று தியேட்டர்களிலும் தொடர்ந்து தலைவரின் பழைய படங்களை திரையிட்டு மினிமம் வசூலை குறைக்க முயற்சி செய்வார்கள்.

    ஆனால் அய்யனுக்கு அந்தப் பிரச்னை கிடையாது. அய்யனின் புதுப்படத்தை பார்க்கவே ஆள் வராது. இதில் பழைய படத்தை திரையிட்டு என்ன செய்ய? பாவம் கைஸ்கள். இருப்பினும் மீசையில் மண் ஒட்டாத கதையாக அய்யனின் அறுவை படங்களை சிலாகித்து பேசி அவர்களுக்குள்ளே பரவசப்படுவதை பார்த்தால் படு தமாஷாக இருக்கும்.
    மற்ற ஊர்களை காட்டிலும் தூத்துக்குடியில் "படகோட்டி"யின் ஓட்டமும் வசூலும் மிகவும் அதிகம் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்..

    வழக்கம் போல் அய்யனின் கைஸ்கள் "நவராத்திரி"யை 50 நாட்கள் ஓட்டி அவர்களே மகிழ்ந்து கொண்டார்கள்."படகோட்டி"யும்
    50 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது எத்தனை வேடங்கள்
    போட்டாலும் புரட்சி நடிகரின் இயற்கை நடிப்பின் முன் சமாளிக்க முடியாமல் தோற்று போனதை நினைத்து கைஸ்கள் கொதிப்படைந்து போனார்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் புரட்சி நடிகரை தரக்குறைவாக விமர்சிப்பதை வழக்கமாக ஆக்கிக் கொண்டார்கள்.

    ஆனால் அய்யனின் எந்த படத்துக்கும் வசூலை மட்டும் வெளியிட மாட்டார்கள். தலைவரின் பழைய படங்களின் வசூல் அதை விட அதிகம் என்பதை கைஸ்கள் உணர்ந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். "நவராத்திரி"க்கு 9 ராத்திரிதான் உண்டு. ஆனால் கைஸ்கள் எத்தனையோ ராத்திரி கண்விழித்து காத்திருந்து படத்தை ஓட்டும் அதிசயம் அற்புதமானது.

    மீண்டும் அடுத்த பதிவில்........ksr...

  5. #1574
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்ன செய்தார் எம்ஜியார்...
    -----------------------------------
    மாணவர்கள் படிப்பு என்பது 11+1+3+பட்ட மேற்படிப்பு...

    என்று இருந்தது .. அப்பொழுது கல்லூரிகள்

    மாவட்ட தலைநகரில் இருந்தது

    அல்லது 50 கி மீ தூரத்தில் இருக்கும் ..

    இதனால் கிராமபுறத்தில் படிக்கும் மாணவன்

    பாட சுமை .... பெற்றோரை விட்டு பிரிந்து இருக்கும்

    வாழும் சூழல்.... கல்லூரி மாணவர் சேர்க்கையினால்...

    பெரும்பாலும் அந்த புகுமுக வகுப்பில்

    தோல்வி அடைவார்கள்... பி யு சி என்பது கடினமான

    ஒரு காலகட்டமாக இருக்கும்... அதை எளிதாக்கினார்

    பள்ளியிலேயே 10+2+3+பட்ட மேற்படிப்பு என்று

    பட சுமைகளை குறைத்தார் பி யு சி பாடங்களை

    +1 +2 வகுப்பில் புகுத்தினார்... இதனால் கல்லூரிக்கு...

    போகும் மாணவர் எண்ணிக்கை கூடியது ...

    நிறைய பட்ட தாரிகள் தமிழ்நாட்டில் உருவாகினர் ...

    வாழ்க எம்ஜியார்...

    வாழ்க தமிழ்.............cmu...

  6. #1575
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1970 ஆம் ஆண்டு ஏசுநாதர் என்ற திரைப்படத்தில் புரட்சி தலைவர் mgr அவர்கள் நடிப்பதுக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அதற்காக சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டது.
    ஆனால் கடைசி நிமிடத்தில் mgr அந்த படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார். அதற்காக அவரிடம் காரணம் கேட்டபோது...
    "மக்கள் என்னை ஒரு நடிகனாக பார்க்கட்டும், ஒரு அரசியல் தலைவனாக பார்க்கட்டும் ஆனால் என்னை கடவுளாக பார்க்க வேண்டாம். அதனால் தான் இந்த படத்தை மறுத்துவிட்டேன்" என்று கூறினார்.
    அந்த அளவுக்கு அவர் தன் ரசிகர்களை அறிந்து வைத்திருந்தார் என்பது தான் உண்மை. ஆனால் புரட்சிதலைவருக்கோ புத்தர், ஏசுநாதர் போதனைகளின் மீது அளவு கடந்த பக்தி உண்டு.
    "புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக" என்று பாடி நடித்து இருக்கிறார். அவரது பல படங்களில் புத்தர் சிலையோ அல்லது படமோ வருவது போல காட்சி அமைத்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
    #M_G_R...............NSM...

  7. #1576
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும்!
    ����������������������

    m.g.r. மீது மிகவும் மதிப்பு கொண்டவர் என்.டி.ராமராவ். இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டு பேரும் தங்கள் மொழி படவுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கியவர்கள். இருவரும் அரசியலில் ஈடுபட்டு தனிக் கட்சி தொடங்கி முதல் அமைச்சரானவர்கள். எம்.ஜி.ஆர் - என்.டி.ஆர் என்று அழைக்கும்போது ஒலி கூட ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும்.

    எம்.ஜி.ஆர் மீது என்.டி.ராமராவ் வைத்திருந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உதாரணமாக ஒரு சம்பவம். எம்.ஜி.ஆரை வைத்து ‘குமரிக் கோட்டம்’, ‘உழைக்கும் கரங்கள்’ படங்களை எடுத்தவர் கோவை செழியன். அதிமுகவில் இருந்தவர். அவரை முதலாளி என்று செல்லமாக அழைப்பார் எம்.ஜி.ஆர்.

    கோவை செழியன் தெலுங்கிலும் படங்கள் தயாரித்துள்ளார். தெலுங்கில் என்.டி.ராமராவை வைத்து படம் தயாரிக்க விரும்பினார். ராமராவ் அப்போது மிகவும் பிஸியாக இருந்த நேரம். அவருடன் கோவை செழியனுக்கு நெருக்கமும் கிடையாது. தான் தயாரிக்க இருக்கும் படத்துக்கு திடீரென்று கேட்டால் ராமராவ் ‘கால்ஷீட்’ கொடுப்பாரா என்று கோவை செழியனுக்கு சந்தேகம்.

    எம்.ஜி.ஆரை சந்தித்தார். என்.டி.ராமராவை வைத்து படம் தயாரிக்க விரும்பும் தனது எண் ணத்தையும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உடனே, ராமராவுடன் தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர். பேசினார். படத் தயாரிப்பு சம்பந்தமாக ராமராவைச் சென்று சந்திக்கும்படி செழியனிடம் கூறினார்.

    அதன்படி, ஐதராபாத் சென்று ராம ராவை சந்தித்தார் செழியன். ‘எம்.ஜி.ஆர். சொல்லி வந்திருக்கிறேன். உங்களை வைத்து படமெடுக்க...’ என்று செழியன் சொல்லி முடிக்கும் முன்பே, சிரித்துக் கொண்டே அவரை கையமர்த்திவிட்டு என்.டி.ராமராவ் கேட்ட கேள்வி, ‘‘ஷூட்டிங்கை எப்ப வெச்சுக்கலாம்?’’

    எம்.ஜி.ஆருக்கு என்.டி.ராமராவ் கொடுத்த மதிப்புக்கும் மரியாதைக்கும் இது சான்று.

    என்.டி.ராமராவ் தனிக் கட்சி தொடங்கி முதல்வராகும் முன்பே தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்து முதல்வ ராகிவிட்டார். அவரது பாணியில் தானும் தனிக் கட்சி தொடங்க முடிவு செய்தார் ராமராவ். தனக்கு முன்னோடியாக விளங்கும் எம்.ஜி.ஆரிடம் ஆலோசனையும் ஆசியும் கேட்பதற் காக சென்னை வந்து எம்.ஜி.ஆரை சந்தித்தார்.

    அவருக்கு வாழ்த்து தெரிவித்த எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி ‘‘கட்சிக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க?’’

    ‘‘தெலுங்கு ராஜ்யம்’’... ராமராவின் பதில்.

    எம்.ஜி.ஆர். சொன்னார். ‘‘தெலுங்கு தேசம் என்று பெயர் சூட்டுங்கள். பொருத்தமாக இருக்கும்.’’

    அதை ராமராவ் ஏற்றுக்கொண்டார்.

    ‘‘எம்.ஜி.ஆர் எனக்கு வழிகாட்டி. அண்ணனைப் போன்றவர் அவரைப் பின்பற்றியே அரசியலுக்கு வந்தேன்’’ என்று அறிவித்த ராமராவ், தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார். தமிழகத்தில் தேர் தல் பிரசாரங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்யும் பாணியை முதலில் ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரைப் போலவே ஆந்திரா விலும் திறந்த வேனில் சென்று சூறாவளி பிரசாரம் செய்த ராமராவ், மகத்தான வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தார்.

    எம்.ஜி.ஆரிடம் ஆசி பெறுவதற்காக மீண்டும் சென்னை வந்து அவரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார். எம்.ஜி.ஆரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ராமராவுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் தனது வீட்டில் தடபுடல் விருந்தளித்தார்.

    எம்.ஜி.ஆர். எதையுமே நுணுக்கமாகவும் தீர்க்க தரிசனத்தோடும் சிந்திக்கக் கூடியவர். விருந்தின்போதே சென்னை நகரின் தண்ணீர் பிரச்சினையையும் ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட் டால் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்றும் ராம ராவிடம் கூறினார். எம்.ஜி.ஆர். சொன்னால் ராமராவிடம் மறுப்பேது? அதன் தொடர்ச்சி யாக உருவானதுதான் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டம். 1983-ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திர முதல்வராக ராமராவ் பதவியேற்றார். அடுத்த 4 மாதங் களில் தெலுங்கு கங்கை திட்டம் தொடக்க விழா நடந்தது.

    1983-ம் ஆண்டு மே 25-ம் தேதி சென்னையில் நடந்த பிரம்மாண்டமான தெலுங்கு கங்கை திட்ட தொடக்க விழாவில் பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டார். திட்டத்தை செயல் படுத்த தமிழக அரசின் பங்கில் முதல் தவணைக்கான காசோலையை இந்திரா காந்தி மூலம் ராமராவிடம் கொடுக்கச் செய்தார் எம்.ஜி.ஆர்.

    1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தபோது என்.டி.ராமராவ் சென்னை வந்து கலங்கிய கண்களுடன் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்...

    ‘எம்.ஜி.ஆர். மறைவின் மூலம் எனது குருநாதரை இழந்துவிட்டேன்’.

    எம்.ஜி.ஆர். எதையுமே நுணுக்கமாகவும் தீர்க்க தரிசனத்தோடும் சிந்திக்கக் கூடியவர்.

    தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த பல ரீமேக் படங்கள் தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்தவை. ராமராவ் நடித்த ‘ராமுடு பீமுடு’ படம்தான் தமிழில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனது. 7 சென்டர்களில் வெள்ளி விழா கொண்டாடி புதிய சாதனை படைத்தது. எம்.ஜி.ஆர். திரையுலகை விட்டு விலகும் வரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’யின் சாதனை முறியடிக்கப்படவில்லை...
    #m_g_r................nsm...

  8. #1577
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதையாக் கேட்டேன்?
    --------------------------------
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
    கேமராவுக்கு முன் அந்த ஒப்பற்ற கலைஞனின் தப்பற்ற நடிப்புக்கு நான் எப்போதுமே தலை வணங்குவேன்!
    ஆனால் தொழில் சம்பந்தமாய் எதுவுமே தெரிந்து கொள்ளாத--தெரிந்து கொள்ள முயற்சிக்காத ஒரு கலைஞனாகவே வாழ்ந்து மறைந்து விட்டார்!
    அது சம்பந்தமான ஒரு நிகழ்வை இன்று பார்க்கப் போகிறோம்--
    காமராஜர்ருடன் ஒருமுறை சிவாஜி உரையாடிக் கொண்டிருக்கும் போது கர்ம வீரர் சிவாஜியிடம் கேட்கிறார்--
    ஏன்ய்யா,,ராமச்சந்திரன் படங்களில் சமுதாயப் பார்வையோடு கூடிய பாட்டு இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.
    உன் படத்துலேயும் அப்படிப் பட்டப் பாட்டுகளை நீ பாடலாமே??
    சிவாஜியும் அதற்கு ஒப்புக் கொண்டு--
    ஆமாய்யா அண்ணனோட படங்களில் அப்படிப்பட்ட பாட்டு கண்டிப்பாக இருக்கும்.அது சமுதாயத்தின் மேல்-
    கண்டிப்பாகவும் இருக்கும்!!
    நானுன் என் படத்துல அது மாதிரி ஒரு பாட்ட வைக்கறேன்!
    ஓரிரு மாதங்கள் கழிந்து,, காமராஜருக்கு ஒரு பாட்டைப் போட்டு காண்பிக்கிறார் சிவாஜி!
    என்னைப் போல் ஒருவன் படத்தில்--

    தங்கங்களே நாளைத் தலைவர்களே--நம்
    தாயும் மொழியும் கண்கள்
    சிங்கங்களே வாழும் தெய்வங்களே- நம்
    தேசம் காப்பவர் நீங்கள்--நம்
    தாத்தா காந்தி மாமா நேரு
    தேடிய செல்வங்கள்--பள்ளி
    சாலைத் தந்தவன் ஏழைத் தலைவனை
    தினமும் எண்ணுங்கள்!!
    பாராட்டுவார் காமராஜர் என்று பரவசத்துடன் சிவாஜி எதிர்பார்க்க--
    பொரிந்து தள்ளுகிறார் கர்மவீரர்??
    ஏய்யா?? திருடாதே,,குடிக்காதே உழைப்புக்கு அஞ்சாதே--இப்படி இருக்கும் ராமச்சந்திரன் பாட்டுகள் மாதிரிக் கேட்டா--
    தாத்தா,,மாமான்னு என்னய்யா பாட்டு இது??
    சங்கடத்துடன் சிரித்தபடி சிவாஜி சொன்னாராம்--
    அது தான் சொன்னேங்களே--அண்ணனுக்கு அத்தனை விஷயங்களும் அத்துபடின்னு!!!
    இதனை இவன் கண் விடல் என்று சும்மாவா சொன்னார்கள்??
    என்னைப் போல் ஒருவன் படம் திரைக்கு வர நீண்ட காலம் எடுத்துக் கொண்டது என்பது உபரி செய்தி!!! Vtr.........

  9. #1578
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எழுத்தாளர் சுஜாதாவின் 40 வருடத்துக்கு முந்திய ஒரு பதிவு !

    சென்னையில் நடைபெறும் பெரிய மனிதர்களின் வீட்டுத் திருமணத்தில் VIP watching எனக்கு முக்கியமான ஒரு பொழுதுபோக்கு !

    கல்யாணக் கூட்டத்தில் இருந்து அரை ட்ராயர் போட்ட சிறுவர்கள் அனைவரும் எழுந்து வாசலுக்கு ஓடினால் வந்திருப்பது ரஜினிகாந்த் !

    பட்டுப்பாவடை கட்டிய 10 லிருந்து 20 வயது வரையிலான சிறுமிகளும் பெண்களும் ஓடினால் வந்திருப்பது கமலஹாசன் !

    40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் எழுந்து வாசலுக்குப் போனால் வந்திருப்பது சிவாஜிகணேசன் !

    கல்யாணப் பெண், மணமகன் மற்றும் மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் வாத்தியார் தவிர மொத்தக் கூட்டமும் வாசலுக்கு ஓடினால் வந்திருப்பது MGR !..........

  10. #1579
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஈழம் பற்றி எம்.ஜி.ஆா்

    விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை - அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான்.

    சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோதுஇ முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

    • ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடுஇ தனது சக அமைச்சர்களையும் கருப்புச் சட்டை அணியச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

    • இந்தியாவின் ராணுவம் ஈழத்துக்குப் போக வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழகத்தில் சிலரால் முன் வைக்கப்பட்டபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்திலேயேஇ “ஈழத் தமிழர்களோஇ விடுதலைப் புலிகளோஇ தங்கள் நாட்டுக்கு ராணுவம் அனுப்புமாறு கேட்கவில்லை” என்று சட்டமன்றத்தில் கூறி ராணுவத்தை அனுப்புவதையே எதிர்த்தவர் எம்.ஜி.ஆர்.

    • ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை புலிகள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். டெல்லி அசோகா ஓட்டலிலே பிரபாகரனை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை. சென்னையிலிருந்து அழைத்து வந்து பிரபாகரனிடம் ஒப்பந்தத்தை ஏற்க வைக்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். எம்.ஜி.ஆர். அப்போதும் பிரபாகரனை கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்துஇ ராஜீவ் ஆட்சியிடம் நற்சான்றிதழ் பெற விரும்பவில்லை. “உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி முடிவு எடுங்கள்” என்று பிரபாகரனிடம் கூறியவர் - எம்.ஜி.ஆர். தான்!

    • ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பாராட்டி சென்னையில் ராஜீவ் காந்திக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க விரும்பாத முதல்வர் எம்.ஜி.ஆர்.இ தனது சிகிச்சைக்காக முதல் நாளே அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார். இந்த செய்தியறிந்து டெல்லியிலிருந்து ‘ஹொட் லைனில்’ தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தியே ‘நீங்கள் அந்த தேதியில் அமெரிக்கா போகக் கூடாது; பயணத்தை தள்ளிப் போட்டுவிட்டுஇ பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். தனக்கு உடன்பாடு இல்லாமலே ‘வேண்டா வெறுப்போடு’ அந்த விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.

    • உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையிலே இருந்த நிலையில் கூட எம்.ஜி.ஆர். ஈழப் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக நீதி கேட்டுஇ ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல் திலீபன் வீரமரணமடைந்த செய்தியால் கலங்கிப் போன எம்.ஜி.ஆர். திலீபன் உண்ணாவிரதம் - இந்திய அரசுக்கு எதிரானது என்ற நிலையிலும் திலீபன் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பினார்.

    • உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து தமது ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியே வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகுஇ அவர் வாழ்ந்த காலம் மிகக் குறுகியது. மரணம் - அவரை தழுவிக் கொண்டது. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன்தனது இரங்கல் செய்தியில் கூறினார்:

    “ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும்இ ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே! தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என்மீது கொண்டிருந்த அன்பையும்இ ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” - என்று கூறி இயக்கத்தின் சார்பில் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்..........Baabaa...

  11. #1580
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்திலகத்தின்
    திரையுலக பயணத்தில்.........

    #கண்ணன்_என்_காதலன்

    ஒரு ஓய்வு பெற்ற இராணுவ கேப்டனின்(திருச்சி செளந்தர்ராஜன்) வளர்ப்பு மகன் கண்ணன் ( மக்கள் திலகம்) பிறந்த மகன் இஞ்சினியர் சுந்தரம் (முத்துராமன்) , கேப்டனின் மருமகள் மல்லிகா (ஜெயலலிதா) சுந்தரம்-மல்லிகா இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தன் தகப்பனாரை கார் விபத்தில் இழந்த மாலதி (வாணிஸ்ரீ) தன் தாயுடன் கேப்டனின் வீட்டுக்கு வருகிறாள்.

    நல்ல சகோதரர்களாக வாழ்ந்து வந்த கண்ணன்-சுந்தரம் உறவு, கண்ணன்,தனக்கு நிச்சயிக்கப்பட்ட முறைப்பெண் மல்லிகாவை காதலிப்பதை தெரிந்ததும் சுந்தரம் கோபம் அடைந்து கண்ணனை வெறுக்கிறான். மல்லிகாவும் மணந்தால் கண்ணன்தான், என்பதில் உறுதியாக இருக்கிறாள்.

    இதற்கிடையே மாலதியும் கண்ணனை காதலிக்க, கண்ணன் சகோதர பாசமா, காதலியா இரண்டில் எதை தெரிவு செய்கிறார் என்பதே படத்தின் முக்கிய முடிச்சு.

    மக்கள் திலகத்தை ஏழை பங்காளனாக, புரட்சி வீரனாக, ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களில் பார்த்திருப்போம். முழுக்க முழுக்க முக்கோண காதல் கதையில் அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார். முத்துராமன்,அசோகன், ஜெயலலிதா, வாணிஸ்ரீ, சோ, தேங்காய் சீனிவாசன் போன்றொரும் நடித்துள்ளனர்.

    வழக்கம் போல மெல்லிசை மன்னர் படத்தின் இன்னொரு நாயகன் -பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும், கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்,கண்கள் இரண்டும், சிரித்தாள் தங்கப்பதுமை அடடா என்ன புதுமை, என ஒவ்வொரு பாடலும் தேன் சொட்டாக தந்திருக்கிறார்.

    படத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் விரும்பும் விடயங்களான சண்டை காட்சிகள், பொறி பறக்கும் வசனங்கள், இரண்டு மூன்று சேசிங் காட்சிகள் எதுவும் இல்லாததினால்தானோ என்னவோ, படம் எதிர் பார்த்தபடி போகவில்லை- இருப்பினும் வசூலிலும் தப்பு பண்ணவில்லை...

    கண்ணன் என் காதலன்- பாடல்களுக்காக மட்டும்.

    தகவல் & புகைப்படம்:https://en.m.wikipedia.org/wiki/Kann............Sr.bu...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •