-
7th January 2021, 07:59 AM
#1651
Junior Member
Diamond Hubber
எம் ஜி ஆரால்
மட்டும் முடியும்.........
இந்தியா சுதந்திரம் கண்ட பின் மாநிலங்கள் பிரிக்க பட்ட பின் ஒரு துளி நீர் பகிர கூட நீதி மன்றம் நாடவேண்டி உள்ளது
இதே இந்தியாவில் கருணை தேவனாக தமிழகத்தை ஆண்ட எம் ஜி ஆர் ஒரு நதியையே கிருஷ்ணா வை தமிழகத்தில் ஓடவைத்தார் இது அன்பினால் நடந்தது எம் ஜி ஆரை அரசியல் குருவாக எம் ஜி ஆர் சூட்டிய தெலுங்கு தேசம் பெயரோடு ஆந்திராவை ஆண்ட என்டி ராமராவும் இந்திரா காந்தி முன்னிலையில் நடை முறை ஆகியது
நீதி மன்றம் சென்று வாதாடி பெறும் வரை விவசாயிகளை காய விட மாட்டேன்
எம் ஜி ஆர்
ஒரு முறை காவிரி நீர் திறக்கவில்லை கர்நாடகா தஞ்சை வறச்சியில் காய விவசாயிகள் துயரபட முதல்வர் எம் ஜி ஆர் அதிகாரிகளிடம் விவாதிக்க நீதி மன்றம் போகலாம் என அவர்கள் கூற கூட்டத்தை பிரித்து விட்ட எம் ஜி ஆர் தன் காரில் ஏறி எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் அப்போதைய கர்நாடகா முதல்வர் குண்டுராவ் இல்லம் சென்றார் எம் ஜி ஆர் எம் ஜி ஆரை கண்ட குண்டுராவ் குடும்பம் திகைத்து வரவேற்று விரூந்து அளிக்கிறார்கள் விரூந்துண்ட எம் ஜி ஆர் நீர் அரூந்தவே இல்லை குண்டு ராவ் மனைவி தண்ணீர் அருந்த வேண்ட அதற்க்கு எம் ஜி ஆர் அது தான் உங்க கணவர் தரமாட்டேன் என்கிறாரே என கூற காரணம் புரிந்த குண்டுராவ் சிரித்து கொண்டே அண்ணே நீர் அருந்துங்கள் நீங்கள் சென்னையை அடையும் மூன் காவிரி நீர் தஞ்சயை அடையும் என கூற நீர் அருந்துகிறார் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர்
நினைத்ததை முடிக்கும் எம் ஜி ஆர் கருணை தேவனே
வாழ்க எம்ஜி ஆர் புகழ்.........vrh...
-
7th January 2021 07:59 AM
# ADS
Circuit advertisement
-
7th January 2021, 07:59 AM
#1652
Junior Member
Diamond Hubber
" என்தம்பி எம்.ஜி.ஆர் ஒருவரின் புகழுக்காக என்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து கொண்டே எம்.ஜி.ஆர் ரிக்ஷாக்காரர்களை ஒவ்வொருவராக அழைத்துக்கொடுத்திருந்தால் அந்த மழை அங்கி அவர்களின் உடலிலே ஒட்டிக்கொள்ளாதா’ ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று அவர்களும் சொல்லியிருக்க மாட்டார்களா? தானாகவே ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று கூறக்கூடியவர்கள், மழை அங்கி வாங்கிக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்?
இதை இவ்வளவு பெரிய விழாவாக நடத்தியதற்குக் காரணம், ஒவ்வொருவருக்கும், ‘நாம் என்ன உதவி செய்ய வேண்டும்?’ என்ற எண்ணம் உருவாகவேண்டும் என்பதற்குத்தான். ‘அவர் மழை அங்கி தருகிறார் நாம் ஏதாவது தருவோம்; அவர் பெரும் பொருள் ஈட்டுகிறார்-அவர் தருகிறார், நாம் ஈட்டுகிற அளவுக்கு ஏதாவது செய்வோம்’ என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான்.
எம்.ஜி.ஆர் மக்களுக்கு அறிமுகமாகாதவரல்ல; அவர் தலையைக் கண்டாலே, ‘எம்.ஜி.ஆர். வாழ்க. எம்.ஜி.ஆர். வாழ்க’ என்ற குரலெழுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தலைகாட்டப் பயப்படுகிறார்; காரணம், மக்கள் அன்புத்தொல்லை கொடுப்பதால்.
‘ஐயோ, மக்களைப் பார்த்தால் என்ன ஆகுமோ?’ என்று பயப்படுகிறார்கள், மற்றவர்கள்."
- ரிகஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு
வழங்கும் விழாவில் அறிஞர் அண்ணா, 4-12-1961 ,
நம்நாடு இதழில் ...........skr...
-
7th January 2021, 08:00 AM
#1653
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் காலம் மட்டுமே பொற்காலம் !...
அவர் ஆளுமை செய்த கட்சிதான் தொண்டர்களின் கட்சி.!!
1972ல் அவர் கட்சி துவங்கியபோது நானும் நெல்லை ப.இளமதியும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகளாக தலைவர் நியமித்தார்.அப்போது 1977 முதல் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க mla தேர்வுக்கு எம்.ஜி.ஆர் மன்ற தோழர்களின் பரிந்துரை முதன்மை பெற்ற பொற்காலம் அது.1977ல் தொண்டர்கள் தேர்தலில்
போட்டியிட விண்ணப்பம் செய்து விட்டு வூர் திரும்புவது வழக்கம்.1977ல் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு.1977 தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனுதாக்கலின் போது நாங்கள் ஒரு தொகுதி வேட்பாளரை தேடுகின்ற நிலை.அவரை தேடி சென்றோம்.அவர் வயலில் உழுது கொண்டிருந்தார்.அவரிடம் போய் தலைவர் உங்களை வேட்பாளராக தெரிவு செய்துள்ளார்.உடன் கிளம்புக்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்றோம்.அவருக்கோ ஆச்சரியம்.மகிழ்ச்சியில் திளைத்து வேட்பு மனு தாக்க புறப்பட்டார்.போட்டியிற்றார்.வென்றார் அந்த தொண்டன்.ஆக தொண்டனுக்காக ஆரம்பித்த கட்சி தான் எம்.ஜி.ஆர் ஆளுமை செய்த அ.தி.மு.க.ஆம் எம்.ஜி.ஆர் ஆண்ட காலம் தான் பொற்காலம்.
1977ல் பாளையங் கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் ஜாதியினர் இல்லாத நாஞ்சிலாரை நிப்பாட்டினார்.அவர் வென்றார்.திருநெல்வேலி தொகுதியில் மீனவர் இனமே இல்லாத தொகுதியில் எட்மண்டை நிறுத்தி வெற்றி பெற்றார்.அதே தொகுதியில் நாவலர் நின்று வெற்றி பெற்றார்.பின்னர் இராம.வீரப்பன் நின்று வெற்றி பெற்றார்.இப்படி தலைவர் ஆளுமை செய்த கட்சி பொற்காலமாக இருந்தது.
இப்போதைய ஆளும் அ.தி.மு.க வில் எப்படி உள்ளது.?1972 ம் வருட உறுப்பினர் கார்டு வைத்துள்ளவர்களின் நிலை என்ன ? அவர்கள் ஏதேனும் பொறுப்புகளில் வருகிறார்களா தெரியவில்லை..........nmi...
-
7th January 2021, 08:01 AM
#1654
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர்., நடத்திய ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு, மதுரையில், 1981ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமையில், கவர்னர் சாதிக் அலி தொடங்கி வைத்தார்.இந்த மாநாடு யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் கொண்டாடப்பட்டது. இதற்கு தமிழக அரசும் நிதியுதவி வழங்கியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.மாநாட்டுக்காக மதுரை நகர் முழுவதும் அலங்கார வளைவுகளும், தமிழ் வளர்த்த அறிஞர்களின் சிலைகளும் நிறுவப்பட்டன. மதுரை நகரில் புகும் பகுதியிலேயே, கம்பீர நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. நகர் முழுவதும் அமைக்கப்பட்ட தோரண வளைவுகளுக்கு மட்டும் ஏழு லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. மதுரை மேலூர் சாலையில் அமைக்கப்பட்ட நக்கீரர் தோரண வாயிலை சத்தியவாணி முத்து திறந்து வைத்தார். மதுரை தமிழ்ச்சங்க தலைவர் டி.வி.எம்.பெரியசாமி இதற்கு தலைமை தாங்கினார். சேரன் நுழைவு வாயிலை நெடுஞ்செழியன் முன்னிலையில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சர் முத்தையா செட்டியார் தலைமை வகித்தார். சோழன் நுழைவு வாயில் திறப்பு விழாவுக்கு தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மாநகராட்சி கட்டடங்கள், விருந்தினர் மாளிகைகள் புதுப்பொலிவு பெற்றன. சில விருந்தினர் மாளிகைகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டன.
நகரில் நடமாடிய பிச்சைக்காரர்கள், பிச்சைக்காரர்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர்.உலகம் முழுவதிலும் இருந்து வந்த 600க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் பங்கேற்றனர். இலங்கை, மலேசியா நாடுகளில் இருந்து மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், செனகல், இந்தோனேசியா, மொரிஷியஸ், மேற்கு ஜெர்மனி, ஸ்வீடன், செக்கோஸ்லோவாகியா, நெதர்லாந்து, நேபாளம், பின்லாந்து, பிஜி தீவுகளில் இருந்தும் மாநாட்டில் பங்கேற்க பிரதிநிதிகள் வந்தனர். வெளிநாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகளை, தமிழக செய்தி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மற்றும் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.மகாராஜன் ஆகியோர் வரவேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள், பஸ்கள் மூலம் மக்கள் வந்து குவிந்தனர். இதற்காக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் பார்க்க வசதியாக 10 இடங்களில் "டிவி'க்கள் வைக்கப்பட்டன. இதில் 9 கோடி ரூபாய் மதுரை நகரில் நிரந்தர வசதிகளுக்காகவே செலவிடப்பட்டது. மதுரை திருமலை நாயக்கர் மகால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அங்கு திருமலை நாயக்கரின் வரலாற்றை விவரிக்கும் ஒளி-ஒலி காட்சி துவக்கிவைக்கப்பட்டது.சீர்காழி கோவிந்தராஜனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்கியது.
மாநாட்டை துவக்கி வைத்து பேசிய தமிழக கவர்னர் சாதிக் அலி தமிழ் புலவரின் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்ற கூற்றின் அடிப்படையில் மாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டார்.துவக்க விழாவில் தலைமை வகித்து பேசிய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் நிறுவப்படும் என அறிவித்தார். கோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக கொண்டு வர தமிழக அரசு பாடுபடும் என குறிப்பிட்டார். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய விவசாய அமைச்சர் ஆர்.வி.சாமிநாதன் தான் தமிழன் என்ற முறையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார். முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தனது பேச்சின் போது உலகதத் தமிழ் மாநாடு நடைபெற காரணமாக இருந்த தனிநாயகம் அடிகளாருக்கு நன்றி தெரிவித்தார்.மதுரை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் கேரள முதல்வர் நாயனார் கலந்து கொண்டார். பொதுமக்கள், அறிஞர்கள், கலைஞர்கள் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில், பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நாள்தோறும் மாநாட்டு திடலில் நடந்தது. இதற்கென பந்தயத்திடலில் முப்பதாயிரம் பேர் அமரக்கூடிய பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கவிதை போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தமுக்கம் மைதானத்தில் நடந்த கண்காட்சியில், பண்டை தமிழர்களுடைய கலை, நாகரிகம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் பல்வகை காட்சிகள் அமைக்கப்பட்டன. தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. மாநாட்டின் போது தமிழ் புலவர்கள் 49 பேருக்கு தங்கப்பதக்கங்களை முதல்வர் எம்.ஜி.ஆர்., வழங்கினார்.
இறுதி நாளான ஜனவரி 10ம் தேதி பிரதமர் இந்திரா மாநாட்டில் உரையாற்றினார். "உலக தமிழ் மாநாடு, வணக்கம்' என தமிழில் பேச்சை துவங்கிய பிரதமர் இந்தி மொழி திணிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார். பிரமாண்ட அலங்கார வண்டிகளின் ஊர்வலத்தை பிரதமர் இந்திராவும், முதல்வர் எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் அமர்ந்து பார்த்தனர். இந்த ஊர்வலத்தை காண வழிநெடுகிலும் 25 லட்சம் பேர் கூடியிருந்தனர். இந்த ஊர்வலத்தில் 5 யானைகளில் இசைக்கலைஞர்கள், பெண்கள், போலீஸ் வாத்தியக்குழு, விவசாய காட்சி வாகனம், கொடி பிடித்த மாணவ, மாணவிகள், ஆசிரியைகள், மேளக்கலைஞர்கள், கரகாட்டக்காரர்கள், பொய்க்கால் குதிரை, தமிழ் வளர்த்த அயல்நாட்டு அறிஞர்கள், அவ்வையார், கண்ணகி, ஆண்டாள், கம்பர், தமிழன்னை வேடமிட்டவர்கள் கலந்து கொண்டனர்.விழா மேடைக்கு அருகே அமைக்கப்பட்ட தமிழன்னை சிலையை எம்.ஜி.ஆர்., திறந்து வைத்தார்..........vsm...
-
7th January 2021, 08:01 AM
#1655
Junior Member
Diamond Hubber
#தமிழ் #வாத்தியார்
மக்கள்திலகத்தின் தமிழறிவு அசாத்தியமானது.
மிகவும் நுணுக்கமானது.
மக்கள்திலகம் மன்னாதிமன்னனாக இருந்ததால் ஒரு அரசனைப் போன்று 64 கலைகளும் அவரிடம் பரவிக்கிடந்தது என்று சொன்னால் மிகையாகாது...
எல்லாக்கலைகளையும் சரிசமமாக வெளிப்படுத்தியதால், "இந்தக் கலையில் தான் சிறந்தவர்" என்று அவரை அவ்வளவு எளிதாக எடைபோட்டு விடமுடியாது...
தனது தமிழறிவை வைத்துக்கொண்டு தம்பட்டம் அடித்ததில்லை. தமிழ், தமிழர்கள் எனச் சொல்லிக்கொண்டு தமிழினத்திற்கு துரோகம் புரிந்ததில்லை... தலைக்கனம் கொண்டதில்லை. எப்போது தேவையோ அப்போது மட்டும் வெளிப்படுத்துவார்...
உதாரணங்களுக்கு நிறைய தமிழ் சார்ந்த விழாக்களில் தனது நுண்ணிய தமிழ்ப்புலமையை வெளிப்படுத்தி இருக்கிறார்...என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
தமிழ்மொழிக்கு உயிராம், உயிர் எழுத்துக்களுக்கு "வாத்தியார்" மக்கள்திலகத்தின் இந்த எளிமையான விளக்கம் ஒன்றே போதும் அவரின் தமிழறிவைப் பறைசாற்ற...
"உயிரெழுத்துக்கள் தமிழுக்கு ம!ட்டும் உயிரல்ல. மனிதன் உயிராக இருக்கவேண்டிய தன்மைகளை உணர்த்துவதற்காக முதல் எழுத்தாகவே அமைஞ்சிருக்கு..."
அன்பு, ஆற்றல், இரக்கம், ஈகை, உழைப்பு, ஊக்கம், எழில், ஏற்றம், ஐக்கியம், ஒழுக்கம், ஓர்மை, ஔடதம்...
இவையனைத்தும் ஒருவரிடம் இருந்தால் இறைவன் நம்மிடம் நெருங்கி வருவான். இறப்பு தூரம் போய்விடும்....! Bsm.........
-
7th January 2021, 08:02 AM
#1656
Junior Member
Diamond Hubber
அட! அப்படியா?
--------------------------
எப்பொருள் கேட்பினும் அதன் மெய்ப் பொருள் பார்ப்பதே நம் பாணி!
கருப்பான குணம் உடையோரிடத்திலும்-
சிறப்பான குணம் ஏதாவது ஒன்றாவது இருந்தே தீரும்!
அந்தந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப அவர்களைப் பாராட்டி விட்டுப் போக வேண்டுமே அல்லாது--அவர்களை--
லென்ஸ் வைத்து ஆராய்வது சென்ஸ் அல்ல!
நடிகவேள் எம்.ஆர்.ராதா!
குணச் சித்திர--காமெடி--வில்லன் என எந்தப் பாத்திரத்தில் தோன்றினாலும் அதில் அட்சயப் பாத்திரமாக தன் நடிப்பைக் கொட்டுவார்!
ஒரு முறை இவர் இவர் நாடகம் ஒன்றுக்குப் பெரிய அளவில் கூட்டம்!
உதவியாளர் வந்து ராதாவிடம் சொல்கிறார்--
அண்ணே,,பெரியாரும்,,அண்ணாவும் நாடகத்துக்கு டிக்கட் எடுத்துட்டாங்க. ஆனால் அவங்களுக்கு ஸீட் இல்லை?
இஷ்டமிருந்தால் தரையில் உட்கார்ந்து பார்க்கட்டும்.இல்லையென்றால் போயிண்டே இருக்கட்டும்??
முன்னால் வந்தவருக்கு முன்னுரிமை என்ற இவரது நேர்மை!!
அன்று எம்.ஆர்.ராதா,,கண்ணதாசனைப் பார்க்க வருகிறார்!
கண்ணதாசனோ மும்முரமாக ஒரு பாட்டை எழுதிக் கொண்டிருக்கிறார்!
கே.வி.மகாதேவன் இசையில் அந்தப் பாட்டு!
இந்த இடத்தில் கே.வி.எம்மைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்!
கவிஞர்களிடத்தில் பாட்டை வாங்கி அதற்கேற்ப மெட்டுப் போடுவது அவர் பாணி! அதாவது--
பாட்டுக்கு அற்ற மெட்டு!--அதுவும்-
ஸ்பாட்டுக்கு ஏற்ற மெட்டு!!
எம்.ஆர்.ராதா,,கவிஞரிடம் கேட்கிறார்--
என்ன கவிஞரே? எந்த ஹீரோவுக்கு பாட்டு எழுதிட்டிருக்கீங்க?
பாட்டை,,ராதாவிடம் காட்டியபடியே குறும்பாகப் புதிர் போடுகிறார் கவிஞர்--
இந்தப் பாட்ட நான் யாருக்கு எழுதறேன்னு நீங்க சரியா சொல்லிட்டா,,இந்தப் பாட்ட உங்களுக்கே அர்ப்பணிக்கிறேன்??
ராதா,,அந்தப் பாடலைப் பார்த்துவிட்டு,,கணமும் தாமதிக்காமல் சொல்கிறார்--
இந்தப் பாட்டு,,எனக்கோ இல்ல மத்த ஹீரோவுக்கோ எழுதினால் நாங்க இந்தத் தொழிலில் இருக்கற வரைக்கும் இதுக்கு உயிர் இருக்கும்! ஆனால் ஒருத்தருக்கு மட்டும் எழுதினால்,,அவர் மறைஞ்சு போனாலும் அந்தப் பாட்டுக்கு ஜீவன் இருக்கும்!
அது ராமச்சந்திரன் ஒருத்தனுக்குத் தான்!!
என்ன தீர்க்க தரிசனமான கருத்து??
அந்தப் பாடல்??
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்--தலை
வணங்காமல் நீ வாழலாம்!!!...vtr...
-
7th January 2021, 09:58 AM
#1657
Junior Member
Diamond Hubber
தொடர் பதிவு உ...த்தமன். 10
--------------------------------------------------
இதுவரை நாம் தூத்துக்குடியின் மூன்று திரையரங்குகளின் தில்லுமுல்லுகளை பார்த்தோம். இனி நான்காவதாக நாம் பார்க்கப்போகும் திரையரங்கம்தான் பாலகிருஷ்ணா. தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் ஓரளவு நேர்மையை கடைப்பிடிக்கும் தியேட்டர் இதுதான். இதுவும் சார்லஸில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கும்.
ஓரளவு நல்ல படங்களை திரையிட்டாலும் தியேட்டரில் தூண்கள் அதிகமாக பார்வையாளர்களின் முழு காட்சியையும் காண விடாமல் தடை செய்யும்.
1956 ல் வெளியான "மதுரை வீரன்தா"ன் அதிக பட்சமாக 84 நாட்கள் ஓடியதாக சொல்கிறார்கள்.
1961ல் வெளியான "திருடாதே" 50 நாட்கள் ஓடியது. அதன்பின் நெடுங்காலமாக தலைவரின் பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் வரவில்லை. 1965 ல் வெளியான "ஆயிரத்தில் ஒருவன்தா"ன் மறு சாதனைக்கு வித்திட்டது எனலாம்.
முதல் 10 நாட்கள் தொடர்ந்து 4 காட்சிகள் நடைபெற்ற ஒரே திரைப்படம் இதுதான்.
மீனவர்கள் பெருவாரியாக வாழும் இப்பகுதியில் படம் பெரு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நெல்லையை காட்டிலும் அதிகமாக மொத்தம் 63 நாட்கள் ஓடி புதிய சாதனை செய்தது. அதன்பின் எம்ஜிஆர் படத்தை எடுத்து வெற்றியை ருசித்த பின் தொடர்ந்து எம்ஜிஆர் படங்களை போட ஆரம்பித்தார்கள்.1966 ல் வெளியான "அன்பே வா" தொடர்ந்து 50 நாட்கள் ஓடி நல்ல வெற்றியை பெற்றது.
அதே ஆண்டு "தனிப்பிறவி" "பெற்றால் தான் பிள்ளையா" "பறக்கும் பாவை"
போன்ற படங்களை திரையிட்டனர்.
1968 ல் மிகப் பெரும் சாதனையாக தலைவரின் நான்கு படங்கள் வெளியாகி அவற்றில் மூன்று கலர் படங்களும் 50 நாட்களை தாண்டிய சாதனை இன்று வரை எவரும் நினைத்து கூட பார்க்க முடியாதது.
என் நினைவு சரியாக இருக்குமாயின் எனக்கு தெரிந்தவரை 1968 ஜன 1 முதல் பாலகிருஷ்ணா வில் வெளியான படங்களை பதிவு செய்திருக்கிறேன்.
தேதி. படத்தின் பெயர். ஓடிய நாள்.
ஜன 1 தெய்வச்செயல். 10
" 11 ரகசிய போ.115. ............53
மார்ச்4 மாய மோதிரம். ............10
" 14. Closed for
New sound system. 1
" 15. குடியிருந்த கோயில். 70
மே 24. பணமா பாசமா. ......... 71
ஆக. 3. கண்ணன் என் காதலன்22
" 24. மதுரை வீரன். மேலும்
ஒரு சில பழைய படங்கள். 27
செப்.20. ஒளி விளக்கு. 50
நவ. 9. தில்லானா மோகனாம்.53
1969. ஜன. 1. அன்பளிப்பு(13 நாட்கள்)
மொத்தமே 10 படங்கள்தான் வெளியாகின. இதில் தலைவரின் "ரகசிய போலீஸ் 115" "குடியிருந்த கோயில்" மற்றும் "ஒளிவிளக்கு" மூன்று கலர் படங்களும் 50 நாட்கள் தாண்டி ஓடியது இதுவரை யாரும் வெல்ல முடியாத சாதனையாக திகழ்கிறது.
அதன்பின் 1969 மே 1ல் தலைவரின் மாபெரும் வெற்றிப் படமான "அடிமைப்பெண்" வெளியாகி பல அற்புதங்களை செய்தது. 100 நாட்கள் ஓடி தூத்துக்குடியில் ஒரு புதிய சாதனையை பதிவு செய்தது. 100 நாட்களில் ரூ105816.13 வசூல் செய்து முதன்முதலில் லட்சம் வசூல் பெற்ற படமாக அமைந்தது. அதே ஆண்டு நவ 9ல் வெளியான "சிவந்தமண்" 101 நாட்கள் ஓட்டப்பட்டு சினிமா உலகத்திற்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. ஊழல் தில்லுமுல்லுகள் பொய் பித்தலாட்டத்தை அரங்கேற்றி வெற்றி பெற்றதை போல் மாயையை உருவாக்கிய படுதோல்விப் படம்தான் அய்யனின் "சிவந்தமண்".
4 வாரம் கூட ஓட தகுதியற்ற படத்தை கைஸ்கள் 101 நாட்கள் ஓட்டி வெறியை தணித்துக் கொண்டனர்.
1970 ல் "எங்கள் தங்கம்" வெளியாகி 40 நாட்கள் நடைபெற்றது. 1971 ல் வெளியான "ரிக்ஷாக்காரன்" 55 நாட்கள் ஓடி வசூலில் புதியதொரு பரிணாமத்தை காட்டியது. "ரிக்ஷாக்காரன்" படமும் முதல் நாள் காலை காட்சிக்கு பெட்டி வராமல் தாமதமானதால் லேட்டாகத் திரையிட்டு இன்டர்வெல் இல்லாமல் ஓடியது. அதன்பின் "நீரும் நெருப்பும்" "ஒரு தாய் மக்கள்" அதே வருடத்தில் வெளியானது.
1972 ல் "இதய வீணை" வெளியாகி 40 நாட்கள் ஓடியது.
1973 ல் "பட்டிக்காட்டு பொன்னையா"
வெளியானது. 1974 ல் "உரிமைக்குரல்" நவ 7ல் வெளியாகி 68 நாட்கள் ஓடி ரூ 168000. வசூலை மிகக்குறைந்த காலத்தில் அதிக வசூல் பெற்ற படமாக அமைந்தது. 1976 ல் "உழைக்கும் கரங்கள்" வெளியாகி 40 நாட்கள் ஓடியது. 1977 ல் "நவரத்தினம்" அதைத் தொடர்ந்து "மீனவ நண்பன்" வெளியாகி 50 நாட்களை கடந்தது.
பாலகிருஷ்ணா சாதனை நிறைவுற்றது.
மீண்டும் அடுத்த பதிவில்..........KSR.........
-
7th January 2021, 09:59 AM
#1658
Junior Member
Diamond Hubber
பொன்மனச்செம்மல் எங்கள் தங்கம் புரட்சித் தலைவர் அவர்கள் நடித்த திரைப்படங்கள்..... அந்த படங்கள் தியேட்டரில் ஓடிய கால அளவு .......வசூல் சாதனைகள்..... புள்ளி விவரமாக இந்த அளவிற்கு இந்த காலத்தில் யாருக்குமே நினைவில் இருக்காது....... துல்லியமான அளவீடுகளை முகநூலில் வெளியிடும் தங்களுக்கு எனது இதயபூர்வமான மனப்பூர்வமான பாராட்டுக்கள் ........தங்களின் இனிய சேவை என்றென்றும் தொடர வேண்டும்....... புரட்சித்தலைவர் அவர்களைப் பற்றிய மலரும் நினைவுகளை தயவு செய்து முகநூலில் பதிவிடுங்கள்........ தங்கள் அளவிற்கு என்னால் பதிவு செய்ய தெரியவில்லை...... விஷய ஞானங்கள் போதாது......... புரட்சித்தலைவர் நடித்த எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் அது சமூக சிந்தனையை மையமாக கொண்டது...... பொன்மனச்செம்மல் அவர்கள் நடித்த அனைத்து திரைப்படங்களும் மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் மிகப்பெரிய உபதேசங்கள் ஆகும் ......காலம் தாழ்த்தாது நமது கழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு தலைவர் அவர்கள் நடித்த அனைத்து திரைப்படங்களையும் பாதுகாக்கப்பட்ட தேசிய பொக்கிஷங்களாக அறிவிக்க வேண்டும் ........இதில் காலதாமதம் கூடவே கூடாது....... பொன்மனச்செம்மல் அவர்களுக்கு தமிழக மக்களை மிகவும் பிடிக்கும் .....இந்த செயல் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்றி கடன் ஆகும்...... இந்த காலத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால் புதிய புதிய திரைப்படங்களில் பணத்தை முதலீடு செய்வதை விட பொன்மனச்செம்மல் நடித்த ஒரு திரைப்படத்தை புதுப்பித்து காப்பிரைட் செய்து வெளியிட்டால் நல்ல லாபம் கிடைக்கும்....... மக்களும் சந்தோஷம் அடைவார்கள்..... வாழ்க வளமுடன்..........Sri.Kan..
-
7th January 2021, 10:35 AM
#1659
Junior Member
Diamond Hubber
இந்த சுப்பு சிவாசி வி.சி.கணேசன் என்ற பெயரில் ட்விட்டர்ல் இருக்காரு. எல்.ஏ.சினிமாவில் (அது திருச்சிதான) வி.வீடு படத்துக்கு 2 பேர் வந்ததால் காட்சிய ரத்து பண்னிட்டதாவும் வேற படத்துக்கு டிக்கட் இருக்குன்னு தியேட்டரில் சொன்னதா ஒரு அம்மா சுப்புக்கிட்ட ட்விட்டர்ல சொல்லுது. அதுக்கு அந்த தியேட்டர் மேனேஜர்தான் காரணம் அவர் இன்னொரு நடிகர் ( எம்ஜிஆர்) ரசிகர் என்று சுப்பு சொல்றாரு. ரிப்போர்ட் பண்னுவோம்னுதான் ஸ்கிரீன் சாட்டில் உள்ளது. டிவிட்டர்ல போனால் சுப்பு சொன்னதை பார்க்கலாம். சரிதான்.. தியேட்டர் மேனேஜர் எம்ஜிஆர் ரசிகர்னே வெச்சுக்குவோம். வி.வீடு படத்துக்கு 2 பேர் தான் வந்துள்ளார்கள். அதனால் காட்சி ரத்து. கணேசனின் ரசிகர்கள் படை எடுத்து தியேட்டருக்கு போவதை தடுத்து 2 பேர் மட்டும் படத்துக்கு வாங்கன்னு அந்த மேனேஜரா சொன்னாரு. எப்படித்தான் இதெல்லாம் ஒரு காரணம் என்று சிரிக்காம சுப்பு சொல்றாரோ.. உன் படத்த பார்க்க 2 பேர் வந்துருக்காங்க. இதுதான் உங்க நடிகன் பவுசு......rrn...
-
8th January 2021, 07:48 AM
#1660
Junior Member
Diamond Hubber
நம் இதயதெய்வம் அவர்கள் நடிப்பில் வந்த "விக்கிரமாதித்தன்" படத்தின் இறுதி கட்ட சண்டை காட்சிகள் வாஹிணி அரங்கில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது..
எல்லாம் முடிந்து படத்தின் தயாரிப்பாளர் இல்லம் சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தின் அருகில் இருந்த அவர் வீட்டுக்கு சண்டை நடிகர்கள் சம்பளம் கேட்டு போகிறார்கள்.
அடுத்த மாதம் வந்து பாருங்க...இப்போ பணம் இல்லை என்று கையை விரிக்க குழுவினர் ஸ்டண்ட் சோமு அவர்களிடம் போய் சொல்ல அவரோ எனக்கும் அட்வான்ஸ் மட்டுமே இன்னும் மீதி பணம் வரவில்லை என்று சொல்ல...
அனைவரும் படத்தின் இயக்குனர் என்.எஸ். ராமதாஸ் வீட்டுக்கு சென்று முறையிட அவர் நான் இதில் தலையிட முடியாது என்று மறுக்க.
யாரும் தலைவர் வசம் இந்த நிகழ்வை எடுத்து செல்லவில்லை..காரணம் அப்போது தான் அவர் மனைவி சதானந்தவதி அவர்கள் மறைந்த நேரம்...
விஷயம் கசிந்து தலைவர் உடனே அனைவரையும் வரவழைத்து தகவல் அறிந்து தயாரிப்பாளர் அவரை உடனே தொடர்பு கொண்டு பட பிடிப்பு முடிந்து விட்டது ஏன் இன்னும் சம்பளம் பாக்கி அவர்களுக்கு என்று கேட்க..
அவர் நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே பின்னர் கொடுக்கிறேன் என்று தானே சொன்னேன் என்று விளக்கம் கொடுக்க..
தலைவர் உடனே அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து தொழில் செய்பவர்கள்...உடனே ஊதியம் கிடைக்கா விட்டால் அவர்கள் நிலை என்ன நான் இப்போதே எனது உதவியாளர் அவர்களை அனுப்புகிறேன்..மொத்த பணத்தையும் கொடுத்து விடுங்கள் என்று சொல்ல..
கோபத்துடன் தொலை பேசியை தலைவர் வைக்க...அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்டண்ட் நடிகர்கள் முழு சம்பள பாக்கியும் மொத்தமாக வந்து சேர்ந்தது.
அப்போது அவர்களுக்கு இப்போது போல யூனியன் அமைப்பு கிடையாது...தலைவர் படங்களில் நடிப்பவர்களுக்கு என்றும் தலைவரே பாதுகாப்பு...
தன் மனைவி பிரிந்த நிலையில் கூட அடுத்தவர் துன்பம் நீக்க சுட்டு விரல் நீட்டி கண்களை துடைக்கும் புனித உள்ளம் நம் புரட்சிதலைவருக்கே என்றும் சொந்தம்.
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்.
நெல்லை மணி..நன்றி.............
Bookmarks