Page 187 of 210 FirstFirst ... 87137177185186187188189197 ... LastLast
Results 1,861 to 1,870 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1861
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் தன் படங்களிலும் நிஜ வாழ்விலும் சில பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார். அவர் சிகரெட், மது, காபி, டீ குடிக்கமாட்டார் என்பதெல்லாம் தவிர வேறு பல குறிப்பிடத்தக்க பழக்க வழக்கங்களும் அவரிடம் இருந்தன.

    உடை
    எம்.ஜி.ஆர் சினிமாவிலும் நிஜ வாழ்விலும் வேட்டி கட்டும்போது வலது புறம் கரைவைத்துக் கட்டுவார். இதை அவரது அமைச்சரவை படங்களில் காணலாம். பாதம் மறையும்படி கட்டாமல் சற்று உயரே தூக்கிக் கட்டுவார். தரை பெருக்க கட்டினால் தரித்திரம் என்று அவர் அம்மா சொன்னதால் தாய் சொல்லைத் தட்டாமல் அப்படிக் கட்டினார்.
    ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆ ரின் உடைகளைத் துவைக்க ஒரு தனிச் சலவைக்காரர் இருந்தார். ஒரு நாளுக்கு நான்கு முறைகூட வேட்டி சட்டை மாற்றுவார். ஒரு முறை கட்டி கழற்றியதை அவர் அந்த நாளில் மறுமுறை கட்டுவதில்லை. தினமும் துவைத்த ஆடைகளையே உடுத்தினார்.
    காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தபோது கதர் கட்டினார். கதர் உடுத்திதான் தன் முதல் மனைவி பார்கவியைத் திருமணம் செய்தார். தி.மு.க-வுக்கு மாறிய பின்பு கதர் உடுத்துவதை நிறுத்திவிட்டார். பட்டு உடுத்தத் தொடங்கினார்.
    வேட்டியை மடித்துக் கட்டும் பழக்கம் எம்.ஜி.ஆருக்குக் கிடையாது. வெள்ள சேதத்தைப் பார்வையிடும்போது வேட்டியை மடித்துக் கட்டியிருப்பார். என் அண்ணன் படத்தில் காலின் காயம் தெரிய வேண்டிய காட்சியில் மட்டும் வேட்டியை மடித்துக் கட்டியிருப்பார். சண்டை காட்சிகளில் வேட்டியை தார் பாய்ச்சிக் கட்டுவார். வீட்டில் ஓய்வாக இருக்கும் வேளையில் சில்க் கைலி கட்டுவார்.
    எம்.ஜி.ஆருக்குப் படங்களில் ஆடை அலங்கார நிபுணராக இருந்த எம்.ஜி.நாயுடு பின்னாளில் நாயுடு ஹால் என்ற கடையைத் தொடங்கியதாகக் கூறுவர். அவருக்குப் பல படங்களில் ஆடை அலங்கார நிபுணராக இருந்த எம்.ஏ.முத்து, தான் தைத்து தந்த சட்டையைதான் எம்.ஜி.ஆர் கடைசி வரை போட்டிருந்தார் என்று கூறும்போது எம்.ஜி.ஆர் இறந்த பிறகும் அவருக்கு அணிவித்திருந்த சட்டை எம்.ஏ.முத்து தைத்ததுதான் என்று சொல்லி மனம் நெகிழ்கிறார்.
    ​��
    நகை
    எம்.ஜி.ஆர் வெளியே வரும்போது நகை அணியும் கையில் ஒரு வாட்ச் மட்டுமே கட்டியிருப்பார். வீட்டில் இருக்கும்போது தன் சங்கிலி மோதிரங்களை எடுத்து அணிந்துகொள்வாராம். ஆனால், படத்திலும் நிஜத்திலும் அவர் நடு விரலில் மோதிரம் அணிய மாட்டார். மற்ற நடிகர் நடிகையர் அவர் ஜோடி நடிகைகள்கூட நடு விரலில் மோதிரம் அணிவர். ஆனால், அவர் சனிவிரல் எனப்படும் அந்த நடு விரலில் நகை அணியக் கூடாது என்ற பெரியவர்கள் வாக்கை மீறுவது கிடையாது. அவர் சங்கிலியில் அவர் தாயார் படம் உள்ள பென்டண்ட் தொங்கும்.

    ஏன் இவ்வளவு கனமான பெரிய வாட்ச் கட்டியிருக்கிறீர்கள் என்று ஒருவர் எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, கூட்டம் அதிகமாக இருக்கும்போது கூட்டத்தை விலக்க இது ஒரு மென்மையான ஆயுதமாகப் பயன்படும் என்றார் எம்.ஜி.ஆர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அல்லவா?
    வணக்கம்
    எம்.ஜி.ஆர் இரண்டு கையையும் முகத்துக்கு நேரே கூப்பி வணக்கம் சொல்வார். பெரியவர்கள் வந்தால் எழுந்து நின்று வணங்குவார். நடிகை பானுமதிதான் அவரைச் சந்திக்க போனபோது எம்.ஜி.ஆர் எழுந்து நின்று வணங்கியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். பானுமதி ஓர் அஷ்டாவதானி என்பதாலும் திரையுலகில் நடிப்பு, இசை, நடனம் பாட்டு இயக்கம் எனப் பல துறைகளிலும் திறமை பெற்றவர் என்பதால் எம்.ஜி.ஆர் அவரை எழுந்து நின்று வணங்கியிருக்கலாம்.
    கறுப்புக் கண்ணாடி போட்ட காரில் பயணித்தாலும் வெளியே யாராவது இது எம்.ஜி.ஆர் கார் என்பதை அடையாளம் கண்டு வணங்கினால் இவர் உள்ளே இருந்து வணங்குவார். பொதுக்கூட்டத்தில் மேடையின் இரு புறமும் நடந்து வந்து கையை தலைக்கு மேலே உயர்த்தி சிரித்த முகத்தோடு வணங்குவார். உடனே கூட்டம் ஆரவாரிக்கும்.
    கல்யாணத்துக்கு வெள்ளி டம்ளர்
    பொதுவாக எம்.ஜி.ஆர் தான் செல்லும் திருமணங்களுக்கு ஆறு வெள்ளி டம்ளர் பரிசாக வழங்குவார். கணவன் மனைவி மாமியார் மாமனார் மகன் மகள் என்ற அழகான குடும்பத்துக்கு அவர் அளிக்கும் பரிசு ஆறு வெள்ளி டம்ளர்கள் ஆகும்.
    கலை நிகழ்ச்சிக்குத் தங்கச் சங்கிலி
    எம்.ஜி.ஆர் மேடை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினால் பெரும்பாலும் தங்கச்சங்கிலி பரிசளிப்பது வழக்கம். கங்கை அமரனின் மகன் மிருதங்க அரங்கேற்றத்துக்குப் பத்து பவுன் சங்கிலி பரிசளித்தார். ஒரு முறை பத்மா சுப்பிரமணியம் தன் மாணவியின் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கும்படி அழைத்திருந்தார். அப்போது மேடையில் வைத்து அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கவிருந்த பேழையை எம்.ஜி.ஆர் திறந்து பார்க்க முயன்றார். பத்மா எம்.ஜி.ஆரை நெருங்கி அவரது காதில் அதற்குள் ஒன்றுமில்லை என்றார். உடனே எம்.ஜி.ஆர் சரி நிகழ்ச்சி தொடரட்டும் என்று சொல்லிவிட்டு தன் ஆட்களை அழைத்து ஐந்து பவுன் சங்கிலி வாங்கிவரச் சொல்லி நடனமாடிய பெண்ணுக்கு பரிசளித்தார்.
    உட்காரும் ஸ்டைல்
    எம்.ஜி.ஆர் எப்போதும் நேராக உட்கார்வார். ஆனால், கால் மேல் கால் போட்டு உட்காரமாட்டார். அதனால் அவர் முன்பு மற்றவர்களும் அப்படி உட்கார்வதில்லை. சிலர் தமது பழக்கம் காரணமாக அப்படி உட்கார்ந்தால் எம்.ஜி.ஆர் அதற்கு கோபிக்க மாட்டார்.
    மதுரையில் உலக தமிழ்ச் சங்க அறிவிப்பு கூட்டத்தின் போது தமிழண்ணல் போன்ற தமிழறிஞர்கள் மேடையில் எம்.ஜி.ஆரோடு இருந்தனர். அப்போது மேடையில் இருந்த திருமதி ராதா தியாகராஜன் சாய்ந்தபடி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார்.
    எம்.ஜி.ஆர் முன்பு நாஞ்சில் மனோகரன் கால் மேல் கால் போட்டு உட்கார்வது குறித்து கட்சியினர் எம்.ஜி.ஆரிடம் குறைபட்டுக்கொண்ட போது ‘’அவர் பழக்கம் அப்படி இருந்துவிட்டுப் போகட்டும்’’ என்றார்.
    ஒரு முறை ரசிகர்கள் பணம் கொடுத்து எம்.ஜி.ஆருடன் போட்டோ எடுத்த போது ஒருவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து எம்.ஜி.ஆரின் தோள் மீது கை போட்டபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் அவரது காலை கீழே எடுத்துவிட்டபோது எம்.ஜி.ஆர் ‘’வேண்டாம் அவர் காசு கொடுத்திருக்கிறார் அவர் இஷ்டப்படி உட்காரட்டும்’’ என்று கூறிவிட்டார்..........Baabaa

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1862
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருமணமான நடிகைகளின் திருமண வாழ்க்கை மற்ற பெண்களை போல சிறப்பாக இருக்க வேண்டும் அவர்களுக்கு குடும்பங்களில் கணவர் பிள்ளைகள் போன்றவரால் எந்த நெருக்கடியும் ஏற்பட தான் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் எம் ஜி ஆர் கவனமாக இருந்தார். நாடோடி மன்னன் படத்தில் கத்திகுத்து பட்டு தண்ணீரில் விழுந்துகிடக்கும் பானுமதியை எம் ஜி ஆர் தூக்கிக்கொண்டு வரும் காட்சியில் நடிக்க பானுமதி மறுத்துவிட்டார். என் மகன் பரணி விவரம் தெரிந்தவன் அவன் என்னை ஒரு ஆண் தூக்கிக்கொண்டு போவதை விரும்பமாட்டான் என்று கூறிவிட்டார். ஏற்கெனவே அவர்களுக்குள் சற்று உரசல் இருந்து வந்ததால்ல் எம் ஜி ஆர் முழு பணத்துக்கான காசோலையைக் கொடுத்து இனி தன் படத்தில் நடிக்க வேண்டாம் என்று தகவல் அனுப்பினார். பானுமதியோ ஜானகி எம் ஜி ஆருக்கு ஒரு கடிதம் எழுதி அந்த செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்.
    திருமணமான நடிகைகளுக்கு இருக்கும் நெருக்கடியை புரிந்துகொண்ட எம் ஜி ஆர் அதன்பிறகு திருமணமான நடிகைகளோடு நடிப்பதை பெரிதும் தவிர்த்துவிட்டார். அதே படத்தில் சரோஜாதேவியை அறிமுகப்படுத்தினார். அவர் திருமணம் செய்துகொண்ட பின்பு ஜெயலலிதா அதன் பிறகு லதா என தன் கதாநாயகிகளை அவர் தெரிவு செய்தார்.
    தம்பி மனைவியோடு டூயட்டா?
    அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி என்று சாமான்ய மக்களே சொல்லி வந்த காலத்தில் திரையுலகில் இருந்த எம் ஜி ஆர் தன் தம்பி மனைவியாக கருதிய விஜயகுமாரியுடன் ஜோடி சேர மறுத்தார். திமுகவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ் எஸ் ஆர் எனப்படும் எஸ் எஸ் ராஜேந்திரன் எம் ஜி ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார். அவருடன் விஜயகுமாரி தாலி கட்டிய மனைவியாக வாழாவிட்டாலும் அக்காலத்தில் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பல படங்களிலும் நாடகங்களிலும் ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருந்தனர். அப்போது ஒரு படத்தில் எம் ஜி ஆருக்கு விஜயகுமாரியை ஜோடியாக போடலாமா என்று கேட்டபோது அவர் தம்பி மனைவியுடன் ஜோடியா? என்று மறுத்துவிட்டார். நிஜ வாழ்விலும் அவர் சகோதரன் மனைவியை தாயாகவே மதித்தார். எனவே விஜயகுமாரி கணவன், காஞ்சித் தலைவன் போன்ற படங்களில் எம் ஜி ஆரின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பை மட்டுமே பெற்றார்

    நாடகத்தில் நடிக்க நடிகையரை வெளி ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்போது எம் ஜி ஆர் மிகவும் கவனமாக இருப்பார். அவர்கள் வெளியில் வரக் கூடாது ரசிகர்களால் தொந்தரவு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக் இருப்பார். எம் ஜி ஆர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் தன் பெயரில் நாடக மன்றம் ஒன்றை தொடங்கினார். அதில் அவருக்கு ஜோடியாக ஜி சகுந்தலா நடிப்பார். அப்போது நடிகையர் கோவிலுக்கு போகவோ ஷாப்பிங் போகவோ எம் ஜி ஆர் அனுமதிக்க மாட்டார்.. அவர்களை காரில் ஏற்றி அனுப்பிய பிறகே எம் ஜி ஆர் தன் காரை எடுக்க சொல்வார்.
    சினிமாவிலும் வெளிப்புற படப்பிடிப்புக்கு போகும் போது யாராவது தன் குழுவில் உள்ள பெண்களை கேலி செய்தால் அடித்து உதைத்து அந்த இட்த்தை விட்டு அவர்களை அப்புறப்படுத்திவிடுவார். நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்பதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    எம்.ஜி.ஆர் லட்சுமி மஞ்சுளாவுடன் காஷ்மீர் நகர் வீதியில் இதயவீணைக்காகப் படப்பிடிப்பு நடத்தியபோது பொதுமக்கள் படப்பிடிப்புக்குப் பகுதிக்குள் வராமல் இருக்க கயிறு கட்டியிருந்தனர். அதையும் மீறி சில இளைஞர்கள் உள்ளே புகுந்து பெண்களிடம் சில்மிஷம் செய்தனர். எம்.ஜி.ஆர் உடனே நடிகைகளை அருகில் இருந்த கடைக்குள் தள்ளி விட்டு ஷட்டரை இழுத்துவிட்டார். அவர்கள் உள்ளே இருந்த ஒரு கண்ணாடி வழியாக வெளியே பார்த்தனர். அங்கே எம்.ஜி.ஆர் அந்தக் காலிப் பசங்களோடு மூர்க்கமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். ‘எம்.ஜி.ஆர் படத்தில் வருவதைப் போலவே இந்த நிஜ சண்டை இருந்தது’ என்கிறார் லட்சுமி.
    ஒரு சமயம் மைசூரில் எம்.ஜி.ஆரும் லதாவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டது. எம்.ஜி.ஆர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார். அதை கவனிக்காத சில வாலிபர்கள் லதாவையும் மற்ற நடிகைகளையும் பார்த்து ஆபாசமாக பேசி சிரித்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர் விரைந்து வந்து அவர்களை அடித்து உதைத்தார். அநியாயம் நடக்கும்போது ஸ்டன்ட் நடிகர்களை அழைத்து அடிக்கச் சொல்வோம் என்று எம்.ஜி.ஆர் காத்திருக்க மாட்டார். எதிரிகள்மீது விழும் முதல் அடி அவர் அடியாகத்தான் இருக்கும். அவர்கள் தம் வாழ்நாளில் திரும்பவும் அந்தத் தப்பை செய்ய நினைக்காத அளவுக்குப் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்.

    வெளியூர் வெளிமாநிலம் என்றில்லை வெளி நாடாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் நடிகையரிடம் சில்மிஷம் செய்பவர்களை அடித்து உதைக்க தயங்கியதே இல்லை. ஜப்பானில் எஃஸ்போ 70-ல் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நடந்த போது அங்கு ஒருவர் சந்திரகலாவை கேலி செய்தார். ‘அவரை தன் கறுப்புக் கண்ணாடி வழியாக தூரத்திலிருந்து கவனித்துவந்த எம்.ஜி.ஆர் அருகில் வந்து பட்டென்று அடித்தார். அடி வாங்கியவர் அங்கிருந்து ஓடிப் போய்விட்டார். இது வெளிநாடாயிற்றே, சட்டம் ஒழுங்குப் பிரச்னை வருமோ என்றெல்லாம் யோசித்துப் பார்க்காமல் அநியாயத்தைக் கண்டவுடன் வழக்கம் போல எம்.ஜி.ஆர் பொங்கிவிட்டார். அவர் நல்ல குணத்துக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை மாறாக அடி வாங்கியவர் தன் தவறை உணர்ந்து திரும்பி வந்து மன்னிப்புக் கேட்டார். இதனால்தான் எம்.ஜி.ஆருடன் நடிக்கும்போது நாங்கள் பயமின்றி பாதுகாப்பாக உணர்வோம்’ என்கிறார் ஜி.சகுந்தலா.
    நடிகைகளுக்குத் துன்பம் கொடுப்பவர் யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டிக்க தயங்கியதே இல்லை. ஓர் அமைச்சரால் தனக்குத் தொல்லை என்று முறையிட்ட ஓர் இளம் நடிகைக்கு ஆதரவாக அந்த அமைச்சரை அழைத்துக் கண்டித்தார்.
    நடிகைகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர், நடிகர்கள் பெண்களிடம் தவறு செய்த போது அதைக் கண்டிக்கத் தயங்கவில்லை. ‘கல்லூரிப் பெண்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நடிகர் சுமன்’ மீது உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை கிடைக்கச் செய்தார். சுமனும் நடிகர்தானே என்று எம்.ஜி.ஆர் அவருக்கு இரக்கம் காட்டவில்லை வாழ்க்கை வீணாகப் போன இளம் பெண்களுக்காக எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார்.. நடிகன் என்றால் இளம் பெண்களை மயக்கி அவர்கள் வாழ்வைச் சீரழிக்கலாம் என்பதை எம்.ஜி.ஆர் ஏற்கவில்லை. நடிகருக்குக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
    எம்.ஜி.ஆர் தான் சார்ந்திருந்த திரையுலகில் நடிகையரின் கண்ணியத்தைக் காப்பதை தன் கடமையாகக் கருதினார். அவர்களுக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றை தன்னால் முடிந்தவரை தீர்த்துவைத்தார். இவ்வாறு எம்.ஜி.ஆர் படத்திலும் நிஜ வாழ்விலும் பெண்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டதால் பெண்களை அவர் தாய்க்குலம் என்று அழைத்தபோது மக்கள் அதை நம்பி ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசுப் பணியாளர் முதல் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வரை பெண்களைத் தாய்க்குலம் என்றே அழைத்தனர், மதித்தனர். காவல் நிலையத்திலும் பெண்கள் அளிக்கும் புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டன. நடிகையருக்கும் சரி சாதாரணப் பெண்களுக்கும் சரி எங்கெங்கு அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கே நான் வந்து இரட்சிப்பேன் என்று கூறிய கண்ண பரமாத்மாவாக எம்.ஜி.ஆரைக் கருதியதில் வியப்பொன்றும் இல்லை...Baabaa

  4. #1863
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எல்லோருக்கும் உதவுவதால் எம் ஜி ஆர் கடவுள் தான்

    டாக்டர் உதயமூர்த்தி எழுதிய அமேரிக்காவில் எம் ஜி ஆர் என்ற நூலில் இருந்து

    அமேரிக்கா பல்கலை கழகங்களின் அழைப்பை ஏற்று சுற்று பயணத்தை முடித்து விட்டு வாஷிங்டன் விமானநிலையத்தில் தன் அமேரிக்கா நண்பர்களுடன் நூழைகிறார் எம் ஜி ஆர் சிறிது நடந்த எம் ஜி ஆர் கண்கள் ஓரமாக நின்று சிறுகுழந்தையோடு ஒரு ஆங்கிலபெண்மணி அழுதுகொண்டிருப்பதை. கவனிக்கிறது உடனே அவர் அருகே சென்று ஆங்கிலத்தில் ஏன் அழுகிறாய் என எம் ஜி ஆர் கேட்கிறார் அமேரிக்காவை பொறுத்தவரை அதிகம் எவரும் அடுத்தவர் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை
    எம் ஜி ஆர் கேட்ட உடன் அந்த பெண் தான் தன் கணவரை காண வந்ததாகவும் அவர் இங்கு ராணுவத்தில் பணி செய்வதாகவும் தான் நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததாகவும் இங்கு வைத்து தன் பை திருடபட்டதாகவும் தன் முக்கிய ஆவணம் பணம் எல்லாம் அதில் உள்ளது அதனால் என்ன செய்வது என்று புரியாமல் அழுவதாகவும் கூற உடனே எம் ஜி ஆர் தன் கூடவந்த செல்வாக்கு மிக்க ஒரு நண்பரை அழைத்து நீங்கள் இந்த பெண்ணிற்க்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள் சிலவிற்க்கு பணமும் கொடுங்கள் நான் ஊர் சென்று அனுப்புகிறேன் என கூறிவிட்டு அந்த பெண்ணிடம் கவலை படாதீர்கள் இவர் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவியும் செய்வார் என கூறி விடை பெற்று விமானம் நோக்கி செல்கிறார் எம் ஜி ஆர்

    இதை கவனித்து கொண்டிருந்த என் மனம் என்னை அறியாமல் பொன்னின் நிறம் பிள்ளை மனம்வள்ளல் குணம் யாரோ என்ற பாடலை நினைத்தது

    உண்மை நண்பர்களே கடவுள் ஒருவரே யார் என்று பாராமல் உதவுபவர் அதனால் யார் என்று பாராமல் எல்லோர்க்கும் உதவும் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் ஒரு கடவுளே

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்...Arm

  5. #1864
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    12-8-2020--சிறப்பு பதிவு
    எம். ஜி ஆரை வர்ணித்த கவியரசர்
    கவியரசரை பாராட்டிய எம். ஜி ஆர்
    ---
    எம். ஜி. ஆர் அவர்கள் தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமன்றி தூற்றுவோர்க்கும் உதவிகள் செய்வார். அது எம். ஜி அருக்கே உள்ள தனி சிறப்பு. தன்னை தாக்கி பேசுபவர்கள் திறமையாளர்களாக இருந்து விட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களின் திறமைக்கு உரிய கௌரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.
    எம். ஜி ஆர் நடித்த சூப்பர் ஹிட் படம் ''ஆயிரத்தில் ஒருவன்"" படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு ஒரு பாடல் தேவைப்பட்டது. அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காண புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல் அந்தக் காட்சிக்கு பலர் எழுதியும் எம். ஜி. ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
    --
    அப்போது கவிஞர் அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக எம். ஜி. ஆரை கடுமையாக மேடைகளில் விமர்சித்து வந்தார். ஆனாலும் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம். ஜி ஆர் கூறியதில்லை. எம். ஜி. ஆர் படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று கவிஞரும் சொன்னதில்லை. மேடைப் பேச்சு ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம். ஜி. ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கவிஞரை அணுக தயங்கினார். அதனால் எம். ஜி. ஆர் படங்களில் அவர் பாடல்கள் இடம் பெறவில்லை.

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மேலே குறிப்பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பால் கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், கவிஞரை விட்டே பாடல் எழுத சொன்னாள் என்ன என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரிடம் விஷயத்தை சொல்ல அவரும் எழுதிக் கொடுத்தார். எம். ஜி. ஆருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி பாடலை ஓகே செய்தார்.
    அந்தப் பாடல் தான் காலத்தால் அழியாத
    'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்"
    அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அவர் கடுமையாக தாக்கி பேசுவாரே தவிர மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம். ஜி. ஆருக்கு தெரியும்.
    அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்.
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
    காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
    கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
    காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
    காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
    (அதோ..)

    தோன்றம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
    சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
    வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
    போகும்போது வேறுபாதை போவதில்லையே
    ஒரே வானிலே ஒரே மன்னிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
    (அதோ..)
    கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
    கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
    அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
    அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
    (அதோ..)

  6. #1865
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1977 ஆக 14 ல் வெளிவந்த தலைவரின் கடைசி பிளாக்பஸ்டர் படம்தான் மீனவ நண்பன். ஸ்ரீதரின் "உரிமைக்குரலி"ன் இமாலய வெற்றிக்கு பின்னர் வந்த படம்தான் "மீனவ நண்பன்". படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமையிலும் இனிமை. "தங்கத்தில் முகமெடுத்து", மற்றும் "பொங்கும் கடலோசை" பாடல்கள் எவர்கிரீன் வரிசையில் சேர்ந்து கொண்டது. எம்ஜிஆர் ஒரு படத்துக்கு வாங்கிய சம்பளத்தில் அதிகபட்சமாக இந்தப்படத்திற்குதான் வாங்கினார் என்று நம்பகமான செய்திகள் கூறுகிறது.

    அய்யனின் கைஸ்கள் தலைவரின் வெற்றியை மிகவும் வயத்தெரிச்சலோடு ரசிப்பவர்கள் போலும்.. அதனால்தான் "மீனவ நண்பன்" "உரிமைக்குரல்" அளவு நிறைய அரங்குகளில் 100 நாட்கள் ஓடவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளனர். "உரிமைக்குரலை"
    காட்டிலும் அதிகம் ஓடாவிட்டாலும் முதல் ரவுண்டிலேயே 1 கோடியை தாண்டி வசூல் செய்த படம்.

    சென்னையில் "உரிமைக்குரலை" காட்டிலும் மிக அதிக வசூலை பெற்ற படம். சென்னையில் ஓடி முடிய 319 நாளில் ரூ 1776719.00 வசூலாக பெற்று அதுவரை வெளிவந்த அய்யனின் அனைத்து படங்களை காட்டிலும் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்கிறது ஆனால் "தீபம்" 342 நாட்கள் ஓட்டி 1668722.85 வசூலாக காட்டினார்கள். தில்லு முல்லு செய்து பொய்வசூல் காட்டிய "தங்கப்பதக்கம்", "அண்ணன் ஒரு கோயில்" படங்களின் வசூலை தவிர்த்து பார்த்தால் கைஸ்களுக்கு இது புரியும்.

    "தீபத்தி"ன் வசூலை முறியடித்து வெற்றி கொண்ட "மீனவ நண்பனி"ல் வரும் பாடலில் தலைவர் பாடுவார் 'நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்' என்று.
    ஆனால் அவர் இருக்கும் வரை யாருக்கும் அந்த துணிவு வரவில்லை. சென்னையில் "உரிமைக்குரல்" 368 நாளில் பெற்ற வசூல் ரூ1195691.32. ஸ்ரீதர் தயாரிப்பில் அய்யன் நடித்த அனைத்து படங்களின் கந்தல் வசூலை காலில் போட்டு மிதித்த படம்தான் "மீனவ நண்பன்".

    சென்னை, மதுரை, சேலம் 100 நாட்களும், இலங்கையில் இரண்டு திரையரங்குகளை சேர்த்தால் மொத்தம் 5 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி பெரிய வெற்றியை பெற்ற படம். திருச்சி பேலஸில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஸ்ரீதர் இயக்கத்தில் வரவிருந்த "அண்ணா நீ என் தெய்வம்" படப்பிடிப்பு
    முடிவதற்குள் முதல்வர் நாற்காலியில் தலைவர் அமர்ந்ததால் "மீனவ நண்பனே" ஸ்ரீதர் இயக்கத்தில் கடைசி படமாக அமைந்தது எனலாம்.

    இதில் சில கைஸ்கள் "உரிமைக்குரல்" அய்யன் நடிக்க வேண்டிய படமாம். இதேபோல் "உத்தமபுத்திரனை" தலைவர் நடித்திருக்க வேண்டிய படத்தில் புகுந்து சொதப்பி படத்தை தோல்வி படமாக்கியதை கண்டும் கைஸ்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை. "உத்தம புத்திரனி"ல் தலைவர் நடித்திருந்தால் அதன் தயாரிப்பில் புதுமை காட்டி ஆங்கிலப் படங்களுக்கு இணையாக தயாரித்து
    வெற்றி பெற்றிருப்பார். வேண்டாமப்பா! புரட்சி நடிகரின் இயல்பான நடிப்பிற்கு முன்னால் என்ன கைதட்டி டான்ஸ் ஆடினாலும் எடுபடாது என்பது திண்ணம்..........ksr...

  7. #1866
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாடோடி மன்னன் தொடங்கி நாடாளும் நிலை வரை எம்ஜிஆருடன் பயணித்த கே.பி.ராமகிருஷ்ணன்*


    எம்ஜிஆரின் மெய்க்காப்பாளரும், எம்ஜிஆருக்கு மாற்றாக சினிமாவில் டூப் போட்டு நடித்தவரும், நாடோடி மன்னனில் எம்ஜிஆருடன் இணைந்து நாடாண்ட காலம் வரை பயணித்து எம்ஜிஆரின் இறுதிவரை துணை நின்றவருமான கே.பி.ராமகிருஷ்ணன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார் ������


    மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மெய்க்காப்பாளராகவும், உதவியாளராகவும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக உடன் பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். 58-ல் 'நாடோடி மன்னன்' படத்தில் எம்ஜிஆருக்காக டூப் போடத் தொடங்கியவர் 1978-ம் ஆண்டு 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படம் வரை இணைந்தே பணியாற்றினார்.


    1930-ம் ஆண்டு எம்ஜிஆர் பிறந்த பாலக்காடு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். 9 வயதில் சென்னைக்கு வந்துவிட்டார். சௌக்கார்பேட்டையில் ஒரு பால் கடையில் வேலை செய்து வந்தார். 1946-களில் சௌக்கார்பேட்டையில் வாடகை வீட்டில் தனது தாயார், சகோதரருடன் குடியிருந்தார் எம்ஜிஆர்.


    அந்த நேரத்தில் மாலை நேரங்களில் தனது சகோதரருடன் பால்கடைக்கு பாதாம் பால் சாப்பிட எம்ஜிஆர் வருவாராம். அப்போது ராமகிருஷ்ணன் பழக்கமாகியுள்ளார். அதன் பின்னர் எம்ஜிஆர் தொடங்கிய எம்ஜிஆர் நாடக மன்றத்தில் சேர்ந்துள்ளார். 1949-ல் 'மங்கையர்க்கரசி' என்கிற படத்தில் நடித்துத் திரையுலகில் நுழைந்துள்ளார். 'பூலோக ரம்பை' படத்தில் நம்பியாருக்கு டூப் போட்டு நடித்துள்ளார். எம்ஜிஆருக்கு டூப்பாக 1958-ம் ஆண்டு நாடோடி மன்னனில் நடித்தார். அன்று முதல் அவரது கடைசிப் படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை அவருடன் இணைந்து பயணித்துள்ளார்.


    எம்ஜிஆருக்கு டூப்பாக மட்டுமல்ல, அவரது படத்தில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். பின்னர் எம்ஜிஆருக்கு மெய்க்காப்பாளராகவும் மாறினார். 1962 சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி அனைத்துத் தேர்தல்களிலும் எம்ஜிஆருடன் மெய்க்காப்பாளராகச் சென்றவர். எம்ஜிஆருக்கு மட்டுமல்ல நம்பியாருக்கும் ஆஸ்தான டூப் நடிகர் கேபிஆர். பூலோக ரம்பையிலிருந்து அவருக்காக கடைசி வரை டூப் போட்டு நடித்துள்ளார்.

    ராமகிருஷ்ணனுக்கு 2 மகன், 2 மகள்கள். 1976-ம் ஆண்டு மூத்த மகள் திருமணத்தை எம்ஜிஆர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். எம்ஜிஆர் படங்களில் பிரபலம் அவரது சண்டைக்காட்சிகள். எம்ஜிஆர் வீராவேசமாக மோதும் காட்சிகளில் பறந்து விழுவது, பாய்வது, பல்டி அடிப்பது, உயரத்திலிருந்து குதிப்பது எனப் பல சாகசக் காட்சிகள் ரசிகர்களால் பெரும் வரவேற்பைப் பெறும். அதில் நடித்தது எம்ஜிஆர் என்றே கடைசிவரை அனைவரும் நம்பியதுண்டு.


    காரணம் ஒரு இடத்தில்கூட அது எம்ஜிஆர் இல்லை எனும் அளவுக்கு அவருக்கு டூப்பாக நடித்தவர் அசத்தியிருப்பார். அப்படிப் பல முறை காயம் பட்டதுண்டு, எலும்பு முறிவு ஏற்பட்டதுண்டு. ஆனாலும், திரையில் அந்தக் காட்சியில் எம்ஜிஆருக்கு இருக்கும் வரவேற்பைக் காண்பதாலும், எம்ஜிஆர் தன்னை ஒரு சகோதரனாகக் கருதிப் பார்த்துக்கொண்டதும் அவருக்கு அனைத்து வேதனைகளையும் பறந்தோடச் செய்துவிடும்.


    எம்ஜிஆர் இரு வேடங்களில் நடிக்கும் காட்சிகளில் மற்றொரு எம்ஜிஆராக ராமகிருஷ்ணன் தத்ரூபமாக நடித்திருப்பார். நடிப்பது மட்டுமல்ல இரண்டு எம்ஜிஆர் மோதும் சண்டைக்காட்சிகளில் குறிப்பாக 'நீரும் நெருப்பும்', 'நினைத்ததை முடிப்பவன்' போன்ற படங்களில் இரண்டு எம்ஜிஆர் கத்திச்சண்டை போட்டு மோதும் காட்சியில் ராமகிருஷ்ணனின் அபார ஆற்றல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இன்னொரு எம்ஜிஆராக, எம்ஜிஆருடன் நடித்த ராமகிருஷ்ணன் எம்ஜிஆரிடம் அவரது பால்ய காலத்திலேயே நட்பால் இணைந்தவர்.


    எம்ஜிஆரிடம் உள்ள அன்பால் அவருடனே பயணித்தவர். எம்ஜிஆரும் அவர் மீதுள்ள அன்பால் அவரைத் தனது மெய்க்காப்பாளராகவே வைத்துக்கொண்டார். அதிலும் சோதனை மிகுந்த 1972-ம் ஆண்டுகளில் அதிமுகவைத் தொடங்கிய காலகட்டத்தில் எம்ஜிஆரின் உயிருக்கே அச்சுறுத்தலாக இருந்த நேரத்தில், பிரச்சாரங்களில், பொதுக்கூட்ட மேடைகளில் எம்ஜிஆரின் நிழல் போலவே இருந்து பாதுகாத்தவர் ராமகிருஷ்ணன்.

    எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபின் பல முறை உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோதும், உங்கள் அன்பு மட்டும் போதும் தலைவா என ஒதுங்கியே வாழ்ந்தவர். எம்ஜிஆரின் பாதுகாவலராக ராமகிருஷ்ணன் இருந்தபோதும் கட்சியில் அவர் பெரிதாக பதவியை எதிர்பார்க்கவில்லை. எம்ஜிஆர் இடையில் ஜெயலலிதாவிற்குப் பாதுகாப்பாக இருக்கும்படி அனுப்பி வைத்தார்.


    எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது புகழைப் பரப்புவது மட்டுமே குறிக்கோளாகச் செயல்பட்டவர் ராமகிருஷ்ணன். மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் எம்ஜிஆரைத் தெய்வமாக மதிக்கும் ரசிகர்கள் ராமகிருஷ்ணனை அழைத்து விழா எடுத்தனர். ராமகிருஷ்ணனை எம்ஜிஆரின் நிழலாகவே பார்த்தனர். அவரும் போகும் இடமெல்லாம் எம்ஜிஆர் பற்றி மட்டுமே பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.


    இயல்பிலேயே சுயமரியாதை உள்ள ராமகிருஷ்ணன் தான் தெய்வமாகப் பூஜிக்கும் எம்ஜிஆரைத் தவிர யாரிடமும் சென்று நிற்கமாட்டேன் என்று உறுதியுடன் இருந்ததால் தனது பிள்ளைகளுக்காகக் கூட முதல்வர் ஜெயலலிதாவிடமோ அல்லது எம்ஜிஆரால் வாழ்வுபெற்ற யாரிடமும் போய் உதவி கேட்டு நின்றதில்லை. மறுபுறம் ராமகிருஷ்ணன் போன்றோருக்கு எம்ஜிஆரால் அமைந்த ஆட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தைக்கூட வெளியிட அவர் விரும்பவில்லை.

    எம்ஜிஆரின் இறுதி நாள் குறித்து கே.பி.ராமகிருஷ்ணனிடம் ஒருமுறை பேசியபோது, அவரைக் கடைசியாகப் பார்த்துப் பேசியது நானாகத்தான் இருப்பேன் என்றார். எம்ஜிஆர் மறைவுக்கு முதல் நாள் இரவு அவரது படுக்கை அறையில் அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த ராமகிருஷ்ணனிடம் எம்ஜிஆர் சிரித்துக்கொண்டே, 'என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய், நேரமாகுது. வீட்டுக்குக் கிளம்பு. காலையில் பார்க்கலாம்' என்று சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்ததைக் கூறி, 'அது கடைசி சிரிப்பு என நினைக்கவில்லை' என்று கூறி கலங்கினார்.

    'எம்ஜிஆருடன் அவர் வாழ்நாள் முழுதும் பயணித்தேன். வேறு யாருக்கும் கிடைக்காத பேறு அது. இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும்'' என்பதே கே.பி.ஆரின் பதிலாக இருந்தது. அவர்பால் நலம் கொண்டவர்கள் அரசிடம் உதவி கேட்கலாம் என்று கேட்டாலும், மறுத்தே வந்ததை அவரது மகன் கோவிந்தராஜன் நினைவுகூர்ந்தார்.

    நாடோடி மன்னனில் எம்ஜிஆருடன் திரையுலகப் பயணத்தைத் தொடர்ந்த கேபி.ராமகிருஷ்ணன் நாடாளும் நிலையை எம்ஜிஆர் அடைந்த பின்னரும் மெய்க்காவலராக உடன் நின்றார். எம்ஜிஆரின் மறைவு வரை தொடர்ந்தது அவரது நட்பு. எம்ஜிஆரின் நினைவுகளைச் சுமந்து வாழ்ந்த பெட்டகம் ராமகிருஷ்ணன் மறைவு. எம்ஜிஆர் ரசிகர்களுக்கும், எம்ஜிஆரின் ஆளுமையைத் பதிவு செய்யும் ஆர்வலர்களுக்கும் இழப்பு என்றே கூறலாம்..........drn

  8. #1867
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

    மக்கள் தில*க*ம் தென் இந்திய ந*டிக*ர் ச*ங்க*த்தினை ஆர*ம்பித்த* மூலகர்த்தாவில் ஒருவ*ர்.

    பிர*ப*லந*டிகை மற்றும் த*யாரிப்பாள*ர் அஞ்ச*லிதேவியை முத*ல் தென்னிந்திய* ந*டிக*ர் ச*ங்க*த்தின் த*லைவ*ராக்கினார்...

    மேலும் அப்போது சினிமா ச*ம்ப*ந்த*ப்ப*ட்ட செய்திக*ளை "ந*டிக*ன் குர*ல்" என்ற மாத* இத*ழை தொட*ங்கி அதில் வெளியிட்டு வ*ந்தார்.

    அத*ன் ப*திப்பாசிரிய*ராக எம்.ஜி.ஆர் செய*ல்ப*ட்டாலும் த*ன்னை முன்னிலைப்ப*டுத்திக் கொண்ட*தேயில்லை! ஒரு இத*ழில் சிவாஜியை அட்டைப்ப*ட*த்தில் போட்டு க*வுர*வ*ப்ப*டுத்தினார். முன்ன*னி ந*டிக*ர் மட்டுமல்ல! சாதார*ண நிலையில் இருந்த குணசித்திர ந*டிக*ர்க*ளையும் ஒன்றுபோலவே மதித்தார்.
    அத*ற்கு உதார*ணம்தான் ந*டிக*ன் குர*ல் இத*ழின் இந்த* அட்டைப்ப*ட*ம்..

    அட்டையில் "அய்யா! தெரியாத*ய்யா ராமாராவ்" இவ*ர் த*லைவ*ரின் ஒளிவிளக்கு, ர*க*சிய போலீஸ்115, ஆயிர*த்தில் ஒருவ*ன் , ந*ல்ல*வ*ன் வாழ்வான்,ரிக்ஷாக்கார*ன் மற்றும் சிவாஜியின் மோட்டார் சுந்த*ர*ம்பிள்ளை, க*லாட்டா க*ல்யாணம், க*வுர*வ*ம் மற்றும் பலமுன்னனி ப*ட*ங்க*ளில் ந*டித்த*வ*ர்.

    இந்த* இத*ழ் வெளிவ*ந்த*போது அவ்வ*ள*வு பிர*ப*லமும் இல்லை. ஆனால், திற*மைசாலிக*ளை ஊக்குவிக்க*வும், புதிய வாய்ப்புக*ளை அவ*ர்க*ள் பெற*வும் அட்டைப்ப*ட*த்தில் வெளியிட்டு அந்த* சாமான்ய ந*டிக*ர்க*ளின் பேட்டி செய்திக*ளை வெளியிட்டு வ*ந்தார்.

    அத*ற்கு இன்னொரு கார*ண*மும் உண்டு. த*லைவ*ர் 1937ல் ச*திலீலாவ*தியில் தொட*ங்கி ந*டித்து வ*ந்தாலும் அவ*ர*து ப*ட*மும், பெய*ரும் போஸ்ட*ர்க*ளில் இட*ம்பெற* சிலகால*ம் பிடித்த*து. க*தாநாய*க*னாக* உய*ர* 10 வ*ருட*ம் ஆன*து. அந்த* வலியும், வேத*னையும் சிறிய ந*டிக*ர்க*ள் பெற்றுவிட*க்கூடாது என்ப*தாலேயே ராமாராவ் போன்ற* சிறிய ந*டிக*ர்க*ளுக்கும் முக்கிய*த்துவ*ம் அளித்து பெருமைப்ப*டுத்தினார்...

  9. #1868
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Mohamed Thameem பாயி.. ஆமா..நீ அய்யனின் விவரம் தெரிஞ்ச பிள்ளை. துல்லியமா சொல்லுவ. இங்கயும் பதிவ படிச்சுட்டு கரெக்டா கேக்குற. ஆனா, உங்க சின்ன பிள்ளைங்க அடிச்சு விடுறதை விடு. அறியாப் பிள்ளைங்க ஆர்வத்தில் பொய் சொல்லுதுங்க. வீரபாண்டிய கட்டபொம்மன் 28 தியேட்டரில் 100 நாள் ஓடிச்சுன்னு அடிச்சுவுடுறாங்க. முந்தா நாள் கூட பதிவு போட்டேன். சரி விட்ருவோம். விவரம் அறிஞ்ச பிள்ளைன்னு சொல்லப்படற முரளி சீனிவாசன் இஷ்டத்துக்கு அடிச்சுவுடுறாரே. ஏற்கனவே ராஜா படம் ரிக்சாக்காரனை வசூலில் மிஞ்சியதுன்னு சொல்லி நடிகப்பேரரசர் கிட்ட ஆதாரத்துடன் வாங்கிக் கட்டிக்கிட்டார். இது போதாதுன்னு தன்னை எல்லாரும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்னு நினைக்கனும்னு இஸ்டத்துக்கு கப்ஸா அள்ளி வீசுராரே. பாபு படம் பத்தின பதிவில் 1971 ல் பாபு படம் வெளியானதற்கு முந்தின நாள் அதாவது 1971 அக்டோபர் 17 ல் மு.க.முத்து நடிச்ச பிள்ளையோ பிள்ளை படத்தை எம்ஜிஆர் கிளாப் அடிச்சு தொடங்கி வெச்சார்னு அள்ளி விட்டுருக்கார். அதுக்கு ஸ்கிரீன் சாட் ஆதாரம் இங்கு போட்டிருக்கேன். உண்மையில் பிள்ளையோ பிள்ளை படத்தை எம்ஜிஆர் கிளாப் அடிச்சு தொடங்கினது 1971 அக்டோபர் 21. இதயவீணை கெட்டப்பில் கிளாப் அடிப்பார். அந்த கிளாப் போர்டில் தேதி தெளிவா இருக்கும். அந்தப் படத்தை அடுத்த பதிவில் போடறேன். துல்லியமாக விவரம் சொல்ற நீ இந்த தப்ப எல்லாம் முரளி சீனிவாசன் கிட்ட சொல்ல வேணாமா. அவர காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சா வெளிப்படையா பதிவு போடாம அவருகிட்ட எப்பவாச்சும் போனில் பேசும்போது சொல்லுய்யா. இதோ 1971 அக்டோபர் 17 ல் எம்ஜிஆர் கிளாப் அடிச்சு பிள்ளையோ பிள்ளை படத்தை தொடங்கி வெச்சதா முரளி சீனிவாசன் சொன்ன தப்பான தகவல் ஆதாரம். நாளைக்கி வெள்ளிக்கிழமையா.. முரளி சீனிவாசன் என்ன கதை அளக்கப்போறாரோ......... Rajarajan

  10. #1869
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Mohamed ThameemMohamed Thameem பிள்ளையோ பிள்ளை படத்தை எம்ஜிஆர் கிளாப் அடிச்சு தொடங்கும் காட்சி. அதில் தேதி பார். முரளி சீனிவாசன் சொன்னா மாதிரி 1971 அக்டோபர் 17 இல்லை. அக்டோபர் 21 ந்னு போட்டிருக்கு பார். சரித்திரம் எப்பவும் பலருக்கும் பாடம் எடுக்கும்னு வேற தன் பதிவுல முரளி சீனிவாசன் சொல்றாரு. அவருக்கு முதல்ல நீ பாடம் எடுய்யா. அடுத்த பதிவில் இன்னமும் தெளிவா தேதி தெரியறா மாதிரி போட்டா போடறேன்.........RRN

  11. #1870
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பட்டு சேலை காத்தாட--pattu selai kathada
    “பட்டு சேலை காத்தாட”

    ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தை எம்ஜிஆரை கேட்காமல் தெலுங்கில் வெளியிட்டதில் தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் சிறிய மனக்கசப்பு இருந்தது.

    இந்த சூழலில் ‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தை ஆரம்பித்தார் தேவர். கதையை கேட்ட எம்.ஜி.ஆர், இந்த மாதிரி கதையெல்லாம் என்னை வெச்சி எடுக்கமாட்டீங்களா என்று கேட்க, மனக்கசப்பு நீங்கி தேவர் சம்மதித்தார்.

    கதை வசனம் எழுதிய ஆரூர் தாஸுக்கு, தன்னை அவ்வளவாக
    எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை என்ற எண்ணம் இருந்தது. ஆனால் காட்சியின் தொடக்கத்தில் நாயகன் பேசும் வசனத்தை கேட்ட எம்.ஜி.ஆர், ஆரூர் தாஸை கட்டி அணைத்து ‘எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது’ என்றாராம்.
    அந்த வசனம் இதுதான்.

    எம்.ஜி.ஆர்: ‘எங்கப்பா இறந்ததுலேருந்து, எங்க அம்மா எந்த ஒரு மங்கல காரியத்துலேயும் பங்கெடுத்துக்கிட்டது கிடையாது. பொதுவா, கணவரை இழந்த பெண்களைப் பாக்குறதே அபசகுனம்னு சொல்லுவாங்க.

    ஆனா நான் விடிஞ்சதும் எங்கம்மா முகத்துலதான் விழிக்கிறேன். அதனாலதான் எனக்கு வெற்றி மேல வெற்றி கிடைக்குது. எனக்கு தாய் தான் தெய்வம்! அந்தத்தாய் சொல்லைத் தட்டமாட்டேன்’.

    “கையில் எடுத்தால் துவண்டு விடும் …
    கண்கள் இரண்டும் சிவந்து
    விடும்
    சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே …”

    பின்னல் ஜடை முன்புறமாக, ஒன்றை பூ அதில் மலர்ந்திருக்க நளினமாக ஜாடை காட்டி நடந்து வரும் சரோம்மா இந்த வர்ணனைக்கு படு பொருத்தம்.

    “நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
    அமைதி நிறையும் முகத்தழகு யாவும் உங்கள் தனியழகு”

    என்று நாயகனை வர்ணித்தபடி எம்.ஜி.ஆரின் உதட்டை தொட்டு சிரித்து குலுங்குவார் சரோம்மா.

    இனிமை தேன் மழை பொழிந்த சுசீலாம்மா, சௌந்தர்ராஜன்…
    பட்டு சேலை காத்தாட இசை தென்றல் வீசிய திரை இசைத்திலகம் மகாதேவன்…இதுபோன்ற இனிமைகள் இனி கிடைக்குமா?…

    “காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
    தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே”

    உண்மையான காதலை வெளிப்படுத்தும் வரிகளை இப்படி எழுத கவிஞரால் மட்டுமே இயலும்.
    —————————–
    படம்: தாய் சொல்லை தட்டாதே
    இசை: கே.வி.மகாதேவன்
    குரல்: டி.எம்.எஸ், பி.சுசீலா
    வரிகள்: கண்ணதாசன்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •