Page 191 of 210 FirstFirst ... 91141181189190191192193201 ... LastLast
Results 1,901 to 1,910 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1901
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தப் படத்துல குளத்துல சண்டையில் நம்பியாருக்கு டூப்பா நடிச்ச மக்கள் திலகம் பாதுகாவலர் சமீபத்தில் இறந்த அமரர் கே. பி. ராமகிருஷ்ணனுக்கு கால் உடைஞ்சு போச்சு. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை செலவு பூராவும் தயாரிப்பாளர் தலையில் கட்டாமல் புரட்சித் தலைவர் ஏழைகள் வள்ளல் தானே ஏத்துக்கிட்டார். இதாவது பரவால்ல. தன்னோட பாதுகாவலர் செஞ்சாருன்னு சொல்லலாம். அந்த சமயத்தில மஞ்சக் காமாலை வந்து அதே ஆஸ்பத்திரில சேர்ந்த ( மெட்ராஸ் கே ஜே ஆஸ்பத்திரி) சாவித்திரி சிகிச்சை செலவயும் ஏழைகளின் தெய்வம் எட்டாம் வள்ளல் ஏத்துக்கிட்டார். ஒருதாய் மக்கள் படத்திலயும் நடிக்காத சாவித்திரிக்கு வைத்தியம் செய்யணும்னு தலைவருக்கு என்னய்யா அவசியம். சாவித்திரியோட அண்ணன் நொண்ணன்னு சொன்னவன்லாம் சாவித்திரிய திரும்பிக்கூட பாக்கல. வள்ளலார் புரட்சித் தலைவர் வாழ்க..........rrn...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1902
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இவன் ஒரு முட்டாள் ...னாட்டி. சுரேஷ் சுரேஷ். 72 க்கு பிறகு எம்ஜிஆர் படம் சரியா ஓடலியாம். ஏண்டா 73 ல் உலகம் சுற்றும் வாலிபன் வந்தப்ப நீ பரலோகம் போயிருந்தியா. ரஜினி, கமல், விஜயகாந்த் வெள்ளத்தில் எம்ஜிஆர் அடித்து செல்லப்பட்டிருப்பார்னு சொல்றியே. அப்படி அடிச்சிட்டு போக அவர் என்ன கணேசனா. நீ சொன்ன நடிகர்கள் படித்தில எல்லாம் துணை நடிகனா நடிச்சவர்தான் கணேசன். 1990 வரை கதாநாயகன் அந்தஸ்தில் கணேசன் இருந்தாரா. டேய் .சுரேசா. கதானாயகன்றது அப்பா, தாத்தாவா, மாமனாரா வர்ரது இல்லடா. உங்க கணேசன் கடைசி காலத்துல பூரணம் விசுவனாதன் மாதிரிதான் நடிச்சார்.விட்டா ஆசை என்ற அஜித் குமார் படத்துல பூரணம் விசுவனாதன் தான் கதாநாயகன்னு சொல்லுவ போல.முட்டாள் பயல்....rrn

  4. #1903
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இங்க வந்து ஞாயம் சொல்றவங்க நல்லா பாத்துக்குங்கய்யா. யாரோ கார்திகேயனாம். என்ன சொல்றான் பாருங்க. ஏண்டா கார்த்திகேயா பாடு ..யே. எம்ஜிஆர் படம் திமுக ஆதரவு, பத்திரிகைகாரனை அடிச்சு கஸ்டப்பட்டு ஓடிச்சுன்னு சொல்றியே ஏண்டா பத்திரிகைகாரனை அடிச்சா படம் ஓடுமா. அட விஞ்ஞானி புடுங்கி.கணேசன் படம் கஸ்டப்படாம ஓடிச்சா.. எங்கே. தியேட்டரை விட்டா. வீரபாண்டிய கட்டபொம்மன் 300 நாள், வசந்த மாளிகை 750 நாள் எங்கடா இதெல்லாம்.. தமிழ்னாடு பூராம் சேர்ந்து மொத்தமா இத்தனை வருசத்தில் ஓடினதா.. த்தா....rrn

  5. #1904
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை டூ மதுரை... புரட்சித்தலைவரை ஒன்றரை நாள் பயணிக்க வைத்த மக்கள்...

    இரவு சென்னையிலிருந்த கிளம்பிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டியது. மாறாக மாலை 5 மணிக்குதான் மதுரை வந்தடைந்தது.. ஏன்? எதனால்? எப்படி? யாரால்?

    இப்படி ஒரு சம்பவத்தை நம்ப முடிகிறதா? ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்பதே உண்மை...,

    ஆம் 48 ஆண்டுகளுக்கு முன் உண்மையில் அப்படிப்பட்ட அதிசயம் நடந்தது.

    1973-எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த நேரம்... அ.இ.தி.மு.க.வை தொடங்கியிருந்தார். மக்கள் செல்வாக்கு எப்போதும் போல நிறைந்திருந்தது.

    காரணம் சரித்திர, புராண மாயையில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவில் சமூகக் கருத்துகளை தன் பாணியில் சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார் எம்ஜிஆர்.

    அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார். சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்குக் கிளம்பினார் தலைவர். இரவு நேரம் என்றாலும் கூட வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர்.

    ஒரு கட்டத்தில் மக்கள் ரயிலையே நிறுத்தியே விட்டார்கள். அதுவும் திருச்சியை நெருங்கும் போது ரயில் நகரவே வழியில்லை.

    எம்ஜிஆர் பற்றித்தான் நமக்கு தெரியுமே... எந்த தொண்டரையும் புறக்கணிக்காமல் அனைவர் வரவேற்பையும் ஏற்றுக்கொள்ள ரயில் மிக மிக மெதுவாக நகர ஆரம்பித்தது.

    ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

    மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரைச் சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். தாமதமாகிக்கொண்டே இருந்தது.

    'ரயில் இந்த வேகத்தில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது' என்பதாலும், 'தன்னால் ரயிலில் வரும் பயணிகளும் பாதிக்கப்படுகிறார்களே' என்பதாலும் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார்.

    கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார். கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது...

    இந்த செய்தியறிந்த ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட்டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே புரட்சித்தலைவர் இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர்.

    ''கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவதுதான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்," என்று கேட்டுக் கொண்டனர்.

    அதோடு எம்ஜிஆர் உடன் பயணித்தவர்களும் "உங்களோடு பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்... எத்தனை நாட்களானாலும் பரவாயில்லை," என்று சொல்ல, பொன்மனச்செம்மல் உருகிப்போனார்.

    நிலைமையை புரிந்து கொண்ட மக்கள்திலகம் ரயிலிலேயே பயணத்தைத் தொடர முடிவு செய்தார்.
    தன் நண்பர்களை இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன்னார்.

    வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.

    இதுதான் உண்மையான மக்கள் செல்வாக்கு என்பது...!

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்............vrh

  6. #1905
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சசியா--சரியா?--சரிவா??
    -----------------------------------
    எம்.ஜி.ஆருக்கு மட்டுமே இருந்த அந்த விசேஷ சிறப்பை ஜெ உணராமல் போனது துரதிர்ஷ்டம் என்றும்--
    ஆர்.எம்.வீயின் சில நடவடிக்கைகளைப் பற்றி,,ஜெ,,எம்.ஜி.ஆரிடம் புகார் தெரிவித்தும் அவர் மௌனமாக இருந்தார் என்றும் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தோம்!
    அதைக் கொஞ்சம் விரிவாக இங்கே பார்ப்போம்!
    எம்.ஜி.ஆரின் அந்த விசேஷ சிறப்பு--
    தமக்கு ஒருவர் நல்லது செய்தோலோ,,தம்மிடம் நேர்மையாக இருந்தாலோ--குறிப்பிட்ட அந்த நபரை உடனேப் பாராட்டி விட மாட்டார்!
    அந்த நபரே எதிர்பார்க்காத நிலையில்,,அந்த நபரே மறந்து விட்டாலும் கூட இரட்டிப்பாக,,மூன்று மடங்காக தம் நன்றியை திருப்பிக் காட்டி அவரை திணற அடிப்பார்!
    அதில் வேடிக்கை என்னவென்றால்--
    எம்.ஜி.ஆர் அவருக்கு செய்யும் நேரம் அந்த நபர் உண்மையிலேயே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்??
    அஃதைப் போலவே--
    ஒருவருக்கு தண்டனை வழங்க வேண்டி இருப்பின்--
    எடுத்த உடனேயே அவரை தண்டித்துவிட மாட்டார்.
    புத்திமதி சொல்வார். திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் கொடுப்பார்.
    வேறு வழியில்லை--முற்றிப் போய்விட்டது என்னும்போது களத்தில் இறங்குவார்.
    சினிமாவில் கூடப் பார்க்கலாம்--
    எதிராளி அடித்த பின்னரே இவர் கை ஓங்கும்! வெற்றியை வாங்கும்.
    அண்ணா காலத்திலிருந்து கருணா நிதிக்கு எம்.ஜி.ஆர் கொடுக்காத சந்தர்ப்பங்களா??
    ஒரு சாதாரணத் தொண்டனுக்குக் கூட எம்.ஜி.ஆரின் இந்த குணம் தெரிந்திருக்கும்போது இதை அன்று ஜெ எப்படி தெரிந்து கொள்ளாமல் விட்டார் என்பது நமது இன்று வரையிலான ஆச்சரியங்களில் ஒன்று!
    ஜெ,,புகார் செய்யும் முன்னரே,,எம்.ஜி.ஆரே ஆர்.எம்.வீயை ஆழம் பார்த்துக் கொண்டிருந்தார்?
    மிகச் சரியாக சொல்ல வேண்டுமென்றால்--
    தி.மு.க--அ.தி.மு.க இணைப்பு முயற்சி நடந்தபோது--
    அதில் ஆர்.எம்.வீ காட்டிய அதீத ஆர்வம்,,அப்போதே எம்.ஜி.ஆரை யோசிக்க வைக்க ஆரம்பித்தது!
    கொ.ப.செ வாக ஜெ கட்சியில் ஆற்றிய பணி,,அவருடைய சுறுசுறுப்பு--மக்களிடம் ஜெ வுக்கு இருந்த வரவேற்பு--மிக முக்கியமாக அன்றைய கருணா நிதியை மேடை தோறும் ஜெ சந்தித்த வேகம்--இவை அனைத்துமே இம்மி பிசகாமல் எம்.ஜி.ஆர் கவனித்துக் கொண்டு தான் வந்தார் என்பதை ஜெ கவனிக்கவில்லை??
    போகும்வரை ஆர்.எம்.வீயைப் போக விட்டு,,அவருடன் எவ்வளவு பேர் ஒட்டுகிறார்கள் என்பதையும் கணக்கிட்டு,,அவரை எதிர் கொள்ள இருந்தார் எம்.ஜி.ஆர்!அந்த சமயத்தில் ஜெ கண்டறிந்து சொன்ன சில விஷயங்களும் எம்.ஜி.ஆருக்கு உதவியாகவே இருந்தன.
    அன்று ஜெ மட்டும் ,எம்.ஜி.ஆர் மேல் நம்பிக்கை வைத்துக் கொஞ்சம் பொறுமை காட்டியிருந்தால்--
    அரசியல் வாரிசாக,,அன்றே எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கப் பட்டிருந்திருப்பார்!!
    விதி இங்கே தான் வக்கிரமாக சிரித்தது--
    கட்சியில்,,தன் கை ஓங்க,,ஆர்.எம்.வீ முனைந்தது போலவே--
    ஜெவும் தன் பலத்தைக் காட்ட முயற்சிகள் மேற் கொண்டார்.
    ஒரு சினிமாப்பாடல் வரி இங்கே உண்மையானது--

    அவன் போட்ட கணக்கொன்று
    இவன் போட்ட கணக்கொன்று
    இரண்டுமே தவறானது--பூம்புகார் படப் பாடல்!
    ஆர்/எம்/வீ--ஜெ--இருவருக்குமே பாடம் புகட்ட நினைத்த எம்.ஜி.ஆர்--
    அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில்,,கட்சியின் சின்னம் கிடையாது என்று அறிவித்ததுடன்--
    தாம் பிரச்சாரமே செய்யாமல் இருவரையும் பிரச்சாரம் செய்ய வைத்தார்!
    திருச்செந்தூ இடைத் தேர்தலில் இன்னொரு வேடிக்கை நடந்தது.
    அற நிலையத்துறை அமைச்சரான ஆர்.எம்.வீ--வேல் சம்பந்தமாக சம்பந்தப்பட்டிருந்ததால் அவர் பிரச்சாரத்துக்கு செல்ல முடியாத நிலையில்--ஜெ வை அனுப்பினார் எம்.ஜி.ஆர்.
    அப்படியும் அன்றைய அந்தத் தொகுதியின் நிலை அ.தி.மு.கவுக்கு சாதகமில்லாத சூழ் நிலையில் தாமே பிரச்சாரத்துக்குச் சென்று வெற்றிக் கனியை பறித்து வந்தார் எம்.ஜி.ஆர்
    இதன் மூலம் இருவருக்குமே எம்.ஜி.ஆர் உணர்த்திய செய்தி--
    நீங்கள் இருவருமே பெரியவர் அல்ல?
    இரட்டை இலையும்,,நானும் இருக்கும் வரையில்???
    சரி! 1990 களுக்குப் பிறகு தொண்டர்களிடம் தொலைவை மேற் கொண்ட ஜெ,,,ஆரம்பத்திலிருந்தே அப்படித் தானா என்று கேட்டால்--
    இல்லை என்பதே நம் பதில்.
    எம்.ஜி.ஆரது தொண்டர்களுக்காக ஜெ,,,உதவி செய்து,,,எம்.ஜி.ஆரிடமே பதில் சொல்ல வேண்டிய ஒரு நிகழ்வும் நடந்திருக்கிறது??
    அது??
    நாளைப் பார்க்கலாமா???!!!...vtr

  7. #1906
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "இன்று போல் என்றும் வாழ்க" 1977
    மே 5 ம் தேதியன்று வெளியான படம்.
    100 நாட்களை கடந்து ஓடிய வெற்றிப் படம். ராதாசலூஜா தலைவருடன் நடித்த இரண்டாவது படம். ராதா சலூஜா நடித்த "இதயக்கனி" "இன்று போல் என்றும் வாழ்க" ஆகிய இரண்டு படங்களுமே 100 நாட்களை கடந்து ஓடி மகத்தான வெற்றியைப் பெற்ற படங்கள். சென்னையில் 50 நாட்களில் ரூ994000 வசூலாக பெற்று 50 நாட்களிலே 10 லட்சத்தை நெருங்கி சாதனை படைத்தது.

    சென்னையில் தேவிபாரடைஸிலும் மற்றும் மதுரை சென்ட்ரல் தியேட்டரிலும் 100 நாட்கள் ஓடியது. சென்னையில் 100 வது நாள் விழாவில் கவர்னர் பட்வாரி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
    சென்னையில் ஓடி முடிய ரூ 1529371.65 வசூலாக பெற்று 15 லட்சம் தாண்டிய படங்களில் ஒன்றாக சிறப்பு பெற்றது. சென்னையில் 15 லட்சம் கடந்த தலைவர் படங்கள் மொத்தம் 5.
    அதில் ஒன்று "இன்று போல் என்றும் வாழ்க" என்றால் அந்த வெற்றியின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். நெல்லை சென்ட்ரலில் 77 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. நாகர்கோவில் குறுகிய காலத்தில் வசூலில் சாதனை செய்த படம்.

    திருச்சி பேலஸில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை செய்தது. எம்ஜிஆரை தமிழக முதல்வராக தரிசித்துக்கொண்டே பார்த்த படம்.
    'இது நாட்டை காக்கும் கை' என்ற
    பாடல் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் சின்னத்தை குறிப்பாக உணர்த்தியது. காங்கிரஸ் மேடைகளில் நிகழ்ச்சிக்கு முன்னால் இந்தப்பாடல் ஒரு எழுச்சியை கொடுத்தது எனலாம்.
    எதிரியை வீழ்த்தி துவம்சம் செய்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டே பார்த்த ஞாபகம்.

    ஆஹா! என்ன ஒரு வெற்றிக்களிப்பு! அனைவருக்குமே இருந்தது எனலாம். இனி அது போன்ற ஒரு தருணம் கிட்டுமா? தனக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களின் 'அன்புக்கு நான் அடிமை' என்ற பொருள் பொதிந்த பாடலை படத்தின் ஹைலைட்டாக வைத்திருந்தது அருமையாக அவர்களுக்கு நன்றி சொல்வது போல் இருந்தது குறிப்பிடத்தக்கது..........ksr.........

  8. #1907
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    “ ‘அடிமைப்பெண்’ வெற்றியடைந்தது எப்படி?” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #

    புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.
    திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; UNEASY-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
    எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.

    ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார். எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
    எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.
    எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.

    அன்று அடிமைப்பெண்
    `அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.

    `அடிமைப்பெண்'ணின் சாதனை
    தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள், இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.
    இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.

    அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’
    ‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.
    பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'
    `அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை

    வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவி நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
    ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.
    புஷ் குல்லா
    `அடிமைப்பெண்' படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயிருந்த வேளையில்தான் எம்.ஜி.ஆருக்கு புஷ் குல்லா பரிசாகக் கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அன்று முதல் அவர் அந்த புஷ் குல்லாவைத் தொடர்ந்து அணிந்துவந்தார். அப்போது ஒரு நிருபர், ``நீங்கள் வழுக்கையை மறைக்கத்தான் புஷ் குல்லா அணிகிறீர்களா?'' என்று கேட்டபோது, ``எனக்கு வழுக்கை இருந்தால், மக்கள் என்னை எம்.ஜி.ஆர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?'' என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கான பதிலை, அந்த நிருபர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றுவந்தபோது வெளியான புகைப்படங்களைப் பார்த்து மக்கள் அவருக்கு அமோகமாக ஓட்டளித்து வெற்றி பெறச்செய்தபோது புரிந்துகொண்டார். அவரது கதை கதாபத்திரம் மற்றும் கொடை உள்ளம் இவையே மக்களை மிகவும் கவர்ந்தன.

    1936-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் `சதிலீலாவதி' என்ற படத்தில் நடித்தது முதல் 1969-ம் ஆண்டில் `அடிமைப்பெண்' வெளிவரும் வரை அவரைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, அவர் வயது என்ன என்பதைக் கணக்கிடத் தெரியாதா? அவருக்கும் அந்தந்த வயதுக்குரிய உடலியல் மாற்றங்கள் வரும் என்பது புரியாதா? இருந்தாலும் அவரை மக்கள் ரசித்து மகிழ்ந்ததற்குக் காரணம், அவரது கதையமைப்பும் அதற்கேற்ற கதாபாத்திரப் பொருத்தமும் இளமைத் தோற்றமும் அவரது சுறுசுறுப்பும்தான்.
    பாடல் காட்சிகளில் அவர் சும்மா நின்றுகொண்டு பாட மாட்டார். அவரிடம் ஒரு துள்ளலும் உற்சாகமும் ததும்பிக்கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் `வேட்டைக்காரன்' பட விமர்சனத்தில் `கால்களில் சக்கரம் கட்டியிருக்கிறாரோ!' எனக் கேட்டிருந்தது. ஆக, `அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் புஷ் குல்லா அணிந்திருந்தார்.
    எம்.ஜி.ஆரின் கையில் ஒரு வாட்ச்
    ``நூறு முறையாவது `அடிமைப்பெண்' படத்தைப் பார்த்திருப்பேன்'' என்று கூறும் ஒரு ரசிகர், ஒருநாள் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் கைகுலுக்கி இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் ப்ரியர் அல்லர் வெறியர். எம்.ஜி.ஆர் கார் அங்கு இருந்து நகர்ந்த பிறகும் எம்.ஜி.ஆரைத் தொட்ட இன்பத்திலேயே திளைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் கார் சற்று தொலைவில் நின்றுவிட்டது. மீண்டும் எல்லோரும் கார் அருகில் ஓடினர். அவர் ஒரு வாட்சை நீட்டியபடி வெளியே எட்டிப்பார்த்தார். பிறகுதான் தெரிந்தது, இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்தபடி காருடன் சிறிது தூரம் ஓடியபோது, அவரது வாட்ச் கழன்று எம்.ஜி.ஆர் மடியில் விழுந்திருப்பது. ரசிகருக்கு இரட்டிப்பு சந்தோஷம். எம்.ஜி.ஆர் தொட்டுத் தந்த வாட்ச், இன்றும் அவருக்குப் பொக்கிஷமாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு அதுதான் பேச்சு.
    கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே!
    எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பாலைவனத்து ஒட்டகவாலாக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏராளமான ஒட்டகங்கள் இடம்பெறும் காட்சி ஒன்றில் நடிக்க பாலைவனத்துக்கு வந்த அவர்களுக்கு, தாகம் தீர்க்க எம்.ஜி.ஆர் கிரேடு கிரேடாக கோகோகோலா வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் மனமுவந்து `பெரியமனுஷன்யா அவரு' என்ற அர்த்தத்தில் `படா ஆத்மி’ எனப் புகழ்ந்தனர். படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் வந்த எம்.ஜி.ஆர்., அங்கு நடந்த விபத்துக்கான நிவாரண உதவியாக பெருந்தொகை ஒன்றை முதலமைச்சரிடம் கொடுத்து உதவியிருக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. எங்கு இருந்தாலும் மலர் மணக்கும் என்பதில் ஆச்சர்யமில்லையே! இந்தப் பாலைவனப் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவால் மண்ணில் கால் புதைந்து நடக்க இயலவில்லை என்பதால், எம்.ஜி.ஆர் அவரை குழந்தைபோல தூக்கிக்கொண்டு சென்றாராம். உதவி என்பது, பணத்தால் மட்டுமல்ல... நல்ல மனத்தாலும் நடக்கும்.
    நிலைத்து நிற்கும் பாத்திரப் படைப்பு
    சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு விவசாயி, தன்னிடம் உழவு மாடு இல்லாத காரணத்தால் தன் மகள்களை ஏரில் பூட்டி, தன் நிலத்தை உழும் செய்தியைப் படித்தோம். பலர் வருத்தப்பட்டனர். இதே நிலைதான் `அடிமைப்பெண்' படத்தில் வரும் பெண்களுக்கும். அவர்கள் வண்டி இழுக்க வேண்டும், ஏர் உழ வேண்டும், செக்கு இழுக்க வேண்டும். இவர்களை சூரக்காட்டு மன்னனிடமிருந்து வேங்கையன் (எம்.ஜி.ஆர்) காப்பாற்ற வேண்டும். `இது ஏதோ ராஜா காலத்துக் கதை. இதெல்லாம் இன்றைக்கு சரிவராது' என நினைத்து ஒதுக்க முடியாது. எம்.ஜி.ஆரின் படங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதால்தான், அவை இன்றும் இளைய சமுதாயத்தினராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன; வரவேற்பு பெறுகின்றன.
    ஹீரோ-வை உருவாக்கும் ஜீவா
    கிராமங்களில் கட்டுக்கடங்காத காளிபோல திரியும் ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால், `ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் சரியாகிவிடும்' என்பார்கள். அதாவது ஒரு பெண் அவன் வாழ்க்கையில் வந்து அவள் அவனைத் திருத்தி குடும்பப் பொறுப்புள்ளவனாக்கிவிடுவாள் என்பது நம்பிக்கை. இதுதான் ஜீவாவின் பாத்திரப்படைப்பு. மனித சஞ்சாரமற்ற தனிச்சிறையில் அடைந்து கிடந்த ஒருவனை, ஜீவாவின் கையில் ஒப்படைத்துவிட்டு அவளது தாத்தா இறந்துவிடுகிறார். அவள் அவனுக்கு நாகரிகம், பண்பாடு, பாதுகாப்புக் கலைகள், தன் வரலாறு என அனைத்தும் சொல்லிக்கொடுத்து மாவீரனாக உருவாக்குகிறாள். அவனும் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்றுகிறான். இது அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதால், இந்தக் கதாபாத்திரத்தை பெண்களும் ஆண்களும் ஏற்றுக்கொள்கின்றனர். திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., ஜீவாவிடம் முத்தம் கேட்கும் காட்சியில் வைத்தியர் (சந்திரபாபு) ஜீவாவிடம் `இவன், உன்னிடம் தவறாக நடந்துகொள்ளப்போகிறான்' என்று எச்சரிக்கிறார். அப்போது திடீரென எங்கள் பின் சீட்டில் இருந்த ஒருவர் ``அதெல்லாம் சிவாஜி படத்தில்தான் நடக்கும்'' என்றார். ஒரு விநாடி பயங்கர அமைதி. அவர் அதுவரை வசனங்களை எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வந்தவர், இப்படி ஒரு கமென்ட் அடித்தார்.
    தாயின் வைராக்கியம்
    வயதான மரத்தை வைரம் பாய்ந்த மரம் என்பர். அதுபோல வயதானவர்களும் வைராக்கியம் படைத்தவர்களாக இருப்பது வழக்கம். `அடிமைப்பெண்' படத்தில் வரும் ராஜமாதா (பண்டரிபாய்) தன் குடிமக்களை அடிமைப் பிடியிலிருந்து காப்பதுதான் தன் முதல் கடமை என்று நம்பியதால், அவர் தன் மகன் விடுதலை அடையாத நிலையிலும் ஓர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். எனவே, தன்னைக் காண வந்த மகனிடம் `என் முகத்தில் விழிக்காதே! நம் குலப்பெண்கள் அனைவரது காலிலும் உள்ள விலங்குகளை அகற்றிவிட்டு, பிறகு என்னிடம் வா'' என்று இரக்கமே இல்லாமல் அனுப்பிவிடுகிறார். இந்த வைராக்கியம் வேங்கையனுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது. அப்போது அவர் பாடும் பாடல் மனிதத் தாயைப் பாடுவதாக இல்லாமல் அன்னை பராசக்தியையே எண்ணிப் பாடுவதுபோல அமைந்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.மு.க-காரர்கள் பலரது போனிலும் இந்தப் பாடலே (தாயில்லாமல் நானில்லை) காலர் ட்யூனாக இருந்ததை நாடறியும்.
    சூரக்காடு ஏன்?
    எம்.ஜி.ஆரின் சினிமா ரசிகர்கள் தம் எதிரியாகக் கருதிய சிவாஜி, சூரக்கோட்டையின் சொந்தக்காரர். ஆக, சூரக்கோட்டை இந்தப் படத்தில் `சூரக்காடு' என்றாயிற்று. கோட்டை என்றால், அவனை மன்னனாகக் காட்ட வேண்டும். இவன் மன்னன் அல்ல, மனிதப்பண்பு சிறிதும் இல்லாத காட்டான். அதனால்தான் அந்த நாட்டுக்கு பெயர் `சூரக்காடு'. இப்போது ரசிகர்களும் திருப்தி அடைவார்கள். படங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பெயர் சூட்டுவதில் எம்.ஜி.ஆர் காட்டும் அளவுக்கு வேறு யாராவது அக்கறையும் கவனமும் காட்டியிருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.
    ஜீவா – காதலின் கௌரவம்
    எம்.ஜி.ஆர்., படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகி வந்த நேரம் அவருடன் சில படங்களில் நடித்து வந்த (கதாநாயகியாக அல்ல) ஒரு நடிகைக்கு, இவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர்., காதலில் ஈடுபட்டு திரை வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த நடிகை, எம்.ஜி.ஆருக்கு வெண்மை நிறம் பிடிக்கும் என்பதால் இரவில் வெள்ளை உடையில் இவர் இருந்த அறையின் கதவை வந்து தட்டினார். நல்ல பாடகியான அவர், நடத்தும் கச்சேரிகளுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர் முதல் வரிசையில் போய் அமர்ந்து ரசிப்பாராம். ஆனால், காதல் என்றவுடன் காத தூரம் ஓட ஆரம்பித்தார். பாவம் அவர் சூழ்நிலை அப்படி. அவர் அம்மாவிடம் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போய் நிற்க இயலாது. அவரால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அவர் வெற்று ஆசையை வளர்த்துக்கொள்ளவில்லை. பிறகு திரையுலகில் எம்.ஜி.ஆர் நல்ல நிலைக்கு வந்து சொந்தமாகப் படம் எடுத்தபோது, அந்தப் பாடகி நடிகையின் செல்லப்பெயர்களை, தான் திருமணம் செய்யும் கதாநாயகிகளுக்கு வைத்து அந்தக் காதலை கௌரவித்தார். `நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவி, `அடிமைப்பெண்'ணில் ஜெயலலிதா, `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலா ஆகியோருக்கு அந்தப் பெண்ணின் பெயர்தான் சூட்டப்பட்டது.
    குழந்தைகள், ரசிகரான கதை
    எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் சிறுவர்களுக்கு, அவை நல்ல போதனைகளாக இருந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர வேண்டும் என்ற தீவிர எண்ணத்தையும் அந்தப் படங்கள் ஏற்படுத்தின. மற்ற தமிழ் திரைப்படங்களில்கூட சிறுவர்களைக் காட்டும்போது, அவர்கள் எம்.ஜி.ஆர் படப் பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும். இதுவும் ஒரு தொழில் உத்தி. அடுத்த தலைமுறையை தனக்கு ரசிகராகத் தயார்படுத்தும் சிறப்பான உத்தி. நடிகரும் பத்திரிகையாளருமான சோ, தன் துக்ளக் பத்திரிகையில் எம்.ஜி.ஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார். அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார். அவனை அழைத்து `என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `எம்.ஜி.ஆரை கும்பிட்டால் நல்லா படிப்பு வரும். அதனால கும்பிட்டுட்டுப் போறேன்' என்றானாம். இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதைத்தான் சொல்வான். அவர்களும் `என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர் மீதான அன்பு பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் என்ற மனிதர் மாமனிதராகி இப்போது தெய்வமாகிவிட்டார்.
    `அடிமைப்பெண்' படத்தில் குழந்தைகள் முதலில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து படிப்பார்கள். பிறகு `காலத்தை வென்றவன் நீ...' பாடலில் அவரிடம் கொஞ்சிக் குலவுவார்கள். அவரோடு பேபி ராணிவும் இன்னொரு சிறுவனும் இருக்கும் கட் அவுட்டில் இவர்களுக்கு பதில் அஜித்தின் பிள்ளைகளை இணைத்திருந்தார்கள். மினிப்பிரியா தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அந்தக் கட் அவுட்டைப் பார்த்து பலரும் அஜித் ரசிகர்களின் விவேகத்தைப் பாராட்டினர். `அடிமைப்பெண்' படத்தின் பிற்பகுதியில் பெரியவர்கள் எல்லோரும் தவறான கருத்துடன் எம்.ஜி.ஆரிடம் விரோதப் போக்கைக் காண்பிக்கும்போது, சிறுவர்கள் மட்டும் அவரிடம் ஓடிவந்து `மாமா... மாமா' என்று அழைத்து அன்பு மழை பொழிவார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பதை நிரூபிக்கும் காட்சி இது.
    இந்தப் படத்தில் பேபி ராணி முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிப் பிள்ளையாகக் காட்டப்பட்டிப்பார். ஜீவாவுக்குப் பதில் பவளவல்லி வந்திருப்பதை அவள் காலில் இருக்கும் ஆறாவது விரலை வைத்து இந்தப் பாப்பா கண்டுபிடித்துவிடும் . அதை வைத்தியரிடம் வந்து கேட்கும்போது, அவர் தூக்கக்கலக்கத்தில் பதில் சொல்லும்போது `பட் பட்' என்று அவர் கன்னத்தில் அடிக்கும். படம் பார்க்கும் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சிரித்து ரசித்துப் பார்க்கும் காட்சி இது. கடைசிப் பாடல் காட்சியில் பிள்ளைகளும் தங்களை அந்த விடுதலைப் போரில் இணைத்துக்கொள்வர். `உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...' என்ற பாடல் காட்சியில் சிறுவர்களும் பங்கேற்றிருப்பது இந்த நாட்டின் நன்மையில் அவர்களுக்கும் நேரடி பங்கு இருப்பதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகிறது.
    எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யார்?
    எம்.ஜி.ஆருக்கு வயதானவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிகர்கள்தான். அவரது படம், இவர்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது.

    கட்சிக் கொள்கை
    எம்.ஜி.ஆர்., பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர். அவர் தன் படத்தில் தன் கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகள் இடம்பெறுவதை கட்டாயம் ஆக்கியிருந்தார். அதனால்தான் முக்கியமான தத்துவப் பாடலை தனிப்பாடலை அவர் பாடும்போது தன் கறுப்புச் சட்டை கட்சியைச் சேர்ந்தவன் என்பதை நேரடியாக உணர்த்துவதற்காக அவர் கறுப்புச் சட்டை அணிந்து நடிப்பார். கலர் படமாக இருந்தாலும் அவர் கறுப்புச் சட்டை அணிந்திருப்பார். `எங்க வீட்டுப் பிள்ளை'யில் `நான் ஆணையிட்டால்...' பாடல், `சந்திரோதயம்' படத்தில் `புத்தன், இயேசு, காந்தி பிறந்தது...' போன்ற பாடல் காட்சிகளில் அவர் கறுப்புச் சட்டை போட்டிருப்பதைச் சான்றாகக் கூறலாம்.
    `அடிமைப்பெண்' படத்தில். பேய், பிசாசு, மாந்திரீகம் என்பவையெல்லாம் வெறும் பொய் பித்தலாட்டம் எனக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த விஷயத்தை வேடிக்கையாக நகைச்சுவையாகக் காட்டியிருப்பார். அம்முக்குட்டி புஷ்பமாலா வைத்தியராக இருந்து இப்போது மந்திரவாதியாக மாறி வந்திருக்கும் சந்திரபாபுவை மிரட்டுவதற்காக மண்டையோட்டை பறக்கவிடுவார். பிறகு தானே எலும்புக்கூடு உடையைப் போத்திக்கொண்டு எலும்புக்கூடு நடந்து வருவதுபோல் காட்டி அவரை பயமுறுத்துவார். பிறகு ``இதெல்லாம் பொய். இங்கே பார் மண்டையோட்டுக்குள் புறாவை அழுத்தி வைத்திருக்கிறேன். அதனால் அது அசைகிறது’’ என்பார். படம் பார்க்கும் பிள்ளைகள் சிரித்து மகிழ்வார்கள். சிரிப்புடன் சிந்தனையையும் ஊட்டும் காட்சிகள் இவை.......... Srinivasan

  9. #1908
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    (கக்கன் பெயரில் யார் வந்தாலும் இலவச மருத்துவம் செய்ய உத்தரவிட்ட ஒப்பற்ற தலைவர்)

    1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள்.
    முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட
    வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித்
    தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம்
    விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது
    குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம்
    கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார்அந்தப் பெண்மணி.
    வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு
    கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி
    பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி
    நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில்
    அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார்.அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு,
    பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை
    அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு
    வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும்
    நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.
    அ ந்தப் பெண்மணி… பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த
    தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி
    என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன்.
    சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில்
    பணியாற்றியவர்.
    அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர்
    என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக
    வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்
    வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத
    துரதிர்ஷ்டவசமானநிலைமை.
    பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்
    அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம்
    கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள்
    வந்துவிட்டார்கள். ''வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து
    வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம்
    கேட்கிறார் கக்கனின் மனைவி.
    கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று
    நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு
    சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு
    நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.
    அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக்
    கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின்
    குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத்
    துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத் தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே
    கட்டிவிட்டார். இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர்.
    நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச்
    செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாட
    கையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர்.
    கொடுத்த மரியாதை.
    தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின்
    தியாகத்துக்கு மரி யாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர்.
    மறுநாளே உத்தரவு போட்டார்.
    ''முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின்
    மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க
    இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்குமாதம் 500
    ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்'' என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட
    உத்தரவு.
    அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப்
    பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த
    திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.
    எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை சென்றார். உடல் நலம் சரியில்லாமல் அரசு
    மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது கட்சிக்காரர்
    ஒருவரை பார்ப்பதற்காக அங்கு செல்கிறார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு
    புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு தியாகி
    கக்கனும் இங்கே சிகிச்சை பெற்றுவருகிறார்என்று அவருடன் இருந்தவர்கள்
    தெரிவித்தனர். உடனே, எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. ''இதை ஏன் முதலிலேயே
    தெரிவிக்கவில்லை?'' என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில்
    சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து அவரை காணச் சென்றார்.
    அங்கு சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும்
    எம்.ஜி.ஆருக்கு கண்கள் கலங்கின. மருத்துவமனையில்தனக்கு தெரி விக்காமல்
    சேர்ந்தது பற்றி கக்கனிடம் அன்புடன் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு,
    மருத்துவர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும்
    உத்தரவிட்டார்.
    கக்கனின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும் பத்தினருக்கு இலவச வீடு, அரசு
    உதவித் தொகை, வைத்திய வசதிகள் கிடைக்கும்படி செய்தார்.
    தியாகி கக்கனுக்கு செய்த உதவிக்காக முதல்வர் எம்.ஜி.ஆரை கட்சி வேறுபாடு
    இல்லாமல் எல்லா தரப்பினரும் பாராட்டினர். .
    கவியரசு கண்ணதாசன் தெரிவித்த பாராட்டு சற்று வித்தியாசமானது,உண்மையும்
    கூட. அவர் சொன்னார்… ''கக்கனைப் போன்ற உண்மை யான தியாகிகளுக்கு உதவி
    செய்யும் எம்.ஜி.ஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.''.........Pngu

  10. #1909
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எல்லோருக்கும் உதவுவதால் எம் ஜி ஆர் கடவுள் தான்..

    டாக்டர் உதயமூர்த்தி எழுதிய அமேரிக்காவில் எம் ஜி ஆர் என்ற நூலில் இருந்து..

    அமேரிக்கா பல்கலை கழகங்களின் அழைப்பை ஏற்று சுற்று பயணத்தை முடித்து விட்டு வாஷிங்டன் விமானநிலையத்தில் தன் அமேரிக்கா நண்பர்களுடன் நூழைகிறார் எம் ஜி ஆர் சிறிது நடந்த எம் ஜி ஆர் கண்கள் ஓரமாக நின்று சிறுகுழந்தையோடு ஒரு ஆங்கிலபெண்மணி அழுதுகொண்டிருப்பதை. கவனிக்கிறது உடனே அவர் அருகே சென்று ஆங்கிலத்தில் ஏன் அழுகிறாய் என எம் ஜி ஆர் கேட்கிறார் அமேரிக்காவை பொறுத்தவரை அதிகம் எவரும் அடுத்தவர் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை
    எம் ஜி ஆர் கேட்ட உடன் அந்த பெண் தான் தன் கணவரை காண வந்ததாகவும் அவர் இங்கு ராணுவத்தில் பணி செய்வதாகவும் தான் நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததாகவும் இங்கு வைத்து தன் பை திருடபட்டதாகவும் தன் முக்கிய ஆவணம் பணம் எல்லாம் அதில் உள்ளது அதனால் என்ன செய்வது என்று புரியாமல் அழுவதாகவும் கூற உடனே எம் ஜி ஆர் தன் கூடவந்த செல்வாக்கு மிக்க ஒரு நண்பரை அழைத்து நீங்கள் இந்த பெண்ணிற்க்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள் சிலவிற்க்கு பணமும் கொடுங்கள் நான் ஊர் சென்று அனுப்புகிறேன் என கூறிவிட்டு அந்த பெண்ணிடம் கவலை படாதீர்கள் இவர் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவியும் செய்வார் என கூறி விடை பெற்று விமானம் நோக்கி செல்கிறார் எம் ஜி ஆர்

    இதை கவனித்து கொண்டிருந்த என் மனம் என்னை அறியாமல் பொன்னின் நிறம் பிள்ளை மனம்வள்ளல் குணம் யாரோ என்ற பாடலை நினைத்தது

    உண்மை நண்பர்களே கடவுள் ஒருவரே யார் என்று பாராமல் உதவுபவர் அதனால் யார் என்று பாராமல் எல்லோர்க்கும் உதவும் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் ஒரு கடவுளே

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்...........Raja Erd

  11. #1910
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ஒரு சமயம் மழை சரியாக பெய்யாமல் பெரிய வறட்சியாக இருந்தது.
    காஞ்சி மகாபெரியவர் தமிழ்நாட்டில் இருந்து பாத யாத்திரையாகச் சென்று மற்ற மாநிலங்களில் நீண்ட காலமாகத் தங்கியிருந்தார். மகாபெரியவரை மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தால் மழை செழிப்பாகப் பெய்யும். வறட்சி நீங்கும் என்று எம்ஜிஆரிடம் பலர் ஆலோசனை கூறினர்.
    அவரும் மகாபெரியவரிடம் தமிழ்நாட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டார். மகாபெரியவரும் அதை ஏற்றுக் கொண்டார்.
    தமிழ்நாட்டு எல்லையில் வேலூரில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    ரிக் ஷாவைப் கையால் பிடித்துக் கொண்டு எப்போதும் போல் மகாபெரியவர் வேகம் வேகமாக நடந்து வந்தார். அதைக் கண்ட
    ஆர்.எம்.வீரப்பன் கண்களில் கண்ணீர் தாரையாக வழிந்தது. அப்போது அவர் அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார்.
    நாத்திகவாதியாக இருந்த அவர் ஒரு க்ஷணத்தில் instantaneous ஆக ஆத்திகவாதியாக மாறினார்.
    வரவேற்பு நிகழ்சியில் ஆர்எம்வீரப்பன் பேசினார். இதற்கு முன்பு என்னிடம் யாராவது கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லியிருப்பேன். ஆனால் இனிமேல் என்னிடம் அதே கேள்வியைக் கேட்டால் பார்த்து விட்டேன் என்றுதான் சொல்வேன் என்று அவர் பேசினார்.
    நங்கநல்லூர் ராமமந்திரம் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ மகாபெரியவா மகோத்ஸவத்தில் சிறப்புரை ஆற்றியபோது பிரபல நாட்டிய கலைஞர் பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் தான் நேரில் கண்ட இந்த தகவலைத் தெரிவித்தார்.

    ஹரிஹரசுப்பிரமணியன்
    வெங்கடசுப்பிரமணியன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •