Page 205 of 210 FirstFirst ... 105155195203204205206207 ... LastLast
Results 2,041 to 2,050 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #2041
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR. வாழ்க...

    படத்தில் இருப்பவர்கள்

    அண்ணன் சிவாஜி அவர்கள் அவர் மனைவி கமலா அவர்கள்

    தாடியுடன் இருப்பவர் நடிகர் பாலாஜி அவர்கள்

    நடிகர் பாலாஜி அவர்கள் பத்திரிகை நிருபர்களிடம் பேட்டி கொடுத்தார்

    நான் சினிமா உலகத்திற்கு வந்த பொழுது மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தேன்

    எம்ஜிஆர் அவர் அவர்களுடன் என் கடமை என்ற படத்தில் மட்டும் நான் நடித்து உள்ளேன்

    ஒரு தீபாவளி பண்டிகையின்போது

    ஒரு ரூபாய் கூட இல்லாமல் மிகவும் கவலையோடு நான் கடைவீதியில் வந்து கொண்டிருந்தேன்

    என்னை கடந்து எனக்கு முன்னால் ஒரு

    கார் நின்றது

    ,காரின் ஜன்னல் வழியாக ஜானகி அம்மையார் என்னை அழைத்தார்

    நான் அருகில் சென்று பார்த்த பொழுது எம்ஜிஆர் உள்ளே அமர்ந்திருந்தார்

    என்னிடம் நீ படங்களில் நடிக்கிறாயா எத்தனை படங்களில் நடிக்கிறாய்என்று என் குடும்ப நலனை விசாரித்தார்

    கார் புறப்படும்போது என்னிடம் என் கையில் எம்ஜிஆர் பணம் கொடுத்தார்

    பிரித்துப் பார்த்தேன்! பத்து100ரூபாய்நோட்டுக்கள் ஆயிரம் ரூபாய் இருந்தது

    என் குடும்பத்திற்கு ரெடிமேட் துணிகள் வாங்கிக்கொண்டு

    குழந்தைக்கு பலகாரங்கள் வாங்கிக்கொண்டு

    வீட்டிற்குச் சென்றேன்

    எம்ஜிஆர் கொடுத்த பணத்தில் இப்பொழுது 300 ரூபாய் மட்டும் என்னிடம் இருந்தது

    பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 100 ரூபாய் 100 ரூபாய் எடுத்து செலவழித்தேன்

    இப்போது எம்ஜிஆர் கொடுத்த ரூபாய் 100 மட்டும் என்னிடம் இருந்தது

    அடுத்து என் செலவுக்கு பணம் இல்லை என்றால் இந்த நூறு ரூபாயை எடுத்து செலவழிக்கலாம் என்று நினைத்தேன்

    என் மனதிற்குள் எம்ஜிஆர் கொடுத்த அந்த அதிர்ஷ்டமான பணத்தை செலவழிக்க கூடாது என்று நினைத்தேன்

    ,அடுத்து அடுத்து எனக்கு பட வாய்ப்புகள் வந்தது

    எம்ஜிஆர் கொடுத்த நூறு ரூபாயை மணி பஸ்ஸில் போட்டோ வைக்கும் அறையில்
    வைத்துள்ளேன்

    அந்தப் பணத்தில் எம்ஜிஆர் என்று பெயர் எழுதி வைத்தேன்

    அதற்குப் பிறகு எனக்கு பணத்திற்கு மேல் பணம் வந்து கொண்டே இருந்தது

    இப்பொழுதும் எம்ஜிஆர் கொடுத்த அந்த நூறு ரூபாயை என் பர்ஸில் பத்திரமாக வைத்துள்ளேன்

    இவ்வாறு நடிகர் பாலாஜி அவர்கள் திரை உலகம் பத்திரிகையில் பேட்டி கொடுத்தார்

    அதன் பிறகு பாலாஜி அவர்கள் படத்தயாரிப்பாளர் ஆனார்

    மலையாள நடிகர் மோகன்லால் அவர்கள்

    நடிகர் பாலாஜியின் மகளைத் திருமணம் செய்துள்ளார்

    இந்தப் பேட்டி 1970ஆம் ஆண்டு வெளிவந்தது

    இப்படி எல்லாம் எம்ஜிஆர் வறுமையில் உள்ளவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த காரணத்தினால் தான்

    மக்கள் சக்தி உடைய தலைவரானார்...

    எந்த நடிகையும் சினிமாவில் நடித்த பொழுது 10 பைசா யாருக்கும் தர்மம் செய்தது கிடையாது

    எம்ஜிஆர் வள்ளலாக வாழ்ந்த காரணத்தினால் தான்,Puratchi Thalaive AMMA’s Blessings

    விக்ரவாண்டி தொகுதியிலும் நாங்குநேரி தொகுதியிலும் நாம் வெற்றி பெற முடிந்தது

    மார்க்கெட்இளந்த நடிகைகளும் மார்க்கெட்இளந்த நடிகர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று துடிக்கிறார்கள்

    ஆனால் எம்ஜிஆரை போல்ஏழை மக்களுக்கு இவர்கள் பண உதவி செய்தது கிடையாது

    எம்ஜிஆருக்கு இணையாக உலகத்திலுள்ள எந்த நடிகரும்
    தான் சினிமாவில் நடித்தபோது சம்பாதித்த பணங்களை ஏழை மக்களுக்கு கொடுத்த கிடையாது

    உலகம் முழுவதும் 85 நாடுகளில் சினிமா தயாரிக்கின்றார்கள்

    அதில்
    எம்ஜிஆரை போல் ஏழை மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த நடிகர் கிடையாது நடிகையும் கிடையாது

    முகநூலில் உள்ள அனைத்து எம்ஜிஆர் பக்தர்களுக்கும்

    இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர் பக்தர்களுக்கும்

    தெரியப்படுத்துகிறேன்...PM., Png

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2042
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர்
    மக்கள் திலகம்
    மன்னாதி மன்னன்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    அவர்களின் ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும் இனிய
    செவ்வாய்க்கிழமை காலை வணக்கம்

    புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த திரைப்படங்களின் பற்றிய என்னுடைய இந்த தொடரில் இன்று நாம்
    புரட்சி தலைவர் நடித்த 34 வது படமான
    "#அலிபாபாவும்_நாற்பது_திருடர்களும்"
    பற்றி காண்போம்..

    அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரட்சி தலைவர்
    எம்.ஜி.ஆர், பி.பானுமதி
    பி.எஸ்.வீரப்பா
    மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

    இயக்கம்
    டி. ஆர். சுந்தரம்
    இசை
    எஸ். தட்சிணாமூர்த்தி
    நடிப்பு
    எம்.ஜி.ஆர்
    பி. பானுமதி
    பி. எஸ். வீரப்பா
    வெளியீடு
    1956...தயாரிப்பு நடந்தது 1954, 1955

    தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப்படமாக இப்படம் அமைந்தது.
    அரேபிய கதைகளை கொண்டு களமாக்கி வெற்றி கொண்டுள்ளார் இயக்குனர்...
    இந்த படத்தில் நடிக்க புரட்சி தலைவர் எம். ஜி, ஆர் அவர்களுக்கு சம்பளமாக 12,500 ரூபாய் வழங்கப்பட்டது.

    எம். ஜி. ஆர் - - அலிபாபா
    கே. சாரங்கபாணி
    பி. எஸ். வீரப்பா
    கே. ஏ. தங்கவேலு
    எம். ஜி. சக்கரபாணி
    ஓ. ஏ. கே. தேவர்
    கே. கே. சுந்தர்
    பானுமதி
    எம். என். ராஜம்
    வித்யாவதி
    பி. சுசீலா
    சாயீ சுபபலக்ஸ்மி
    வாஹீதா ரெஹ்மான்

    அமீர் காசிம் கான் என்ற அரசனிடம் அகப்பட்டிருக்கும் பாக்தாத் நடன அழகி மார்சியானாயை (பானுமதி) காப்பாற்றுகிறார் மரவெட்டி அலிபாபா (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்). அலிபாபா வீட்டில் அடைக்கலம் புகும் மார்சியானா, அலிபாபாவை விரும்புகிறாள்.

    ஒரு நாள், மரம் வெட்ட அலிபாபா செல்லும் பொழுது, கொள்ளையன் அபு ஹுசைனின் ரகசிய குகையை பார்த்துவிடுகிறார். அபு ஹுசைன் பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் கேட்டுவிடுகிறார் அலிபாபா. அந்த கொள்ளையர்கள் சென்ற பின்னர், அந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி, கொள்ளையர்களின் செல்வத்திலிருந்து சிறிதளவை எடுத்துச் சென்று ஏழைகளுக்கு உதவுகிறார் அலிபாபா.
    ஓர் இரவுப் பொழுதில், அலிபாபாவும் மார்சியானாவும் செல்வந்தர்கள் ஆகின்றனர்.

    அதில் பொறாமை கொண்ட அலிபாபாவின் அண்ணன் காசிம்
    (எம். ஜி.சக்கரபாணி), அலிபாபாவின் திடீர் ரகசிய செல்வத்தை பற்றி தெரிந்து கொள்ள சலீமாவின் உதவியுடன் முயற்சிக்கிறான். அவ்வாறாக ரகசியத்தை தெரிந்து கொண்ட காசிம், அலிபாபாவை கொல்ல முயல்கிறான். சாதுர்யமாக மார்சியானா உதவி செய்ய, சண்டையிட்டு தப்பிக்கிறார் அலிபாபா.

    பின்னர், பேராசை கொண்ட காசிம்,
    அபு ஹுசைனின் ரகசிய குகைக்கு செல்கிறான். தங்கத்தையும் வைரத்தை அதிகம் பார்த்த அதிர்ச்சியில் கடவுச்சொல்லை மறந்து குகையின் உள்ளேயே அகப்பட்டு அபு கையால் கொல்லப்படுகிறான் காசிம் அந்த சடலத்தை குகையில் கட்டி தொங்க விட்டு கொள்ளையடிக்க வெளியே சென்று விடுகிறான்.

    மீண்டும் அலிபாபா குகைக்கு வந்து தன் அண்ணன் இறந்ததைக் கண்டு அதிர்ந்து போய், சடலத்தை அப்புறப்படுத்துகிறார். காசிமின் மரணத்திற்கு பிறகு, பாக்தாத்தின் புதிய அரசனாகிறார் அலிபாபா. அந்நிலையில், கொள்ளையன் அபு ஹுசைன் குகைக்கு திரும்பி வர, காசிமின் சடலம் காணாமல் போனதை கண்டு அதிர்ந்து போகிறான் பிறகு இன்னொரு நபருக்கு குகை பற்றிய ரகசியம் தெரிந்து உள்ளது எனவே. அந்த சடலத்தை எடுத்தவனை பிடிக்க கொள்ளையர்கள் தேடத் துவங்குகின்றனர்.

    செருப்பு தைக்கும் குலாம் மூலமாக, அலிபாபாதான் அந்த மர்ம நபர் என்று தெரிய வந்ததும், குலாமை கொள்கிறான் அபு. அலிபாபாவை கொல்ல திட்டம் தீட்டி தனது சக கொள்ளையர்களை எண்ணெய் பீப்பாயில் ஒளியச்செய்து, வியாபாரி போல் வேடம் பூண்டு வருகிறான் அபு. அந்த சதி திட்டத்தை அலிபாபாவும் மார்சியானாவும் எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதே மீதிக் கதையாகும்.
    இந்த படத்தில் வீரப்பா அவர்களின் மிரட்டும் வில்லத்தனம் அருமை..

    மருதகாசி எழுதிய பாடல்களுக்கு சுஸர்லா தக்ஷிணாமூர்த்தி இசை அமைத்தார்.

    மாசிலா உண்மை காதலி
    சின்னஞ்சிறு சிட்டே
    அழகான பொண்ணு நான்
    நாம ஆடுவதும்
    உன்னைவிட மாட்டேன்
    உல்லாச உலகம்
    ஸலாம் பாபு
    அன்பினாலே ஆளவந்த
    என் ஆட்டமெல்லாம்

    "சின்னச்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே" என்ற பாடலை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்- "நெல்லை சென்றிருந்தபோது விடுதியில் இந்தப் பாடலை நெடுநாட்களுக்குப்பின் பார்த்தேன். இப்போது சினிமாவுக்குள் இருக்கிறேன் என்பதனால் அட என வியந்து எழுந்துவிட்டேன். அதன்பின் வெண்முரசு எழுதுவதன் இடைவெளிகளின் சோர்வை வெல்ல பலமுறை இதைப் பார்த்துவிட்டேன். ஒவ்வொருமுறையும் அட என்றே சொல்லத் தோன்றுகிறது சினிமா நடனத்தின் மிகப்பெரிய பிரச்சினை முகபாவனைகளுக்கும் நடன அசைவுகளுக்கும் இடையே இயல்பான ஒத்திசைவு நிகழ்வதுதான். சினிமா நடனம் சாதாரணமானது அல்ல. காமிராவின் கோணம், தளத்தின் ஒளியமைப்பு, உடன் ஆடுபவர்களின் அசைவு ஆகியவற்றுக்கு ஏற்ப நடன அசைவுகள் முன்னரே வகுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் நினைவில் கொண்டபடி ஆடவேண்டும், அந்த நினைவுகொள்ளல் முகத்தில் தெரியக்கூடாது. அக்காட்சியின் உணர்வில் ஒன்றி ஆடவேண்டும். இன்று எவ்வளவோ வசதிகள் வந்துவிட்டன. ஆனாலும் நடன இயக்குநர்கள் படாதபாடு படுவதைக் காண்கிறேன். இருந்தும் நடனத்திற்குரிய வாயைக் குவித்துத் திறந்து வைப்பது, நாக்கைக் கடிப்பது போன்ற பாவனைகளே ஆடுபவர்களின் முகங்களில் இருக்கும். அதைத் தவிர்க்க மகிழ்ச்சி எனத் தெரியும் ஒரே பாவனையை தக்கவைக்க அவர்களிடம் சொல்வார்கள். அவர்களும் வாயைத் திறந்து கொண்டு ஆடுவார்கள். இந்தப்பாடலில் சாரங்கபாணி இயல்பாக நடிக்கிறார். முகபாவனைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் உடலசைவுகளிலும் காலிலும் தாளம் தன்னியல்பாக நிகழ்கிறது. அவருக்கு அப்போது ஐம்பதை அடுத்த வயது என நினைக்கிறேன். எம்.என்.ராஜமும் மிகையின்றி நடித்து ஆடுகிறார். அக்கால நடிகர்களின் மேடைப் பயிற்சிதான் இந்த துல்லியத்திற்கான காரணம் என தோன்றுகிறது ஒவ்வொரு அசைவிலும் எத்தனை திட்டமிடல்! ஆனால் இயல்பாக தெரிகிறது. சத்தியம் செய்யும்போது எம் என் ராஜம் கையை இழுத்துக்கொள்கிறார். சாரங்கபாணி பாய்ந்து வந்து குதிக்கும்போது பயந்து பின்வாங்கி ஃப்யூ என அறுதல்கொண்டு மூச்சுவிடுகிறார். கெஞ்சும்போது சாரங்கபாணியின் கைவிரல்கள் பலவகையாக நெளிகின்றன. அற்புதமான பாடல். எஸ்.ஜி.கிருஷ்ணனின் குரல் சாரங்கபாணியே பாடுவதுபோல் ஒலிக்கிறது. ஜமுனாராணியின் குரலின் இனிமையும் அந்தக்காலத்தை தித்திப்பாக மீட்கிறது என்று தெரிவித்து உள்ளார்...

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு...skt......

  4. #2043
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரைச் சுற்றியும் கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது, விக்ர மாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது. அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்.

    எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும்.

    எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர், திரையில் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள். கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது “இந்தக் கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள். “ஆனா, அந்த நம்பியார்கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.

    எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை. எம்.ஜி.ஆர். தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது. எம்.ஜி.ஆரின் கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக் கிறது. இப்படி நிறைய. இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் எம்.ஜி.ஆர்.

    ஆழ்மனத் தேவை

    காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்று கிறது. இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்குரியது.

    சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் சாத்தியப்படும் காட்சி எல்லைக்கு உட்பட்டது. சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்துக்கு ஏற்பப் பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். உதாரணமாக, ஒரு நாயகனைக் கீழிருந்து மேலே காட்டும் கோணத்தில் காட்டும்போது அவரது வலிமைகுறித்த எண்ணம் பார்வையாளர் மனதில் வலுப்பெறுகிறது. தனியாக நிற்கும் ஒருவர் சட்டகத்தின் ஓரமாகக் காட்டப்பட்டால் முகம் தெரியாத நிலையிலும் அவர் சற்றே சோகத்தில் அல்லது தனிமை உணர்வில் இருப்பதாக உணர முடியும். கோமாளியாக ஒருவரைக் காட்ட வேண்டும் என்றால், அவர் முகத்தை அண்மைக் காட்சியில் சற்றே வக்கரித்த முறையில் காட்டினால் போதும்.

    இத்தகைய காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்து கொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை, பெரும்பாலும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த கேமரா, இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.

    ‘பஞ்ச்’ வசனத்தின் பிதாமகன்

    இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப் பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன்… இப்படி எத்தனை எத்தனை பிம்பங்கள். இந்தப் பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன.

    “என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் நெறய பேர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “அவர் இல்லை யேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச, அடுத்த காட்சித் துணுக்கு அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.

    எம்.ஜி.ஆர். ஆணையிட்டால்…

    எதிரிகளைப் பந்தாடும் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாகச் சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார், உன்னைத் தாக்குவது என் நோக்க மல்ல என்று சொல்வது போல. வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

    அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். ‘நான் ஆணையிட்டால்’ என்று தங்களுக்காக முழங்கிய திரைப் பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

    காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்குப் பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.

    தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லிய மாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்த பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காகத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘பாசம்’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல் காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கு இடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.

    இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணர்வோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கும். ‘குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம்’ என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

    திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன் படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும்

    எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரை, சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக வைத்திருந்தது....Baa

  5. #2044
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் எம்.ஜி.ஆர்., என்ற மாமனிதர் ஏதோ ஒரு வகையில் பிரதிபலித்தார்...........

    அதனால் தான் மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் அவரது புகழ் சிறிதும் மங்கவில்லை. பத்திரிகையாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அன்பு பாராட்டுபவர் அவர். அவரது தேர்தல் சுற்றுப்பயணம் என்றால் உடன் செல்லும் பத்திரிகையாளர் களுக்கு குஷியான அனுபவம் கிடைக்கும். பிரசாரத்தில் எம்.எஸ்.டபிள்யூ 2248 என்ற எண்ணுள்ள வேனை பயன்படுத்துவது எம்.ஜி.ஆர்., வழக்கம். அதைப் பார்த்து பிற கட்சி தலைவர்களும் வேன் பிரசாரத்தை பின்பற்றினர். கோடை வெயிலில் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதால் எம்.ஜி.ஆர்., மாலையில் பிரசாரம் செய்வார். மக்கள் வெள்ளத்தை கடந்து பிரசாரம் முடிப்பதற்குள் இரவாகிவிடும். வழியில் பெயர் வைக்க தங்கள் குழந்தைகளை நீட்டும் தாய்மார்களிடம் புன்னகையை பரிசளித்து பெயர் சூட்டி உச்சி முகர்வார். அன்றைய பிரசாரம் நிறைவு பெறும் போது அனேகமாக விடிந்து விடும். 1973ல் திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தல் காலம். மதுரையில் தங்கி திண்டுக்கல் பிரசார திட்டத்தை வகுத்தார் எம்.ஜி.ஆர்., மக்கள் வெள்ளம் வழிமறித்து கொடியேற்றம், கொண்டாட்டம் என களைகட்டும். இதனால் ஒவ்வொரு இடத்திலும் தாமதமாகும். அவரது வேனின் பின்னால் இருந்து பத்தாவது இடத்தில் பத்திரிகையாளர்கள் கார் இருக்கும். ஆனால் கட்சியினர் ஆர்வத்தில் காரை முந்திக் கொண்டு செல்வர்.

    இதனால் பத்திரிக்கையாளர் கார் பின்நோக்கி சென்று ஒவ்வொரு இடத்திலும் போட்டோ எடுக்க நீண்ட தூரம் ஓடிச் செல்ல நேரிடும். எம்.ஜி.ஆர்., பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் மேடை முன் அமர்ந்திருந்தனர். நேரமின்மை காரணமாக பெரும்பாலும் வேனில் இருந்து பேசும் எம்.ஜி.ஆர்., அன்று காத்திருந்த மக்களை ஏமாற்ற விரும்பாமல் மேடை ஏறினார். போட்டோ எடுத்துக் கொண்டிருந்த நான் மேடையிலிருந்து கீழே இறங்க நினைத்த போது கால் வைக்க இடமில்லை. அந்த அளவிற்கு பெண்கள், குழந்தைகள் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தனர். வேறுவழியின்றி ஒருமணி நேரம் காத்திருந்தேன். அவர் பேசி முடிந்ததும் ஒரே கூச்சல். குழந்தைக்கு பெயர் வைக்க நின்ற தாய்மார்களிடம் தள்ளுமுள்ளு. பொறுமையாக அனைவருக்கும் பெயர் சூட்டி வேனுக்கு சென்றார்.

    மேடையில் கேமரா உடன் சிக்கிக் கொண்ட நான் கீழே இறங்க முடியாமல் தவித்தேன். நிருபர்களின் காரையும் கண்ணுக்கெட்டிய தூரம் காணோம். எம்.ஜி.ஆர்., வாகனம் அந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த சமயத்தில் என் கேமரா பிளாஷை அவரை நோக்கி அடித்துக் கொண்டே இருந்தேன். அதனை கவனித்து தற்செயலாக எம்.ஜி.ஆர்., திரும்பி பார்த்தார். என்னை மீட்டு அழைத்துச் செல்லுங்கள் என சைகையில் தெரிவித்தேன். புரிந்து கொண்ட அவர் பாதுகாவலர்களை அனுப்பினார். மேடைக்கு வந்து என் கரங்களை பிடித்த பாதுகாவலர்கள் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர்., இருக்கும் வேனில் ஏற்றினர். இப்படி பத்திரிகையாளர்களிடம் அன்பு பாராட்டியவர் எம்.ஜி.ஆர்., குறைவாகக் காட்டு...Baa

  6. #2045
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமா வசனகர்த்தா ஆரூர் தாஸ் எழுதிய புத்தகத்தில் இருந்து (நன்றி : தினமலர், விமல்)

    ஒரு நாள் ஒப்பனை அறையில் நாங்கள் தனித்திருந்த வேளையில் எம்ஜிஆர், என்னிடம் (ஆரூர் தாஸ்) சொன்னார்:

    “பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான். அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கேன். இப்போ புகழின் உச்சியிலே இருக்கேன். வசதிக்குப் பஞ்சம் இல்லே. தினமும் என் வீட்டுல மூணு வேளையும் குறைஞ்சது 50–60 இலைங்க விழுது. ஆனாலும், ரெண்டே ரெண்டு குறைகளை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது. ஒண்ணு: குழந்தைங்க வாரிசு இல்லாத குறை ! இன்னொண்ணு…’

    நான் இடைமறித்து, “ஏன், பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க வாரிசு இல்லே. அதனால் என்ன குறைஞ்சி போயிட்டாரு !’ என்றேன்.

    “அப்படி இல்லே. காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்தால குழந்தைங்க இல்லாம போயிடுச்சி; ஆனா, எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே!

    எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பெத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா?’ அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.

    பெரிய, பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சி என் ஜாதகத்தைக் காட்டிக் கலந்து ஆலோசனை பண்ணுவேன், ஜோதிடர் கலையில் நிபுணர்களான ரெண்டு, மூணு பேரு மட்டும் ஒத்து ஒரே கருத்தைச் சொன்னாங்க.

    இது பலதார ஜாதகம்! ஒங்க வாழ்க்கையிலே பல பெண்கள் குறுக்கிடுவாங்க. அவுங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க; ஆனா, அவுங்க யாரும் ஒங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க; குடுக்கவும் முடியாது. குறை அவுங்ககிட்டே இல்லே’ன்னு சொன்னாங்க.

    சமீபத்தில் ஆயுள் இன்சூரன்சுக்காக முக்கியமான ஒரு பெரிய மருத்துவர்கிட்டே உடல் பரிசோதனை பண்ணிக்கிட்டேன். அவர் உங்க மாதிரி என் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். இனிமே எனக்கு குழந்தை உண்டாகிறதுக்கு வாய்ப்பே இல்லேன்னு உறுதியா சொல்லிட்டாரு.

    அதைக் கேட்டு நான் அப்படியே உடைஞ்சி நொறுங்கிப் போயிட்டேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கவே இல்லே. அழுது, அழுது தலையணையே நனைஞ்சிடுச்சி.

    என் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு, எனக்கு ஒரு குழந்தை – ஒரே ஒரு குழந்தையைக் கூட குடுக்க மனசு வரலே பாத்தீங்களா?

    எத்தனையோ சகோதரிகள், தாய்மார்கள் அவங்க பெத்தக் குழந்தைகளை என் கையில் கொடுத்து என்னைப் பேர் வைக்கச் சொல்லும்போது, உள்ளுக்குள்ளே என் நெஞ்சு பதறும். ஆனாலும், அதை வெளியில் காட்டிக்காம, அந்தக் குழந்தைகளுக்கு அப்பப்போ எனக்குத் தோணுற பேரை வச்சி, அவுங்க ஆசையை நிறைவேத்துறேன். போகட்டும்… நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்!

    என்னோட ரெண்டாவது குறை என்னன்னா ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்திலே கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர பெரிசா ஒண்ணும் படிக்கத் தெரிஞ்சுக்கலே. இளமையிலே பட்ட வறுமை காரணமா அந்த வாய்ப்பு, வசதி இல்லாமப் போயிடுச்சி.

    அண்ணாதுரை, கிருபானந்த வாரியார் இவுங்களோட சொற்பொழிவைக் கேட்கும்போது, என்னால அவுங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைச்சி வருத்தப்படுவேன். ஆனாலும், எப்படியோ பேசிச் சமாளிச்சி, மத்தவங்களை சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும் குறை, குறைதானே! அதுவும் பூர்த்தி செய்ய முடியாத குறை. அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா அதுலயாவது நான் பெரிய புள்ளைக் குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!

    நடிப்பிற்கு அப்பாற்பட்டு அவரது கண்கள் நீர் நிலைகளானதை நேரில் நான் கண்டது அதுவே முதல் முறை!...Baa

  7. #2046
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாளிதழ் விளம்பரமில்லை...மாநகராட்சி முழுவதும் போஸ்டர் இல்லை...வழக்கமான பேனர் பிளக்ஸ் போர்டுகள் இல்லை...பின் எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது. ஆ....ச்சரியத்தில், அதிசயத்தில்... சினிமா வட்டாரம் ஆழ்ந்திருக்க... வழக்கம்போல கட்சி அது இது என எவர் ஆதரவுமின்றி நூறுசதவீதம் மக்கள் திலகம் பக்தர்கள் சத்தமின்றி சாதனை படைத்துள்ளனர்....மீண்டும்! ஆம்... நெல்லை மேலப்பாளையம் அலங்கார் நவீன தொழில் நுட்ப திரையரங்கம் சமீபத்தில் திறக்கப்பட்டதுமே ' தலைவர் படம் போடுவார்களா?' என்று எம்ஜிஆர் பக்தர்கள் திக்கெட்டும் விசாரித்த வண்ணம் இருந்தனர். அந்த நாளும் வந்தது. 26.02.2021 முதல் "அடிமைப்பெண்" காவியம் அதிரடியாக திரையிடப்பட மகிழ்ச்சி பொங்க எம்ஜிஆர் பக்தர்கள் திருவிழாவை ஞாயிறு மாலை என நேரத்தை தீர்மானித்தனர். மதுரை, கோவை, தூத்துக்குடியிலிருந்தும் பக்தர்கள் நெல்லைக்கு படையெடுத்தனர், மேளதாளம் மேலப்பாளையத்தை அதிர வைக்க வாழ்த்து கோஷம் விண்ணைமுட்ட சாரை சாரையாக 10 வயது சிறுவர் சிறுமியர், 17,25,35 வயது என வாலிபர்கள் திரள இவர்களின் கூட்ட நெரிசலில் 50, 60,70 வயதினரும் சிக்கினர். நீண்ட க்யூவில் நிற்பதை பார்த்து நீண்ட நாளாச்சு அல்லவா? அந்த வழியாக சென்ற புதியவர்களும் ' இதென்ன பொங்கலுமில்லை...தீபாவளியுமில்லை...புதுப்படமும ் ரிலீசில்லை...இதென்ன கூட்டம்...எந்த படம் போட்டிருக்கு?' என நின்று பார்க்க..' அட நம்ம தலைவர் படம்' என ஆனந்தக் கூத்தாடினர். 3 வருடத்தில் அடிமைப்பெண் 4 வது தடவையாக திரையிடப்பட்டிருந்தும் நேற்று 400 பேர் குவிந்தனர். இனிப்பு, காரம், தேனீர் ஆகியவற்றோடு 'எம்ஜிஆர் தகவல் களஞ்சியம்' ஆழ்வை ராஜப்பாவின் அடிமைப்பெண் அன்றைய சாதனை தகவலையும் அனைவரும் ருசித்தனர். கூட்டம் கூட்டமாக நண்பர்களுடன் நலம் விசாரித்தபடி எம்ஜிஆர் பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சரவெடி அனைவரையும் வெளியே இழுத்துவர...10 வயது பொடியன்களுக்கும் இளவட்டப்பையன்களுக்கும் இது கனவா நிஜமா என தலைசுற்ற அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன்மார் கையைப் பிடித்துக்கொண்டு குளுகுளு உலகத்திற்குள் நுழைகிறார்கள்....வெள்ளித்திரையிலும் குளுகுளு பசுமை படர்ந்திருக்க வானத்திலிருந்து தேவன் இறங்கிவருவதுபோல புரட்சிநடிகர் வர...ஒட்டுமொத்த ஜனங்களும் ஆர்ப்பரித்த ஆர்ப்பரிப்பு சற்று நேரத்தில் அடங்கியதா?.... ம்கூம் குட்டி எம்ஜிஆரைக் கண்டு பரவசப்பட்டும் ஜீவாவின் குரல் கேட்டு ஆனந்தத்தில் களித்தும் தண்டனைக்கருவியிலிருந்து இளம்பெண்ணை மீட்க கட்டுமஸ்தான ஆணழகு நிமிருவதைக்கண்டு தங்களது உடலை முறுக்கேற்றியும் பவளவல்லியைக் கண்டு ஆரவாரம் செய்தும் சக்கரங்களை சுற்றி கைகளை பிய்த்து எடுக்கும் தண்டனைகருவியையே பதம் பார்க்கும் போதும் சிங்கத்தின் வாயை கிழித்துப் போடும்போதும் ...நிற்க! தலைவரின் பல படங்களின் பன்ச் வசனங்கள், தியேட்டருக்கு வெளியே நடந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட காட்சிகள் சுடச்சுட அடுத்த வினாடியே திரையிலும் ஜொலிக்க, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் பாடல் காட்சிகள் கண்களுக்கு சிறப்பு விருந்தளிக்க. அப்பப்பா...6-10 மணிவரை ஒரு வினாடி எங்க சும்மா இருக்க விட்டாங்க... இடைவிடாது ஆரவாரம்தான் போங்க.... நேற்று படம் பார்த்துச் சென்றவர்கள் இன்றும் அலங்கார் அடிமைப்பெண் மயக்கத்திலேதான் இருப்பார்கள். காரணம் வேறெந்த தியேட்டரிலும் அனுபவிக்காத இனிமையான பொழுதுபோக்கு அலங்கார் தியேட்டரில்தான் கிடைத்ததாக சொல்லி பலர் சிலாகித்தபடியே வீட்டுக்குச் சென்றனர். ' எப்போ அடிமைப்பெண் வந்தாலும்...ம்கூம் எப்போ தலைவர் படங்கள் வந்தாலும் அன்றும் இன்றும் என்றும் திருவிழாதான்' என்பதை இதோ மீண்டும் நெல்லை எம்ஜிஆர் பக்தர்களான ஆறுமுகம் குழுவினர் நிரூபித்துவிட்டனர். மூன்றுவிதமான புயல் ஒரே இடத்தில் மையம் கொண்டால் எப்படி இருக்குமோ அதுபோல தூத்துக்குடி, மதுரை, நெல்லை எம்ஜிஆர் பக்தர்கள் குமார் அவர்களின் உற்சாக நடனத்திலும் உணர்வுபூர்வமான வாழ்த்தொலி மூலமாகவும் அந்த ஏரியாவே அமளி துமளிப்பட்டது. நேரில் சென்று பார்க்க முடியாத நிலையில் பல நூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஏக்கத்துடன் உங்களுக்கு இச்செய்தியை தந்து விடைபெறுவது...சாமுவேல்..........

  8. #2047
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ��*��*��நல்ல நல்ல பிள்ளைகளை நம்பியிருந்த எம்.ஜி.ஆர்��*��*��

    எம்.ஜி.ஆர் தன் படத்தில் குழந்தை ரசிகர்களுக்காக தனிக் காட்சிகளும் பாடல்களும் காமெடியன் செய்யும் சில வேடிக்கை சண்டைகளும் வைத்திருப்பார். தனது தத்துவப்பாடல்களை அவற்றின் பல்லவியை இரண்டு வயது நிரம்பிய குழந்தை பாடும்படியாக எளிமையாக எழுத வேண்டும் என்பார். என் அண்ணனுக்கு ஒன்பது குழந்தைகளைக் கொடுத்த இறைவன் எனக்கு ஒரு குழந்தை கூட கொடுக்கவில்லையே என்று வசன கர்த்தா அரூர் தாசிடம் கவலைப்பட்ட எம்.ஜி.ஆர் சிறு குழந்தைகள் தன் வீட்டில் வந்து விளையாடுவதை பெரிதும் விரும்பினார். குழந்தைகள் நல்ல பண்புடனும் பழக்க வழக்கத்துடனும் வளர்க்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். அதனால்தான் முதல்வரானதும் குழந்தைகளுக்காக நல்ல பல திட்டங்களை அறிமுகம் செய்தார்.

    ��ஆட்சியிலும் சோறு போட்ட எம்.ஜி.ஆர் ��

    ஏழு வயதில் சாப்பாட்டுக்கு வழியின்றி நாடக கம்பெனியில் சேர்ந்து நடித்த எம்.ஜி.ஆர் அந்த நிலைமை தமிழகக் குழந்தைகளுக்கு வரக் கூடாது என்று விரும்பினார். காமராஜரை தன் தலைவராகவும் அண்ணாவை தன் வழிகாட்டியாகவும் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் காமராஜர் கொண்டுவந்த பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவு படுத்தி சத்துணவுத் திட்டமாக அறிவித்தார். காமராஜர் அறிமுகப்படுத்திய திட்டத்தில் குழம்பு,கறிகாய் போன்றவை கிடையாது. அது பசிக்கான உணவு மட்டுமே. ஆனால் ஆரம்பம் முதல் தன் வாழ்வில் உடல் நலம் உடல் பயிற்சி ஆகியவற்றில் ஈடுபாடு காட்டி வந்த எம்.ஜி.ஆர் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தில் அவர்களின் உடல்நலனைக் காக்கும் சத்துகள் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இத்திட்டத்தில் சோறு, பருப்பு, காய்கறி, கீரை ஆகிய அனைத்தும் கலந்து சமவிகித உணவாக வழங்கப்பட்டது.

    எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் பிறந்த நான்கு மாதக் குழந்தை முதல் பதினேழு வயது மாணவர்கள் வரைக்குமாகச் சேர்த்து திட்டமிடப்பட்டது. நான்கு மாதக் குழந்தைக்குச் சத்துணவு மாவு உருண்டை காலை பதினோரு மணிக்கு வழங்கப்படும் அதை தாய்மார் வந்து வாங்கி குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. சத்துமாவு பாக்கெட்டுகளைத் தாய்மாரிடம் வீட்டுக்குச் சத்துணவு ஆயாமார் கொடுத்துவிடுகின்றனர். காமராஜர் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் எனத் தொடங்கிய இத்திட்டம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலணி மற்றும் சீருடை என எம்.ஜி.ஆர் குழந்தைகள் நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்க பிரதமர் ராஜீவ் காந்தியிடம் உதவி கேட்டுப் போயிருந்தபோது அதிகாரிகள் காலம் தாழ்த்தினர் உடனே கோபப்பட்டு எம்.ஜி.ஆர் புறப்பட்டுவிட்டார். இவர்கள் கொடுக்காவிட்டால் நாம் வீட்டுக்கு ஒரு ரூபாய் என வசூலித்து இத்திட்டத்தைக் கொண்டுவருவோம் என்றார். அதன்பிறகு அவரைச் சமாதானப்படுத்தி பிரதமரின் உதவியாளர் எம்.ஜி.ஆரை அழைத்து நிதி உதவி செய்வதாக ஒப்புக்கொண்டார். இந்தத் துணிச்சல் எம்.ஜி.ஆர் கூடப் பிறந்தது ஆகும். அவர் தான் செய்ய நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செய்து வெற்றி பெறுவார்.

    தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறிய போது அரசு அதிகாரிகள் அரசிடம் அவ்வளவு நிதி இல்லை என்றனர். உடனே எம்.ஜி.ஆர் கோபத்துடன் உங்கள் நிதியே தேவையில்லை என் மக்களிடம் நிதி பெற்று நான் இத்திட்டத்தை நிறைவேற்றுகிறேன் என்றார். உடனே சத்துணவு நிதி ஒன்றை அறிவித்தார். நல்ல உள்ளங்கள் தாராளமாக உதவின. அவரை வளர்த்துவிட்ட திரையுலகினர் முதலில் உதவ முன்வந்தனர். பின்பு தொழிலதிபர்கள் வந்தனர். பலர் தம் ஒரு நாள் சம்பளத்தை ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து உதவினர். இது உலகுக்கே ஒரு முன்னோடி திட்டமாக உருவாயிற்று.

    ��கல்வித் திட்டம் ��

    சர்வதேசப் பொருளாதாரக் கொள்கை காரணமாக தனியார்மயமாக்கல் விரைந்து வந்ததால் பள்ளிக்கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக் கல்வி வழங்குவதற்கான வாய்ப்பும் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைந்தது. தன்னிடம் வந்து வேலூர் மாவட்ட மாணவர்களுக்குப் படிக்க கல்லூரிகள் இல்லை. அரசு ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்று அவரது அமைச்சர் விசுவநாதன் கேட்டார் உடனே எம்.ஜி.ஆர் நீங்களே ஒரு கல்லூரி ஆரம்பியுங்கள். இந்த அரசு உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்றைய வி.ஐ.டி அகாடமி. எம்.ஜி.ஆர் ஆதரவுடன் பல அதிமுக கட்சியினர் பாலிடெக்னிக் தொழிற்பயிற்சி கல்லூரிகளையும் சுயநிதி கல்லூரிகளையும் தொடங்கி நடத்தினர். இவற்றில் எம்.ஜி.ஆர் ஏழை மாணவர்களுக்கு 25% இலவச ஒதுக்கீட்டைப் கேட்டுப் பெற்றார். மற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரிகளில் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் என்ற சட்டம் இயற்றினார். ஏழை மாணவர்கள் இலவசத் தொழிற்கல்வி பெற்றனர். இவை இன்று சர்வதேச தரத்துடன் பல்கலைக்கழகங்களாக வெளிநாட்டு மாணவர்களும் வெளி மாநில மாணவர்களும் படிக்கும் கலாலயமாக திகழ்கின்றன]. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது தொழில் பயிற்சி அல்லது வேலை வாய்ப்புள்ள தொழிற்படிப்புகளைப் படித்த மாணவர்கள் வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதித்தனர். எம்.ஜி.ஆரின் குழந்தை நலத்திட்டம் அவரது ஆட்சியில் வெற்றி பெற்றது.

    எம்.ஜி.ஆர் தான் சினிமாவில் சொல்லிய விஷயங்களும் அவர் ஆட்சியில் அவர் அறிமுகம் செய்த திட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்ததனால் இன்றளவும் அவரை மக்கள் மறக்கவில்லை. அவரது ஒரிஜினல் முகமும் ஒப்பனை முகமும் அதிக வித்தியாசமின்றி ஒரே மாதிரி இருக்கும்படி அவர் ஆரம்பத்தில் கவனித்துக்கொண்டார். இது காலப்போக்கில் அவருக்கு மாபெரும் புகழையும் வெற்றியையும் தரும் அம்சமாக மாறிவிட்டது. இந்த ஒற்றுமை தொடக்கத்தில் அவர் மக்கள் மத்தியில் புகழ் பெற உதவியது; இந்தப் புகழே அவர் முதல்வரானதும் சினிமாவில் சொன்னபடி மாற்றங்களைக் கொண்டுவரவும் மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஊக்கமளித்தது.

    எம்.ஜி.ஆர் தன் திரையுலகப் பயணம் முடிந்ததும் ஆன்மிக வாழ்வில் ஈடுபடலாம் என்று நினைத்திருந்த வேளையில் அவர் செய்து வரும் உதவிகளால் மகிழ்ந்திருந்த மக்கள் அவரை அரசியலுக்குள் கொண்டுவந்தனர். இது புலிவால் பிடித்த கதையாகிவிட்டது. அவராக உதவிகள் செய்த காலம் மாறி அவர் கண்டிப்பாக மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயமும் அவர் வகித்த முதல்வர் பதவியால் ஏற்பட்டது. அவர் மக்கள் மீது கொண்டிருந்த மாறாத அன்பினால் இந்தக் கட்டாயத்துக்குப் பணிந்தார். இந்த அன்பு ஆணிவேராக இருந்ததால் அவருடைய உழைப்பும் அறிவும் திட்டமிடலும் அவரை வெற்றித் திருமகனாக உயர்த்தியது.

    Posted by : MG.Nagarajan
    Published : VikatanOriginals
    in வண்ணத் திரை.
    வெளியீடு : யாழ் இணையம்

  9. #2048
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ‘எம்.ஜி.ஆரின் மகிமை’

    ‘மகிமை’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு 1. பெருமை 2. புகழ் 3. கவுரவம் என மூன்று பொருள்கள் உண்டு.

    இந்த மூன்றும் எம்.ஜி.ஆருக்குப் பொருந்தியது போல் வேறு யாருக்கும் பொருந்தவில்லை என்பதற்கு ஆதாரமாக அனுபவத்தில் நேரில் நான் கண்டு அறிந்த ஓர் உண்மை நிகழ்ச்சியை இங்கு கூற விரும்புகிறேன்.

    1963–ம் ஆண்டின் முற்பகுதியில் நான் வசனம் எழுதி எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி நடித்த தேவர் பிலிம்ஸ் ‘நீதிக்குப்பின் பாசம்’ வெளிப்புறப் படப்பிடிப்பு ஊட்டியிலும், சிவாஜிகணேசன் – சரோஜாதேவி நடித்த சிவாஜி பிலிம்ஸ் ‘புதிய பறவை’ அதே ஊட்டியிலும், எம்.ஜி.ஆர்., சாவித்திரி நடித்த கவுரி பிக்சர்ஸ் ‘பரிசு’ இன்றைய தேனி மாவட்டத்தில் தமிழக – கேரள எல்லையைச் சார்ந்த ‘குமுளி’யைக் கடந்து மேலே கேரளாவுக்கு உரிய பகுதியான தேக்கடியிலும் நடைபெற்றது.

    அது இனிய இளவேனிற்காலம்! ஆகவே, சுற்றுலா சென்றது போலவும் இருக்கும், படப்பிடிப்புகளைப் பார்த்த மாதிரியும் இருக்கும் என்ற திட்டத்துடன் திருவாரூரிலிருந்து என் தாய் தந்தையரை சென்னைக்கு வரவழைத்து, இங்கிருந்து குடும்பத்துடன் எல்லோருமாக எங்கள் புதிய காரில் புறப்பட்டோம்.

    முதலில் தேக்கடிக்கு விஜயம்!

    உயர் மட்டத்தில் அழகாக அமையப்பெற்றிருந்த – கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழகக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ‘ஆரண்ய நிவாஸ்’ என்னும் அரசு ‘ரெஸ்டாரண்டில்’ நாங்கள் தங்குவதற்கு இயக்குநர் யோகானந்தும் அவருடைய பங்குதாரரான கே.பி.கொட்டாரக்கராவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    அதே ரெஸ்டாரண்டில் தான் சாவித்திரியும் தங்கி இருந்தார். குடும்பத்துடன் சென்று பார்த்தேன். எங்கள் எல்லோரையும் கண்டு அதிக மகிழ்ச்சி அடைந்தார்.

    எம்.ஜி.ஆரை மட்டும் அங்கு காணவில்லை. அவர் எங்கே இருக்கிறார்?

    அந்த ரெஸ்டாரண்டின் பின்புறம் – தாழ் மட்டத்தில், கண்களுக்கு எட்டிய தொலைவில் இருபுறமும் பரந்து விரிந்து கிடக்கும் மாபெரும் பெரியாரின் நீர்த்தேக்கம் பெரியதோர் ஏரிபோன்ற தோற்றத்தைக் கொண்டு காண்பதற்கு ரம்மியமாக இருந்தது!

    நீரின் இடை இடையே நீட்டி நிமிர்ந்து – ஏற்கனவே வாளால் அறுபட்டுத் துண்டு துண்டான பெரிய பெரிய தேக்கு மரங்களின் அடிப்பாகங்கள் ஏராளமாக நிறைந்து நின்று கொண்டிருந்தன!

    நீர் நிலைக்கு அப்பால், ஆங்காங்கே கரை ஓரங்களில் குழந்தை குட்டிகள் சகிதம் காட்டு யானைகளின் கூட்டம் காற்று வாங்கிக் கொண்டு நின்றன!

    அவைகளுக்கு அந்த இடம்தான் ‘சம்மர் பீச்’ போலிருக்கிறது!

    (இந்த இனிய இடத்தை இன்றைக்கும் ‘பரிசு’ படத்தில் சாவித்திரி படகோட்டும் காட்சியில் கண்டு களிக்கலாம்)

    இளங்கோடையின் மேற்குப் பருவத்துச் செல்ல மழைச்சரம், விண்ணிலிருந்து மண்ணுக்குப் பாய் விரித்து உச்சந்தலையிலும் உடல் மீதும் பன்னீர் தெளித்தது!

    அதன் ஊடே, நீரின் நடுவில் சற்றுத் தொலைவில், கேரளக் கட்டிடக்கலை அழகுடன் கூடி அமைந்துள்ள சிறு அரண்மனை போன்றதோர் வடிவம் என் விழிகளில் தென்பட்டது! சுற்றிலும் மிக மெல்லிய பனிப்புகை படலம் சூழ்ந்திருந்ததால் தெளிவாகத் தெரியவில்லை.

    அந்தக் கட்டிடத்தின் பெயர் ‘திருவிதாங்கூர் பேலஸ்!’ – திருவாங்கூர் அரண்மனை!

    இந்தியத் திருநாடு சுதந்திரம் பெறுவதற்கு முந்திய காலத்தில், திருவாங்கூர் மன்னர் தன் குடும்பத்தாருடன் வந்து தங்கி ஓய்வெடுத்துக் கொள்ளும் உல்லாச மாளிகை அது!

    மிதக்காமல் மிதப்பது போன்றதோர் மாயத்தோற்றத்தில் அம்மாளிகையைக் கைதேர்ந்த கேரளக் கட்டிட வல்லுனர்கள் அமைத்திருந்தனர்.

    அன்றைய திருவாங்கூர் மன்னரின் அந்த மாளிகையில் தான் இன்றைய திரைப்பட உலகின் மகுடம் தரிக்காத மன்னரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனது அன்புத் துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருடன் தங்கியிருந்தார்!

    அவரைப் பார்ப்பதற்காக ஒரு படகில் அங்கு நான் ஊர்ந்தேன். நான் படகில் வருவதைப் பார்த்தபடி, அம்மாளிகையின் வெளிவராந்தாவும் நீரலையும் நெருங்கி இணைந்த இடத்தின் ஒரு மூலையில் எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருந்தார். அவர் அருகில் அம்மா இருந்தார்கள்! இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

    சற்று நெருங்கி வந்ததும் நான் கை அசைத்தேன். பதிலுக்கு அவரும் கை அசைத்தார்.

    ஊர்ந்த என் படகு வராந்தாவை ஒட்டியதும் எம்.ஜி.ஆர். குனிந்து தன் வலது கையை நீட்டி என் கையை இறுகப் பற்றி இழுத்து நான் மேலே ஏறி வரத் துணை புரிந்தார்.

    இளநகை புரிந்தவாறு என்னைக் கேட்டார்:– ‘எப்போ வந்தீங்க?’

    விவரம் கூறிக்கொண்டே விழிகளைச் சுழற்றியபடி அம்மாளிகையை நோட்டம் விட்டேன்.

    அவர்:– ‘இடம் எப்படி?’

    நான்:– ‘ஒரு மாசத்துக்கு என்னை இங்கே ஒக்காரவச்சி சோறு மட்டும் போட்டு, பேப்பரும் – பேனாவும் கொடுத்தா நாலு எம்.ஜி.ஆர். வெற்றிப் படங்களுக்கு வேண்டிய கதை – வசனங்களை எழுதி தேவரண்ணன் கையிலே கொடுத்திடுவேன்’.

    அவர்:– ‘அவருக்குத்தான் கொடுப்பீங்களா? எனக்குத் தரமாட்டிங்களா?’

    நான்:– ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தான் இப்போ படம் எடுக்கிறதில்லையே’.

    அவர்:– ‘இந்த இயற்கை அழகு நிறைஞ்ச இடங்களைப் பார்த்ததும் இங்கேயே முழுக்க முழுக்க ஒரு படத்தை
    எடுத்து முடிச்சி ரிலீஸ்
    பண்ணிடலான்னு எனக்குத் தோணுது’.

    நான்:– ‘இது நமக்குள்ளேயே இருக்கட்டும். தேவரண்ணனுக்குத் தெரிஞ்சா, உடனே ஒங்களுக்கு முன்னால அவர் முந்திக்கிட்டு மூணே வாரத்துல மதுரை வீரன் மாதிரி ‘தேக்கடி வீரன்’ அப்படின்னு ஒரு படத்தை எடுத்து முடிச்சி ரிலீஸ் பண்ணிடுவாரு. அப்புறம் நாம ரெண்டு பேரும் தலையில் துண்டை போட்டுக்க வேண்டியதுதான்!

    இதைக்கேட்டு அவர் உரக்கச் சிரித்தபடி உள் கூடத்தில் வந்து உட்கார்ந்து அம்மாவிடம் எனக்கு சூடாக டீ கொடுக்கச் சொன்னார்.

    அவருக்கு காபி, டீ அருந்தும் பழக்கம் கிடையாது. சுத்தமான பால் தான் பருகுவார். அதுவும் வீட்டுப் பசும்பாலாக இருக்க வேண்டும். சுட வைத்த சீரக நீரைத் தவிர வேறு தண்ணீர் குடிக்கமாட்டார்.

    அம்மா கொண்டு வந்து கொடுத்த சூடான தேநீரைச் சுவைத்துப் பருகிக் கொண்டிருந்தேன்.

    திடீரென்று வெளிப்புறத்தில் இரைச்சல் ஒலி கேட்டது. எழுந்து வராந்தாவுக்கு வந்து பார்த்தோம்.

    ஏழெட்டு பேர் நீரில் வேகமாக நீந்தி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் தலைகளின் மீது ஏதேதோ பொருள்களை வைத்துக் கட்டியிருந்தனர்.

    அவர்களைத் துரத்தியவாறு பின்னால் ஒரு படகில் சீருடை அணிந்த காட்டிலாகா சேவகர்கள் வந்தனர்.

    நீந்தி வந்தவர்கள், வராந்தாவில் எம்.ஜி.ஆர். நிற்பதைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்து மேலும் உற்சாகத்துடன் வேக வேகமாகத் தங்கள் கைகளை மாறி மாறிப் போட்டு நீந்தி அருகில் வந்து, மேலே ஏறி வராந்தாவை அடைந்தார்கள்.

    ஒரு நொடிப் பொழுது எம்.ஜி.ஆரை வைத்த விழி வாங்காமல் உற்று நோக்கிவிட்டு, சட்டென்று அவர் முன் நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து வணங்கினார்கள்!

    அதற்குள், இவர்களைத் துரத்தி வந்த சேவகர்கள் படகை விட்டு மேலே வந்து எம்.ஜி.ஆரிடம் இவர்களைப்பற்றி ஏதோ சொல்வதற்கு முனைய, அவர் தன் கையை நீட்டிக் கண் சாடை செய்து தடுத்து விட்டார்.

    விழுந்தவர்கள் இப்பொழுது எழுந்து நின்றனர். நீரில் நனையாமல் இருப்பதற்காக தங்கள் தலைகளில் வைத்துக் கட்டியிருந்த பொருள்களை எடுத்து எம்.ஜி.ஆரின் காலடியில் காணிக்கையாக வைத்தனர்.

    அவர்களில் ஒரு இளைஞர் மலையாளத் தமிழில் கூறியதை இங்கு நான் ஒழுங்குபடுத்தி எழுதுகிறேன்.

    ‘அண்ணே! நாங்க இந்தக் காட்டைச் சுற்றி இருக்கிற மலைவாழ் மக்களைச் சேர்ந்தவுங்க. மலையாளமும், தமிழும் பேசுவோம். கீழே இருக்குற குமுளி, கம்பம், டூரிங் சினிமா கொட்டகையில நீங்க நடிச்ச படங்களை ரொம்ப ஆசையோட பாத்து சந்தோஷப்படுவோம். பொங்கல், தீபாவளி நாள்ல ஒங்க புதுப்படம் பாக்கிறதுக்காக தேனிக்கு பஸ்ல போவோம்.

    இங்கே நீங்க சூட்டிங்குக்கு வந்திருக்கிறதா கேள்விப்பட்டோம். நீங்க இங்கே வந்ததுலேருந்து ஒங்களை நேருல பாக்குறதுக்கு ரொம்ப முயற்சி பண்ணுனோம். முடியலே.

    இன்னிக்கு நீங்க சூட்டிங் இல்லாம இங்கேதான் இருக்கீங்கன்னு எங்களுக்குத் தெரிஞ்சிது. என்ன ஆனாலும் சரி – இன்னிக்கு ஒங்களைப் பாக்காம விடுறதில்லேன்னு முடிவு பண்ணி இந்த அதிகாரிங்களைக் கேட்டோம். அனுமதி கிடைக்கலே.

    அதனால அவுங்களை ஏமாத்திட்டு தண்ணில குதிச்சி நீந்துனோம். எங்களைப் பாத்திட்டு படகுல தொரத்துனாங்க. வேகமாக நீந்தி வந்து எப்படியோ ஒங்களை பாத்திட்டோம். அதுபோதும்.

    இதோ – இதெல்லாம் உங்களுக்கு எங்க காணிக்கை. எங்க ஞாபகார்த்தமா கொண்டு போயி வச்சிக்குங்க. நீங்க எப்பவும் நல்லாயிருக்கணும்’ என்று சொல்லி எல்லோரும் கும்பிட்டுவிட்டு, அருகில் நின்ற அம்மாவின் காலிலும் விழுந்து வணங்கினர்.

    சற்று முதிர்ந்த வயதுடைய ஒருவர் சொன்னார். ஓரளவுக்கு நல்ல தமிழில்:–

    ‘சாமி! நெசமாவே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. சினிமாவுல விட, நேருல பாக்குறதுக்கு நீங்க அசல் ராசாவாட்டமே இருக்கீங்க! அடுத்த வருஷமும் இதே மாதிரி அம்மாவைக் கூட்டிக்கிட்டு இங்கே வாங்க.

    ஒங்களுக்குத் தோதுபட்டா நாங்க குடி இருக்குற அதோ அந்த எடத்துக்கு அப்பால படகுல வந்து எறங்குனீங்கன்னா, எங்க சாதி சனங்க புள்ளைகுட்டிங்களோட வந்து ஒங்களைப் பாத்து சந்தோஷப்பட்டு ஒங்களை எங்களோட சேர்ந்து சாப்பிட வைப்போம்’.

    அந்த மலைவாழ் மக்களைப் பார்த்து அவர்கள் கூறியதைக் கேட்டு மலைத்து உணர்ச்சி வசப்பட்டுப்போன எம்.ஜி.ஆர். அம்மாவுடன் உள்ளே ஒரு அறைக்குள் போனார்.

    சற்று நேரத்தில் வெளியே வந்தார்.

    அவர் கையில் பத்துப்பத்து ரூபாய்களாகச் சேர்த்துப் பின் பண்ணிய இரண்டு நோட்டுக்கட்டுகள் இருந்தன. அதைப் பிளந்து திருகிப் ‘பின்’னிலிருந்து கழற்றி எடுத்து எல்லா நோட்டுகளையும் (இரண்டாயிரம் ரூபாய்) ஒன்றாய்ச் சேர்த்து வைத்துக் கொண்டு, பிரித்துப் பிரித்துத் தன் கைக்கு வந்ததை எண்ணிப் பார்க்காமல் அப்படியே அவர்கள் அனைவருடைய கைகளிலும் அன்போடு வைத்தார்.

    அவர்களுக்குக் கொடுத்ததுபோக மிச்சம் மீதி இருந்த நோட்டுகளை காட்டிலாகா சேவகர்களிடம் கொடுத்தார். அவர்கள் முகம் மலர்ந்து கைகுவித்து அவரைக்
    கும்பிட்டனர்.

    இப்பொழுது – துரத்தப்பட்டவர்கள் இரண்டாவது தடவையாகவும், துரத்தியவர்கள் முதல் தடவையாகவும் எம்.ஜி.ஆர். என்ற அவர்களின் கண்கண்ட கடவுளின் காலடியில் விழுந்து வணங்கி விடைபெற்றனர்.

    மலைவாழ் மக்களையும், படகுகளில் ஏற்றிச் செல்லுமாறு எம்.ஜி.ஆர். கேட்டுக்கொள்ள அது அப்படியே நடந்தது
    -ஆரூர்தாஸ்........baa

  10. #2049
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அரசியலில் அறிவாளிகளும் ராஜதந்திரிகளும் தான் வெற்றி பெறுவார்கள் என்ற மரபை உடைத்தவர்கள் 2 பேர் ஒன்று "கர்மவீரர்" காமராஜர் மற்றொன்று "மக்கள் திலகம்" எம்.ஜி.ஆர்.

    "மனிதாபிமானம்" ஒன்று தான் இவர்களின் மகத்தான ஆயுதம்.அதனால் தானோ என்னவோ இன்றும் மக்களின் மனதில் இவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.

    சிறுவயதில் எம்.ஜி.ஆர் அனுபவித்த வறுமையான வாழ்க்கை சூழல் தான் பின்னாளில் அவரது மக்கள் நல பணிக்கு ஆசானாக விளங்கியது.

    திரைப்படங்களில் அனைவரும் நடித்தார்கள் சம்பாதித்தார்கள் பின் சொந்த வேலையை பார்த்தார்கள்.ஆனால் மக்கள் திலகமோ நடித்தார் சம்பாதித்தார் அது மட்டுமின்றி மற்றவர்களின் துயரங்களை கவனித்தார் அதை நீக்க உதவினார்.

    பரிவோடு ஏழை எளியோரை நோக்கினார்.துன்பத்தில் இருப்பவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டது மட்டுமின்றி வள்ளலாக உதவிகளை செய்தார்.

    எம்.ஜி.ஆர் என்பது வெறும் பெயரல்ல இது ஒரு மூன்றெழுத்து மந்திர சொல்.

    கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் திரையுலகை கட்டிப்போட்ட ஆளுமை.

    திரையுலகை மக்களுக்கான நல்ல கருத்துக்களை சொல்லும் தளமாக மாற்றியவர்.

    திரைப்படங்களின் வாயிலாக மக்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

    அரசியலில் கால் பதித்து கடைசி மூச்சு வரை வெல்ல முடியாத தலைமையாக இருந்தவர்.

    இவை அனைத்துக்கும் காரணமாக விளங்கியது ஒன்றே ஒன்று தான் அது தான் மக்கள் திலகத்தின் "மனிதாபிமானம்".........Baa

  11. #2050
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த உலகம் முழுவதும் இசையால் நிரம்பிக் கிடக்கிறது என்றால் அது தான் உண்மை. இசைக்கு மட்டும்தான் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. மனிதனை மனிதனே அடிமையாக்கி வைத்திருந்தபோதும் இசை தான் மொத்த மனித இனத்தையும் அடிமையாக்கி வைத்திருந்தது.பல மன்னர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் இறங்கியபோது தான் ஓரிடத்திலிருந்த இசை வடிவம் இன்னொரு இடத்திற்குப் பரவியது.

    லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆப்ரிக்க அடிமைகளைக் கொண்டு வந்து இறக்கியபோது காங்கோ இசை லத்தீன் இசையோடு இரண்டறக் கலந்தது.உலகம் புதுவித இசையில் மயங்கியது.கரீபியன் கடற் பரப்பு தொடங்கி க்யூபா அர்ஜெண்டினா உருகுவே பிரேசில் என இசைக்கு புது வடிவம் கிடைத்தது.ஆப்ரிக்கன் பச்சாட்டா ,போஸனோவா, சல்சா, டாங்கோ ,சாம்பா, ராக், ஜாஸ் ,ஹிப்பாப் ரெக்காட்டன் என கலந்தடித்த இசையில் பல்வேறு இசைக் குழுக்கள் உலகமெங்கும் மேற்கத்திய இசையை கொண்டு சென்றது.அதிலொரு இசை வடிவம் தான் ரும்பா.உலகம் முழுவதும் ரும்பாவிற்கு அடிமையாகிக் கிடக்க ரும்பா கிரேஸ் ஐரோப்போ முழுவதும் நாற்பதுகளில் ஆட்டம் போட்டது.க்யூபாவின் மொய்ஸஸ் சிமன் தனது எல்மண்சரோவை ஸ்பெயின் முழுவதும் பரப்பினார்.ஒரு மில்லியன் ரெக்கார்டு விற்றுத் தீர்ந்தது.ஒரு லட்சம் டாலர் நாற்பதுகளில் ராயல்டியாகக் கிடைத்தது.அண்டோனியோ மசின், பெர்ட் ஆம்ப்ரோஸ் லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் , ரெட் நிகோலஸ், ஸ்டான் கெண்ட்டன், அபெலார்டோ பரோக்கோ, என பலரது பாக்கெட்டுகள் நிரம்பி வழிந்தது.ஆளாளுக்கு வெஸ்டர்ன் மியூசிக்கில் கலக்கிக்கொண்டிருக்க அன்றைய திரைத் துறையும் அதை அழகாக பயன்படுத்திக்கொண்டது.

    பாஸனோவா பிரேசிலின் சாம்பா ரிதத்தோடு இணைந்தது.ராபர்டோ மெனஸ்கல் மற்றும் ரொணால்டோ பாங்கலி சாம்பாவிற்கு புது வடிவம் தந்தார்கள்.இன்றைய ரியோ டி ஜெனிரோவின் கார்னிவலில் அன்றைய ஆப்ரிக்க அடிமைகள் தொடங்கி வைத்த சாம்பா நடனத்தில் அந்த ரிதத்திற்கென்றே தனி மவுசு இன்றும் தொடர்கிறது. அண்டோனியோ கார்லோஸின் பிரேசில் லத்தீன் ஜாஸ் பியானோ கிடார் ஃப்ளூட் என பலரையும் கட்டிப்போட செலஸ்டி மெண்டோஸாவின் பேங்கோஸ் ஆட்டத்தின் வேகத்தை இன்னும் கூட்டியது.அமெரிக்க ஆப்ரிக்க அடிமைகள் உடல் அசதியை போக்க ராக்கோடு ஜாஸையும் வாசிக்க ப்ளூஸ் என்ற புது வடிவம் பிறந்தது.மறு பக்கம் லத்தீன் இசையின் புது வடிவமான ஓரஹா உலகை தன் பக்கம் ஈர்த்தது.க்யூபாவின் செக்காஸ்கி ஃப்ளூட்டும் இணைய ரும்பாவின் மாண்டலின் எல்லாவற்றையும் கலந்து நமது தமிழ்த் திரையிசையும் புது வடிவம் கண்டது.இதை இங்கே தொடங்கி வைத்தது மெல்லிசை மன்னர்கள்.

    உலகில் எங்கெல்லாம் என்னென்ன மாற்றங்கள் இசையில் ஏற்படுகிறதோ அதையெல்லாம் முயற்சித்துப் பார்க்கும் ஆவல் எப்போதுமே மன்னர்களுக்கு உண்டு.புதுப் புது வாத்தியக் கருவிகளை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் வெஸ்டர்னில் கலக்க முடியுமோ அப்படியெல்லாம் கலக்கிய மேதைகள் அவர்கள்.பியானோவில் விளையாடிக்கொண்டே டபுள் பேங்கோஸில் விதவிதமான ரும்பாக்களை அவர்கள் தான் அறிமுகம் செய்து வைத்தார்கள்.க்யூபாவின் தெருக்களில் வாசித்த ரும்பாக்களை சினிமாவில் கொண்டு வந்தார்கள்.செலஸ்டி மெண்டோஸாவின் பேங்கோஸ் வடிவத்தை வஞ்சனையின்றி வாசித்தார்கள்.பரோக்காவின் சச்சச்சாவை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியது மன்னர்கள் தான்.அர்ஜெண்டினாவின் ஜூலியா டி கரோ பங்கு பெற்ற ஆர்கெஸ்ட்ரா டிபிக்காவை நமக்கு அடையாளம் காட்டியது அவர்கள் தான்.உருகுவேவின் டாங்கோ மியூசிக் க்யூபாவின் காற்று வாத்தியங்கள் என விதவிதமான முயற்சிகள் நம்மை தாளம் போட வைத்தன.என்ன இசை வடிவம் என தெரியாமலேயே நமது கால்கள் துள்ளாட்டம் போடக் காரணம் மன்னர்களின் மேற்கத்திய இசை ஞானம்.அதிலொரு அற்புதத்தைப் பற்றி பேசவே இன்றைய பதிவு.அந்த அற்புதம் இடம் பெற்ற திரைப்படம் தெய்வத் தாய்.

    இந்தப் படம் ரும்பா உச்சம் தொட்ட 64 ல் வெளியானது இந்தப் படம்.மக்கள் திலகம் சரோஜா ஜோடியின் மகத்தான வெற்றிப் படம்.சத்யா மூவீஸின் முதல் முயற்சியில் பிற்காலத்தில் புகழ் பெற்ற இரு இயக்குநர்கள் ஒன்றாக பணியாற்றிய முதல் படம்.நந்திதாவின் மூலக் கதைக்கு நானாபாய் பட் திரைக்கதை வடிவம் தர டாக்டர் நோ சாயலில் ஒரு அருமையான துப்பறியும் கதை.உளவுத் துறை அதிகாரி மாறனாக மக்கள் திலகம்.அவரது காதலி மேகலாவாக அபிநய சரஸ்வதி.அப்போது தான் புதுமுகமான மாதவன் இயக்கிய மக்கள் திலகத்தின் ஒரே படம் தெய்வத் தாய்.நாடக மேடைகளில் வலம் வந்த கே.பி.க்கு திரைத் துறையை அறிமுகப்படுத்திய படமிது.பக்கம் பக்கமாக நாடக பாணியில் வசனங்களை எழுதித் தள்ளிய அவரது ஆர்வத்திற்கு இவ்வளவு வேண்டாம் இப்படி இப்படி எழுதினால் போதும் என சினிமா வசனங்களை அவருக்கு கற்றுத் தந்த படம் என தெய்வத் தாய்க்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு.படத்தின் மகத்தான வெற்றிக்கு இன்னொரு காரணம் அதில் இடம் பெற்ற பாடல்கள்.

    இந்தப் புன்னகை என்ன விலை ஒரு ஸ்டைலில் வந்தால் வண்ணக்கிளி சொன்ன மொழி இன்னொரு ஸ்டைலில் இருந்தது.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் கொள்கை முழக்கம் செய்தபோது பருவம் போன பாதையில் இன்னொரு வடிவத்தில் வந்திருந்தது.இவை எல்லாவற்றிற்கும் மேலாக வெஸ்டர்னில் வெளுத்து வாங்கியது இன்னொரு பாடல்.அந்தப் பாடல் தான் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை என்ற பாடல்.மன்னர்கள் கையால் குட்டுப்பட்டு வெற்றிகரமாக வலம் வந்த வாலியின் வரிகள் படம் முழுவதும் பரவிக் கிடந்தது.சிச்சுவேஷனை சொல்லச் சொல்ல புதுப் புது சிந்தனைகளை அவர் தூவிக்கொண்டே போக மக்கள் திலகத்திற்கு வாலி இன்னும் கொஞ்சம் நெருக்கத்தில் வரக் காரணமாக இருந்தது தெய்வத் தாய்.அவரது கற்பனைக்கு கால் சலங்கை போட்டு கலகலப்பாக ஆடவிட்ட மன்னர்களை இந்த நேரத்தில் நம்மால் புகழாமல் இருக்க முடியாது.இந்தப் பாடலின் சிச்சுவேஷன் நாயகன் அவனது படுக்கையறையில் தனியாக இருக்கிறான்.அவனது பக்கத்து டேபிளில் நாயகியின் புகைப்படம் ஃபிரேம் போட்டு வைக்கப்பட்டிருக்கிறது.புகைப்படத்தைப் பார்த்ததும் அவனது கற்பனைச் சிறகுகள் விரிகிறது.புகைப்படம் உயிர் பெற நாயகி அதிலிருந்து வெளியேறி அவனோடு இணைகிறாள்.வாலியின் கற்பனையும் ஊற்றெடுக்க காட்சிகளை அழகாக எடுத்துத் தந்திருப்பார் மாதவன்.

    அதன் மெட்டிற்குப் போவதற்கு முன்பாக மன்னர்கள் வாசித்த முன்னிசை தான் இங்கு முக்கிய இடம் வகிக்கிறது.ரும்பாவின் மேற்கத்திய ரிதத்தை அவர்கள் அட்டகாசமாக பயன்படுத்தியிருப்பார்கள்.ஓரஹா பாணியில் டபுள் பேங்கோஸை அருமையாக வாசித்திருப்பார் கோபாலகிருஷ்ணன்.ராக் அண்ட் ரோலை கொண்டு வந்து ரும்பாவில் கலந்து ஒரு செக்காஸ்கி பாணியில் அவர்கள் தந்த விதம் அசத்தலான முயற்சி.க்யூபாவின் இசை வடிவம் லத்தீன் அமெரிக்க ராக் அண்ட் ரோல் ட்ரம்ஸ் கிடார் ட்ரம்பெட் சாக்ஸ் பேங்கோஸ் அக்கார்டியன் மாண்டலின் என ஏகப்பட்ட வாத்தியங்களை இந்தித் திரைப்படங்களில் ஏகப்பட்ட இசை மேதைகள் வாசித்துத் தள்ளிய அறுபதுகளில் நமது மன்னர்களும் சளைக்காமல் இங்கே அவற்றை சமைத்துத் தள்ளியதை நாம் மறந்துவிடக் கூடாது.பாடலின் முன்னிசையில் வரும் அந்த ரும்பா பிட் வேறெங்கும் காண முடியாத அற்புதம்.பேங்கோஸின் தனியாவர்த்தனம்.ட்ரம்ஸில் தொடங்கி பேங்கோஸில் முடிய புகைப்பட நாயகி வெள்ளுடை தரித்து இரட்டை ஜடையில் அதே வெள்ளையில் ரிப்பன் கட்டி சிக்கென ஆட்டத்தை ஆரம்பிக்க நாயகனின் கால்கள் அந்த ரிதத்திற்கேற்ப தாளமிட ஃப்ளூட் வயலின் இசையோடு வருகிறது இந்தப் பாடல்.

    கவிஞர்களுக்கே உரிய கற்பனைத் திறன்.பாடலுக்கு முன்பே வருகிறது இந்தக் கவிதை.ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்.நிலவு எனக்கு குளிராகத் தெரியவில்லை.நிலவை விட குளிர்கிறது இவள் முகம்.அந்த குளிர்ச்சி ததும்பும் முகத்தில் கண்களைப் பார்க்கிறேன் .மலரை விட ஒளிர்கிறது அந்தக் கண்கள்.இதோ முடிவெடுத்துவிட்டேன்.அவளின்றி நானில்லை.அவளும் அப்படித் தான் நானின்றி இனி அவளேது?. பல்லவியில் பக்குவமாக பாடமெடுத்திருப்பார் வாலி.மன்னர்கள் ஐயா டி.எம்.எஸ்ஸை அழைக்க எம்.எஸ்.வி.எப்படிப் பாட வேண்டுமென அவருக்கு பாடமெடுத்திருப்பார்.ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் வரை வாத்தியங்களை அவர் தொடவே இல்லை.நிலவில் குளிரில்லை என்றதும் தான் உயிர் பெறும் வாத்தியங்கள்.தேவையான இடத்தில் சைலன்ஸ் தர முக்கியமான கட்டம் இது தான் என வாத்தியங்களை ஒலிக்கவிட்ட விதம் நேர்த்தியான யுக்தி.கண்ணையும் மலரையும் சொல்லிவிட்டு அவளில்லாமல் நானில்லை எனும்போது கொஞ்சம் உற்சாகத்தை கூட்டியிருப்பார்.அவளில்...லாமல் சின்ன இடைவெளி அந்த தாளத்திற்கு சரியான மாத்திரையில் வந்து உட்கார்ந்திருக்கும்.தன னன் னான னானன்னா .ட்ரம்ஸின் கோர்வையான தாளம்.சட்டென ராக் அண் ரோல்.லல லல்ல லாலலா லால லல்லலா.மக்கள் திலகத்தின் உற்சாகம்.மாதவன் அவரை குழந்தை போல பெட்டில் கிடத்தி கால்களை காற்றில் மிதிக்க விட புகைப்படப் பெண்மை இப்போது உயிர் பெற்று உள்ளே வருகிறது.

    இடையிசையில் ஃப்ளூட் வயலின் இசையோடு அட்டகாசமான மாண்டலின்.சரணத்திலும் விடாமல் கொஞ்சிக்கொண்டு போகிறது அந்த வாத்தியம்.வாலியின் கற்பனையில் வண்ணமயமான வரிகள்.

    கொடி மின்னல் போல் ஒரு பார்வை
    மானோ மீனோ என்றிருந்தேன்
    குயில் ஓசை போல் ஒரு வார்த்தை
    குழலோ யாழோ என்றிருந்தேன்.

    சட்டென மின்னி மறையும் மின்னலை ஒத்த பார்வை.மின்னலை வாலி கொடியாக படரவிட்ட அழகு.விழியழகை மானோடும் மீனோடும் ஒப்பிட்டிருப்பார்.பவள வாய் திறந்து பேசினாலோ குயிலாக வந்து விழும் ஓசையில் குழலா யாழா என்ற குழப்பம்.நாயகன் நாயகியை நெருங்கி சுற்றி வந்து ஒரு ரிவால்விங் சேரில் அமர்த்தி க்ளோஸப் வர அந்த குழலோ யாழோ இன்னும் கொஞ்சம் அழகாகிறது.அதன் முடிவில் மன்னர்கள் தரும் மாண்டலின் இசையில் தந்திகளின் உற்சாகம் தெரியும்.இரு முறை ஐயாவின் குரல் ஒலிக்க இரண்டிலும் அவர் வெறைட்டி காட்டியிருப்பார்.அடுத்த வரியில் மெட்டில் சிறிது மாற்றம்.காரணம் வாலியின் வரிகளில் இன்னும் கொஞ்சம் நெருக்கம்.

    நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
    தீயோடு பஞ்சை சேர்த்தாள்

    காதலின் இன்னொரு பக்கம்.உடலோடு இணைவதற்கு முன்பாக உள்ளத்தோடு இணைந்த உண்மைக் காதல்.நெஞ்சம் இணைய பஞ்சாகிப்போன உள்ளம்.தீயாக வந்து தெவிட்டாத இன்பம் தர காதல் நோயில் கட்டுண்ட உள்ளங்கள்.மக்கள் திலகத்தின் எக்ஸ்ப்ரஷன் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.வார்த்தைகளுக்கு அவர் தரும் முக்கியத்துவம்.கைகளை பக்குவமாக படரவிட்டு வளைத்து நெளித்து வாகாக நெற்றியில் ஒரு முட்டு முட்ட மக்கள் திலகத்தின் ஈடுபாடு தெரியும். வாலி அடுத்த வரியில் இன்னும் கொஞ்சம் ஏங்கவிட்டிருப்பார்.நெஞ்சும் பஞ்சும் ஒரு மெட்டில் அடங்க அடுத்த வரியில் மாறிப் போகும் மாயம்.

    இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
    நாளை என் செய்வாளோ?.

    ஐயாவின் குரலில் ஏகப்பட்ட குழைவுகள்.ஏக்கத்துடன் அவர் கேட்ட கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள்.மாதவன் அப்படியே மக்கள் திலகத்தை நிலத்தில் படுக்க வைத்து கிரேன் மீதேறி உச்சிக்குச் சென்றிருப்பார்.நாளை என் செய்வாளோ?. நாளை என டி.எம்.எஸ்ஸூம் உச்சியில் நிற்பார்.வார்த்தைகள் இடிக்காமல் இருக்க என்ன செய்வாளோ என்பதை என் செய்வாளோ என சுருக்கியதில் கூட ஒரு ஒழுங்கிருக்கும்.முக்கியமாக அங்கே மியூசிக் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள் மன்னர்கள்.

    அட்டகாசமான இசைக்கேற்ப ஆடும் ஜோடி.அபிநய சரஸ்வதியின் ஆட்டத்திற்கு இணையாக ஆடும் மக்கள் திலகம்.அந்த மேலாடையை எப்படித் தான் போட்டாரோ?. அவ்வளவு டைட்டான ஆடையில் கழுத்தில் ஒரு கலர் துண்டு முடிச்சோடு பறக்க கீழே லூசான கால்சட்டையில் நல்ல காம்பினேஷனோடு டபுள் கலர் ஷூக்கள்.இடுப்பில் பின்னலான பெல்ட்.ரிஸ்ட் வாட்ச்.ஜல்லிக்கட்டுக் காளையாக துள்ளாட்டம் போடும் மக்கள் திலகம்.ஏதோ பள்ளி முடித்து திரும்பும் மாணவி போல் இரட்டை சடை பின்னலிட்டு இரு பக்கம் ரிப்பன் கட்டி ஒரு வெள்ளுடை தேவதையாக சிக்கென்ற சரோஜா. வாலி தனது மனக் கண்ணால் நாயகியை பார்த்திருப்பார்.அதே வாத்தியங்களோடு இடையிசை அழகாக இந்த ஜோடி மெல்ல வெளியே வந்து வராண்டாவில் தங்களது ஆட்டத்தை தொடர்கிறது.வாலியின் வர்ணனை கொஞ்சம் தூக்கலாக

    கலை அன்னம் போலவள் தோற்றம்
    இடையில் இடையோ கிடையாது
    சிலை வண்ணம் போலவள் தேகம்
    இதழில் மதுவோ குறையாது
    என்னோடு தன்னை சேர்த்தாள்
    தன்னோடு என்னை சேர்த்தாள்
    இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
    நாளை என் செய்வாளோ?.

    அன்னம் போன்ற தோற்றம் சிலை வண்ணமாக தேகம்.மது ஊறும் இதழோடு ஒரு மகா கற்பனை.என்னோடு தன்னோடும் தன்னோடு என்னோடும் கற்பனையில் கட்டிப் பிடித்து கலக்கலான ஆட்டம் போட்டு காட்சிகளுக்கேற்ப கோணங்கள் அமைத்து மொத்த யூனிட்டும் தங்களது உழைப்பை கொட்டிக் கொடுக்க நமக்கு காலமெல்லாம் கண்டு களித்து காதுகளுக்கு விருந்தளிந்த இசை மேதைகள்.பாடல் முடிந்த பிறகும் ஆசை ஆசையாக அந்த ரும்பாவை ஆசை தீர அடித்த பிறகு தான் மன்னர்கள் ஓய்வார்கள்.முடிவில் ஒலித்த லல்ல லாலல்லாவில் உற்சாகமான இசை விருந்துண்ட திருப்தி.......... Abdul Samad Fayaz

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •