Page 98 of 210 FirstFirst ... 488896979899100108148198 ... LastLast
Results 971 to 980 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #971
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று பிற*ந்த*நாள் காணும் இடியோசை சிரிப்புக்குர*லோன் பி.எஸ்.வீர*ப்பா, மக்கள் திலகத்துட*ன் "ஜெனோவா" என்ற காவிய*த்தில் இட*ம் பெறும் காட்சி..

    இவ*ர் த*லைவ*ருட*ன் ந*டித்துள்ள ப*ட*ங்க*ள்..

    ஸ்ரீமுருக*ன்,
    ராஜ*முக்தி,
    நாம்,
    ம*ருத*நாட்டு இள*வ*ர*சி, க*லைஅர*சி,
    ச*க்க*ர*வ*ர்த்தி திரும*க*ள், ராஜ*ராஜ*ன்,
    ம*காதேவி, ம*ன்னாதிம*ன்ன*ன், விக்கிர*மாதித்த*ன், ஆன*ந்த*ஜோதி, அர*ச*க*ட்ட*ளை,
    நாடோடி மன்ன*ன், அலிபாபாவும் 40 திருட*ர்க*ளும்,

    இத*ய*க்க*னி,
    ப*ல்லாண்டு வாழ்க , ந*வ*ர*த்தின*ம்,
    ஊருக்கு உழைப்ப*வ*ன், மீன*வ* ந*ண்ப*ன்,
    ம*துரையை மீட்ட சுந்த*ர*பாண்டிய*ன் ஆகிய
    பட*ங்க*ளில் ந*டித்துள்ளார்.

    ஜெனோவா ப*ட*த்தில் த*லைவ*ரும், வீர*ப்பாவும் மோதும் வாள் ச*ண்டை 1953ல் என்ன வேக*த்துட*னும் ஆக்ரோஷ*த்துட*னும் இருக்குமோ அதே சுறுசுறுப்பிற்கு ச*ற்றும் குறையாம*ல் 1978ல் வெளிவ*ந்த* மதுரையை மீட்ட சுந்த*ர*பாண்டிய*ன் ப*ட*த்தில் #இருவ*ரும் மோதுவ*ர்.

    1911ல் கோவை அருகே உள்ள காங்கேயம் என்ற* ஊரில் பிற*ந்தார். இன்று 109வ*து பிற*ந்த* தின*ம்..........Shm...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #972
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    50.ஆண்டுகள் நிறைவு பெற்ற மக்கள் திலகத்தின் ''எங்கள் தங்கம் '' 9.10.1970.........

    மக்கள் திலகம் எம்ஜிஆர் ''உலகம் சுற்றும் வாலிபன்'' படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் முன் [செப் 1970 ] படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்றார் .மக்கள் திலகம் வெளி நாட்டில் இருந்த நேரத்தில் எங்கள் தங்கம் வெளியானது .மேகலா பிக்சர்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திமுகவிற்காக , இலவசமாக நடித்த படம் .

    படமும் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது .100 வது நாள் வெற்றி விழாவில் பேசிய முரசொலி மாறன் எங்கள் தங்கம் வெற்றி மூலம் தங்கள் நிறுவனம் கடனிலிருந்து மீண்டது என்றும் அதற்காக புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார் ..........sb...vr...

  4. #973
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இணைந்த கைகள்

    ஏப்ரல் மாதம் [1970] ஈரானில் தமிழ் பிடிப்புக்காக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். விரைவில் வெளிநாடு போகவிருக்கிறார். இத்தகவலை அவரே அண்மையில் நிருபர்களிடம் வெளியிட்டார்.

    ஊட்டியில் வெளிப்புறக் காட்சிகள் படப்பிடிப்புக்கள் எம்.ஜி.ஆர். போயி ருந்த பொழுது [ செப்டம்பர் 1969 ] நிருபர்கள் அவரைப் பேட்டிகண்டார்கள்.

    "இணைந்த கைகள்" படப்பிடிப்புக்காகத்தாம் வெளிநாடு செல்லவிருப்பதாக எம்.ஜி.ஆர். கூறினார் . வருகிற ஏப்ரல் மாதம் ஈரானி லும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள பகுதிகளிலும் படப் பிடிப்புகள் நாடாகும் என்றும் அதற்காக தான் வெளிநாடு போகவிருப்பதாகவும் அவர் கூறினார் ........sb...

  5. #974
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #பொன்மனச்செம்மலும் #ஆன்மீகச்செம்மலும்

    தமிழக முதல்வர் பொன்மனச்செம்மலும், கிருபானந்த வாரியார் சுவாமிகளும் ஒரு விழாவில் கலந்துகொண்டிருந்தனர்... விழா முடிந்தது...வாரியார் சுவாமிகள் மேடையிலிருந்து கீழிறங்கி காருக்காக வெளியில் காத்துக்கொண்டிருந்தார்...

    புரட்சித்தலைவரை அனைவரும் சூழ்ந்து கொண்டதால் அவரால் மேடையை விட்டுக் கீழே இறங்கமுடியவில்லை...

    அங்கிருந்தபடியே, வாரியார் சுவாமிகள் வெளியில் நிற்பதைப் பார்த்த எம்ஜிஆர் அதிர்ச்சியுற்று தமது உதவியாளரை அழைத்து சுவாமிகள் நிற்பதன் காரணத்தைக் கேட்கச்சொல்கிறார்...

    உதவியாளரும், சுவாமிகள் வீட்டிற்குச் செல்ல கார் வராததால் அங்கு நின்று கொண்டிருக்கிறார் என எம்ஜிஆரிடம் சொல்ல... துணுக்குற்ற எம்ஜிஆர், விறுவிறுவென்று மேடையை விட்டுக் கீழிறங்கி வாரியார் சுவாமிகள் அருகில் செல்கிறார்...

    தமது காரை வரச்சொல்கிறார்... வாரியாரிடம், 'சாமி, என் காரில் ஏறுங்க, நானே உங்களை விட்ல விட்டுடறேன்' என்று பணிவாக வாரியார் சுவாமிகளை தமது காரில் அமரச்செய்கிறார்...தானும் அவரருகில் அமர்கிறார்...

    டிரைவரிடம், 'விடு காரை சிந்தாதரிப்பேட்டைக்கு' என்கிறார்... (வாரியார் வீடு சிந்தாதரிப்பேட்டையிலுள்ளது)

    அதற்குள் சிந்தாதரிப்பேட்டையிலுள்ள காவல்நிலையத்திற்கு தகவல் பறந்துவிட்டது...மக்கள் கூட்டம் வேறு... வாரியார் சுவாமிகள் குடியிருந்த சிறிய தெருவான 'சிங்காணிச்செட்டித்தெரு' விற்குள் முதல்வர் கார் நுழைகிறது...இருபுறமும் மக்கள் புடை சூழ...

    இதுவே வேறு யாராவது இருந்தால் என்ன பண்ணுவாங்க!! ...ஒரு வாடகை வண்டியை ஏற்பாடு செய்து அனுப்பிவைப்பாங்க!!!

    தமிழக முதல்வர் நம்ம வாத்தியார் நினைத்திருந்தால் ஆயிரம்
    கார்கள் அணிவகுத்து நின்றிருக்கும்...
    ஆனால் அதைச் செய்யவில்லை!!

    சாதாரண மானிடப்பிறவியா நம்ம வாத்தியார்... சராசரி எண்ணங்கள் தோன்றுவதற்கு ???

    அவர் தான் பொன்மனச்செம்மல் ஆயிற்றே ...!!! ������...vr...

  6. #975
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொதுச்சேவைக்கான #புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்களுக்குபட்டங்களும் வழங்கியவர்களும்

    கொடுத்துச் சிவந்த கரம் - #குடந்தை ரசிகர்கள்

    கலியுகக் கடவுள் - #பெங்களூர் விழா

    நிருத்திய சக்கரவர்த்தி - #இலங்கை

    ரசிகர்கள்

    பொன்மனச் செம்மல் - #கிருபானந்த_வாரியார்

    மக்கள் திலகம் - #தமிழ்வாணன்

    வாத்தியார் - #திருநெல்வேலி ரசிகர்கள்

    புரட்சித்தலைவர் - கே.ஏ.#கிருஷ்ணசாமி

    இதய தெய்வம் - #தமிழ்நாடு பொதுமக்கள்

    மக்கள் மதிவாணர் - இரா. #நெடுஞ்செழியன்

    ஆளவந்தார் - ம. பொ. #சிவஞானம்

    #பொன்மனச்செம்மல்_புகழ்_ஓங்குக

    செஞ்சி #முனியப்பன்.........

  7. #976
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று 10/10/2020 நகைச்சுவை நடிகை
    ஆச்சி மனோரமா வின்...நினைவு நாள்
    ஒரு பிலாஷ் பேக்...நம் தலைவர் படத்தின்

    நம் நாடு 1969
    நம் நாடு திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
    ஓர் உரையாடல்

    வி.எஸ்.சுப்பையா: இந்தப் படம் முதலிலிருந்து கடைசி வரை நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’டா இருக்கு. சில இடங்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுமளவு இருக்கு. கதாநாயகன் துரை, புடவை வாங்கித் தரும் இடம், குழந்தைகள் கதாநாயகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தரும் இடம்… இதெல்லாம் உதாரணம்.

    ஜெயராஜ்: சாதாரணமா கலர் படம் என்றால், வர்ணங்கள் கொஞ்சம் ‘டார்க்’கா இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப லைட்டா, மனதுக்குக் குளிர்ச்சி அளிப்பதுபோல இருந்தது.
    சீனிவாசன்: ஜெயராஜ் ஓவியர் அல்லவா? வர்ணத்தைப் பத்தி அவர் சொன்னால் சரியா தான் இருக்கும்.

    மனோரமா: கதாநாயகன் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் இடம் – ஏதாவது விபத்திலேயோ, அல்லது எங்காவதோதான் சந்திப்பாங்க. இந்தப் படத்திலே அவர்கள் சந்திப்பு புது மாதிரியா இருந்தது. ஒருவருக்கு உதவி செய்யப் போக, தன் பணமே பிக்பாக்கெட் போக, ஹீரோயின் ஹீரோ சொக்காயைக் கேட்கறது, சண்டை போடறது, கடைசியிலே வாட்சை வாங்கிக்கிறது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஹீரோயின் ஹீரோவை அதுவரைக்கும் விரும்பறாளா இல்லையான்னு காட்டாமல்,
    ‘உங்களுக்குப் பெண்ணை நான்தான் ‘செலக்ட்’ பண்ணுவேன்; என்னைக் கேட்காமல் செய்துட்டீங்களே’ன்னு சொல்றது, அதாவது அந்தப் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஜெயலலிதாவும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. காதலா இல்லாமல் வேற ஒரு விதமா அவங்க காதல் ஆரம்பித்திருக்கிறது நல்லா இருக்கு!

    ஜெயராஜ்: இப்பல்லாம் தமிழ்ப் படங்களில், கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ணும் காட்சி அதிகமா இருக்கும். இந்தப் படத்திலே அப்படி இல்லை.
    மனோரமா: ஆமாம்! நான் கூட, ஹீரோ ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்லிட்டு, வெளியே ஓடினதும் ரெண்டு பேரும் சேர்ந்து மழையிலே பாடப் போறாங்கன்னு நெனைச்சேன். இதிலே அது இல்லை. அதுவே நல்லா இருந்தது.
    ராஜம் கிருஷ்ணன்: இந்தப் படத்திலே பொதுவா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இவர்களைத் தாக்குவதுபோல மனசில் படுது!

    சீனிவாசன்: இல்லீங்க. பொதுவா அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே இது பொருத்தமா இருக்கும். அவர் நகரசபை சேர்மனா இருக்கும்போது, சிலர் தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வராங்க. இதிலே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுன்னு வேறுபாடே வேண்டாம். ஜனநாயகம் என்றைக்கு ஆரம்பித்ததோ, அன்றை யிலிருந்து இது போன்ற நபர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவா சொல்லப் போனா, இது ஒரு நல்ல ‘மாரல் டீச்சிங்’. நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் படம்.

    பிரேமா: வசனம் கூட ரொம்ப நல்லா இருக்கு. உதாரணமா, ரங்காராவ், ‘முன் ஜென்மத்திலேயே குழந்தை லஞ்சம் வாங்கியிருக்கும், அதனாலேதான் பிறக்கும்போது கையை மூடிக்கிட்டு பிறக்குது.’

    சசிகலா: அப்புறம் எம்.ஜி.ஆர். தன் பிரதர்கிட்டே சொல்றாரே… ‘நான் ஊமைகளுக்காகச் செவிடர்கள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்’னு, அந்த வசனமும் நல்லா இருந்தது.
    ராஜப்பா: படம் ஆபாசம் இல்லாமல், விரசம் இல்லாமல் இருப்பதுதான் எனக்குப் பிடிச்சுது!

    சுப்பையா: ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா‘ன்னு ஒரு பாட்டு வருதே, அதிலே ஏதாவது குறிப்பு இருக்கா? அது யாரையாவது குறிக்குதா? (சிரிப்பு)
    மனோரமா: இல்லீங்க. முதல்லே முதியோர் கல்விக்காகத்தானே குப்பத்துக்கு வர்றார் துரை? அப்போ அவர் வாத்தியார்தானே?

    ராஜம் கிருஷ்ணன்: படத்திலே காமெடியே அதிகம் இல்லை! நாகேஷ் இருந்தும் கூட அதிக ஹாஸ்யம் இல்லை.
    சசிகலா: ஆமாம்! எம்.ஜி.ஆர். சேர்மன் ஆயிட்டபோது நாகேஷ் ஏன் நகரசபைக் கூட்டத்திலே அவர் பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்கார்?

    சீனிவாசன்: செக்ரெட்டரி ஆகியிருப்பார்!
    சசிகலா: அது சரி, பின்னாலே ஜெயலலிதா எப்படி இங்கிலீஷ் பேசறாங்க?

    மனோரமா: முதியோர் கல்விக்காக வந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கலாம், இல்லியா?
    சீனிவாசன்: சரி, நான் ஒண்ணு ஒண்ணு கேட்கிறேன். ஒரு படத் திலே எலந்தப் பழம் வந்தா, உடனே இன்னொரு படத்திலே மாம்பழம், அந்தப் பழம் இந்தப் பழம்னு ஏதாவது வந்தே ஆகணுமா என்ன?

    ஜெயராஜ்: அந்தம்மாவைப் போய் கேட்டீங்கன்னா, அவங்க எப்படிச் சொல்லுவாங்க? புரொடியூஸரைத்தான் கேட்கணும். அதிருக்கட்டும், ரங்காராவைப் பத்தி யாரும் சொல்லலையே?

    சீனிவாசன்: அவரை நல்ல மனுஷனா பார்த்துப் பார்த்து, இந்த மாதிரி பார்க்க ஆரம்பத்தில் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. போகப் போக பிக்கப் பண்ணிடறாரு. அதாவது, பாதாள பைரவி வில்லன் மாதிரி திரும்பிடறாரு!

    ராஜப்பா: அசோகன் மட்டும் என்னவாம்?
    பிரேமா: ஆமாம்! ரொம்ப அடக்கமா நடிச்சிருக்கார். பகவதியும் நல்லா நடிச்சிருக்கார். சாதாரணமா கலர் படங்களில் டார்க் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு இருப்பார் எம்.ஜி.ஆர். இதிலே ரொம்ப ப்ளீஸிங் கலரைப் போட்டுக்கிட்டு, ரொம்ப இதுவா இருக்கார்!

    சுப்பையா: மொத்தத்திலே அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் இருக்கு. அதையும் ‘என்டர்டெயின்மென்ட்’ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து, நல்லா போர் அடிக்காம எடுத்திருக்காங்க!
    சீனிவாசன் விருதுநகர் எம் எல் ஏ (காமராஜரைத் தோற்கடித்தவர்)
    மனோரமா................

  8. #977
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் தன் திரைப்பட வெற்றிகளை
    விளம்பரத்தில் போட்டு தான் வெற்றி என என்றுமே சொன்னதில்லை...
    நம்நாடு
    திரைப்படத்தின்
    விளக்கத்தை
    சாதாரண நடிகர்களின் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை...
    எங்கள் தலைவரின் சாதனையை விளக்கும் பதிவில் புகுந்து கொண்டூ எங்களை
    நீ கேள்வீ கேட்க முடியாது.

    இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ...களுக்கு
    என்ன வேலை...
    52 அரங்கில் ஒடியதும்
    வசூல் பெற்றதும்
    உலகத்திற்கு தெரியும்.
    கடந்த ஆண்டுகளில் நம்நாடு காவியம் பெற்ற அசைக்க முடியாத சாதனையும் தெரியும்...
    சாதாரண நடிகன் படம் எத்தனை தியேட்டர் ஒட்டபட்டால் என்ன..
    பொய் விளம்பரம் கொடுத்தால் என்ன...
    லட்சத்திற்கு மேல் டிக்கட் வாங்கி பொய்வசூல் காண்பித்தால் எங்களுக்கு என்ன..
    வசூல் சக்கரவர்த்தி
    எம்.ஜி.ஆர் என்பது
    உலகத்திற்கே தெரியும்............ur...

  9. #978
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "தாயைக் காத்த தனயன்" காவியம் விறுவிறுப்பான பொழுதுபோக்குப்படம். புலியை வேட்டையாடப் போகும் மக்கள் திலகத்துக்கு காலில் அடிபட்டு புலியிடம் இருந்து தப்ப சிறிய குகைக்குள் மறைந்து கொள்வார். வெளியே புலி குகையை நோக்கி பாயும் காட்சி 3டி போல மிரட்டும். அப்போது மக்கள் திலகம் முகத்தில் பய உணர்ச்சியையும் சோர்வால் கண் மூடுவதையும் திடுக்கிட்டு எழுவதையும் அற்புதமாக மிகவும் இயல்பாக காட்டியிருப்பார். தேவருடன் சிலம்ப சண்டை பொறி பறக்கும். சண்டைக்கு முன் மக்கள் திலகம் வைக்கும் ஸ்டெப்ஸ் ... தியேட்டரே அமர்க்களப்படும். இந்தப் படத்தில்தான் எம்ஆர்ஆர் வாசு அறிமுகம். சண்டிக் குதிரை... பாடலுக்கும் ஆடியிருப்பார்.

    கட்டித் தங்கம் வெட்டி எடுத்து பாடல் காட்சியில் மக்கள் திலகம் காலில் அடிபட்டதால் முதல் பாராவில் குச்சியை ஊன்றியபடி நொண்டி நடப்பார். நமக்கு அதெல்லாம் பிடிக்காது என்பதை சரியாக உணர்ந்து கனவு காண்பது போல காட்சியை மாற்றி, அடுத்த பாராவில் பளீரென்ற தோற்றத்துடன் ‘சின்ன யானை’ நடைபோட்டு வருவார். அதைப் பார்த்தபிறகுதான் நமக்கு பாட்டில் சந்தோஷம் வரும். தியேட்டரில் கைதட்டலும் விசிலும் பறக்கும்....... Swamy...

  10. #979
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இங்கே சிவாஜி ரசிகரான முகமது தமீம் என்ற நண்பர் நம்நாடு 50 நாள் விவரங்கள் கேட்டதற்காக நண்பர் ராஜூ கோபப்பட்டிருக்கிறார். யார் வேண்டுமானாலும் தாராளமாக இங்கே வந்து கேட்கட்டும். தெரிந்ததை, உண்மையை சொல்வோம். இதில் என்ன இருக்கிறது? நம்மிடம் உள்ள உண்மையான விவரங்களை சொல்வோம். தேர்த்திருவிழா, காதல் வாகனம் எல்லாம் 100 நாள் ஓடியது என்று நாம் பொய் சொல்லப் போகிறோமா? அந்தப் படங்கள் 100 நாள் ஓடாததால் மக்கள் திலகம் நம்பர் 1 இல்லை, வசூல் சக்கரவர்த்தி இல்லை, அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் இல்லை என்று ஆகிவிடுமா? இதெல்லாம் நிரூபிக்கப்பட்ட வரலாறு. ஓடிய படங்களை ஓடியது என்று சொல்லப் போகிறோம். ஓடாததை ஓடவில்லை என்று சொல்லப் போகிறோம். நடிகப் பேரரசரே மக்கள் திலகத்தின் ஓடாத படங்களை ஓடவில்லை, எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்று உண்மையை சொல்லி இருக்கிறார். அதற்கான காரணங்களையும் சொல்லி இருக்கிறார். நானும் சொல்லி இருக்கிறேன். மக்கள் திலகத்தின் வெற்றி மறைவான, போலியான வெற்றி இல்லை. நம்நாடு வெற்றியும் போலியானது இல்லை.

    அதே நேரம் இங்கே நீக்காத அவரது பதிவை நீக்கியதாக முகமது தமீமின் தவறான குற்றச்சாட்டை நண்பர் ராஜராஜன் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஏன் முகமது தமீம் சார் இப்படி செய்கிறீர்கள்? இப்படி செய்வதன் மூலம் உங்கள் நோக்கம் என்ன? எங்களைப் பற்றி சிவாஜி கணேசன் ரசிகர்களிடம் மேலும் தவறான தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதா? தாராளமாக இங்கே வந்து கேள்வி கேளுங்கள், உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஆனால், எங்கள் மீது இல்லாத, தவறான குற்றச்சாட்டை வெளியே சொல்லாதீர்கள். அடிக்கடி வாருங்கள். நன்றி. ...... Swamy...

  11. #980
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.

    எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.

    அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங் கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரி டம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.

    அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத

    ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’

    அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.

    எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,

    ‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’

    என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்

    ‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’

    என்று வரும்.

    பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’

    என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.

    கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,

    ‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.

    நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.

    ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.

    எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.

    ‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

    அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.

    எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.

    சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.

    ‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

    என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.

    எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

    ‘தேக்கு மரம் உடலைத் தந்தது

    சின்ன யானை நடையைத் தந்தது

    பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

    பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

    இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.

    எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

    Mgr பக்தன் சைதை s.மூர்த்தி.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •