Page 104 of 114 FirstFirst ... 45494102103104105106 ... LastLast
Results 1,031 to 1,040 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #1031
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இந்தியாவின் கிளார்க் கேபிள் என்று அமெரிக்க பத்திரிகைகள் 1962 இல் முதல் இந்திய நடிகராக சிவாஜி அவர்களை ஜான் கென்னடி யின் அமெரிக்க அரசாங்கம் அழைத்தது. பத்திரிகைகள் கௌரவித்தது இந்தியாவின் கிளார்க் கேபிள் என்று. திருமதி.தெரேசா என்ற மூத்த பத்திரிகையாளர் அமெரிக்க நடிகர்கள் தங்களை வருடத்தில் ஒரு படம் நடிப்பதற்குள் தாங்கள் தான் திரை உலகின் box office ஆளுமை என்று நினைத்து கர்வம் கொள்கின்றனர். ஆனால் இந்த இந்திய நடிகர் ஒரே சமயத்தில் 10 படங்களை நடித்து கொடுத்து அமைதியாக இருக்கிறார். இவர்தான் உண்மையான திரை உலக பாக்ஸ் ஆபீஸ் ஆளுமை உடையவர் என்று அமெரிக்க பத்திரிகையில் எழுதிய அந்த பக்கம். இதுதான் சிவாஜி சாதனை சரித்திர சாதனை. நடிக்க வந்த 10ஏ வருடத்தில் உலக ஆளுமை கொண்ட அமெரிக்க வல்லரசு முதல் இந்திய நடிகராக சிவாஜியை அழைத்து கௌரவித்தது. சிவாஜிக்கு பிறகே உலகளவில் இதர இந்திய நடிகர்கள் என்பது நிரூபணம்.

    siva-277.jpg

    siva-278.jpg

    Thanks Nadigarthilagam sivaji tv
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1032
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜிகணேசன் எனும் மகத்தான நடிகனின் மிக சிறந்த படங்கள் ஏராளம், ஆனால் அதிசிறந்த நடிப்பினைஅந்த மகா நடிகன் தேசாபிமான படங்களுக்கும், இந்து தெய்வ வேடங்களுக்கும், அடியார் வேடங்களுக்குமே கொடுத்திருந்தான்
    ��
    தேசாபிமானிகளான கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற பெரும் அடையாளங்களை உணர்ச்சி பொங்க நம்முன் நிறுத்திவன் அவன்
    ��
    சிவபெருமான் உருவம் முதல் வீரபாகு, நாரதர் உருவம் வரை தன் கணீர் குரலால் காட்டி தந்தவன் அவன்
    கண்ணன், கர்ணன் முதல் ராமன் வரை இதிகாச பாத்திரங்களையெல்லாம் திரையில் நமக்கு சுமந்து காட்டியவன் அவன்
    ��
    விசுவாமித்திரன் முதல் எத்தனையோ ரிஷிகளை நம் கண்ணில் காட்டிய வித்தகன் அவன்
    ��
    ராஜராஜசோழன் எப்படி இருந்திருப்பான் எப்படி உறுமியிருப்பான் என்பதை திருநீறும் பட்டையுமாக வந்து காட்டி தந்தவன் அவன்
    ��
    மகாகவி காளிதாஸ் எப்படி இருந்திருப்பான் என நம்முன் உருமாறி நின்றவன் அவன்
    ��
    இந்து அவதாரங்கள், கவிஞர்கள், அடியார்கள், அவதார வேடங்கள், இந்து அரசர்கள், இந்து வேத ஞானிகள், ரிஷிகள், பக்தர்கள் என இந்துமததுக்கு திரையில் அவன் அற்றிய பணிகள் அதிகம்
    ��
    இந்து வேடத்தில் நடிப்பதெல்லாம் பிற்போக்கு தனம் என்றும்,நாகரீகமில்லை என கருதப்பட்ட காலங்கள்
    ��
    இதனாலே வீரபாண்டிய கட்டம்பொம்மன் படத்துக்கு டெல்லி முகத்தை திருப்பியபொழுதும் எகிப்து நாட்டு அதிபர் நாசர் விருது வழங்கினார்.
    ��
    அந்த மகா நடிகன் வ.உ.சியாக ஜொலித்ததற்கு காங்கிரஸ் அரசு விருது கொடுக்கவில்லை, பாரத விலாசில் இந்தியனாக வந்ததற்கு இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை
    ��
    மாறாக அமெரிக்க அரசுதான் "கவுரவ மேயராக" கொண்டாடியது. சிறப்பு விருந்தினராக வரவழைத்து பாராட்டி மகிழ்ந்தது.
    ��
    ஆம், வரலாற்றில் மிகப்பெரிய அநீதி இந்தியாவில் சிவாஜிக்கு இழைக்கப்பட்டது.
    ��
    ஆனால் எகிப்தும், பிரான்சும், அமெரிக்காவும், மலேசியாவும், சிங்கப்பூரும் இன்னும் பல நாடுகளும் ஏன் அன்றைய உலகில் சிறந்த நடிகன் பிராண்டோவே கொண்டாடிய பொழுதும் இந்திய அரசு தயங்கியது ஏன்?
    ��
    அவனுக்குரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லையே ஏன்?
    ��
    ஒரே ஒரு விஷயம்தான்.சிவாஜி திருநீறு பூசி நின்ற இந்து, தேசத்தை நேசித்த இந்து
    ��
    ஆம், அந்த மகா நடிகனை இந்து என்பதற்காவும் அக்காலங்களில் திருநீறு பூசாமல் நடிப்பது நாகரீகம் என கருதப்பட்ட காலத்தில் இந்துவாகவும் புராண வேடங்களையும் தைரியமாக கொடுத்ததற்காக அவன் ஓரம்கட்டப்பட்டான்
    ��
    தமிழக திரையுலகின் எப்பக்கம் திருப்பினாலும் காணப்படும் வஞ்சகம் இது.
    ��
    சிவாஜி கணேசனின் அதி உச்ச நடிப்பு வெளிப்பட்ட படம் என ஒரு படத்தை சொல்ல முடியும், திருவருட்செல்வர் எனும் அந்த நாயன்மார் வாழ்க்கைப் படம்
    ��
    அதில் சோழமன்னன், சேக்கிழார், சிறுத்தொண்ட நாயனார், சுந்தரர் என அழகாக உருக்கமாக நடித்திருந்தார் சிவாஜி கணேசன்..
    ��
    ஆம் சுந்தரர் எப்படி இருந்தார், எப்படி வாழ்ந்தார்,எப்படி சிவ பக்தியில் உருகியிருந்தார் என்பதை அணு அணுவாக உருகி நடித்து உலகுக்கு காட்டினார் சிவாஜி கணேசன்
    ��
    சிவாஜி கணேசன் ஆயிரம் வேடங்களில் நடித்திருந்தாலும் அவரின் ஒப்பற்ற நடிப்பும் உருக்கமும் பொருத்தமும் நிறைந்திருந்த பூரணத்துவ வேடம் என்பது அப்பர் சுவாமி வேடமே
    ��
    நிச்சயம் அதற்கு விருது கொடுத்திருக்க வேண்டும், கொண்டாடியிருக்க வேண்டும் அந்த வேடம் வரலாற்றில் நின்றிருக்க வேண்டும்
    ��
    ஆனால் இந்து அவதாரங்களையோ அடியார்களையோ மறைக்க வேண்டும் என்ற சிந்தனையுள்ள மாநிலத்தில் அதெல்லாம் சாத்தியமில்லை
    ��
    அந்த படத்துக்கு விருதுமில்லை, பத்திரிகைகளில் பராசக்தி, கட்டபொம்மன் பாத்திரங்கள் வந்த அளவு அது வரவுமில்லை ,
    ��
    ஒரே காரணம் அது நாயன்மார் கதை..
    சிவாஜிகணேசனின் தனிச் சிறப்பும் ஒப்பற்ற நடிப்பும் கொண்ட படம் என்றால் அது திருவருட்செல்வர் படமே அதில் ஒரு காலமும் சந்தேகமே இல்லை..
    ��
    திருவிளையாடல் முதல் ராஜரிஷி வரை சிவாஜி அந்த தெய்வீக வடிவங்களை நம் கண் முன் நிறுத்தியிருந்தார், ஆனால் அதற்காக அந்த நடிகன் கொண்டாடப்பட்டானா என்றால் இல்லை
    ��
    ஒரு ஊடகம் அதை சொல்லியிருக்குமா என்றால் இல்லை
    இந்திய நாடு என் வீடு" என பாடி நின்ற அவன் படத்தை விட
    "இந்துஸ்தான் ஜிந்தாபாத்" என கொந்தளித்த அவன் படத்தை விட,
    ��
    "சிந்து நதியின் இசை நிலவினிலே" என கண்களை பெருமையாக உருட்டி நின்ற அவன் படத்தைவிட ,
    "வானம் பொழிகின்றது பூமி விளைகின்றது, மன்னவன் நாட்டில் அன்னியருக்கு இல்லை வரி" என முழங்கி நின்ற அவன் படத்தை விட தேசாபிமான படம் என எதை காட்டமுடியும்?
    ��
    இந்நாட்டில் தேசாபிமான படங்களுக்கும், வேடங்களுக்கும் பிதாமகன் அவன்
    சிவபெருமான் முதல் சிவனடியார் வரை, கண்ணன் முதல் காளிதாசன் வரை இந்து வேடங்களுக்கு அவனை விட்டால் யார் உண்டு?
    இன்றும் என்றும் தேசாபிமான படங்களுக்கும், பக்தி படங்களுக்கும் அவன் நடிப்பே பிரதானம், அது ஒன்றே ஆறுதல்
    ��
    அவ்வகையில் தேசம், இந்துமதம் என்ற உணர்வுக்கும் உயிருக்கும் அவன் செய்த சேவை மிகப் பெரிது, அதை இன்னொரு நடிகன் செய்ததுமில்லை செய்யப் போவதுமில்லை
    ��
    கஞ்சன் என்றார்கள், மறைமுகமாக அவன் எவ்வளவு செய்தான் என்பதற்கு காஞ்சி பெரியவரே சாட்சி, அந்த செய்திகள் இங்கு அதிகம் தெரியபடுத்தப்படவில்லை
    ��
    காஞ்சி பெரியவரிடம் ஆசிவாங்க சென்ற சிவாஜியிடம் சொல்கின்றார் அந்த மகான் "திருச்சி கோவில்ல ஒரு யானை நின்னுச்சி, யார் கொடுத்தான்னு கேட்டேன் உங்க பெயரை சொன்னாங்க*
    ��
    சென்னையில சில கோவில்ல கேட்டேன் உங்க பேரதான் சொன்னா.. இன்னும் நிறைய கோவில்ல சொன்னாங்க, நிறைய தெய்வகாரியம் செய்றீங்க
    ��
    நிறைய யானை கொடுக்குறீங்க, திருப்பணி நிறைய செய்றீங்க, ஆனா உங்க* பெயர் வராம பாத்துக்கிறீங்க
    பகவான் உங்களுக்கு செஞ்சத மறக்காம திருப்பி செய்றீங்க.."
    ��
    அது சத்தியமாக கடவுளின் வார்த்தை, சிவாஜி கணேசன் எனும் மகா நடிகனின் உள்ளகிடக்கியினை அறிந்த அந்த தெய்வத்தின் வார்த்தை.
    ��
    சிவாஜி கணேசன் திரும்ப சொன்னார் "வெறும் நாடக நடிகனா ஒரு வேளை சோத்துக்கு நடிச்சிட்டு இருந்த எனக்கு எவ்வளவு பெரும் வாழ்க்கை கொடுத்திருக்கு அந்த தெய்வம்
    ��
    படிக்காத என்னை, நடிப்பு தவிர தகுதி இல்லாத* என்னை டெல்லி அமெரிக்கா மலேஷியா இலங்கைன்னு உலகெமெல்லாம் கொண்டாட வச்ச சக்தி அது
    ��
    அதுனாலதான் அந்த தெய்வத்தோட* கோவில் வாசல்ல நின்னு மக்களை நான் வரவேற்கிறதுக்கு பதிலா யானை கொடுத்தேன்.. இதுல என்ன சாமி இருக்கு?
    ��
    திமுகவில் தொடக்கத்தில் இருந்தாலும், பின் வெளிவந்து இந்து தெய்வங்கள், இந்து அரசர்கள், தேசாபிமானிகள் வேடத்தில் மக்களுக்கு எவ்வளவோ உண்மைகளை சொன்னான்.


    Thanks Rajan Psv (nadigarthilakam fans)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1033
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாங்கள் எவ்வளவுதான் பொறுமையாக இருந்தாலும் மாற்றுமுகாம் கூட்டம் எங்களை சீண்டிக்கொண்டே இருக்கிறது.
    நடிகர் திலகத்தை இழுக்காமல் அவர்களால் ஒன்றுமே எழுதமுடிவதில்லை.காரணம் நடிகர் திலகம் பெற்ற வெற்றிகள் சாதனைகள் அவர்களது நடிகனை நித்திரையில்லாமல் தவிக்கவிட்டதோ அதேபோன்று இவர்களையும் தூங்கிடாமல் தவிக்கவிட்டு வாழ்நாள்முழுவதும் பிதற்றவைத்துவிட்டது. இவர்களுக்கு இனி விமோசனம் என்பது கிடையாது.வாழ்நாள் முழுவதும் பிதற்றிக்கொண்டு போய்ச்சேரவேண்டியதுதான்.
    மேலும் தொடர்ந்து அவர்கள் பிதற்றுவதற்காக...
    Paul Goseph Goebbels.
    .ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
    கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
    ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.
    ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் வரை அதைப்பற்றி திரும்ப திரும்ப உரத்த குரலில் பேச வேண்டும் என்பது தான் கோயபல்ஸின் தத்துவம். இதைத் தான் ஹிட்லருக்காக செய்து வந்தார் அவர். யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் நிகழ்த்திய கொடுமைகளை நியாயப்படுத்தி பேசி அவருக்காக வாழ்நாள் முழுவதும் வக்காலத்து வாங்கி வந்தார் கோயபல்ஸ். தனது தந்திரமான பேச்சால் மக்களை ஏமாற்றியவர்.
    கோயபல்ஸ் தாம் சொல்வது வடிகட்டிய பொய் தான் என்றாலும் அதை நயமாக எடுத்துரைத்து திரும்ப திரும்ப அதைப்பற்றி பேசி அதைக்கேட்டவர்கள் அனைவரையும் ''அட உண்மைதாம்பா'' என நினைக்க வைத்துவிடுவார். மக்களிடம் எந்த மாதிரி பேசினால் அவர்களுக்குள் தனது பொய்யை உண்மை என விதைக்க முடியும் என்ற வித்தையை கற்று வைத்திருந்தார் கோயபல்ஸ்.
    பொய் பேசுவதில் தன்னை மிஞ்சி ஒருவர் உலகில் இருக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு விட்டுச்சென்றவர்.
    "எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவார்கள்.
    கோயாபல்ஸ் மாதிரியே எம் ஜீ ஆர் ரசிகர்கள் பலர் கோயாபல் ஆக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
    என்று பராசக்தி வெளிவந்து சிவாஜி அவர்கள் எடுத்த எடுப்பிலேயே முதல் படத்தில் சூப்பர் ஸ்ட்டார் ஆனாரோ அன்றே நடிகர் திலகத்திற்கு எதிரான சதி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இன்றுவரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பக்கத்து தெருவில் வசிப்பவன் ஏதாவது ஒரு விடயத்தில் வெற்றி பெற்றுவிட்டால் அதனை பொருட்படுத்ததாத ஒருவன் தன் பக்கத்துவீட்டுக்காரன் பெற்றுவிட்டால் பொறாமை பொச்செரிப்பு கொள்வான். அதேபோன்று
    சிறிய பருவம் முதலே தன்னுடன் ஒன்றாக இருந்தவன் விளையாடியவன் உணவருந்தியவன் ஒரே துறையில் பயணித்தவன் தனக்குப்பின் சினிமாவிற்குள் நுழைந்தவன் எடுத்த எடுப்பிலேயே பெரும் புகழை பெற்றதும் பொறாமை குணம் தலை தூக்கியது செம்மலுக்கு.அன்றே ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த கோயாபல்ஸ் கூட்டங்கள்.
    சிவாஜி கணேசனின் பட விளம்பரங்கள் கிழிக்கப்பட்டன சாணம் வீசப்பட்டது படம் சரியில்லை என வாய்வழிப்பிரச்சாரம் பத்திரிகைகள் கையூட்டம் கொடுக்கப்பட்டு எதிர்மறை விமர்சனங்கள் நடிகர் திலகத்தின் படங்கள் ஓடும் தியேட்டர்களில் படத்தை தோடர்ந்து ஓடவிடாமல் இடையூ மற்றும் பல என ஏகப்பட்ட நிகழ்வுகள் இந்த கோயாபல்ஸ்களால் செயல்படுத்தப்பட்டன.
    இயலாமை காரணமாக சொந்தத்தியேட்டர் குத்தகை தியேட்டர் என்ற புலம்பல்.
    நடிகர் திலகத்தின் படங்கள் ஏற்படுத்திய சாதனைகள் மறைக்கப்பட்டு பொய்யான விபரங்கள் பரப்பப்பட்டன.
    படங்கள் பெற்ற மாபெரும் வசூல்கள் குறைத்து வெளியிடுதல் கொடுத்த கொடைகளை தெரிந்தும் கஞ்சன் என்ற பிரச்சாரம். நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட நல்ல விடங்களை தங்கள் நடிகன் செய்யததுபோல் விடயத்தை திசை திருப்பல்.
    தங்கள் விபரங்களை மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்தல். ஓடாத படங்களை ஓடியதாகவும் கிடைக்காத வசூல் கிடைத்ததாகவம் இட்டுக்கட்டுதல் போலி விளம்பரங்களை தயார் செய்து தயாரிப்பாளர் கொடுத்ததுபோல் உலவவிடுதல். இதுவும் இதற்குமேலும் இந்த கோயாபல்சுகளின் பொய்கள் சொல்லிமாளாது.
    இவர்களின் பித்தலாட்டத்திற்கு ஒரு சில ஆதாரங்கள் இங்கே.மேலும் பல தொடர்ந்து வரும்.

    vanangamudi.jpg

    சசசச2.jpg
    Attached Images Attached Images
    Last edited by sivaa; 24th January 2023 at 02:27 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1034
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி என்ற சொல்லுக்கு ஒரு ஆகர்ஷண சக்தி உண்டு. அவரை பலமுறை சந்தித்து இருந்தாலும் எனது தந்தையுடன் சென்று சந்தித்த அந்த நினைவு மட்டும் பசுமரத்து ஆணி போல மனதில் என்றும் நிலைத்து இருக்கிறது.
    அப்போது எனக்கு வயது 16 என்று நினைக்கிறேன். சில சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் காந்தீய சிந்தனை கொண்டவர்கள் திரு சோமையாஜுலு தலைமையில் சிவாஜியை சந்தித்து அவர் கண்டிப்பாக திப்புவின் கதையில் நடித்து அவருடைய பெருமையை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நிர்பந்திக்க அவருடைய இல்லத்துக்கு சென்றனர். எனது தந்தையுடன் நானும்.
    ( அந்த "கஞ்ச" நடிகர் வீட்டில் குளிர்பானம் கொடுத்து அனைவரையும் உபசரித்தார்கள்.)
    சிவாஜி வந்ததும் பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்தது. அவருடைய இயலாமையை எடுத்து கூறினார். உடன் வந்த முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் தானே அதை தயாரிக்க போவதாக கூறியும் அன்றைய அவருடைய அரசியல் நிலைப்பாடு அவரை செய்யவிடவில்லை.
    அனைவருக்கும் சூடாக உப்புமாவும் இனிப்பும் பரிமாறப்பட்டது. ( கஞ்சன் வீட்டில் சுமார் முப்பது பேருக்கு உணவு ) கிளம்பும் நேரத்தில் அந்த மாபெரும் நடிகர் எனது தந்தையிடம் இருந்து கதையை பெற்றுக்கொண்டார். "தநாயக்கன் கோட்டை" என்று பெயரிடப்பட்டு இருந்த அந்த கதை பலரால் தொகுக்கப்பட்டு இருந்தது.
    வேண்டாம் என்று கூறியவர் கதையை படித்து பார்ப்பதாக சொல்லி வாங்கிக்கொண்டது பலருக்கு ஆச்சர்யம்.
    இரண்டு வாரங்கள் கழித்து அவரிடம் இருந்து எனது தந்தைக்கு அழைப்பு. நானும் ஒட்டிக்கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் கதையை பற்றி பேசிவிட்டு அன்றைய சூழலில் அவரால் ஏன் அந்த கதையில் நடிக்க இயலாது என்பதையும் விளக்கமாக கூறி எங்களை திருப்பி அனுப்பினார். என் தந்தையின் கையின் ஒரு துணிப்பை திணிக்கப்பட்டது. இதை உங்களுடைய காத்தீய சிந்தனை இயக்கத்துக்காக வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து காந்தி அண்ணலின் புகழ் பரப்ப ஆவன செய்யுங்கள். என்னுடைய உதவி எப்போது தேவைப்பட்டாலும் தயங்காமல் வந்து என்னை சந்தியுங்கள் என்று கூறி வழியனுப்பினார்.
    அந்த ஒரு நடிகனை பற்றி எத்தனை விமர்சனங்கள். ஒட்டு மொத்த ஊடகங்களும் ( இன்று போல் ) ஒரு சாராருக்கே சரணம் போட்டு வந்த நிலை அன்று. சிவாஜியின் வெற்றி இத்தகைய அனைத்து இன்னல்களையும் தாண்டித்தான் என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது. சுமார் நாற்பதாயிரம் நன்கொடை வழங்கியதை ( சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் ) எனது தந்தை அவருடைய கடைசி காலங்களிலும் சொல்லி சிலாகித்தார்.நன்றி திரு Belge Ravi

    siva-004.jpg

    Thanks Udha Kumar (நடிகர்திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள் One and only sivaji)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1035
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    முன்னைய நண்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ சில தவறான விபரங்களை பதிவிட்டிருக்கலாம் வெளியிட்டிருக்கலாம்.அல்லது பொதுவான பத்திரிகையில் வெளிவந்த சில பிழையான தகவல்களை பத்ததிரிகையில் வெளிவந்ததுதானே என்ற எண்ணத்தில் விளம்பரத்தின் அடிப்படையில் சிலவற்றை சரியாக இருக்குமென நாம் எண்ணியிருக்கலாம். அதன் அடிப்படையில் அது சரியாகத்தான் இருக்குமென நினைத்து தொடர்ந்து நாமும் அதனை பரப்பி வருகின்றோம்.இது அனைவருக்குமே பொருந்தும்.தவறில்லை ஆனால் முன்னையவர்கள் வெளியிட்ட தகவல்கள் பிழை என தெரிந்த பின்னரும் அதனை தொடர்ந்து பரப்பி வருவோமேயானால் அது மாபெரும் தவறு.அதைவிடத் தவறு அது தவறென தெரிந்த பின்னும் அது சரிதான் என குதர்க்கமாக வாதிடுவது வாதிட்டு அதனை உண்மையாக்க பகிரத பிரயத்தனை செய்வது.இதைத்தான் வாத்தியின் கோயாபல்ஸ் கைகூலிகள் செய்து வருகின்றனர். சொந்தத் தியேட்டர் குத்தகை தியேட்டர் ஸ்ரெச்சர் வடகயிறு இவை எல்லாவற்றையும் அவர்களே செய்து கொண்டு தாங்கள் தப்பிப்பதற்காக அதை நாங்கள் செய்வதாக பழியை எங்கள்மேல் திசை திருப்பிவிடுகிறார்கள்.. சொந்தத் தியேட்டர் சாந்தியில் மக்களின் ஆதரவுடன் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருந்த படம் பாலும் பழமும் ஆனால் அதனை 127 நாட்களுடன் நிறுத்திவிட்டு பார்த்தால் பசி தீரும் படத்தை திரையிட்டார்கள். பாலும் பழமும் பட தயாரிப்பளர் ஜீ என் வேலுமணி படம் நல்ல வசூலுடன் நன்கு போகின்றது படத்தை நிறுத்தாதீர்கள் தொடர்ந்து ஓடட்டும் என எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பாலும் பழமும் 127 நாட்களுடன் சாந்தியில் எடுக்கப்பட்டது. இதன்காரணமாக ஜீ என் வேலுமணி நடிகர் திலகத்துடன் கோவித்துக்கொண்டு வெளியேறி யது நடந்த தெரிந்த வரலாறு. வெள்ளிவிழா ஓடியிருக்கவேண்டிய படம் பாலும் பழமும் சொந்தத்தியேட்டரில் ஓட்டுபவர்களாக இருந்தால் இதனை வெள்ளிவிழா ஓட்டியிருக்கலாமே ஆனால் அப்படிச் செய்யவில்லை இதனை கோயாபல்சுகள் உணராமல் இல்லை ஆனால் சாந்தி தியேட்டரில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவது பொறுக்கமுடியாமல் காழ்ப்புணர்சியில் இயலாமை ஆற்றாமை அவர்களை புலம்ப வைத்திருக்கிறது. சாந்தியில் திரையிடப்பட்ட எல்லா படங்களுமா நன்கு போயிருக்கின்றன இல்லையே 100 நாட்கள் ஓடியதா ?இல்லையே சொந்தத்தியேட்டரில் ஓட்டுபவர்களாக இருந்தால் எல்லா படங்களையும் ஓட்டியிருக்கலாமே லாஜிக் தெரியாத கோயாபல்சுகள். அரசியல் பின்புலம் ஆள் அம்பு சேனை இதனை வைத்துக் கொண்டு அனைத்து தியேட்டருமே அவர்களின் கட்டுப்பாட்டில்தான். ஓட்டென்றால் ஓட்டவேண்டியதுதான்.சொந்தத்தியேட்டர் அவர்களுக்கு தேவையில்லை . இப்படித்தான் 1965 ல் கோவை ராயல் தியேட்டரில் எங்கவீட்டுப் பிள்ளை திரையிட்டிருந்த வேளை தியேட்டர் நிர்வாகத்தை அன்பாக கேட;டு வெள்ளிவிழா வரை இழுத்தார்கள் இந்த கோயாபல்சுகள்.அந்த இம்சை காரணமாக 10 வருடங்களாக வாத்தி படத்தை தியேட்டர் பக்கமே அண்டவிடவில்லை நிர்வாகம்.இது வரலாறு ஒரு உதாரணம் மட்டுமே.தூத்துக்குடியில் தர்ணா இருந்து அடிமைப்பெண் படத்தை 100 நாட்கள் ஓட்டியது மதுரையில் 175 நாட்களுக்கப்பின் 2 காட்சிகள் வீதம் உ சு வாலிபனை 217 நாட்கள் ஓட்டி பாகப்பிரிவினை 216 நாட்கள் ஓட்டத்தை முறியடித்தது இப்படி பல இதைவீடவும் பல இந்த கோயாபல்ஸ்களின் லீலைகள் இருக்கின்றன. வாத்திக்கு வெள்ளி விழா படங்கள் அசோக்குமார் உட்பட 7 மட்டுமே.நடிகர் திலகத்திற்கு 15க்கு மேல் எனவே கூடுதல் எண்ணிக்கை காட்டுவதற்காக வெள்ளிவிழா படம் எதை கணக்கு காட்டலாம் என தேடிதேடி அலைகிறார்கள் வெள்ளிவிழா ஓடாத என் தங்கை ஒளிவிளக்கு இரண்டையும் தற்சமயம் சேர்த்து கணக்கு காட்டி தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு அற்ப சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள்.............................. .................................................. ...........வாத்தியின் கள்ளக்கணக்குகளின் அம்பலம் தொடரும்........................

    other-003.jpgother-010.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1036
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    யாருடைய சாதனைகள் அதிகம்?



    Thanks Sivaji Murasu
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1037
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் வெள்ளி விழா ஓடியவை 3 படங்கள் மட்டுமே.

    அவை (1) வசந்த மாளிகை (2) உத்தமன் (3) பைலட் பிரேம்நாத்

    siva-002.jpg

    siva-018.jpg

    siva-003.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1038
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தமிழ்நாட்டில் நடிகர் திலகத்தின் பெயரை பறை சாற்றும் நினைவிடங்களில் சுமார்
    2.5 கோடி மதிப்புள்ள கட்டிடம் மதுரையில்
    அமைந்துள்ளது.......��
    இதனை நிறுவியவர் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர்
    எம் வி முத்துராமலிங்கம் அவர்கள் ��
    2003ல் மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரி உள்ள
    ஒரு வளாகத்திற்கு நடிகர் திலகத்தின் பெயரை சூட்டி பெருமைப்படுத்தி உள்ளார்
    வேலம்மாள் கல்வி நிறுவன குழுமங்களின் தலைவர்.....எம் வி முத்துராமலிங்கம் அவர்கள்.......
    அவருக்கும் இப் பெயரை சூட்டுவதற்கு காரணமாக இருந்த முனைவர் மருது மோகன் அவர்களுக்கும் கோடானு கோடி நடிகர் திலகத்தின் சார்பில் நன்றி��

    siva-019.jpg

    Thanks K.Laksmanan (Nadigarthlakam Fans)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1039
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தென்னாப்பிரிக்காவில் வெளியான சிவாஜி படம்!
    Do the Shadow Kiss என்ற விளம்பரத்துடன் தென்னாப்பிரிக்காவில் கலாட்டா கல்யாணம் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் - ஜெயலலிதா, நாகேஷ், மனோரமா என ஒவ்வொருவருக்கும் விதம்விதமான அடைமொழியுடன் போஸ்டர் அடித்திருக்கிறார்கள்.

    ஆல்பர்ட் என்ற தியேட்டரில் படம் வெளியானதை இந்த போஸ்டர் தெரிவிக்கிறது.
    நன்றி ISR Ventures

    siva-021.jpg

    Thanks Uthaya Kumar (நடிகர் திலகம் சிவாஜி நந்தவன பூக்கள்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1040
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வேறொரு குழுவில், 1964 ல் நமது நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனைகளை மட்டம் தட்டி பதிவிட்டிருப்பதால், இப்பதிவை தற்போது மீள்பதிவு செய்வது அவசியமாகிறது.

    1964 நடிகர் திலகத்தின் சாதனை ஆண்டு .
    (பதிவிடுபவர் முகம்மது தமீம்)
    1964 நடிகர் திலகத்தின் திரை வாழ்க்கையில் இன்னொரு பொற்கால ஆண்டு. இந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான படங்கள் ஏழு. அவற்றில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் ஐந்து . பதினோரு வாரங்கள் (77 நாட்கள்) ஓடிய படம் ஒன்று. ஒன்பது வாரங்கள் (63 நாட்கள்) ஓடிய படம் ஒன்று.
    1) கர்ணன் (108 நாட்கள்)
    2) பச்சை விளக்கு (105 நாட்கள்)
    3) கை கொடுத்த தெய்வம் (101 நாட்கள்)
    4) புதிய பறவை (135 நாட்கள்)
    5) ஆண்டவன் கட்டளை (77 நாட்கள்)
    6) முரடன் முத்து (63 நாட்கள்)
    7) நவராத்திரி (106 நாட்கள்)
    இவை சென்னை நகரத்தில்
    25 திரையரங்குகளில் வெளியாகி, அவற்றில் 15 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடின, பெரிய அரங்குகளில் மூன்று காட்சிகளாக. (கர்ணன் 3, பச்சை விளக்கு 3, கை கொடுத்த தெய்வம் 4, புதிய பறவை 1, நவராத்திரி 4)
    இவற்றோடு 1963-ம் ஆண்டு தீபாவளி வெளியீடான அன்னை இல்லம் படமும் இந்த ஆண்டின் துவக்கத்தில் ( பிப்ரவரி 22) 100 நாட்களைப் பூர்த்தி செய்தது.
    இவற்றுள் சென்னை சாந்தியில் திரையிடப்பட்டது கர்ணன் படம் மட்டுமே. பின்னர் சாந்தியில் ராஜ்கபூரின் 'சங்கம்" (இந்தி) திரையிடப்பட்டு 200 நாட்களுக்கு மேல் ஓடியதால் வேறு படங்கள் திரையிடப்படவில்லை. குறிப்பாக சிவாஜி பிலிம்ஸ் முதல் சொந்தப் படம் மற்றும் வண்ணத்தில் முதல் சமூக திரைக்காவியம் புதிய பறவை கூட சாந்தியில் வெளியாகவில்லை. பாரகனில்தான் ரிலீஸானது.
    இந்த ஆண்டு வந்தவற்றுள் இரண்டு வண்ணப் படங்கள். அவற்றில் கர்ணன் பம்பாய் பிலிம் சென்ட்டரிலும், புதிய பறவை சென்னை ஜெமினி ஸ்டுடியோவிலும் ப்ராசஸ் செய்யப்பட்டன. கர்ணன் மதுரையில் ஆசியாவிலேயே பெரிய அரங்கான தங்கம் தியேட்டரில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
    ஐந்துuடங்களுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தியும். ஒரு படத்துக்கு கே.வி.மகாதேவனும் ஒரு படத்துக்கு டி.ஜி.லிங்கப்பாவும் இசையமைத்திருந்தனர்.
    பி.ஆர்.பந்துலு, ஏ.பீம்சிங், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், தாதாமிராஸி, கே.சங்கர், ஏ.பி.நாகராஜன் ஆகிய ஆறு இயக்குனர்கள் இயக்கியிருந்தனர்.
    தேவிகா மூன்று படங்களிலும், சாவித்திரி மூன்று படங்களிலும், செளகார் இரண்டு படங்களிலும், சரோஜாதேவி, விஜயகுமாரி மற்றும் புஷ்பலதா தலா ஒரு படத்திலும் நடித்திருந்தனர்.
    எஸ்.எஸ்.ஆர். இரண்டு படங்களிலும் ஏவிஎம் ராஜன் இரண்டு படங்களிலும், அசோகன் மூன்று படங்களிலும். பிரேம்நஸீர் மற்றும் பாலாஜி தலா ஒரு படத்திலும் நடித்திருந்தனர்.
    நவராத்திரி நடிகர் திலகத்தின் 100-வது படமாக அமைந்ததும் அதில் ஒன்பது வெவ்வேறு ரோல்கள் ஏற்றதும் தனிச்சிறப்பு. 1964-ம் ஆண்டு நடிகர் திலகத்தின் எந்தப் படமும் வெள்ளி விழா காணவில்லை என்பது குறையே. (இந்த ஆண்டு தமிழில் வெள்ளி விழா கண்ட ஒரே படம் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை மட்டுமே)
    கர்ணன் 2012-ல் டிஜிட்டலில் வெளியாகி 150 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் வெற்றி பெற்றது. (பதிவு மற்றும் செய்தித்தாள் விளம்பர ஆவணங்கள் தொகுப்பு முகம்மது தமீம்).
    லைக் இடும் நண்பர்கள் பதிவுக்கு மட்டும் லைக் இட்டால் போதும். ஒவ்வொரு விளம்பர ஸ்டில்லுக்கும் தனியே லைக் இட அவசியமில்லை. கமெண்ட்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன.

    siva-022.jpg

    siva-023.jpg

    siva-024.jpg

    siva-025.jpg

    siva-026.jpg

    K. Sengottuvel (Face book)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •