Page 103 of 114 FirstFirst ... 35393101102103104105113 ... LastLast
Results 1,021 to 1,030 of 1131

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #1021
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    எழுபதுகளின் நடுப்பகுதியில் மறு வெளியீட்டில் சென்னை மாநகரில் பல தியேட்டர்களில் அரங்கு மாறி அரங்காக தொடர்ந்து வெளியிடப்பட்டு வெள்ளிவிழா கண்ட படம் மனிதரில் மாணிக்கத்தின் கப்பல்லோட்டிய தமிழன்.


    siva-135.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1022
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    தமிழ் திரைப்பட உலகை மறுமலர்ச்சி பாதைக்கு மாற்றிய பராசக்தி மறு வெளியீட்டில் ஏற்படுத்திய மாபெரும் சாதனை.
    ( விளம்பரத்தில் உள்ளவை)
    வரலாறு காணாத பரபரப்பு சரித்திரம் கண்டிராத கூட்டம். சென்னை சித்திரா மற்றும் தென்னாடெங்கும்.
    பராசக்தி
    .................................................. .................................................. .....................................
    தினசரி ஹவுஸ் புல் காட்சிகளாக வெற்றி நடைபோடும் பராசக்தி படம்
    ஏன் நிறுத்தப்படுகிறது?
    ஏன் நிறுத்தப்படுகிறது??
    என ஏக்கத்துடன் வினாஎழுப்பும் பல்லாயிரக்கணக்கான ரசிகப் பெருமக்கழுக்கு ஓர் அறிவிப்பு.
    சென்னை சித்திரா டாக்கீசில் திரையிடப்பட்ட நாளிலிருந்து இதுவரை நான்கு வாரங்கள் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை ஏற்கனவே செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி இன்றுடன் கடைசி செய்யப்பட்டு நாளை முதல் கெயிட்டியில் திரையிடப்படுகிறது என்பதை ரசிகர்களுக்கு மகிழ்ச'சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
    .................................................. .................................................. .....................................
    நடிகர் திலகத்தின் 125 வது படம் வெளிவரும் இந்த சமயத்தில் அவரது முதல் படமான பராசக்தி இரண்டாவது வெள்ளிவிழாவை நோக்கி வீர நடை போடுகிறது.
    1952 ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடிய பராசக்தி மீண்டும் 16 வருடங்களுக்குப் பிறகு கடந்த நான்கு மாதங்களாக சென்னை தமிழ் நாடு மற்றும் மைசூர்மாநிலங்களிலெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தி தமிழக தலைநகரில் 110 வது நாளாக வெற்றி முரசு கொட்டுகிறது.

    siva-122.jpg

    siva-124.jpg

    siva-123.jpg
    Last edited by sivaa; 29th November 2022 at 06:13 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1023
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    Hero 72
    நடிகர் திலகத்தின் வெற்றித்திரைப்படங்களின்
    50 ஆம் ஆண்டு பொன் விழா சென்னையில் டிசம்பர் 11 .2022 அன்று

    .siva-187.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1024
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நவராத்திரி படத்தின் போஸ்டர்
    நவராத்திரி படத்தின் பத்திரிக்கை விளம்பரம்
    நவராத்திரி படத்தின் DVD கவர் விளம்பரம்
    இவை எதிலும் நவராத்திரி நடிகர் திலகத்தின்
    100 வது படம் என்ற விளம்பரம் இல்லை
    நடிகர் திலகம் நினைத்து இருந்தால் இந்த படங்களுக்கு 50 நாட்களுக்கு முன்பாக வெளிவந்த (செப்டம்பர் 12/1964)தனது சொந்த படமான புதிய பறவையை நிறுத்தி வைத்து 100 வது படமாக அறிவித்து இருக்கலாமே....
    செய்யவில்லையே......
    100 வது பட விஷயத்தில் நடிகர் திலகத்தை குறை கூறுபவர்களுக்காக இந்த விவரங்கள்......
    சிறிது மனக் கலக்கத்தில் இருந்த பந்துலு அவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டு போய் விட்டார்கள்..........
    வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக இரண்டு வைர மோதிரங்களை பந்துலு அவர்கள் வாங்கினார்கள் ஒன்றில் P என்ற எழுத்தையும் ஒன்றில் G என்ற எழுத்தையும் பொறித்து தனது பெயர் மோதிரத்தை நடிகர் திலகத்தின் விரலில் அணிவித்தார்.........
    நடிகர் திலகத்தின் பெயர் மோதிரத்தை
    நடிகர் திலகம் அணிவிக்க தன் விரலில் மாட்டிக் கொண்டார் பந்துலு......
    இப்படிப்பட்ட பந்துலு மனம் மாறியது நடிகர் திலகத்திற்கு பெரும் வருத்தமாக இருந்தாலும் தன் வாழ் நாளில் எங்குமே பந்துலு வை பற்றி தவறாக பேசவில்லை...
    .பந்துலு பேசியதாக வந்த செய்திகளும் உண்மை இல்லை.....
    அது பரப்பப்பட்ட வதந்தி.......
    பந்துலுவின் உடலை விட்டு உயிர் பிரியும் வரை நடிகர் திலகத்தின் இன்சியல் பொறிக்கபட்ட மோதிரம் அவரது விரலிலேயே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது......
    பந்துலுவுக்கு பிறகு அவருடைய குடும்பத்திற்கு மறைமுகமாக செய்த உதவிகள் ஏராளம்....ஏராளம்...
    பந்துலு மறையும் போது அவரது மகளுக்கு 17 வயதுதான்....அவர் படித்து முடித்து ஒளிப்பதிவாளராக நடிகர் திலகத்தின் சொந்தபடமான அறுவடைநாளில்
    அவர் தான் ஒளிப்பதிவாளர்......
    .அப் படத்தில் பணிபுரியும் போது
    அவருடைய வயது 30 தான்.......
    இதற்கு முன்பு பாக்கியராஜின் சின்ன வீடு படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்....
    இவையெல்லாம் நடிகர் திலகத்தின் நற்பண்புகளுக்கு சிறு உதாரணங்கள்யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர்......
    ஏமாந்தவரே தவிர ஏமாற்றியவர் இல்லை.........
    siva-200.jpg

    siva-201.jpg

    siva-202.jpg

    Thanks Nadigarthilagam fans
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1025
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    அன்பு அண்ணன் #முனைவர்மருதுமோகன் அவர்கள் நமது ஐயன் நடிகர்திலகம் அவர்களைப்பற்றி ஆராய்ந்து எழுதிய #சிவாஜிகணேசன் என்ற சரித்திரச்சாதனை நூல் வெளியீட்டு விழா 18.12.2022 அன்று சென்னையில் நடைபெற உள்ளது... இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற்று மகத்தான வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்..
    siva-203.jpg

    Thanks kannappan Vellayankiri
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1026
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    சொல்லாமல் மறைத்தார் Sivaji! | Sivaji Ganesan 92nd Birthday Specia



    Thanks Ungal Rasikan You Tube
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1027
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    கோலிவுட் சினிமா வரலாற்றில் சுமார் 40 வருடங்களில் 310 கோடிக்கும் மேலான தான தர்மங்களை செய்த ஒரே நடிகர் இவர்தான் என்று தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கும் தகவல் ஒன்று ரசிகர்களின் மத்தியில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது...
    யார் அவர்...???
    வாருங்கள்... விரிவாக பார்க்கலாம்...
    கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் 310 கோடிக்கும் மேலான தான தர்மம் செய்த ஒரே நடிகர் நமது உத்தம தலைவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே...
    தமிழகத்தில் பல கோயில்களுக்கு யானைகளையே தானமாக வழங்கிய வள்ளல்...
    சுமார் 40 ஆண்டுகளாக மன்னன் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகவே வாழ்ந்த ஒரே தமிழ் நடிகரான நமது இதய தெய்வத்தை இன்றைய இளைய தலைமுறையினர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்...
    ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் அதன் பிறகு 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிப்புச் சக்கரவர்த்திதான் சிவாஜி கணேசன் அவர்கள்...
    இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மட்டுமின்றி தமிழில் மட்டும் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது...
    இப்போது வரை இளம் நடிகர்களின் இன்ஸ்பிரேஷனாக இருந்து வரும் சிவாஜி, நிஜ வாழ்க்கையில் மன்னன் என்ற வார்த்தைக்கு ஒரு உதாரணமாகவே வாழ்ந்திருக்கிறார்....
    இவர் 1953 முதல் 1993 வரை செய்திருக்கும் தான தர்மத்தினை K.V.S.மருது மோகன் என்ற சினிமா பிரபலம் ஒருவர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து அம்பலப்படுத்தி இருக்கிறார். தற்போது இத்தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுவது மட்டுமின்றி சிவாஜியின் இமேஜை வேற லெவலுக்கு எடுத்து சென்று இருக்கிறது...
    அத்துடன், சினிமாவிற்குள் என்ட்ரி ஆன அடுத்த வருடத்தில் தொடங்கி, சுமார் 40 வருடங்களில் சிவாஜி அவர்கள் செய்த தான தர்மங்கள் மட்டும் சுமார் 310 கோடியாம்...
    இலங்கையில் ஒரு மருத்துவமனையையே கட்டி கொடுத்து இருக்கிறார். அத்துடன் பெருந்தலைவர் காமராஜர் துவக்கி வைத்த ஊட்டச்சத்து சத்துணவு திட்டங்கள் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் அறிமுகம் செய்த பல நல்ல திட்டங்களுக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுத்த முதல் நடிகர் சிவாஜி தான் என்பது இன்று பலரும் அறிந்திராத சத்தியமான உண்மை...
    அதேபோல், இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்ற போதும் கூட அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை சந்தித்த சிவாஜி அவர்கள் தன்னிடம் இருந்த 100 பவுன் எடையுள்ள தங்கப்பேனாவை நன்கொடையாக கொடுத்ததோடு மட்டுமின்றி அவருடைய மனைவி கமலா அம்மையார் அணிந்து சென்றிருந்த 400 பவுன் நகைகளையும் கழட்டிக் கொடுக்குமாறு கூறியிருக்கிறார் என்றால் அவருடைய கொடைத் தன்மையையும் நாட்டுப் பற்றையும் என்னவென்று சொல்வது...???
    அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்கு யானைக்குட்டி ஒனறினை பரிசாக அளித்திருக்கிறார். மேலும், தமிழகத்தில் புகழ் வாய்ந்த பல கோயில்களுக்கு குறிப்பாக திருவானைக்காவல் மற்றும் தஞ்சாவூர் புண்ணைநல்லூர் மாரியம்மன் போன்ற புகழ்பெற்ற ஆலயங்களுக்கு யானைகளையே தானமாக வழங்கி இருக்கிறார்...
    அச்சமயத்தில், யானைப்பாகன் ஒருவர் சிவாஜியிடம் வந்து யானையும் தானும் சரியாக சாப்பிட முடியவில்லை என்று உதவி கேட்ட போது இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அதை பட்டா போட்டு அந்த பாகனிடம் கொடுத்து அதில் விவசாயம் செய்து நீயும் நல்லா சாப்பிடு அத்துடன் யானையையும் பட்டினி போட்டு விடாதே என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்...
    தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரின் எண்ணற்ற முழுவுருவச் சிலைகளை தனது சொந்த செலவில் திறந்து வைத்திருக்கிறார்...
    கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை வாங்கி அவருக்கு சிலை நிறுவி நீண்ட காலம் பராமரித்து வந்ததுடன் பின்னாளில் அந்த இடத்தை தமிழக அரசிடமே சந்தோஷமாக ஒப்படைத்தார்...
    சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவரின் சிலையை தனது சொந்த செலவில் நிறுவியதோடு மட்டுமின்றி அச்சிலைக்கு தானே முழு வடிவமும் தந்து இன்றும் வள்ளுவர் வடிவில் மெரினாவில் நின்று கொண்டிருக்கிறார்...
    குழந்தைகளின் கல்விக்காகவும் அரசு பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்காகவும் பலமுறை நன்கொடை அளித்திருக்கிறார்...
    சினிமாவில் நலிவடைந்து போன கலைஞர்கள் பலருக்கு கணக்கில் அடங்காத பல உதவிகளை செய்து அவர்களின் மனங்களில் இன்றளவும் தெய்வமாக வாழ்ந்து வருகிறார்...
    இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்...
    செல்வம் படத்தில் வருகின்ற ''ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல'' என்ற பாடலின் அற்புதமான வரிகளைப் போலவே...
    நமது கலியுக கர்ணன் சிவாஜி அவர்கள் செய்த தான தர்மங்களை சொல்ல ஆரம்பித்தால் இந்த ஒரு நாளும் இந்த ஒரு பதிவும் நிச்சயமாக போதவே போதாது...
    ஆகவே, இந்த புத்தாண்டு முதல் நமது இதய தெய்வம் செய்த கொடைத்தன்மைகளை தனிப்பதிவாக ஆதாரமான புகைப்படங்களுடன் முகநூலில் ஒவ்வொரு நாளில் பதிவு செய்யலாம் என்று முடிவெடுத்து அதற்கு முன்னோட்டமாகவே வரலாற்று சிறப்பு வாய்ந்த இப்பதிவினை வழங்கி இருக்கிறேன்...
    இனி வரும் காலங்களில் நடிகர் திலகத்தின் கொடைத்தன்மை என்ற தலைப்பில் இது போன்ற பதிவுகள் மென்மேலும் தொடரும்...
    அவ்வாறு எண்ணிலடங்கா தான தர்மங்களை செய்த சிவாஜி அவர்கள் தன் வாழ்நாளில் ஒரு போதும் இதைப்பற்றியெல்லாம் எப்போதும் வெளிப்படுத்தியது கிடையாது...
    ஏனெனில், தான தர்மம் செய்வதென்பது ஒரு மனிதனின் தவம் என்பதை ஆணித்தரமாக நம்பியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் அது மிகையாகாது...
    வாழ்க பெருந்தலைவர் காமராஜரின் புகழ்...
    வாழ்க உத்தமத் தலைவர் சிவாஜியின் புகழ்...


    Thanks M V Ramkumar (face book)

    siva-232.jpg

    பின்நூட்டம்

    ஆனால், அவருக்கு அதை விளம்பரம் செய்யத் தெரியாது, செய்ததுமில்லை. அவருடன் இருந்தவர்களாவது செய்திருக்கலாம், அவர்களுக்கும் தெரியவில்லை.
    ஆனால் இன்னொரு தரப்பில் அந்த நடிகரும், அவருடைய ஜால்ராக்களும், அவர் அப்போது இருந்த கட்சியும் அந்த டெக்னிக்கை நன்றாகச் செய்து பத்திரிகைகளில் செய்திகள் வரச் செய்ததுடன், அவரது படத்தில் வரும் காமெடி நடிகர்களை வைத்து அவருடைய கொடைத்தன்மையை ஸீன் பை ஸீன் புகழச் செய்து, மேலும் அவர் படத்துக்கு பாட்டெழுதும் கவிஞர்களை வைத்து வள்ளலே, வள்ளலே என்று வருகிற மாதிரி பாடல்கள் புனைய வைத்து 'கொடை வள்ளல்' பட்டம் கொடுத்து அவரைப் பிரபலமாக்கி, அதே சமயத்தில் நடிகர் திலகத்தை கஞ்சர் என்று முத்திரையும் குத்தினார்கள்.
    ஆனால் இப்போது அறிவார்ந்தோர் பலர் ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததால் நடிகர்திலகம் பற்றிய உண்மைகளை காலங்கடந்தாவது மக்கள் தெரிந்து கொண்டார்களே என்று ஒரு சிறு நிம்மதி கிட்டியது.

    m n sakthivel
    Last edited by sivaa; 28th December 2022 at 07:27 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1028
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    முனைவர் மருது மோகன் அவர்கள் சென்னை பல்கலைக் கழகத்தில் சிவாஜி கணேசன் பற்றிய ஆய்வு நூலை சமர்ப்பித்து, 2017ல்
    அவருடைய ஆய்வறிக்கையை ஏற்றுக் கொண்டு சென்னை பல்கலைக் கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்குகிறது......
    பல்கலைக்கழகம் ஒரு ஆய்வறிக்கையை ஏற்றுக் கொள்வது என்பது மிகச் சாதாரணமான விஷயம் அல்ல....
    அதற்கு முன்பு அந்த ஆய்வறிக்கை தகவல்கள், அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தையும், அதன் உண்மைத் தன்மையை தெரிந்து கொண்ட பிறகு தான் அந்த ஆய்வறிக்கையை ஏற்றுக் கொள்வார்கள்......
    சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக மருது மோகன் அவர்கள் நடிகர் திலகத்தை பற்றிய தகவல்கள், அவர் பிறந்த இடம், நாடகங்களில் நடித்த காலங்கள், திரையுலக படங்கள், அவருடைய தனிப்பட்ட குணங்கள், அவரோடு பழகிய ஆயிரக்கணக்கானரோரை சந்தித்து, அவரால் அளிக்கப்பட்ட நன்கொடைகள் மற்றும் அவரால் பயன்பெற்றவர்களை சந்தித்து, அவர் திரட்டிய தகவல்களை ஆய்வறிக்கையாக சமர்பித்து முனைவர் பட்டம் பெற்றார்......
    கடந்த ஐந்தாண்டுகளாக அந்த ஆய்வறிக்கையை நூலாக வெளியிடுவதற்கு முயற்சி செய்து, பொருளாதாரம், உடல் நலக் குறைவு போன்றவைகளை எதிர்த்து சென்ற வாரம் அந்த ஆய்வறிக்கை நூலாக வெளி வந்தது.....
    அது கதைப் புத்தகம் அல்ல.கற்பனைகளை கலந்து கதை சொல்ல....
    இது பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கபட்ட ஆய்வறிக்கை என்பதை நினைவில் கொள்க
    இந்த நூலை வாங்கிய நடிகர் திலகத்தின் ரசிகர்கள், பல மூத்த ரசிகர்கள் கூட தாங்கள் அறியாத பல அரிய தகவல்கள் நூலில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுகிறார்கள்.
    நடிகர் திலகத்தின் கொடைத் தன்மை, அவர் வாரி வழங்கிய கொடைகளை பற்றி படித்து அறிந்து தாங்கள் சார்ந்திருக்கும் முகநூல் குழுக்களில் பதிவிடுகிறார்கள்......
    அதனை பொறுக்க முடியாத சிலர் தேவையற்ற பின்னூட்டங்களை இட்டு பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்.
    அவர்களுக்கு உண்மையை ஜீரணிக்க முடியவில்லை.......
    ஆய்வறிக்கைக்கும் கதை புத்தகத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.........
    இன்றைய அரசியல் சட்டத்தின் படி தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது..
    வீணான வாதங்கள் செய்வதை விட சம்பந்தபட்ட விஷயங்களை பற்றி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அறிந்து தெளிவடையுங்கள்..........
    உங்கள் கூற்றுப்படி அரசியலில் ராசி இல்லாதவர், அரசியலுக்கு லாயக்கில்லாதவர். எந்த ஒரு அரசியல் செல்வாக்கும் இல்லாதவர்...
    அவர் மறைந்து 21 ஆண்டுகளுக்கு பிறகும் நாங்கள் அவரை போற்றுகிறோம்...........
    வணங்குகிறோம் என்றால் அதற்கு காரணம்
    அவருடைய நடிப்பு மட்டுமல்ல.....
    நற்குணங்களும் தான்.........
    அவரை பற்றிய தகவல்கள் உங்களை எரிச்சலைடைய செய்தால் விலகிச் செல்லுங்கள்...
    வீண் விவாதம் செய்யாதீர்கள்.........������������
    இதே ஆய்வறிக்கையை முனைவர் மருது மோகன் அவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்க இருக்கிறார்..........
    அப்போது நடிகர் திலகத்தின் புகழ் வெளிநாடுகளில் பரவும்.....
    ( இன்றைய தலைமுறையினர்)வெளிநாட்டு மக்களும் நடிகர் திலகத்தை பற்றி அறிந்து கொள்வார்கள்......
    அந்த நாள் விரைவில் வரும்.......

    siva-233.jpg

    thanks G.Laksman (நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1029
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
    நடிகர் திலகம் அள்ளித் தந்த கொடைகளை பற்றி தினம் ஒரு தகவலில் இன்று........
    நடிகர் திலகம் தனக்கு கிடைக்காத கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர்........
    அதன் விளைவாகவே அன்னை இல்லத்தின் முகப்பில் ஒரு சிறுவன் அமர்ந்து புத்தகம் படிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்....
    இதே போல் சூரக் கோட்டை பண்ணை வீட்டின் நுழைவு வாயிலிலும் அமைக்கப்பட்டிருக்கும்...
    நினைத்ததை நிறைவேற்றும் வகையில் தனது உடன் பிறந்த தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்......
    குடும்ப உறவுகள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்தார்.......
    கல்விக்கென நிதி கேட்டு யார் வந்தாலும் வாரி வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்....
    வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றி அதில் வந்த வருமானம் ₹ 32 லட்சரூபாயை பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு கொடையாக அளித்தார்....
    அதில் ஒன்று தான் போடி தொழிற்பயிற்சி கல்லூரி......
    கல்லூரி தொடங்க ₹ 2 லட்சத்தை அன்றைய அரசிடம் அளித்தார்.......
    இன்றும் ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிவாஜி--பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் மூலமாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது......
    விளம்பரமில்லாமல்....
    அன்றைய 24 கேரட் தங்கம் 1 கிராம்
    விலை # 9.30 பைசா.....
    இன்றைய 24 கேரட் தங்கத்தின் 1 கிராம்
    விலை ₹ 5471/--
    இன்று இரண்டு லட்சத்திற்கான மதிப்பை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.......
    கர்ணன் என்றும் கர்ணன்தான்.......��
    இன்றைய மதிப்பு ₹ 11,76,55,914/--
    பதினோரு கோடியே எழுபத்தியாறு லட்சத்து
    ஐம்பத்தைந்தாயிரத்து தொள்ளாயிரத்து பதினாங்கு ரூபாய் ....


    siva-235.jpg

    thanks G.Laksman (நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1030
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ��
    நடிகர் திலகம் வழங்கிய கொடைகளை பற்றி தினம் ஒரு தகவல்*....
    வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில்
    தனது ஒரு மாத சம்பள பணத்தை
    வழங்கிய நடிகர் திலகம்........
    நடிகர் திலகம் தனது முதல் படமான பராசக்தி படத்தில் 1952ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டிருந்த போது, அருகில் உள்ள டென்னிஸ் கோர்ட்டுக்கு வேடிக்கை பார்க்க சகஸ்ரநாமம் அவர்களோடு செல்வார்......
    அங்கு பிரபல டென்னிஸ் வீரர் ராமனாதன் அவர்கள் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருப்பார்......
    ஒரு நாள் விளையாடி முடித்த பிறகு தன் நண்பர்களிடம் ராமனாதன் அவர்கள் தன்னுடைய மகனை (ரமேஷ்) டென்னிஸ் பயிற்சிக்காகவும், டென்னிஸ் தொடர்களில் விளையாடுவதற்காகவும் வெளிநாட்டுக்கு அனுப்ப இருப்பதாகவும் அதற்கு அனைவரும் பண உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.......
    அருகில் இருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் திலகம் தனது சட்டை பையில் இருந்த ₹ 250/- ஐ எடுத்து ராமனாதன் கைகளில் தருகிறார்.........
    ராமனாதனும் அவருடைய நண்பர்களும் திகைக்க, சகஸ்ரநாமம் அவர்கள் நடிகர் திலகத்தை அறிமுகம் செய்ய ராமனாதன் அவர்கள் நடிகர் திலகத்தை கட்டிப் பிடித்து நன்றி சொல்கிறார்...
    அவருடைய நண்பர்களும் நடிகர் திலகத்தை பாராட்டுகின்றனர்.... ...
    ராமனாதன் அவர்களிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தவுடன், சகஸ்ரநாமம் , கணேஷ் நேற்று தான் சம்பளம் வாங்கினாய்..... அதனைத் அப்படியே கொடுத்து விட்டாயே....
    மாதம் முழுவதும் செலவுக்கு என்ன போகிறாய் என கேட்கிறார்.....
    அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்
    என்ற நடிகர் திலகம்....
    அடுத்த சில வருடங்களில் டென்னிஸ் உலகில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்ட போகும் வீரனுக்கு என்னால் முடிந்த சிறு உதவி என்று சொல்லி விட்டு நகர்கிறார்........
    பராசக்தி படத்தில் நடிக்க நடிகர் திலகம் வாங்கிய மாத சம்பளம் ₹ 250/- மட்டும்
    அந்த ஒரு மாத சம்பளத்தைத்தான் ராமனாதன் அவர்கள் வசம் கொடுத்தார்........
    1952ல் ₹250/- ன் இன்றைய மதிப்பு......
    24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை
    1952ல் ₹ 7.60 பைசா......
    2022ல் ₹ 5471/---
    இன்றைய மதிப்பு ₹ 1,80000/--
    நாடக மேடைகளிலும், திரைப்படங்களிலும்
    நன்றாக வேஷம் போட்டு நடித்த நடிகர் திலகம்
    ஒரு நாளும் வாழ்க்கையில் வேஷம் போடாதவர்.......
    வைரத்தை எத்தனை ஆண்டுகள் மண்ணுக்குள் புதைத்து வைத்தாலும்
    வைரம் வைரம் தான்....
    நாளாக நாளாக வைரத்தின் மதிப்பு கூடுமே தவிர என்றும் குறையாது...

    siva-242.jpg


    Thanks G Laksmanan (Muktha films 60)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •