-
22nd May 2023, 08:36 AM
#1061
Senior Member
Devoted Hubber
நேற்று தூத்துக்குடி சத்தியா திரையரங்கில் தலைவர் சிவாஜியின் சவாலே சமாளி திரைப்படத்தின் ரசிகர்கள் கொண்டாட்டம் கற்பூரமேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன இடைவேளையில் நான்கு நிகழும் சிவாஜி கணேசன் பாடல் ஒளிபரப்பப்பட்டது அதில் பட்டிக்காடா பட்டணமா அம்பிகையே ஈஸ்வரி புதிய பறவை ஊட்டி வரை உறவு பாடல்கள் வசந்த மாளிகை
siva-135.jpg
Thanks Kuddam Sivaji Muththukumar
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd May 2023 08:36 AM
# ADS
Circuit advertisement
-
24th May 2023, 11:54 PM
#1062
Senior Member
Devoted Hubber
திரு திருநாவக்கரசு வினாயகமூர்த்தி அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் ஓடிய சில படங்கள் பற்றிய விபரங்கள் கேட்டிருந்தார். சில காரணங்களால் அந்த நேரத்தில் விபரமாக எழுத முடியவில்லை.அவர் கேட்ட விபரங்கள் உட்பட மேலும் பல தகவல்கள் இங்கே. மாற்றுக் குழு நண்பர்கள் தங்களால் முன்னர் சொல்லப்பட்ட பொய்களை உண்மையாக்க பல வழிகளிலும் மண்டையை உடைத்துக்கொண்டு ஊன் உறக்கமின்றி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த வழியில் செயல்பட்டாலும் உண்மை என்பது அவர்களுக்குத் தெரியும், சிவாஜி ரசிகர்களுக்கும் தெரியும், புரியும். ஆனால் எம் ஜீ ஆர் ரசிகர்கள் புரிந்து கொள்ள மறந்தது பொது ரசிகர்களை, நேர்மையாளர்களை, உண்மையை தேடுபவர்களை. எங்களால் கொடுக்கப்படும் ஆதாரங்களை கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்து தொடர்ந்து சொன்ன பொய்களையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் எம் ஜீ ஆர் ரசிகர்கள். நாங்கள் கொடுக்கும் ஆதாரங்களை பார்த்த பின்னரும் சொன்ன பொய்யையே மறுபடியும் அவர்கள் சொல்லும் பொழுது பொது ரசிகர்கள், நேர்மையாளர்கள் என்ன நினைப்பர்கள்? எம் ஜி ஆர் ரசிகர்கள் சொல்வது அனைத்தும் பொய் என்ற சிந்தனை அவர்கள் மனதில் தோன்றும் அல்லவா?முகநுல் நண்பர் வினோ, நண்பர் ஜீவா நந்தன் போன்ற பொது ரசிகர்கள் மற்றும் ஏனைய நேர்மையாளர்கள் அவர்களை எந்தக்கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்.கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளைப் போன்றவர்கள் எம் ஜீ ஆர் ரசிகர்கள். அக்கம் பக்கம் என்னநடக்கிறது என்பது தெரியாது. விடயத்திற்கு வருவோம் எம் ஜீ ஆர் படங்கள் பற்றி ஆரம்பத்தில் யார் தவறான தகவல்களை பரப்பினார்கள் என தெரியவில்லை ஆனால் அடுத்து மிகப்பொயளவில் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருந்தவர் உரிமைக்குரல் ஆசிரியர் காலம் சென்ற ராயு அவர்கள். தற்பொழுது எம் ஜி ஆர் கலைக் குழு என்ற பெயரில் சங்கர் என்பவர் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கிறார். தவறான தகவல்கள் தெரிந்து செய்யப்பட்டதா? அல்லது தெரியாமல் தவறு நடந்ததா என்பது தெரியவில்லை.தெரியாமல் தவறு நடந்திருந்தால், அது தவறு என தெரிந்த பின்னரும் தொடர்து அதை எழுதிக்கொண்டிருந்தால் தெரிந்தே அந்தப்பொய்யை எழுதுகிறார்கள் என்பது நிஜமாகிறது. இது அனைவருக்கும் பொருந்தும். 14.01 1969 ஆண்டு ஒளி விளக்கு இலங்கையில் திரையிடப்பட்டது. 22.06 1969 வரை ஓடிய நாட்கள் 160 .ஆனால் எம் ஜீ ஆர் ரசிகர்கள் ஆதாரம் எதுவும் இல்லாமல் ஒளி விளக்கு இலங்கையில் வெள்ளி விழா ஓடியதாக கதை அளக்கிறார்கள்.160 நாட்கள் ஓட்டுவதற்கு மிகவும் கஷ்ட்டப்பட்டார்கள்.பல இரவுக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பல காட்சிகள் நஷ்ட்டத்தில் ஓட்டினார்கள். காரணம்? யாழ் ராஜா தியேட்டர் மற்றும் பல தியேட்டர்களுக்கு சொந்தக்காரரும், S T R films நிர்வாகியுமான காலம் சென்ற எஸ் ரீ தியாகராஜா அவர்கள் மிகவும் தீவிர எம் ஜீ ஆர் ரசிகர். ஆர் எம் வீ அவர்கள் மூலம் காவல்காரன் திரைப்பட விநியோக உரிமையைப் பெற்றுக் கொண்டார் 100 நாட்கள் நிச்சயம் என்ற உறுதி மொழியோடு. அதன்படியே இலங்கையில் காவல்காரன் 2 தியேட்டர்களில் எம் ஜீ ஆர் ரசிகர்களது பாணியில் வடகயிறு ஸரெச்சர் எல்லாம பாவித்து 100 நாட்கள் ஓட்டினார்கள். காவல்காரன் ஓட்டப்பட்டது என்பதை சுலபமாக புரிந்து கொள்ள 113 நாட்கள் ஓட்டப்பட்ட காவல்காரன் யாழ் ராஜாவில் பெற்ற வசூல் சுமார் 167 000.00 .ஒரு வருட வித்தியாசத்தில் திரையிப்பட்ட அவர்களது குடியிருந்த கோயில் யாழ் வின்சர் 50 நாட்கள் + றீகல் 06 நாட்கள் பெற்ற வசூல் சுமார் 157 000.00 . காவல்காரன் 50 நாட்கள் அதிகம் ஓட்டப்பட்டு பெற்ற வசூல் 10 000.00 மடடுமே. காவல்காரன் படத்தை 100 நாட்கள் ஓட்டியதற்காக யாழ் எம ஜீ ஆர் ரசிகர்கள் அமரர் எஸ் ரீ தியாகராஜா அவர்களை யாழ் ராஜா அரங்கிலிருந்து ஊர்வலமாக அழைத்துச்சென்று யரழ் மத்தியில் தமிழ் அரசியல்வாதியான அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் பாராட்டுவிழா நடாத்தி கௌரவித்ததார்கள்.காவல்காரன் மக்கள் ஆதரவுடன் ஓடவில்லை ஓட்டப்படதென்பதற்கு இதைவிட ஆதாரம் வேறு தேவையில்லை. காவல்காரன் 100 நாட்கள் ஓடடப்பட்டதால் போனஸ்சாக ஒளிவிளக்கு விநியோக உரிமையும் எஸ் ரீ ஆர் அவர்களுக்கு கிடைத்தது. காவல்காரன் 100 நாட்கள் ஓட்டப்பட்டதால் ஒளிவிளக்கு வெள்ளிவிழா கண்டால் அடிமைப் பெண் விநியோகம் எஸ் ரீ ஆர்க்கே என ஆசை தூண்டப்பட்டது.அடிமைப்பெண் கிடைக்குமென்ற கனவில் நஷ்ட்டம் பாராமல் கஷ்ட்டம் பாராமல் 100 நாட்களே ஓட முடியாத படத்தை இழு இழு வென ஜவ்வு மிட்டய போல இழுத்தார்கள். அடிமைப் பெண் தங்களுக்கென நினைத்து தியேட்டர் சுவரிலும் தங்களது அடுத்த வெளியீடு அடிமைப் பெண் என விளம்பரம் கீறியிருந்தார்கள். சில வாரங்களின் பின்னர் யாழ் ராணி அரங்கில் வருகிறாள் அடிமைப் பெண் விளம்பரம் மின்னியது. ஆடிப் போனார் எஸ் ரீ ஆர் தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டார். இப்படி ஏமாற்றி விட்டர்களே என்ற மனக்கஷ்ட்டம் இருந்தாலம் ஆட்கள் வராமல் நஷ்ட்டத்தில் தொடர்ந்து படத்தை இழுக்கத்தேவையில்லை என சிறு மன நிம்மதியுடன் 160 நாட்களுடன் நிறுத்திவிட்டார். ஒளி விளக்கு 160 நாட்கள் ஓட்டிப் பெற்ற வசூல் சுமார் 2 03 000.00 மட்டுமே. அதே வருடம் கடைசியில் யாழ் ராணி மற்றும் மனோகரா அரங்குகளில் திரையிடப்பட்ட அடிமை பெண் பெற்ற வசூல் ராணி 77+மனோகரா 14 மொத்தம் 91 நாட்களில் பெற்ற வசூல் சுமார் 2 50 000.00.ஒளி விளக்கு 160 நாட்களில் 2 லட்சம் அடிமை பெண் 91 நாட்களில் 2 1/2 லட்சம். நேர்மையாளர்கள் சிந்திக்கட்டும். மற்றும் 2ஆம் வெளியீடு 3ஆம் வெளியீடு....(4ஆம் வெளியீடு)...... 5ஆம் வெளியீட்டிலெல்லாம் ஒளிவிளக்கு 100 நாட்கள் ஓடியதாக கதை பரப்புகிறார்கள் 4ஆம வெளியீட்டில் மட்டும் யாழ் ராஜாவில் 100 நாட்கள் ஓட்டினார்கள். இது பற்றி விவாதம் வந்த வேளை தமிழ் இமேஜ் இணையத்தில் எம் ஜீ ஆர் ரசிக நண்பர் சச்சி முருகேசு அவர்கள் விளக்கம் கொடுத்திருந்தார்.4ஆம் வெளியீட்டில் மட்டும் யாழ் ராஜாவில் 100 நாட்கள் ஓடியதென்றும் ஏனைய வெளியீடுகளில் 100 நாட்கள் ஓடவில்லையென்றும் அழுத்தம் திருத்தமாக எழுதியிருந்தார்.அந்த விவாதத்தில் பங்கெடுத்ததுக் கொண்ட எம் ஜீ ஆர் ரசிகர்கள் எல்லாம் அதன் பின்னர் எழுதும் பொழுது 5 வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடியது என்றே எழுதுகிறார்கள். நண்பர் சச்சி அன்று எழுதியதை பார்த்தவர்கள் அதனை மறந்துவிடுவார்கள் என்ற எண்ணமா?
. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அதனை உண்மையாக்கிவிடலாம் என்ற எண்ணமா அல்லது அவர்களது அறியாமையா என்பது தெரியவில்லை .தொழில் நுட்ப வளர்ச்சி கண்ட இந்நாட்களில் அனைவரது கை விரல் நுனியிலும் நொடிப்பொழுதில் எந்த விபரத்தையும் தெரிந்துகொள்ளும் கருவி உள்ள இந்தக்காலத்தில் தெரிந்துகொண்டே பொய்யை கூறி எவ்வளவு காலம்தான் மக்களை ஏமாற்ற முடியுமென இவர்கள் நினைக்கின்றார்கள். ஒளி விளக்கு முதல் வெளியிட்டில் 100 நாட்கள். பின்னர் 4வது வெளியீட்டில் யாழ் ராஜாவில் 100 நாட்கள் காட்டப்பட்டது என்பது மட்டுமே உண்மை. .வேறு எந்த வெளியீட்டிலும் எங்கும் 100 நாட்கள் இல்லை. யாழ் ராஜாவில் ஒளிவிளக்கு 100 நாள் வசூல் 3 52 648.00 அதே ராஜாவில் கர்ணன் 53 நாள் வசூல் ........3 16 560.25. 47 நாட்கள் அதிகம் ஓட்டப்பெற்ற ஒளி விளக்கு கர்ணனை விட அதிகம் பெற்ற வசூல் 36 ஆயிரம் மட்டுமே. கர்ணனை தொடர்ந்து ஓட விட்டிருந்தால் 100 நாட்கள்வரை ஓட்டப்பட்ட ஒளிவிளக்கின் வசூல் அம்பேல். இங்கே ஆதாரங்களை பார்த்தபின்னரும் எம் ஜீ ஆர் ரசிகர்கள் உண்மையை உணர்ந்து திருந்தமாட்டார்கள். ஆனால் பொது ரசிகர்கள் நேர்மையாளர்கள் அவர்களின் கயமையை தெரிந்து கொள்வார்கள் புரிந்து கொள்வார்கள்.
இலங்கையில் எம்ஜீ ஆர்க்கு வெள்ளிவிழா கண்டு 200 நாட்கள் ஓட்டிய ஒரே படம் உ சு வாலிபன் மட்டுமே.வாத்தி ரசிகர்கள் எழுதுவதுபோல் என் தங்கையோ ஒளிவிளக்கோ இதயக்கனியோ வெள்ளி விழா கிடையாது.உ சு வாலிபன் கொழும்பில் 150 நாட்களுக்குள்ளேயே அடங்கிப் போன படம் .200 நாட்கள் எப்படி? தலைநகர் கொழுப்பில் முதல் வெளியீட்டில் உ சு வாலிபன் ஒரு தியேட்டரில் ஏன் வெளியிடப்பட்டது?இலங்கையில் நாடோடி மன்னன் முதல் வெளியீட்டில் 16 பிரதிகள் எப்படி? ஏன்?விபரங்கள் அடுத்த பதிவில்......
other-029.jpg
other-030.jpg
vsr-026.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
7th June 2023, 06:44 AM
#1063
Senior Member
Devoted Hubber
ராஜா-(digitally re-released on June 9 ,2023)
எழுதியவர் கோபால்
சிவாஜியே இப்படத்தில் சொல்வது போல ராஜான்னா ராஜாதான். நம் ரசிகர்கள் மற்றுமல்ல, பொதுமக்கள்,மாற்று அணியினர் எல்லோரும் ஈர்த்து லயித்து ,ரசித்த படம். இது ஒரு jamesbond action movie genre என்றாலும் ,நேரடியாக ரெயின் கோட் போட்டு கொண்டு, கருப்பு கண்ணாடி மாட்டி கொண்டு, துப்பாக்கி தூக்கி ,வில்லன்களுடன் நேரடியாய் மோதி,ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சல்லாபிக்கும் வழக்கமான jamesbond அல்ல. The departed என்ற ஆஸ்கார் பரிசு பெற்ற படத்தில் , வில்லன்களின் பாசறையில் போலிஸ் ஆள் ஒருவரும், போலிஸ் பாசறையில் வில்லன் ஆள் ஒருவரும் ஊடுருவி ஒருவர் யார் என்று மற்றவருக்கு தெரியாமல் , திரைக்கதை ஜாலம் புரிந்து எனது favourite இயக்குனர் Scorcese அதகளம் புரிவார் எனது அபிமான நடிகர்கள் matts Damon ,Decaprio போன்றோரை வைத்து.
வில்லன் பாசறையில் ஊடுருவி(Mole), அங்கு எல்லோர் அபிமானத்தையும் பெற்று முன்னேறி ,கடைசியில் போலிஸ் கஸ்டடி யில் இருந்து வெளியேறும் வில்லன் ஆள் ஒருவன் இந்த உண்மை தெரிந்து ,பிறகு உச்ச காட்சியில் ஒருவரை ஒருவர் போட்டு கொடுத்து விஞ்ச பார்க்கும் ,மிக சிறந்த ,சுவாரஸ்யமான ,ட்விஸ்ட் நிறைந்த,roller coaster ride போன்ற உச்ச கட்ட காட்சியுடன் முடியும் மிக மிக சுவாரஸ்யமான இளமை ஸ்டைல் திருவிழா இந்த படம். ஹிந்தி மூலம் நாராயணன் என்ற கதாசிரியர் எழுதியது.தமிழ் வசனம் வேறோர் நாராயணன்.
சி.வீ.ராஜேந்திரன் படம் என்றாலே இளசுகளுக்கு கொண்டாட்டம்.(இந்த படம் வந்த போது பதிமூன்று வயசு இளசுதானே) அப்போது படித்த இளைஞர்களின் கனவு நாயகன் ,திராவிட மன்மதன் நடிகர்திலகம் ,கலை செல்வியுடன், பாலாஜி தயாரிப்பில், சின்னி சம்பத் நடனம்,மாதவன் சண்டை,ராமகிருஷ்ணன் உடை,மஸ்தான் கேமரா ,மெல்லிசை மன்னர் இசை என்று பக்கா வின்னிங் டீம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்? எதிர்பார்ப்பை மீறியே, எல்லா தரப்பினருக்கும் கல்யாண விருந்து போல தீனி கொடுத்த அற்புதம் ராஜா....
இந்த படத்தை பொறுத்த அளவில் நான் உள்ளே நுழைந்து உளவியல்,நடிப்பின் நுணுக்கம் என்றெல்லாம் உங்களை சோதிக்க மாட்டேன். ஏனெனில்,படம் முழுக்க இளமை,சுவாரஸ்யம்,ஸ்டைல்,energy மட்டுமே.
பாச மலர் ராஜசேகரன் ,தில்லானா சண்முகம்,திருவருட்செல்வர் அப்பர்,தெய்வ மகன் கண்ணன், வியட்நாம் வீடு பத்மநாபன்,பாபு என்று திராவிட மன்மதன், தான் சுந்தர புருஷனாக மட்டுமே தோன்றி ரசிகர்களை வசீகரிக்க எண்ணியதில்லை.எல்லா பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து ,தன் இளமை,அழகு இவற்றை மறைத்து பாத்திரத்திற்கேற்ப தோன்றிய நடிகர்திலகம் தன் முழு இளமை, ஆண்மை, அழகு, வசீகரம் எல்லாவற்றையும் குறையாமல் நமக்கு வழங்கிய படங்கள் கலாட்டா கல்யாணம்,தங்கச்சுரங்கம்,நிறை குடம்,தெய்வ மகன்(விஜய்),சிவந்த மண்,எங்க மாமா, சுமதி என் சுந்தரி, ராஜா,வசந்த மாளிகை போன்றவை.இதிலும் ராஜா ஒரு குறிஞ்சி மலர்.
என்னத்தை சொல்ல!!! அழகென்றால் அப்படி ஒரு அழகு, இளமைஎன்றால் அப்படி ஒரு இளமை, ஸ்டைல் என்றால் அப்படி ஒரு ஸ்டைல்,துறுதுறுப்பென்றால் அப்படி ஒரு துறுதுறுப்பு, சுறுசுறுப்பென்றால் அப்படி ஒரு ஒரு சுறுசுறுப்பு அதுவரை திரையுலகம் பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை,காட்சிக்கு காட்சி அப்படி ஒரு வசீகரம் நிறைந்த இளமை துள்ளும் (என்ன ஒரு energy level )ஸ்டைல் ஆன ஒரு நாயகனை கண்டதில்லை.
இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றும் நடிகர்திலகம் திரும்பி திரும்பி இதே மாதிரி படங்களில் சிக்கி கொள்ளவும் இல்லை என்பதே நடிகர்திலகத்தை வித்யாசம் காட்டியது.
உடைகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால்....
பொதுவாக அவர் trend setter .well dressed man of indian screen என்ற விருதை ஒரு வடக்கிந்திய பத்திரிகை 1958 இல் அவருக்கு அளித்து மகிழ்ந்தது.
அந்த சுந்தரனுக்கு எல்லா வித வேடங்களும் பொருந்தியது போல எல்லா வகை உடைகளும் பொருந்திய அழகை என் சொல்ல?வேட்டி சட்டை,ஜிப்பா,சுரிதார்,சட்டை,பேன்ட் ,கோட் சூட்,அரச உடைகள், இதிகாச புராண உடைகள்,படு படு ultra modern உடைகள் எல்லாமே கன கச்சிதமாக பொருந்தியது அந்த திராவிட ஆண்மை நிறை அழகனுக்கு.
இந்த படத்தில் ஜெர்கின் எனப்படும் ஜாக்கெட், கோட், tie ,மற்றும் scarf போன்ற உடைகள்.
முதல் காட்சியில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜாங்கம்.விஸ்வத்தின் அடுத்த அறையில் அடை பட்ட அழகான ஜெர்கின் அணிந்த ராஜா.சிகெரெட் lighter உடன் விஸ்வம் போலிசோடு அதிக சண்டையும் வச்சிக்காதே ,அதிக தொடர்பும் வச்சிக்காதே ,பொறுமையாய் இரு என்று லேசான தலையாட்டலுடன் ,எவ்வளவு நாளா நடக்குது என்று கேட்கும் விஸ்வத்திடம் நாலு நாளா என்று கூல் தொனியில் சொல்வது, நம்பிக்கையான ஆள் கேட்கும் விஸ்வத்திடம் ஆழமான குறுகுறு பார்வையுடன் ,தன் மேல் நம்பிக்கை வைக்க சொல்வது என்று முதல் காட்சியிலேயே தன்னுடைய வித்தியாச வேடத்துக்குள் அனைவரையும் ஈர்த்து கட்டி போட்டு விடுவார்.
ராதாவை ,ஹோட்டல் அறையில் சந்திக்கும் முதல் காட்சி டீசிங் கலந்த காதல் அறிமுக ஆரம்ப காட்சியில் நடிக்க விரும்புவோருக்கு இளமை பாடமே நடத்த பட்டு விடும்.ராதாவின் அழகை வியப்பு விழிகளால் பருகி ,பொய் ஆச்சர்யம் காட்டி அழகை விமர்சிக்கும் ஆரம்பம், indifference காட்டும் ராதாவிடம் ஜாலியாக credibility நிரூபிக்கும் cuteness ,பார்க்க மாட்டேங்களா வைரங்களை எனும் ஸ்டைல்,தன் பெயரை வித விதமாக சொல்லி கடி ஜோக் அடித்து தானே ரசிப்பது, முடிவில் கிளம்பும் போது ஆப்பிளை ஒரு அவசரம் கலந்த விழைவுடன் கடித்து விடை பெறுவது-இளமை குறும்பின் உச்சம் தொடும்.
நீ வர வேண்டும் பாடல் ராஜா சொல்லும் ஸ்டைல் களை கட்டி விடும்.அதிலும் முகம் தடவும் கையை ராதா தட்டி விட ,போலிசை காட்டியதும் அவர் கையை எடுத்து முகத்தில் வலுகட்டாயமாய் தேய்த்து கொள்ளும் இளமை டீசிங் குறும்பு.
பாபுவிடம் கூட்டி சென்றதும் அவரை கட்டி வைத்து விசாரிக்கும் காட்சி . ஈர்ப்பு நிறைந்த கிண்டலின் உச்சம். குமாரிடம் ஒவ்வொரு முறை அடிபடும் போதும் வித விதமான ஜாலி கமெண்ட் .முகத்தை கெடுத்துடாதே என்று சொன்னாரில்லை மடையா... ஏண்டா அடிக்கரத்துக்குன்னே சம்பளமா... அதே மாதிரி ராதாவுடன் சந்திப்பை இதயம் அடித்த அழகை கண்ணை அடித்து குதூகலிக்க வைப்பார்.(தடக் தடக்).முடிந்து தன் கயிற்றை அறுத்து வில்லன்களை அட்டாக் பண்ணி, surprise கொடுத்து lighter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.
குமாரின் துரோகம் பற்றி பாபுவிடம் சொல்லி ,அவர் தூக்கி எரியும் சாவியை expert என்று இடது கையால் பிடிக்கும் ஸ்டைல்.பாபுவை தாக்கி விட்டு தப்பியோட பார்க்கும் குமாரை ,ஸ்டைல் ஆக சிகெரெட் தனது ஆள்காட்டி கட்டை விரலில் குவித்து கீழ் விட்டு தேய்க்கும் அழகு. பிறகான அற்புத சண்டை காட்சி.
ஒரு நேருக்கு நேர் சண்டை காட்சியில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்? ஒரு சமமான அல்லது மிகை பலம் கொண்ட வில்லன். சம யுத்தம். சம வாய்ப்பு. சிறிதே திட்டமிடல். சவால் விடும் gestures . சுறுசுறுப்பு நிறைந்த rhythmic manly Grace ,நல்ல கட்டமைப்பு இவைதானே? இவை அத்தனையும் கொண்ட சண்டை காட்சிதான் குமாருடன் ராஜா மோதும் சுவாரஸ்ய குதூகல சண்டை காட்சி.முதல் பாய்ந்து இரு முறை அட்டாக் பண்ண சுலப வாய்ப்பு எதிரிக்கு கொடுக்கும் போது முகத்தில் ஒரு scheming look தெரியும்.பிறகு லாவகமாய் நகர்ந்து அட்டாக் ஆரம்பிக்கும் போது ஒரு aggression தெரியும். எதிரெதிரில் குறி பார்க்கும் போது ஒரு cautious anticipation தெரியும்.எதிரி குறி வைக்கும் போது அந்த அடி பட்டால் எப்படி இருக்கும் என்ற உணர்வை react செய்து உணர்த்துவார்.(அடி படும் போது வலி வேதனை ) ஒரு பம்பரம் போல் சுழன்று சுழன்று திரும்பி graceful stylish சுறுசுறுப்பு காட்டும் நேர்த்தி.கண்ணை அடித்து ,ஒரு கூல் பார்வையுடன் எதிரியை challenge பண்ணுவார். ஒரு சண்டை காட்சியில் கூட தன்னை மீற யாருமில்லை என ஓங்கி சொன்ன அற்புத காட்சி.
அதே போல ராதா தன் அம்மாவிடம் பேசுவதை ஒட்டு கேட்கும் போது ராதாவிடம் துப்பாக்கி முனையில் உள்ளே வரும் போது அம்மாவிடம் விசாரிப்பு, பிறகு ஒரு பொய்யை சொல்லும் போது நேர்பார்வை தவிர்த்த ,கையை தனது வாயை மறைக்கும் தோரணையில் வைத்து பேசும் இடம் உளவியல் அறிஞர்கள் ,பொய் சொல்வர் செய்யும் சில செயல்களை படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் உளவியல் நடிப்பதிசயம்.
பாபு நம்மை தொடர்கிறார் என்று அறிவிக்கும் ராதாவிடம் ,அதை கவனித்து பின் romance பண்ணுவது போல் நடிக்கும் நுணுக்கம்.(பாபு சந்தேகம் தவிர்க்க). ஜம்பு வந்ததும் ஹூம் ஹூம் என்று ஸ்டைல் ஆக கை காட்டும் ஆமோதிப்பு,தங்கத்தை தொட்டதும் கையை தட்டி விடும் அவசர அலட்சிய எச்சரிக்கை , தொடரும் விறுவிறுப்பான சண்டை காட்சி ,ஜம்புவிடம் கத்தியை காட்டி ஓடுடா என்ற மிரட்டல் தொனியில் காட்டுவது.
தொடரும் ramantic marvel கல்யாண பொண்ணு lead scene (அப்புறம்தான்....).நீ வெக்கத்தோடு என்னை ஒர கண்ணால் பார்க்க (ராதா முறைக்க)சரி நான் பாக்கிறேன்னு வெச்சிக்க.
சிவாஜியின் நடன காட்சிகளில் ஒரு அபாரமான டான்சர் grace , கடின movements , ஸ்டைல்,சுறுசுறுப்பு,professionalism மிளிரிய கால கட்டம். கல்யாண பொண்ணு அதற்கு அற்புத உதாரணம்.ஒரு back and sideways ஸ்டெப்ஸ் போட்டு துவங்குவாறே அதை சொல்வதா ,கைகளை விரித்து hop step பாணியில் ஒன்றை செய்வாரே அதை சொல்வதா, தெய்வத்தால் எதுதான் முடியாது?
இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.
தொடர்ந்த நாகலிங்கத்தை சந்திக்கும் காட்சியில் தாராவை கண்டதும் காட்டும் கண நேர சங்கடம் கலந்த முகபாவம்..(தாராவின் நிலைக்கு ராஜாவும் காரணமே)
இரண்டில் ஒன்று காட்சி ஊடல் கலந்து காதல் விருந்து. திராட்சை நிற உடையில் (திராட்சை ஆணின் காம விழைவையும்(libido&virility), பச்சை நிறம் பெண்ணின் அழைப்பை ஏற்று பிள்ளை பெறும் விழைவையும் (Fertility)குறிக்கும். சி.வீ.ஆர் கலர் psychology )அழகு கொண்ட இளமை குறும்புடன் ,கண்ணில் தெறிக்கும் கிண்டலுடன் அவர் ஒவ்வொரு ஜன்னலாக எட்டி பார்க்கும் அழகு. ஒரு bull fight gesture கொண்டு அறைக்குள் நுழைந்து, அணைக்கும் போது செல்ல நிமிண்டல், என்று இரண்டில் ஒன்றல்ல ஒன்றே ஒன்று என நாம் குதூகலிக்கும் ஒரே காட்சி.
இறுதி காட்சி நடிகர்திலகம் நினைத்தாலும் அவருடைய திறனை கட்டு படுத்த முடியாது என்று அவர் காட்டும் சுவாரஸ்ய வெளியீடு.
இந்த காட்சி முழுதுமே வில்லனை பிடிக்க திட்டமிட்டு ,அது விஸ்வம் தலையீடு மற்றும் அம்மாவின் கடத்தல் என்பதினால் மாற்று திட்டமிடல் என்பதை முன்னிறுத்தி ,விஸ்வத்தின் எதிர்பாராத நடவடிக்கை அதனை கெடுக்கும் போதும் ,சுதாரிக்க வேண்டிய அவசரம். சிவாஜியின் முகபாவங்களில், ஒரு ஆசுவாசம் (திட்ட படி),அவசரம், குழப்பம் (நிலைமை எல்லை மீறும் போது),குறிப்புகள் (எல்லாம் கட்டுக்குள் என்று நண்பர்களுக்கு உணர்த்துவது),சமாளிக்கும் அவசரம், மற்றோரை குறிப்புணர்த்தி தன்னோடு தொடர சொல்லும் அவசரம் நிறைந்த எச்சரிக்கை தொனிக்கும் timing கொண்ட சமாளிப்புகள் .இந்த கட்டத்தில் அவர் முக பாவங்களை தொடருங்கள். பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்..
அவர் அன்னை சித்திரவதை படுத்த படும் போது , அதை தாங்கி கொள்ளவும் முடியாமல்,தடுக்கவும் முடியாமல்,வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல்,ஆத்திரத்தை கட்டு படுத்தவும் முடியாமல் துடித்து ,எதிரிகளுக்காக சிரித்து சமாளிப்பது போல அவர் காட்டும் நடிப்பு. (ஆம்.நடிப்பது போன்ற நடிப்பு).
siva-159.jpg
Thanks Gobalakrishnan Sundararaman (Muktha films 60)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th June 2023, 12:23 AM
#1064
Senior Member
Devoted Hubber
சென்னை ஆல்பர்ட் அரங்கில்
யூன் 09 2023 ல் திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிச்சித்தரம்
ராஜா வெற்றிகரமான 2 வது வாரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
புதிய படங்களுக்கு நிகராக மக்கள் வருவதாக தகவல் தெரிவிக்கிறது.
ராஜா திரைப்படத்தை திரையிட வேறு ஒரு தியேட்டரை அணுகிய பொழுது
மறுத்தவர்கள் ராஜாவின் வெற்றி பவனியை கண்டு ஒரு வாரம் திரையிட
வேண்டி நிற்பதாக தகவல் சொல்கிறார் சென்னை நண்பர்.
11 ம் திகதி வெள்ளிக்கிழமை மாட்னி ஷோவுக்கு சுமார் 300 பேரும்
மாலைக்காட்சிக்கு 600 பேருக்கு மேல் பார்த்து மகிழ்ந்ததாகவம் தகவல்.
ராஜாவின் வெற்றி பவனி தொடரட்டும்.
siva-160.jpg
siva-173.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
3rd July 2023, 06:44 AM
#1065
Senior Member
Devoted Hubber
மீண்டும் ரசிக நெஞ்சங்களை மகிழ்விக்க....
siva-203.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th July 2023, 06:25 AM
#1066
Senior Member
Devoted Hubber
மீண்டும் வசூலில் சாதனை படைக்க வருகிறார் .......
siva-176.jpg
siva-232.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th July 2023, 06:42 AM
#1067
Senior Member
Devoted Hubber
மார்ச்/ 24 /2023 ல் மறு வெளியீடு கண்ட நடிகர் திலகத்தின் முதல் மரியாதை
திருப்பூர் நகரில் 100 நாட்களுக்குமேல் ஓடி சாதனை படைத்துள்ளது.
அதனை திருப்பூர் சிவாஜி ரசிகர்களும் மக்களும்
யூலை /02/2023 அன்று (102 வது நாள்) விழா எடுத்து சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.
siva-199.jpg
siva-201.jpg
siva-204.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th July 2023, 07:01 AM
#1068
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th July 2023, 07:04 AM
#1069
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th July 2023, 07:06 AM
#1070
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks