-
31st July 2021, 08:52 AM
#1
Senior Member
Devoted Hubber
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கதைக்கு உதவாத வெறும் பேச்சு"
தமிழகத்தை 1954 ஆம் ஆண்டின் போது கடுமையான புயல் தாக்கியது, தாக்குதலில் டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளாகியது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உதவிகள் செய்திட வேண்டும் என தீர்மானித்த திமுக தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் அன்றைய முன்னணி கட்சிப் பிரமுகர்களுக்கு நிதி வசூலித்து தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார், அவ்வாறு அதிக நிதி வசூலித்து தரும் பிரபலத்திற்கு பாராட்டு விழா மேடையில் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்றும் சேர்த்தே அறிவிப்பை வெளியிட்டார், அப்போதைய திமுகவின் மக்கள் கூட்டம் சேரும் பிரபலங்கள் என்று எடுத்துக் கொண்டால் பராசக்தி புகழ் நடிகர் திலகம் சிவாஜி, பராசக்தி கதை வசனகர்த்தா கலைஞர் கருணாநிதி என்று மட்டுமே இருந்தது,
இந்தக் கால கட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடிக்கும் நாடகமாகட்டும் தெரு முனை பிரச்சாரமாகட்டும் மக்கள் சங்கமித்து விடுவார்கள், மிகவும் பரப்பரப்பாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி சில நாட்கள் படப்பிடிப்பை ஒத்தி வைத்துவிட்டு பராசக்தியின் வசனங்களை முக்கிய நகரங்கள் தோறும் தெருமுனை பிரச்சாரத்தில் நேரடியாகவே பேசினார் நடிகர் திலகம் சிவாஜி,
நிதி ஏராளமான குவிந்தது, மற்ற பிரபலமான திமுக முன்னோடிகளைக் காட்டிலும் நடிகர் திலகம் சிவாஜிக்கு பத்து மடங்கு அளவிற்கு கூடுதலாக நிதி குவிந்தது, குவிந்த நிதியை அறிஞர் அண்ணா அவர்களிடம் சேர்த்துவிட்டு சேலத்தில் இருந்த ஸ்டுயோவிற்கு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள செனவிட்டார் நடிகர் திலகம் சிவாஜி,
பாராட்டு விழா அழைப்பு வரும் உடனடியாக தகவல் தெரிவியுங்கள் என்று தனது இல்லத்தில் சொல்லி இருந்தார்,
ஆனால் பாராட்டு அழைப்பு வரவில்லை, மாறாக பாராட்டு விழா நடைபெற்றது அதில் அதிக வசூல் குவித்தவர் என்று எம்ஜிஆர்க்கு மோதிரம் அளிக்கப்பட்டது என்ற அதிர்ச்சியான தகவல் மட்டுமே வந்தது, உண்மை என்னவென்றால் எம்ஜிஆர் அவர்கள் நிதி வசூல் செயலில் ஈடுபடவே இல்லை, அவரை முறைப்படி திமுகவில் இணைத்து விடவே நடிகர் திலகம் சிவாஜிக்கு தொழில் முறை போட்டியாளர்கள், வளர்ச்சியை பிடிக்காதவர்கள் என்று ஒன்று சேர்ந்து அறிஞர் அண்ணா அவர்களிடம் உண்மைக்கு மாறாக தகவல்களை அளித்து எம்ஜிஆர் அவர்களை திமுகவில் இணைந்து மோதிரத்தையும் அணிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டார்கள்,
இத்தனையும் அரிந்து கொண்ட நடிகர் திலகம் சிவாஜி சென்னை திரும்பி அறிஞர் அண்ணா அவர்களை சந்திக்க முடிவெடுத்தார், ஆனாலும் இயக்குநர் பீம்சிங் அவர்கள் " எந்த உண்மையையும் அறிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே உங்களை புறக்கணித்து இருக்கிறார்கள் நாம் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என யோசனையை சொல்லவே முடிவை மாற்றிக் கொண்டார் நடிகர் திலகம் சிவாஜி,
மிகவும் மனக் குழப்பத்தில் இருந்த நடிகர் திலகம் சிவாஜியை இயக்குநர் பீம்சிங் அவர்கள் திருப்பதி சென்று வரலாம் என அழைத்துச் சென்றார்,
சிருப்பதி சென்று திரும்பும் போது தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நடிகர் திலகம் சிவாஜியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள் எதிர்ப்பாளர்கள்,
எந்த நடிகர்களுக்காகவும் அவர்களை புகழ்ந்து எழுதவோ வரியை சேர்க்காத படுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் தனது பாடல் வரிகளில் இதையெல்லாம் தான் பாடல் வரி
Thanks Sekar Parasuram
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st July 2021 08:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks