-
30th October 2022, 07:07 AM
#1011
Senior Member
Devoted Hubber
புரசை பாலாஜியில் 28 முதல் தினசரி 3 காட்சிகளாக நடிகர் திலகத்தின் பச்சை விளக்கு
தகவல் நன்றி வான்நிலா விஜயகுமார்
siva-88.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th October 2022 07:07 AM
# ADS
Circuit advertisement
-
5th November 2022, 11:59 PM
#1012
Senior Member
Devoted Hubber
சென்னை மாநகரில் 80 களில் சாதனைச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய உத்தம புத்திரன் மறு வெளியீடாக பல திரைகளில் திரையிடப்பட்டபொழுது வெளிவந்த பத்திரிகை விளம்பரம். சித்திரா, ஶ்ரீ கிருஷ்ணா,ஸ்டார், கமலா, நடராஜ் ,பழநியப்பா ,வீனஸ் /பகல் காட்சி, தங்கம், பாலாஜி, கபாலி, நெஷனல் திரைகளில் தினசரி 3 காட்சிகள், மொத்தமாக 11 திரைகளில் திரையிடப்பட்டு காட்சியளித்திருக்கின்றது.
siva-93.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th November 2022, 12:11 AM
#1013
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகத்தின் திரிசூலம்,
மூன்று வேடங்களை ஏற்று நடிப்பில் அசத்தலான வித்தியாசங்களை காட்டி தமிழக மக்களுக்கு விருந்து அளித்தார் நடிகர் திலகம்
, கன்னடத்தில் டாக்டர் ராஜ்குமார் அவர்கள் நடித்த சங்கர் குரு திரைப்படத்தின் தமிழ் பதிப்பு தான் திரிசூலம்
டாக்டர் ராஜ்குமார் அவர்கள் மதுரையில் நடைபெற்ற திரிசூலம் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசும்போது "கன்னடத்தில் சங்கர் குரு பெற்ற வெற்றியை விட பல மடங்கு வெற்றியை திரிசூலம் பெற்றிருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி" எனப் பேசி பெருமைபடுத்தினார்,
ஒரு ஹீரோ நடிகரின் 200 படம் 200 நாட்கள் ஓடியது என்பதும் நடிகர் திலகத்தின் வரலாற்றில் மட்டுமே இடம் பெற்று இருக்கிறது,
அதே போல ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 75% அளவிலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததும் திரிசூலம் படத்திற்காக மட்டுமே, அதாவது 1979 ஆம் ஆண்டின் தமிழக மக்கள் தொகையான 4.2 கோடியில் திரிசூலம் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை என்பது 3.4 கோடியாகும்
திரிசூலம் வசூல் சாதனைகளை தொகுத்து இப்போதிருக்கும் டிவி சேனல்களுக்கு கொடுக்க வேண்டும், பின்னர் தான் டிவி சேனல்களில் பங்கு பெரும் நெறியாளர்களாகட்டும் அதன் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கருத்தை பதிவு செய்யும் பார்வையாளர்களாகட்டும் அவர்களுக்கு உண்மையான வெற்றி, வசூல் சாதனை என்றால் என்ன என்பதை புரிய வைக்க முடியும்,
திரிசூலம் 1979 ல் ரிலீஸான போது சென்னை சாந்தியில் மட்டுமே 272 காட்சிகள் அட்வான்ஸ் புக்கிங் முறையே முன் பதிவிட்டவர்களுக்கு அதிர்ஸ்டம் அடித்தது அதாவது ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு டிக்கெட் இல்லை,
இப்போது உள்ளது போல 100 இருக்கைகளை கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் போன்ற ஹவுஸ்புள் காட்சிகள் இல்லை 1200 இருக்கைகளை கொண்டிருந்த திரையரங்குகளில் சாதனையை நிகழ்த்திய காவியம் திரிசூலம்
சென்னை சாந்தி திரையரங்கில் மட்டுமே 175 நாட்கள் ஓடி அன்றைய மதிப்பில் ரூபாய் 16,85,000 வசூலித்து சாதனை படைத்தது,
அதாவது 8 லட்சம் பார்வையாளர்கள் வரை ஒரு திரையரங்கில் மட்டுமே கண்டு மகிழ்ந்த அபூர்வம்,
இப்போது வெளியாகும் பிரபலமான ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் போன்றோரின் திரைப்படங்களை எட்டு லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளிக்க வேண்டுமெனில் அவர்களின் திரைப்படம் குறைந்த பட்சம் 2000 திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து ஓடவும் வேண்டும்,
இந்த ஒப்பீடு தலையை சுற்ற வைக்கிறது ஏறக்குறைய திரிசூலம் ஒரு திரையரங்கில் மட்டுமே 100 கோடியைக் குவித்து இருக்கிறது.
நடிகர் திலகம் ஒருவரே ரியல் வசூல் சக்கரவர்த்தி!!
திரிசூலம் தமிழகம், பாண்டிச்சேரி, உட்பட 11 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது
இதுவரையிலும் திரைப்பட வரலாற்றில் இத்தனை ஊரில் அத்தனை எண்ணிக்கையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது திரிசூலம் மட்டுமே,
நன்றி (வாடஸ்அப் நண்பர்கள்)
siva-94.jpg
மேலே உள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டதுபோல் 11 திரைகளில் நேரடியாக வெள்ளிவிழா ஓடவில்லை. 8 திரைகளில் நேரடியாகவும்
3 தியெட்டர்களில் ஷிப்டிங்கிலும் வெள்ளிவிழா கண்டது.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th November 2022, 12:37 AM
#1014
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகத்தை அமெரிக்க அரசாங்கம் தன் நாட்டிற்கு வருகை தரும்படி முறைப்படி அழைத்தபொழுது அதனை ஏற்றுக்கொண்டு நடிகர் திலகம் அழைப்பிதழில் கையொப்பம் இடும் அரிய ஆவணப்புகைப்படம்.
siva-66.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
6th November 2022, 04:24 PM
#1015
Senior Member
Devoted Hubber
ஞான ஒளி ரிலீஸ் ஆன பிறகு சென்னை நகரில் ஏறக்குறைய 80 % தியேட்டர்களில் நடிகர் திலகத்தின் 20 க்கும் மேற்பட்ட படங்கள்புதிய முறையில் விளம்பரம் செய்யப்பட்டு திரையிடப்பட்ட போதிலும்நகரில் எல்லைக்கு அருகில் சுற்றுப்புறங்களில் உள்ள "டூரிங்" சிமனிமாக்களிலெல்லாம் திரையிடப்பட்டும், சென்னையில் 5 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தும், 30 க்கு மேற்பட்ட சங்கீத சபாக்கள் மூலமாக இரண்டே நாட்களில் 36000 ரசிகர்கள் கண்டுகளித்தும், சகலவிதமான எதிர்ப்புகளையும் தகர்த்தெறிந்து பிளாசா தியேட்டரில் இன்றுவரை 140 காட்சிகளில் 136 காட்சிகள் தியேட்டர் நிரம்பி வழிந்திருக்கிறது.
மனோகரா
குலமகள் ராதை ( 4தியேட்டர்)
பாலும் பழமும் ( 2 தியேட்டர்)
உயர்ந்த மனிதன்.
பாசமலர் (2 தியேட்டர்)
பாகப்பிரிவினை.
உத்தம புத்திரன் (6 தியேட்டர்)
தூக்குத்தூக்கி.
குங்குமம்.
வணங்காமுடி'
வளர்பிறை.
இருவர் உள்ளம்.
ராஜா( 5 தியேட்டர்)
மக்களைபெற்ற மகராசி.
தங்கைக்காக.
சொர்க்கம்.
தேனும் பாலும்.
காவேரி.
பாபு.
ஞான ஒளி பிளாசா ,பிராட்வே, சயானி, கமலா.
siva-95.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th November 2022, 04:21 AM
#1016
Senior Member
Devoted Hubber
வசூலில் மலைக்கவைக்கும் சிவாஜியின் சாதனைகள் 1952 முதலே ! விநியோகஸ்தர்கள் விளம்பர ஆதாரங்கள் - PROOF !
Thanks Nadigarthilgamtv
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th November 2022, 04:23 AM
#1017
Senior Member
Devoted Hubber
சிவாஜி என்றால் வசூல் சாதனை, வசூல் சாதனை என்றால் சிவாஜி படமே !(Part 2)
Thanks Nadigarthilgamtv
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
14th November 2022, 01:08 AM
#1018
Senior Member
Devoted Hubber
எப்படி எல்லாம் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்பவர்களுக்கு.
எங்களுக்கு சிவாஜி பிடித்திருக்கிறார். நல்ல விஷயங்களை எப்படி சொல்கிறார். அம்மாவை பூஜிக்கிறார். அண்ணனிடம் எப்படி பழக வேண்டும் தம்பியிடம் எப்படி பாசம் காட்ட வேண்டும் என்று சொல்லித் தருகிறார் ,படக் காட்சிகளில். அந்த நல்ல விஷயங்கள் மனதில் ஆழமாக இறங்குகின்றன. அடடே !
இது நன்றாக இருக்கிறதே என்று வியப்பதோடு நின்று விடுவதில்லை மனம்.அவர் சொன்னதை நாமும் நம் குடும்பத்தாரிடம் செய்து காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அம்மாவை வணங்க தோன்றுகிறது .அண்ணனை நேசிக்க தோன்றுகிறது. குடும்பத்தை அரவணைத்து செல்ல தூண்டுகிறது.
அட இது நல்ல விஷயங்கள் தானே! அவருடைய நடிப்பும் படக் காட்சிகளும் இதைத்தானே சொல்கின்றன. அதை தானே நம்மை செய்ய தூண்டுகின்றன. நல்ல விஷயம் தானே!இந்த நல்ல விஷயங்களை சொல்லும்போது தான் இதை மனதில் வைக்காமல் எடக்காக ஒரு கேள்வி வருகின்றது.
ஏன் சிவாஜி குடிப்பது போல் நடிக்கிறாரே ,அப்படி செய்கிறாரே இப்படி செய்கிறார் என்று ..
குடிப்பதாக நடித்தாலும் சரி, வேறு பல நடிப்பாக இருந்தாலும் அப்படி செய்வதால் ஏற்படும் வினைகளையும் அவர் சொல்லத்தானே செய்கிறார்.
சமூகம் தன்னிலை பிறழாமல் இருக்கத்தான் கலைகள் உருவாகின .அந்தக் கலைகளின் மூலம் நல்ல விஷயங்களை சொல்லி சமூகத்தை செழுமையாக்குகின்றான் ஒரு கலைஞன். இதற்காக
பிறந்தது தான் கலைகள் .
உருவாக்கப்பட்டது தான் கலைகள் .
அதைத்தான் செய்தார் சிவாஜி .அதனால் தான் எங்களுக்கு சிவாஜி பிடித்திருக்கிறது. மனதில் நல்ல விதைகளை விதைத்த மாமனிதர் சிவாஜி. அதை நாமும் பிறருக்கு சொல்லலாமே என்று சொல்லும்போது தான் இடக்கான கேள்விகள் வந்து விழுகின்றன .நல்லதைக் கற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதியாக இருப்பவர்களிடம் இருந்துதான் இந்த மாதிரி கேள்விகள் பிறக்கின்றன ..
இவர்கள் எப்படி எல்லாம் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள் தெரியுமா?
எனது youtube சேனலில் சிவாஜி பற்றிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளேன். அந்த வீடியோவில் வரும் நூற்றுக்கணக்கான படங்களில் ஒன்று நடிகர் திலகம் ஜெமினி கணேசனுக்கு பின்னால் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படம்.அது பொதுவெளியில் பிடிக்கப்பட்ட ஒரு புகைப்படம்.
முன் சேரில் ஜெமினி கணேசன் அமர்ந்திருக்கிறார் .ஜெமினிக்கு பின்னால் நடிகர் திலகம் அமர்ந்திருக்கிறார்.
நடிகர் திலகத்தின் கால்கள் இரண்டும் நிலத்தை நோக்குவது போல் அந்த இணைப்பில் கால் வைத்தபடி இருக்கும் .அந்த வீடியோவில் இருக்கும் நூற்றுக்கணக்கான படங்களில் ஒன்று இது.இதைப் பார்த்து தான் கமெண்டில் ஒருவர் கேள்வி கேட்கிறார்? ஜெமினிகணேசனை பாருங்கள் எவ்வளவு அடக்கமாக அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார் பின்னால் உட்கார்ந்து இருக்கும் நடிகர் சிவாஜிக்கு மரியாதை தெரியவில்லையே ?
என்று கேள்வி கேட்டுவிட்டு அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்து இருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்பாக திரையரங்கில் ஒரு ஸ்லைடு போடுவார்கள் .முன்சீட்டில் கால் வைக்காதீர்கள் என்று? அதை குறிப்பிட்டு,
சிவாஜி பாருங்கள் மரியாதை இல்லாமல் முன்னால் உட்கார்ந்து இருக்கும் ஜெமினி கணேசன் நாற்காலியின் கீழே காலை வைத்திருக்கிறார் என்று கேள்வி கேட்டிருக்கிறார்? அட எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் ? கேள்வி கேட்கிறார்கள்?
சிவாஜி எது செய்தாலும் குற்றமாக தான் இவர்களுக்கு தெரிகிறது ...அந்த புகைப்படங்களை பார்த்த ஆயிரக்கணக்கானவர்களில் யாருக்கும் தோன்றாத கேள்வி இது ?
சரி இவரை விடுங்கள் ஒரு பெரிய பிரபலமே கேள்வி கேட்ட விஷயத்துக்கு வருகிறேன்.
நடிகர் திலகத்தின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. பாதி நாடகம் நடந்த முடிந்த நிலையில் நடிகர் திலகத்தின் உணர்ச்சிமயமான நடிப்பை பார்த்து மெய் மறந்த வாலி அவர்கள் பக்கத்தில் பக்கத்தில் இருந்த பிரபலத்திடம் ஆகா! நடிகர் திலகத்தை பாருங்கள் எப்படி அற்புதமாக நடிக்கிறார்,அவர் ஒரு சிறந்த அற்புதமான நடிகர் என்று கூறி இருக்கிறார் ..
அதற்கு அந்த பிரபலம் எவ்வாறு பதிலளித்திருக்க வேண்டும்? கவிஞர் வாலி சொன்னதற்கு பதிலாக அந்த நடிப்பு சாதாரணம்தான் ,தன்னைக் கவரவில்லை என்று சொல்லி இருக்கலாம், ஏன் அந்த நடிப்பு பிடிக்கவில்லை என்று கூட சொல்லி இருக்கலாம். அது அவருடைய கருத்து. ஆனால் அந்த பிரபலம் அப்படி சொல்லாமல் ஏன் முத்துராமன் கூட சிறந்த நடிகர் தானே என்று பதில் சொல்லியிருக்கிறார். எந்தக் கருத்துக்கு எந்த பதில்? இதை என்னவென்று சொல்ல?
முத்துராமன் சிறந்த நடிகர் தான். ஆனால் அதை எங்கே எப்படி சொல்ல வேண்டும் என்று நியதி இருக்கிறதல்லவா ?
இந்த இடத்தில் ஒரு பத்திரிக்கை கேள்வி பதிலை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வாசகர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார் சிவாஜிக்கு இணையான நடிகர் என்று யாரைச் சொல்வீர்கள்?
இந்தக் கேள்விக்கு பத்திரிகை அளித்த பதில் என்னவென்று தெரியுமா?
சிவாஜிக்கு இணையாக மட்டுமல்ல அடுத்த இடத்தில் வைத்து பார்க்க கூட எந்த நடிகரும் இல்லை?
சினிமாவை அதிகம் நேசிக்காதவர்கள் கூட ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம் தான் ..
இப்படிப்பட்ட கருத்து தான் உலகம் பூராவும் பரவி கிடக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அந்தப் பிரபலம் சொன்ன பதில் வேடிக்கையாக இருக்கிறதல்லவா ?சிவாஜியை எப்படி தாக்கலாம்? சிவாஜி எப்படி குறை சொல்லலாம் ..என்று ஒரு கூட்டம் ஆராய்ச்சி செய்து கொண்டே தான் இருக்கிறது ..
நடிகர் திலகம் சிவாஜியே தான் நடித்த பல படங்களில் ஏற்கும் வேடங்களை பற்றி அவரே கூறுவார் ..
படத்தில் கதாநாயகனாக நான் இந்த வேடத்தை ஏற்றாலும் இந்த கதாநாயக வேடத்தை விட இந்த துணை பாத்திரம் தான் இவ்வளவு சிறப்பு பெறும் ,நன்றாக இருக்கிறது என்று படத்தின் கதையை கேட்கும் போதே கூறி இருக்கிறார் .
உதாரணம் உயர்ந்த மனிதன் நான் வாழவைப்பேன் போன்ற படங்கள். தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலால் அந்த பாத்திரத்தை தான் ஏற்று மிகச் சிறப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்து இருப்பார் நடிகர் திலகம்.
யாராவது சிவாஜி நடிப்பை இதைப் போற்றி புகழ்ந்தால்
இடைச்செருகலாக அங்கே கேள்விகள் வரும் .ஏன் படத்தில் சிவாஜியை விட அவர் சிறப்பாக செய்திருக்கிறாரே என்று?
இங்கே உண்மையைச் சொல்லவும் ஒருவர் தேவை இருக்கிறது. படத்தில் நடிக்க தெரியாத அவருக்கு நடிப்பைச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததே சிவாஜி தான் என்ற உண்மையை அவர் சொல்லுவார் .
அதைப் படித்து இருந்தாலும் தெரிந்து கொண்டாலும் இன்னமும் எதிர்மறை கேள்விகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன!
அப்புறம் இந்த நன்கொடை விஷயங்கள் ..பண விஷயங்கள்.
இவர்களுக்கு வள்ளல்கள் என்பவர்கள் யார்?
வள்ளல் முடிவெடுப்பார். பணம் கொடுக்க ...
பத்திரிக்கையாளர்களை அழைப்பார்.
சம்பந்தப்பட்டவர்களை அழைப்பார் கொடுப்பார். மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகும்.
சலாம் போடுகிறானா!
இந்தா! பணம் பிடித்துக்கொள்!!
என்று முதுகில் தட்டி கொடுத்து கொஞ்சம் பணம் கொடுத்து விட்டால் போதும் ..வள்ளலோ வள்ளல் என்று இங்கே பெயர் எடுத்து விடலாம் ..
கண்டிப்பாக இது சிவாஜி அவர்களுக்கு தெரியாது ஐயா ..
கொடையை கொடையாக செய்ய வேண்டுமே அன்றி ,அதை குடையாகப் பிடிக்கக் கூடாது.
இதுதான் வள்ளல் குணம் .அதுதான் சிவாஜிக்கு தெரிந்தது.
கொடுக்கும்போதே சொல்லிவிடுவார் யாருக்கும் தெரியக்கூடாது என்று.
பணம் கொடுத்ததை பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய பத்திரிக்கை காரனுக்கும் பணம் கொடுக்க வேண்டும்.
இது ஒரு தவறான வழிமுறை .அதை சிவாஜி செய்ய மாட்டார். பசியோடு இருப்பவனுக்கு மீனை கொடு என்பது ஒரு நாட்டு பழமொழி. அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடு என்பது இன்னொரு நாட்டு பழமொழி. சிவாஜியின் பாணி இரண்டாவது ...
ஒரு நாட்டுக்கு எது முக்கியமான தேவைகளோ சேவைகளோ அதை சிவாஜி செய்தார் ..அவர் அளவுக்கு எவர் செய்ததும் கிடையாது என்பது தான் உண்மை.
சிவாஜி செய்யாத நன்கொடைகளே இல்லை. தேச சேவைகளே இல்லை என்ற அளவுக்கு இப்பொழுதெல்லாம் அவரைப் பற்றிய ஏராளமான நன்கொடை செய்திகள் வெளி வந்து கொண்டே இருக்கின்றன ..
நடிகர் திலகம் மறைந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன ..
நல்ல விஷயங்களை நாளானாலும் காலமே சொல்லும் ...
இன்னும் வரும்..
செந்தில்வேல் சிவராஜ்...
Thanks Sivajimurasu
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th November 2022, 06:58 AM
#1019
Senior Member
Devoted Hubber
சிவாஜியால் பயன் பெற்ற திராவிட தலைவர்கள்
thanks Sivaji Murasu.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th November 2022, 12:15 AM
#1020
Senior Member
Devoted Hubber
எழுபதுகளின் நடுப்பகுதியில் மறு வெளியீட்டில் சென்னை மாநகரில் பல தியேட்டர்களில் அரங்கு மாறி அரங்காக தொடர்ந்து வெளியிடப்பட்டு வெள்ளிவிழா கண்ட படம் மனிதரில் மாணிக்கத்தின் கப்பல்லோட்டிய தமிழன்.
siva-138.jpg
siva-137.jpg
siva-132.jpg
siva-133.jpg
siva-134.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks