Page 83 of 107 FirstFirst ... 3373818283848593 ... LastLast
Results 821 to 830 of 1136

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    நடிகர் சங்க வளர்ச்சியில் சிவாஜியின் பங்கு




    Thanks Sivaji Murasu
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
    அந்த நாள் ஞாபகம் - பார்ட் 56
    அடுத்து Dr.ராஜா மற்றும் பட்டாக்கத்தி பைரவன் என்றதுமே அனைவருக்கும் ஒரு குதூகலம் ஏற்படுவதை உணர முடிகிறது. ஆம், ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்த எங்கள் தங்க ராஜாதான் அடுத்து திரைக்கு வந்த நடிகர் திலகத்தின் படம். பொன்னூஞ்சல் வெளியாகி 29 நாட்களுக்கு பிறகு 1973 ஜூலை 14 சனிக்கிழமையன்று வெளியானது. மதுரையில் நியூசினிமாவில் ரிலீஸ்.
    எங்கள் தங்க ராஜா படத்தின் படப்பிடிப்பு விவரங்கள், அது எடுக்கப்பட்டது பற்றி, படத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி தயாரிப்பாளர் இயக்குனர் வி பி ராஜேந்திர பிரசாத் பத்திரிக்கைகளில் கொடுத்த விவரங்களை பற்றி இந்த தொடரில் இரண்டு மூன்று முறை குறிப்பிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். தெலுங்கு படவுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ். வெகு காலமாக தெலுங்கில் படங்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்த நிறுவனம். பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து எடுத்த இரண்டாவது படமான என் தம்பி படத்தின் ஒரிஜினல் தெலுங்கை தயாரித்த நிறுவனமும் இவர்கள்தான். இவர்கள் தெலுங்கில் சோபன்பாபு நடித்த மானவடு தானவடு படத்தைதான் தமிழில் எங்கள் தங்க ராஜாவாக எடுத்தார்கள்.வசந்த மாளிகைக்கு பிறகு ஏராளமான தெலுங்கு தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தமிழில் படம் எடுக்க ஆர்வமாக முன்வந்தனர். அவர்களில் முந்திக் கொண்டவர் ராஜேந்திர பிரசாத், மிக குறுகிய காலத்திலேயே படத்தை எடுத்து முடித்து திரைக்கு கொண்டு வந்து விட்டார். மஞ்சுளா நடிகர் திலகத்திற்கு ஜோடியாக முதலில் ஒப்பந்தமான படம் மன்னவன் வந்தானடி என்றாலும் அதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட இந்த படம்தான் அவருக்கு நடிகர் திலகத்துடன் அறிமுக படமாக அமைந்தது. அது போல் பின்னாட்களில் புகழ் பெற்ற இயக்குனராக வலம் வந்த எஸ் ஏ சந்திரசேகர் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார் (டைட்டிலில் அஸோஸியேட் டைரக் ஷன் எஸ்.சி சேகர் என்று வரும்).
    MR எனப்படும் மதுரை ராமநாதபுரம் ஏரியாவிற்கு RmS பிலிம்ஸ் என்ற நிறுவனம் விநியோக உரிமையை பெற்றிருந்தது. திண்டுக்கல் ரோட்டில் நியூசினிமா தியேட்டருக்கு அருகாமையில் அமைந்திருந்த, அன்றைய நாட்களில் பிரபலமாக இருந்த சுதாகரன் டைலர்ஸ் என்ற கடைக்கு மாடியில் அமைந்திருந்தது RmS அலுவலகம். ஜூலை 14 ரிலீஸ் என்று விளம்பரம் வந்தவுடனே அங்கே களை கட்ட ஆரம்பித்து விட்டது. அவர்களும் மிக சிறப்பாக செயல்பட்டார்கள். சாதாரணமாக MR ஏரியாவிற்கு அதிகபட்சமாக 5 பிரிண்ட்கள்தான் வெளியாகும் . இது எப்படி என்றால் விநியோகஸ்தர் ஒரு ஏரியாவிற்கு விலை பேசி வாங்கும்போதே எத்தனை பெட்டி அதாவது எத்தனை பிரிண்ட் என்பதும் ஒப்பந்ததிலேயே வந்து விடும். 5 பிரிண்ட் தருவதாக ஒப்பந்தம் என்றால் தயாரிப்பாளர் அந்த ஏரியாவிற்கு 5 பிரதிகள் எடுத்து கொடுத்து விடுவார். அதற்கு மேல் வேண்டும் என விநியோகஸ்தர் விரும்பினால் அதற்குண்டான அதாவது ஒன்றோ இரண்டோ பிரதிகள் கூடுதலாக தேவைப்பட்டால் அதற்குரிய பணத்தை விநியோகஸ்தர் தர வேண்டும். எங்கள் தங்க ராஜாவை பொறுத்தவரை RmS பிலிம்ஸ் மதுரை நகருக்கு ஒன்று, அதை தவிர 8 பிரதிகள் ஆக மொத்தம் ஒன்பது பிரதிகள் ரிலீஸ் செய்தனர். அதுவரை அந்தளவிற்கான எண்ணிக்கையில் பிரிண்ட்கள் போடப்பட்டதில்லை. மதுரை, திண்டுக்கல், பழனி, விருதுநகர், ராம்நாட், கம்பம், ராஜபாளையம், (இவை 6ம் உறுதி) மீதி இரண்டு தேனி, காரைக்குடி என்று நினைவு.(இது என் நினைவிலிருந்து எழுதுகிறேன். இதில் ஓரிரண்டு மாறியிருக்கலாம். பதிலாக சிவகாசி, பரமக்குடி போன்ற ஊர்களாகவும் இருந்திருக்கலாம். தவறு இருந்தால் அந்தந்த ஊர் ரசிகர்கள் சொல்லலாம்).ஆகிய ஊர்களில் வெளியானது. இதை பல ரசிகர்கள் பிரமிப்புடன் பேசியது இப்போதும் நினைவிலிருக்கிறது.
    பல படங்களுக்கு பிறகு மீண்டும் இந்த முறை டிக்கெட் வாங்குவதற்கு முயற்சிகள் தொடங்கின. ஆம், நீதி தங்கம், பாரத விலாஸ் விநியோகஸ்தர் தெரிந்தவர், ராஜராஜ சோழன் விநியோகஸ்தர் ரிசர்வேஷன், பொன்னூஞ்சல் தேவைப்படவில்லை. ஆனால் இதற்கு அது போல் எளிய வழி அமையவில்லையே..நான்கு படங்களுக்கு பிறகு மீண்டும் மன்ற டோக்கன்தான் ஒரே வழி என புரிந்தது. அது எப்போது கொடுப்பார்கள் என விசாரித்துக் கொண்டே இருந்தோம். அதற்கு முன்பு வேறு ஒரு விஷயம் முடிவு செய்ய வேண்டியிருந்தது. படம் சனிக்கிழமை வெளியாகிறது. ஸ்கூல் இருக்குமா இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் அடித்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை, அன்றைய தினம் அதாவது ஜூலை 14ந் தேதி ஸ்கூல் லீவு என்று உறுதிப்படுத்திக் கொண்டேன் (அது செகண்ட் சாட்டர்டே. ஆனால் எல்லா மாதங்களிலும் எங்களுக்கு அப்படி லீவு கிடைத்ததில்லை). படம் ரிலீசிற்கு முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை டோக்கன் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்தது. காலையில் போய் கேட்டால் மாலையில்தான் என்று சொல்லிவிட்டார்கள். அப்போது மன்றத்தின் தலைமை பொறுப்பை பார்த்துக் கொண்டிருந்தவர் எம்.ஆர் ராம்ராஜு என்பவர். என் கஸினுக்கு நன்கு தெரிந்தவர். வசந்த மாளிகை தொடர் ஹவுஸ்புல் காட்சிகளுக்கு பிரச்னை வரும் நேரத்திலெல்லாம் அவருடன் என் கஸினும் கூடவே இருந்து உதவி செய்ததால் நல்ல பழக்கம். ஈவினிங் வாங்க என்று சொல்லிவிட்டார்கள். ரசிகர்கள் கூடும் இடமும் அப்போது மாறி விட்டது. மீனாட்சி கோவில் பக்கத்தில் இருந்த மீனாட்சி பார்க்கிற்கு பதிலாக மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்கு எதிரே உள்ளே பார்க்கிற்கு வர சொல்லி விட்டார்கள்.
    நாங்கள் அங்கே போனபோது ஒரு 7 மணி சுமார் இருக்கும். பெரிய கூட்டம் நிற்கிறது. ஒவ்வொருவரும் அந்த ஷோ இந்த ஷோ என்று டிக்கெட் கேட்க ஒரு குழப்பமான சூழல். என் கஸினை பார்த்து உங்களுக்கு எது வேணும் என்று கேட்க கஸின் மார்னிங் ஓபனிங் ஷோ என்று சொல்ல ஓபனிங் ஷோ இல்லை. முடிஞ்சிருச்சு என்று அவர் சொல்ல எனக்கு அப்படியே ஏமாற்றம் பிளஸ் வருத்தம். உன் பிரெண்டதானே உனக்கே இல்லை என்று சொல்றாப்பல என்று என் கஸினிடம் நான் கோபப்பட இருடா, கேட்போம் என்கிறார் என் கஸின் அவர் நண்பர்களும் அங்கே இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு 5,6 பேர் வந்தனர். வந்தவுடன் நாங்க ஏற்கனவே கேட்டிருந்தோம். இப்போ ஆபிஸிலே வந்து கேட்கிறாங்க. உடனே எங்களுக்கு டோக்கன் வேணும் என்று சத்தமாக பேச ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த நண்பரிடம் கஸின் விவரம் கேட்க, வந்தவர்கள் மதுரை அர்பன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் என்பதும் அவர்களுக்கு டிக்கெட்டுக்கள் கணிசமான எண்ணிக்கையில் கொடுப்பதாக சொல்லப்பட்டிருந்தது என்றும் அது கிடைக்கவில்லை என்பதால் இப்போது வந்து கேட்கிறார்கள் என்பதையும் சொன்னார். அவர்கள் பார்க்க கேட்டார்களா அல்லது விற்க கேட்டார்களா என்பது தெரியவில்லை. விவாதம் லேசில் முடிவதாக தெரியவில்லை. நாமே இங்கே ஓபனிங் ஷோ டிக்கெட் இல்லை என்று கடுப்பாக நிற்கிறோம். இந்த பஞ்சாயத்து வேறயா என்று கோபம் வருகிறது. அவர்களுக்கு கடைசி வரை டோக்கன் கொடுக்கப்படவில்லை. அவர்கள் கத்திக் கொண்டே போகிறார்கள். ராம்ராஜுவை தனியாக அழைத்து போய் கசின் கண்டிப்பா ஓபனிங் ஷோ வேணும் என்று கேட்க, உங்களுக்கு தரேன்.என்ன பிரச்னைன்னா ஓபனிங் ஷோ டோக்கன் இங்கே கொஞ்சம் பேருக்குதான் கொடுத்தோம்.அப்புறம் யாருக்கும் கொடுக்கலை. இப்போ உங்களுக்கு கொடுத்தா எல்லாரும் சுத்திக்குவாங்க. அதனால நீங்க நாளைக்கு வாங்க. இரண்டு டிக்கெட்தானே.என்று சொல்ல அப்பாடா என்று கிளம்பினோம்.. அப்போதுதான் ஒரு விஷயத்தை கவனிக்கிறேன். நாங்கள் சைக்கிளில் டபுள்ஸ் போயிருக்கிறோம்.(இரவு நேரம் என்பதால் பிடிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை). அதில் டைனமோ லைட் கிடையாது. வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஒரு சதுர வடிவிலான சட்டகத்தில் உள்ளே ஒரு குமிழ் திரி இருக்கும்.அதில் எண்ணெய் விட்டு தீப்பெட்டியால் திரியை ஏற்றி அதை சைக்கிளின் முன்பக்கத்தில் வைத்து ஒட்டி போவார்கள். வண்டியை நிறுத்தி பூட்டும்போது அதை கையில் எடுத்து போவது வழக்கம். நான் அதை கையில் வைத்திருந்தேன். ஓப்பனிங் ஷோ டிக்கெட் இல்லை என்று சொன்னது, அந்த கட்சிக்காரர்கள் வந்து சத்தம் போட்டது இவை ஏற்படுத்திய டென்ஷனில் அதை சரியாக பிடிக்காமல் சரித்து பிடித்திருக்கிறேன்.இரண்டு கைகளிலும் எண்ணெய் வழிந்து சட்டையிலும் தெறித்திருக்கிறது. வீட்டுக்கு வந்து சோப்பு, சீகைக்காய் அரப்பு பொடி போட்டு தேய்த்தும் ஸ்மெல் போகவேயில்லை. சாப்பிட முடியவில்லை. என்ன ஆச்சு என்று வீட்டில் கேட்க ஒண்ணுமில்லையே என்று அவசர அவசரமாக விழுங்கி விட்டு எழுந்தேன். எங்கள் தங்க ராஜா கொடுத்த மறக்க முடியாத நினைவு அது.
    மறுநாள் கஸின் டோக்கன் வாங்கி வந்து விட்டார். ஆனால் அடுத்த நான்கு நாட்கள் எப்போது முடியும்? எப்போ சனிக்கிழமை வரும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அப்படி நினைக்க ஒரு காரணம் இருந்தது. பொன்னூஞ்சல் படத்திற்கு பாடல்கள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிவிட்டது என்றால் எங்கள் தங்க ராஜாவிற்கு படம் வெளியாகும்வரை பாடல்களின் இசைத்தட்டு வெளியாகவேயில்லை. பாடல்கள் எப்படியிருக்குமோ என்று யோசனை. நடிகர் திலகத்திற்கு இரட்டை வேடம் என்றே அதுவரை வந்த செய்திகள் எல்லாம் சொன்னதினால் முதன்முறையாக கலர் படத்தில் இரு சிவாஜியும் சந்திக்கும் காட்சி இடம்பெற போகிறது என்ற ஆர்வம் வேறு (சரஸ்வதி சபதத்தில் இரட்டை வேடம் என்றாலும் இருவரும் சந்திக்கும் காட்சி கிடையாது).அதுவும் தவிர பட்டிக்காடா பட்டணமாவிற்கு பிறகு நான் ஓபனிங் ஷோ பார்க்க போகிறேன். அந்த பரவசம் வேறு. சனிக்கிழமை காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து ரெடியாகி எட்டரை மணிக்கு மேல் கிளம்பி விட்டோம். (டிபன் இல்லைனா பரவாயில்லை. பழைய சாதம் கூட போதும் என்று நல்ல பிள்ளைகளாக நாங்கள் சொல்ல) சினிமா போறதுன்னா இரண்டு பேரும் எவ்வளவு சீக்கிரம் கிளம்பறாங்க என்ற குற்றச்சாட்டெல்லாம் காதில் விழாத மாதிரி கிளம்புகிறோம் தியேட்டர் அருகாமையில்தான் என்பதனால் உடனே ஐந்து நிமிடத்தில் போய்விட்டோம். தியேட்டரில் அசாத்திய கூட்டம். வழக்கம் போல் நியூசினிமாவில் மன்ற டோக்கன் என்றால் பெண்கள் உள்ளே போகும் சைடு கேட் வழியாகத்தான் போக வேண்டும் என்று அங்கே நிற்க வைக்கப்பட, வழக்கம் போல் வரிசை சீராக நகராமல் அடிக்கடி நிலைகுலைவது எல்லாம் நடைபெறுகிறது. ஆனால் மாளிகைக்கு நடந்தது போல் பெரிய தள்ளு முள்ளு இல்லை. அதற்கு முதல் நாள் நவசக்தி பேப்பரில் ரோஜாவின் ராஜா படத்துக்காக ஒரு காட்சி படமாக்கப்பட்டதை எழுதியிருந்தார்கள். நடிகர் திலகம் காதல் தோல்வியால் மனமுடைந்து பித்து பிடித்தாற்போல் இருக்கும்போது அவரின் தாய் ருக்மணி இறந்து போவார். தாயின் இறப்பை பார்த்துவிட்டு தாயோடு பேசுவது அதை நடிகர் திலகம் வித்தியாசமாக செய்திருப்பார். அது படமாக்கப்படும்போது நடிகர் திலகம் அழவில்லை. ஆனால் செட்டில் இருந்த பலரும் கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள். அந்த செய்தியின் தலைப்பே அழாமலே அழ வைத்த சிவாஜி. என் கஸினிடம் அதை சொல்லியிருந்தேன். அவர் உள்ளே போவதற்காக வரிசையில் நிற்கும்போது அவர் நண்பர் ஓருவரிடம் சொல்ல சொல்ல அவரிடம் சொன்னேன். அவர் மற்றொரு நபருக்கு அந்த மற்றொருவர் வேறொரு நபருக்கு இதை சொல்லும்படி சொல்ல இந்த காட்சியை உள்ளே போவதற்குள் ஒரு 7,8 நபர்களுக்கு சொல்லியிருப்பேன். உள்ளே நுழைந்து டிக்கெட் மாற்றி அரங்கிற்கு உள்ளே போய் அமர்கிறோம். சனிக்கிழமை என்பதால் 10.30 மணிக்கு மேல் பெல் அடிக்கப்பட்டது. திரைசீலைகள் இழுத்து விடப்பட அரங்கத்தில் இருள் சூழ்ந்து திரையில் ஒளி வெள்ளம் பாய, சென்சார் சான்றிதழ் 14 ரீல்கள் என்று காட்டுகிறது.
    வெகு நாட்களுக்கு பிறகு பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அளிக்கும் என்று டைட்டிலில் வந்தது. டைட்டில் முடிந்து முதல் காட்சி சௌகார். வயதான உடலுக்கு முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தாய், இரண்டு தம்பிகள், ஒருவன் முரடன் தனது சகோதரியை யாரேனும் தவறாக பேசிவிட்டால் அவர்களை அடித்துவிடும் அளவிற்கு முரடன். அதற்கு நேர் எதிர் குணம் கொண்ட தம்பி. குடும்ப நண்பர் காதராக மேஜர் என்று பாத்திரங்கள் அறிமுகம். கட்டிட வேலைக்கு போகும் சௌகார் அங்கே முதலாளி மனோகர், மேஸ்திரி ராமதாஸ். சௌகாரை அடைய திட்டம் போடும் மனோகர் அவரிடம் ஆசை காண்பிக்க சௌகார் அவரை எடுத்தெறிந்து பேசிவிட்டு போக மனோகரும் ராமதாஸும் கோபப்படுவார்கள். முதலில் தங்களது கையாளான காந்திமதியை அனுப்பி பேச வைக்க அவரது சுயரூபம் புரிந்து சௌகார் திட்ட, மூத்த தம்பி கவணில் கல் வைத்து அடித்து விரட்டுவான். இரவு நேரத்தில் மனோகர் ராமதாஸ் காந்திமதி வீட்டுக்குள் புகுந்து சௌகாரையும் மூத்த தம்பியையும் தூக்கி செல்ல அவர்களது தாய் அதை பார்த்து உயிரை விட அதன் பிறகு அங்கே வரும் மேஜர் அதை பார்த்துவிட்டு நடந்ததை கடைசி தம்பி ராஜா மூலமாக தெரிந்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுப்பார். பழி உணர்ச்சி ராஜாவிடம் இருப்பதை பார்த்து அதை கூடாது என்பார். அங்கே சௌகார் மனோகருக்கு இரையான பிறகு ஒரு இரவு விடுதியில் தங்க வைக்கப்பட்டு தப்பித்து போக நினைத்தால் தாங்கள் தூக்கி வந்திருக்கும் சௌகாரின் மூத்த தம்பியை கொலை செய்து விடுவோம் என மனோகர் மிரட்டி இருக்க வைப்பார்.
    அடுத்த காட்சி சமையற்கட்டில் மேஜர், கல்லில் சப்பாத்தி சுட, க்ளோஸ் அப் போகும் கேமரா சப்பாத்தியின் அளவு சின்னதாக இருந்தது பெரியதாக மாறுவதை காண்பித்து மீண்டும் மேஜரிடம் வர அவர் வயதான தோற்றத்தில் காட்சியளிக்க அவரிடமிருந்து திரும்ப அங்கே முருகன் படத்திற்கு முன் ஒயிட் அண்ட் ஒயிட் பான்ட் ஷர்ட் அணிந்து நடிகர் திலகம் கண்மூடி கைகூப்பி நிற்கும் காட்சி தெரிய, அரங்கம் மொத்தம் கைத்தட்டல்களால் அதிர்கிறது. பேப்பர்மாரி பொழிகிறது. ராஜா என்று அழைத்து மேஜர் பார்த்து பத்திரமா போ என்று வழியனுப்ப மருத்துவ மாணவரான நடிகர் திலகம் சைக்கிள் எடுத்து வர, அந்த குப்பத்தில் இருக்கும் டீக்கடை நாயர் (நீ பெரிய டாக்டராக வரணும்ன்னு நான் அய்யப்பனை வேண்டுன்னு) ,ஆப்பம் விற்கும் ஆயா (ராஜா, முதல் ஆளா நீ போனி பண்ணிட்டேல்லே இனி வியாபாரத்திற்கு என்ன பஞ்சம்) சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் அந்தோணி (ISR குடிமகனே பாட, எனக்கு வேண்டாம் நீயே வச்சுக்கோ என்பார் நடிகர் திலகம்), இந்த சின்ன சின்ன பிட்ஸ் தியேட்டரில் பெரிய அலப்பறையை உருவாக்குகிறது. சைக்கிள் ஒட்டி செல்லும் நடிகர் திலகம், பின்னால் தோழிகளுடன் காரில் வரும் மஞ்சுளா காரை சைக்கிள் மீது இடிக்க கீழே விழும் நடிகர் திலகத்துடன் வேண்டுமென்றே வாக்குவாதம் செய்ய நடிகர் திலகம் அவர்களை சட்டை செய்ய மாட்டார். கீழே விழுந்த சைக்கிளை சரி செய்து கல்லூரிக்கு போக ஒரு டாக்டருக்கு நேரம் தவறாமை எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிக் கொண்டிருக்கும் பிரின்சிபால் நடிகர் திலகம் தாமதமாக வருவதை சுட்டிக்காட்ட அனைவரும் சிரிக்க நாகேஷ் என்ட்ரி ஆகி அதை சமாளிப்பார்.
    நடிகர் திலகத்தை ஒரு தலையாய் விரும்பும் மஞ்சுளா தோழிகள் உதவியுடன் அவர் தன் மேல் இடித்து விட்டதாக கூறி ரகளையில் ஈடுபடுவார். அதன் பின் எப்போதும் தனியாக அமர்ந்து சாப்பிடும் நடிகர் திலகத்தை கிண்டல் செய்து அவரின் டிபன் பாக்ஸை பிடுங்கி கிண்டல் செய்ய சாமியிலும் சாமியிது ஊமைச்சாமி பாடல் காட்சியாக விரிகிறது. இந்த படத்தின்ஆறு பாடல்களில் ஐந்து பாடல்கள் சுசீலாம்மா பாடியிருப்பார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். குறிப்பாக இந்த பாடலும் முத்தங்கள் நூறு பாடலும் சாதாரணமாக ஈஸ்வரியிடம் போயிருக்க வேண்டியது. ஆனால் மாமா துணிந்து சுசீலாம்மாவையே பாட வைத்திருப்பார். அவரும் பிரமாதப்படுத்தியிருப்பார். சரணத்தில் சம்போ சங்கர மகாதேவா சாம்ப சதாசிவ குருதேவா என்ற வரிகளை அலட்சியம், திமிர் தொனிக்க அவர் பாடியிருக்கும் விதத்திற்கு பாராட்டு. பாடல் முடிய, டிபன் பாக்ஸ் கீழே விழுந்து இருக்கும் ஒரு சப்பாத்தியும் மண்ணில் விழுந்துவிட எதுவும் பேசாமல் நடிகர் திலகம் டிபன் பாக்ஸை மட்டும் எடுத்து போக அதற்கு முன் டிபன் பாக்ஸை மாறி மாறி இழுக்கும் நேரத்தில் மஞ்சுளா நடிகர் திலகத்தின் மேல் சாய்வதை பார்த்துவிடும் பிரின்சிபால் வீரராகவன் என்ன என்று சக மாணவிகளை கேட்க அவர்கள் நடிகர் திலகத்தின் மீது பழி போட அடுத்த காட்சியில் வகுப்பில் அமர்ந்திருக்கும் நடிகர் திலகத்தை பிரின்சிபால் அழைப்பதாக செய்தி வரும்.
    ராஜவை பிரின்சிபால் எதுக்கு கூப்பிடறார் என்று பக்கத்திலிருக்கும் மாணவன் கேட்க பிரின்சிபாலுக்கு பாடத்திலே ஏதாவது சந்தேகம் வந்திருக்கும். அதான் ராஜாவை கூப்பிட்டு கேட்கிறார் என்ற நாகேஷின் பஞ்சிற்கு செம கைதட்டல். அங்கே பிரின்சிபால் உன்மேலே புகார் வந்திருக்கு. நானே நேரில் பார்த்துட்டேன் இந்த வயசிலேதான் மனசை கட்டுப்பாடா வச்சிருக்கணும். உன் நடத்தையில் ஏற்பட்ட தவறினால இதுவரைக்கும் உனக்கு கிடைச்சிட்டிருந்த ஸ்காலர்ஷிப் இனிமே உனக்கு கிடைக்காது. நீதான் பணம் கட்டி பரீட்சை எழுதணும் என்று நடிகர் திலகத்தை பேச விடாமல் அனுப்பி விடுவார். வீட்டிற்கு வரும் மஞ்சுளா என்னாலேதானே உங்களுக்கு இந்த நிலைமை.நானே உங்களுக்காக பணம் கட்டறேன் என்று சொல்ல நடிகர் திலகம் மறுப்பார். உன்னை மாதிரி பணக்காரங்களுக்கு எங்களை மாதிரி ஏழைகளை சீண்டுவது அவர்களை அவமானப்படுத்துவதுதான் சந்தோஷம் என்பார். என்னை ஒரு நாள் புரிஞ்சுக்குவீங்க என்று மஞ்சுளா போக மேஜர் வர அவரிடம் பணம் கிடைத்ததா என்று கேட்க இல்லை என்பார். தாதா, குல்லாவுக்காக பொறந்தவன் கிரீடத்திற்கு ஆசைப்படக்கூடாதுன்னு நடிகர் திலகம் சொல்ல நீ கிரீடத்திற்காகவே பொறந்தவன் ராஜா என்று மேஜர் சொல்ல தியேட்டர் அதிர்கிறது.
    அங்கே மனோகர் வீட்டில் ராமதாசும் வேறொரு நபரும் பணத்தையும் டைமண்ட்ஸ் பெட்டி என கொடுப்பார்கள். அங்கே மோகன்லால் சேட் என்ற பெயரில் மாலி வருவார். அவரிடம் ஓட்டல் கட்ட என்று ஏற்கனவே பணம் வாங்கியிருக்கும் மனோகர் வேலையை முடிக்க மேலும் பணம் வாங்க அங்கே குப்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த சிறு சிறு தொகையை கொண்டு நடிகர் திலகத்திடம் கொடுத்து பீஸ் கட்ட சொல்வார்கள். அடுத்த காட்சியில் நடிகர் திலகம் நடந்து வந்து கொண்டிருக்க காரில் வரும் மஞ்சுளா காரை நிறுத்தி நடிகர் திலகத்தை ஏற சொல்ல அவர் மறுக்க காரை அனுப்பி விட்டு நான் உங்களோடு நடந்து வருகிறேன் என்பார் மஞ்சுளா. நடிகர் திலகம் வேண்டாம் என்பார். என் பாதை கடினமானது.அதில் உன்னால் தொடர்ந்து வர முடியாது என்பார்.நீங்க என்னை விரும்பறீங்க என்று மஞ்சுளா சொல்ல உண்மையை சொல்லட்டுமா எனக்கு உன்னை பிடிக்கலை என்பார் நடிகர் திலகம். உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க என்று மஞ்சுளா சொல்ல என் மனசாட்சியை தொட்டு சொல்றேன். உன்னை எனக்கு பிடிக்கலை என்று சொல்லிவிட்டு சிலையாய் உறைந்து போகும் மஞ்சுளாவை விட்டு விலகி நடக்க ஆரம்பிப்பார். தியேட்டர் மொத்தம் எழுந்து விட்டது. பின்னணி இசை சட்டென்று வேகம் எடுத்து பின்னர் குறையும். ஒரு கோடு கிழித்தாற்போல் கேமரா பின்னாடியே வர அந்த நேர்கோட்டில் சற்றும் மாறாமல் நேராக நடிகர் திலகம் நடக்க அந்த காட்சியும் அதற்கு ஓபனிங் ஷோவில் கிடைத்த ஆர்ப்பாட்டமான அலப்பரையும் மறக்கவே முடியாது.
    தேர்வு எழுதும் நடிகர் திலகம், பின்னாடி பெஞ்சில் இருந்து நாகேஷ் எட்டி எட்டி பார்த்து எழுத முயற்சிப்பார். அவரை பார்த்து பின்னால் இருப்பவர் எழுத பார்க்க என்னை பார்த்து காப்பி அடிக்காதே. நானே ஸ்ரீராமஜெயம்ன்னு எழுதியிருக்கேன் என்று நாகேஷ் சொல்ல, பின்னால் இருப்பவர் ஒழுங்கா பாரு ஸ்ரீ ராமானுஜம்ன்னு எழுதியிருக்கே என்று சொல்ல செம சிரிப்பு அரங்கத்தில். தேர்வு முடிவு வரும் போது நடிகர் திலகம் முதல் மாணவனாக வருவார். நாகேஷ் பாராட்ட அந்நேரம் மஞ்சுளா வருவார். மீண்டும் தனது காதலை சொல்ல நடிகர் திலகம் மீண்டும் மறுப்பார். என் வாழ்க்கையிலே முக்கியமான கட்டம் இனிமேதான் வரப்போகுது. அதிலே நான் இறந்து போகலாம். ஜெயிச்சாலும் தூக்கு மேடைக்கு போகலாம் என்று பேச எனக்கு ஒன்னும் புரியலையே எனும் மஞ்சுளாவிடம் என்னை மறந்துடுன்னு சொல்றேன் என்பார். நடிகர் திலகத்திற்கு மாலை போட்டு குப்பத்திற்கு ரிக் ஷாவில் அழைத்து வரப்பட குப்பத்து ஜனங்கள் அவரை எங்கள் தங்க ராஜா வாழ்க என்று கொண்டாடுவார்கள். நடிகர் திலகத்தை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க மருத்துவதுறையை சேர்ந்தவர் நடிகர் திலகத்திடம் சொல்ல குப்பத்தில் அனைவரும் அவரை அமெரிக்கா செல்ல வற்புறுத்த நடிகர் திலகம் நான் அமெரிக்கா போக போவதில்லை. இங்கேயே இருந்து உங்களுக்குகெல்லாம் மருத்துவம் பார்க்க போகிறேன்.என்பார். அவர் இருக்கும் குப்பத்தில் காமராஜ் நகர் என்று பெயர் பலகை திறந்து(அந்த பெயரை பார்த்தவுடன் ஒரே அலப்பறை) சீதா மருத்துவமனை என்பதையும் திறப்பார்.
    மருத்துவமனையில் டீக்கடை நாயரை செக் பண்ணிவிட்டு இனிமேல் பீடி குடிக்கக்கூடாது என்று சொல்லியவாறே சீட்டில் வந்து அமர பின்னால் பெருந்தலைவரின் பெரிய புகைப்படம். தியேட்டர் மீண்டும் அதிர்கிறது. ஆப்பக்கார அம்மா வர அவருடன் நடிகர் திலகம் பேச ஹாய் ராஜா என்று நாகேஷ் வர, யாருடா நீ எங்க ராஜாவை மரியாதை இல்லாம பேசறவன் என்று அந்த அம்மா எகிற என் நண்பன்தான் என்று நடிகர் திலகம் சமாதானம் செய்வார். ஏம்பா உங்க பேட்டையில் உன்னை பத்தி பேசினா பெண்ட் எடுத்துடுவாங்க போலிருக்கு என்று நாகேஷ் கேட்க, பேசித்தான் பாரேன் என்பார் நடிகர் திலகம். பேட்டையை வளைச்சுட்டே போலிருக்கு என்று நாகேஷ் சொல்ல முதலில பேட்டையை வளைப்போம் அப்புறம் என்று நடிகர் திலகம் இழுக்க புரியுது புரியுதுன்னு நாகேஷ் சொல்ல இங்கே புரிந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கிறார்கள். நீ இங்கே கம்பௌண்டராக இரு என்று நடிகர் திலகம் சொல்லுவார். நடிகர் திலகம் இல்லாத நேரத்தில் மஞ்சுளா அவரை தேடி ஆஸ்பத்திரி வர அங்கே அவசர கேஸாக அடிபட்டு வரும் ஒரு பையனுக்கு சிகிச்சை அளிப்பார். நடிகர் திலகம் வந்துவிட அவரிடம் மஞ்சுளா பேச மீண்டும் நடிகர் திலகம் மஞ்சுளாவை ஏற்றுக் கொள்ள மறுப்பார். இரும்பு பெட்டிக்கும் இதயத்திற்கும் சம்பந்தமேயில்லை என்பார். உங்க ஆஸ்பத்திரிக்கு நான் டெய்லி வரத்தான் போகிறேன் என்று சொல்லிவிட்டு போக ஏம்பா வசந்தி வரட்டுமே ஏன் தடுக்கிறே என்று நாகேஷ் கேட்க அவ ஒரு அன்பு தொல்லை என்று நடிகர் திலகம் சொல்ல அந்த நேரத்தில் ரிக் ஷா அந்தோணி மயக்கம் போட்டு கிடக்கிறார் என்று செய்தி வர நடிகர் திலகம் ஓடுவார். அவர் மேஜையில் வைத்திருக்கும் உண்டியலை நாகேஷ் எடுத்து குலுக்கி பார்க்க பணம் காசு இருப்பது தெரிய வர உண்டியலை தட்டி உடைக்க போக பெருந்தலைவரின் போட்டோ கண்ணில் பட உண்டியலை அப்படியே வைத்துவிட்டு நாகேஷ் கன்னத்தில் போட்டுக் கொள்ள தியேட்டரில் கைதட்டல் காதை கிழிக்கிறது.
    ரிக் ஷா அந்தோணியிடம் இனி குடிக்கக்கூடாது. உங்க சாமி மேலே சத்தியம் பண்ணு என்று நடிகர் திலகம் சொல்ல என் சாமி நீதான் வாத்தியாரே. இனிமே உன்மேலே சத்தியமா குடிக்க மாட்டேன் என்று சொல்ல தியேட்டரில் அலையலையாய் கைதட்டல். அடுத்த காட்சியில் மழைக்கு ஒதுங்கி நிற்கும் நடிகர் திலகத்தை பார்த்துவிட்டு காரில் வரும் மஞ்சுளா இங்கே ஏன் நிக்கறீங்க உள்ளே வாங்க, இது எங்க வீடுதான் என்பார். முதலில் மறுக்கும் நடிகர் திலகம் மஞ்சுளா வற்புறுத்தவே உள்ளே போவார். நீங்க ஏதாவது சாப்பிட்டுத்தான் போகணும் என்று நடிகர் திலகத்தை உட்கார வைத்துவிட்டு மஞ்சுளா போக சுற்றும் முற்றும் பார்வையை ஓட விடும் நடிகர் திலகம் கண்ணில் சுவற்றில் மாட்டியிருக்கும் அந்த போட்டோ சிக்கும். அதுவரை சிரிப்பு தவழ்ந்த முகம் மெல்ல மாறி கண்கள் அப்படியே சிவந்து போக பொங்கி வரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் உதட்டில் பல்லை கடித்து அடக்கி நிறுத்த கையில் கோப்பையுடன் வரும் மஞ்சுளா அதிர்ந்து என்னாச்சு என்று கேட்க இந்த போட்டோவிலே இருக்கிறது யாரு என்று நடிகர் திலகம் பதில் கேள்வி எழுப்ப அவர்தான் எங்க அப்பா என்று மஞ்சுளா சொல்ல உங்கப்பாவா என்று கேட்கும்போதே மனோகர் படிகளில் இறங்கி வர அவரை பார்த்ததும் நடிகர் திலகத்தின் முகத்தில் மின்னி மறையும் அந்த உணர்வுகள். கைதட்டல்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ? மனோகரிடம் மஞ்சுளா நடிகர் திலகத்தை அறிமுகப்படுத்த ஓ! அந்த குப்பைமேட்டு டாக்டர் இவர்தானா என்று கேட்க உங்கப்பா ரொம்ப நல்லவர்ன்னு சொன்னியே என்று நடிகர் திலகம் வெளியேற மனோகருக்கும் மஞ்சுளாவிற்கும் வாக்குவாதம் தொடர இனி அங்கே போகக்கூடாது என்பார் மனோகர்
    வீட்டிற்கு சென்று மேஜரிடம் உணர்ச்சி பிழம்பாய் நடிகர் திலகம் கொந்தளிப்பார். பழி வாங்கும் வெறி அவருக்குள் புகுந்து ஆட்டி வைப்பதை பார்த்து மேஜர் அந்த எண்ணமே உனக்கு வேண்டாம் ராஜா என்பார். நீ உயிரை காக்கற தொழில் செய்யறே. இந்த பழி வாங்கும் எண்ணத்தை விட்டுடு என சொல்ல மனசு வேண்டாம்ன்னு சொல்லுது. ஆனா என் மனசாட்சி என்னை குத்துது. ஆண்டவனே எனக்கு பொறுமையை கொடு. நிம்மதியை கொடு என்று பெருந்தலைவரின் போட்டோவிற்கு கீழே சாய்ந்து நின்று நடிகர் திலகம் பேச மீண்டும் இங்கே ஆரவாரம். மஞ்சுளா வீட்டில் படுத்திருக்க போன் வரும். அந்த பக்கம் நடிகர் திலகம் என்பது மஞ்சுளா பேசுவதிலிருந்தே புரியும். மாலை சந்திக்கலாம் என்றதும் மஞ்சுளா மகிழ்ச்சியாக எழுந்து அறையை சுற்றி ஆட பின்னணியில் மாமா ஒரு சித்தார் வாசிப்பை இழைத்திருப்பார். சட்டென்று வெஸ்டர்ன் இசைக்கு மாற அந்த சுவர் நீள வார்டரோபில் (Wardrobe) அத்தனை புடைவைகளிலிருந்து ஒரு ரெட் கலர் ஸாரியை எடுத்து காமெராவிற்கு முன்னால் வீச அடுத்த காட்சி கலையான ஆசை வந்த காரணத்தை சொல்லவா? பாடல்க திரையில் ஒளிர்கிறது. இருவரும் கையில் ஒரு நீளம் கூடிய கைக்குட்டையை வைத்து ஸ்டெப்ஸ் போட தனக்கே உரித்தான நடை கை அசைவு போன்றவற்றில் நடிகர் திலகம் தூள் கிளப்ப இந்த பாடலிலும் ஸ்வர பிரஸ்தானங்களிலும் சுசீலா ஸ்கோர் செய்திருப்பார். பாடல் முடியும்போது கையில் தூக்கி வைத்திருக்கும் மஞ்சுளாவை பொத்தென்று போட்டுவிட்டு போக அவர் பழிவாங்கவே காதலிப்பதாக நடிக்கிறார் என்று நமக்கு புரியும். ஆனால் மஞ்சுளாவுக்கு புரியாது. வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் விசாரிப்பார். அது முடிந்து வீட்டுக்குள் நுழையும் மஞ்சுளாவிடம் மனோகர் கோபப்படுவார். மறுநாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கிடையில் கையில் காயம் பட்டுக் கொள்ளும் மஞ்சுளாவுக்கு மருந்து போடுவார் நடிகர் திலகம். அப்போதும் கல்யாணம் பற்றி மஞ்சுளா பேச இது சரியாக வராது என்பார் நடிகர் திலகம். மஞ்சுளா அந்த பக்கம் போக அய்யோ என்ற அலறலுடன் நாகேஷ் துள்ளி குதிக்க என்ன என்று கேட்கும் நடிகர் திலகத்திடம் நவசக்தி பேப்பர் கொடுப்பார். அதில் பட்டாக்கத்தி பைரவன் விடுதலை என்ற செய்தி இருக்க என்னவென்று நடிகர் திலகம் கேட்க எங்கப்பாதான் அவனை ஜெயிலுக்கு அனுப்பியது. அவன் வெளியே வந்து என்னை பழி வாங்க போகிறான் என்று நாகேஷ் சொல்ல போடா பைத்தியம் என்று நடிகர் திலகம் போக, போனால் போகட்டும் போடா என்று பாடும் நாகேஷ் அதை நிறுத்தி பைரவா என்று கத்த
    மஞ்சள் கலர் பான்ட், அதே கலர் ஓவர்கோட், உள்ளே ரவுண்டு நெக் ப்ளூ கலர் T ஷர்ட் அணிந்து ஒரு மோட்டார் பைக்கை நடிகர் திலகம் ஒட்டி வர (முன்பொரு முறை சொன்ன அதே உவமை) வானம் இடிப்பட்டது பூமி பொடிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரும் எழுந்து நின்று ஒரே குரலில் ஆர்ப்பரிக்க பல்வேறு திசைகளிலுமிருந்து கத்தை கத்தையாய் காகித துண்டுகள் வீசப்பட, திரையில் என்ன நடக்கிறது என்பதையே யாரும் சரியாக முழுமையாக பார்த்தார்களா என்பது கேள்விக்குறியே. போதாக்குறைக்கு உணர்ச்சி மிகுதியால் சிலர் அரங்கத்தின் நடுவே இருக்கும் தட்டிகளை ஓங்கி தட்ட சிலர் அமர்ந்திருந்த பெஞ்சையே தூக்கி போட முயற்சிக்க அது போல ஒரு அலப்பறையை அதற்கு முன்போ அல்லது பின்போ பார்த்ததில்லை என்றே சொல்லுவேன். அனைவரும் ஒரு வழியாக அமர்ந்தபோது பைரவன் நாகேஷையம் கூட்டி மனோகர் ஹோட்டலுக்கு போவது வந்துவிட்டது. அங்கே ராமதாஸ் முறைத்து தகராறு செய்ய முதல் சண்டைக்காட்சி. நல்ல வேகத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி, ஏற்கனவே கொதி நிலையில் இருக்கும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து அலறுகிறார்கள். சண்டை முடிந்து மனோகர் வர வீட்டிற்குள்ளே ஓடும் காரில் ஏற்றி உள்ளே கூட்டி போய் ஒரு பெட் ரூமில் விட, எனக்காக வேலை செய்கிறாயா என்று மனோகர் கேட்க நான் கேட்பதை கொடுக்க வேண்டும் என்று நடிகர் திலகம் டிமாண்ட் செய்வார். சரி என்று சொல்லி மனோகர் ஏ. சகுந்தலாவையும் கூட்டத்தையும் அழைக்க எங்கே ஆடு என்று நடிகர் திலகம் சொல்ல மும்மும்மா முத்தங்கள் நூறு பாடல். முன்பே சொன்னது போல் ஈஸ்வரி பாட வேண்டியது. ஆனால் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சுசீலா பின்னயிருப்பார். ஆனால் சகுந்தலா பல்லவி பாடி முடித்ததும் சுற்றிலும் பெண்கள் கைகளில் ரிப்பன் போன்ற நீள துணிகளை பிடித்து நிற்க இரு கால் அகற்றி இரு கை பக்கவாட்டில் நீட்டி சற்றே உடமபை வளைத்து சாய்ந்து நின்று முமும்ம்மா முத்தங்கள் நூறு என்று நடிகர் திலகம் ஆரம்பிக்க இங்கே மீண்டும் அணை உடைந்தது. யாராலும் யாரையும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒவ்வொரு வரியும் ஐவரி என்று சொல்லுவது போல் ஒவ்வொரு வரிக்கும் அலப்பறை. ஆடை அளந்து அவர் ஆட்டம் அளந்து வரிகளுக்கும் சரி அதற்கு அவர் போடும் ஸ்டெப் ஆகட்டும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. நலலவரை அணைப்பேன் மதிப்பேன், வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன் என்று கை மடக்குவதாகட்டும் காதே கிழிந்து விடும் போல சவுண்ட். அந்த ஸ்பீடான நடை ஓட்டம் கடைசியில் அப்படியே ஒரு ஜம்ப் பண்ணி கட்டிலில் தாவும்போது அரங்கத்தில் யாரும் நிதானமாகவே இல்லை. அதோடு இடைவேளை.
    இடைவேளையில் வெளியே போன யாருக்கும் தரையில் கால் பாவவில்லை அப்படியே மிதப்பது போல் உணர்வு. இன்றைக்கு மாஸ் என்று சொல்லப்படுகின்ற அனைத்து அம்சங்களையும் படத்தில் கொண்டு வந்திருப்பார்கள். மெயின் கேட்டில் ஏறி வெளியே நிற்பவர்களிடம் உற்சாகத்தை பகிர அங்கே சரம் வெடிக்கிறது. கஸினின் நண்பர் ஒரு சில விஷயங்களை விட்டுட்டு பார்த்தா "அந்த பக்கம்" படம் மாதிரி மாதிரி இல்லே என்று கேட்டது இப்போதும் நினைவிருக்கிறது. மீண்டும் படம் தொடங்க சகுந்தலா என்னிடம் ஒரு விலையுயர்ந்த வைரம் இருக்கு. அதை வித்து கொடுத்தா பாதி உனக்கு என்று சொல்ல அதை நடிகர் திலகம் அவரிடமிருந்து கவர,மனோகர் வந்து ஒரு வைரம் காணாமல் போய்விட்டது என்று சொல்ல அவர் முகத்திலேயே துப்புவார் நடிகர் திலகம். இதுதானே அது? என்னை டெஸ்ட் பண்ண பார்க்கிறியா என்று எகிற,மனோகர் சமாதானம் செய்வார். சரி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க கனகா வீடு என்று நடிகர் திலகம் சொல்ல மனோகர் அதிர்ச்சியாவார். முதலில் அப்படி கிடையாது என்பவர் நடிகர் திலகம் அவருடைய விஷயங்களை எல்லாம் பிட்டு பிட்டு வைக்க உனக்குதான் எல்லாமே தெரிந்த்திருக்கே என்பார் மனோகர். ஆமா ஊழல் எங்கே நடக்குது? உண்மை எங்கே இருக்குது எல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்ல இடைவேளைக்கு பிறகு புது எனர்ஜியுடன் மீண்டும் இங்கே கைதட்டுகிறார்கள். அடுத்து நடிகர் திலகம் அந்த வீட்டிற்கு போக அங்கே பல பெண்கள் காந்திமதி மேற்பார்வையில் தவறான வழியில் ஈடுபடுத்தப்படுவதை புரிந்து கொள்வார். அங்கே இருக்கும் சௌகார் இவரை பார்த்து சத்தம் போட அவரை இழுத்து ஒரு தனியறையில் தள்ளுவார். முதலில் இவரின் நோக்கத்தை தவறாக புரிந்து கொள்ளும் சௌகார் கோபப்பட நடிகர் திலகத்தின் கேள்விகள் அந்த எண்ணத்தை மாற்ற தனது தம்பியின் உயிருக்கு பயந்து இருப்பதாக சொல்லுவார். அந்த நேரம் ஆரம்பமாகும் கற்பாம் மானமாம் பாடல். பைரவன் பாத்திரத்தின் மனசாட்சி உடலிருந்து பிரிந்து சென்று பாடுவதாக காட்சிப்படுத்தப்படுகிறது. சமுதாயத்தில் நிலவும் பல கசப்பான உண்மைகளை கவியரசர் தார்மீக கோபத்தில் சாட, வார்த்தைகள் அமிலத்தில் தோய்த்து எடுத்தது போல் வந்து விழும். இதற்கு நடுவில் நாகேஷ் ரமாபிரபா சம்மந்தப்பட்ட இரண்டு காட்சிகள் வந்து போகும்.
    இந்த நேரத்தில் சேட் மாலி மனோகரை பார்க்க வருவார். என் பணத்தை வாங்கிட்டு ஹோட்டலில் பார்ட்னர்ஷிப் தரேன் சொல்லி அதுவும் தரலே பணத்தையும் தரலே வட்டியையும் தரலே என்று புலம்ப ஹோட்டல் நஷ்டத்தில் ஓடுது என்று மனோகர் சொல்ல ஏன்யா பொய் சொல்றே? எனக்கு எதுவும் வேண்டாம். என் பணத்தை மட்டும் திருப்பி கொடுத்துடு என்று கேட்க கொடுக்கலைன்னா என்ன பண்ணுவே என்று மனோகர் திமிராக பதில் சொல்ல நீ பணம் வாங்கின எல்லா ஆதாரமும் என்கிட்டே இருக்கு. உன்கிட்டேயிருந்து என் பணத்தை வாங்கல நான் ராம்லால் கா பேட்டா மோகன்லால் இல்லே இன்றி சொல்லி போக ராம்லால் கா பேட்டா மோகன்லால் இல்லை என்று உறுமுவார் மனோகர். அடுத்து மனோகர் வீட்டிற்கு நடிகர் திலகம் பைரவனாக வருவார். அறையில் மஞ்சுளா உடை மாற்றி கொண்டிருக்க உள்ளே சென்று வம்பு பண்ணுவார் நடிகர் திலகம். அவர் பயந்து அலற ஓடி வரும் மனோகர் இவரை தடுத்து என் பொண்ணு என்று சொல்ல உனக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறதா சொல்லவேயில்லயே என்று மேலும் மஞ்சுளாவை சீண்ட யாருப்பா இது என்று கேட்கும் மஞ்சுளாவிடம் என் பார்ட்னர் என்று சொல்லி அவரை வெளியே அனுப்ப மனோகரின் வயிற்றில் ஒரு குத்து குத்தி அப்படியே படுக்கையில் ஸ்டைலிஷாக விழுவார் இதெல்லாம் ஒரு ஜாலி. உனக்கு என்னய்யா தெரியும் என்று மனோகரை அமைதிப்படுத்த மோகன்லால் சேட் கதையை முடிக்க சொல்வார். இதோ அவன் அட்ரஸ் என்று கொடுக்க அந்த கார்டை கிழித்து அவனுக்கு இனி அட்ரஸ் இல்லை என்பார் நடிகர் திலகம்.
    இரவில் சேட் வீட்டிற்கு போக அங்கே வேலையாட்களுடன் ஒரு சண்டை. அனைவரையும் அடித்து போட்டுவிட்டு சேட் ரூமிற்கு போக அங்கே திண்டில் அமர்ந்திருக்கும் சேட் இவரை பார்த்து பயப்பட அவரை அடித்து துவைப்பது போல் கேமரா அங்கும் இங்கும் உருள அடுத்த காட்சியில் மோகன்லால் சேட் கொலை என்று பத்திரிக்கை செய்தி, அங்கே மனோகர் நடிகர் திலகத்திடம் பிணத்தை என்ன பண்ணே என்று கேட்க நடிகர் திலகம் சொல்ல மாட்டார். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க மீண்டும் கனகா வீடு என்று சொல்ல மனோகர் முதலில் மறுத்து பின் சரி என்பார். அந்த வீட்டில் ஊருக்கு போக விரும்பும் பெண்களுக்கு பணம் கொடுத்து அனுப்புவார். எங்களுக்கு போக இடமில்லை எங்கே போக முடியும் என்று சிலர் சொல்ல சரி இங்கேயே இருங்கள். உங்களுக்கு வழி செய்கிறேன் என்பார். சௌகாரிடம் கேட்க எங்கே போவது என்று தெரியவில்லை என்பார். அப்போது பைரவன் கூடவே இருக்கும் நாகேஷ் ஆஸ்பத்திரியை பற்றி சொல்லி அங்கே இருக்கும் என் நண்பனுக்கு லெட்டர் தருகிறேன் என்பார். அதை வாங்கி கொண்டு போகும் சௌகார் நடிகர் திலகத்தின் மருத்துவமனைக்கு வந்து நாகேஷை பார்க்க அவர் அங்கே வரும் Dr. ராஜா என்ற நடிகர் திலகத்திடம் இவருக்கு ஒரு வேலை கொடுக்க சொல்ல சௌகாரை பார்த்ததும் நடிகர் திலகம் கண்களில் பாசத்தை தேக்க அவருக்கும் அதே போன்ற உணர்வுகள் ஏற்படுவதை இயக்குனர் அழகாய் காண்பிப்பார். சரி என்று சொல்லி நடிகர் திலகம் போக அங்கே வரும் மேஜர் சௌகாரை அடையாளம் கண்டுகொள்ள அவரும் இவரை தெரிந்து கொள்ள தனது அம்மா மற்றும் தம்பிகள் பற்றி கேட்க அம்மா அன்றைய இரவே இறந்து விட்டதையும் மூத்த தம்பி இவரை பின்தொடர்ந்து போனதையும் அதன் பிறகு அவனை பற்றி எந்த விவரமும் தெரியவில்லை என்பார். ஆனால் உன் கடைசி தம்பி ராஜா இங்கேதான் இருக்கான். நீ இப்போ பாரதியே Dr ராஜா அது வேறு யாருமில்ல உன் தம்பிதான் என்று சொல்ல பூரித்து போவார் சௌகார்.என் தம்பி டாக்டரா என்றது கேட்க ஆமாம்மா, இந்த காமராஜ் நகருக்கே அவன் தவப்புதல்வன்ம்மா என்று மேஜர் சொல்லும்போது இங்கே செம அலப்பறை. நான்தான் அவன் அக்கா என்று அவனுக்கு நீங்க சொல்லக்கூடாதுன்னு சௌகார் சொல்ல சரி என்பார் மேஜர்.
    ஆஸ்பத்திரியில் சௌகாரை சிஸ்டர் என்று நடிகர் திலகம் கூப்பிட வேண்டாம் என்று மறுப்பார். இந்த மருத்துவ தொழிலில் சேவை செய்பவர்களை அழைக்கும் சொல் என்று நடிகர் திலகம் கூற அப்போதும் வேண்டாம் என்பார். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்று சௌகாரும் எனக்கு ஒரு அக்கா இருக்காங்க என்று நடிகர் திலகமும் பரஸ்பரம் சொல்லிக்கொள்ள அப்படியென்றால் உங்களை அக்கான்னு கூப்பிடட்டுமா என்று நடிகர் திலகம் கேட்க அதற்கும் ஒப்புக் கொள்ள மாட்டார் சௌகார். அங்கே மீட்கப்பட்ட பெண்களுக்கு ராட்டையில் நூல் நூற்கும் வேலை கொடுக்கப்பட்டிருக்கும். ராமதாஸ் போன்றவர்கள் சமையலுக்கு மாவரைக்க காந்திமதி சமையல் வேலையை புலம்பியபடியே செய்ய நாகேஷ் அவர்களை கடுப்பேத்துவார். ராமதாஸ் முகத்தில் மாவை பூசி அசிங்கப்படுத்த காந்திமதி ராமதாஸை கேவலமாக பேச அப்போது வரும் பைரவனிடம் ராமதாஸ் மோத மறுபடியும் ஒரு சண்டைக்காட்சி. கோபம் வெறியாக மாறி நடிகர் திலகம் ராமதாஸை புரட்டி எடுத்து காலால் ஆத்திரம் தீரும்வரை மிதிப்பார். அடுத்த காட்சியில் ராமதாஸை தூக்கிக் கொண்டு நடிகர் திலகத்தின் ஆஸ்பத்திரிக்கு வர Dr ராஜாவிற்கு ராமதாஸை பார்த்தவுடன் சின்ன வயது நினைவுகள் வர மஞ்சுளா வீட்டில் நடந்தது போல கண்கள் சிவந்து உணர்ச்சி பெருக்கில் உதட்டை கடித்து அடக்க முயற்சிக்க ரத்தம் வழிய என்னால இந்த ஆளுக்கு டிரீட்மென்ட் கொடுக்க முடியாது என்று மறுப்பார் மேஜர் அட்வைஸ் செய்ய முடியாது என்பார். அவன் யார் தெரியுமா என்று கேட்பார். உன் முகத்தை பார்த்தே அவன் யாரு என்பதை புரிஞ்சுக்கிட்டேன் என்பார் மேஜர். மேஜர் வற்புறுத்த அப்போதும் நடிகர் திலகம் மறுக்க சௌகார் வருவார். அவனுக்கு சிகிச்சையளிங்கள் என்பார். ஆவான் யார் தெரியுமா? எங்கக்காவை என் கண் முன்னே கொடுமைப்படுத்தினவன் என்று சொல்ல நான் உங்க அக்காவா இருந்திருந்தா அவனுக்கு டிரீட்மென்ட் கொடுன்னுதான் சொல்லியிருப்பேன் என்று சொல்ல அடுத்த நிமிஷம் நடிகர் திலகம் நர்ஸ் என்றழைக்க சிகிச்சை தொடங்கும்.
    வீட்டிலிருந்து மஞ்சுளா வெளியே கிளம்ப எங்கே போறே என்று மனோகர் கேட்க எப்பவும் போற இடத்திற்குத்தான் என்பார் மஞ்சுளா.அந்த குப்பத்திற்கு நீ போக கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் என் பேச்சை மீறி போனேன்னா உனக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை. என் சொத்தில உனக்கு ஒரு நயா பைசா கூட கிடைக்காது என மிரட்ட மஞ்சுளா நேரே ஆஸ்பத்திரிக்கு வந்துவிடுவார். அப்போதும் நடிகர் திலகம் ஏற்றுக் கொள்ள தயங்குவார். நீ செய்தது சரியில்லை என்பார். மஞ்சுளா அவருடன் வாதம் செய்ய உள்ளிருந்து வரும் சௌகார் மஞ்சுளாவிற்கு பரிந்து பேசுவார். எல்லாத்தையும் விட்டுட்டு உங்களை தேடி வந்திருக்கும் இந்த பொண்ணை ஏத்துக்குங்க என சொல்லி மஞ்சுளா நெற்றியில் குங்குமம் வைக்க மலைப்பிரதேசத்தில் ஒரு பிங்க் கலர் ஸாரீ உடுத்து மஞ்சுளாவும் ஒயிட் பான்ட் பிரவுன் கலர் ஹாப் ஷர்ட் அணிந்து நடிகர் திலகமும் ஓடிவர இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை என்று பாட ஆரம்பிக்க இங்கே மீண்டும் எழுந்து விட்டார்கள். பல்லவி சுசீலாம்மா பாடி முடித்து டிஎம்எஸ் ஆரம்பித்து உலகம் நமக்கினி ஆனந்த கோலம் என முடித்து இடது காலை சற்றே அகட்டி இரண்டு கைகளையும் விரித்து இருவர் என்பதே இல்லை என நடிகர் திலகம் வாயசைக்க முன்னாடி பின்னாடி இருந்தவர்கள் எல்லாம் எழுந்து கைதட்டுகிறார்கள். முதல் சரணம் முடிந்தவுடன் இருவரும் கைகோர்த்து கால் மாற்றி ஆடும் ஒரு ஸ்டெப் வரும். மறுபடியும் அலப்பறை .இரண்டாவது சரணத்தில் கவியரசர் புறநானூற்று(?) பாடலை அடிப்படையாக வைத்து ஆடை இதுவென்ன நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம் என்று வரிகளில் இலக்கியம் பேச சரணத்தின் முடிவில் லோ ஆங்கிள் ஷாட்டில் கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம் என்ற வரிக்கு நிமிர்ந்து நின்று வலது கை ஆட்காட்டி விரலை மட்டும் சுட்டுவார். இங்கே அதகளம். பாடல் முடிந்தவுடன் மனோகர் பைரவனிடம் Dr ராஜா கதையை முடிக்க சொல்ல முதலில் அவனையா என்று கேட்கும் பைரவன் பிறகு சரி என்பார். நான் கேட்கறதை கொடுக்கணும் என கண்டிஷன் போடுவார்.
    பைரவன் Dr ராஜா வீட்டிற்கு சென்று மோகன்லால் சேட்-ஐ என்ன செய்தாரோ அதே போல் டாக்டரையும் செய்ய சத்தம் கேட்டு மேஜர், சௌகார், மஞ்சுளா ஓடி வந்து பார்க்க படுக்கையில் ரத்தக்கறை மட்டும் இருக்க டாக்டர் இருக்க மாட்டார்.அவரை கொன்று விட்டார்கள் என அனைவரும் நம்புவார்கள். நடிகர் திலகத்திற்கு ஒரு மார்பளவு சிலை அமைத்து கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் பாடல் காட்சி. (இது ரசிகர்கள் ஒரு சிலருக்கு அன்றைய காலத்தில் உறுத்தலாக இருந்தது. பெருந்தலைவர் மறைந்தபோது இந்த பாடல் பல இடங்களிலும் ஒலிபரப்பப்பட்டது). பாடல் முடிந்து மனோகர் ஆஸ்பத்திரிக்கு வந்து மஞ்சுளாவை வருமாறு அழைக்க அவர் மறுப்பார். இவர்கள் பேசுவதை மறைந்திருந்து பார்க்கும் சௌகார் மனோகர் போனபிறகு மஞ்சுளாவிடம் வந்து யார் என்று கேட்டு தெரிந்துகொண்டு இவர்தான் நம்ம ராஜாவின் கொலைக்கு காரணம் என்று சொல்ல நாகேஷும் மேஜரிடம் போலீசில் சொல்ல வேண்டும் என்பார். பைரவனை சந்திக்கும் மனோகரிடம் எனக்கு உன் பொண்ணு வேணும் என்று சொல்ல மனோகர் ஆத்திரப்படுவார். போன் பண்ணுன்னு சொல்லிவிட்டு விசிலடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் இசைக்குழுவினர் செய்வது போல் குறுக்கும் நெடுக்குமாக செய்துவிட்டு போக கைதட்டல் பறக்கிறது. ஹோட்டலுக்கு செல்லும் நடிகர் திலகத்தை அடியாட்கள் தாக்க அனைவரையும் அடித்து போட்டுவிட்டு மனோகர் வீட்டிற்கே வந்துவிடுவார். அங்கே மஞ்சுளாவிடம் உங்க அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம் என்பார் (வில்லை வளைச்சது உங்க அப்பா. அம்பா மாறினது என் தப்பா) வாதம் முற்றி மனோகரை கொல்ல முயற்சிக்க போலீஸ் வந்துவிடும். சௌகார் நாகேஷ் அனைவரும் வந்துவிட நடிகர் திலகம்தான் இரண்டு கொலைகளையும் செய்தார் என ம்னோகர் சொல்ல மோகன்லால் சேட் என நடிகர் திலகம் சத்தம் போட மாலி காரிலிருந்து எழுந்து வருவார்.Dr ராஜா என சத்தமாக சொல்லி மீசையையும் தலை விக்கையும் கழட்ட Dr.ராஜாதான் பைரவனாக மாறி அனைத்தும் செய்தார் என்று தெரியவரும். அவரின் மூத்த சகோதரன் இறந்துவிட்டது .தெரியவரும். குப்பத்து பிள்ளையார் கோவிலில் வைத்து நடிகர் திலகம் மஞ்சுளா திருமணம் நடைபெற இரவுக்கும் பகலுக்கும் பின்னணியில் ஒலிக்க வணக்கம்.
    படத்தின் ரிப்போர்ட், வரவேற்பு, வெற்றி செய்திகள் --- அடுத்த வாரம்
    (தொடரும்)
    அன்புடன்

    Thanks Murali Srinivasan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    இதுவரை எதிலும் வராத ORIGINAL ஆதாரங்கள். மிரண்ட அமெரிக்க பத்திரிகைகள், சிவாஜியை, CLARK GABLE என்றன


    1962 இல் அமெரிக்க ஜனாதிபதி திரு கென்னடி அவர்களின் அழைப்பின் பேரில் அமெரிக்கா இந்திய கலாச்சார தூதுவராக மூன்று மாத விஜயம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்கா முழுவதும் சிவாஜியை போற்றி புகழ்ந்தனர். பத்திரிகைகள் பலரும் சிவாஜி அவர்களை உலக மாபெரும் நடிகர்களுடன் ஒப்பிட்டு பாராட்டினர். உலக புகழின் உச்சம் பெற்ற "The King of Hollywood " என்ற புனைபெயர் கொண்ட "CLARK GABLE" அவர்களின் இந்திய வடிவம் சிவாஜி கணேசன் என்று போற்றினர். அந்த பத்திரிகை ஆதாரங்களுடன் இந்த வீடியோ பதிவு. காண தவறாதீர்கள்.

    Thanks Nadigar thilgam T V.


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #4
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    PART-2 திரையுலகில் வெல்லமுடியாத உயரத்தில் இருந்த சிவாஜி - அமெரிக்கா புகழாரம் மனம்திறக்கும் சிவாஜி.


    Thanks Nadigar thilgam T V.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #5
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    #சிவாஜி மட்டுமே பிரம்மாண்ட வெற்றிகள் அதிகம் கொடுத்தவர் #Boxoffice king அவரே ! இதோ ஆதாரங்கள் !.

    youtube இல் சமீப காலமாக ஒரு சிலரால் தவறாகவும் , ஒரு சிலரால் பொய்யும், புரட்டும், புளுகும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பதிவுகளுக்கான ஆவண, ஆதாரங்களுடன் விளக்கமளித்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வீடியோ.
    தமிழ் திரை உலகில் தாம் நடிக்க துவங்கிய 1952 ஆம் ஆண்டு பராசக்தி காலம்தொட்டு இன்றுவரை அதிக அளவில் பிரம்மாண்ட வெற்றி வசூல் கொடுத்த பிரம்மாண்ட நாயகர் சிவாஜி என்பதே நிரூபணம்.


    Thanks Nadigar thilgam T V.


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #6
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    #HERO83 #சென்னை
    1964, 1972 ஆண்டுகளைப் போன்றே 1983 ஆம் ஆண்டிலும் நடிகவேந்தன் திரைத் துறையில் படைத்தச் சாதனைகள் அளப்பற்கரியது. அவற்றை எழுதினாலும் ஏடுகள் போதாது. இவரின் வெற்றிகள் அனைத்தும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே படைக்கப்பட்ட ஒன்றாகும். தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனங்களையோ, அரங்க உரிமையாளர்களை மிரட்டியோ, பணிய வைத்தோ உருவாக்கப்பட்ட சாதனைகளல்ல இவருடையது. அடுத்தடுத்து தொடர்ந்து படங்களை வெளியிட்டு, சமயத்தில் ரசிகர்களே பார்க்கத் திணறிப் போகும் அளவுக்கு தனது மாறுபட்ட நடிப்புத் திறனால் வெவ்வேறு கதை அம்சங்கள் பாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்து, அவற்றைத் தொடர் வெற்றிகளாக்கி தனது ஐம்பத்தைந்தாம் வயதிலும் அவர் செய்த சாதனைகள் வியப்புக்குரியது.
    இந்த 1983 லும் அப்படித்தான். அவர் நடித்து தமிழில் வெளியான படங்கள் ஆறு. அவற்றில் இரண்டு படங்கள் வெள்ளிவிழாவும், இரண்டு படங்கள் நூறு நாளும் ஓடி வெற்றி பெற்றன. 1959, 1961,1972, 1978, 1983 ஆகிய ஆண்டுகளுக்குப்பின் ஒரே ஆண்டில் இரு படங்கள் வெள்ளிவிழா என்று ஆறாம் முறையாக ஓர் அற்புதச் சாதனையை அவர் படைத்திருந்தார். தெலுங்கில் ஒரு படமும், தமிழில் இரு படங்களென மூன்று படங்களில் இரட்டை வேடமேற்று நடித்திருந்தார். அதில், இரு படங்களில் இரு கதாபாத்திரங்களுக்கும் ஜோடிகள் இருந்தன. ( சந்திப்பு / பெஜவாடா பெப்புலி) ஆனால், வெள்ளை ரோஜா படத்தில் இரு வேடங்களுக்கும் ஜோடி இல்லை.
    நான்கு படங்களில் அவரது மகன் பிரபு நடித்திருந்தார். மிருதங்க சக்கரவர்த்தி, சந்திப்பு, நீதிபதி ஆகிய படங்களில் கதையிலும் தந்தை மகனாக இருவரும் நடித்திருந்தனர்.
    1983ல் சில புள்ளி விபரங்கள் / சென்னை நகர சாதனைகள்
    1. மூலக்கடை வெங்கடேஸ்வரா அரங்கில் 50 நாட்களைக் கடந்த படம் நீதிபதி.
    2. திருவொற்றியூர் வெங்டேஸ்வராவில் நூறுநாள் ஓடிய முதல் படம் வெள்ளைரோஜா.
    3. 1983 ல் ஆறு படங்களில் திலகம் நடித்து நான்கு படங்கள் 100 நாள் ஓடின.
    வேறு எவருக்கும் அந்த ஆண்டு ஓடவில்லை. ( நீதிபதி, சந்திப்பு, வெள்ளை ரோஜா, மிருதங்க சக்கரவர்த்தி)
    4. சென்னை சாந்தியில் நீதிபதி, சந்திப்பு, மி. சக்கரவர்த்தி என்று மூன்று படங்கள் 100 நாள் ஓடின. இந்த மூன்றும் தனியரங்கில் 8 லட்ச ரூபாய்க்கும்மேல் வசூலித்தன. வெள்ளை ரோஜா சபையரில் மட்டுமே 8 லட்ச ரூபாய் வசூலித்தது. இதுபோல் தனி அரங்கொன்றில் 8 லட்சரூபாய் வசூலித்ததில் மற்றவர்க்கு இரண்டு படங்ளுக்கு மேல் கிடையாது.
    5. 1983 ல் திரையிட்ட அனைத்து அரங்குகளிலும் நூறுநாளைக் கடந்த சிவாஜியின் படங்கள் 3. ( நீதிபதி, சந்திப்பு, வெள்ளைரோஜா )மற்றவர்க்கு இரண்டுகூட இல்லை.
    6. 1983ல் வெளியான படங்களில் 100 காட்சிகளுக்கும் மேல் தொடர்ந்து அரங்கு நிறைந்ததும் திலகத்துக்குத்தான். நீதிபதி, சாந்தி, அகஸ்தியா, அன்னை அபிராமி அரங்குகளிலும், சந்திப்பு - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியிலும், வெள்ளைரோஜா - தேவி, புவனேஸ்வரி, கிரௌனிலும், மிருதங்க சக்கரவர்த்தி சாந்தியிலும் தொடர்ந்து 100 காட்சிகளுக்கும் மேல் தொடர் HOUSEFULL ஆகின.
    7. 1983 -ல் சென்னையில் 100 நாட்களில் 30 லட்சம் வசூலித்த ஒரே படம் வெள்ளை ரோஜா மட்டுமே.
    8. சாந்தியில் 3 படங்களும், கிரௌனில் இரு படங்களும், புவனேஸ்வரியில் இரு படங்களும், அகஸ்தியா, அன்னை அபிராமி, தேவி, உதயம், அபிராமி ஆகியவற்றில் தலா ஒரு படமும் திலகம் நடித்து 100 நாட்களைக் கடந்தன.
    9. தீபாவளி வெளியீட்டில் சென்னையில் 6 திரைகளில் 75 நாட்களும், 5 திரைகளில் 100+ நாட்களும் ஓடிய ஒரே படம் வெள்ளை ரோஜா.
    10. சென்னையில் மட்டும் சிவாஜி நடித்து வெளியான ஆறு படங்கள் மூலம் வசூலான மொத்தத்தொகை ஒரு கோடிக்கும்மேல்.
    11. 1983ல் நடிகர்திலகம் நடித்து நீதிபதி, சந்திப்பு, வெள்ளைரோஜா மூன்றும் தமிழகமெங்கும் ஒரு கோடி ரூபாய்க்கும்மேல் வசூலித்தது. ஆனால், மற்றவர்க்கு?
    12. சென்னை உதயம் அரங்கினில் நூறுநாள் ஓடிய முதல் தமிழ்ப்படம் வெள்ளை ரோஜா. சபையர் திரையரங்கில் 75 நாட்களைக் கடந்த முதல் தமிழ்ப் படமும் அதுவே. அத்திரையரங்கு நிர்மாணித்த காலந்தொட்டு பெண்கள் கூட்டம் அதிகம் அலைமோதியது வெள்ளைரோஜா படத்துக்குத்தான் என்று அப்போதைய தினமணிக்கதிர் செய்தி வெளியிட்டிருந்தது.
    ( மதுரை, கோவை, சேலம், திருச்சி சாதனைகள் நாளை....)
    நன்றி : மதுரை ரசிகர்களின் சிறப்புமலர்
    தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்

    Thanks nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #7
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
    அந்த நாள் ஞாபகம் - பார்ட் 57
    எங்கள் தங்க ராஜா என்று சொன்னதுமே ஆர்வம் கொண்டது மட்டுமல்லாமல் அதை பற்றிய அனுபவ பதிவிற்கு மிக பெரிய வரவேற்பு அளித்த அனைவருக்கும் மனங்கனிந்த நன்றி. இனி பட்டாக்கத்தி பைரவன் என்ற Dr. ராஜாவிறகு கிடைத்த வரவேற்பு பற்றி பேசுவோம்.
    ஓபனிங் ஷோ முடிந்து நாங்கள் வெளியே வரும்போது கூட வரும் ரசிகர்கள் ஆவேசப்பூர்வமாக மாறியிருந்தனர். வாசலில் ஒரு 1000 வாலா சரம், தீ கொளுத்தப்பட ஏற்கனவே அது சின்ன தெரு, படம் முடிந்து வெளியே வரும் ஒரு ஆயிரம் பேர், அடுத்த காட்சிக்காக வரிசையிலும் அல்லாதும் ஆங்காங்கே நிற்கும் ஆயிரக்கணக்கானோர் இதற்கு நடுவே வெடித்து சிதறும் பட்டாசு என்று ஏரியாவே ரணகளமானது இதை தவிர ரசிகர்களின் வாழ்த்து முழக்கங்கள் அதிர வைக்கிறது. சில அதீத ரசிகர்களின் உணர்ச்சி முழக்கங்கள் வேறு. தியேட்டரை சுற்றி இருக்கும் பல ஏரியாக்களிருந்து படம் பார்க்க வந்த ரசிகர் கூட்டம் அவரவர்கள் ஏரியாவிற்கு அப்படியே ஊர்வலமாகவே சவுண்ட் கொடுத்துக் கொண்டே போகிறார்கள். படத்திற்கு மிக பெரிய பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்ததால் மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு கட்டுக்கடங்காத கூட்டம். பிளாக் டிக்கெட் பயங்கரமான விலைக்கு விற்பனையாகிறது.
    மறுநாள் ஞாயிறு அதை விட கூட்டம். அன்றைய ஈவினிங் ஷோ கூட்டமெல்லாம் வர்ணிக்கவே முடியாத லெவல். முதல் நாள் ராத்திரியை விட பிளாக் இன்னும் அதிக விலைக்கு விற்கிறது. எங்களுக்கு ஒரே சந்தோஷம். 1973ல் மதுரையில் முதல் படமாக (நமது) தொடர் ஹவுஸ்புல் 100 காட்சிகளை தாண்டி விடும் என்பது தெளிவாக தெரிந்ததில் எனக்கு தனி சந்தோஷம். படம் திரையிடப்பட்ட மதுரையின் சுற்று வட்டார ஊர்களிலும் பிரமாதமாக போகிறது என்பது விநியோகஸ்தர் ஆபிசில் இருந்து தெரிய வந்தது. நகரில் மட்டுமல்ல அனைத்து ஊர்களிலும் நன்றாக போகிறது என்பது விநியோகஸ்தருக்கு மிக பெரிய சந்தோஷம் என்று அவர்கள் அலுவலகத்தில் சொல்கிறார்கள். காரணம் அதுவரை இல்லாத அளவிற்கு 9 பிரின்ட்கள் போடப்பட்டு இருக்கிறதே, ரிசல்ட் எப்படியிருக்குமோ என்ற பயம் அவர்களுக்கு உள்ளூர இருந்திருக்க வேண்டும். அந்த முயற்சி சக்ஸஸ் என்றதும் வரும் மகிழ்ச்சி.
    இரண்டாவது வாரம் தயாரிப்பாளர் விளம்பரம் வருகிறது. அது தவிர அன்றைய நாட்களில் மதுரை நகரில் ஓடும் அனைத்து படங்களுக்கும் விநியோகஸ்தர் தரப்பிலிருந்து தினசரி விளம்பரம் தினத்தந்தியில் வரும். நகர் மட்டுமின்றி M R ஏரியாவில் எங்கெல்லாம் ஓடுகிறதோ அதன் விவரங்களும் அதில் இடம் பெறும். படம் வெளியான இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் தந்தியை பார்க்கிறோம். ஆச்சரியத்தில் அசந்து போகிறோம். காரணம் விநியோகஸ்தர் விளம்பரத்தில் 101 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்ற வரி விளம்பரத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இலவச பாஸ் பற்றி தெரியுமா என்பது பற்றி தெரியவில்லை. அன்றைய நாட்களில் வெற்றிகரமாக ஓடிய படம் என்றால் 10 வாரத்திற்கு பிறகோ இல்லை சுமாராக போன படம் என்றால் 50 நாட்களுக்குள்ளாகவே தெரிந்தவர்களுக்கு பாஸ் (Pass) கொடுப்பது வழக்கம். இலவச அனுமதி. இதை லோக்கல் பாஷையில் ஓசி பாஸ் என்று சொல்லுவார்கள். இப்படி கொடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு தமாஷா வரி (entertainment tax) கிடையாது. 1980கள் வரை இருந்த இந்த நடைமுறை பிற்காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்து பின் வழக்கொழிந்து போனது. எங்கள் தங்க ராஜா படத்திற்கு இது போல விளம்பரத்தில் கொடுப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. மாற்று முகாமின் படத்திற்கு 100 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்று விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே 101 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்று வந்தவுடன் ரசிகர்களுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
    படம் சர்வசாதாரணமாக அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்துக் கொண்டிருந்தது. எந்த காட்சிக்கு தியேட்டர் பக்கம் போனாலும் கூட்டம் இருந்தது. எப்போதும் பெரிய வரிசை இருந்தது. வீடு அருகாமையில் என்பதால் அடிக்கடி தியேட்டர் பக்கம் போய் பார்ப்பேன். படம் வெளியான மூன்று வாரத்தில் நானே மூன்று முறை பார்த்து விட்டேன். அப்போதும் காட்சிகள் அலப்பறையாகவே ரசிக்கப்பட்டது. எக்ஸ்ட்ரா ஷோ எதுவும் போடப்படாததால் நான்கு வாரங்கள் 28 நாட்களுக்கு 92 காட்சிகள் (23 * 4) தொடர் ஹவுஸ்புல் ஆனது. பொதுவாக சனிக்கிழமை காலைக்காட்சிகள் பிரச்சனையாக இருக்கும் என நான் இந்த தொடரில் பல முறை சொல்லியிருக்கிறேன். ஆனால் எங்கள் தங்க ராஜாவை பொறுத்தவரை அபப்டி பெரிய சிக்கல்கள் ஏதுமின்றி அரங்கு நிறைந்தது. 29வது நாள் 5 வது சனிக்கிழமை மார்னிங் ஷோ பற்றி ஒரு பயம் இருந்தது. ஆனால் அதுவும் சிக்கலின்றி புல் ஆகியவுடன் அதுவே ஒரு கொண்டாட்டமானது. 30வது நாள் ஞாயிற்றுக்கிழமை நைட் ஷோ 100வது ஷோ. அன்று ஈவினிங் மற்றும் நைட் இரண்டு காட்சிகளுக்கும் சரியான கூட்டம். ஈவினிங் ஷோ ஹவுஸ்புல் போர்டு மாட்டியவுடனேயே தியேட்டர் வாசலில் ஒரு பெரிய அலப்பறை நடந்தது. 5000 வாலாக்கள் அந்த பகுதியை தீபாவளியாக்கியது. நைட் 100வது ஷோவிற்கு என் கஸின் போயிருந்தார். உள்ளே ஒரே கொண்டாட்டம் என்றும் பைரவன் என்ட்ரி மற்றும் பாடல்களுக்கு ஆட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது என்றும் தியேட்டர் ஊழியர்கள் உள்ளே வந்து ஒரு சிலரை வெளியே கூட்டி சென்றதாகவும் அதனால் சலசலப்பு பரபரப்பு ஏற்பட்டது என்றும் பல்வேறு செய்திகளை மறுநாள் கஸின் மூலமாக அறிய நேர்ந்தது.
    வழக்கம் போல் நியூசினிமா தியேட்டருக்கு எதிரே இருந்த விளக்கு கமபத்தில் ஒரு தட்டி கட்டப்பட்டு அதில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த விவரம் எழுதப்பட்டு வைக்கப்பட்டது. சாதாரணமாக அதன் பிறகு ஒவ்வொரு காட்சி அரங்கு நிறையும்போதும் அந்த காட்சிகளின் எண்ணிக்கை மாற்றப்படும். அதாவது 101வது காட்சி ஹவுஸ்புல் ஆகும்போது 100 என்ற எண்ணில் 101 என்று ஓட்டப்படும். அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் எந்த சிக்கலுமின்றி 6 காட்சிகளும் அரங்கு நிறைந்தன. அப்படியாக 32 நாட்களில் நடைபெற்ற 106 காட்சிகளும் ஹவுஸ்புல். 33வது நாள் புதன்கிழமை ஆகஸ்ட் 15, சுதந்திர தினம். ஆகவே லீவு. அன்று சிறப்பு காட்சியாக மார்னிங் ஷோ போடப்பட்டது. அன்று காலை என் கஸின் மெம்பராக இருந்த கிரிக்கெட் டீம் ஒரு மாட்ச் விளையாடுகிறது. அதில் அவரும் விளையாடுகிறார். அரசரடி மைதானத்தில் மாட்ச். காலை 8 மணி முதல். நானும் அவருடன் அரசரடி மைதானத்துக்கு போய்விட்டேன். எட்டு மணிக்கு ஆரம்பிக்காமல் தாமதமாக ஆரம்பித்த மாட்ச் முடியும்போது 12.30 மணியை தாண்டி விட்டது. அதன் பிறகு நாங்கள் பஸ் பிடித்து சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வந்திறங்கி வீட்டிற்கு வருகிறோம். நாங்கள் டவுன்ஹால் ரோடு வழியாக போகலாம் என்று வரும்போது சென்ட்ரல் சினிமா கடந்து வரும் நேரத்தில் அன்று அங்கே சூரிய காந்தி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. என் கஸினின் பெயரை சொல்லி யாரோ கூப்பிடுவது கேட்க திரும்பி பார்த்தால் அவர் நண்பர்கள் நமது ரசிகர்கள் சிலர் நிற்கின்றனர். அவர்கள் சென்ட்ரலில் மாட்னி பார்ப்பதற்காக நிற்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கும்போது கஸின் சரி மார்னிங் எப்படி போச்சு என்று கேட்க, விட்டு போச்சு என்று அவர்கள் பதில் சொல்ல எங்களுக்கு நம்ப முடியாத ஷாக். என்னய்யா சொல்றே என்று கஸின் மீண்டும் கேட்க ஹைகிளாஸ் டிக்கெட் கொஞ்சம் விட்டு போச்சு என்று சொல்கிறார்கள். மன்றக்காரங்க யாரும் வரலையா? அங்கே இருந்தவங்க ஏதாவது செஞ்சிருக்கலாமே என்று கேள்வி கேள்வி மேல் கேட்க நாங்களே அங்கே இல்லை. கேள்விப்பட்ட விஷயத்தை சொல்றோம் என்றார்கள். இவர்கள் உண்மையை சொல்கிறார்களா இல்லை விளையாடுகிறார்களா என்று சந்தேகம் வர, நாங்க சொல்றது உண்மைதான் என்கிறார்கள். நாங்கள் இருவரும் அப்செட் ஆகி நேரே வீட்டிற்கு கூட போகாமல் நியூசினிமா போகிறோம். அங்கே தெரிந்த ஆட்கள் இல்லை. தொடர் ஹவுஸ்புல் தட்டியில் 106 என்றே இருக்கிறது. சரி அவர்கள் சொன்னது உண்மைதான் என்று புரிய பெரிய வருத்தம். எப்படி வசந்த மாளிகைக்கு நடந்ததோ அது போல் இதற்கும் நடக்கிறது. அந்த மார்னிங் ஷோ புல் ஆகியிருந்தால் அந்த வார முடிவில் 116 காட்சிகள் தொடர்ந்து புல் ஆகியிருக்கும். சொல்லி வைத்தது மாதிரி அந்த மார்னிங் ஷோ தவிர்த்து புதன் வியாழன் வெள்ளி அனைத்து காட்சிகளும் (9 காட்சிகள்) அரங்கு நிறைந்தது. வழக்கம் போல் வருத்தப்படத்தான் முடிந்தது.
    அதன் பிறகு படம் ஸ்டெடியாக போனது. Down South என்று அழைக்கப்படும் மதுரைக்கு தென்பகுதிகளில் குறிப்பாக நெல்லை குமாரி மாவட்டங்களில் படம் பிரமாதமாக போனது. 51வது நாள் முழுப்பக்க விளம்பரம் வந்தது. அதன்பிறகும் படம் நன்றாகவே போனது. அந்த வருட தீபாவளி அக்டோபர் 25 வியாழன் அன்று வந்தது. அதற்கு நான்கு நாட்கள் முன்னதாக அதாவது அக்டோபர் 21 ஞாயிறு அன்று 100வது நாள் கொண்டாடியது எங்கள் தங்க ராஜா. சென்னையில் மூன்று, மதுரை திருச்சி, சேலம், நெல்லை, நாகர்கோவில் மற்றும் கோவையில் 100 நாட்கள் ஓடியது. தமிழ் மற்றும் இங்கிலீஷ் தினசரிகளில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ராஜேந்திர பிரசாத் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தார். மதுரையில் நியூசினிமாவில் 103 நாட்களில் ரூபாய் 3,33,586.25 வசூல் செய்தது. படத்தை வெளியிட்ட RmS நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய் ஷேர் மதுரை நியூசினிமாவில் மட்டுமே கிடைத்தது.
    இலங்கையிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது எங்கள் தங்க ராஜா. வசந்த மாளிகைக்கு பிறகு பிரும்மாண்டமான வெற்றி என்றால் எங்கள் தங்க ராஜாதான். 1975ல் இலங்கையில் திரையிடப்பட்டது யாழ்ப்பாணம் நகரில் மிகப் பெரிய திரையரங்கான ராஜாவில் 126 நாட்கள் ஓடி ஒரு புதிய சாதனை புரிந்தது. படம் மறுநாள் காலை 10.30 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது என்றால் முதல்நாள் இரவே கூட்டம் கூட ஆரம்பித்து நள்ளிரவில் அது கட்டுக்குக்கடங்காமல் போனதினால் நடு இரவு 1.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. முதல் நாள் மட்டும் 7 காட்சிகள் திரையிடப்பட்டிருக்கின்றன. ஹவுஸ்புல் காட்சிகளிலும் அங்கே ஒரு புதிய சாதனை ஏற்படுத்தியது எங்கள் தங்க ராஜா. 55 நாட்களில் இலங்கை கரன்ஸியில் ரூபாய் 3 லட்சத்திற்கு மேல் வசூல் செய்து அதிலும் ஒரு புதிய சாதனை புரிந்தது. இலங்கை தலைநகரான கொழும்பிலும் வெற்றிக்கொடி நாட்டியது.கொழும்பு சென்ட்ரல் திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய எங்கள் தங்க ராஜா அதே கொழும்பில் மற்றொரு அரங்கான பிளாசாவில் 75 நாட்கள் ஓடியது. இலங்கையின் மற்ற சிறிய நகரங்களான மட்டு நகர், கண்டி திருமலை ஆகிய ஊர்களிலும் 6 வாரங்கள் ஓடியது. 1975ல் முதல் வெளியீட்டில் இப்படி என்றால் 1978 அக்டோபரில் இரண்டாவது வெளியீட்டின்போதும் யாழ் லிடோ திரையரங்கில் வெளியிடப்பட்டு 42 நாட்கள் ஓடியது. இப்படி திரையிட்ட அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்ற படம் எங்கள் தங்க ராஜா.
    நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த புதிய படங்கள் மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்படும் படங்களும் அவற்றை பற்றிய செய்திகளும் வழக்கம் போல் வந்துக் கொண்டிருந்தது. ரோஜாவின் ராஜா படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. கெளரவம் படத்தின் ஷூட்டிங் துரித கதியில் நடப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தது. மனிதரில் மாணிக்கம், ராஜபார்ட் ரங்கதுரை படங்களின் படப்பிடிப்பு செய்திகளும் அவ்வப்போது வந்தன. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட படங்களான சிவகாமியின் செல்வன், என்னை போல் ஒருவன், தாய், அவன்தான் மனிதன் படங்களின் படப்பிடிப்பு பற்றியும் படமாக்கப்பட்ட காட்சிகள் பற்றியும் பத்திரிக்கைகளில் படித்தோம். வாணி ராணி படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது. தங்கப்பதக்கம் படத்தில் நடிகர் திலகத்தின் வீடு செட் போடப்பட்டு படப்பிடிப்புக்கு தயாராகிறது என்றும் படித்தோம்.
    நீதி படத்திற்கு பின் தனது அடுத்த படத்திற்கு கதை தேடி அலைந்து கொண்டிருந்தார் பாலாஜி. இந்தி ரீமேக் என்று முடிவு செய்துவிட்டதால் பாம்பேக்கு ஓரிரு முறை சென்றும் திருப்தியான படம் கிடைக்கவில்லை. அதன் பிறகு பே இமான் என்ற படத்தின் உரிமையை வாங்கியிருப்பதாக செய்தி வந்தது. 1972ல் வெளியான இந்த படம் பிலிம்பேர் (Filmfare) பத்திரிக்கையின் பல விருதுகளை வென்ற செய்திதான் பாலாஜியின் கவனத்தை இந்த படத்தின் மீது திரும்ப செய்திருக்க வேண்டும். மனோஜ் குமார் மற்றும் பிரான் நடித்த அந்த படத்தின் தமிழ் பதிப்பில் அவர்கள் இருவரின் வேடத்தையும் நடிகர் திலகமே ஏற்க போகிறார் என்ற செய்தியும் வந்தது. சிவிஆர் இயக்க படத்தின் பூஜை போடப்பட்டது. சிவாஜி நாடக மன்றத்தில் தொடக்க காலம் முதல் பணியாற்றி வந்தவர் எஸ்.ஏ கண்ணன். நடிகர் திலகத்தின் ஏராளமான படங்களில் சிறிதும் பெரிதுமான பல வேடங்கள் செய்திருக்கிறார். சிவாஜி நாடக மன்றத்தின் ஆஸ்தான இயக்குனர். அன்னை இல்லத்தின் ஒரு அங்கம் என்றே அந்த காலத்தில் திகழ்ந்தவர். அவருக்கு ஒரு படம் செய்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்து சண்முககனி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஒரு வண்ணப்படம் அறிவிக்கப்பட்டது. நடிகர் திலகம், தேவிகா, மஞ்சுளா, ஜெயசித்ரா மற்றும் சசிகுமார் நடிப்பதாக செய்தி வந்தது. தீ விபத்தின் காரணமாக சசிகுமார் இறந்துவிட அந்த வேடத்தில் கமல் நடித்தார். சத்தியம் என்று அதற்கு பின்னர் பெயர் சூட்டப்பட்டது.
    அகில இந்திய சிகர மன்றத்தின் தலைவராக இருந்த சின்ன அண்ணாமலை விஜயவேல் பிலிம்ஸ் என்ற சொந்த நிறுவனத்தை துவங்கி நடிகர் திலகம் இரு வேடங்களில் நடிக்கும் ஒரு கலர் படம் தயாரிக்கிறார் என்று அறிவிப்பு வந்தது. முதலில் இதோ எந்தன் தெய்வம் என்று பெயரிடப்பட்டது.அதே நேரத்தில் ACT இயக்கத்தில் முத்துராமன் விஜயா நடிக்கும் ஒரு படத்திற்கும் இதே பெயர் வைக்கப்பட்டதாக செய்தி வரவே சின்ன அண்ணாமலை பெயரை மாற்றினார். தங்கத்திலலே வைரம் என்ற பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதுவும் மாறி மனிதனும் தெய்வமாகலாம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அதன் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் செய்திகள். ஜேயார் மூவிஸ் மன்னவன் வந்தானடி, அமுதம் பிக்சர்ஸ் அன்பே ஆருயிரே படங்களின் படப்பிடிப்பும் தொடர்கிறது.
    பிலிம்பேர் (Filmfare) பத்திரிக்கையை பற்றி சொல்லும்போது அதன் தொடர்பான மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்தி திரையுலகை பற்றிய செய்திகளை தாங்கி வரும் பிலிம்பேர் இதழின் நிர்வாகத்தினர் வருடந்தோறும் அதற்கு முந்தைய வருடத்தில் வெளியான இந்தி படங்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்க கூப்பன் ஒன்றை பத்திரிக்கையில் பிரசுரித்து அதை பூர்த்தி செய்து அனுப்பும் வாசகர்களில் பெரும்பான்மையோர் விருப்பப்படி விருதுகளை வழங்குவார்கள். தென்னிந்திய படங்களுக்கும் விருதுகள் உண்டு என்றாலும் இந்தி போன்று அனைத்து துறை விருதுகளும் கிடையாது. சிறந்த படம் மற்றும் இயக்குனர் போன்ற ஓரிரண்டு துறைகளுக்கு மட்டுமே இருந்தது. அந்த 1972ல்தான் முதன் முறையாக சிறந்த நடிகர் நடிகை போன்ற விருதுகளும் தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டது. அந்த முதல் சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகம் ஞான ஒளி படத்திற்காக பெற்றார். சிறந்த நடிகை விருது பட்டிக்காடா பட்டணமா படத்திற்காக ஜெயலலிதாவிற்கு கிடைத்தது. 1972ன் படங்களுக்கான விழா என்பதால் 1973ல்தான் நடைபெற்றது. (தொடர்ச்சியாக இரண்டாம் முறையாகவும் 1973 வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதையும் நடிகர் திலகம்தான் பெற்றார் என்பது சிறப்பு தகவல்). அது போல பல ஆண்டுகளாக இது போன்ற விருதுகளை கொடுத்துக் கொண்டிருந்த சென்னை சினிமா ரசிகர் சங்கமும் ஞான ஒளி படத்திற்காக நடிகர் திலகத்தை சிறந்த நடிகராக தேர்வு செய்தது. அதே போன்ற பாரம்பரியம் மிக்க பேசும் படம் இதழும் நடிகர் திலகத்தையே தேர்வு செய்தது.
    தமிழக அரசியல் மற்றும் இந்திய அரசியலை பொறுத்தவரை மிகப் பெரிய நிகழ்வுகள் நடைபெறவில்லை என்றாலும் அரசியல் களம் பரபரப்பாகவே இருந்தது. நாட்டிலே விலைவாசி உயர்வு என்பதே முக்கிய விஷயமாக (அன்றைய காலகட்டங்களில் விலைவாசி என்பது மிகவும் சென்சிட்டிவான ஒன்று). அதன் பேரில் பல போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அகில இந்திய அளவிலும் இது எதிரொலித்ததால் அந்த சமயத்தில் நடைபெற வேண்டிய இடை தேர்தல்கள் அனைத்துமே தள்ளி போடப்பட்டது. அவற்றில் கோவை, பாண்டிச்சேரி மக்களவை மற்றும் கோவை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களும் அடங்கும். தமிழக அரசை எதிர்த்து நமபிக்கையில்லா தீர்மானங்கள் போன்றவை சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டன. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நிகழ்வுகள் என்று பார்த்தால் டாக்டர் ஹண்டேயின் கட்சி தாவல். சுதந்திரா கட்சியில் தமிழகத்தில் ராஜாஜி அவர்களுக்கு பிறகு அடுத்த தலைவராக பார்க்கப்பட்ட ஹண்டே, ராஜாஜியின் மறைவிற்கு பிறகு என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்தது. சுதந்திரா கட்சியில் தொடர போகிறேன் என்று அவர் சொன்னாலும் பெருந்தலைவரின் தலைமையேற்று அவர் ஸ்தாபன காங்கிரஸில் இணைவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 1973 மே மாதம் நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில் அவர் ஸ்தாபன காங்கிரஸிற்காக பிரச்சாரமும் மேற்கொண்டார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக அவர் ஜூலை மாதத்தில் அதிமுகவில் சேர்ந்தது ஆச்சரியமாகவே இருந்தது. ஏன் என்றால் அவர் சேரும்போது என் நினைவு சரியென்றால் எம்ஜிஆர் ரஷ்யா போயிருந்தார். ஆகவே அது ஒரு எதிர்பாராத நிகழ்வு என்றே கூறலாம். மற்றொரு நிகழ்வு அன்றைய நாட்களில் அடிக்கடி நடைபெற்ற அரசியல் வன்முறை தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் தொழிற்சங்க தலைவருமான வி பி சிந்தன் உள்ளானார். பொதுக்கூட்டத்திற்கு போவதற்காக டாக்ஸியில் போனவர் டாக்ஸி பிரேக்டௌன் ஆனதால் அரசு போக்குவரத்து பஸ்சில் பயணம் செய்ய, பஸ் ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டு அனைவரையும் இறக்கி விட்டு அந்த கும்பல் வி பி சிந்தனை குறிவைத்து தாக்கியது. அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். வழக்கம் போல் ஆட்சியாளர்கள் உடனே தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து விட்டோம் விசாரணை நடக்கிறது என்று பூசி மெழுகினர்.
    திண்டுக்கல் இடைத்தேர்தல் யாருக்கு பாடம் கற்று கொடுத்ததோ இல்லையோ இந்திரா காங்கிரஸின் கண்களை திறந்து விட்டது. தமிழகத்தில் தங்களது சரக்கு போனியாகாது என்பதும் பெருந்தலைவர் தலைமையில் இயங்கும் காங்கிரஸ்ஸை மட்டுமே மக்கள் ஆதரிப்பார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாக புரிந்தது. குறிப்பாக இந்திரா அவர்களின் கவனத்திற்கும் இது போனதினால் அவரே தமிழகத்தில் தங்களது நிலையை மறு பரிசீலனை செய்ய முடிவெடுத்தார். தமிழகத்தில் இரண்டாக செயல்படும் காங்கிரஸ் ஒரே கட்சியாக மாற வேண்டும். அதற்கு முன் இருவரும் ஒரு அணியில் நின்று அரசியல் களமாட வேண்டும் என்பது இந்திராவிற்கு புரிந்தது. இதில் சிக்கல் எங்கேயென்றால் இந்திராவை பொறுத்தவரை அவருக்கு தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மட்டுமே இந்த நிலைப்பாட்டை எடுக்க விரும்பினார். மற்ற மாநிலங்களை பொறுத்தவரை அவருக்கு எந்த கவலையுமில்லை. காரணம் அங்கே அவரது கட்சிக்கு செல்வாக்கு இருந்தது. 1971 தேர்தலுக்கு பிறகு பல மாநிலங்களிளிலும் ஸ்தாபன காங்கிரஸில் பணியாற்றிய முக்கிய தலைவர்களுக்கு வலை வீசி தங்கள் கட்சிக்கு இழுத்துக் கொண்டார்கள். ஏன் தமிழகத்திலேயே இந்த முயற்சி நடைபெற்று சட்டமன்ற உறுப்பினர்களான அனந்தநாயகி, ஏ ஆர் மாரிமுத்து போன்றவர்களையும், ஈவிகே சம்பத் போன்றவர்களையும் இந்திரா காங்கிரஸில் சேர்த்துக் கொண்டனர் (அன்றைக்கு கட்சி தாவல் தடை சட்டம் இல்லை).
    இணைந்து செயல்படும் இந்த முயற்சிக்கு கட்சியில் இருக்கும் பழம் பெருச்சாளிகள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதை புரிந்த இந்திரா, மோகன் குமாரமங்கலத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைத்திருந்தாக கேள்வி. ஆனால் விமான விபத்தில் அவர் மறைந்து விடவே தமிழகத்தில் அந்த கட்சியில் பெருந்தலைவரோடு பேசுவதற்கு யாருமில்லை என்ற நிலை, எப்போதும் பெருந்தலைவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்திருந்த சி சுப்பிரமணியம் அந்த முறை ஆச்சரியமாக இந்திராவின் முயற்சியை ஆதரித்தார் என்று செய்தி வந்தது. ஆனால் அவரின் முன்கால நடவடிக்கைகள் காரணமாக அவர் பேசினால் சரியாக வராது என்பதால் இந்திரா தனது அமைச்சர்கள் உமாசங்கர் தீக்ஷித், கே ஆர் கணேஷ் போன்றவர்களை அனுப்பினார். அவர்கள் சென்னை வந்து பெருந்தலைவரை சந்தித்து பேசினார்கள். அவர்களை தொடர்ந்து ஒரிஸா முன்னாள் முதல்வர் நந்தினி சத்பதியும் சென்னை வந்து பெருந்தலைவரை சந்தித்தார். அதற்கு பின்னர் இந்திராவின் நேரடி தூதராக மரகதம் சந்திரசேகர் சென்னை வந்து மிக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். இவையெல்லாம் பெருந்தலைவரின் பிறந்த நாளான ஜூலை 15ற்கு முன்னும் பின்னும் நடக்கிறது. அந்த வருடம் பெருந்தலைவரின் பிறந்தநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயக்கம் பிளவுபட்ட பின் பெருந்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாத இந்திராவும் மற்ற இந்திரா காங்கிரஸ் தலைவர்களும் அந்த வருடம் அவருக்கு வாழ்த்து சொன்ன காட்சியும் அரங்கேறியது. இவையெல்லாம் நடந்த பிறகு இந்திராவின் அழைப்பின் பேரில் பெருந்தலைவர் டெல்லி சென்று இந்திராவை நேரில் சந்தித்து உரையாடினார்.
    பெருந்தலைவரை பொறுத்தவரை இந்திராவிடம் தனது நிலைப்பாட்டை மிக தெளிவாக எடுத்துரைத்தார். என்னவென்றால் இணைப்பு என்று ஒன்று நடக்க வேண்டுமென்றால் அது அகில இந்திய அளவிலே நடைபெற வேண்டும். தமிழகத்தில் மட்டும் இணைப்பு என்றால் அது சாத்தியப்படாது இணைந்து செயல்படுவதில் எதிர்ப்பில்லை ஆனால் எந்த காரணம் கொண்டும் அதிமுகவோடு கூட்டணி வைக்க கூடாது. இரண்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற விஷயத்தில் தான் மிக தெளிவாக இருப்பதையும் ஆகவே ஒன்றை எதிர்க்க மற்றொன்றுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் ஆணித்தரமாக எடுத்து சொல்லிவிட்டு வந்துவிட்டார். அதிமுகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று தமிழக இந்திரா காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி எடுத்து வருவது அவருக்கு தெரிந்திருந்தது. ஆகவே இணைந்து செயல்படும்போது தன்னையும் ஸ்தாபன காங்கிரஸ்ஸையும் அதில் சிக்க வைத்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். நடிகர் திலகத்திடம் ஒரு முறை இந்த இணைப்பு/இணைந்து செயல்படுவது பற்றி ரசிகர்கள் கேட்டபோது பெருந்தலைவர் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம் என்று சொன்னது சிவாஜி ரசிகனில் செய்தியாக வந்தது.
    அரசியல் களம் இப்படியாக இருக்க நடிகர் திலகத்தின் அடுத்த வெளியீடாக தீபாவளியன்று கெளரவம் வெளியாவதாக அறிவிப்பு வந்துவிட்டது. கெளரவம் வியட்நாம் மூவிஸ் தயாரிப்பு. நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய குடும்ப நண்பர் இந்து பத்திரிக்கை குழுமத்தை சேர்ந்த எஸ்.ரங்கராஜன். ரங்கப்பா என்றே நடிகர் திலகம் அழைப்பார். நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது அவரின் நெடுநாள் விருப்பம். நடிகர் திலகத்தின் மனதில் எப்போதும் நாடகங்களின் மீதும் நாடக குழுக்கள் மீதும் தீராத ஆசை உண்டு. சென்னையில் அனேகமாக அனைத்து நாடக குழுக்களின் நாடகங்களை அவர் சென்று பார்ப்பதுண்டு. சில குழுக்கள் புதிய நாடகங்களை அரங்கேற்றும் போது நடிகர் திலகத்தை தவறாது அழைப்பார்கள் நடிகர் திலகம் ரெகுலராக சென்று பார்க்கும் நாடக குழு திரு. ஒய் ஜி பார்த்தசாரதி நடத்தி வந்த UAA எனப்படும் United Amateur Artists. 60 வருடங்களுக்கும் மேலாக இன்றும் நடைபெறும் குழு அது. அவர்களின் Oh! What a girl என்ற நாடகத்தை அறிவாளி என்ற பெயரில் படமாக்கி நடித்தார். அந்த குழுவின் பெற்றால்தான் பிள்ளையா நாடகம் நடிகர் திலகம் நடிக்க பார் மகளே பார் ஆனது. சிவாஜி நாடக மன்றத்திற்கு வியட்நாம் வீடு எழுதிய சுந்தரம் UAA குழுவிற்காக எழுதிய நாடகம் கண்ணன் வந்தான்.
    நாடகத்தை பற்றி கேள்விப்பட்டு பார்க்க வந்தார் நடிகர் திலகம். கதையில் வரும் பாரிஸ்டர் ரோலை மேடையில் செய்தவர் ஒய்ஜிபி மகன் கண்ணன் பாத்திரத்தை ஏற்றிருந்தவர் திரு ARS. நாடகம் பார்த்த நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்து போனது. மீண்டும் ஒரு முறை பார்த்திருக்கிறார். அந்த நேரத்தில் வெகு நாட்களாக தன்னை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ரங்கராஜனையும் நாடகம் பார்க்க சொல்கிறார். அவருக்கும் பிடிக்கவே அந்த கதையை திரைப்படமாக்கும் உரிமையை வாங்குகிறார். அது வரை கதை வசனகர்த்தாவாக மட்டுமே இருந்த வியட்நாம் வீடு சுந்தரத்தை இயக்குனர் ஸ்தானத்திற்கு உயர்த்துகிறார் நடிகர் திலகம். தன்னால் முடியுமா என்று சுந்தரம் யோசிக்க உதவி இயக்குனராகவும் பின் இயக்குனராகவும் அதன் பிறகு குணசித்திர நடிகராகவும் விளங்கிய ரா.சங்கரனை உதவிக்கு வைத்து கொள்ள சொல்கிறார் நடிகர் திலகம். ரா.சங்கரனை அழைத்து நடிகர் திலகமே பேச அவர் ஒப்பு கொள்கிறார்.
    அந்த நாடகத்தை படமாக்க போகிறோம் என்றதும் நடிகர் திலகம் ஹோம் ஒர்க் செய்கிறார். முதலில் கதை. கதை பெரும்பாலும் கோர்ட் நடவடிக்கைளை மையப்படுத்துகிறது. ஆகவே அவற்றை எந்த தவறுமின்றி காட்சிப்படுத்த வேண்டும். திரு ஒய்ஜிபி அவர்களிடம் இதை பற்றி பேச, இந்த ஸ்கிரிப்ட் ரெடியானவுடன் பிரபல வக்கீல் திரு வி பி ராமன் அவர்களிடம் சென்று படித்து காண்பித்து அவர் சொன்ன சில கரக் ஷன்ஸ் ஏற்றுக் கொண்டு அதன்படி மாற்றி எழுதி முழுமைப்படுத்தினோம் என்று ஒய்ஜிபி அவர்கள் சொல்ல விபி ராமன் போன்ற ஒரு சட்ட நிபுணரின் மேற்பார்வையில் (Legally vetted) எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் என்றதும் நடிகர் திலகம் திருப்தி அடைந்தார். அதன் பிறகு காஸ்டிங் (casting). பாரிஸ்டர் ரோல் ஓகே. கண்ணன் ரோலை யார் செய்வது? பல பேர்களும் பரிசீலிக்கப்பட்ட து என்றாலும் ஒன்றும் சரி வரவில்லை. காரணம் கதைப்படி பாரிஸ்டர் ரோல் டாமினேட் செய்யும் காட்சியமைப்புகள். கண்ணன் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். வேறு ஒரு ஹீரோ கண்ணன் ரோல் செய்தால் அவர்கள் அதை எப்படி எடுத்து கொள்வார்கள் என்பது போன்ற சந்தேகங்கள் எழவே, நீண்ட யோசனைக்கு பின் இரண்டு வேடங்களையும் தானே செய்வது என்ற முடிவுக்கு வந்தார் நடிகர் திலகம். இந்த படத்தில்தான் முதன் முறையாக நடிகர் திலகத்தின் பக்தர் ஒய் ஜி மகேந்திரா அவருடன் இணைந்து நடித்தார். உனக்கு சீன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஷூட்டிங் நடக்கும் அனைத்து நாட்களிலும் நீ வர வேண்டும் என்று நடிகர் திலகம் மகேந்திராவிடம் சொல்லியிருக்கிறார். காரணம் நாடகத்தில் அவரும் நடித்திருந்தார். ஆகவே ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே அதை தீர்த்துக் கொள்ளலாம் என்பதற்காக..
    1971 நவம்பர் 12 அன்று படப்பிடிப்பு துவங்கியது. இயக்குனர் ஸ்ரீதர் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். முதல் நாள் எடுக்கப்பட்ட காட்சி எதுவென்றால் கிளைமாக்ஸ். கதவை திறந்து முழுக்கை சட்டை பட்டனை கழட்டி டைம் பார்ப்பாரே அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டது. யோசித்து பார்த்தால் எந்தளவிற்கு அவர் பாத்திரத்தை உள்வாங்கியிருந்தால் அந்த கிளைமாக்ஸ் காட்சியை அவரால் அவ்வளவு சிறப்பாக காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது என்று நினைத்தால் உண்மையிலே பிரமிப்புதான். படம் வளர்ந்து வளர்ந்து 1973 தீபாவளி ரிலீசிற்கு ரெடியாக நிற்கிறது. படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பே படப்பிடிப்பு முடிந்து விட்டது, ஒரே ஒரு பாடல் காட்சியை தவிர. பாலூட்டி வளர்த்த கிளி பாடல் காட்சி மட்டும் எடுக்கப்பட வேண்டும். சிக்கல் என்னவென்றால் டிஎம்எஸ் இசை பயணமாக தென்னாபிரிக்கா நாட்டிற்கு சென்றிருக்கிறார் அவர் வருவதற்கு 15 நாட்கள் ஆகும் என்ற நிலை. அவர் வந்து பாடல் பதிவு செய்யப்பட்டு, பின் படப்பிடிப்பு நடத்தி சென்சார் செய்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் அது முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது. காரணம் இடையில் இருக்கும் நாட்கள் குறைவு. சுந்தரம் மற்றும் எம்எஸ்வி ஆகியோரை அழைத்து அந்த பாடலை ட்ராக் பாடி படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்ற யோசனையை சண்முகம் சொல்கிறார் (ட்ராக் என்றால் பாட வேண்டிய பாடகருக்கு பதிலாக வேறு ஒருவரை வைத்து பாட வைப்பது. பின்னர் யார் பாட வேண்டுமோ அவர்கள் வந்து பாடியவுடன் அதை ஒரிஜினல் பாடலாக மாற்றி விடுவார்கள்). வேறு யாரும் அந்நேரம் கிடைக்கவில்லை என்பதால் மெல்லிசை மன்னர் எம்எஸ்வியே அந்த ட்ராக் பாடி பதிவு செய்து படப்பிடிப்பை நடத்தினார்கள். அதுவே நன்றாக இருக்கிறது என்று நடிகர் திலகமே சொன்னார் என்று கேள்வி. ஆனால் எம்எஸ்வி அது சரியாக வராது என்று முடிவு செய்து டிஎம்எஸ் சென்னை வந்தவுடன் அவரை வைத்து மீண்டும் பாடலை பதிவு செய்து படத்தில் சேர்த்தார்கள். படமாக்கப்பட்ட பின் பாடியதால் அந்த பாடல் காட்சி டிஎம்எஸ்க்கு போட்டு காட்டப்பட்டது. எதற்கு என்றால் லிப் சிங்க் எனப்படும் வாயசைப்பு மாட்ச் ஆக வேண்டும் என்பதற்காக,
    இப்படிப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய கெளரவம் 1973 அக்டோபர் 25 வியாழன் தீபாவளியன்று வெளியாகிறது. மதுரையில் சிந்தாமணியில் ரிலீஸ். முதன் முறையாக ஒரு கலர் படத்தில் நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் பாரிஸ்டராகவும் கண்ணனாகவும் திரையில் விஸ்வரூபம் எடுத்த அந்த கோலாகலம், அந்த செல்லுலாய்டு காவியத்தை அன்றே காண நாங்கள் எடுத்த முயற்சிகள் அதை பற்றி அடுத்த வாரம்
    (தொடரும்)
    அன்புடன் .

    siva-617.jpg

    siva-616.jpg


    Thanks Murali Srinivasan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #8
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    அடப்பாவிகளா ! இதுவும் ஒரு பொழப்பு? தலைப்பில் மட்டுமே Sentiment பதிவில் சிவாஜி பற்றி பொய் புளுகும்

    YouTube இல் நடிகர் திலகம் பற்றி செண்டிமெண்ட் தலைப்பு மட்டும் எழுதி உள்ளே பதிவில் சிவாஜி அவர்கள் திரைப்படங்களை ஓடவில்லை.தயாரிப்பாளருக்கு நஷ்டம் இப்படி பல ஆதாரமில்லாத பொய்யான தகவலை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இதில் இப்போது nethajiTV என்ற ஒரு சேனல் சேர்ந்துள்ளது. இதில் வருபவர் நடிகர் திலகம் பற்றி பொய் புளுகு இஷ்டத்திற்கு கதை அளந்து விட்டுள்ளார். அதற்க்கு பதில் பதிவு ஆதாரங்களுடன் அவர் கூறுவது அத்தனையும் பொய் புளுகு என்பதை தெரிவிக்கும் பதில் வீடியோ இது !




    Thanks Nadigarthilagam T V
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #9
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    அடேங்கப்பா இன்று(30-06-21)
    டிவிச் சேனல்களில் இத்தனை நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களா?
    அதுவும் வெள்ளி விழா காவியங்கள்
    நூறு நாட்கள் கொண்டாடிய காவியங்கள்,
    1)பசும்பொன்- காலை 10 மணிக்கு K டிவியில்,
    2)தவப்புதல்வன்- காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
    3)முதல் மரியாதை-பிற்பகல் 1 மணிக்கு ஜெயா மூவியில்,
    4)ராமன் எத்தனை ராமனடி- பிற்பகல் 1:30 க்கு வசந்த் டிவியில்,
    5)அமர தீபம்- மாலை 3:30 க்கு முரசு டிவியில்,
    6)பாவமன்னிப்பு- மாலை 3:30 க்கு ராஜ் டிஜிட்டல் டிவியில்,
    7)படிக்காதவன் - இரவு 7 மணிக்கு K டிவியில்,
    8)நான் வாழ வைப்பேன்- இரவு 7 மணிக்கு ராஜ் டிஜிட்டல் டிவியில்,
    9)பாகப்பிரிவினை- இரவு 11 மணிக்கு மெகா டிவியில்,


    Thanks sigaththamilan sivaji sivaji
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #10
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    நடிகர்திலகம் பெற்ற பத்திரிகை விருதுகள்-
    சினிமா எக்ஸ்பிரஸ்
    ---------------------------------
    1981- கீழ்வானம் சிவக்கும்-சிறந்த நடிகர்.
    1983- மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா- சிறந்த நடிகர்.
    1985- முதல் மரியாதை-சிறந்த படம்.சிறந்த நடிகர்.
    1992- தேவர் மகன்- சிறந்த படம்.சிறந்த நடிகர்.
    பிலிம்பேர்
    ------------------
    1965- திருவிளையாடல்- சிறந்த படம்.
    1968- லட்சுமி கல்யாணம்-சிறந்த படம்.
    1971- பாபு-சிறந்த படம்.
    1972- பட்டிக்காடா பட்டணமா- சிறந்த படம்.
    1973- பாரதவிலாஸ்- சிறந்த படம்.கௌரவம் - சிறந்த நடிகர்.
    1985- முதல் மரியாதை- சிறந்த படம்.சிறந்த நடிகர்.
    பிலிமாலயா
    ----------------------
    1954- அந்த நாள்- சிறந்த நடிகர். தூக்குத்தூக்கி - சிறந்த படம்.
    1955- மங்கையர் திலகம்- சிறந்த படம்.
    1956.ரங்கோன் ராதா- சிறந்த நடிகர்.சிறந்த நடிகை பானுமதி.
    1957.மக்களைப்பெற்ற மகராசி- சிறந்த நடிகர்.
    1958.உத்தமபுத்திரன் - சிறந்த படம்.
    அன்னையின் ஆணை- சிறந்த நடிகர்.
    பதிபக்தி - சிறந்த நடிகை சாவித்திரி.
    1959- வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை - சிறந்த படங்கள். சிறந்த நடிகர்.
    1960- படிக்காத மேதை- சிறந்த படம்.சிறந்த நடிகர்.
    தெய்வப்பிறவி - சிறந்த நடிகை பத்மினி.
    சிறந்த துணை நடிகர் எஸ்.எஸ்.ஆர்.
    1961- பாவ மன்னிப்பு,பாசமலர், பாலும் பழமும்,கப்பலோட்டிய தமிழன்- சிறந்த படங்கள். சிறந்த நடிகர்.
    பாசமலர் - சிறந்த நடிகை சாவித்திரி.
    1964.பச்சை விளக்கு,கை கொடுத்த தெய்வம்- சிறந்த படங்கள்.
    புதிய பறவை,நவராத்திரி - சிறந்த நடிகர்.
    1965- திருவிளையாடல் - சிறந்த படம்.சிறந்த நடிகர்.
    1966.சரஸ்வதி சபதம், செல்வம்- சிறந்த படங்கள்.
    1967- திருவருட்செல்வர், இரு மலர்கள் - சிறந்த படங்கள். சிறந்த நடிகர். சிறந்த நடிகை- கே.ஆர்.விஜயா.
    1968.தில்லானா மோகனாம்பாள் - சிறந்த படம்.சிறந்த நடிகை- பத்மினி.
    உயர்ந்த மனிதன்-சிறந்த நடிகர். துணை நடிகர்- அசோகன்.
    1969- தெய்வமகன்- சிறந்த படம்.சிறந்த நடிகர்.
    1970.வியட்நாம் வீடு- சிறந்த படம்.சிறந்த நடிகர்.எங்கிருந்தோ வந்தாள்- சிறந்த நடிகை ஜெயலலிதா.
    1971.பாபு- சிறந்த படம்.சிறந்த நடிகர்.
    1972.நீதி,ஞானஒளி, தவப்புதல்வன், வசந்தமாளிகை - சிறந்த படங்கள்.
    ஞானஒளி - சிறந்த நடிகர்.
    வசந்தமாளிகை - சிறந்த நடிகை வாணிஸ்ரீ.
    1973.பாரதவிலாஸ், ராஜ ராஜ சோழன், கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை - சிறந்த படங்கள். கௌரவம் - சிறந்த நடிகர்.
    1974.தங்கப்பதக்கம் - சிறந்த படம்.சிறந்த நடிகர். சிறந்த நடிகை கே.ஆர்.விஜயா..துணை நடிகர் ஸ்ரீகாந்த்.
    1975.அவன்தான் மனிதன்- சிறந்த நடிகர்.
    1977.தீபம்- சிறந்த நடிப்புக்கான சேவை விருது.
    1992. தேவர் மகன்- சிறந்த படம்.சிறந்த நடிகர்.
    அம்பிகா அவார்ட் - 1992.தேவர் மகன்.- சிறந்த நடிகர்.
    நந்தம்பாக்கம் லயன்ஸ் கிளப்- தங்கப்பதக்கம் - சிறந்த நடிகர்.
    பாம்பே லயன்ஸ் கிளப்- விஸ்வநாத நாயக்குடு - சிறந்த நடிகர். மற்றும் திரையுலக சாதனையாளர் விருது.
    தொடரும்.


    Thanks John John
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 83 of 107 FirstFirst ... 3373818283848593 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •