-
8th February 2023, 08:52 AM
#1
Senior Member
Devoted Hubber
முன்னைய நண்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ சில தவறான விபரங்களை பதிவிட்டிருக்கலாம் வெளியிட்டிருக்கலாம்.அல்லது பொதுவான பத்திரிகையில் வெளிவந்த சில பிழையான தகவல்களை பத்ததிரிகையில் வெளிவந்ததுதானே என்ற எண்ணத்தில் விளம்பரத்தின் அடிப்படையில் சிலவற்றை சரியாக இருக்குமென நாம் எண்ணியிருக்கலாம். அதன் அடிப்படையில் அது சரியாகத்தான் இருக்குமென நினைத்து தொடர்ந்து நாமும் அதனை பரப்பி வருகின்றோம்.இது அனைவருக்குமே பொருந்தும்.தவறில்லை ஆனால் முன்னையவர்கள் வெளியிட்ட தகவல்கள் பிழை என தெரிந்த பின்னரும் அதனை தொடர்ந்து பரப்பி வருவோமேயானால் அது மாபெரும் தவறு.அதைவிடத் தவறு அது தவறென தெரிந்த பின்னும் அது சரிதான் என குதர்க்கமாக வாதிடுவது வாதிட்டு அதனை உண்மையாக்க பகிரத பிரயத்தனை செய்வது.இதைத்தான் வாத்தியின் கோயாபல்ஸ் கைகூலிகள் செய்து வருகின்றனர். சொந்தத் தியேட்டர் குத்தகை தியேட்டர் ஸ்ரெச்சர் வடகயிறு இவை எல்லாவற்றையும் அவர்களே செய்து கொண்டு தாங்கள் தப்பிப்பதற்காக அதை நாங்கள் செய்வதாக பழியை எங்கள்மேல் திசை திருப்பிவிடுகிறார்கள்.. சொந்தத் தியேட்டர் சாந்தியில் மக்களின் ஆதரவுடன் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருந்த படம் பாலும் பழமும் ஆனால் அதனை 127 நாட்களுடன் நிறுத்திவிட்டு பார்த்தால் பசி தீரும் படத்தை திரையிட்டார்கள். பாலும் பழமும் பட தயாரிப்பளர் ஜீ என் வேலுமணி படம் நல்ல வசூலுடன் நன்கு போகின்றது படத்தை நிறுத்தாதீர்கள் தொடர்ந்து ஓடட்டும் என எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பாலும் பழமும் 127 நாட்களுடன் சாந்தியில் எடுக்கப்பட்டது. இதன்காரணமாக ஜீ என் வேலுமணி நடிகர் திலகத்துடன் கோவித்துக்கொண்டு வெளியேறி யது நடந்த தெரிந்த வரலாறு. வெள்ளிவிழா ஓடியிருக்கவேண்டிய படம் பாலும் பழமும் சொந்தத்தியேட்டரில் ஓட்டுபவர்களாக இருந்தால் இதனை வெள்ளிவிழா ஓட்டியிருக்கலாமே ஆனால் அப்படிச் செய்யவில்லை இதனை கோயாபல்சுகள் உணராமல் இல்லை ஆனால் சாந்தி தியேட்டரில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவது பொறுக்கமுடியாமல் காழ்ப்புணர்சியில் இயலாமை ஆற்றாமை அவர்களை புலம்ப வைத்திருக்கிறது. சாந்தியில் திரையிடப்பட்ட எல்லா படங்களுமா நன்கு போயிருக்கின்றன இல்லையே 100 நாட்கள் ஓடியதா ?இல்லையே சொந்தத்தியேட்டரில் ஓட்டுபவர்களாக இருந்தால் எல்லா படங்களையும் ஓட்டியிருக்கலாமே லாஜிக் தெரியாத கோயாபல்சுகள். அரசியல் பின்புலம் ஆள் அம்பு சேனை இதனை வைத்துக் கொண்டு அனைத்து தியேட்டருமே அவர்களின் கட்டுப்பாட்டில்தான். ஓட்டென்றால் ஓட்டவேண்டியதுதான்.சொந்தத்தியேட்டர் அவர்களுக்கு தேவையில்லை . இப்படித்தான் 1965 ல் கோவை ராயல் தியேட்டரில் எங்கவீட்டுப் பிள்ளை திரையிட்டிருந்த வேளை தியேட்டர் நிர்வாகத்தை அன்பாக கேட;டு வெள்ளிவிழா வரை இழுத்தார்கள் இந்த கோயாபல்சுகள்.அந்த இம்சை காரணமாக 10 வருடங்களாக வாத்தி படத்தை தியேட்டர் பக்கமே அண்டவிடவில்லை நிர்வாகம்.இது வரலாறு ஒரு உதாரணம் மட்டுமே.தூத்துக்குடியில் தர்ணா இருந்து அடிமைப்பெண் படத்தை 100 நாட்கள் ஓட்டியது மதுரையில் 175 நாட்களுக்கப்பின் 2 காட்சிகள் வீதம் உ சு வாலிபனை 217 நாட்கள் ஓட்டி பாகப்பிரிவினை 216 நாட்கள் ஓட்டத்தை முறியடித்தது இப்படி பல இதைவீடவும் பல இந்த கோயாபல்ஸ்களின் லீலைகள் இருக்கின்றன. வாத்திக்கு வெள்ளி விழா படங்கள் அசோக்குமார் உட்பட 7 மட்டுமே.நடிகர் திலகத்திற்கு 15க்கு மேல் எனவே கூடுதல் எண்ணிக்கை காட்டுவதற்காக வெள்ளிவிழா படம் எதை கணக்கு காட்டலாம் என தேடிதேடி அலைகிறார்கள் வெள்ளிவிழா ஓடாத என் தங்கை ஒளிவிளக்கு இரண்டையும் தற்சமயம் சேர்த்து கணக்கு காட்டி தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு அற்ப சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள்.............................. .................................................. ...........வாத்தியின் கள்ளக்கணக்குகளின் அம்பலம் தொடரும்........................
other-003.jpgother-010.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th February 2023 08:52 AM
# ADS
Circuit advertisement
-
10th February 2023, 09:22 AM
#2
Senior Member
Devoted Hubber
யாருடைய சாதனைகள் அதிகம்?
Thanks Sivaji Murasu
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th February 2023, 11:00 AM
#3
Senior Member
Devoted Hubber
இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் வெள்ளி விழா ஓடியவை 3 படங்கள் மட்டுமே.
அவை (1) வசந்த மாளிகை (2) உத்தமன் (3) பைலட் பிரேம்நாத்
siva-002.jpg
siva-018.jpg
siva-003.jpg
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
12th February 2023, 07:22 PM
#4
Senior Member
Devoted Hubber
தமிழ்நாட்டில் நடிகர் திலகத்தின் பெயரை பறை சாற்றும் நினைவிடங்களில் சுமார்
2.5 கோடி மதிப்புள்ள கட்டிடம் மதுரையில்
அமைந்துள்ளது.......
இதனை நிறுவியவர் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர்
எம் வி முத்துராமலிங்கம் அவர்கள்
2003ல் மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரி உள்ள
ஒரு வளாகத்திற்கு நடிகர் திலகத்தின் பெயரை சூட்டி பெருமைப்படுத்தி உள்ளார்
வேலம்மாள் கல்வி நிறுவன குழுமங்களின் தலைவர்.....எம் வி முத்துராமலிங்கம் அவர்கள்.......
அவருக்கும் இப் பெயரை சூட்டுவதற்கு காரணமாக இருந்த முனைவர் மருது மோகன் அவர்களுக்கும் கோடானு கோடி நடிகர் திலகத்தின் சார்பில் நன்றி
siva-019.jpg
Thanks K.Laksmanan (Nadigarthlakam Fans)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th February 2023, 12:09 AM
#5
Senior Member
Devoted Hubber
வேறொரு குழுவில், 1964 ல் நமது நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனைகளை மட்டம் தட்டி பதிவிட்டிருப்பதால், இப்பதிவை தற்போது மீள்பதிவு செய்வது அவசியமாகிறது.
1964 நடிகர் திலகத்தின் சாதனை ஆண்டு .
(பதிவிடுபவர் முகம்மது தமீம்)
1964 நடிகர் திலகத்தின் திரை வாழ்க்கையில் இன்னொரு பொற்கால ஆண்டு. இந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான படங்கள் ஏழு. அவற்றில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் ஐந்து . பதினோரு வாரங்கள் (77 நாட்கள்) ஓடிய படம் ஒன்று. ஒன்பது வாரங்கள் (63 நாட்கள்) ஓடிய படம் ஒன்று.
1) கர்ணன் (108 நாட்கள்)
2) பச்சை விளக்கு (105 நாட்கள்)
3) கை கொடுத்த தெய்வம் (101 நாட்கள்)
4) புதிய பறவை (135 நாட்கள்)
5) ஆண்டவன் கட்டளை (77 நாட்கள்)
6) முரடன் முத்து (63 நாட்கள்)
7) நவராத்திரி (106 நாட்கள்)
இவை சென்னை நகரத்தில்
25 திரையரங்குகளில் வெளியாகி, அவற்றில் 15 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடின, பெரிய அரங்குகளில் மூன்று காட்சிகளாக. (கர்ணன் 3, பச்சை விளக்கு 3, கை கொடுத்த தெய்வம் 4, புதிய பறவை 1, நவராத்திரி 4)
இவற்றோடு 1963-ம் ஆண்டு தீபாவளி வெளியீடான அன்னை இல்லம் படமும் இந்த ஆண்டின் துவக்கத்தில் ( பிப்ரவரி 22) 100 நாட்களைப் பூர்த்தி செய்தது.
இவற்றுள் சென்னை சாந்தியில் திரையிடப்பட்டது கர்ணன் படம் மட்டுமே. பின்னர் சாந்தியில் ராஜ்கபூரின் 'சங்கம்" (இந்தி) திரையிடப்பட்டு 200 நாட்களுக்கு மேல் ஓடியதால் வேறு படங்கள் திரையிடப்படவில்லை. குறிப்பாக சிவாஜி பிலிம்ஸ் முதல் சொந்தப் படம் மற்றும் வண்ணத்தில் முதல் சமூக திரைக்காவியம் புதிய பறவை கூட சாந்தியில் வெளியாகவில்லை. பாரகனில்தான் ரிலீஸானது.
இந்த ஆண்டு வந்தவற்றுள் இரண்டு வண்ணப் படங்கள். அவற்றில் கர்ணன் பம்பாய் பிலிம் சென்ட்டரிலும், புதிய பறவை சென்னை ஜெமினி ஸ்டுடியோவிலும் ப்ராசஸ் செய்யப்பட்டன. கர்ணன் மதுரையில் ஆசியாவிலேயே பெரிய அரங்கான தங்கம் தியேட்டரில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
ஐந்துuடங்களுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தியும். ஒரு படத்துக்கு கே.வி.மகாதேவனும் ஒரு படத்துக்கு டி.ஜி.லிங்கப்பாவும் இசையமைத்திருந்தனர்.
பி.ஆர்.பந்துலு, ஏ.பீம்சிங், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், தாதாமிராஸி, கே.சங்கர், ஏ.பி.நாகராஜன் ஆகிய ஆறு இயக்குனர்கள் இயக்கியிருந்தனர்.
தேவிகா மூன்று படங்களிலும், சாவித்திரி மூன்று படங்களிலும், செளகார் இரண்டு படங்களிலும், சரோஜாதேவி, விஜயகுமாரி மற்றும் புஷ்பலதா தலா ஒரு படத்திலும் நடித்திருந்தனர்.
எஸ்.எஸ்.ஆர். இரண்டு படங்களிலும் ஏவிஎம் ராஜன் இரண்டு படங்களிலும், அசோகன் மூன்று படங்களிலும். பிரேம்நஸீர் மற்றும் பாலாஜி தலா ஒரு படத்திலும் நடித்திருந்தனர்.
நவராத்திரி நடிகர் திலகத்தின் 100-வது படமாக அமைந்ததும் அதில் ஒன்பது வெவ்வேறு ரோல்கள் ஏற்றதும் தனிச்சிறப்பு. 1964-ம் ஆண்டு நடிகர் திலகத்தின் எந்தப் படமும் வெள்ளி விழா காணவில்லை என்பது குறையே. (இந்த ஆண்டு தமிழில் வெள்ளி விழா கண்ட ஒரே படம் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை மட்டுமே)
கர்ணன் 2012-ல் டிஜிட்டலில் வெளியாகி 150 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் வெற்றி பெற்றது. (பதிவு மற்றும் செய்தித்தாள் விளம்பர ஆவணங்கள் தொகுப்பு முகம்மது தமீம்).
லைக் இடும் நண்பர்கள் பதிவுக்கு மட்டும் லைக் இட்டால் போதும். ஒவ்வொரு விளம்பர ஸ்டில்லுக்கும் தனியே லைக் இட அவசியமில்லை. கமெண்ட்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன.
siva-022.jpg
siva-023.jpg
siva-024.jpg
siva-025.jpg
siva-026.jpg
K. Sengottuvel (Face book)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th February 2023, 11:57 PM
#6
Senior Member
Devoted Hubber
தென்னாப்பிரிக்காவில் வெளியான சிவாஜி படம்!
Do the Shadow Kiss என்ற விளம்பரத்துடன் தென்னாப்பிரிக்காவில் கலாட்டா கல்யாணம் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் - ஜெயலலிதா, நாகேஷ், மனோரமா என ஒவ்வொருவருக்கும் விதம்விதமான அடைமொழியுடன் போஸ்டர் அடித்திருக்கிறார்கள்.
ஆல்பர்ட் என்ற தியேட்டரில் படம் வெளியானதை இந்த போஸ்டர் தெரிவிக்கிறது.
நன்றி ISR Ventures
siva-021.jpg
Thanks Uthaya Kumar (நடிகர் திலகம் சிவாஜி நந்தவன பூக்கள்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
1st March 2023, 09:06 AM
#7
Senior Member
Devoted Hubber
நண்பர் சேகர் பரசுராம் அவர்கள் முக்தா பிலிம்ஸ் 60 முகநூலில் பதிவிட்ட விடயம் இது.
1972 ல் வெளியான பட்டிக்காடா பட்டணமா,
மதுரையில் செண்ட்ரல் திரையரங்கில் வெளியாகி முதல் 84 நாட்களில் மட்டுமே வசூலான தொகையை இன்றைய டிக்கெட் கட்டணத்தில் பார்த்தோமானால் 8 கோடி ரூபாய்,
இப்போதைக்கு. இந்த வசூல் சாதனைக்கு ஏற்ற ட்ரெண்டிங் வார்த்தை
எப்புட்றா??
siva-034.jpg
நன்றி சேகர் பரசுராம் (muktha films 60)
இதற்கு முகமது தமீம் அவர்கள் " கறுப்பு வெள்ளை படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் "
என பின்னூட்டம் இட்டிருந்தார்.
நானும் " மதுரையில் 5 லட்சம் வசூலாகப் பெற்ற முதல் படம்" என பின்னூட்டம் இட்டிருந்தேன்.
ஆனால் ராமசந்தரின் படத்தைவிட நடிகர் திலகத்தின் படமான பட்டிக்காடா பட்டணமா
சாதனை செய்த படமென மற்றவர்கள' தெரிந்து கொள்ளகூடாதென்ற எண்ணத்தில்
மா கோ ராவின் கோயாபல்ஸ் கும்பல் கைகூலிகள் அந்த இரண்டு பின்னூட்டங்களையும்
தூக்க வைத்துவிட்டார்கள்.
முக்தா பிலிம்ஸ் 60 நிர்வாகிகளும் எழுதியிருப்பது என்னவென சீர் தூக்கி பார்க்காமலே
அவற்றை நீக்கிவிட்டார்கள்.
மதுரையில் 5 லட்சம் வசூல் பெற்றதற்கான ஆதாரம்.
siva-033.jpg
ஆக மொத்தத்தில் வாத்தியின் கைகூலிகளது பித்தலாட்டங்கள் அனைத்தும் படிப்படியாக
பொது ரசிகர்களின் பார்வையில் அம்பலமாகிக்கொண்டு வருகின்றது.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th March 2023, 09:58 AM
#8
Senior Member
Devoted Hubber
வெளியிட்டு ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் 2 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர்.
நடிகர்திலகம் ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்துள்ள இந்த வீடியோவுக்கு
வெளியான 514 கருத்துக்களில் 90 சதவீத கமெண்ட்கள் ஆங்கிலத்திலேயே பதிவிடப்பட்டுள்ளன.
எந்தவித படாதோபமும் ஆடம்பரமும் இல்லாத நடிகர் திலகத்தின் எளிமையானதோற்றமும் பேட்டியும்...
ஒரு எளிமையான மனிதரின் பிரமாண்டமான சக்தி என்பது இதுதான் ...
பார்வை இட்டவர்களுக்கும் கருத்துரை இட்டவர்களுக்கும் எமது நன்றிகள் ...
Thanks Sivaji Murasu
பின்னூட்டம்
Ushadeepan Sruthi Ramani
எத்தனையெத்தனை பாவங்கள் அந்த முகத்தில்? பேட்டி எடுத்தவருக்கு அவர்மீது எவ்வளவு மரியாதை? சிம்மம் கர்ஜிக்கும் அழகு...To be or not to be....எப்படி வேறுபடுத்திக் காண்பிக்கும் அனுபவம்? தன்னடக்கம்..பெரியவர்கள் மீது கொண்ட மரியாதை...பக்தி..தன்னடக்கம்...முழுத் திறமை கொண்ட எந்தக் கலைஞன் இப்படி பக்தி சிரத்தையோடு இருந்திருக்கிறான்? எத்தனை வெள்ளை மனது? கல்மிஷம் இல்லாத மனிதன். இன்னொரு நடிகர்திலகம் நமக்குக் கிடைக்கவா போகிறார்? நடிக்காவிட்டாலும் இன்னும் கொஞ்ச காலம் நம்மோடு (ஒரு தொண்ணூறு வயசு வரையாவது) இருந்திருக்கலாம். இருக்கிறார் என்பதே சந்தோஷமாக..நிறைவாக இருந்திருக்கும். காலம் அநியாயமாய்ப் பறித்துக் கொண்டது. இறைவன் இரக்கமற்றவன். தனக்குப் பிடித்தவர்களை சீக்கிரம் அழைத்துக் கொள்கிறான். பிடிக்காத 'கலைஞர்'களை கிடக்கட்டும் என்று விட்டு விடுகிறான். நம் ஆயுசை பதிலாகக் கேட்டிருந்தாலும் கொடுத்திருக்கலாமே?
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th March 2023, 09:49 AM
#9
Senior Member
Devoted Hubber
sivajiganesan english interview
Thanks Sivaji Murasu
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
5th March 2023, 10:11 AM
#10
Senior Member
Devoted Hubber
Nadigar thilagam english specch interview part-2
Thanks ilayathilakam prabhu
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks