-
31st December 2011, 02:29 PM
#11
Senior Member
Veteran Hubber
தமிழ் திரையுலகம் - ஒரு பார்வை!
2010-ம் ஆண்டோடு ஒப்பீடு செய்கையில் வணிக ரீதியாகவும், தரமான தமிழ் படைப்புகளை படைத்ததிலும் பின்தங்கி இருந்தாலும் 2011-ம் ஆண்டும் பல படைப்புகள் வணிக ரீதியாகவும், தரமான படைப்புகளும் வெளிவந்து இருக்கின்றன. 2012-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நேரத்தில் தமிழ் திரையுலகம் 2011 ஒரு சிறிய அலசல்...
'மங்காத்தா' ஆட்டம்!
2010 ஆம் ஆண்டுக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 13 தேசிய விருதுகள் நமக்கு கிடைத்தது மிகப்பெரிய சாதனை.
இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம் 'மங்காத்தா'. அஜீத் நடிப்பில் வெளியான இப்படம் வசூலில் முதல் இடத்தினை பிடித்து இருக்கிறது. அதனை தொடர்ந்து லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா', ஜீவா நடித்த 'கோ' , கார்த்தியின் 'சிறுத்தை' ஆகியவை வணிகரீதியில் வரவேற்பை பெற்ற படங்கள்.
சிறந்த வரவேற்ப்பை பெற்ற 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் வணிகரீதியிலும் ஓரளவு வசூலை அள்ளியது.
சூர்யாவின் 'ஏழாம் அறிவு', விஜய்யின் 'வேலாயுதம்' ஆகிய படங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் வசூலிலும், வரவேற்பிலும் குறை வைக்கவில்லை. இப்படங்களை தவிர ஆடுகளம், தெய்வத் திருமகள், காவலன், வானம், மயக்கம் என்ன, பயணம், குள்ள நரிக் கூட்டம் ஆகிய படங்கள் எதிர்ப்பார்த்த வசூல் கிடைக்கவிட்டாலும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
விமர்சகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டை பெற்ற ஆரண்ய காண்டம், வாகை சூட வா இரண்டுமே மக்களிடம் தோல்வியை தழுவியது.
ஏமாற்றிய படங்கள்...
நடுநிசி நாய்கள், ஒஸ்தி, ராஜபாட்டை, வேங்கை, மாப்பிள்ளை, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட பெருத்த எதிர்ப்பார்ப்புகிற்கு இடையே வெளியானலும் விமர்சகர்கள் மத்தியிலும் மக்களின் மத்தியிலும் தோல்வியுற்றது
அஜீத்தின் ஆச்சரிய முடிவு..
ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களே ரசிகர் மன்றங்களை கலைக்க தயங்கும் போது ஏப்ரல் மாதம் அஜீத் தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்து தமிழ் திரையுலகினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்தாண்டு விஜய்யை பொறுத்தவரை அரசியலில் அடியடித்து வைத்து இருக்கிறார்.
கொலவெறி' நாயகன்...
ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது வாங்கி, இந்திய அளவில் கவனிக்கப்பட்ட இளம் நடிகர் தனுஷ், பாடலாசிரியராக அறிமுகமாகி இளைஞர்களை கவரும் விதத்தில் பாடல்களை எழுதி வருகிறார். இவர் எழுதிய 'கொலவெறி' பாடல் தற்போது உலகம் முழுவது பிரபலம். பிரதமருட்ன சந்திப்பு, ரத்தன் டாடவுடன் சந்திப்பு என ஒரே பாடல் முழுவது இந்தியாவின் most wanted நாயகானகிவிட்டார்.
நடிப்பாற்றலுக்கு...
அவன் இவன் படத்தில் நடித்த விஷால் தனது மாறுகண் நடிப்பின் மூலம் தனது சக நடிகர்களை ஆச்சர்யப்பட வைத்தார். தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் நடிப்பு தமிழ் நாட்டின் மக்கள் மத்தியில் பேசும்படியாக அமைந்தது. அடுத்தாண்டு 2011 தேசிய விருது நடிகர்கள் பட்டியலில் இவ்விருவர் பெயர் இடம் பெறலாம்.
இந்தாண்டு கார்த்தியின் திருமணம் நடைபெற்றது. சோனியா அகர்வாலை பிரிந்த இயக்குனர் செல்வராகவன், கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.
கனவுக் கன்னிகள்...
நடிகைகள் பட்டியலில் அமலா பால், அனுஷ்கா இருவருமே 2011ல் தமிழக இளைஞர்களை கிறங்கடித்தார்கள் எனலாம். ஆனால், நடிப்பில் இவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் இந்த ஆண்டு சோபிக்கவில்லை.
மயக்கம் என்ன படத்தில் இயல்பாக நடித்த ரிச்சா, ஒஸ்தியில் வந்து போனார். வாகை சூட வா, மெளனகுரு படத்தில் நடித்த இனியா, மூத்த இயக்குனர்களின் கவனத்தைப் பெற்றார். இவ்விருவருடன், 7 ஆம் அறிவு படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், கோ படத்தில் நடித்த கார்த்திகா, ஆடுகளம், வந்தான் வென்றான் படத்தில் நடித்த டாப்ஸி, ராஜபாட்டை படத்தில் நடித்த தீக்ஷா சேத் உள்ளிட்ட நடிகைகள் இந்தாண்டு அறிமுகமானவர்கள்.
ரஜினியின் ஆரோக்கியம்...
2011-ல் ரஜினி நடிப்பில் பூஜை போடப்பட்ட படம் 'ராணா'. அன்றே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அன்று முதல் அவரது ரசிகர்கள் ரஜினி இருந்த மருத்துவமனைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.
ரசிகர்களின் அன்புத் தொல்லையாலும், ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு சென்றார். "நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பிற்கு என்ன செய்ய போகிறேன்" என்று கூறிவிட்டு சென்றவர் ஜுலை 12ம் தேதி திரும்பினார். அன்று அவரது ரசிகர்களுக்கு தீபாவளியாக அமைந்தது.
எங்கே மணிரத்னம்?
'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்க மணிரத்னம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. விஜய், மகேஷ் பாபு மற்றும் பலர் நடிப்பார்கள் என்ற செய்தி வெளியானது.
ஆனால் படத்தின் பட்ஜெட், கால்ஷீட் போன்ற பல்வேறு சிக்கல்களை கருத்தில் கொண்டு தனது அப்படத்தினை தள்ளி வைத்துவிட்டார் மணிரத்னம். தற்போது கார்த்திக் மகன் கெளதம் அறிமுகமாகும் 'பூக்கடை' என்னும் படத்தினை இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இழப்புகள்...
இந்த ஆண்டு பாடகர் மலேசியா வாசுதேவன், நடிகர் அலெக்ஸ், பழம்பெரும் நடிகைகள் காந்திமதி, சுஜாதா ஆகியோரது மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மாற்றங்கள்...
இந்தாண்டு நடைபெற்ற தேர்தல் தமிழ் திரையுலகில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மாற்றம் இதில் முக்கியமானதாக கருதப்படுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். இனி வரும் ஆண்டில் தான் இவரது செயல்பாடு எப்படி என்பது தெரிய வரும்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடன் கேளிக்கை வரியை உயர்த்தியது திரையுலகினருக்கு மிகப்பெரிய பின்னடைவு. படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற இருந்த சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார். அந்தச் சட்டத்தில் இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி எந்த ஒரு படமும் எடுக்க முடியாது என்பது மாதிரியான நிலை. ஆகையால் அனைத்து படங்களுமே வரி செலுத்தி தான் ஆக வேண்டும்.
இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளதால் இனிவரும் காலங்களில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்தின் செயல்பாட்டால் தமிழ் திரையுலகம் அடுத்த நிலைக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://cinema.vikatan.com/index.php?...1--&Itemid=111
-
31st December 2011 02:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks