-
24th January 2012, 12:48 PM
#1121
Senior Member
Senior Hubber
தேடிப்போய் வாய்ப்பு கேட்கிற நிலையில் விக்ரம்!!
இனி ஷங்கரை விட்டால் தன்னை காப்பாற்ற ஆளே இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்ட விக்ரம், தானே தேடிப்போய் அவரிடம் வாய்ப்பு கேட்டதாக பேசிக் கொள்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
எத்தனையோ ஹிட்டுகள் கொடுத்த ஹீரோ என்பதாலும், தனக்கும் தற்போது உடனடியாக ஒரு ஹீரோ கிடைக்கப் போவதில்லை என்பதாலும் இந்த வேண்டுகோளை சட்டென்று ஏற்றுக் கொண்டார் ஷங்கர். விஜய், அஜீத், சூர்யா, யாருமே இப்போது உடனடி கால்ஷீட் தருகிற நிலையில் இல்லையல்லவா?
அதற்காக தனுஷ், சிம்பு போன்ற சின்னப்பசங்களுடன் சேர்கிற எண்ணமும் ஷங்கருக்கு வராது என்பதால்தான் இந்த விக்ரம் கூட்டணி.
இந்த படத்தை தனது சொந்தப்படமாக தயாரிக்கலாம் என்ற எண்ணம் இருந்ததாம் ஷங்கரிடம். ஆனால் இப்படியொரு காம்பினேஷன் என்றவுடன் விக்ரமை வைத்து சுட்டுக் கொண்ட ராஜபாட்டை தயாரிப்பாளரே மீண்டும் முயற்சி செய்தாராம். ஆனால் எப்போதும் கம்பீரமாக செலவு செய்து கண்ணியத்தோடு படம் எடுத்து வரும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த முயற்சியில் வெற்றியடைந்திருக்கிறது.
இந்த படத்தை தயாரிக்கப் போவது அதே ஆணானப்பட்ட ஏஜிஎஸ்சேதான்.
பின்குறிப்பு- விஜய் இயக்கும் தாண்டவம் படத்தை முடித்துவிட்டுதான் இப்படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம்.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
I'M WAITING...
-
24th January 2012 12:48 PM
# ADS
Circuit advertisement
-
24th January 2012, 01:10 PM
#1122
Senior Member
Senior Hubber
கரிகாலன் பட இயக்குனருக்கு விக்ரம் கொடுக்கும் டார்ச்சர்!
தெய்வத்திருமகள் படம் வெற்றி என சொல்லப்பட்டாலும்,
அந்தப் படத்துக்கு 7 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டாராம் விக்ரம். இயக்குனர் சம்பளம் 1 கோடி, அனுஷ்கா சம்பளம் 80 லட்சம் அமலா பாலுக்கு 20 லட்சம் மற்ற நட்சத்திரங்களுக்கு ஒட்டு மொத்தமாக 35 லட்சம், என நட்சத்திரங்களின் சம்பளமே எகிற,
செட்டே தேவைபடாத இந்தப் படத்துக்கு இயக்குனர் விஜய் செட் போட்டு கழுத்தை அறுத்ததில் இரண்டு கோடி காலியாம். அதேபோல பிலிம் செலவையும் இஷ்டத்துக்கு ஏத்தி விட்டிருகிறார் இயக்குனர்.
இதனால் முதல்பிரதி படம் ரெடியானபோது 17 கோடி செலவு ஆகியிருகிறது. ஆனால் இந்தப் படத்தை 1 கோடி ரூபாய் மட்டும் லாபம் வைத்து 18.5 கோடிக்கு யூ டிவிக்கு விற்று விட்டாராம் தயாரிப்பாளர்.
ஆனால் முதல்வாரமே முச்சுத் திணறிய தெய்வத்திருமகள் படம், மூன்று வார முடிவில் பெட்டிக்குத் திரும்பியதோடு, ஆடியோ உரிமை, சாட்டிலைட் உரிமை, வெளிநாட்டு உரிமை, தமிழ்நாட்டின் வசூல், ஆந்திரா வசூல் என எல்லாம் சேர்த்தே 15 கோடியை தாண்டவில்லை என்கிறார்கள் யூ.டிவி வட்டாரத்தில் இருந்து.
இந்நிலையில் ராஜாபாட்டை படம் முழுவதையும் செட்போட்டு எடுத்ததில் 32 கோடி செலவு வைத்தார் இயக்குனர் சுசீந்திரன். இந்தபடத்தில் சுசீந்திரன் சம்பளம் 1 கோடி மட்டுதான் என்றாலும்,
வசூலுக்கு வக்கில்லாத சியான் விக்ரமுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் செட்டில் செய்திருகிறார். ஆனால் ராஜபாட்டை பாக்ஸ் ஆபீஸில் மண்ணைக் கவ்வியதில் 15 கோடியைக் கூட வசூல் செய்ய முடியவில்லை.
விக்ரமின் மார்கெட் நிலவரம் இப்படி இருக்க, தனது நிலையை உணராத விக்ரம் கரிகாலன் பட இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் கடுமையான டார்ச்சரைக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் கரிகாலனின் உதவியாளர்கள் வட்டாரத்தில்.
தற்போது தாண்டவம் படத்தின் முதல் ஷெட்யூலில் நடித்து வரும் விக்ரம், அதற்கு முன்பு, கரிகாலன் படத்தின் மூன்றாவது ஷெட்யூலில் நடிக்க ஒப்புகொண்டு கால்ஷீட் கொடுத்திருகிறார்.
ஆனால் கரிகாலன் படத்தின் கதை என்னுடையது என வேறொருவர் வழக்குத் தொடுத்திருப்பதில் கடுப்பான விக்ரம், முதலில் கதை உங்களுடையது என நிரூபித்து விட்டு வாருங்கள் அப்புறம் படத்தை எடுப்போம் எனக் கூறிவிட்டு,
காரிகாலனுக்கு கொடுத்த கால்ஷீட்டில் தற்போது தாண்டவம் படத்தில் நடித்துக் கொடுப்பதாக கதறுகிறார்கள் கரிகாலன் வட்டாரத்தில்…! விக்ரமின் இந்த டார்ச்சரில் எப்படியாவது அவரை சமாதனப்படுத்த வேண்டுமே என முடிவு செய்த கரிகாலன் படக்குழுவினர், தங்களது செய்தித்தொடர்பாளர் மூலம் இன்று இப்படியொரு செய்தியை அனுப்பியிருகிறார்கள். அந்தச் செய்தி இதுதான்!
சில்வர்லைன் தயாரிப்பில் வேகமாக வளர்ந்து வரும் “கரிகாலன்” திரைப்படத்தின் கதையும் தலைப்பும் தனக்கு சொந்தமானது என்று போரூரை சேர்ந்த ராஜசேகர் படத்தின் கதாநாயகன் விக்ரம் உட்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களிடம் கேட்ட போது...ராஜசேகர் என்பவர் தொடுத்த வழக்கை தயாரிப்பாளர்கள் என்கிற முறையில் நாங்கள் சந்திக்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.
திரைப்பட தயாரிப்பு சம்மேளனத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு தகுந்த ஆவணங்களோடு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் கதை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் இயக்குநரின் பெயரில் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த உறுதியான நிலையில் தான் நாங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். இந்நிலையில் ராஜசேகர் எனும் அந்த நபர் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கை சந்திக்க வேண்டியது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களாகிய எங்களின் கடமை.
இவ்வழக்கில் படத்தின் கதாநாயகனாகிய விக்ரமை சம்மந்தப்படுத்துவது முற்றிலும் முறைகேடான செயல். இதனால் அவரின் புகழ் நற்பெயருக்கு பங்கம் விளைவதோடு அவருக்கு மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இதனால் சம்பந்தப்பட்ட அந்த நபர் ராஜசேகர் மீது நாங்கள் மான நஷ்ட வழக்கு தொடுக்க ஆலோசித்து வருகிறோம். வழக்கு நிலுவையில் இருக்க அதை எதிர்கொள்ளும் சூழலில் மேலும் விளக்கம் அளிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.
நேர்மையான முறையில் வழக்கை சந்தித்து நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை சந்திக்க தயார்நிலையில் இருக்கிறோம். என கரிகாலன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு S.பார்த்திபன். திரு S.S.வாசன் கூறுகின்றனர்.
I'M WAITING...
-
27th January 2012, 07:19 PM
#1123
Junior Member
Senior Hubber
Big B, Rajini to come together for Puri Jagannath
Talks are that the screen legends have given their nods for director Puri Jagannath's forthcoming venture. It is said that the helmer approached Rajini in Chennai to narrate the script and the Superstar was more than willing to share the screen space with his close buddy Bachchan.
It can be noted that it's been nearly 28 years since Big B and Rajini acted together in T Rama Rao's 'Andha Kanoon'.
For Jagannath, who worked with Sr. Bachchan in 'Buddah Hoga Tera Baap', wanted to work with Rajini as well for a long time. "So far I hadn't dared to approach him because I could not think of a role that would do him justice. It's been my life-long dream to direct Amitji and Rajini Sir," quoted the filmmaker in an interview, who also considers it as a challenge to bring together two such megastars.
http://www.indiaglitz.com/channels/t...cle/77239.html
It is difficult to say what is impossible, for the dream of yesterday is the hope of today and the reality of tomorrow.
- Robert H. Goddard
-
2nd February 2012, 12:36 PM
#1124
Senior Member
Veteran Hubber
-
3rd February 2012, 12:46 PM
#1125
Member
Regular Hubber
Dhanush has done a song for Boost. The song is a tribute to Sachin Tendulkar for his association with Boost for the past 25 years. The song is shot in Ramoji film city featuring dhanush, anirudh, anuskha shetty.
-
6th February 2012, 01:30 PM
#1126
Senior Member
Veteran Hubber
Ace Director Murugadoss chooses Ganesh Venkatraman for a big Ad Campaign
Ace Director A. R Murugadoss recently shot for a famous washing soap brand with actor Ganesh Venkatraman as the brand ambassador.
Sources say that the director who was pleased with the actor’s performances in his earlier films ‘Unnai Pol Oruvan’ and ‘Abhiyum Naanum’ personally chose Ganesh to play the role of a young district collector in the ad film which revolves around the relationship between a son and a father. In the ad, Ganesh plays the son of a humble potter, who goes on to become a collector and makes his father proud.
When contacted Ganesh said – ‘Yes it was a wonderful experience working with Murugadoss sir. He is extremely down to earth and chilled out. We chatted up on a lot of things during shooting.
He had seen the trailer of my upcoming film Panithuli and he complimented me about it, he liked the action stunts that i have done and keenly asked me how i had performed them. He was surprised to know that I am well versed in martial arts.
He told me about the extensive research hat had gone into the making of Eezhaam Arivu. I complimented him on its success and wished him for his upcoming venture with Vijay.’
Ganesh is happy that 2012 has started on such a good note.
Working with an ace director like Murugadoss is definetly a feather in the cap for this handsome actor. His Upcoming film Panithuli is expected to hit the theatres soon
Murugadoss-Stills-505005.jpg
-
7th February 2012, 06:52 PM
#1127
Senior Member
Seasoned Hubber
-
9th February 2012, 03:16 PM
#1128
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Pradeep_vijay_kumar
Dhanush has done a song for Boost. The song is a tribute to Sachin Tendulkar for his association with Boost for the past 25 years. The song is shot in Ramoji film city featuring dhanush, anirudh, anuskha shetty.
Will Dhanush get a second boost with Tendulkar anthem? - Firstpost
-
10th February 2012, 03:23 PM
#1129
Senior Member
Senior Hubber
சூர்யாவுக்கு ஓகே சொன்ன ஐஸ்க்ரீம் அழகி!
மங்காத்தா படத்தை தொடர்ந்து சூர்யாவின் சொந்தப்பட நிறுவனமான ‘க்ரீன் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு
படம் இயக்க ஓப்புக்கொண்டார் வெங்கட் பிரபு! ஆனால் இந்தப்படத்தில் முதலில் கார்த்தி நடிப்பார் என்றார்கள். உண்மையில் சூர்யாவிடம் வெங்கட் பிரபு சொன்ன கதைச்சுருக்கம் சட்டென்று பிடித்துப் போனதால்,
சிங்கம் இரண்டாம் பாகம் படத்தில் நடித்தபடியே இந்தப் படத்திலும் நான் நானே நடிக்கிறேன் என்று சூர்யா ஒப்புகொண்ட செய்தியை, 4தமிழ்மீடியாதான் முதல் தகவலாக தந்தது. தற்போது அந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்கலாம் என்ற என்ற வெங்கட்பிரபுவின் விருப்பத்தை சூர்யா முதலில் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் தற்போது சோனம் கபூரை ஏன் கேட்டுப்பார்க்கக் கூடாது என்று சூர்யா கொடுத்த யோசனையை ஏற்று சோனம் தரப்பில் பேசப்பட்டதாம்!
பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக சூர்யா என்றதும் உடனே ஒகே சொல்லியிருகிறார் சோனம் என்கிறார்கள்.
ஏற்கனவே வேட்டை மன்னன் படத்துக்கு சிம்புவுடன் நடிக்கக் கேட்டு மறுத்தார் இந்த ஐஸ்க்ரீம் அழகி. இதே படத்தில் மற்றொரு ஹீரோவாக நடிக்கும் ரவிதேஜாவுக்கு ஆடுகளம் நாயகி டாப்சியை ஜோடியாக்காவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள் க்ரீன் ஸ்டூடியோ வட்டாரத்தில்.
தமிழ்நாடு காவல்துறையில் க்யூ பிரான்ஞ்ச் பிரிவில், பயிற்சி முடித்து சிஐடிக்களாக வேலைக்குச் சேரும் இரண்டு இளம் அதிகாரிகள், குணம், கொள்கை, எல்லாவற்றில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள்.
எப்போதுமே ஒத்துப்ப்போகாத இந்த இரண்டு பேரிடமும் ஒரு முக்கியமான அசைன்மெண்டை ஒப்படைக்கிறாராம் முதலைமைச்சர். இதை அவர்கள் எப்படி முடித்தார்கள் என்பதை செம காமெடி ஆக்*ஷனாக கொடுக்கப் போகிறார் வெங்கட் பிரபு என்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தில் சூர்யா முதல் முறையாக் ஒரு பாடல் பாட இருக்கிறார் என்றும் தகவல் கிடைக்கிறது. இதற்கிடையில் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் சூரியாவின் சொந்தபட நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம்,
அட்டக்கத்தி என்ற சிறு முதலீட்டு படத்தை வாங்கி விநியோகம் செய்கிறது. இந்த்கப் படத்தை இயக்கியிருப்பவர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
I'M WAITING...
-
10th February 2012, 03:25 PM
#1130
Senior Member
Senior Hubber
கார்த்தி படத்துக்கு ரஜினி சென்டிமென்ட் !
கார்த்தி உடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்தப் படத்தை இயக்கி வருகிறார் 'தலைநகரம்', 'படிக்காதவன்' போன்ற படங்களை இயக்கிய சுராஜ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக பேசப்பட்ட 11-11-11 அன்று தொடங்கியது.
'பருத்திவீரன்', 'சிங்கம்', 'சிறுத்தை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரித்து வருகிறார். கார்த்தி - அனுஷ்காவுடன், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
'சிறுத்தை', 'சகுனி' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்திலும் கார்த்தி - சந்தானம் கூட்டணி தொடர்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பெயரிடப்படாமல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கதைக்கு ஏற்றவாறு பல்வேறு தலைப்புகளை ஆலோசித்து வந்தார் சுராஜ்.
தற்போது இப்படத்திற்கு 'அலெக்ஸ் பாண்டியன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
'மூன்று முகம்' படத்தில் போலீஸாக வரும் ரஜினியின் 'அலெக்ஸ் பாண்டியன்' கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது. அதைப் போலவே கார்த்திக்கு இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும் என்ற ரஜினி சென்டிமென்டில் இருக்கிறது படக்குழு.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
I'M WAITING...
Bookmarks