-
14th March 2012, 04:54 PM
#1171
Senior Member
Diamond Hubber
-
14th March 2012 04:54 PM
# ADS
Circuit advertisement
-
15th March 2012, 01:33 PM
#1172
Senior Member
Senior Hubber
Rajini does it after two decades!
Rajinikanth had sung a song in Mannan which was set to tune by maestro Ilayaraja. This was in the year 1992. After two decades, the Superstar is to do it again and this time it is for Kochadaiyaan. This is not exactly a song but poetic verses penned by Vairamuthu. Rajini will narrate these poetic verses. Interestingly, Oscar winner AR Rahman has scored the music for this song.
The recording has been completed already. Sources say that Rahman had recorded this song with Rajini’s voice on March 11th.
http://www.accesskollywood.com/news-...-03-122255.htm
I'M WAITING...
-
16th March 2012, 01:38 PM
#1173
Senior Member
Veteran Hubber
EMITAA-international-award for Gaurav- Best Debut Director -thoonga Nagaram
EMITAA-international-award-Stills-031501001_940.jpg
-
19th March 2012, 10:46 AM
#1174
Senior Member
Platinum Hubber
Found this on fb:
இளையராஜா வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்?
என்று நிறைய நண்பர்கள் கேட்க நாங்கள் ஆராயந்ததில் எங்களுக்கு கிடைத்த சில தகவல் உங்களுக்காக. ஈகோ பிரச்சனையா? கொஞ்சம் அலசித்தான் பார்க்கலாமே!
இளையராஜாவின் இசையில் தொடர்ந்து பல பாடல்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு என பிஸியாக சென்று கொண்டிருந்த இந்த பயனத்தில் விரிசல் விழத்தொடங்கியது;
வைரமுத்து பிற இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் அதிகமாக எழுத்தொடங்கிய போதுதான். அதுவரை ஒலிப்பதிவின் போது சரியான நேரத்திற்கு வந்து தேவைப்பட்ட நேரத்தில் பாடல்வரிகளின் திருத்தத்திற்கு பெரும் உதவியாக இருந்த வைரமுத்துவால் சரியாக ஒலிப்பதிவிற்கு வரமுடியாமல் போனதால் உரசல் உண்டாகி அது நாளடைவில் ஒருவரை ஒருவர் சமயம் கிடைக்கும் போது தாக்கிக்கொள்ளும் அளவிற்கு பெரியதாகியது.
அடுத்ததாக பாடல் வரிகளில் இளையராஜா தலையிட்டு மாற்றச்சொல்வது; அந்த விரிசலை மேலும் பெரியதாக்கியது.
உதாரணமாக “சிந்து பைரவியில்” வைரமுத்து எழுதிய பல்லவியை மாற்றிவிட்டு கிராமிய பாடலில் இருந்து இளையராஜா எடுத்து போட்ட பல்லவிதான் “பாடறியேன் படிப்பறியேன்” என்ற பல்லவி. இந்த கிராமிய பாடலின் பல்லவியை “புதிய வார்ப்புகள்” படத்திலும் நீங்கள் கேட்கலாம்.
விரிசல் பெரிசாக பெரிசாக ஒருவர் பலவீனத்தை இன்னொருவர் இனம் கண்டு தாக்க அது மனஸ்தாபமாய் உருவெடுத்தது, உதாரணமாக வைரமுத்துவிற்கு எப்போதுமே ஒரு படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் தானே எழுதவேண்டும் (படத்தின் கேஸ்ட்/ரெக்கார்டில் போட்டோ, டைட்டில் கார்டு, போஸ்டர் விளம்பரத்தில் தனித்து தெரிவது) என்பது விருப்பமாய் இருக்கும். இதை அவரே பலமுறை தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் தாய்க்கொரு தாலாட்டு படத்திற்கு முழுப்பாடலையும் எழுத வைரமுத்து ஒப்பந்தமாகிறார் பாடல்கள் எல்லாம் ஒலிப்பதிவாகி படமாக்கப்பட்ட பின்னர்; ரீ-ரெக்கார்டிங்கின் போது மேலும் ஒரு பாடலை சேர்த்து அதை கவிஞர் வாலியை வைத்து எழுதச்சொல்லி; பாடல்கள் – வைரமுத்து என்ற டைட்டில் கார்டை பாடல்கள் – வாலி,வைரமுத்து (ஒரு பாட்டு எழுதினாலும் வாலி சீனியர் ஆச்சே வாலி பெயர்தானே முதலில் வரவேண்டும்) என்று மாற்றுகிறார் இளையராஜா. இளையராஜா இவ்வாறு நடந்து கொள்ள என்ன காரணம்? இந்த படத்தின் பாடல் கம்போஸிங்கின் போது “இளமைக்காலம் – என்ற புதியபறவை” பாடல் ரீமிக்ஸின் வரிகளில் “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று வரிகளில் வைரமுத்து வார்த்தை ஜாலம் புரிந்து இளையராஜாவை கோபப்படுத்தியதே காரணம்.
இதே போல்தான் சிந்துபைரவி டைட்டில் கார்டிலும் பிரச்சனை; “தென்றலது கண்டதுண்டு திங்களது கண்டதில்லை, மனம்தான் பார்வை” என்ற வாலி எழுதிய இரண்டு வரிகளுக்காக, வாலியின் பெயரை தியாகராஜசுவாமிகள், பாரதியார், ஆகியோருடன் சேர்த்து ஒரு டைட்டில் கார்டுடாகவும், பாடல்கள் – வைரமுத்து என்று வைரமுத்திற்கு தனி டைட்டில் கார்டு போட்டு பிரச்சனையை பாலச்சந்தர் சமாளித்திருப்பார்.
கடைசியாக இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாள் “இசை பாடும் தென்றல்” படப்பாடல் கம்போஸிங்கின் போது மோதலாக வெடித்தது. “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது” பாடலுக்கு வரியை எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட, “என்னய்யா பாட்டு எழுதச்சொன்னா, உரைநடை எழுதியிருக்க? இப்ப பாரு நான் எழுதுறேன்” என்று தான் எழுதிய பாடலை இளையராஜா வைரமுத்துவிடம் காண்பிக்க, வைரமுத்து “prose மாதிரி இருக்கு” என்று கூறிவிட்டு கோபமாக அந்த அறையில் இருந்து உடனடியாக வெளியேறிவிட்டார். அதன் பின்னர் எத்தனையோ போர் எவ்வளோவிதமாக சமாதானம் செய்தும் பலனேதும் இல்லை.
-
20th March 2012, 11:13 AM
#1175
Senior Member
Veteran Hubber
-
20th March 2012, 02:53 PM
#1176
Senior Member
Senior Hubber
டிராஃபிக் போலீஸாக சரத்குமார்!
மலையாள திரையுலகினர் அனைவருமே புகழ்ந்து தள்ளிய படம் 'டிராஃபிக்'. இப்படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொண்ட கமல், இப்படத்தில் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், அடுத்தடுத்த படங்களுக்காக தேதிகள் ஒதுக்கி இருப்பதால் இப்படத்தின் ரீமேக்கில் இருந்து கமல் விலகிவிட்டார்.
சரத்குமார், பிரகாஷ் ராஜ், நாசர், பிரசன்னா, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியானது. இப்படத்தில் முக்கிய பாத்திரமான டிராஃபிக் போலீஸாக சரத்குமார்.
மலையாளத்தில் இப்படத்தினை இயக்கிய ராஜேஷ் பிள்ளை தமிழிலும் இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் ரீமேக்கில் இருந்து ராஜேஷ் பிள்ளை விலகிவிட்டார்.
இப்போது இந்தி ரீமேக்கான டிராஃபிக்கை இயக்க இருக்கிறாராம் ராஜேஷ்.
தமிழ் ரீமேக்கை உடனே இயக்க திட்டமிட்டாராம், ஆனால் தமிழ் ரீமேக் ஆரம்பிக்க தாமதம் ஆவதால் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார் ராஜேஷ்.
தமிழ் ரீமேக்கை ராஜேஷ் பிள்ளையிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த SHAHEED KADER இயக்க இருக்கிறார்.
இப்படத்தினை ஸ்டீபனுடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார் ராதிகா சரத்குமார்.
http://cinema.vikatan.com/index.php?...d=9&Itemid=103
I'M WAITING...
-
20th March 2012, 02:57 PM
#1177
Senior Member
Senior Hubber
பட்ட கடனுக்காக வீட்டை விற்றாரா விஷால்!
கடனை அடைக்க நடிகர் விஷால், அவர் ஆசையாக கட்டிய வீட்டை விற்றுவிட்டாராமே? என கோடம்பாக்கம் முழுவதும் பேச்சு!!
புஸ்ஸென போன சமீரா – விஷால் நடித்த வெடி பட விநியோகம் தொடர்பாக ரூ. 9 கோடியை தர மறுக்கிறார் என தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷால் மீது ராடான் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் புகார் கூறியிருந்தார்.
இதனையடுத்து, வளர்ந்து வரும் நேரத்தில் ஏனடா வீண் வம்பு என்று ,அநாவசிய சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக விஷால் ரூ.9 கோடி பணத்தை அடித்து, பிடித்து சமர்த்தாக செட்டில் செய்து விட்டாராம்.
விஷால் நடித்த வெடி படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.
இந்த படத்தை விநியோகம் செய்யும் பொறுப்பை ராடான் நிறுவனம் ஏற்றிருந்தது. இதற்காக ரூ. 12 கோடி தருவதாக விஷால் தரப்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த தொகையில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாக நடிகை ராதிகா விஷால் மீது குற்றம் சாட்டி, நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது ராதிகா புகார் கூறினார் என்பது தெரிந்ததே.
ஆனால் இந்த தெரிந்த விவகாரத்தை, வீட்டை விற்று தான் செட்டில் செய்தார் விஷால் என்பது தான் இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டது என்கிறது கோடம்பாக்கம்.
“இது எல்லாம் வெறும் கட்டுக்கதை, எந்த வீட்டையும் நான் விற்கவில்லை..ஆனால் பணத்தை பைசா பாக்கியில்லாமல் ஃபைசல் பண்ணியாச்சு என்கிறார் விஷால். இந்த மாதிரியான வதந்திகள் கிளம்பிய வேகத்திலேயே காணாமல் போகும். இவற்றிற்கு எல்லாம் விளக்கம் சொல்ல எனக்கு நேரம் இல்லை, அவசியமும் இல்லை. எந்த சொத்தை எப்போது வாங்க வேண்டும்..என்பது தனிநபர் விருப்பு, வெறுப்பு பொறுத்தது என்றார் கொஞ்சம் காட்டமாக”!
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
I'M WAITING...
-
20th March 2012, 02:59 PM
#1178
Senior Member
Senior Hubber
தீபாவளிக்கு கோச்சடையான் ஏர்போர்ட்டில் ரஜினி பேட்டி!!
கோச்சடையான் படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் புதிய படமான கோச்சடையான், படப்பிடிப்பு லண்டனில் சுமார் 20 நாட்கள் நடைபெறுகிறது.
அதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த், தனது மகளும் இப்பட இயக்குனருமான சவுந்தர்யாவுடன் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் புறப்பட்டு சென்றார். இவர்களுடன் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் 20 பேர் சென்றனர்.
முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களுக்கு, ரஜினி அளித்த பேட்டி:
கோச்சடையான் படத்தை எனது மகள் சவுந்தர்யா இயக்குகிறார். இது எனக்கு ஒரு புதிய அனுபவம். என் மகள் சிறந்த அறிவாளி. அவரது டைரக்ஷனில் நடிப்பது சந்தோஷம். இந்த படத்தில் பழைய ரஜினியை பார்க்கலாமா எனக் கேட்கிறீர்கள். பழைய ரஜினியை அல்ல, அதைவிட சூப்பரான ரஜினியை பார்ப்பீர்கள்.
படம் நன்றாக இருக்கும். ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங் முடியும். அநேகமாக இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக படம் வெளிவரலாம்.இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறும்போது, ‘இந்த படத்தை முழுக்க முழுக்க சவுந்தர்யாதான் டைரக்ஷன் செய்கிறார். இந்த படத்தில் நான் மேற்பார்வையாளராகத்தான் இருப்பேன். கோச்சடையான் பட ஷூட்டிங் லண்டனில் 20 நாட்கள் நடக்கும். படத்தின் 40 சதவீத பணிகள் அங்கு முடிவடையும்.
வரும் ஏப். 6ம் தேதி வரை ஷூட்டிங் நடக்கிறது. 7ம் தேதி சென்னை திரும்புகிறோம். அதன் பின்பு, தமிழகத்திலும், கேரளாவிலும் ஷூட்டிங் நடத்த உள்ளோம். கோச்சடையான் பணிகள் முடிந்த பின்பு அடுத்தகட்டமாக ‘ராணாÕ படத்தின் பணியை தொடங்க இருக்கிறோம் என்றார்.ரஜினியின் லண்டன் பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஏராளமான ரசிகர்கள், சென்னை விமான நிலையத்தில் கூடிவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
I'M WAITING...
-
20th March 2012, 03:01 PM
#1179
Senior Member
Senior Hubber
2013ல் சிம்புவுக்கு கல்யாணம்: அம்சமான பெண் தேடுகிறார்களாம்!
நடிகர் சிலம்பரசனுக்கு கல்யாண ஆசை வந்து விட்டதாம். வரும் 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்,
திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். அடுத்த ஆண்டு திருமணம். கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்தை தள்ளிப்போட்டேன். இனியும் தள்ளிப்போட முடியாது என்று கூறியுள்ளார்.
ஒரு வழியாக மகன் திருமணத்திற்கு சம்மதித்துள்ளதால் அவரது தாய் மகிழ்ச்சியாக உள்ளார். சிம்பு மனதில் யாராவது இருக்கிறாரா என்று கேட்டதற்கு அவர் அப்படியெல்லாம் யாரும் இல்லை, நீங்களே நல்ல அழகான பெண்ணா பாருங்கள் அம்மா என்று கூறிவிட்டாராம். பிறக்கும் குழந்தை அழகாக இருக்க வேண்டுமாம். அதனால் தான் அழகான பெண்ணாக பார்க்கச் சொல்லியிருக்கிறார் சிம்பு.
சிம்பு கடந்த காலத்தில் பலருடனும் கிசுகிசுக்கப்பட்டார். கடைசியாக அவரது நெருக்கமான வட்டத்தில் நயன்தாரா இருந்தார். அதையடுத்து ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து சென்றனர். நயன்தாரா, பிரபுதேவா பக்கம் சாய்ந்தார். இருந்தாலும் சிம்பு சோலோவாகவே இருந்து வந்தார். நயனதாராவும் கூட, சமீபத்தில் பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து விட்டார்.
இந்த நிலையில்தான் சிம்பு தனது அம்மாவிடம் பெண் பார்க்கும் பொறுப்பை கொடுத்துள்ளார்.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
I'M WAITING...
-
20th March 2012, 04:13 PM
#1180
Senior Member
Veteran Hubber
Bookmarks