Page 210 of 216 FirstFirst ... 110160200208209210211212 ... LastLast
Results 2,091 to 2,100 of 2160

Thread: Latest News on Tamil Cinema

  1. #2091
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்ட சூர்யா!


    இன்று நடந்து வரும் சட்டமனற தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியாமல் போனதற்கு வருத்தமும், மன்னிப்பும் கோரி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சூர்யா.. அதில்,
    வணக்கம்,

    “24” படத்துக்கு அனைவரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்புக்கும் ஆதரவுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி. நன்றி தெரிவிக்கும் இந்த நேரத்தில், மக்களிடம் என்னுடைய மன்னிப்பையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் முறையாக என்னுடைய வாக்குரிமையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன். அது எனக்கு குற்றவுணர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அதற்காக அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வாக்களிக்கும் உரிமையை, கடமையை அனைவரும் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான்.

    இதுவரை ஒரு தேர்தலிலும் என்னுடைய வாக்குரிமையை செலுத்தாமல் நான் இருந்ததே இல்லை. இந்த முறை வெளிநாட்டிலிருந்து தேர்தலுக்கு முதல் நாளே சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்ற பயணத்திட்டம் வைத்திருந்தேன். ஆனால், நானே எதிர்பார்க்காத சூழல் என் பயணத்தைத் திட்டமிட்டபடி மேற்கொள்ள இயலவில்லை.

    என் சூழ்நிலையை விளக்கி, அஞ்சம் மூலம், இணையம் மூலம் வாக்களிக்க முடியுமா என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். சட்டப்பூர்வமான வழிகள் ஏதும் இல்லை. மே-16 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன்.
    அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு, என்னால் செய்ய முடியாமல் போனதற்காக அனைவரிடமும் மீண்டும் ஒரு முறை மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். என் மீது அன்பு கொண்ட அனைவரும், என்னைப் புரிந்து கொள்ளவும், பொறுத்துக் கொள்ளவும் வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2092
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்!



    ணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி தியேட்டர்' நேற்றுடன் தன் பொழுதுபோக்கு பணியை நிறுத்திக்கொண்டது.

    1952 ல் பகுத்தறிவு பேசிய பராசக்தி திரைப்படத்தில், 'சக்ஸஸ்... சக்ஸஸ்...' என கலைஞரின் வசனம் பேசி அறிமுகமான அந்தப் புதுமுக நடிகருக்கு, அன்றுமுதல் வாழ்வின் அத்தனை விஷயங்களும் சக்ஸஸ்தான். நடிக்கத்துவங்கிய சில படங்களிலேயே, வெற்றிகரமான நடிகராக பரிமளித்த அவரது ஆசைகளில் ஒன்று, தான் சம்பாதித்த பணத்தில் தியேட்டர் கட்டுவது.

    நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தி, பின்னாளில் உலகப்புகழ்பெற்ற அந்த நடிகர் வேறு யாருமல்ல; நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான்.

    1961- ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் தனது மூத்த மகள் 'சாந்தி'யின் பெயரில், தனது ஆசைப்படி ஒரு தியேட்டரை கட்டினார் சிவாஜிகணேசன். இதன் பங்குதாரர் ஆனந்த் தியேட்டர் அதிபரான ஜி.உமாபதி. 1961 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தியேட்டரை திறந்துவைத்தவர் அப்போதைய முதல்வர் காமராஜ். இங்கு திரையிடப்பட்ட முதல்படம், பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி நடித்து வெளியாகி அக்காலத்தில் சக்கைப் போடு போட்ட 'பாவ மன்னிப்பு'.

    பின்னர் இந்த தியேட்டரின் மொத்தப் பங்குகளையும் சிவாஜிகணேசனே வாங்கி, முழு உரிமையாளரானார். அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன.
    திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி போட்டி நிலவிய காலத்தில், சிவாஜி ரசிகர்களுக்கு சாந்தி தியேட்டர் ஒரு வரப்பிரசாதம். சிவாஜி படங்கள் எங்கு திரையிடப்பட்டாலும் சென்னையின் இந்த தியேட்டரில் படத்தைக் காணவே ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். சென்னையின் முக்கிய அடையாளமாகவும், சிவாஜிக்கு பெருமையளிக்கும் விஷயங்களில் ஒன்றாகவும் இந்த தியேட்டர் கடந்த காலங்களில் விளங்கியது.

    தியேட்டரின் முழுநிர்வாகத்தையும், சிவாஜியின் மருமகன்களில் ஒருவரான நாராயணசாமி கவனித்துக் கொண்டார். பின்னாளில் சிவாஜியின் அறிவுறுத்தலின்படி தியேட்டரின் உள்ளே, திரையுலகிற்குப் பெருமை சேர்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அணிவகுத்து நிற்கும் இந்த புகைப்படங்களையும் ஒரு சினிமாவுக்குரிய ஆர்வத்துடன் நின்று ரசிகர்கள் பார்ப்பார்கள். தனது சக போட்டியாளரான எம்.ஜி.ஆரின் படத்தையும் இங்கு இடம்பெறச்செய்தவர் சிவாஜி கணேசன்.


    இந்த புகைப்பட அணிவகுப்பில் தன் படம் வைக்கப்படவில்லையே என பிரபல கதாநாயக நடிகர் ஒருவர் ஒருமேடையில் வெளிப்படையாகவே தெரிவித்தார். அங்கு படம் வைக்கப்பட்டால்தான், தான் பிரபல நடிகர் என்பதை ஒப்புக்கொள்வேன் எனக் கூறினார். சில ஆண்டுகளில் அவரது படம் அங்கு வைக்கப்பட்டது. இத்தகைய அங்கீகாரத்துக்குரிய இடமாகவும் சாந்தி தியேட்டர் விளங்கியது.

    சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த தியேட்டர் அவர்களுக்கு வெறும் தியேட்டர் மட்டுமல்ல; அவர்கள் ஒன்று கூடும் திருவிழா ஸ்தலம். திரையுலகப் போட்டியைத் தவிர்த்து, எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான தியேட்டர் சாந்தி தியேட்டர். சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், " சாந்தி தியேட்டரைப்போல தான் பிறந்த ஊரிலும் தம்பி சிவாஜிகணேசன் ஒரு தியேட்டர் கட்டவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். " கண்டிப்பாக அண்ணனின் ஆசையை நிறைவேற்றுகிறேன்" என அந்த மேடையில் சிவாஜி தெரிவித்தார். ஆனால் இருவரது ஆசையும் நிறைவேறவில்லை என்பது வேறு கதை.

    2005 ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி, சாய்சாந்தி என இரண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் 800 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது.

    சிவாஜிக்கு சாந்தி அழியாத புகழை அவரது ரசிகர்கள் மத்தியில் வழங்கியது. சுமார் 55 வருடங்கள் சினிமா ரசிகர்களின் குறிப்பாக, சிவாஜி ரசிகர்களின் சொர்க்கபுரியாக விளங்கிய சாந்தி தியேட்டர், நேற்றுடன் தன் பணியை நிறுத்திக்கொண்டது.

    சென்னையின் அடையாளங்களாக விளங்கி, தங்கள் பணியை நிறுத்திக்கொண்ட கெயிட்டி, கேசினோ, சஃபையர், மேகலா போன்ற தியேட்டர்களின் வரிசையில் சாந்தியும் இப்போது சிவாஜி ரசிகர்களின் 'சாந்தி'யை பறித்துக்கொண்டு தன் பணியை நிறுத்திக்கொண்டுவிட்டது, சிவாஜி ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் வகிப்பது சினிமா. இதன் ஆதார ஸ்ருதி தியேட்டர்கள்தான். அந்த வகையில் தமிழர்களின் மனதில் முக்கிய இடம்பெற்றிருப்பது தியேட்டர்கள். இன்றும் மலரும் நினைவுகளில் மூழ்கிப்போகும் அந்தக்கால இளைஞர்கள், தங்கள் நினைவுகளில் கண்டிப்பாக சில தியேட்டர்களை குறிப்பிடுவர். அந்தளவிற்கு சினிமா ஒவ்வொரு தமிழனின் தனிப்பட்ட விருப்பங்களில் தவிர்க்கமுடியாத ஒன்று. சினிமா என்பது முழுக்க முழுக்க வணிகரீதியான ஒரு கலையாக மாறிய பின், சினிமா என்பது பல சிக்கல்களுக்கிடையில் இயங்கவேண்டிய நிலை உருவானது.

    அதிகபட்ச கட்டணம், திருட்டுவிசிடி, தகவல் தொழில்நுட்ப வளரச்சி, வணிக ரீதியான தயாரிப்பாளர்கள் போன்ற காரணங்களால் இன்று சினிமா என்பது குற்றுயிரும் குலையுருமாகவே ரசிகர்களை மகிழ்வித்துவருகிறது. இந்த பிரச்னைகளால் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போய், இன்று தமிழத்தின் பல தியேட்டர்களில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே ரசிகர்கள் வருகிறார்கள்.

    இதன் காரணமாக தமிழகத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. சில திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. ஸ்டுடியோக்கள் கூட இந்த சுனாமியில் தப்பவில்லை.
    அந்தவரிசையில் சென்னை நகரில் வெலிங்டன், சித்ரா, அலங்கார், ஆனந்த், சஃபையர், எமரால்டு, கெயிட்டி, பாரகன், புளூடைமண்ட், சன், ராஜகுமாரி உள்பட பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்களாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் மாறி கால ஓட்டத்தில் கரைந்துபோன தியேட்டர்கள்.

    இந்த காரணங்களால், கடந்த சில மாதங்களுக்கு முன் சாந்தி திரையரங்கமும் வணிக வளாகம் கட்டும் நோக்கில் பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின்படி நவீன திரையரங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுவதற்கான முதற்கட்டமாக நேற்றுமுதல் சினிமா காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.
    தியேட்டர் இடிப்பு அறிவிப்பு வெளியான தகவலால் மிகுந்த துயரமடைந்த சிவாஜி ரசிகர்கள், நடிகர் பிரபுவிடம் இதுகுறித்து பேசினர். 'சாந்தி தியேட்டர் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம். அதை இடிப்பது எங்கள் தலைவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நேருவதுபோல் உணர்கிறோம்' என அவர்கள் சிவாஜி குடும்பத்தினரிடம் கவலையுடன் பேசினர்.
    இருப்பினும் காலத்திற்கு தக்கபடி மாறவேண்டிய அவசியத்தை அவர்களிடம் எடுத்துக்கூறிய பிரபு, தியேட்டரை இடித்தபின் நிர்மாணிக்கப்படும் மல்டி ஃபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் உருவாகும் தியேட்டருக்கு சாந்தி என்ற பெயரே சூட்டப்படும் என்று உறுதியளித்ததையடுத்து ரசிகர்கள் சமாதானமடைந்தனர். அதன்படி தியேட்டர் மூடப்படும் அறிவிப்பு பலகையை தியேட்டர் நிர்வாகம் சார்பில் நேற்று வைக்கப்பட்டது.

    இருப்பினும் சாந்தி தியேட்டர் இடிப்பு என்பது தங்களைப்பொறுத்தவரை தங்கள் திரையுல பிதாமகனை இன்னொருமுறை இழந்தது போன்ற ஒரு துக்கத்தில்தான் உள்ளனர். சிவாஜியின் திரைப்பட வரலாற்றையும் அவரது நினைவுகளையும் சுமந்து நின்ற சாந்தி தியேட்டர், சிவாஜி ரசிகர்களின் சாந்தியை தற்காலிமாக இழக்கவைக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டு, வணிக வளாகங்களாக ஆடைபோர்த்திக்கொள்வதை வெறுமனே ரசிகர்களின் கவலையாக மட்டுமே கொள்ளக்கூடாது; அது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் விடப்படும் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியும் கூட. திரையுலகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #2093
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Dir of LUCIA - Samantha, Naga Chaitanya give thumbs-up to Pawan Kumar's 'U Turn'


    Pawan Kumar's "U Turn," which is getting released on Friday, May 20, has got a big fillip after the movie was praised by two big names from the South Indian film industry. Samantha and Naga Chaitanya have appreciated the Kannada film, which has already garnered positive reviews at the premiere held in New York last week.

    The director has posted a short video clip on his Facebook page in which both the stars are seen praising "U Turn." "Love the film and love the content," the actress is seen saying in the video. The "Kaththi" actress has also acquired the Tamil remake rights of "U Turn."

    Naga Chaitanya confesses in the video that he became a big fan of Pawan Kumar after watching "Lucia." He has also liked the latest film, which is an edge-of-the-seat thriller.
    Their positive words are expected to boost the collection of the movie, which is having a premiere show in Bengaluru on Thursday. May 19. The special show, which is scheduled to be held at Bhumika theatre, has already been talked about a lot, and is being waited for with much anticipation.

    "U Turn" is hitting the screens in over 100 theatres in India. It is being released in Pune, Mumbai, Chennai, Hyderabad and many other places.

    The upcoming Kannada movie is a mystery thriller that stars Shraddha Srinath and Dilip Raj in the lead roles. Roger Narayan, Skanda, Krishna, Pavan, Naveen, Divya, Pramod, Aarna, Kennedy and others are also a part of the cast.

    "U Turn," which has been made under Pawan Kumar's newly-launched banner PK Studios, features Poornachandra Tejaswi's music, Satya Hegde, Advitha Gurumurthy and Siddharth Nuni's cinematography, and Suresh's editing.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #2094
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Pichaikkaran doing good in Telugu....

    Brahmotsavam Replaced By Bichagadu

    Brahmotsavam is heading towards an epic disaster due to the astronomical rates it was sold for. Buyers will be unable to recover at least half their investment in most of the territories.

    The film is too weak in Mahesh’s strong areas like overseas and Nizam too. In Ceded Brahmotsavam is unlikely to collect even 4 crore in its theatrical run says the trade.

    The film is unable to recover theater rents in side theaters that the distributors are forced to replace it with other films. Tamil dubbed flick Bichagadu got lucky as Brahmotsavam is replaced with it in many side theaters from Monday.

    Next week is going to be a tough one for Tollywood trade with no notable new releases except for Vishal’s Rayudu.

    Trivikram’s A Aa is going to be the last hope for this season. A Aa is releasing on June 2nd and it will surely get so many screens across Telugu states with literally no competition.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #2095
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    "ஐ.டி. மட்டுமே தரமணி இல்லை!” - ராம்

    தரமணி டீசர் வெளியிடப்பட்டு பலரும் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க.. படம் ஆரம்பித்தபோது, ராம் இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதை இங்கே பகிர்கிறோம்:

    ''இது, ஐ.டி. இளைஞர்கள் பற்றிய படம் இல்லை!'' - 'தரமணி’ குறித்து இயக்குநர் ராம் சொல்லும் ஒன்லைன் இதுதான்!
    வெளியீட்டில் சிக்கல், எதிர்பார்ப்புடன் வெளியீடு, விமர்சன சர்ச்சைகள், விருதுகள், அங்கீகாரங்கள்... என 'தங்கமீன்கள்’ இன்று வரை செய்திகளில் ஸ்க்ரோல் அடித்துக்கொண்டிருக்க, அதற்குள் 'தரமணி’யில் பெரும் தூரத்தைக் கடந்துவிட்டார் ராம். 'தரமணி’ என்ற பெயரும் 'யோயோ பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்’ டீஸர்களும் 'ஐ.டி. இளைஞர்கள் பற்றிய படமோ?!’ என்று எழுப்பும் சந்தேகத்தை முதல் வரியிலேயே மறுக்கிறார் ராம்.
    ''ஆனா, 'தரமணி’னா ஐ.டி, ஐ.டி-யும் சார்ந்ததும்னுதானே நினைவுக்கு வரும்?''
    ''சார்ந்ததும்னு சொல்றீங்களே... அதுதான் உண்மையான தரமணி! ஐ.டி. அடையாளங்கள், இப்போ கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு வந்தது. ஆனா தரமணி, பல நூற்றாண்டுகளா அங்கேயேதான் இருக்கு. சென்னையில் தென் சென்னைக்கும், வட சென்னைக்கும் தனித்தனி அடையாளங்கள் இருக்கும். அதே மாதிரி தரமணியையும் பிரிக்கலாம். ஐ.டி. கட்டடங்கள் இல்லாத தரமணியில், வட தமிழகத்தின் பூர்வ குடிகள் இருக்காங்க. அங்கே காடு, ஏரி, குளம், மலை, வயல், கிராமம், பேக்வாட்டர் எல்லாம் இருக்கு. வட இந்தியாவில் இருந்து வந்து கூலி வேலை பார்க்கும் பீகார், ஒடிசா, மிசோரம் மாநில நண்பர்கள் இண்டு இடுக்குகள்ல ஆயிரக்கணக்கில் குடியிருக்காங்க. பல்லவர்களோட வரலாற்று மிச்சங்கள் இன்னும் இருக்கு. மீனவர்கள் இருக்காங்க. அவங்களுக்கு நடுவுல மூணாவது மாடிக்கு ரெண்டு கோடி கொடுத்து 'ஸீ வியூ ஃப்ளாட்’ல குடியிருக்கிற வசதியானவங்களும் இருக்காங்க. இவர்கள்... இவைக்கு மத்தியில் நடக்கிற கதைதான் 'தரமணி’. படத்தில் ஐ.டி. துறை இருக்குமே தவிர, அது மட்டுமே படம் கிடையாது. ஆண்ட்ரியா, வசந்த் ரவி இடையிலான காதல்தான் படத்தின் பேசு பொருள்!''
    '' 'கற்றது தமிழ்’ல தமிழ் பட்டதாரிகளை சென்னை துரத்தியடிக்கிறதைச் சொன்னீங்க... 'தரமணி’யில் பளபளக்கும் சென்னையின் மற்றோர் உண்மையான முகத்தைக் காட்டுறேன்னு சொல்றீங்க. சென்னை மேல் உங்களுக்கு என்ன கோபம்?''
    ''கோபம் இல்லைங்க. சென்னைதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர். இதுதான் எனக்கு எல்லாமே கொடுத்தது. ஆனா, சென்னை, மும்பை போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களுக்குனு பிரத்யேகக் குணங்கள் இருக்கு. அது தனது அடையாளத்தை மாத்திட்டே இருக்கும். சென்னையின் பிரமாண்டத்தால் ஈர்க்கப்பட்டு வர்றவங்க, அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தங்கள் உழைப்பைச் செலவிடுவாங்க. அவங்களை அரவணைச்சுக்கிற சென்னை, அதுக்கு முந்தைய தலைமுறையை தனக்கு வெளியே கொண்டுபோயிடும். இப்படி குடியிருப்புகளும் குடியிருக்கும் மனிதர்களும் மாறிக்கிட்டே இருப்பது, சென்னை மாதிரியான நகரங்களின் பிரத்யேகக் குணம். அதை நாம் குற்றம்னு சொல்ல முடியாது. அதே சமயம் அதனால் பாதிக்கப்படுறவங்களோட வலியைப் பேசாமல் இருக்க முடியாதே!''

    ''சும்மா ஒரு காதல் கதைங்கிறதுக்காக ஆண்ட்ரியா இந்தப் படத்துல நடிக்க வந்திருக்க மாட்டாங்க. அவங்களை எப்படிச் சம்மதிக்கவெச்சீங்க?''
    '' 'தங்கமீன்கள்’ ரிலீஸுக்காகக் காத்துட்டு இருந்த நாள்களில் 'தரமணி’க்கான ஒன்லைன் மட்டும் என்கிட்ட இருந்தது. அந்தக் கதைக்கு சூப்பர் ஸ்பெஷல் ஹீரோயின் தேவைப்பட்டாங்க. அதை மனசுல வெச்சுக்கிட்டு ஆண்ட்ரியாகிட்ட ஒரு காபி ஷாப்ல இந்தக் கதையைச் சொன்னேன். '10 நிமிஷக் கதைதான் என்கிட்ட இருக்கு. நீங்க நடிக்கிறதா இருந்தா சொல்லுங்க... மேல டெவலப் பண்றேன். படத்துக்கு தயாரிப்பாளர் யாரு, உங்க சம்பளம் என்ன, எப்போ ஷூட்டிங் போவோம்... எதுவுமே இப்போ எனக்குத் தெரியாது. ஆனா, நீங்க ஓ.கே. சொன்னா இந்தப் படம் பண்ணலாம்’னு சொன்னேன். அப்போ ஆண்ட்ரியா சொன்ன 'யெஸ்’தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் கியர்.
    ஆண்ட்ரியா கொஞ்சம் ஸ்பெஷல். ஸ்க்ரிப்ட்ல இருந்து டயலாக் டெலிவரி வரை யோசிக்கிற நடிகை. தமிழ் தெரிஞ்ச பொண்ணு. அவங்களுக்குனு இருக்கிற இமேஜ், படத்துக்கு பெரிய ப்ளஸ். அதுக்கு நேரெதிரா எந்த இமேஜும் இல்லாத ஒரு ஹீரோ தேவைப்பட்டான். ஏன்னா, அவன் செய்யும் சில விஷயங்களை எந்த முன்தீர்மானமும் இல்லாமல் பார்க்கணும். அந்த கேரக்டருக்கு வசந்த் பர்ஃபெக்ட் ஃபிட்!'

    ''ஒவ்வொரு படத்திலும் யுவன்கிட்ட இருந்து ஒரு மாஸ்டர் பீஸ் டியூன் எப்படிப் பிடிக்கிறீங்க?''
    ''அது திட்டம் போட்டு நடக்கிறது இல்லை. எனக்கு மியூசிக் தெரியாது. ஆனா, யுவனுக்கு ஸ்க்ரிப்ட் தெரியும். அதனால் அந்த மூடுக்கு என்ன தேவைனு அவரே தீர்மானிச்சு ப்ளே பண்ணிடுவார். நான் கடைசி ஆளா கேப்பேன். பிடிச்சிருக்கும். அவ்வளவுதான். அது எத்தனை அற்புதமான மெலடியா இருந்தாலும், அரை மணி நேரத்துக்குள் நா.முத்துக்குமார் பாட்டு எழுதிடுவார். ரெண்டும் சேர்ந்தா, அது மேஜிக் ஆகிடுது. இந்தப் படத்துல இன்னொரு ஸ்பெஷல், தேனி ஈஸ்வரின் கேமரா. கேண்டிட் ஷாட்களையே உலகத் தரத் துல்லியத்தில் கொடுக்கக்கூடிய ஆளு. இந்தப் படத்துக்கு அப்புறம் இவரை அநேகமா இந்தி சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போயிருவாங்க!''
    ''தங்கமீன்களுக்கு முன், தங்கமீன்களுக்குப் பின்... ராமிடம் என்ன வித்தியாசம்?''
    ''பெரிய வித்தியாசம் எதுவும் நான் உணரலை. ஆனா, பொறுமையா இருந்தா நமக்கு நடக்க வேண்டிய நல்லதோ, வெகுமதியோ கிடைக்கும்னு புரிஞ்சுக்கிட்டேன். பொறுமையின் அவசியத்தை அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். சட்சட்டுனு முன்னாடி எல்லாம் கோபம் வரும். இப்போ இந்தக் கோபம் அவசியமானு ஒரு சின்னக் கேள்வி தோணுது! அப்புறம் நம்ம படைப்புல குறைந்தபட்ச நேர்மை இருந்தாலும் போதும்... அதுக்கான நம்ம போராட்டம் வீண்போகாது!
    இதை ஒரு புரிதலுக்காகத்தான் சொல்றேனே தவிர, நிஜ வாழ்க்கையில் ஆங்ரி யங் மேன் கேரக்டர் வாழணும்னு ஆசைப்படலை. அதனால, எங்கேயும் சண்டை போட்டுத்தான் ஒரு விஷயத்தை அடையணும்னு இல்லை. நாம பண்ற விஷயம் சரியா இருக்கிறப்ப, அதுக்காகக் குரல் கொடுக்கிறது தப்பு இல்லையே. என் படைப்புகள் அரசியல் பேசும். அது என் உரிமை!'

    ''உங்க குரு பாலு மகேந்திரா இழப்பில் இருந்து மீண்டுட்டீங்களா?''
    ''அடிக்கடி போய் அவரைப் பார்க்க மாட்டேன். ஆனா, சில பிரச்னைகள், சில சந்தர்ப்பங்களின்போது அவர் பக்கத்தில் இருந்தா நல்லா இருக்குமேனு தோணும். சினிமா மொழியைத் தாண்டியும் என் வாழ்க்கையை டிசைன் பண்ணவர் அவர். 'உன் கோபத்தை விட்டுராத... எப்பவும் உனக்குள்ள அந்த ஆவேசத்தைத் தக்கவைச்சுக்கோ’னு சொல்லிட்டே இருப்பார். இப்பவும் பல சமயங்களில் அவரோட வார்த்தைகள்தான் என்னை ஓடவைக்குது. திடீர்னு மனசு அவரைத் தேடும். அப்போ மொபைலை எடுத்து அவர் நம்பருக்கு கால் பண்ண கை துடிக்கும். அந்த நிமிஷங்களைக் கடக்கிறதுதான் கஷ்டம்!'
    ''பாலுமகேந்திராவோட சினிமா லாங்வேஜ் ரொம்ப ஸாஃப்ட். தன் வரம்பு மீறி வீம்புக்குனு இயக்கின படம் 'நீங்கள் கேட்டவை’ மட்டும்தான்னு அவரே சொல்லியிருக்கார். ஆனா, அவர் பட்டறையில் இருந்து வந்த பாலா, ராம் போன்றவர்கள் அன்பு, பிரியத்தைக்கூட வயலென்ட்டா சொல்றீங்க... ஏன்?' ''ஒரு சினிமாவை எப்படி எடுக்கணும்னுதான் பாலு சார் சொல்லியிருக்காரே தவிர, எந்த சினிமாவை எடுக்கணும்னு சொல்லிக் கொடுத்தது இல்லை. கேமரா பொசிஷன், லைட்டிங், எடிட்டிங்னு ஒரு சினிமாவை மோல்டு பண்ணக்கூடிய பிட்ச் பத்தி பேசிட்டே இருப்பார். ஆனா, கதை-வசனம் பத்தி ரொம்ப விவாதிக்க மாட்டார். இன்னொரு விஷயம், எங்க எல்லாரையும்விட பாலுமகேந்திரா ரொம்ப ரௌத்ரமானவர். அவர் ஆசைப்பட்ட சினிமாவை கடைசி வரை அவரால் எடுக்க முடியலை. ஏன்னா, 'புலம் பெயர்ந்தவர்’ என்ற அடையாளம் இருந்ததால், உள்ளூரின் அரசியலை, சமூகச் சூழலை அவரால் முழு வீரியத்தோட படமாக்க முடியாத தயக்கம் இருந்தது. நாங்கள்லாம் இந்த ஊர் பசங்க. எதையும் துணிஞ்சு பேசலாம். அந்தத் தயக்கம் மட்டும் இல்லாம இருந்திருந்தா, பாலு சாரின் அடையாளமே வேறயா இருந்திருக்கும்!''
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #2096
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    "அப்துல் கலாமின் கனவு காணுங்கள் வாசகத்தில் எனக்கு உடன்பாடில்லை” – இளையராஜா

    மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் வாசகத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.



    ஈரோட்டில் இருக்கும் ‘தமிழ் இலக்கியப் பேரவை’ என்கிற அமைப்பு ஆண்டுதோறும் தமிழுக்கு தொண்டு செய்து வரும் தமிழறிஞர்களை தேர்ந்தெடுத்து அவரின் தமிழ்ச் சேவையை பாராட்டி தமிழறிஞர் எஸ்.கே.எம். பெயரில் இலக்கிய விருதினை வழங்கி வருகிறது. இந்த இலக்கிய விருது சான்றிதழையும், இருபத்தைந்தாயிரம் ரூபாய் பொற்கிழியையும் உள்ளடக்கியது.

    இந்த ஆண்டிற்கான எஸ்.கே.எம். இலக்கிய விருதை கவிஞர் மு.மேத்தாவிற்கு கொடுத்து கவுரவித்திருக்கிறது ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை.

    ஐம்பதாண்டு பாரம்பரியமான ஈரோடு தமிழ் இலக்கிய பேரவையில் இதற்கு முன்பு ‘தமிழ்க் கடல்’ இராய.சொக்கலிங்கம், அ.ச.ஞானசம்பந்தம், பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன், கவிஞர் முடியரசன், அவ்வை துரைசாமி பிள்ளை, கி.வா.ஜெகநாதன், கி.ஆ.பெ.விஸ்வநாதன், ம.பொ.சிவஞானம், குன்றக்குடி அடிகளார் போன்ற தமிழ்ச் சான்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள்.

    இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா ஈரோடு திண்டல் மலைப் பகுதியில் அமைந்திருக்கும் வேளாளர் மகளிர் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது.

    இசைஞானி இளையராஜா இந்த விழாவிற்கு தலைமையேற்று, கவிஞர் மு.மேத்தாவிற்கு எஸ்.கே.எம். இலக்கிய விருதினை வழங்கினார்.

    இந்த விழாவில் இசைஞானி இளையராஜா பேசும்போது, “நான் அதிகம் படிக்காதவன். நான் எங்கு சென்றாலும் அங்குள்ள தவறுகளைத்தான் முதலில் பார்ப்பேன். எனவேதான் பல நிகழ்ச்சிகளுக்கு வருவதை நான் தவிர்க்கிறேன். நான் ஒதுங்கியிருப்பதையே விரும்புகிறேன். இருப்பினும் நான் செல்லும் இடங்களில் எல்லாவற்றையும் பார்த்தபடிதான் இருக்கிறேன்.

    ‘இந்த விழாவுக்கு நீங்கள் வர வேண்டும். உங்கள் கையால்தான் விருதைப் பெற்றுக் கொள்வேன். இல்லையென்றால் எனக்கு இந்த விருதே வேண்டாம்..’ என்று கவிஞர் மு.மேத்தா என்னிடம் மிகவும் கேட்டுக் கொண்டதால் அவருடைய விருப்பத்திற்காகவே இந்த விழாவுக்கு வந்தேன்.

    ஒரு பாடலை கேட்கும்போது உங்கள் மனதில் ஒரு வேதியியல் மாற்றம் ஏற்படும். அது எவ்வாறு ஏற்படுகிறதென்று உங்களால் சொல்லவே முடியாது. அமைதியிலும், இசையிலும் இறைவன் இருக்கிறான். இறைவனின் சன்னதியில் நிற்கும்போது கிடைக்காத அமைதியைக் கொடுப்பது இசை.

    நாம் பாட்டு கேட்கும்போது, பாடலுக்குள் நம் சிந்தனை நின்றுவிடும். சன்னிதானத்தில் நிற்கும்போதும், அங்கு ஏற்படும் அமைதியை நாம் வேறு எங்கும் பெற முடியாது. இதனால்தான், ‘இசையின் பயனே இறைவன்தான்’ என திருநாவுக்கரசர் கூறுகிறார். இறைவன் இசையாகவே இருக்கிறான்.

    ‘கற்றதலினால் ஆன பயன் இறைவனை தொழுவதே’ என திருக்குறள் சொல்கிறது. அப்படியானால் கல்லாதவன் கடவுளை தொழுவதால் பயனில்லையா..? அந்தக் குறளின் இறுதியில் ‘படித்தவனைவிட படிக்காதவனே மேல்’ எனக் கூறுகிறது. படித்தவன்தான், ‘கோவிலுக்குப் போக வேண்டாம்’ என்கிறான். எங்கிருந்தாலும் தொழு. அது உனக்கு பலன் தரும். அதைத்தான் கல்லாதவன் செய்து பலனைப் பெறுகிறான்.

    ‘அகர முதல’ என்பதில் ‘அ’ என்பது எழுத்து அல்ல. சத்தம் வடிவில் அரூபமாக இருக்கும் இறைவனைத்தான், அந்த ‘அ’ என்கிற எழுத்து குறிக்கிறது. சிந்தனை என்பது தெளிவோடு இருப்பதைக் குறிக்கவில்லை. சிந்தனை இல்லாதவனே தெளிவாக இருக்கிறான். குழப்பம் இருந்தால்தான் சிந்தனை ஏற்படும்.

    மக்களால் ஈர்க்கப்பட்ட மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமை அபூர்வமாகத்தான் நான் பார்க்கிறேன். நடிகராக, அரசியல் தலைவராக இல்லாமல், குக்கிராமத்தில் உள்ளவர்கள்கூட, அவருக்கு அஞ்சலி செலுத்தியதைப் பார்த்தேன். இது எனக்கு நிறைய விஷயங்களை உணர்த்தியது. ஆனாலும், அவரது ‘கனவு காணுங்கள்’ என்ற வாசகத்தில் எனக்கு உடன்பாடில்லை.

    தானாக வருவதுதான் கனவு. நாம் முயற்சித்து காண்பது கனவல்ல. நாம் காணும் கனவில் வரும் காட்சிகள் நிஜமல்ல. இருந்தாலும், கலாம் கூறிய நோக்கம் சிறந்தது என்பதுடன், உலக அளவில் நான்கு கோடி மாணவர்கள், இளைஞர்களை சந்தித்த பெருமைக்குரியவர் என்ற ரீதியில் எனக்கு அவர் மீது எப்போதும் மரியாதை உண்டு..” என்றார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #2097
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Can This Flop Hero Bounce Back?

    At one point of time Tamil hero Vishal used to be very hot in Tollywood trade too. However a series of flops affected the Pandem Kodi hero’s market. Despite releasing most of his Tamil films in Telugu, Vishal is unable to get back on track.

    Films like Pooja did okay, but couldn’t make an impact like Pandem Kodi. Vishal is coming up with Rayudu tomorrow. This is a dubbed version of Vishal’s recent Tamil release Marudhu, which has been doing well at the Tamil box office ever since it has hit the marquee.

    It is an out and out mass masala film directed by Muthaiah. Sri Divya played the female lead. With Brahmotsavam turning out to be a huge flop and no notable Telugu releases in this weekend, Rayudu has a clear advantage.

    However Vishal has to strike a chord with the masses as Rayudu. This is a great opportunity for him to bounce back and win back his lost market in Tollywood.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #2098
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஓகே கண்மணி 9...நானும் ரவுடிதான் 8... முழுமையான siima விருது பரிந்துரைப்பட்டியல்!

    2016ம் ஆண்டுக்கான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களுக்கான siima விருதுகள் பரிந்துரைப் பட்டியல்கள் வெளியாகியுள்ளன.
    அதில் தமிழுக்கான பரிந்துரைப் பட்டியல் பின்வருமாறு..
    சிறந்த துணை நடிகர்:
    ராஜ் கிரண் - கொம்பன்
    பிரகாஷ்ராஜ் - ஓ காதல் கண்மணி
    கருணாகரன் - இன்று நேற்று நாளை
    சார்லி - கிருமி
    நாசர் - உத்தம வில்லன்
    சிறந்த துணை நடிகை:
    ஆஷா சரத் - பாபநாசம்
    லட்சுமி மேனன் - வேதாளம்
    ராதிகா சரத்குமார் - தங்கமகன்
    நித்யா மேனன் - காஞ்சனா 2
    லீலா சாம்சன் - ஓகே கண்மணி
    சிறந்த வில்லன்:
    அருண் குமார் - என்னை அறிந்தால்
    அரவிந்த்சாமி - தனி ஒருவன்
    சுரேஷ் கோபி - ஐ
    கார்த்திக் - அனேகன்
    விஜய் ஏசுதாஸ் - மாரி
    சிறந்த பாடலாசிரியர்:
    வைரமுத்து - மலர்கள் கேட்டேன் (ஓ காதல் கண்மணி)
    தாமரை - உனக்கென்ன வேணும் சொல்லு (என்னை அறிந்தால்)
    விக்னேஷ் சிவன் - எனை மாற்றும் காதலே (நானும் ரவுடிதான்)
    தனுஷ் - என்ன சொல்ல (தங்கமகன்)
    சிறந்த இசையமைப்பாளர் :
    ஹாரிஸ் ஜெயராஜ் - என்னை அறிந்தால்
    அனிருத் - நானும் ரவுடிதான்
    ஹிப் ஹாப் தமிழா - தனி ஒருவன்
    ஏ.ஆர்.ரஹ்மான் - ஓ காதல் கண்மணி
    ஜிப்ரான் - உத்தம வில்லன்
    சிறந்த பின்னணிப் பாடகி:
    ஷாஷா திரிபாதி - பறந்து செல்ல (ஓ காதல் கண்மணி)
    சின்மயி - இதயத்தை ஏதோ ஒன்று (என்னை அறிந்தால்)
    நீத்தி மோகன் - நீயும் நானும் (நானும் ரவுடிதான்)
    கரிஷ்மா ரவிசந்திரன் - காதல் கிரிக்கெட் (தனி ஒருவன்)
    ஸ்வேதா மோகன் - என்ன சொல்ல (தங்கமகன்)
    சிறந்த பின்னணிப் பாடகர்:
    அனிருத் - தங்கமே (நானும் ரவுடிதான்)
    கார்த்திக் - ஏய் சினாமிகா (ஓகே கண்மணி)
    பென்னி தயாள் - உனக்கென்ன வேணும் சொல்லு( என்னை அறிந்தால்)
    ஜி.வி.பிரகாஷ் குமார் - அன்பே அன்பே (டார்லிங்)
    சித் ஸ்ரீராம் - என்னோடு நீ இருந்தால் ( ஐ)
    சிறந்த நகைச்சுவை நடிகர்:
    கோவை சரளா - காஞ்சனா 2
    ஆர்.ஜே பாலாஜி - நானும் ரவுடிதான்
    சதிஷ் - தங்கமகன்
    சந்தானம் - வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
    யோகி பாபு - காக்கா முட்டை
    சிறந்த அறிமுக நடிகை:
    அமைரா தஸ்தூர் - அனேகன்
    கீர்த்தி சுரேஷ் - இது என்ன மாயம்
    ராதிகா பிரசித்தா - குற்றம் கடிதல்
    தீபா சன்னதி - எனக்குள் ஒருவன்
    சுஷ்மா ராஜ் - இந்தியா பாகிஸ்தான்
    சிறந்த அறிமுக நடிகர்:
    சண்முக பாண்டியன் - சகாப்தம்
    ஜி.வி.பிரகாஷ் குமார் - டார்லிங்
    சாய் ராஜ்குமார் - குற்றம் கடிதல்
    தர்புகா சிவா - ராஜதந்திரம்
    வருண் - ஒரு நாள் இரவில்
    சிறந்த அறிமுக இயக்குநர்:
    அனுசரண் - கிருமி
    எம்.மணிகண்டன் - காக்கா முட்டை
    பிரம்மா ஜி - குற்றம் கடிதல்
    அஸ்வின் சரவணன் - மாயா
    ரவிக்குமார் - இன்று நேற்று நாளை
    சிறந்த நடிகை
    நித்யா மேனன் - ஓகே கண்மணி
    நயன்தாரா - நானும் ரவுடிதான்
    ஐஸ்வர்யா ராஜேஷ் - காக்கா முட்டை
    ஜோதிகா - 36 வயதினிலே
    எமி ஜாக்சன் - ஐ
    சிறந்த நடிகர்:
    தனுஷ் - அனேகன்
    விக்ரம் - ஐ
    ஜெயம் ரவி - தனி ஒருவன்
    ராகவா லாரன்ஸ் - காஞ்சனா 2
    விஜய் சேதுபதி - ஆரஞ்சு மிட்டாய்
    சிறந்த இயக்குநர் :
    விக்னேஷ் சிவன் - நானும் ரவுடிதான்
    எம்.ராஜா - தனி ஒருவன்
    மணிரத்னம் - ஓ காதல் கண்மணி
    கே.வி.ஆனந்த் - அனேகன்
    கௌதம் வாசுதேவ் மேனன் - என்னை அறிந்தால்
    சிறந்த படம்:
    காக்கா முட்டை
    தனி ஒருவன்

    ஓகே கண்மணி
    நானும் ரவுடிதான்
    இவற்றில் ஓகே கண்மணி 9 பிரிவுகளிலும், நானும் ரவுடிதான் 8 பிரிவுகளிலும், என்னை அறிந்தால் 6 பிரிவுகளிலும் என பரிந்துரைப் பட்டியல்களில் அதிக இடங்களைப் பிடித்துள்ளன.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #2099
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    NEW VILLAN IN TOWN

    ’நாஞ் சொல்றேன்ணே... விஷால் அரசியலுக்கு வரமாட்டாப்ல!’ - ‘ரோலக்ஸ்’ ஆர்.கே.சுரேஷ்

    'என்னா மருது.. நீந்தான ச்சொன்ன? அடிக்கறதுல மூணு ரகம். ஒண்ணு - பேசறதுக்கு முன்னாடி அடிக்கறது. ரெண்டு - பேசிட்டிருக்கும்போதே அடிக்கறது. மூணு... பேசவிட்டு அடிக்கறது. இதுல மருது மொதொ ரகம்னா ரோலக்ஸு மூணாவது ரகம்” என்று மதுரை பாஷையில் மிரட்டி, ‘ரோலக்ஸ் பாண்டியனா’க கண்களில் வெறிமின்ன வில்லத்தனத்தில் கலக்கிய ஆர்.கே.சுரேஷுக்கு, இது இரண்டாவது படம். தாரை தப்பட்டையில் கருப்பையாவாக அறிமுகமான இவர், வில்லன் க்ளப்பிற்கு புதுவரவு.

    ‘என்னை மொதல்ல ஃபோட்டோ ஷூட் எடுத்தது சங்கிலி முருகன் அங்கிள்தான். காலேஜ்க்கு முன்னாலயே நான் கேரளாபோய் ஆக்டிங் கோர்ஸ் சேர்ந்து நடிப்பு கத்துகிட்டேன். ‘பவர் ஃபாஸ்ட்’ மாஸ்டர்கிட்ட ஃபைட்டிங் கத்துகிட்டேன். நடனம் மூணு மாஸ்டர்கள் கிட்ட கத்துகிட்டிருக்கேன்.

    புதுப்பேட்டைல அடியாட்கள்ல ஒருத்தரா நடிக்க வாய்ப்பு வந்துச்சு. கொஞ்சம் பெரிய வேஷமா இருந்தா பரவால்லைன்னு அத மிஸ் பண்ணிட்டேன். இப்பவும் செல்வராகவன் அண்ணன் படம் கூப்டா கண்டிப்பா நடிப்பேன். சாட்டைல ஆரம்பிச்சு, பல படங்கள் விநியோகஸ்தரா இருந்தேன். அப்பறமா சலீம் படம் தயாரிச்சேன். இப்ப விஜய் சேதுபதி நடிப்புல ‘தர்மதுரை’ தயாரிப்புல போய்ட்டிருக்கு. பரதேசி விநியோகஸ்தரா இருந்தப்ப பாலா அண்ணன்கிட்ட கேட்டு, அவர்மூலமாத்தான் தாரை தப்பட்டைல அறிமுகமானேன்’ என்றவரிடம் தொடர்ந்து உரையாடியபோது..

    ரெண்டே படத்துல போஸ்டர் ஒட்ற அளவுக்கு ரசிகர்கள். இது தானா சேர்ந்த கூட்டமா...

    (கேள்வியை முடிக்கும் முன் இடைமறிக்கிறார்) காசு குடுத்தெல்லாம் சேர்க்கலைண்ணே. எமக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம். எங்கப்பா அப்பவே முரளியை வெச்சு படம்லாம் தயாரிச்சவரு. ஊர்ல யாருக்கு எதுன்னாலும் ஹெல்ப் பண்றவரு. பேரே “ ‘வள்ளல்’ களஞ்சியம்”தான். அவர் பையன் சினிமால வந்திருக்கேன்னதும் கொண்டாடுறாங்க பசங்க. நானும் வேணாம்டானு சொல்லிப்பாத்துட்டேன். கேட்டாய்த்தானே. இதெல்லாம் கூட பரவால்ல.. அன்னதானம், திருவிழான்னு ஊரே களை கட்டிருக்கும். இவங்க துப்பாக்கியோடல்லாம் என் ஃபோட்டோ போட்டு பேனர் வைப்பாய்ங்க. கலெக்டர் வந்து ‘யார்ரா இவன்’ன்னு கேட்டதெல்ல்லாம் நடந்திருக்கு. என்னமோ போண்ணே.. சந்தோஷமா இருக்கேண்ணே..

    “யாருக்கு வில்லனா நடிக்க ஆசை?”

    தல அஜித் அண்ணனுக்குத்தான். அவருகூட வில்லனா நடிக்கணும்னு ரொம்ப ஆசை. காத்துகிட்டிருக்கேன்.

    நம்பியார் / பிரகாஷ்ராஜ் / ரகுவரன்..?

    இவங்க பாதிப்பு இல்லாம வில்லனா பண்றதெல்லாம் சாத்தியமே இல்ல. ரோகிணி அக்கா கூப்டப்ப நான் சொன்னேன். ‘தாரை தப்பட்டை’ல ரகுவரன் ரெஃபரன்ஸ் பண்ணிருப்பேன். சான்ஸே இல்லை. இப்பவும் எங்ககூட வாழ்ந்துட்டிருக்காங்க. நான்லாம் இவங்கள மாதிரி மிமிக்ரி பண்ணுவேன். பிரகாஷ்ராஜ் டூயட் லேர்ந்து கோ-2 வரைக்கும் விடாம பார்த்திருக்கேன். யார் ஷாட்ல இருந்தாலும் இவரு உள்ள வந்தா தூக்கிச் சாப்டு போய்ட்டே இருப்பார். நம்பியார் ஏற்கனவே சொல்லிட்டேன். இவங்கள்லாமே ஒரு டிக்*ஷ்னரி மாதிரி. காலத்துக்கும் ரெஃபர் பண்ணிட்டே இருக்கலாம்.


    வில்லனுக்கெல்லாம் வில்லன் ராதாரவி. நீங்க அவருகிட்டயே வில்லத்தனத்த காட்னீங்க. எப்டி இருந்துச்சு செட்ல?
    அவரா வில்லன்? நீங்க வேற. ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ்னா என்னான்னு அவர்கிட்ட கத்துக்கணும். ஆனா ஸ்கிரீனுக்கு வெளில எப்டி நடந்துக்கறதுன்னு நான் அவர்கிட்ட கத்துகிட்டேன். மருது ‘செட்’டுக்கு வந்தாலே, டைரக்டர் கிட்ட போய் அவ்ளோ பணிவா வணக்கம் வெச்சுட்டுதான் வருவார். எத்தனை படம். எத்தனை பேரப் பாத்தவரு. கேட்டா ‘ஒரு டைரக்டர்தாண்டா நாம ஸ்க்ரீன்ல எப்டி தெரியறோம்’ங்கறதுக்கு எல்லாமே. அவர் நினைச்சாதான் எல்லாமே நடக்கும். அவருக்குண்டான மரியாதைய நாம குடுத்தே ஆகணும்’ங்கறார். இப்படி அவர்கூட இருந்த நாளெல்லாம் டெய்லி ஒரு பாடம் படிச்சேன்.

    நடிகர் சங்க செயலாளர் விஷால் என்ன சொல்றாரு?

    மொதல்ல விஷால் எனக்கு ‘ஹாய் பாய்’ ஃப்ரெண்ட்தான். ஆனா மருதுல கல்யாண மண்டபம் சீன். ‘அவன் ஏன் மாத்தணும்??”ன்னு சொல்லிட்டே நான் ஸ்கிரீனுக்கு நான் வரணும். கல்யாணத்துக்குள்ள என்டர் ஆகி படபடன்னு சிங்கிள் ஷாட், சிங்கிள் டேக்ல பண்ணிட்டு வெளில வந்துட்டேன். ‘அப்பத்தா.. பத்திரம்’ன்னு மிரட்டிட்டு டைரக்டர் ‘கட்’ சொன்னதும் விஷால் கேரவனுக்குள்ள கூப்டு பேசினார். ‘அடேய் சண்டாளா.. என்னடா இப்டிப் பண்ற! கண்லயே நிக்குதுடா.. பாலா படத்துல அப்டிக் காமிச்சுட்டாரு அடுத்து என்ன பண்ணப்போறான்’ன்னு நெனைச்சேன். நீ வேற லெவல்ல இருக்கடா’ன்னு பாராட்டினார்ணே. ஒரு நடிகனா ரெண்டாவது படம் பண்ற எனக்கு இதைவிட என்ன வேணும்!

    விஷால் உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்தானே? அவர் அரசியலுக்கு வந்துடுவார் போலயே..

    (பலமாக சிரிக்கிறார்) விஷால் பண்ற பல உதவிகள் வெளில பல பேருக்கு தெரியாது. இப்ப ப்ளஸ் டூ ரிசல்ட் வந்திருக்கு. புக்ஸ், நோட் வாங்க க்யூவுல நிப்பாங்க அவர் ஆஃபீஸ்ல. ஆனா எல்லாமே ‘எதாச்சும் நல்லது பண்ணுவோம் மச்சி’ங்கற மாதிரிதான். மத்தபடி அவரு அரசியலுக்கெல்லாம் வர சான்ஸே இல்ல. மத்தவங்க சொன்னா நம்ப மாட்டீங்க. எனக்கொண்ணுன்னா வந்து நிக்கறவரு விஷால். அவ்ளோ நல்ல ஃப்ரெண்ட், நானே சொல்றேன். போதுமா?


    வசன உச்சரிப்பும் உங்க ஸ்பெஷாலிட்டிதான். அதப்பத்தி யாரும் சொல்லிருக்காங்களா?

    நான் படிச்சதெல்லாம் இங்க்லீஷ் கான்வென்ட். ஆனாலும் ரத்தத்துல இருக்கற மொழி போகுமாண்ணே? அதான் விடாம இருக்குது. தமிழ் புத்தகங்கள்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். நான் மதுரைல இருந்ததால அந்த ஃப்ளோ கரெக்டா வந்துடுச்சு. ரெண்டு மாசம் கோண வாயா ‘என்னா பண்ற?’ன்னு பேச டிரை பண்ணினேன். படம் முடிஞ்சு, தாடி எடுத்தப்ப ஃப்ரெண்ட்ஸ்லாம் ‘டேய் நீ பேசறப்ப வாய் கோணுதுடா’னாங்க. மாத்தறதுக்குள்ள மெனக்கெட்டுட்டேன். மிமிக்ரிலாம் கொஞ்சம் பண்ணுவேன். அதுனால வசன உச்சரிப்பு கொஞ்சம் சுலபமா கை வந்துடுச்சு.

    அடுத்த ப்ராஜக்ட்ஸ்?

    தாரை தப்பட்டை கருப்பையாவுக்கு கெடச்ச பேரை, மருது ரோலக்ஸ் பாண்டியன் தக்க வெச்சிருக்கான். அதே மாதிரி, பேசப்படற கதாபாத்திரம்னா நான் ரெடியா இருக்கேன். சிக்ஸ் பேக் வைக்கணுமா, தாடி வைக்கணுமான்னு எதுனாலும் சரி. ரெண்டு மூணு ப்ராஜக்ட்ஸ் பேசிட்டிருக்காங்க. இன்னும் முடிவாகலை.

    பேட்டி முடித்து கீழே வந்து அவர் டிராக்டரிலோ, ராயல் என் ஃபீல்டிலோ போவார் என்றுதான் எதிர்பார்த்தோம்.
    அவர் Posrshe கார், 1314ல் பறந்தார். ஆனால் அப்போதும் கண்ணாடியை இறக்கிவிட்டு ‘டிராப் பண்ணணுமாண்ணே?’ என்றார்.

    பாசக்காரபய தான் சார் சுரேஷ்!
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #2100
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Mahesh - Murugadoss Film Launch In July

    Director A R Murugadoss has finished the script and pre-production work for his ambitious project with Mahesh Babu. The movie will be made in Telugu and Tamil languages simultaneously but till now the producers have not announced the project to the media officially.

    According to our sources, producer N V Prasad and Tagore Madhu along with Murugadoss will be addressing the media next month to announce the movie's details and cast and crew will also be revealed on the stage.

    Mahesh Babu will not be attending the event but he will grace the muhurtham launch which will be held in July and there after the regular shoot will commence in Chennai.

    Touted to be costliest movie in Tollywood after "Baahubali", the action adventure features Parineeti Chopra as heroine. Harris Jayaraj has already composed couple of songs, while Ravi Varman has been roped in to handle the cinematography.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Similar Threads

  1. Karthik Raja (KR) Albums and Latest news
    By Hulkster in forum Current Topics
    Replies: 161
    Last Post: 13th January 2011, 06:58 PM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. Listen to Latest n Old Tamil Albums Over 2k Here
    By logon2future in forum World Music & Movies
    Replies: 0
    Last Post: 19th February 2007, 10:45 PM
  4. Latest Tamil songs & Videos
    By mottufx in forum Classifieds
    Replies: 0
    Last Post: 3rd August 2005, 02:01 PM
  5. TAMIL LATEST RINGTONES
    By ferrari9845 in forum Classifieds
    Replies: 1
    Last Post: 20th June 2005, 08:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •