-
24th August 2013, 08:01 AM
#18
Senior Member
Seasoned Hubber
இறைவா நீ உலகைக் காப்பாற்று.....
மழை வந்து விட்டால்
அதில் மடியும் எறும்புகள் எத்தனை?
பிழைத்துப் பின்தோன்றும் எறும்புகள்
எங்கு ஒளிந்திருந்தனவோ?
இவற்றின் இனம் அழிந்துவிடாமல்,,,,,,,,,,,,,,
தோற்றம் பலப்பல!
அழிவும் பலப்பல!
தான் தோற்றுவித்தவை பல அழிதலில்
இயற்கை அன்னைக்கோ ஏது கவலை?
என்றும் போல்,
பகலவன் தோன்றுவான், மறைவான்!
மனிதனும் அப்படித் தானோ?
கெண்டிங் மலையில் பேருந்து கவிழ்ந்து
இறந்தோர் பலர்.
எனக்குக் கவலை
இயற்கைத்தாய்க்கு கவலை ஏது?
இறைவா நீ உலகைக் காப்பாற்று.....
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks