உணவுக்குள்ளேயே குடியிருக்கிறேன்
உம்மைப்போல் வெளியுலகை
நான் அறிந்ததில்லை!
அறிந்து மகிழத்தான் உங்கள் உலகில்
என்ன இருக்குமோ?
என் உணவுலகம்
எனக்குப் போதும்!
என் உணவுக் கோளத்தை
யார் வெட்டிப்பார்த்தாலும்
என்னோடு என் உணவையும்
வீசி விடுவார்கள்.
ஆனாலும்
மாம்பழத்து வண்டென்று
மதிப்பில் எனக்குக் குறைவில்லை.
என்னைப் படைத்தவன்
என்னையும் காக்கின்றான்.
Bookmarks