-
5th March 2010, 11:07 PM
#91
Senior Member
Seasoned Hubber
ஒரு நேரம் புகழின் உச்சியில்...
அடுத்த கணம்,
பழியின் படு பாதாளத்தில்,
பாவம் சாமியார்கள்.
உலகம் பழித்ததை ஒழித்துவிட
வழி கண்டிலார் போலும்!
அந்த வழியைக் கண்டுபிடித்துவிட்டால்
அதுவே உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு.
பிணியும் சனியும்
சதிகளுமே,
துறந்தாரையும விட்டுவைப்பதில்லை.
-
5th March 2010 11:07 PM
# ADS
Circuit advertisement
-
1st April 2010, 11:34 AM
#92
Senior Member
Seasoned Hubber
enjoying nature
மழைத்துளிகள் பட்டதனால் மகிழ்வு கொண்டு
மயக்கியெனை ஈர்த்தாடும் மலர்கள் கூவி
அழைத்திசையைப் பாடுகின்ற குயில்கள் ஈடே
அற்றதொரு நடம்புனைந்த மயில்கள் இன்பம்
இழைத்தளிக்கும் இயற்கையென்றன் பக்கம் இன்னும்
என்ன இனி வேண்டுமிவை இருக்கத் தேனைக்
குழைத்தளிக்கும் சுவைக்கோலம் குறையா நாளும்
கொஞ்சுகிளி தத்திவரும் குந்தும் தோளில்.
-
1st April 2010, 12:10 PM
#93
Senior Member
Platinum Hubber
ஆஹா! அருமை!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
2nd April 2010, 02:20 PM
#94
Senior Member
Seasoned Hubber
நன்றி மேடம்!
கவிதையும் புனைகிறீர்கள்
பிற கவிதைத் தூறல்களிலும் நனைகிறீர்கள்!
நீங்கள் ஓர் இரசிகமணி.
-
2nd April 2010, 04:38 PM
#95
Senior Member
Senior Hubber
Originally Posted by
bis_mala
ஒரு நேரம் புகழின் உச்சியில்...
அடுத்த கணம்,
பழியின் படு பாதாளத்தில்,
பாவம் சாமியார்கள்.
உலகம் பழித்ததை ஒழித்துவிட
வழி கண்டிலார் போலும்!
அந்த வழியைக் கண்டுபிடித்துவிட்டால்
அதுவே உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு.
பிணியும் சனியும்
சதிகளுமே,
துறந்தாரையும விட்டுவைப்பதில்லை.
அருமை!!!
துறந்தாரை துறவாதவர் துரத்தி துறந்தவற்றை
தருவதினால் தொடரும் துயரம்.
-
கிறுக்கன்
-
3rd April 2010, 03:32 PM
#96
துறவிற்கும் அறமுண்டு என்பதை தூயோர்
மறப்பதில்லை; எவர் தூயவர்? நல்லவர்! சிறந்தவரென
சீர்தூக்கி பார்த்திடல் பாமரரின் கடமை;
கூர்முனை உடலுக்கே ஊறேயாம்.
- வை. அண்ணாசாமி -
-
3rd April 2010, 03:40 PM
#97
துறவிற்கும் அறமுண்டு என்பதை தூயோர்
மறப்பதில்லை; எவர் தூயவர்? நல்லவர்! சிறந்தவரென
சீர்தூக்கி பார்த்திடல் பாமரரின் கடமை;
கூர்முனை உடலுக்கு ஊறேயாம்.
- வை. அண்ணாசாமி
etthanai kOti inbam vaithAi iraivA.
Seven wonders are the very basic notes.
-
3rd April 2010, 06:02 PM
#98
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
11th April 2010, 10:40 PM
#99
Senior Member
Seasoned Hubber
எங்கெங்கு நோக்கினும் துன்ப நேர்ச்சிகள்
இயற்கைப் பேரிடர் எண்ணிலா இன்னல்கள்,
மங்கிடும் கதிரொளி என்றிடும் அறிவியல்
மாநிலம் காப்பவன் தானழித் திடுவன்
இந்தப் பூமியை என்பவர் பற்பலர்!
வருநாள் பான்மை அறியோம் எனினும்
திருநாள் விழாக்கள் எவற்றிலும் மூழ்கி
கிடைத்ததை மதித்துக் கேடற வாழ்வது
படைத்துயர் வெல்லும் பான்மை,
............... கவல்வது மகிழ்ந்திருப் பீரே..
-
14th April 2010, 07:13 PM
#100
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
V.Annasamy
துறவிற்கும் அறமுண்டு என்பதை தூயோர்
மறப்பதில்லை; எவர் தூயவர்? நல்லவர்! சிறந்தவரென
சீர்தூக்கி பார்த்திடல் பாமரரின் கடமை;
கூர்முனை உடலுக்கு ஊறேயாம்.
- வை. அண்ணாசாமி
மக்கள் கடமையே மாமுனி யாரென்று
தக்க[படி] தாமறிந்து தாள்பற்றல் --- ஒக்கநின்றார்
தன்மை அறிந்தால் தகுதி வெளிக்காணும்
உண்மை உலகோர் பெற.
Bookmarks