-
14th May 2010, 06:02 PM
#101
Senior Member
Seasoned Hubber
mAmpazaththu vaNdu
உணவுக்குள்ளேயே குடியிருக்கிறேன்
உம்மைப்போல் வெளியுலகை
நான் அறிந்ததில்லை!
அறிந்து மகிழத்தான் உங்கள் உலகில்
என்ன இருக்குமோ?
என் உணவுலகம்
எனக்குப் போதும்!
என் உணவுக் கோளத்தை
யார் வெட்டிப்பார்த்தாலும்
என்னோடு என் உணவையும்
வீசி விடுவார்கள்.
ஆனாலும்
மாம்பழத்து வண்டென்று
மதிப்பில் எனக்குக் குறைவில்லை.
என்னைப் படைத்தவன்
என்னையும் காக்கின்றான்.
-
14th May 2010 06:02 PM
# ADS
Circuit advertisement
-
26th May 2010, 06:05 PM
#102
Senior Member
Seasoned Hubber
difficulty with reading fonts
பழுத்த அறிவினராம் பாவலர் பல்லோர்
கழுத்து வலித்திரு் கண்கள் கசிய
விழித்திர வெல்லாம் வியர்த்து வரைந்தார்
எழுத்தினது வேற்றுமையால் ஏதும் படித்தல்
ஒழித்தனர் நேயர்கள் ஒன்றும் அறியாது.
அழுத்திப் புலவர்சொல் ஆழ்ந்த கருத்தும்
இழைத்தநல் வேளைக்கு ் இழுக்கோ கணினி
பிழைத்தலறக் காக்குமோர் பெற்றிப் பராபரமே!
-
26th May 2010, 07:37 PM
#103
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
30th May 2010, 02:57 PM
#104
Senior Member
Senior Hubber
Re: difficulty with reading fonts
Originally Posted by
bis_mala
பழுத்த அறிவினராம் பாவலர் பல்லோர்
கழுத்து வலித்திரு் கண்கள் கசிய
விழித்திர வெல்லாம் வியர்த்து வரைந்தார்
எழுத்தினது வேற்றுமையால் ஏதும் படித்தல்
ஒழித்தனர் நேயர்கள் ஒன்றும் அறியாது.
அழுத்திப் புலவர்சொல் ஆழ்ந்த கருத்தும்
இழைத்தநல் வேளைக்கு ் இழுக்கோ கணினி
பிழைத்தலறக் காக்குமோர் பெற்றிப் பராபரமே!
பலமுறை படித்தும் பொருள் விளங்கவில்லை இச்சிறுமதிக்கு...
விளக்கம் pls if you dont mind...
-
கிறுக்கன்
-
3rd June 2010, 03:05 AM
#105
Senior Member
Seasoned Hubber
Re: difficulty with reading fonts
Originally Posted by
kirukan
Originally Posted by
bis_mala
பழுத்த அறிவினராம் பாவலர் பல்லோர்
கழுத்து வலித்திரு் கண்கள் கசிய
விழித்திர வெல்லாம் வியர்த்து வரைந்தார்
எழுத்தினது வேற்றுமையால் ஏதும் படித்தல்
ஒழித்தனர் நேயர்கள் ஒன்றும் அறியாது.
அழுத்திப் புலவர்சொல் ஆழ்ந்த கருத்தும்
இழைத்தநல் வேளைக்கு ் இழுக்கோ கணினி
பிழைத்தலறக் காக்குமோர் பெற்றிப் பராபரமே!
பலமுறை படித்தும் பொருள் விளங்கவில்லை
இச்சிறுமதிக்கு...
விளக்கம் pls if you dont mind...
-
கிறுக்கன்
The subject matter is the multiplicity of computer fonts which have been used by writers. The result is that, as someone has said elsewhere in this forum, one is not able to read what he or she wrote (in the past). Some old text editors do not work any longer.
For example, Tamil text editors that worked in Win 98 do not work in Win XP or Win 7.
The poem is about this difficulty faced by the readers and writers.
Does this input solve the problem? If not please let me know. I will write a further explanation. Sorry thiru kirukkan.
-
3rd June 2010, 10:35 PM
#106
Senior Member
Senior Hubber
விளங்கியது விளக்கம் விளக்கமாய் விளக்கத்தை
விளங்க விளக்கியதற்க்கு நன்றி.
-
கிறுக்கன்
-
3rd June 2010, 10:41 PM
#107
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
6th June 2010, 06:54 PM
#108
Senior Member
Seasoned Hubber
கரும்பினிலும் கரடியிலும் உயிரை வைத்தாய்
கருத்தாக அவைதமக்கு வளர்ச்சி வைத்தாய்
எறும்புமுதல் உலகினில்வாழ் உயிர்களெல்லாம்
ஒன்றினையொன்று் உண்டிடுமா றேன்படைத்தாய்!
உட்கொள்வோன் ஓருடம்பை உண்டபின்னே
ஒன்றொழியப் பிறிதுவளர் மாயை செய்தாய்!
கட்புலனுக் கொழிந்துவிட்ட உருவும்பின்பு
காட்சிதர மீண்டுவராக் காலம்கண்டாய்!
போர்செய்து பல்லுயிரை அழிக்கவெண்ணும்
புலைமைதனை நிலைமையென விடுத்ததென்ன,
ஏர் உய்தி பெற்றுலகில் அறமும் ஓங்க
ஏற்றவழி நின்றுதவ இணங்கிவாராய்.
-
6th June 2010, 07:11 PM
#109
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
kirukan
விளங்கியது விளக்கம் விளக்கமாய் விளக்கத்தை
விளங்க விளக்கியதற்க்கு நன்றி.
-
கிறுக்கன்
பொருள்கண்டு போற்றுதல் ஒன்றே கவிஞர்
நருள்தந்த நன்மையென் பார்.
நருள் = மக்கள்.்
You r welcome.
-
20th June 2010, 04:13 PM
#110
Senior Member
Seasoned Hubber
Finding topics and substance for theses
ஆய்வுக் கட்டுரைகளுக்குத் தலைப்பும் பொருளும் தேடுவதில் உள்ள் தொலலைகள் பற்றிச் சில வரிகள். நல்ல தலைப்பும் பொருளும் கிடைக்காவிட்டால் யாது செய்வது?
ஆய்வு செய்வோர்க்கு
நல்ல தலைப்புகள் வேண்டும் -- எந்த
நாட்டிலும் ஆய்வு செய் வோர்க்கு;
மெல்ல எதனையும் கொள்வார் -- தேடி
மேனி அலுத்ததன் பின்னே!
மொட்டைத் தலைமுழங் கால்கள் -- என
முடிச்சுகள் எங்கணும் போட்டு -- புனை ்
கட்டுரை நாட்ட முடிந்தால் -- முனை
கண்டவர் என்றுயர் வாராம்,
Bookmarks