-
6th August 2007, 02:13 PM
#1
Senior Member
Seasoned Hubber
Kalaignar TV?
கலைஞர் டிவிக்காக சீரியல்கள் தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக இருப்பவர்களில் முக்கியமானவர் டைரக்டர் கே.பாலச்சந்தர்.அவருக்கே உரிய பாணியில் குடும்பப் பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு சொல்லும் விதமாய் உருவாக்கி வரும் இந்த சீரியலுக்குப் பெயர் `தேன்மொழியாள்.'
-
6th August 2007 02:13 PM
# ADS
Circuit advertisement
-
6th August 2007, 02:21 PM
#2
Senior Member
Seasoned Hubber
வருகிற செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கவிருக்கும் கலைஞர் டி.வி.க்கான தொடர்களும், நிகழ்ச்சிகளும் தயாரிப்பில் இருந்து வருகின்றன. இதில் முதன்முதலாக தொடங்கப்பட்ட மெகா தொடரான பாரதி தொடர் இப்போது படப்பிடிப்பில் வளர்ந்து வருகிறது.
இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பப்படுகிறது. `தாயகம்' திரைப்படத்தையும், `கங்கா யமுனா சரஸ்வதி' தொடரையும் இயக்கிய ஏ.ஆர்.ரமேஷ் இயக்குகிறார்.
தொடருக்கு முதல் முதலாக பிரபல இசையமைப்பாளர் `தேவா' இசையமைக்கிறார்.
கதைச்சுருக்கம்: திருமணமாகும் இளம் பெண் தன் ஆசை, பாசம், பழக்க வழக்கம் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு ஆயிரம் கனவுகளோடு புகுந்த வீட்டிற்கு செல்கிறாள். கணவன், மாமியார், மாமனார் என வீட்டில் உள்ள அனைவருக்கும் எல்லா பணிவிடைகளையும் செய்கிறாள். ஆனாலும் அந்த வாழ வந்த பெண்ணை அவள் கணவன் அடிப்பதும் துன்புறுத்துவதும் தொடர்கிறது. இப்படிப்பட்ட குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு மரணத்தை தழுவிய அந்தப் பெண்ணின் தங்கை, அந்த குடும்பத்திற்கு மருமகளாக வருகிறாள். அக்காவுக்கு நேர்ந்த அநீதியை அவளால் தட்டிக் கேட்க முடிந்ததா?
தொடரின் சில காட்சிகளில் கம்ப்ïட்டர் கிராபிக்ஸ் உத்திகள் பயன்படுத்தப்பட உள்ளன.
நட்சத்திரங்கள்: சஞ்சய் பார்கவ், பானு பிரகாஷ், கல்யாணி, காவேரி, `சேது' பாரதி, சத்யபிரியா, விஜயகிருஷ்ணராஜ்.
கதை வசனத்தை ரகுராஜன் எழுதுகிறார். ஒளிப்பதிவு குணசேகரன். பாடல்: பா.விஜய். டிரைடன்ட் டெலிவிஷன் சார்பில் ரவீந்திரன், அப்துல் லத்தீப் தயாரிக்கிறார்கள்.
-
6th August 2007, 02:56 PM
#3
Senior Member
Veteran Hubber
கலைஞர் டி.வி.யில் இடம்பெறப்போகும் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கு காம்பியராக வர இருப்பவர் குஷ்பூ (ஜெயா டிவி கோபிக்குமா?)..
தன்னுடைய புதிய தொடர் ஒன்றுக்காக கலைஞர் டி.வி.யை அணுகி இருப்பவர் ஜெயசித்ரா.
இது தவிர 'அரட்டை அரங்கம்', 'மக்கள் அரங்கம்' போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் பாக்கியராஜ்.
-
6th August 2007, 06:32 PM
#4
Moderator
Diamond Hubber
தகவலுக்கு நன்றி லதா.
என்ன --> கலைஞர் டிவி தான் இல்லை.
-
6th August 2007, 06:34 PM
#5
Moderator
Diamond Hubber
`கங்கா யமுனா சரஸ்வதி'
ஆமா இந்தப் சீரியலின் பாடல் இருக்கின்றதா
-
20th August 2007, 03:36 PM
#6
Senior Member
Seasoned Hubber
கலைஞர் டி.வி.க்காக உருவாகிக் கொண்டிருக்கும் புதிய சீரியல் ரேகா ஐ.பி.எஸ். நடிகை அனுஹாசன் இத்தொடரில் மாறுபட்ட போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
மற்றும் விஜய் ஆதிராஜ், டெல்லிகணேஷ், கமலேஷ், சாக்ஷி சிவா, சஞ்சிவ், பாலாசிங், வெங்கட், சிந்துஜா, ஆர்த்தி, சாதனா, ஐஸ்வர்யா, வினோத்ராஜ், வத்சலா ராஜகோபாலன், நந்தகுமார், அப்சர்பாபு, ரவிவர்மா, மனீந்தர், ரவிச்சந்திரன் நடிக்கிறார்கள்.
`வீரமோ ஒரு பாதி...ஈரமோ ஒரு பாதி... தியாகமே அவள் சாதி... என்ற பாத்திரப்படைப்பில் பெண்ணினப் பிரதிநிதியாய், புயலாய் அநீதிகளை ஒடுக்கும் வித்தியாசமான கேரக்டரில் வரும் அனுஹாசனுக்கு அடிதடி காட்சியில் நடிக்கவும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.
சித்ரா லட்சுமணன் கதைக்கு சுபாவெங்கட் திரைக்கதை எழுத, இ.ராமதாஸ் வசனம் எழுதுகிறார். பாடல்: பிறைசூடன், இசை: சத்யா, ஒளிப்பதிவு: ஆம்ஸ்ட்ராங். இயக்கம்: நித்யானந்தம். பிரமிடு சாய்மீரா நிறுவனம் தயாரிக்கிறது.
---
Junior Vijayashanthi Uruvaagiraar!!!
-
22nd August 2007, 07:28 PM
#7
Moderator
Diamond Hubber
-
22nd August 2007, 07:37 PM
#8
Senior Member
Veteran Hubber
நாகா வின்
"பொன்னியின் செல்வன்"
The much awaited moment is here ......................................
சிதம்பர ரகசியத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ....... மீண்டும் சின்னதிரையில் வீற வெற்றி நடை போட வரும்.....
நிக் ஆர்ட்ஸ் வழங்கும்
"மர்ம தேசம்" நாகா வின்
பொன்னியின் செல்வன்
விரைவில் கலைஞர் டிவி யில்...................
For Discussions and Upgrades ..... visit :
http://mayyam.com/hub/viewtopic.php?t=10135
-
27th August 2007, 09:56 AM
#9
Senior Member
Seasoned Hubber
முள்ளும் மலரும்
கலைஞர் தொலைக்காட்சியில் `முள்ளும் மலரும்' என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகவிருக்கிறது.
வீனஸ் ஸ்டூடியோ தயாரிப்பில் கும்பகோணம், மற்றும் சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தொடரின் கதைச் சுருக்கம் வருமாறு:-
பெண் என்பவள் சுமைதாங்கியா? இடிதாங்கியா? எரிமலையா? பனிமலையா? என்ற கேள்விகளை எழுப்பினால், `ஆம் அவள் எல்லாமும் தான்' என்ற பதிலே பொருத்தமாக இருக்கும். அவள் மனதுக்குள் மறைந்திருக்கும் முட்களும், பூக்களும் கொஞ்சமல்ல. முள்ளாய் குத்துவதோ... பூவாய் மலர்ந்து சிரிப்பதோ சூழ்நிலைகளின் மாயா விநோதங்களே!
பெண் விடுதலை கிடைத்து வெளியே வந்ததாக தோற்றமளித்தாலும், அவள் அடைபட்டுக் கிடக்கும் ரகசிய சிறைகள் அநேகம் என்பதே உண்மை. அவள் மவுனமாய் அடையும் துயரங்களின் கணக்கை வீட்டுத் தூண்களும், அலுவலகங்களின் ஜன்னல்களும் மட்டுமே அறியும். வெளியே சிரித்து, உள்ளுக்குள் அழுது இந்த தேசமெங்கும் சோக பிம்பங்களாய் நடமாடும் பெண்களின் உணர்ச்சிகளை சொல்லி மாளாது.
இந்த முள்ளும் மலரும் தொடர், பெண்களின் ஆனந்தத்தை, கண்ணீரை கரைபுரளும் உணர்ச்சிகளை ஒரு புதிய கோணத்தில், ரத்தமும், சதையுமாக சொல்ல வருகிறது. இது வழக்கமான தொடரல்ல... ஒரு நிஜமான வாழ்க்கைத் தொடர்.
ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது, அவளுடைய திருமணத்திலிருந்து தொடங்குகிறது. பெண்ணை கரை சேர்த்து நிம்மதி அடைகின்றனர் பெற்றோர். ஆனால் ஒரு பெண்ணின் திருமணமே ஒரு மிகப் பெரிய பிரச்சினையை சுமந்து நின்றால், அவள் வாழ்வு என்னாகும்? அவளைப் பெற்றவர்களின் மனநிலை எப்படி உருக்குலைந்து போகும்? ஆனந்தங்களின் ஆரம்பமான திருமண உறவே, அதிர்ச்சிகளின் தொகுப்பானால், அவள் வாழ்க்கை எந்த திசையில் போகும்?
இந்த உணர்ச்சிகரமான கேள்விகளுக்கு முள்ளும், மலரும் தொடர் விடை தருகிறது என்கிறார், தொடரின் இயக்குனர் சுகி மூர்த்தி.
நடிகர்கள்:- விஷ்வா, ஷியாம் கணேஷ், ராஜேஸ்வரி (அறிமுகம்), வனஜா, கவுதமி, தேசிகன், `பெங்களூர்' நாகேஷ், ரேவதி சங்கரன். வசனம்:- பாலமுரளிவர்மா, ஒளிப்பதிவு:- சீனு, பாடலாசிரியர்:- எஸ்.ராஜகுமாரன், தயாரிப்பு:- கு.சண்முகவள்ளி, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
-
27th August 2007, 09:58 AM
#10
Senior Member
Seasoned Hubber
கலைஞர் டிவிக்காக டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்கி தயாரிக்கும் புதிய தொடர் தேன்மொழியாள். பொருந்தாத திருமணங்கள், சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் புயலை ஏற்படுத்துவதுடன், அவர்களின் குடும்பத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை கதைக் கரு கொண்டுள்ளது. ஒரு நகரத்தில் வெவ்வேறு இடத்தில் வசிக்கும் மூன்று தம்பதிகளுக்குள் நடக்கும் பிரச்சினைகளை, தேன்மொழி தீர்க்க நினைக்கிறாள். அப்போது அவளுக்கு எழும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிக்கிறாள் என்பது கதை.
கலைஞர் டி.வி.க்காக தயாராகி வரும் இந்த தொடரை டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்குகிறார். `கவிதாலயா' நிறுவனம் தயாரிக்கிறது. தேன்மொழி கதாபாத்திரத்தில் நடிகை சுவர்ணா நடிக்கிறார். சுபலேக சுதாகர், `கவிதாலயா' கிருஷ்ணன், புவனா, ராணி, காவேரி, வனஜா, சுபலஷ்மி ஆகியோரும் இருக்கிறார்கள்.
Bookmarks