Page 14 of 46 FirstFirst ... 4121314151624 ... LastLast
Results 131 to 140 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #131
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    தோழி சாக்கு!

    தளபதி
    First Published : 19 Jul 2009 09:46:00 PM IST

    Last Updated :

    கோலிவுட்டில் மீனாவோடு செட் சீனியர் நாயகிகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. மீதம் இருப்பது சங்கவி மட்டுமே உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்டால்? சிரிக்கிறார். முன்பெல்லாம் என் தோழி மீனாவுக்குத் திருமணம் முடிந்த பின்னர்தான் என் திருமணப் பேச்சு என்று கூறிவந்தார். சினிமா முடிந்து சீரியல்களில் பிஸியாக இருப்பதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம். இப்போது மீனாவின் திருமணம் முடிந்து விட்டதால் சங்கவியின் திருமண பேச்சு ஆரம்பித்து விட்டது. அடுத்த வருடம் திருமணம் நடக்கலாம் என்று கூறும் சங்கவி அது ரகசிய திருமணமாக இருக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்கிறார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #132
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Thank you Latha
    "அன்பே சிவம்.

  4. #133
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    welcome aanaa

  5. #134
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Here’s to harmony!

    They differ on many issues, but their outlook on life is similar. Meet the talented husband-wife team of actors Charanya and Ponvannan

    "This is the only profession where seniority isn’t seen as a qualification "



    “We are very different from each other. I’m a complete pessimist and he a diehard optimist. I get easily provoked while he’s always cool,” laughs Charanya looking relaxed and radiant in a muted green and brown sari. “But we are a contented couple,” adds husband Ponvannan as they speak about the success behind their 14-year-old marriage, home and career.

    Today both Ponvannan and Charanya have established themselves as capable character actors. She’s busy doing Telugu films too.

    If Charanya’s portrayals in films such as Raam, Em Magan and Thavamai Thavamirundhu proved her calibre as a character actor, Karuththamma, Pasumpon and Paruththi Veeran showcased Ponvannan’s dynamism.

    “When I accept a role, I give a lot of thought to my make-up and body language and as I’m a director too, I see the scene in its entirety,” he says. Be it the cunning politician in the recent Muththirai, the upright police officer in Anjaadhae or the shrewd Customs official in Ayan, Ponvannan’s performance always makes an impact. But as a director, he is still to get his due — Jameela, his second film, which was selected for the Shanghai Film Fest, won him accolades here and abroad.

    “As I told you, equanimity is my asset. I don’t worry unduly about things that don’t happen my way. But I keep myself abreast of the latest in filmmaking. And I’m a keen observer. It isn’t as though cinema is the only medium of expression for a creator. Who knows, I could write books or take up public speaking. I’ll make it as director one day and even if I don’t, I know I have it in me,” he says. “Didn’t I tell you? He sees only positives,” smiles Charanya.
    Back to the past

    Cinema was never on Ponvannan’s agenda, when he came down to Chennai. “As an avid painter my only dream was to become a drawing master in a school in my hometown, Erode. Of course, writing has always been a passion and we had a literary circle which met regularly.” It was in this regard that he met writer and journalist Valampuri John, which led to a stint with Kovai Thambi’s Motherland Pictures and later on with Bharatiraaja as assistant director. Simultaneously roles kept happening.

    Charanya’s career began on a very high note, with Mani Ratnam’s Nayakan. “I had just joined the undergraduate course in Nutrition at WCC, when a photographer followed me up to my home one day, for a picture to be used on the cover of Kungumam. It was a women’s magazine then. My father wasn’t for it. ‘She commutes by bus every day. She may face problems,’ he said. But the photographer convinced him,” recalls Charanya. The cover caught the eye of Mukta Srinivasan, and soon she found herself catapulted to the status of Kamal Haasan’s heroine!

    Surprisingly her graph seemed to slide downwards despite solid roles in films such as Manasukkul Maththaappu and En Jeevan Paadudhu. “That was because it was an era of rustic films, when every film had the heroine having a bath with her skirt tied around her chest. I’d vetoed all those offers and hence the choices were limited. Yet I have no regrets. I’m modern in outlook, but as a heroine I could never do certain things,” she says.

    Priorities changed and marriage and children made her opt for home. K. Balachander brought her back to television with “Veetukku Veedu Looty”. “Till then I didn’t know I could do comedy. But director Chanakya talked me into it.” Her big screen re-entry began with Vael, in which she played Surya’s mother and there’s been no looking back since. “I’ve never had qualms playing mother. And I’m not unduly bothered about how I look on screen. I have to suit the part, that’s it. Anyway I don’t accept insipid roles.”

    Are character actors treated well at the workplace? “Let him answer it first. We never see eye to eye on the issue,” she laughs.

    Ponvannan’s contention puts things in perspective. “Time is money and work is the priority. Personal problems don’t have a place here. This is the only profession where seniority isn’t seen as a qualification and treated with the deference extended to say an experienced doctor or lawyer. You have to be practical.”

    But films wax eloquent on values … “Is it their mistake if you think that those who espouse lofty ideals don’t follow them? Cinema is a dream factory where lies are sold,” is his calm reply.

    Appeasing Charanya isn’t easy. “You know about the caravan culture. Nobody is faulting it. During outdoor shoots while a heroine is able to change her costume and use the washroom in the total privacy of her caravan, dancers have to dress up behind bushes. And what are her pluses? That she’s from Mumbai, she’s young and most important, she doesn’t know a word of Tamil!”

    At a recent function where Charanya was invited to receive an award, her request for two passes for her daughters, was turned down. “But when I go over there I see an actor who wasn’t receiving an award enter with a huge coterie and the same organiser providing seats for all of them. When we talk about the industry which has made us popular, I’ve also got to be vociferous on such issues,” she says, as Ponvannan shrugs his shoulders with a smile.

    He sums up his stand when he says, “Life allows no rehearsal. It’s just a straight ‘Take.’ Similarly once a shot is canned it can’t be changed. So without getting worked up about things, it’s much simpler to concentrate on your job and keep giving your best.”


    [html:b7c6b3bdc0]<div align="center">[/html:b7c6b3bdc0]
    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  6. #135
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    "சுஜாதா கதைகள் பிடிக்கும்''

    First Published : 27 Jul 2009 12:12:25 AM IST

    Last Updated :

    தமிழ் சேனல்களில் ஆங்கிலம் கலந்து பேசும் தொகுப்பாளர்கள்தான் அதிகம். சிலர்தான் தமிழில் பேசுவதைக் கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அவ்வாறு தமிழில் பேசி ரசிகர்களைக் கவருவதுதான் என் ஸ்டைல் என்கிறார் சின்னத்திரை தொகுப்பாளினி அம்சிகா.
    சூரியன் எஃப்.எம். மூலம்தான் இந்த துறைக்கே நான் வந்தேன். அப்போது ரசிகர்கள் அதிகம் பேர் கேட்ட பண்பலை அதுதான். அதில் என்னுடைய ஸ்டைல் தனியாக தெரிந்ததால் எல்லோரையும் என் குரல் கவர்ந்துவிட்டது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவு, ஆசையெல்லாம் எனக்கு இருந்ததில்லை. வாய்ப்பு கிடைத்தது; பயன்படுத்திக் கொண்டேன்.
    அப்போது "விகடன்' இதழில் வந்த சுஜாதா விருதுகளில் சிறந்த தொகுப்பாளினி விருது எனக்கு கிடைத்தது. எழுத்துலகமே கொண்டாடிய, கொண்டாடுகிற சுஜாதாவை என் குரல் கவர்ந்திருக்கிறது என்பதில் எனக்கு மிகுந்த பெருமை. ஆனால் ஒரு வருத்தம்... அதன் பிறகு நான் சுஜாதாவை சந்தித்து ஒரு நன்றி கூட சொல்லவில்லை. அவரை "மிஸ்' பண்ணியதை நினைத்தால் இப்போதும் அழுகையாக வருகிறது. ஆனால் அவருடைய கதைகளைப் படிப்பதை இப்போது என் வழக்கமாக்கிக் கொண்டேன். அவருடைய கதைகளில் வரும் எழுத்து நடைதான் என் காம்பியரிங் ஸ்டைல்!
    இப்போது ஜீ டி.வி.யில் "கோலிவுட் காலிங்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறேன். திரைப்பட விமர்சன வரிசைதான் அந்த நிகழ்ச்சி. படங்கள் பார்ப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இப்போது இன்னும் அதிக படங்களைப் பார்த்து திறனாய்வு செய்கிறேன். மற்ற நிகழ்ச்சிகளை வழங்குவதை விட சினிமா நிகழ்ச்சிகளை வழங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    சினிமா, சீரியல் வாய்ப்புகள் ஒரு சில வந்தன. சீரியல்களில் ஆர்வம் இல்லை. சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிப்பேன். தற்போது "ஒரு கூடை முத்தம்' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறேன். அந்த சினிமா முடிந்த பிறகு புதிய சினிமாக்கள் பற்றி யோசிப்பேன் என்கிறார் அம்சிகா.

    http://dinamani.com/edition/story.as...41&SEO=&Title=

  7. #136
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    பலகுரல் அரசி!

    என்னுடைய கல்லூரி தோழிகளைப் பொறுத்தவரை ஒரு சிறந்த பாடகியாகத்தான் தெரியும். நான் இளையராஜாவின் உறவினர். அதனால் இசைக் குடும்பத்தில் வந்திருக்கிறேன் என்று
    அழகான தமிழ், அதிலும் மரியாதையுடன் கூடிய அழுத்தமான உச்சரிப்பு, பாரதிராஜா படத்தின் பள்ளிக்கூட டீச்சர் மாதிரி புடவை- குடை என ஆதித்யா சேனலில் தோன்றி, தொடர்பு கொள்ளும் அனைவரையும் நகைச்சுவை மழையில் நனைய வைப்பவர் விளாசினி. நுனி நாக்கு ஆங்கிலத்தில், கொஞ்சிக் கொஞ்சி அலட்டும் பேர்வழிகளுக்கு மத்தியில் தன்னுடைய, தன்னிகரில்லா மிமிக்ரி திறமையின் மூலம் மிகக் குறைந்த காலகட்டத்திலேயே ஏராளமான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் இவர். இவரிடம் ஒரு பொன்மாலை பொழுதில் பேசியதிலிருந்து...



    கல்லூரி நாள்களில் நீங்கள் பலகுரல் அரசியாகத் திகழ்ந்தீர்களோ?

    சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் கல்லூரி நாள்களில் மிமிக்ரி எதுவும் செய்ததில்லை. நன்றாகப் பாடுவேன் என்று பெயர் எடுத்திருந்தேன், அவ்வளவுதான்.

    அப்புறம் எப்படிப் பெரும்பாலான ஹீரோயின்களின் குரலை அப்படியே தத்ரூபமாகப் பேசுகிறீர்கள்?

    இல்லைங்க. நான் பாட்டுப் பாடும்போது அந்தந்தப் பாடலை பாடிய இசைக் கலைஞர்களைப் போலவே மிமிக்ரி பண்ணி பாட முயற்சித்தேன். குறிப்பாக, சித்ரா, ஜானகி போன்றவர்களின் குரலை அச்சு அசலாகக் கொண்டு வர வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிதான் இப்போது என்னை உங்களுக்கு அடையாளம் காட்டி இருக்கிறது என்று சொல்லலாம்.

    இசையை முறையாகக் கற்றுக்கொண்டீர்களா?

    ஆமாம். நான் முறையாக கர்நாடிக் மியூசிக்கைக் கற்றிருக்கிறேன். அதனால் என்னுடைய கல்லூரி தோழிகளைப் பொறுத்தவரை ஒரு சிறந்த பாடகியாகத்தான் தெரியும். நான் இளையராஜாவின் உறவினர். அதனால் இசைக் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லலாம்.

    ஆதித்யாதான் உங்கள் முதல் படியா?

    இல்லைங்க. நான் விஷுவல் மீடியாவுக்கு வருவதற்கு முன்பே என்னுடைய குரலுக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தேன். அந்த வாய்ப்பை வாரி வழங்கியது ரேடியோ மிர்ச்சியின் "பேட் ராப்' நிகழ்ச்சி. இதற்குப் பிறகு ஹலோ எப்.எம். ரேடியோ சிட்டியில் ஹாலிவுட் மசாலா இப்படி பல நிகழ்ச்சிகளில் வலம் வந்திருக்கிறேன்.

    அலட்டல் அலுமேலுவாக ஆதித்யாவில் வலம்வரும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

    பேப்பர்ல விளம்பரத்தைப் பார்த்து ஆடிஷனுக்குப் போனேன். அப்போது கலந்துகிட்ட மூவாயிரம் பேரில் எனக்கென்று தனி அடையாளம் அளித்தது என்னுடைய மிமிக்ரி திறமைதான். மூவாயிரத்தில் இருந்து ஒருவராக நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்கிற விஷயம் ரொம்ப பெருமையாக இருக்கிறது. சேனல் தரப்பில் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். முதல் நாள் நேரலையில் என்ன பேசப் போகிறோம் என்று டென்ஷனோடு நிகழ்ச்சியை ஆரம்பித்தேன். பாராட்டுகளோடு நிகழ்ச்சியை நிறைவு செய்தேன்.

    கோவை சரளாவின் வாய்ஸ் உங்களுக்கு அச்சு அசலா வருதே? நீங்கள் கோயமுத்தூரா?

    நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அவ்வளவாக பெண்கள் பேசப்படாத துறையான, அதேநேரத்தில் ரொம்பவும் சவால் மிகுந்த இந்த துறையில் மின்னணும் என்று நான் மேற்கொண்ட முயற்சியில் சாத்தியமானவைதான் இவை. அப்புறம் "இப்போதுள்ள நடிகைகளைப் பொறுத்தவரை எல்லோருக்கும் குறிப்பிட்ட சிலரே டப்பிங் கொடுக்கிறதுனால ஒரிஜினாலிட்டி இல்லாம போயிருச்சு. அதனால அவங்க பேசிய டயலாக்தான் அடையாளத்தைக் கொடுக்குது. இப்போது, ""இடுப்ப பாத்தியா'' அப்டீன்னா அது ஜோதிகா. அப்படி நான் முயற்சித்ததில் கோவை சரளா, நமீதா, அசின் என சிலருடைய குரல் எனக்கு ஈஸியாக இருந்தது. இதைத் தவிர எம்.என்.நம்பியார், தங்கவேலு என பல ஜாம்பவான்களின் குரலும் பரிட்சயமாச்சு!

    "நேரலையில் லொடலொடன்னு பேசிக்கிட்டே இருக்காங்க. இப்படி ஒரு குற்றச்சாட்டு இருக்கே அதை ஒத்துக்கறீங்களா?

    ஆமாம். உண்மைதான். என்னைப் பொறுத்தவரை இது புதிதல்ல. ஏன்னா சின்ன வயசுல நான் ரொம்ப பேசுறதப் பார்த்து, "வாயாடின்னு' பட்டம் கொடுத்தாங்க! கொஞ்சம் வளந்துக்கப்பறம் ""அய்யய்யோ இவ வாயைத் தொறந்தா மூடவே மாட்டா'' அப்படீன்னு சொன்னாங்க. ஆனால் என்னுடைய பலவீனமாக அவர்கள் கருதினதை இப்போது என்னுடைய பலமா மாத்திருக்கிறதா உணருகிறேன்.

    பொது இடங்களில் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட அனுபவம் உண்டா?

    சிக்கிக்கொண்டு தவிச்சதெல்லாம் கிடையாது. ஆனால் என்னை வெகு சுலபமாக கண்டுபிடித்துவிடுகிறார்கள். நான் என்னுடைய இன்னொரு நிகழ்ச்சியில் வரும்போது, நானும் அலமேலுவும் இரட்டை சகோதரிகள்னு சும்மா விளையாட்டாகச் சொல்லி வைத்தேன். ஆனால் பொது இடத்தில் வைத்து ஒரு ரசிகர், உங்கள் அக்கா வரவில்லையா என்று கேட்டபோது, ரொம்பவே உள்ளம் நெகிழ்ந்து போனேன். என்னுடைய ஒவ்வொரு அசைவையும் ரசிக்கிற ரசிகர்களை எப்பவுமே சந்தோஷப்படுத்திக்கிட்டே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்.

    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=

  8. #137
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    'சீரியல்தான் பெஸ்ட்': சின்னத்திரை ஸ்ரீவித்யா

    சிறுமியாக இருந்தபோதே சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என ஆசைப்பட்டேன். அது போலவே இப்போது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நடிகை ஆகி விட்டேன். ஆனால் சினிமா மட்டும் "மிஸ்' ஆகி விட்டது என்கிறார் சின்னத்திரை நடிகை ஸ்ரீவித்யா. பள்ளிப் பருவமே என்னை நடிகையாக்கி விட்டது. பள்ளியில் நடக்கும் நாடகங்களில் நடித்ததுதான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. நடிக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு சினிமாதான் என் கண்களில் தெரிந்தது. ஒரு சில சினிமாக்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த பின்னர் சீரியல் ஆர்வம் தொற்றிக் கொண்டது.

    சினிமாவில் நாயகனுக்கும் நாயகிக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சீரியல்கள், ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அலங்கரிக்கின்றன. சினிமாவில் சாதிக்க முடியாததை சீரியல்களில் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தால் நான் சீரியலுக்கு வந்து விட்டேன்.

    அவ்வப்போது ஓரிரு சினிமாக்களில் வருவேன். அதுவும் சினிமா நண்பர்களால்தான். மற்றபடி எனக்கு சினிமாவில் ஆர்வம் குறைந்து விட்டது. சினிமாக்களைப் பார்ப்பதோடு மட்டும் சரி. இப்போது எல்லோர் வீட்டிலும் அமைதியான பெண்ணாக, துறுதுறு மாணவியாக, அழகான காதலியாக, அன்பான மகளாக, சில நேரங்களில் வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்.

    ஒரே நேரத்தில் பல வித கேரக்டர்களை செய்வது எனக்கு பிடித்திருக்கிறது. சினிமாவில் எவ்வளவுதான் உழைத்தாலும் இப்போது சீரியல்களில் வாங்கியுள்ள பெயரை வாங்க முடியாது என்றே நினைக்கிறேன்.

    சினிமாவில் உச்சக்கட்டத்தில் இருந்த நடிகைகளே இறுதியாக வந்து சேரும் இடம் சீரியல் என்பதில் என்னைப் போன்றவர்களுக்கு கொஞ்சம் பெருமைதான். அவர்களோடு போட்டி போட்டு நடிப்பதில் சந்தோஷம் இருக்கிறது. அந்த போட்டி நிச்சயம் சீரியல் உலகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும். காதல், கல்யாணம் இதைப் பற்றி யோசிப்பதற்கான பக்குவம் இன்னும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பக்குவம் வரும்போது நிச்சயமாக சொல்லுவேன் என்றார் ஸ்ரீவித்யா.

    [html:7b85a68ac9]<div align="center"></div>[/html:7b85a68ac9]

    http://dinamani.com/edition/story.as...41&SEO=&Title=

  9. #138
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சுஜாதா கதைகள் பிடிக்கும்''

    தமிழ் சேனல்களில் ஆங்கிலம் கலந்து பேசும் தொகுப்பாளர்கள்தான் அதிகம். சிலர்தான் தமிழில் பேசுவதைக் கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அவ்வாறு தமிழில் பேசி ரசிகர்களைக் கவருவதுதான் என் ஸ்டைல் என்கிறார் சின்னத்திரை தொகுப்பாளினி அம்சிகா.

    சூரியன் எஃப்.எம். மூலம்தான் இந்த துறைக்கே நான் வந்தேன். அப்போது ரசிகர்கள் அதிகம் பேர் கேட்ட பண்பலை அதுதான். அதில் என்னுடைய ஸ்டைல் தனியாக தெரிந்ததால் எல்லோரையும் என் குரல் கவர்ந்துவிட்டது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவு, ஆசையெல்லாம் எனக்கு இருந்ததில்லை. வாய்ப்பு கிடைத்தது; பயன்படுத்திக் கொண்டேன்.

    அப்போது "விகடன்' இதழில் வந்த சுஜாதா விருதுகளில் சிறந்த தொகுப்பாளினி விருது எனக்கு கிடைத்தது. எழுத்துலகமே கொண்டாடிய, கொண்டாடுகிற சுஜாதாவை என் குரல் கவர்ந்திருக்கிறது என்பதில் எனக்கு மிகுந்த பெருமை. ஆனால் ஒரு வருத்தம்... அதன் பிறகு நான் சுஜாதாவை சந்தித்து ஒரு நன்றி கூட சொல்லவில்லை. அவரை "மிஸ்' பண்ணியதை நினைத்தால் இப்போதும் அழுகையாக வருகிறது. ஆனால் அவருடைய கதைகளைப் படிப்பதை இப்போது என் வழக்கமாக்கிக் கொண்டேன். அவருடைய கதைகளில் வரும் எழுத்து நடைதான் என் காம்பியரிங் ஸ்டைல்!

    இப்போது ஜீ டி.வி.யில் "கோலிவுட் காலிங்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறேன். திரைப்பட விமர்சன வரிசைதான் அந்த நிகழ்ச்சி. படங்கள் பார்ப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இப்போது இன்னும் அதிக படங்களைப் பார்த்து திறனாய்வு செய்கிறேன். மற்ற நிகழ்ச்சிகளை வழங்குவதை விட சினிமா நிகழ்ச்சிகளை வழங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    சினிமா, சீரியல் வாய்ப்புகள் ஒரு சில வந்தன. சீரியல்களில் ஆர்வம் இல்லை. சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிப்பேன். தற்போது "ஒரு கூடை முத்தம்' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறேன். அந்த சினிமா முடிந்த பிறகு புதிய சினிமாக்கள் பற்றி யோசிப்பேன் என்கிறார் அம்சிகா.


    [html:3ee3e1c126]<div align="center"></div>[/html:3ee3e1c126]
    "அன்பே சிவம்.

  10. #139
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பெண்கள் எல்லாத்துறையிலும் கலக்கிகிட்டிருக்காங்கன்னு அனுபவம் வாய்ந்த பெரியவங்களே சொல்றாங்க. தாமதிக்காமல் பார்லிமென்டில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படணும் - விஜய் டி.வி.யில் அன்பே வா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் அபிராமியை பேட்டிக்கு சந்தித்தபோது உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. அமெரிக்காவில் படித்து வந்த படிப்பை பாதியில் விட்டு விட்டு கலைச்சேவையில் ஈடுபட்டிருக்கும் இவர் முதலில் ஜெயா டி.வி., ஆங்கில செய்தி வாசிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் தற்போது அன்பே சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இது இன்னும் ஏன் நடக்கவில்லைனு எதையாவது நினைக்கிறீங்களா என்று கேட்டால், பார்லிமென்டில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டை தொடர்ந்துக் கிட்டிருக்கு. அவைகள் தகர்த்தெறியப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். பெண்கள் எல்லாத்துறைகளிலும் கலக்குவதைப்போல அரசியலிலும் நிச்சயம் கலக்குவாங்க, என்கிறார். அம்மணிக்கு அரசியலுக்கு வர்ற ஆசையெல்லாம் இருக்குது போல!!
    [html:e3708122cd]<div align="center"></div>[/html:e3708122cd]
    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  11. #140
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    சினிமாவே வேண்டாம் என்று திரையுலகை விட்டு விலகிய கருத்தம்மா ராஜஸ்ரீ தற்போது மீண்டும் பீல்டில் நுழைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். "கருத்தம்மா' படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட ராஜஸ்ரீ 4 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஜெயா "டிவி'யில் "நெஞ்சைத் தொட்ட கதைகள்' சீரியல் மற்றும் சத்திய ஜோதியின் "இதயம்' சீரியலிலும் நடித்து வருகிறார். இதுதவிர "அய்யனார்' உட்பட, நான்கு படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் பிசியாக நடித்துக் கொண்டிருகிறார். வேண்டாம் என்று ஒதுக்கிய பீல்டுக்கு மீண்டும் வந்தது ஏன்? என்று கேட்டால் புன்னகை ததும்ப பேசுகிறார்.

    அவரது பேட்டி:-


    பாரதிராஜாவின் "கருத்தம்மா'வுக்கு பிறகு கன்னடம், மலையாளம், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். நான்கு வருடத்துக்கு முன்னாடி நடிக்க வேணாம். பீல்டிலிருந்து ஒதுங்கியிருக்கலாம்ன்னு நினைச்சு ஒதுங்கிட்டேன். திடீரென்று சீரியல், சினிமான்னு வாய்ப்புகள் வந்தது. நல்ல இடங்களிலிருந்து வந்ததால் மீண்டும் இந்த பீல்டுக்கு வந்திருக்கேன்.


    நீங்கள் திரும்பியும் இந்த பீல்டுக்கு வருவதற்கு காரணம் யார்?



    நடிப்பாற்றல் இருக்கு. திறமையும்,ஆர்வமும் இருந்தும் ஏன் பீல்டைவிட்டு ஒதுங்கியிருக்கணும். மீண்டும் ஏன் முயற்சிக்க கூடாதான்னு நெருக்கமானவங்க சொன்னாங்க. அப்பத்தான் சத்தியஜோதி பிலிம்ஸ்ல புதிய படத்தில நல்ல கேரக்டர் இருக்கு நீங்க நடிக்கலாமேன்னும் சொன்னாங்க. நானும் அலுவலகத்திற்கு போனேன். அங்கு என்னோட வீடியோ டெஸ்ட் எடுத்தாங்க. மீண்டும் அழைப்பதாக சொல்லி அனுப்பி வச்சாங்க. ஒரு நாள் அழைப்பு வந்தது. போய் பார்த்தபோது டைரக்டர் நித்யா இருந்தார். நான் "கருத்தம்மா' படத்திற்கு முன்பாக சினிமாவுக்கு வர முயன்றபோது, நித்யா சார்தான் ஸ்டில்ஸ்செல்லாம் எடுத்து கொடுத்தார். அப்புறம் கன்னட படத்தில் வாய்ப்பு கிடைச்சு போய் விட்டேன். பிறகு "கருத்தம்மா' கிடைத்தது. படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைச்சதால "டிவி'க்கு வருவது குறித்து யோசிக்கலை. சத்யஜோதி ஆபீஸ்ல என்னை பார்த்த டைரக்டர் நித்யா "இதயம்'ங்கிற பேர்ல சீரியல் பண்ணப்போறோம். நீ நடிக்கிறியான்னு கேட்டார். சரி சொன்னேன். ஜெயா "டிவி'யில் "இதயம் தொட்ட கதைகள்' சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஒரு நடிகையை பற்றிய கதை அது. பிடிச்சிருந்தது. நடித்தேன்.


    சினிமா, டி.வி. பீல்ட் பற்றி உங்கள் கணிப்பு?


    சினிமாவிலும் சரி, டி.வி.யிலும் சரி இப்ப வந்திருக்கிற புதிய டைரக்டர்களிடம் நிறைய விஷயமிருக்கு. பிரண்ட்லியா பேசி அவுங்க நினைச்ச மாதிரி ஈசியா வேலை வாங்கிடறாங்க. தேனப்பன் தயாரிக்கும் "அய்யனார்' படத்தில் நடிக்கிறேன். ராஜமித்ரன் டைரக்டர் பண்றார். அடையாறு திரைப்படக் கல்லூரியில் படிச்சவர். கன்னடத்தில படம் பண்ணிட்டு தமிழுக்கு வந்திருக்கார். ரொம்ப யதார்த்தமா பேசி, சிரமமில்லாம என்னிடம் தேவையான நடிப்பை ஈசியா வெளிகொண்டு வந்திடறார். புதுமுக இயக்குனர்களிடம் நிறைய விஷயமிருக்கு. அவுங்களோட திறமையை மதிச்சு தயாரிப்பாளருங்க வாய்ப்பு கொடுத்தால் சினிமாவில் நிறைய பேர் ஜொலிப்பார்கள்.


    இந்த பீல்டுக்கு நினைத்து வந்தது நிறைவேறி விட்டதா?


    என்ன நினைச்சு இந்த பீல்டுக்கு வந்தேனோ, அது நடந்துக்கிட்டு தானிருக்கு. மக்களுக்கு நல்ல அறிமுகம் கிடைச்சதே பெரிதா நினைக்கிறேன். நிறைய வேலைகளில் பலர் முக்கியமானவங்களா இருக்காங்க. ஆனால் அவுங்களுக்கு மக்களிடம் அறிமுகம் கிடைப்பது கிடையாது. "சினிமா, டி.வி.யில் வருபவங்களுக்கு எளிதாக நல்ல அறிமுகம் கிடைச்சிடுது. சின்ன குழந்தைகூட நடிகர், நடிகரை அடையாளம் தெரிஞ்சுக்கிடறது. இந்த பீல்ட்டை நான் செலக்ட் பண்ணி வந்தது சரிதான்னு சொல்வேன். சந்தோஷமா நினைக்கிறேன்.


    சினிமா - டி.வி... எதில் நடிப்பது சிரமம்?



    சினிமாவை விட டி.வி.யில் நடிப்பது கஷ்டம். ஒரு நாளைக்கு 2, 3 எபிசோட் கூட எடுப்பாங்க. நிறைய எடுக்கறாங்க, ஏதோ நடிச்சா போதும்ன்னு நடிச்சுட்டு போயிட முடியாது. டி.வி. சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களும், வித்தியாசமான சீரியல்களும் போட்டி போட்டு வந்திட்டிருக்கு. தியேட்டருக்கு போறவங்க படம் சரியில்லைனா பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிருக்கோம். கடைசி வரை போவோம்ன்னு இருந்து பார்ப்பாங்க. டி.வி.யில் இந்நிலை இல்லை. சீரியல் பிடிக்லைன்னா மன்னிப்பே கிடையாது. கையில் வைத்திருக்கும் ரிமேட்டை ரசிகர்கள் வில்லனை போல பயன்படுத்தி அடுத்த சேனலுக்கு மாறிடுவர். சீரியலை ரசிகர்கள் முழுத்திருப்தியோடு ரசிக்க வைக்க நடிகர், நடிகைகள் 100 சதவீதம் நடிச்சாத்தான் ரசிகர்களிடம் எடுபடும்.


    [html:cfe3c39577]<div align="center"> </div>[/html:cfe3c39577]



    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

Page 14 of 46 FirstFirst ... 4121314151624 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •