Page 16 of 46 FirstFirst ... 6141516171826 ... LastLast
Results 151 to 160 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #151
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    பேசும் பைங்கிளி



    பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, தன்னுடைய திரையுலக வாழ்க்கையை வசந்த் டிவி நேயர்களுடன், வாரந்தோறும் பகிர்ந்து கொள்கிறார். எம்.ஜி.ஆருடன் அறிமுகமான நாடோடி மன்னன் முதல், சமீபத்தில் வந்த ஆதவன் படத்தில் நடித்தது வரை தன்னுடைய திரையுலக அனுபவங்களை விவரிக்கிறார்.

    சொந்த வாழ்க்கை, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், தெலுங்கு நடிகர்கள் என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட பிரபல நாயகர்களுடனான தனது அனுபவங்களையும், மனம் திறந்து பேசுகிறார்.

    நிகழ்ச்சி இயக்கம்: ஆர்.பாலாஜி.

    தயாரிப்பு வசந்த் டிவி.

    ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு வசந்த் டிவியில் பேசும் பைங்கிளியை காணலாம்.

    நன்றி: தினதந்தி


    கோபால் ல் ல் ல்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #152
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    சின்னத்திரை உலகின் பெண்கள்?

    எல்லாத் துறைகளிலும் பெண்கள் இப்போது நுழைந்து வெற்றிக் கொடி நாட்டி, தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி அவர்கள் முத்திரை பதித்திருக்கும் துறைகளில் சின்னத்திரையும் ஒன்று.

    ஆனால் சின்னத்திரையில் நடிப்பு, தயாரிப்பு என்று தங்களின் முத்திரையை பதிக்கும் பெண்களால், அதன் இதர துறைகளான எழுத்து, இயக்கம், தொழில்நுட்பம் போன்றவற்றில் பேசப்படும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. இதுக் குறித்து "பாலாஜி டெலி ஃபிலிம்ஸ்' நிறுவன கிரியேட்டிவ் ஹெட் திருமதி. சுபா வெங்கட்டிடம் கேட்டபோது,

    ]

    ""சினிமா எப்படி ஆண்களுடைய துறையாக இருக்கிறதோ, அதுபோல பெண்களுடயை துறை சின்னத்திரை என்றாகிவிட்டது. டி.வி.யில் வரும் சீரியல்களை பொறுத்தவரையில் பெண்கள்தான் ஹீரோக்கள்! சீரியல்களில் பெண்களுக்குதான் பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    அதுபோல பொருளாதார ரீதியாக பார்த்தாலும், சினிமாவில் எப்படி ஹீரோவுக்கு நிறைய சம்பளம் தரப்படுகிறதோ, அதுபோல சின்னத்திரையில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது. ஏனென்றால் கதையில் முக்கிய பாத்திரங்களாக அமைவதும், அதை ஏற்று நடிப்பதும் பெண்கள்தான். பெண்களைச் சுற்றித்தான் கதை நகரும். சினிமாவில் வில்லன் என்றால், தொடர்களில் வில்லி பாத்திரங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதுவும் பெண்களுக்கான ஒரு தனிச் சிறப்பு.

    அதனால் சின்னத்திரையில் நடிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேறவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    ஆனால், சினிமாவில் மற்ற துறைகளில் பெண்கள் சாதிப்பதை பார்க்கும்போது சின்னத் திரையில் பெண்களின் பங்களிப்பு கம்மிதான். சினிமாவில் நிறைய பெண் இயக்குனர்களும், ஒளிப்பதிவாளர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். நிறைய பெண் உதவி இயக்குனர்களும் இருக்கிறார்கள்.

    ஆனால் டி.வி. மீடியாவை பொறுத்தவரையில் நிகழ்ச்சித் தயாரிப்பில் நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்களே தவிர கேமராவுக்குப் பின்னால், தொழில்நுட்ப வேலைகளில் அதிகம் பேர் ஈடுபடுவதில்லை. அது போன்று எழுத்துத் துறையிலும் அதிகம் பேர் ஈடுபடுவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக எழுதி வருகிற இரண்டு, மூன்று பெண்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.

    2000-ல் கே. பாலசந்தரின் "அண்ணி' தொடருக்கு நான்தான் வசனம் எழுதினேன். அது போன்று "வீட்டுக்கு வீடு லூட்டி' என்ற தொடருக்கு இன்னொரு பெண் எழுத்தாளர் எழுதினார். இப்படி விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே அன்றும் இன்றும் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இது மாறவேண்டும்.

    அதுபோல டெலி ஃபிலிம், ஒரு எபிசோடு நிகழ்ச்சி... இப்படி சின்னச் சின்ன படைப்புகளைதான் பெண்கள் இயக்கியிருக்கிறார்களேத் தவிர யாரும் மெகா தொடர்களை இயக்கியதில்லை. மெகா தொடர் என்பது ஒரு மெகா கூட்டணியின் உழைப்பு அடங்கியது. ஆனால் அந்த மாதிரியான மெகா தொடர்களின் "கிரியேட்டிவ் ஹெட்' ஆக பெண்கள் வொர்க் பண்ணியிருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவர்.

    சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. நடிக்க வரும் பெண்களில் நல்ல திறமை சாலிகள் இருக்கிறார்கள். ஆனால் என்ன? ஓரிரு தொடர்களில் நடித்ததும் கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள்.

    அவர்களுக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களது குடும்ப சூழ்நிலைகளால் நடிப்பை தொடர முடியாமல் போய்விடுகிறது. பெரிய திரையில் இருந்த வந்த ராதிகா, குட்டி பத்மினி, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி ஆகியோரெல்லாம் சின்னத்திரையிலும் சாதித்திருக்கிறார்கள், சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய, பாராட்ட வேண்டிய விஷயம். இது போன்று திறமையான பெண்கள் நிறைய பேர் வந்தால் சின்னத்திரை துறையிலும் பெண்களின் கை ஓங்கி நிற்கும். தமிழ்நாட்டில்தான் நிறைய பெண் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்களை பார்த்தும் நிறைய பெண்கள் சின்னத்திரைக்கு வருகிறார்கள். இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

    சாதிக்க நினைக்கிறவர்களுக்கு சின்னத்திரையில் நிறைய துறைகள் இருக்கிறது. புதியவர்கள் வரும்போதுதான் புதிய புதிய சிந்தனைகள் பிறக்கும். முயற்சி செய்தால்தான் தங்களோட கற்பனைகளையும், படைப்புகளையும் திரையில் கொண்டுவர முடியும்.

    அதனால் புதிதாக வருபவர்களை வரவேற்போம். அவர்களின் திறமையை பாராட்டுவோம். இது என்னுடைய தீபாவளி செய்தியாக இருக்கட்டும்'' என்றார்.



    நன்றி: cinema Express
    "அன்பே சிவம்.

  4. #153
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஞாயிறு கொண்டாட்டம்
    சினிமாதான் என் உலகம்!


    சன் டிவி​யில் ஒளி​ப​ரப்​பா​கிக் கொண்​டி​ருக்​கும் "தங்​கம்' தொட​ரின் ​படப்​பி​டிப்பு. கங்​காவை ​(ரம்யா கிருஷ்​ணன்)​ பழி​வாங்க சதி செய்து கொண்​டி​ருந்த இள​வஞ்சி​ (காவேரி)​யைச் சந்​தித்​தோம். அங்கு சுப்​பு​லட்​சமி,​ நாச்​சியா,​ மங்கா அக்கா என அனை​வ​ரி​ட​மும் சிரித்து விளை​யா​டிக்​கொண்டே பிஸி​யாக இருந்​தார் நடிகை காவேரி. படப்​பி​டிப்பு இடை​வே​ளை​யில் வந்து,​ நம்​மு​டைய கேள்​வி​க​ளுக்கு அவர் சொன்ன பதில்​களி​லி​ருந்து...​

    "தங்​கம்' தொட​ரில் உங்​கள் கேரக்​டர் இந்​த​ளவு பேசப்​ப​டும் என்று நினைத்​தீர்​களா?​​

    கதையை முதன் முத​லில் கேட்​கும் பொழுது இந்​த​ள​வுக்கு ரீச் ஆகும்ன்னு எதிர்​பார்க்​க​வில்லை. ஐயா​வுக்கு மரு​ ம​க​ளாக வரு​கிற கேரக்​டர் கொஞ்​சம் பவர் ஃபுல்​லான ரோல் என்று சொன்​னார்​கள். நான் இது​வரை நெகட்​டீவ் ரோலில் நடித்​தது கிடை​யாது. எனக்கே இது ஒரு புது​மை​யான அனு​ப​வம் தான். ஐயா​வின் சொத்து ​ வேறு யாருக்​கும் போகக் கூடாது என்​ப​தற்​குத்​தான் அவ்​வ​ளவு வில்​லத்​த​னம் செய்ய வேண்டி இருந்​தது.​

    பார்ப் ​ப​தற்கு ரொம்ப வெகு​ளியா இருக்​கீங்க. ஆனால் தொட​ரில் பயங்​கர வில்​லி​யாக கலக்​கு​றீங்​களே மக்​கள்​கிட்ட உங்​கள் இமேஜ் பாதிக்​காதா?​​

    பொது ​வாக வில்லி கேரக்​ட​ரில் நடிப்​ப​வர்​கள் என்​றால் பார்க்​கும் பொழுதே பய​மு​றுத்​தும்​படி இருப்​பார்​கள். ஆனால் பார்​வைக்கு மென்​மை​யாக இருக்​கிற ஒரு பெண் செய்​கிற வேலை​யெல்​லாம் பயங்​கர வில்​லத்​த​ன​மாக இருந்​தால் பார்க்​கி​ற​வர்​க​ளுக்கு வித்​தி​யா​ச​மாக இருக்​கும் என்று எதிர்​பார்த்​தேன். என்​னு​டைய இந்த நினைப்பு வீண்​ போ​க​வில்லை. என்​னு​டைய நடிப்​பிற்கு மக்​க​ளி​டம் நல்ல வர​வேற்பு இருக்​கி​றது. இது இமேஜை பாதிக்​கும் என்று எனக்​குத் தோன்​ற​வில்லை.​

    தொட​ரில் உங்​க​ளின் வில்​லத்​த​ன​மான நடிப்​பைப் பார்த்​து​விட்டு உங்​கள் வீட்​டில் உள்​ள​வர்​கள் என்ன சொன்​னார்​கள்?​​

    நான் முதன் முறை​யாக நெகட்​டீவ் ரோல் செய்​வ​தால்,​ "ஏன் இப்​படி?​ இந்த மாதிரி நடித்​தால் ​ மக்​கள் உன்னை உதைக்க மாட்​டார்​களா?​ இவ்​வ​ளவு அநி​யா​யம் செய்​வது போல் இருக்​கி​றதே...?' என்று சொல்​லு​வார்​கள். அம்​மா​தான் தின​மும் தவ​றா​மல் ​ டிவி​யில் தொடரை பார்ப்​பார்​கள். நான் ஏதா​வது தப்பு செய்​தி​ருந்​தால் கூட அதைச் சுட்​டிக்​காட்​டித் திருத்​து​வார்​கள்.

    பெரும் பகுதி படப்​பி​டிப்​பில்​தான் இருக்​கி​றீர்​கள். உங்​கள் நண்​பர்​கள் பற்றி சொல்​லுங்​கள்?​​

    என் ​னு​டைய ஃபேமிலி என்று சொன்​னால் அது இந்த ஷூட்​டிங் ஸ்பாட்​டில் உள்​ள​வர்​கள்​தான். நான் வீட்​டில் இருக்​கும் நேரத்​தை​விட இங்​கே​தான் அதிக நேரம் செல​ வி​டு​கி​றேன். என்​னு​டைய சொந்​தம்,​ பந்​தம் ,​அத்தை,​ மாமா என்று எல்​லாமே இங்கே உள்​ள​வர்​கள் தான்.

    எனக்கு வேற உல​கமே இல்ல. வேற உல​கத்தை பற்றி நான் நினைப்​பது கூட இல்லை.​

    இந்த கேரக்​ட​ருக்​காக உங்​களை எப்​படி தயார் செய்து கொள்​கி​றீர்​கள்?​​

    ஹோம் ஒர்க் செய்​கி​றேன். ஒவ்​வொரு சீன் முடிஞ்​சப்​ பு​றம் என்ன என்ன தவறு செய்​தி​ருக்​கேன் என்று பார்ப்​பேன். மறு​ப​டி​யும் அதை செய்​யக்​ கூ​டா​தல்​லவா?​!​ வீட்​டில் நடித்து பார்ப்​பேன். மற்​ற​படி அடுத்து ​ சீன் என்ன என்​ப​தெல்​லாம் எங்​க​ளுக்கு தெரி​யாது. முன்​னா​டியே சொல்​ல​மாட்​டாங்க. ஸ்பாட்​டுக்கு வந்த பிற​கு​தான் சொல்​வார்​கள். வீட்​டுக்கு வந்த பிறகு படப்​பி​டிப்​பின் போது ஏதா​வது தவறு செய்​தி​ருக்​கேன் என்று தோன்​றி​னால்,​ எங்​க​ளின் கிரி​யேட்​டீவ் ஹெட்​கிட்ட போன் செய்து அவுங்​க​ளோட கருத்​துக்​களை கேட்​போம் அவ்​வ​ளவு தான்.​

    வேறு என்ன ​ தொடர் பண்​றீங்க?​ சினி​மா​வில் நெகட்​டீவ் ரோல் வாய்ப்பு வந்​தால் நடிப்​பீர்​களா?​​

    கலை ​ஞர் டிவி​யில் வரு​கிற "தாயம்' தொட​ரி​லும் பண்​ணிக்​கிட்டு இருக்​கேன். அடுத்தபடியா "சுழல்'ன்னு ஒரு தமிழ் படம் பண்​றேன். அதில் ஹீரோ,​ ஹீரோ​யின்ஸ் எல்​லாம் புதுசு. டைரக்​ட​ரும் மலை​யாள டைரக்​டர். பிர​தாப் போத்​த​னுக்கு ஜோடி​யாக நடிக்​கி​றேன். ஒரு சீனி​ய​ரு​டன் நடிப்​பது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது. ரொம்​ப​வும் நட்​போடு நடிப்​பைச் சொல்​லித் தரு​வார். அவர் இரு​பது வரு​ஷத்​திற்​குப் ​ பிறகு சினி​மா​வில் மறு​ப​டி​யும் ரீஎண்ட்ரி ஆவது மன​திற்கு ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது. சினி​மா​வில் நெகட்​டீவ் ரோல் வந்​தால் பண்​ணி​த்தான் பார்ப்​போமே!​​

    வைகா ​சி​பொ​றந்​தாச்சு படத்​தில் அறி​மு​க​மான காவே​ரிக்​கும். இப்​போது இள​வஞ்​சியா நடிக்​கும் காவே​ரிக்​கும் வித்​தி​யா​சம் எப்​படி இருக்கு?​



    சினிமா, ​ சீரி​யல்ன்னு நான் பிரித்து பார்த்​த​தில்லை. என்னை பொருத்​த​வரை கேமிரா லைட்​டிங் மட்​டும் தான் வித்​தி​யா​ச​மாக இருக்​குமே தவிர மற்ற எல்​லாமே ஒரே மாதி​ரி​தான் இருக்​கும். ​ எனக்கு எங்கு போனா​லும் சந்​தோ​ஷமா இருக்​க​ணும். எல்​லோ​ரை​யும் சிரிக்க வைக்​க​ணும். "வைகாசி பொறந்​தாச்சு' முதல் படம்ங்​கி​ற​து​னால அப்போ எது​வுமே தெரி​யா​தில்​லையா அத​னால் பயம் இருந்​தது. இப்​பொ​ழுது பழ​கி​டுச்சு. இரு​பது வரு​டமா இது மட்​டும் தான் தெரி​யும். சினி​மாவை தவிர வேற உல​கமே எனக்குத் தெரி​யாது.​

    ரம்யா கிருஷ்​ண​னோட நடிப்​பது பற்றி சொல்​லுங்​கள்?​​

    அவர் ஒரு ஜெம் ஆஃப் பெர்​சன். ரொம்​ப​வும் ஃபி​ரண்ட்​லியா பழ​கு​வாங்க. புரோ​டி​யூ​சர்ங்​கிற மாதிரி நடந்​துக்க மாட்​டாங்க. ஒரு ஃபேமிலி மாதி​ரி​தான் எல்​லோ​ரி​ட​மும் பழ​கு​வாங்க. ​

    உங்​கள் ஃபேமிலி பற்றி சொல்​லுங்​கள்?​​

    எனக்கு நாலு அண்​ணன்​கள்,​ நான் ஒரே பெண் தான்,​ இப்​பொ​ழுது அம்​மா​வோட தான் இருக்​கேன். என் கல்​யாண வாழ்க்​கை​யைப் பற்றி நான் எதை​யும் சொல்ல விரும்​ப​வில்லை. ஒரு ஆர்ட்​டிஸ்ட்​டாக இல்​லா​மல் ஒரு பெண்​ணாக இருந்து என் பிரச்​ச​னை​க​ளு​டன் போரா​டிக்​கிட்டு இருக்​கேன்.

  5. #154
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    டாக்​டர் ஆன​தும்​தான் டைரக்​ஷன்!

    "அலை ​பா​யுதே', "மொழி' படங்​க​ளுக்​குப் பிறகு கலை​ஞர் டிவி​யில் ஒளி​ப​ரப்​பாகி கொண்​டி​ருக்​கும் "தெக்​கத்​திப்​பொண்ணு' தொட​ரி​லும் கடந்த திங்​கள்​கி​ழமை முதல் புதி​ய​தாக துவங்​கி​யி​ருக்​கும் தொடர் "யாது​மாகி நின்​றாய்' என்ற தொட​ரில் நடிக்​கும் சொர்​ண​மால்​யாவை அவ​ரது இல்​லத்​தில் உள்ள நாட்​டி​யக் கூடத்​தில் சந்​தித்​தோம். ​நுழை​வாயி​லி​லேயே ஒரு சின்ன அம்​மன் சிலை​யைத் தரி​சித்​து​விட்டு உள்ளே சென்​றோம். நட​ரா​ஜர் சிலை​யின் முன் அமர்ந்து அங்கே அபி​ந​யம் பிடிக்​கும் பிள்​ளை​க​ளுக்கு ஜதி சொல்​லிக்​கொண்டே ​ நமக்கு பதி​ல​ளித்​தார். ​



    "யாது​மாகி நின்​றாய்' தொட​ரில் என்ன கதா​பாத்​தி​ரத்​தில் நடிக்​கி​றீர்​கள்? வேறு என்ன தொடர்​க​ளில் நடிக்​கி​றீர்​கள்?​

    ​ "யாது​மாகி நின்​றாய்' மூன்று பெண்​களை பற்​றிய கதை. அதில் முக்​கிய கதா​பாத்​தி​ரம் ​ சாரதா. அந்த கேரக்​டர்​தான் நான் பண்​றேன். அது ஒரு தனித்​து​வம் வாய்ந்த,​ வாழ்க்​கை​யில் நிறைய பிரச்​னை​களை சந்​திக்​கும் அதே சம​யத்​தில் உடைந்து போகா​மல் எதிர்​கொள்​ளும் அழுத்​த​மான ரோல். இந்த "யாது​மாகி நின்​றாய்' தொடர் ஒரு நண்​பர் கொடுத்த கருவை வைத்து ரேவதி மேடம்,​ ரோகிணி மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து விரி​வாக்​கம் செய்து உரு​வாக்​கியிருக்​கி​றார்​கள். பெண்​க​ளுக்​காக நிறைய விஷ​யங்​களை யோசிக்க கூடிய சிறந்த நடி​கை​க​ளான அவர்​க​ளோடு சேர்ந்து பங்கு எடுத்​துக் கொள்​வது எனக்கு மகிழ்ச்​சி​யாக இருக்​கி​றது. மற்​ற​படி "தெக்​கத்​திப் பொண்ணு' தொட​ரில் கிரா​மத்து பெண்​ணாக நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன். ​

    ​"மொழி' படத்​தில் சிறப்​பாக நடித்து இருந்​தீர்​கள். அதன் பிறகு படங்​க​ளில் நடிக்​க​வில்​லையே ஏன்?​

    ​"மொழி' ​ படம் போல ஒரு ​ நல்ல படத்தில் நடித்​தால் பத்து சுமா​ரான படங்​களில் நடிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது. அது போல் வராத பட்​சத்​தில் பத்து சுமா​ரான படங்​கள் நடிக்க எனக்கு நேரமோ,​ விருப்​பமோ இல்லை. ​

    ​சின்​னத்​திரை,​பெரி​ய தி​ரை​யில் நீங்​கள் உணர்ந்​தது?​

    சினி ​மா​வுக்​கும்,​ சின்​னத்​தி​ரைக்​கும் இருந்த வித்​தி​யா​சங்​கள் இப்​போது போய்​விட்​டது. அதெல்​லாம் ஒரு கால​கட்​டத்​தில் தான் இருந்​தது. இவர்​கள் சினிமா ஆர்ட்​டிஸ்ட்,​ இவர்​கள் சின்​னத்​திரை ஆர்ட்​டிஸ்ட் என்​ப​தெல்​லாம் ​ இப்​போ​ழுது கிடை​யாது. இன்û​றய சூழ்​நி​லை​யில் சினி​மா​விற்கு பல​மாக இருப்​பது சின்​னத்​திரை தான். சினி​மாவையே கூட டிவி​யில் அடிக்​கடி டிரைய்​லர் போட்டு காட்​டும் போது தான் நிறை​ய​பே​ருக்கு இந்​தப் படம் புதி​தாக வரு​கி​றது என்று தெரி​கி​றது. ஒரு மீடி​யா​வுக்​கும்,​இன்​னொரு ​ மீடி​யா​வுக்​கும் நாம போட்டி வைக்க முடி​யாது. ஒரு நடிகை என்​றால் அவுங்க நடிகை தான். நிஜ​வாழ்​கை​யில் நடிக்​காத வரை நாம நடி​கர்​கள் தான்.

    ​​நீங்​கள் ​ இருந்​த​வரை சன் டிவியில் தொகுத்து வழங்​கிய "இளமை புதுமை' ​ நிகழ்ச்சி அரு​மை​யாக இருந்​தது. அதன்​ பி​றகு காணா​மல் போய்​விட்​டதே. அது உங்​க​ளுக்கு வெற்​றியா?​

    ​கண்​டிப்​பாக. சொர்ணமால்யா என்​றால் யார் என்று என்னை அறி​மு​கப்​ப​டுத்​தி​யது இளமை புதுமை நிகழ்ச்சி தான் மிகப் பெரிய கார​ணம். நான் அந்த நிகழ்ச்​சியை தொடர்ந்து ஏழு வரு​டங்​கள் பண்​ணி​னேன். என்​னு​டைய பதி​னாறு வய​தில் தொடங்​கி​னேன் என்​னு​டைய வளர்ச்​சி​யோட சேர்ந்து அந்த நிகழ்ச்​சி​யும் வளர்ந்​தது. அந்​நி​கழ்ச்சி துவங்​கும் போது ​ தான் சன் டிவிக்​கும் துவக்க காலம் ​ எங்​க​ளது வளர்ச்​சி போல் சன் டிவி​யும் சேர்ந்து வளர்ந்​தது. நிறைய நல்ல நல்ல விஷ​யங்​கள் எல்​லாம் நடந்​தது. ஒரு விஷ​யம் நன்​றாக நடக்​கும் பொழுது சில நேரங்​க​ளில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்​படி தான் அந்த நிகழ்ச்​சியை ​ ரொம்ப சந்​தோ​ஷ​மான சூழ்​நி​லை​யில் தான் முடித்​தோம். ​ ​

    ​தொடர்​கள் இயக்​கும் எண்​ணம் உண்டா?​

    ​தொடர் இயக்​கு​வ​தற்கு நிறைய ​ நேரம் வேண்​டும்.

    ஆனால் ​ சினிமா டைர​க்ஷன் பண்​ண​வேண்​டும் என்று ஆசை​யி​ருக்​கி​றது. ஆனால் இப்​போது அந்த எண்​ணம் இல்லை. ​ பிஎச்.டி.முடித்​து​விட்​டு​தான் பண்​ண​வேண்​டும் என்று வைராக்​கி​யத்​தில் இருக்​கி​றேன். டாக்​டர் சொர்​ண​மால்யா ஆகி​விட்​டுத்​தான் டைரக்​டர் சொர்​ண​மால்யா ஆவேன். ​

    ​படிப்பு,​ நாட்​டி​யம்,​ சினிமா இப்​படி வெவ்​வேறு துறை​யில் இருக்​கிறீர்கள். இதற்​காக எப்​படி நேரம் செல​வி​டு​கிறீர்கள்?​

    ​ஒரு நாளில் இரு​பத்​தி​நாலு மணி நேரம் இருக்​கி​றது. அதை வைத்​துக் கொண்டு எத்​த​னையோ நிறைய நல்ல விஷ​யங்​களைச் செய்​ய​லாம். அப்​ப​டி​யில்​லா​மல் ஒரு நாள் முழு​வ​தும் ஒரே ஒரு வேலை மட்​டும் தான் ​ செய்ய முடி​யும் என்​றால் அது முயற்​சி​யில்லா தன்​மை​யைக் காட்​டு​கி​றது என்று சொல்​வார்​கள். படிப்​புக்​காக டான்ûஸ விட்​ட​தில்லை,​ டான்ஸ்​காக நடிப்பை விட்​ட​தில்லை,​ ​ ஒவ்​வொன்​றுக்​கும் என் நேரத்​தைப் பிரித்து செயல்படு​கி​றேன். ​

    ​நாட்​டி​யத் துறை​யில் ​ உங்​கள் பங்​க​ளிப்பு என்ன?​

    ​ இது​தான் என் பங்​க​ளிப்​புன்னு சொல்லி முற்​றுப்​புள்ளி வைக்க முடி​யாது. இப்​போ​து தான் ஆரம்​பித்​தி​ருக்​கி​றேன். நிறைய விஷ​யங்​கள் செய்​ய​ணும்னு ஆர்​வம் இருக்கு. அதற்​கான முயற்​சி​க​ளில் ஒன்று தான் என் பிஎச்.டி. பட்​டம் வாங்க வேண்​டும் என்​பது. என் மூல​மாக சில விஷ​யங்​க​ளைக் கலை உல​கத்​துக்​குக் கொடுக்க வேண்​டும் என்​பது என் ஆசை. இதை தவிர நாட்​டிய பள்ளி வைத்து நடத்​திக் கொண்​டி​ருக்​கி​றேன். சென்​னை​யி​லும்,​ காஞ்​சி​பு​ரத்​தி​லும். ​

    ​உங்​கள் ​ திற​மையை திரை​யு​ல​கம் சரி​யாக பயன்​ப​டுத்​த​வில்லை ​ என்ற குறை ​ இருக்​கி​றதா?​

    ​அப்​படிச் ​ சொல்ல முடி​யாது. எந்த ஒரு சினி​மா​வும்

    ஒரு ​வ​ரு​டைய திற​மையை வெளிப்​ப​டு​வ​தற்​காக எடுக்க கூடிய விஷ​யம் இல்லை. ஐநூ​று​பேர்,​அறு​நூறு பேர் சேர்ந்து உழைக்க கூடி​யது. ஒரு ​ தனி​பட்​ட​வ​ரு​டைய திற​மையை ​ வெளிப்​ப​டுத்​து​வ​தற்​காக ஒரு சினிமா எடுப்​பாங்​கன்னா அது நடக்க முடி​யாத ஒரு விஷ​யம். அப்​படி பார்த்தா நானே என்னை வைத்து ஒரு படம் எடுத்​தா​லும் அதில் என்​னு​டைய எல்லா பரி​மா​ணங்​க​ளை​யும் ​ ஒரு மூன்று மணி நேரத்​தில் காண்​பிக்க முடி​யாது. அத​னால் அந்த மாதிரி எதிர்​பார்ப்​பதே ​ என்னை பொருத்​த​வரை முட்​டாள்தனம். அவர்​கள் கொடுக்க கூடிய கதா​பாத்​

    தி​ரத்​தில் என்​னு​டைய திற​மையை வெளிப்​ப​டுத்த தெரிந்​தால் நான் புத்​திசாலி. அதை வாங்​கிக் கொண்​டால் அவர்​கள் புத்​திசாலி. ​

    ​சினி​மா​வில் நெகட்​டிவ் ​ ரோல் வந்​தால் நடிப்​பீர்​களா?​

    ​ இயல்​பான நெகட்​டீவ் ரோலாக இருந்​தால் பர​வா​யில்லை. நெகட்​டீவா ​ பண்​ணி​னா​லும் அதில் ஒரு அர்த்​தம் இருக்க வேண்​டும். கத்தி எடுத்து ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ குத்​து​வது மாதிரி எல்​லாம் நான் செய்ய முடி​யாது. ​ ஏன் என்​றால் என்​னி​டம் நாட்​டி​யம் கற்​றுக்​கொள்ள நிறைய பிள்​ளை​கள் வரு​கி​றார்​கள். அது ​ மட்​டு​மல்​லா​மல் நான் நிறைய சோஷி​யல் ஒர்க்​கி​லும் ஈடு​பட்​டுக் ​ கொண்​டி​ருக்​கி​றேன். அது நிஜ​வாழ்க்​கை​யில் எந்த பாதிப்​பை​யும் ஏற்​ப​டுத்​தக் கூடாது என்​ப​தால் எனக்கு இஷ்​டம் இல்லை. ​ ​ரொம்ப பெரிய கம்​பெ​னி​யில் இருந்து ​ வில்​லி​யாக நடிப்​ப​தற்கு கேட்​டார்​கள். என்னை பார்த்​தால் உங்​க​ளுக்கு எப்​படி அந்த மாதிரி கேட்க தோன்​று​கி​றது என்று கேட்​டேன். வேற யாருமே அந்த மாதிரி நினைத்து பார்த்​தி​ருக்க மாட்​டார்​கள்.வித்​தி​யா​ச​மாக இருக்​கும் என்​றார்​கள். ஒரு மாதம் வரை காத்​தி​ருந்​தார்​கள் நான் ​ ​ ​ வேண்​டா​மென்று சொல்​லி​விட்​டேன். நல்ல கம்​பெனி,​ நல்ல டைரக்​டர்,​ ரொம்ப நல்ல கதை இருந்​தா​லும் அவர்​க​ளோடு ஒர்க் பண்ண முடி​ய​வில்​லையே என்று வருத்​தப்​பட்​டேன். ​

    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
    டாக்​டர் ஆன​தும்​தான் டைரக்​ஷன்!

    "அலை ​பா​யுதே', "மொழி' படங்​க​ளுக்​குப் பிறகு கலை​ஞர் டிவி​யில் ஒளி​ப​ரப்​பாகி கொண்​டி​ருக்​கும் "தெக்​கத்​திப்​பொண்ணு' தொட​ரி​லும் கடந்த திங்​கள்​கி​ழமை முதல் புதி​ய​தாக துவங்​கி​யி​ருக்​கும் தொடர் "யாது​மாகி நின்​றாய்' என்ற தொட​ரில் நடிக்​கும் சொர்​ண​மால்​யாவை அவ​ரது இல்​லத்​தில் உள்ள நாட்​டி​யக் கூடத்​தில் சந்​தித்​தோம். ​நுழை​வாயி​லி​லேயே ஒரு சின்ன அம்​மன் சிலை​யைத் தரி​சித்​து​விட்டு உள்ளே சென்​றோம். நட​ரா​ஜர் சிலை​யின் முன் அமர்ந்து அங்கே அபி​ந​யம் பிடிக்​கும் பிள்​ளை​க​ளுக்கு ஜதி சொல்​லிக்​கொண்டே ​ நமக்கு பதி​ல​ளித்​தார். ​



    "யாது​மாகி நின்​றாய்' தொட​ரில் என்ன கதா​பாத்​தி​ரத்​தில் நடிக்​கி​றீர்​கள்? வேறு என்ன தொடர்​க​ளில் நடிக்​கி​றீர்​கள்?​

    ​ "யாது​மாகி நின்​றாய்' மூன்று பெண்​களை பற்​றிய கதை. அதில் முக்​கிய கதா​பாத்​தி​ரம் ​ சாரதா. அந்த கேரக்​டர்​தான் நான் பண்​றேன். அது ஒரு தனித்​து​வம் வாய்ந்த,​ வாழ்க்​கை​யில் நிறைய பிரச்​னை​களை சந்​திக்​கும் அதே சம​யத்​தில் உடைந்து போகா​மல் எதிர்​கொள்​ளும் அழுத்​த​மான ரோல். இந்த "யாது​மாகி நின்​றாய்' தொடர் ஒரு நண்​பர் கொடுத்த கருவை வைத்து ரேவதி மேடம்,​ ரோகிணி மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து விரி​வாக்​கம் செய்து உரு​வாக்​கியிருக்​கி​றார்​கள். பெண்​க​ளுக்​காக நிறைய விஷ​யங்​களை யோசிக்க கூடிய சிறந்த நடி​கை​க​ளான அவர்​க​ளோடு சேர்ந்து பங்கு எடுத்​துக் கொள்​வது எனக்கு மகிழ்ச்​சி​யாக இருக்​கி​றது. மற்​ற​படி "தெக்​கத்​திப் பொண்ணு' தொட​ரில் கிரா​மத்து பெண்​ணாக நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன். ​

    ​"மொழி' படத்​தில் சிறப்​பாக நடித்து இருந்​தீர்​கள். அதன் பிறகு படங்​க​ளில் நடிக்​க​வில்​லையே ஏன்?​

    ​"மொழி' ​ படம் போல ஒரு ​ நல்ல படத்தில் நடித்​தால் பத்து சுமா​ரான படங்​களில் நடிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது. அது போல் வராத பட்​சத்​தில் பத்து சுமா​ரான படங்​கள் நடிக்க எனக்கு நேரமோ,​ விருப்​பமோ இல்லை. ​

    ​சின்​னத்​திரை,​பெரி​ய தி​ரை​யில் நீங்​கள் உணர்ந்​தது?​

    சினி ​மா​வுக்​கும்,​ சின்​னத்​தி​ரைக்​கும் இருந்த வித்​தி​யா​சங்​கள் இப்​போது போய்​விட்​டது. அதெல்​லாம் ஒரு கால​கட்​டத்​தில் தான் இருந்​தது. இவர்​கள் சினிமா ஆர்ட்​டிஸ்ட்,​ இவர்​கள் சின்​னத்​திரை ஆர்ட்​டிஸ்ட் என்​ப​தெல்​லாம் ​ இப்​போ​ழுது கிடை​யாது. இன்û​றய சூழ்​நி​லை​யில் சினி​மா​விற்கு பல​மாக இருப்​பது சின்​னத்​திரை தான். சினி​மாவையே கூட டிவி​யில் அடிக்​கடி டிரைய்​லர் போட்டு காட்​டும் போது தான் நிறை​ய​பே​ருக்கு இந்​தப் படம் புதி​தாக வரு​கி​றது என்று தெரி​கி​றது. ஒரு மீடி​யா​வுக்​கும்,​இன்​னொரு ​ மீடி​யா​வுக்​கும் நாம போட்டி வைக்க முடி​யாது. ஒரு நடிகை என்​றால் அவுங்க நடிகை தான். நிஜ​வாழ்​கை​யில் நடிக்​காத வரை நாம நடி​கர்​கள் தான்.

    ​​நீங்​கள் ​ இருந்​த​வரை சன் டிவியில் தொகுத்து வழங்​கிய "இளமை புதுமை' ​ நிகழ்ச்சி அரு​மை​யாக இருந்​தது. அதன்​ பி​றகு காணா​மல் போய்​விட்​டதே. அது உங்​க​ளுக்கு வெற்​றியா?​

    ​கண்​டிப்​பாக. சொர்ணமால்யா என்​றால் யார் என்று என்னை அறி​மு​கப்​ப​டுத்​தி​யது இளமை புதுமை நிகழ்ச்சி தான் மிகப் பெரிய கார​ணம். நான் அந்த நிகழ்ச்​சியை தொடர்ந்து ஏழு வரு​டங்​கள் பண்​ணி​னேன். என்​னு​டைய பதி​னாறு வய​தில் தொடங்​கி​னேன் என்​னு​டைய வளர்ச்​சி​யோட சேர்ந்து அந்த நிகழ்ச்​சி​யும் வளர்ந்​தது. அந்​நி​கழ்ச்சி துவங்​கும் போது ​ தான் சன் டிவிக்​கும் துவக்க காலம் ​ எங்​க​ளது வளர்ச்​சி போல் சன் டிவி​யும் சேர்ந்து வளர்ந்​தது. நிறைய நல்ல நல்ல விஷ​யங்​கள் எல்​லாம் நடந்​தது. ஒரு விஷ​யம் நன்​றாக நடக்​கும் பொழுது சில நேரங்​க​ளில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்​படி தான் அந்த நிகழ்ச்​சியை ​ ரொம்ப சந்​தோ​ஷ​மான சூழ்​நி​லை​யில் தான் முடித்​தோம். ​ ​

    ​தொடர்​கள் இயக்​கும் எண்​ணம் உண்டா?​

    ​தொடர் இயக்​கு​வ​தற்கு நிறைய ​ நேரம் வேண்​டும்.

    ஆனால் ​ சினிமா டைர​க்ஷன் பண்​ண​வேண்​டும் என்று ஆசை​யி​ருக்​கி​றது. ஆனால் இப்​போது அந்த எண்​ணம் இல்லை. ​ பிஎச்.டி.முடித்​து​விட்​டு​தான் பண்​ண​வேண்​டும் என்று வைராக்​கி​யத்​தில் இருக்​கி​றேன். டாக்​டர் சொர்​ண​மால்யா ஆகி​விட்​டுத்​தான் டைரக்​டர் சொர்​ண​மால்யா ஆவேன். ​

    ​படிப்பு,​ நாட்​டி​யம்,​ சினிமா இப்​படி வெவ்​வேறு துறை​யில் இருக்​கிறீர்கள். இதற்​காக எப்​படி நேரம் செல​வி​டு​கிறீர்கள்?​

    ​ஒரு நாளில் இரு​பத்​தி​நாலு மணி நேரம் இருக்​கி​றது. அதை வைத்​துக் கொண்டு எத்​த​னையோ நிறைய நல்ல விஷ​யங்​களைச் செய்​ய​லாம். அப்​ப​டி​யில்​லா​மல் ஒரு நாள் முழு​வ​தும் ஒரே ஒரு வேலை மட்​டும் தான் ​ செய்ய முடி​யும் என்​றால் அது முயற்​சி​யில்லா தன்​மை​யைக் காட்​டு​கி​றது என்று சொல்​வார்​கள். படிப்​புக்​காக டான்ûஸ விட்​ட​தில்லை,​ டான்ஸ்​காக நடிப்பை விட்​ட​தில்லை,​ ​ ஒவ்​வொன்​றுக்​கும் என் நேரத்​தைப் பிர&#3007

  6. #155
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    பிசினûஸ விட்​டு​விட்டு நடிக்க வந்​தேன்!



    இண் ​டஸ்ட்​ரிக்கு வந்த சிறிது காலத்​தி​லேயே தனக்​கென்று ஒரு இடத்​தைத் தக்க வைத்​துக் கொண்​ட​வர்,​​ "அரசி' தொட​ரில் ராதி​கா​வின் மக​ளாக வந்து இப்​போ​ழுது "செல்​லமே',​ "கண்​மணி',"ஓவியா' என்று ஏகப்​பட்ட தொடர்​களை கைவ​சம் வைத்​துக் கொண்டு,​​ பெரிய திரை​யில் வரும் வாய்ப்​பு​கள் கூட வேண்​டாம் என்று ​ படு பிஸி​யாக இருக்​கும் சின்​ன​தி​ரை​யின் கலக்​கல் நாயகி மகா​லஷ்​மியை சந்​தி​த்தோம்.​ இதோ அவர் நமக்கு அளித்​த பேட்டி.:



    * சின்​னத்​தி​ரைக்கு எப்​படி நடிக்க வந்​தீங்க?​​

    தொகுத்து வழங்​கும் நிகழ்ச்​சியோ,​​ சீரி​யலோ நடிப்​பேன் என எனக்கு ஐடி​யாவே ​ ​ ​ ​ ​ இல்லை.​ ரெண்​டுமே தானா​க​வே​தான் அமைந்​தன.​ நடிக்​க​ணும் என்ற ​ எண்​ணமே கிடை​யாது.​ அம்மா எக்ஸ்​போர்ட் பிஸி​னஸ் பண்​ணிக்​கிட்டு இருந்​தாங்க.​ அவுங்​க​ளுக்கு திடீர்ன்னு உடம்பு சரி​யில்​லாம போன​தால நான்​தான் பிசி​ன​ûஸப் பார்த்​துக்​கிட்டு இருந்​தேன்.​ அப்போ என் அக்கா ​(பெரி​யம்மா மகள் நீபா)​ மூல​மா​கத்​தான் எனக்கு இந்த ஆஃ​பர் ​ வந்​தது.​ அவுங்க செல்​போன்​னில் இருந்த என்​னு​டைய போட்​டோவை "அரசி' தொடர் டைரக்​டர் சுந்​தர்.கே.விஜ​யன் பார்த்​து​விட்டு,​​ விசா​ரித்​தி​ருக்​கி​றார்.​ "ஒரு ​ கதா​பாத்​தி​ரம் இருக்கு.​ அதுக்​காக நாங்க ஒரு பெண்​ணைத் தேடி​க்கிட்டு இருக்​கோம்.​ அந்த கேரக்​டர் இவுங்க நடிச்சா நல்லா இருக்​கும்' என்று சொல்​லி​யி​ருக்​கி​றார்.​ அப்​ப​டித்​தான் "அரசி' வாய்ப்பு கிடைத்​தது.​ ​

    * ​முதல் தொடரே நெகட்​டீவ்வா பண்​ணி​னால் அதை தொடர்ந்து அதே மாதிரி கேரக்​டர் வரும் என்று நீங்​கள் நினைக்​க​வில்​லையா?​​

    அது உண்​மை​தான்.​ இருந்​தா​லும் எனக்கு நெகட்​டீவ் ரோல் ரொம்பப் பிடிக்​கும்.​ பாஸிட்​டிவ் ரோல் பண்​ணு​வ​தற்கு நிறைய பேர் வரு​வாங்க.​ ஆனால் ஒரு சிலர்​தான் நெகட்​டீவ் ரோல் பண்​ணு​வார்​கள்.​ நெகட்​டீவ் ரோல் ரொம்ப சேலஞ்​சிங்கா இருக்​கும்.​ பாஸ்ட்​டீவ் ரோலை விட நெகட்​டீவ் ரோல் பண்​ணும் போது மக்​கள்​கிட்ட நல்ல ரீச் கிடைக்​கும்.​ அது​வு​மில்லா என்​னோட முதல் தொடர் என்​ப​தால எனக்கு எது​வும் தெரி​யாது இல்​லையா?​ அத​னால அவுங்க எப்​ப​டிச் சொன்​னாங்​களோ அதே மாதிரி பண்​ணி​னேன்.​ ​

    * ​"அரசி'..​ அடுத்து "செல்​லமே' என்று ராதி​கா​வு​டன் நடிக்​கின்ற அனு​ப​வம் எப்​படி இருக்கு?​​

    என் ​னோட முதல் தொடரே ராதிகா மேடம்​கூட பண்​ணு​கின்ற வாய்ப்பு கிடைச்​சது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது.​ ரொம்ப உறு​தி​யான பெண் அவுங்க.​ அதே சம​யத்​தில் ரொம்ப இனி​மை​யா​க​வும் அமை​தி​யா​க​வும் பேசு​வாங்க.​ நடிக்க வரு​வ​தற்கு முன்பே அவுங்​க​ளோட ரசிகை நான்.​ எனக்கு அவுங்​களை ரொம்ப பிடிக்​கும்.​ அவுங்​க​ளோட பழ​கும்​போது அவுங்க கேரக்​டர் ரொம்ப பிடிச்​சது.​ ​ அப்​படி பிடித்​த​வர்​க​ளோட சேர்ந்து நடித்​தது ரொம்ப சந்​தோ​ஷமா இருந்​தது.​ நான் ஏதா​வது தப்பு பண்​ணி​னால் கூட உடனே திருத்தி சொல்​லிக் கொடுப்​பாங்க.​ அதில் அவுங்க சீனி​யா​ரிட்​டி​யும் சின்​ஸி​யா​ரிட்​டி​யும் தெரிந்​தது.​ நிறைய நல்ல நல்ல அட்​வைஸ் எல்​லாம் ​ ​ ​ கொடுப்​பார்​கள்.​

    ​* மானாட மயி​லாட நிகழ்ச்​சி​யில் உங்​கள் அக்கா டான்ஸ் ஆடி பயங்​க​ரமா கலக்​கு​றாங்க.​ நீங்​கள் எப்​படி?​​

    நானும் பரதநாட்​டி​யம் முறைப்​படி கற்​றுக்​கொண்​டேன்.​ அரங்​கேற்​றம் வரும் சம​யத்​துல டென்த் எக்​ஸôம் வந்​தி​டுச்சு.​ அத​னால அப்​ப​டியே நிறுத்​திட்​டேன்.​ அதுக்கு பிறகு தொட​ரு​வ​தற்கு டயம் கிடைக்​கல.​ ஆனா ஸ்கூல்ல,​​ காலேஜ்ல படிக்​கும்​போது நிறைய டான்ஸ் பெர்​பா​மன்ஸ் பண்​ணி​யி​ருக்​கேன்.​ ​ ஆனா ​ அக்கா அள​வுக்கு எல்​லாம் நான் டான்​ஸர் கிடை​யாது.​ அவ ​சூப்​பரா டான்ஸ்ல வெளுத்து வாங்​குவா.​ நான் எப்​படி சொல்லி கொடுக்​கி​றாங்​களோ அப்​ப​டியே ஆடு​வ​தோடு சரி.​

    ​"அணு ​வ​ள​வும் பய​மில்லை' நிகழ்ச்​சி​யில் ஐஸ்​கட்​டி​யின் மேல் உட்​கா​ரும் போதும்,​​ உய​ர​மான இடத்​தில் இருந்து குதிக்​கும் போதும் உங்​கள் மன நிலை எப்​படி இருந்​தது?​​

    ​நான் முதன்​முத​லில் பண்​ணின ரியா​லிட்டி ஷோ அது.​ இது​வ​ரைக்​கும் இந்த மாதிரி எல்​லாம் நான் டிரை பண்​ணி​னதே கிடை​யாது.​ இது​தான் முதல் முறை.​ நாற்​பது அடி உய​ரத்​தில் இருந்து குதிக்க ரொம்ப ரொம்ப பய​மாக இருந்​தது.​ கொஞ்​சமா கொஞ்​சமா மேலே போக போக தலை எல்​லாம் சுத்​து​வது போல ஆயி​டுச்சு.​

    மேலே ஏறி நின்​ற​தும் ரொம்ப பயமா இருந்​துச்சு.​ அத​னால மேலே போன​வு​டனே குதிச்​சிட்​டேன்.​ ஐஸ்​கட்​டி​யின் மேல் உட்​கார்ந்​தாச்சு எப்​ப​டி​யும் வின் ஆயிட்​டு​தான் எந்​தி​ரிக்​க​னும்னு முடி​வோட உட்​கார்ந்​திட்​டேன்.​ அது முடிஞ்சு எழுந்​த​போது கையெல்​லாம் ரத்​தம் உறைஞ்ச மாதிரி ஆகி சிவந்து போச்சு.​ கால் எல்​லாம் அப்​ப​டியே ​ இழுத்​துக் கொண்​டது.​ இரவு முழு​வ​தும் ​ தூங்​க​மு​டி​யாம வலி​யால அவ​திப்​பட்​டேன்.​

    ​* உண்​மை​யில் மகா​லஷ்மி எப்​படி? உறு​தி​யான பெண்ணா, இல்லை பயந்த சுபா​வமா?​​

    உறு ​தி​யான பெண்​தான்.​ என்னை பொருத்​த​வரை எந்த ஒரு விஷ​யம் எடுத்​துக்​கிட்​டா​லும் அதில் உறு​தியா இருக்​க​னும்.​ அப்​போ​தான் ஜெயிக்க முடி​யும்.​ ஒரு விஷ​யம் பண்ண வேண்​டும் என்று முடிவு செய்​து​விட்​டால் அதில் எவ்​வ​ளவு தடை​கள் வந்​தா​லும் சரி கண்​டிப்​பாக செஞ்சி முடிச்​சு​டு​வேன்.​

    * ​உங்​கள் குடும்​பத்​தைப் பற்றி சொல்​லுங்​கள் கிச்​சன்​பக்​கம் எல்​லாம் போனது உண்டா?​​

    ​ அம்மா சுபி.​ அப்பா சங்​கர் அவர் சினி​மா​வில் ​ கொரி​யோ​கி​ராபி பண்​ணிக்​கிட்டு இருக்​கார்.​ தம்பி பன்னி​ரெண்​டாம் வகுப்பு படித்து கொண்​டி​ருக்​கி​றான்.​ அதற்​குப் பிறகு ரெண்டு நாய்க்​குட்டி இருக்கு.​ கிச்​சன் பக்​கம் எல்​லாம் நான் போனதே கிடை​யாது.​ அம்மா சூப்​பரா சமைப்​பாங்க.​ ​ ​ ​ ​

    * ​வேறு என்ன என்ன தொடர் நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றீர்​கள்?​​

    சன் ​டி​வி​யில் வரு​கிற "செல்​லமே',​ "கண்​மணி',​ ஸ்டார் விஜய்​யில் "யாமி​ருக்க பயம் ஏன்?​',​ ஜெயா டிவி​யில் "ஓவியா',​ பாலி​மர் டிவி​யில் "மூன்று முகம்',​ அதற்கு பிறகு ​ ரியா​லிட்டி ஷோ ஒண்ணு பண்​ணிக்​கிட்டு இருக்​கேன்.​ அது இல்​லா​மல் தெலுங்​கில் சுந்​தர காண்​டம் என்று தொடர் பண்​ணிக்​கிட்டு இருக்​கேன்.​ ​


    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=

  7. #156
    Senior Member Veteran Hubber Madhu Sree's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Singaaaaaara chennai...
    Posts
    3,926
    Post Thanks / Like
    Quote Originally Posted by aanaa
    கோபால் ல் ல் ல்
    aanaaaa naan ippodhaan gavinikkaren
    எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!

  8. #157
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாவை விட சின்னத்திரை சீரியல்கள்தான் பெஸ்ட் என்று இரண்டு திரைகளிலும் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரமான நடிகை தீபா வெங்கட் கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட 25 வருட சினிமா அனுபவம் பெற்றவர் தீபா வெங்கட். ஏகப்பட்ட சீரியல்களில் இவரது முகம் பளீச் அறிமுகம். சிலபல சினிமாக்களிலும் தலை காட்டியிருக்கிறார். சீரியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல சினிமாவிற்கு கொடுப்பதில்லையே என தீபாவிடம் *கேட்டால் படபடவென பட்டாசுபோல வெடித்து பேசுகிறார். அவரது பேட்டி:-

    சினிமாவில் ஒரு படத்தில், ஒரு ரோலில் நடித்தால் அடுத்து வரும் 10 படங்களிலும் அதே ரோல்தான் கிடைக்கும். படங்களில் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்கிறேன். சமீபத்தில் வெளிவந்த கதை படத்தில் 2 சீனில்தான் நடித்தேன். ஆனால் எனக்கு அது மன நிறைவை தந்தது. அடுத்து வாடா படத்தில் சுந்தர் சி.யுடன் தங்கச்சி ரோல் பண்ணிருக்கேன். தில், உள்ளம் கொள்ளை போகுதே, ஜெயம் கொண்டான் போன்ற படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. சினிமாவை விட சீரியல்களில் நல்ல ரோல் கிடைக்கிறது. நிறைய கேரக்டர்கள் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் சீரியல்தான் பெஸ்ட் என சொல்வேன். எனது திருமணம் அநேகமாக இந்த வருடத்தில் இருக்கும். காதல் திருமணம் செய்தாலும் என் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும், என்று சொல்லும் தீபா வெங்கட் சமீப காலமாக ஒரு புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறார். அது ரேடியோ தொகுப்பாளர் அவதாரம்தான்.

    அதேபோல இவரைப் பற்றிய இன்னொரு சங்கதி நிறைய படங்களில் முன்னணி நாயகிகள் பலருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருப்பது. கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் சிம்ரனுக்கும், குரு படத்தில் வித்யாபாலனுக்கும் குரல் கொடுத்திருக்கும் தீபா, விரைவில் வெளிவரவுள்ள முறியடி, முரட்டுக்காளை, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட படங்களின் நாயகிகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறாராம்.
    "அன்பே சிவம்.

  9. #158
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by aanaa
    கிட்டத்தட்ட 25 வருட சினிமா அனுபவம் பெற்றவர் தீபா வெங்கட்.
    onnum printing mistake illaiyE...

    Because if we calculate with this, her gae comes 40+ now.
    But she she still looks like 20+ age.

  10. #159
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Theepa Vengat
    maraimuga thirumanam aagi vittathaaga kealvi. iam not sure.

  11. #160
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஞாயிறு கொண்டாட்டம்
    பழிவாங்குவது பிடித்திருக்கிறது!

    கலைஞர் டிவியின் "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் பரபரப்பான கட்டம். இறுதிப்போட்டிக்காக தன் உடலை ரப்பர் போல் வளைத்து ஆடிய ஆட்டத்தில் காய்ச்சல் வந்து படுத்துவிட்டார் நீபா. ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தோம்.

    என்ன, என்ன தொடர்கள் நடிச்சிகிட்டு இருக்கீங்க?

    "அவர்கள்', "கிருஷ்ணா காட்டேஜ்', "தேவதை, பந்தம்', "நம்ம குடும்பம்' இந்த தொடர்களில் நடித்திருக்கிறேன். தற்போழுது நடித்துக் கொண்டிருக்கும் தொடர்கள் "கண்மணி', "தங்கமான புருஷன்', "மூன்று முகம்', விஜய் டிவியில் "ரோஜாக்கூட்டம்' ஆகிய நான்கு தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டு டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கேன். மஸ்தானா மஸ்தானாவுல ஏற்கனவே கலந்துகிட்டு டைட்டில் ஜெயிச்சியிருக்கேன். மானாட மாயிலாட எம்.எம்.2 ல ஜெயிக்க முடியல. எம்.எம்.4 பைனல்ஸ் ஆடி முடிச்சிருக்கோம். அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும், யார் ஜெயிக்கப் பண்ணப் போறாங்கன்னு. ரொம்ப படப்படப்பா இருக்கு. இந்த முறை கண்டிப்பா ஜெயிப்போம்னு நிறைய நம்பிக்கை இருக்கு.

    "கண்மணி' தொடரில் வெறிதனமா பழிவாங்க துடிக்கிறீங்களே? யாரும் திட்டலையா?

    உண்மையில் எனக்கு அந்த ரோல் ரொம்ப பிடிச்சிருக்கு. நான் ரொம்ப ரசித்து, கஷ்டப்பட்டு செய்கிற ரோல் அந்த திலகா கேரக்டர். இதுப் போல வித்தியாசமான கேரக்டர் செய்யும் போதுதான் மக்கள்கிட்ட நல்ல ரீச் கிடைக்கும். அதனாலயே நெகட்டீவ் ரோல் செய்ய எனக்கு ரொம்ப இஷ்டம். தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அக்காவா வருவேன். ஒரு பிரச்னையால் பாதிக்கப்படும் தங்கைக்காகப் பழிவாங்க துடிக்கும் அக்கா கேரக்டர் அது. இந்த மாதிரி பழிவாங்குவது ரொம்ப பிடிச்சிருக்கு.

    டான்ஸ் புரொகிராம்மில் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர்கள் நிறைய பேர் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாதாக சொல்கிறார்களே உண்மையா?

    நான் ஏற்கனவே இந்த மாதிரி டான்ஸ் ஷோஸ் எல்லாம் கலந்துகிட்டதுனால எனக்கு எந்த பிரச்னையும் தெரியவில்லை. நான் ஒவ்வொன்றையும் தனித்தனியா பிரிச்சு செய்வதுனால என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இதுவரைக்கும் வந்ததில்லை. ஸ்பாட்டுக்குப் போய்ட்டா என்ன காட்சியோ அதை சரியா முடிச்சு கொடுத்திட்டு வந்திடுவேன். அங்க போய்ட்டு தூக்கமின்மை, டான்ஸ் பிராக்டிஸ் பண்ணுவதனால் ஏற்படும் வலி அதையெல்லாம் கம்மிச்சுக்க மாட்டேன்.

    அதுப்போல ஷோ இருக்கிற அன்று சீரியலுக்கு தேதி தரமாட்டேன். ஒரே நேரத்துல ரெண்டடையும் செய்ய முடியாது.

    பெரியத்திரையில் படங்கள் நடிச்சுகிட்டு இருக்கீங்களா?

    என்னோட முதல்படம் "பெருசு' அதில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். காமராஜ் சார் டைரக்ட் செய்திருந்தார். அவர்தான் அந்தப் படத்திற்கு புரொடியூசரும் கூட. அதன்பிறகு கதம் கதம்ன்னு ஒரு படம் பண்ணியிருந்தேன். பத்மா மதன் டைரக்ட் செய்த "அம்முவாகிய நான்' என்ற படத்திலும் நடிச்சிருக்கேன்.

    அதன்பிறகு தங்கர்பச்சன் சார் டைரக்ஷன்ல "பள்ளிக்கூடம்' படத்தில் நடிச்சிருக்கேன். பி.ஆர்.ஓ பாலன் டைரக்ட் பண்ணின "ராசாத்தி'ன்னு ஒரு டெலி ஃபிலிம் பண்ணியிருக்கேன். இப்போ லேட்டஸ்ட்டா பாலா சார் அஸிடெண்ட் டைரக்ட் பண்ணும் "தேரோடும் வீதியிலே' நடிச்சுகிட்டு இருக்கேன். அதற்கடுத்து பாலசூரியா சார் டைரக்ஷன்ல ஒரு படம். அதில் ரெண்டாவது ஹீரோயினா நடித்துக்கொண்டிருக்கேன்.

    மானாட மயிலாட, தொடர்கள், பெரியத்திரைன்னு பிஸியா இருக்கீங்க எப்படி நேரம் கிடைக்குது?

    காலையில் 9-9 சூட்டிங் முடித்துவிட்டு அதன் பிறகு டான்ஸ் பிராக்டீஸ்க்கு போயிடுவேன். இப்படி ஒவ்வொன்றுக்கும் நேரத்தை பகிர்ந்து செய்வதால் எந்த பிரச்னையும் இதுவரை வந்ததில்லை. இப்படி டைட் ஷெடியூல்ல ஓர்க் பண்ணுவது எனக்கு பிடிச்சிருக்கு. சும்மா உட்கார்ந்தா சோம்பேறி ஆயிடுவோம்ல. அதனால எப்போழுதும் சுறுசுறுப்பா இருக்கனும் ஏதாவது வேலையை செய்துகிட்டே இருக்கணும்.

    இந்த மாதிரி கேரக்டர் நடிக்கணும்னு நினைத்ததுண்டா?

    ஓரளவுக்கு எல்லா மாதிரி கேரக்டரும் நடிச்சுட்டேன். நான் இதுவரை நடிக்காத கேரக்டர்ன்னா அது பைத்தியகாரி கேரக்டர், இன்ஸ்பக்டர் கேரக்டர், ஊனமுற்றவர்கள் கேரக்டர் பண்ணதில்லை. அந்த மாதிரி கேரக்டர் பண்ண வேண்டும் என்று ஆசை நிறைய இருக்கு.

    நடிப்பு தவிர உங்கள் பொழுதுபோக்கு என்ன?

    நாட்டியம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பேஸிக்கலாவே ஒரு கிளாசிக்கல் டான்ஸர். இப்பவும் பரதநாட்டியத்தில் சாதிக்கணும்ங்கிற வெறி, எண்ணம் நிறைய இருக்கு. டான்ஸ் ஸ்கூல் வைத்து பெரிய அளவில் வரணும்ங்கிற ஆசையும் இருக்கிறது.

    உங்க குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க?

    டான்ஸ் மாஸ்டர் ராமன் பழனிதான் என் அப்பா. அம்மா, நான் தம்பி என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கான்.


    http://www.dinamani.com/edition/stor...44&SEO=&Title=

Page 16 of 46 FirstFirst ... 6141516171826 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •