Page 34 of 46 FirstFirst ... 24323334353644 ... LastLast
Results 331 to 340 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #331
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பேயாக நடிப்பது புதிய அனுபவமாக உள்ளது! - பிரியங்கா


    பாசிட்டீவ், நெகடீவ் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்தபோதும் பேய் வேடத்தில் நடிப்பது எனக்கு நல்லதொரு அனுபவமாக உள்ளது. என்கிறார் சின்னத்திரை நாயகி பிரியங்கா.
    அவர் மேலும் கூறுகையில், தற்போது வம்சம் தொடரில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடிக்கும் நான், அபூர்வ ராகங்கள் தொடரில் அனிதா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். கதைப்படி இதில் நான் பேயாக நடிக்கிறேன். அதாவது நான் இறந்த பிறகும் எனது காதலரை தொடர்வேன். அந்த வகையில், மற்றவர்களின் கண்களுக்கு தெரியும்போது கறுப்பு கலர் புடவையில் தோன்றும் நான், எனது காதலர் கண்களுக்கு அவர் எனக்கு பரிசாக கொடுத்த சிவப்பு கலர் புடவையில் தெரிவேன்.
    அதோடு, உயிரோடு இருக்கும்போது உயிருக்கு உயிராக அவரை காதலித்ததால் உயிர் பிரிந்த பிறகும் அவரை பிரிய முடியாமல் தவிக்கிற கேரக்டர் என்பதால் காதல் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறேன். கடந்த 3 மாதங்களாக இந்த கேரக்டரில் நான் நடித்து வருவதால், சில நாட்களில் நான் தூங்கும்போது கனவில்கூட அந்த பேய் கேரக்டரில் நடிப்பது போலவே உணர்கிறேன். அந்த அளவுக்கு அந்த ரோல் என்னை இம்ப்ரஸ் செய்துள்ளது என்று கூறும் பிரியங்கா, இதுதவிர பைரவி, வம்சம், என் இனிய தோழியே, சபீதா என்கிற சபாபதி போன்ற தொடர்களிலும் பிசியாக நடித்து வருவதாக சொல்கிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #332
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாவிலும் அம்மாவாக நடிக்கும் சீரியல் ';அம்மா' குயிலி!


    சுமார் 30 ஆண்டுகால நடிகை குயிலி, பூவிலங்கு படத்தில் அறிமுகமான இவர், பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில் நிலா அது வானத்து மேலே -என்ற பாடல் மூலம் மேலும் பிரபலமானார். அதையடுத்து தொடர்ச்சியாக கேரக்டர் மற்றும் பாடல்களுக்கு நடனமாடி வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் பிரபல அம்மா நடிகையாகி விட்டார். தற்போது சரவணன் மீனாட்சி, காதல் முதல் கல்யாணம் வரை போன்ற தொடர்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
    இதுபற்றி குயிலி கூறுகையில்,
    ;சின்னத்திரையில் இயல்பான அம்மாவாக நான் நடித்து வருகிறேன். எந்தவொரு காட்சியை கொடுத்தாலும் அதில் குடும்பத்தில் இருக்கும் அம்மாக்கள் எந்தமாதிரியான ரியாக்சனை வெளிப்படுத்துவார்கள் என்பதை மனதில் ஏற்றிக்கொண்டு நடிக்கிறேன். நான் அப்படி நடிப்பது குடும்பப் பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கிறது. அதனால் என்னை நேரில் பார்க்கும்போது உங்களை நடிகையாக நினைக்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவராகத்தான் நினைக்க முடிகிறது என்கிறார்கள். இது மனதுக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.
    மேலும், என்னதான் சின்னத்திரை மூலம் தினம்தினம் நேயர்களை சந்தித்தபோதும், நான் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்ததால் இப்போதும் என்னைத்தேடி சினிமா வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் அதில் எனக்கு பிடித்தமான வேடங்களாக இருந்தால் மட்டுமே ஏற்று நடிக்கிறேன். அந்த வகையில், தற்போது விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் டூ சென்னை என்ற படத்தில் அவரது அம்மாவாக நடிக்கிறேன். சீரியல் அளவுக்கு வெயிட்டான அம்மா வேடம் இல்லை என்றாலும், சினிமாவைப்பொறுத்தவரை அது பெரிய அம்மா ரோல்தான் என்கிறார் குயிலி.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  4. #333
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    எனது தற்கொலை முயற்சிக்கு 2 காரணம் உள்ளது! சின்னத்திரை நடிகர் சாய் சக்தி பேட்டி
    நாதஸ்வரம், வள்ளி, சொந்த பந்தம், சரவணன் மீனாட்சி, சபீதா என்கிற சபாபதி என பல தொடர்களில் நடித்தவர் சாய் சக்தி. தற்போது அவரது கைவசம் எந்த சீரியல்களும் இல்லை. இதனால் போதிய வருமானம் இல்லாமல் அவர் தற்கொலை முயற்சியில் இறங்கியதாக வாட்ஸ்அப்புகளில் செய்தி வெளியானது. சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் சாய்சக்தியின் இந்த தற்கொலை முயற்சி வெளியானதை அடுத்து அதிர்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து பலரும் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.
    இந்த நிலையில், தினமலர் இணையதளத்துக்காக சாய் சக்தியை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவர் கூறியதாவது,
    நான் 12 வயதிலேயே நடிக்க வந்து விட்டேன். இப்போது எனக்கு 23 வயது ஆகிறது. குடும்பத்தில் மூத்த பையன் என்பதால் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அம்மா, பாட்டி, தங்கை, மனைவி, மகள் என என் குடும்பமே என்னை நம்பிதான் உள்ளது. ஆனால் சபீதா என்கிற சபாபதி தொடருக்கு பிறகு இப்போது என் கைவசம் எந்த சீரியல்களுமே இல்லை. வேலை வெட்டி இல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன். சுத்தமாக வருமானமே இல்லை. பல கம்பெனிகளுக்கு போன் செய்து நடிக்க சான்ஸ் கேட்டு பார்த்து விட்டேன். யாரும் தரவில்லை. அதனால் நாளுக்கு நாள் எனக்கு மன உளச்சல் அதிகமானது.
    இதற்கிடையே எனது மாமனார் வீட்டிலும் எனக்கு பிரச்சினை கொடுத்து விட்டனர். என் மனைவி முக்கால்வாசி மனநிலை பாதிக்கப்பட்டவள். என்றபோதும் நான் அவளை திருமணம் செய்தேன். எங்களது முதல் மகள் இறந்து விட்டாள். இப்போது 8 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், சில சமயங்களில் பணத்தேவைக்காக மனைவியின் நகையை அடமானம் வைப்பேன். இது எல்லா குடும்பத்திலும் நடப்பதுதானே. ஆனால் இதற்கு என் மாமனார் வீட்டில் பிரச்னைக்கு வருகிறார்கள். குடும்பத்துடன் சேர்ந்து இருக்க வேண்டாம். தனிக்குடித்தனம் செல் என்கிறார்கள். என்னை நம்பி இருக்கும் குடும்பத்தை தனியே விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி தனியே செல்ல முடியும். அதற்கு நான் மறுத்ததால் அடியாட்களை அனுப்பி கொலை செய்து விடுவேன். ஆசிட் ஊற்றி விடுவன் என்று மிரட்டுகிறார்கள். ஒரு பக்கம் வேலை இல்லாத மன உளச்சல், இன்னொரு பக்கம் மாமியார் வீட்டு டார்ச்சரினால் மன உளச்சல் என மனசு நொந்து விட்டேன். இப்படி அவர்கள் கொடுக்கிற பிரச்சினை காரணமாக ஒரு முறை வீட்டில் தூக்குப்போடச் சென்றேன். இன்னொரு முறை ஏரியில் குதித்து உயிரை விட முயற்சி எடுத்தேன். அப்போதெல்லாம் என் அம்மாதான் தடுத்து நிறுத்தி எனக்கு அறிவுரை கொடுத்தார்.
    >இருப்பினும், நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் வருமானம் இல்லாத பிரச்னை, மாமனார் வீட்டு பிரச்னை என இந்த இரண்டும் என்னை துரத்தியதினால்தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் எனது இந்த செய்தி வாட்ஸ் அப்புகளில் பரவியதை அடுத்து திரையுலகம், மீடியா நண்பர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு அட்வைஸ் கொடுத்ததோடு உதவிக்கரம் நீட்டவும் முன்வந்துள்ளனர். சிலர் பண உதவி தர முன்வந்தனர். ஆனால் நான் வாங்கவில்லை. எனக்கு நடிப்பதற்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று கூறிவிட்டேன். அதே சமயம் பிஸ்னஸ் பண்ண கடன் உதவி கொடுத்தால் வாங்குவேன். அதை மாதந்தோறும் திருப்பி கொடுத்து விடுவேன் என்று கூறும் சாய் சக்தி, இப்போது ஆன்மீகம், பிரேயரில் மனதை திருப்பியிருப்பதாகவும், ஒரு மருத்துவரிடம் மன உளச்சலுக்கு சிகிச்சை பெறப்போவதாகவும் சொல்கிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  5. #334
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமா வாய்ப்பை தவிர்க்கும் ஏகவள்ளி
    கேளடி கண்மணி தொடரில் சைலண்ட் வில்லியாகவும், அபூர்வ ராகங்கள் தொடரில் பாசிட்டிவான கேரக்டரிலும் கலக்கி வருகிறவர் ஏகவள்ளி. திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தவர். இப்போது சினிமா வாய்ப்பை தவிர்க்கிறார். இதுபற்றி ஏகவள்ளி கூறியிருப்பதாவது
    எப்போதுமே சீரியல்தான் பெஸ்ட் ஒரு சீரியலில் கமிட் ஆகிவிட்டால் ஒரு வருடம் நடிக்கலாம். சினிமா அப்படியில்லை. பத்து நாளில் ஒரு படத்தில் நடித்துவிட்டு அடுத்த படத்திற்கு வாய்ப்பு தேடவேண்டும். அவுட்டோர் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். சீரியல் அப்படியில்லை. காலையில் கிளம்பி வந்தால் மாலை வீடு திரும்பி விடலாம். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடலாம். அதற்காக சினிமாவே வேண்டாம் என்று சொல்லவில்லை. எனது மன திருப்திக்காக சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வருகிறேன். பெயர் சொல்லும்படியான நல்ல கேரக்டர் கிடைத்தால் சினிமாவில் நடிக்கலாம். ஆனாலும் சீரியல் பாதிக்கும் என்பதால் பல சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வருகிறேன்.
    கேளடி கண்மணி, அபூர்வ ராகங்கள் தொடர்மூலம் நல்ல நடிகை என்று யெர் எடுத்துள்ளேன். அபூர்வ ராகங்களில் எனது கேரக்டரில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் வர இருக்கிறது. தொடர்களின் காட்சிகளை மக்கள் தங்கள் நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதால் ஒவ்வொரு குடும்பதிலும் நானும் ஒருத்தியாக இருக்கிறேன். அந்த வகையில் எனக்கு முழு திருப்பிதான். என்கிறார் ஏகவள்ளி.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #335
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா! -


    சரவணன் மீனாட்சி சீசன்-2வில் மீனாட்சியாக நடித்து வருபவர் ரக்ஷிதா. இவரை மீனாட்சியாகத்தான் நேயர்களுக்கு தெரியும். ஆர்ப்பாட்டமில்லாத அசத்தலான நடிப்பின் மூலம் ஒரே சீரியலில் முன்னணி இடத்தை பிடித்து விட்ட இவருக்குள்ளும் தற்போது சினிமா ஆசை துளிர் விட்டிருக்கிறது. குறிப்பாக, அஜித்துடன் நடிக்க வேண்டும என்பதுதான் இவரது பெரிய ஆசையாம்.
    இதுபற்றி ரக்ஷிதா கூறுகையில், சரவணன் மீனாட்சி சீரியல் கொடுத்த ரீச் காரணமாக, எனக்கு சினிமாவில் இருந்து பல வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால், நான் நடிக்கிற கேரக்டர் அழுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால் தேடிவந்த பல படங்களை தவிர்த்து விட்டு, ராதாமோகனின் உப்புக்கருவாடு படத்தில் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தேன். அந்த படத்தில் நந்திதா நாயகி என்றபோதும், எனது கதாபாத்திரமும் வெயிட்டாகவே இருந்தது. ஆனபோதும் அந்த படம் வெற்றி பெறாததால் எனது நடிப்பு பேசப்படவில்லை.
    இப்படி கூறும் ரக்ஷிதாவுக்கு, சின்னத்திரையை போலவே சினிமாவிலும் ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளதாம். குறிப்பாக, அஜித் அவரது பேவரிட் ஹீரோவாம். அதனால் அவர் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அதை பெருமையாக ஏற்று நடிப்பாராம். இந்த தகவலை தற்போது தன்னை சந்திக்கும் சினிமா நண்பர்களிடம் கூறி வரும் ரக்ஷிதா, அஜித்தை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும்போது தனது விருப்பத்தை வெளிப்படுத்தவும் நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #336
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரை நடிகர்களின் தற்கொலையை தடுக்க புதிய முயற்சி!
    சின்னத்திரை நடிகர்கள் போதுமான வருமானம் இல்லாமல் மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக சமீபகாலமாக தற்கொலைகளில் ஈடுபட்டு வருவது நடிகர் - நடிகைகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதனால் இந்த தற்கொலைகளுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று அனைவருமே குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சென்னையிலுள்ள சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சின்னத்திரை நடிகர் - நடிகைகளின் நலன் காக்கும் வகையில் சில செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
    குறிப்பாக, டப்பிங் சீரியல்களின் வரவினால், தமிழில் தயாரிக்கப்படும் சீரியல்களில் எண்ணிக்கை குறைகிறது. அதனால் நடிகர் நடிகைகளுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. மேலும், சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் சீரியல்களில் நடிப்பதால் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகிறது என்பது போன்ற விசயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து அவர்களை பாதுகாப்பது எனவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
    >இதுதவிர, 1500 உறுப்பினர்கள் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் வேறு வேலைகளில் இருப்பவர்களாம். சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு வீடு வழங்கப்படும் என்று முன்பு ஒருமுறை அறிவிப்பு வெளியானபோது, நடிகர்களாக அல்லாத பலரும் உறுப்பினராகி விட்டார்களாம். அதனால் இப்போது சீரியல்களில் நடிக்காத மற்ற உறுப்பினர்களை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கை நடைபெறுகிறதாம். மேலும், சின்னத்திரை நடி கர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இனிமேல் மாதந்தோறும் சின்னத்திரை நடிகர் சங்க மீட்டிங் நடைபெற உள்ளதாம்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  8. #337
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    prabala inaiya thala Tv channel yup tv kaalathirku thagunthavaaru thannudaiya thozhil nutpathai virivu paduthum yup tv rasigargalin thevaiyai arinthu nigalchigalaiyum vazhangi varugiradhu.

    http://cinema.dinamalar.com/tamil-tv...and-Thozha.htm

    Nandri .Dinamalar.

  9. #338
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இன்னொரு துளசி கேரக்டர் தேடுகிறேன்! -ஸ்ருதிராஜ்



    தென்றல், ஆபீஸ் சீரியல்களுக்குப் பிறகு அபூர்வ ராகங்கள் தொடரில் நடித்து வருகிறார் ஸ்ருதிராஜ். இதையடுத்தும் குடும்பப் பொறுப்புள்ள அப்பாவித்தனமான தொடர்களில் நடிப்பதில் அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.
    இதுகுறித்து ஸ்ருதிராஜ் கூறுகையில், சீரியல்களைப் பொறுத்தவரை மற்றவர்கள் நம்மை கொடுமைப்படுத்துவது போன்ற வேடங்களில் நடித்தால் அது சீரியல் பார்க்கும் பெண்களின் மனதில் ஆழமாக பதிந்து விடும். அதனால் அந்த கேரக்டர் களில் எப்போது திரையில் வந்தாலும் உச் கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். கிராமப்புறங்களில் உள்ள பாட்டிகள் கண்கலங்கவும் செய்வார்கள். அந்த வகையில், தென்றல் சீரியலில் எனக்கு கிடைத்த துளசி கேரக்டர் என்னை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. அந்த மாதிரியான ஒரு வேடம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன்.
    அதோடு, அந்த சீரியலில் நடித்த எனது பெயர் மட்டுமின்றி சீரியலின் பெயரான தென்றல் என்பதைகூட குறிப்பிடாமல், துளசி நாடகம் என்று பெண்கள் குறிப்பிட்டனர். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் பெயர் வாங்கியது அதன்பிறகு ஆபீஸ் சீரியலில் நடித்த ராஜூ கேரக்டரும் ஓரளவு பெயர் வாங்கித்தந்தது. இப்போது அபூர்வ ராகங்கள் சீரியலும் ரீச்தான். என்றாலும், இன்னொரு துளசி கேரக்டருக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் ஸ்ருதிராஜ், அப்பாவி பெண் வேடங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #339
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாவில் ஹீரோயின் ஆகிறார் மதுமிலா
    ஆபீஸ் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் மதுமிலா. அதன் பிறகு தாயுமானவன், அக்னி பறவை உள்ளிட்ட சில தொடர்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவுக்குள் வந்தார். பூஜை படத்தில் விஷாலின் தங்கையாக அறிமுகமானார். ரோமியோ ஜூலியட்டில் ஹன்சிகாவின் தோழியாக நடித்தார். மாப்ள சிங்கம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். அடுத்த கட்டம் ஹீரோயின் தானே.
    மிதிலா விரைவில் ஹீரோயினாக நடிக்கிறார். இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. புதுமுகம் ஒருவர் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை புதுமுகங்கள் இணைந்து உருவாக்குகிறார்கள். விரையில் அதற்கான முறையான அறிவிப்பு வெளிவரும்.
    “சினிமா நடிகையாக வேண்டும் என்பதே என் லட்சியம். அந்த லட்சியத்தை அடையும் வழியாக சின்னத்திரையை பயன்படுத்திக் கொண்டேன். சினிமாவில் படிப்படியாக வளர்ந்து வருகிறேன். விரைவில் எனது லட்சியம் கைகூடும்'' என்கிறார் மதுமிலா.





    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  11. #340
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    பென்சில் படத்தில் பாசமலர் ஷாமிலி!
    பொன்னூஞ்சல், பாசமலர், பிரியசகி, ரோமாபுரி பாண்டியன், மகாபாரதம், 63 நாயன்மார்கள் என பல சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்திருப்பவர் ஷாமிலி. பாசமலர் தொடரில் அவர் நடித்துள்ள பாசக்கார தங்கை வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்துள்ளது.
    >இதுபற்றி ஷாமிலி கூறுகையில், நான் எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாகவே என்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடிப்பேன். அந்த வகையில், பாசமலர் சீரியலில் பாசக்கார தங்கையாக நடித்து வருகிறேன். பல காட்சிகளில் கிளிசரின் போடாமலேயே அழுது நடிக்கிறேன். அது எனக்கு இயல்பாகவே வருகிறது. ஆக, இனிமேல் எந்தமாதிரியான செண்டிமென்ட் வேடங்கள் என்றாலும் எளிதாக என்னால் ஸ்கோர் பண்ண முடியும் என்கிற அளவுக்கு இந்த சீரியல் என்னை தயார்படுத்தி விட்டது.
    மேலும், இப்படி சீரியல்களில் நான் பிசியாக நடித்து வந்தபோதும், ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் நடித்தேன். அதன்பிறகு ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடித்துள்ள பென்சில் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருக்கிறேன். ஸ்ரீதிவ்யா கதாநாயகி என்றாலும் எனக்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர். அந்த கேரக்டர்தான் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்த படம் திரைக்கு வந்தால் எனக்கு சினிமாவில் இருந்தும் நிறைய வாய்ப்புகள் வரும் என்று கூறும் ஷாலினி, நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக, எந்த கம்பெனிக்கும் ஏறி இறங்குவதில்லை. தேடி வந்தால் நடிக்கிறேன். காரணம், சீரியலில் நான் ரொம்ப பிஸி. சீரியல்கள் மூலம் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நான் தினமும் போய் வருகிறேன். அதனால் என்னை தங்களது குடும்பத்தில் ஒருவர் போலவே நேயர்கள் நினைக்கிறார்கள். இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்கிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

Page 34 of 46 FirstFirst ... 24323334353644 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •