-
14th March 2008, 02:35 PM
#101
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
saradhaa_sn
"யோவ் திருப்பள்ளியெழுச்சியெல்லாம் கோயில்லேதான்யா வாசிப்பாங்க".
"உனக்காக மகாராஜா கோயில்லே போய் படுப்பாரா?"
Another similar one with Singapura minor :
Minor : Yov vaithy, Nagapattinathila...
Vai : Enna, puyal varudha - theriyume, adhan varusha varusham varudhey, adukkenna ??
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
14th March 2008 02:35 PM
# ADS
Circuit advertisement
-
14th March 2008, 02:58 PM
#102
Senior Member
Devoted Hubber
Vanakkam Rangan Sir
That dialogue of yours will be initiated by Vadivu no ?
-
14th March 2008, 03:44 PM
#103
Senior Member
Seasoned Hubber
Another Gem from vaithy as he tries to get inside auditorium to see the dance of Mohana.
Gatekeeper: Yov, nilluya enga pora ulla nee
Vaithy : ( looking up and down) yei, naan yaar theriumaa?
GK: ( Konjam thayakatoda) theriyaadhu
Vaithy: Naan Maharaaja kooda vandhavan
GK: (with atmost meekness) sorry sie , neenga ulla ponga
Vaithy : (victorius) seri, enna thaduthu niruthinadha yaar kittayum sollaadha, unakku vela poidum
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
14th March 2008, 03:53 PM
#104
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
saradhaa_sn
Originally Posted by
rangan_08
Thillaana Mohanaambaal----
Yes. You love this man - You hate this man for being Vaithy.. Nagesh really rocked as the one and only Vaithy...
Though he comes late in the film, he completely steals your heart, particularly in scenes where he talks with Vadivamba. "Evlo periya nethi, adula evlo periya pottu..adu sari, koduthu vachava, irukku vechikira...." Many more scenes like this....
Madhanpur Maharani (who is that lady ? ) will say in one of the scenes, " I don't like that man..he is a Jackal " . That's a perfect word to describe his character.
மதன்பூர் மாளிகையில் தங்கியிருக்கும்போது சிக்கலாருக்கும் வைத்திக்கும் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்:
"சண்முகசுந்தரம், எல்லாரும் அவா அவா வாத்தியங்கள எடுத்த்க்கிட்டு புறப்படுங்கோ"
"யோவ் வைத்தி, எங்கேயா கிளம்ப சொல்றே?"
"மகாராஜா உறங்கப்போறார். எல்லாரும் அவரை சுத்தி நின்னு வாசிங்கோ. அதைக்கேட்டுண்டு மகாராஜா ஆனந்தமா உறங்கனும்"
"உம்... இன்னும் எது எதுக்கெல்லாம் வாசிக்கணும்?"
"ராத்திரி அவர் உறங்கறச்சே வாசிக்கணும். காலைல அவர் கண்முழிக்கும்போது திருப்பள்ளியெழுச்சி வாசிக்கணும்"
"யோவ் திருப்பள்ளியெழுச்சியெல்லாம் கோயில்லேதான்யா வாசிப்பாங்க".
"உனக்காக மகாராஜா கோயில்லே போய் படுப்பாரா?"
(இந்த கடைசி வசனம் ஏ.பி.என் எழுதாதது என்றும், நாகேஷ் தானாக சேர்த்துக்கொண்டது என்றும் சொல்வார்கள்).
கொஞ்சம் அசந்தால் போதும், எதிரில் இருப்பவரை தூக்கி சாப்பிட்டு விடுவார் நாகேஷ்.
Another Great Actor.
இதுக்கு நடுவுல இன்னொரு வசனமும் வரும்.
காலைல எழுந்ததும் பூபாளம், ராத்திரி படுக்கும் போது நீலாம்பரி இதெல்லாம் கூட உனக்கு தெரியாதா
avanga thurathum podhu odi poittu ange irundhe thirumbi thirumbi gudhippar. NT ennaya nu kettadhum , en thundu en thundu sollra azhage thani. Simply Nagesh style
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
14th March 2008, 04:27 PM
#105
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Billgates
Vanakkam Rangan Sir
That dialogue of yours will be initiated by Vadivu no ?
Tks BG Sir !!
Engey neenga idhai kekkama poiduveengalonnu ninaichen. Very good that a "Theevira NT (University of acting) rasigar like you has pointed out this.
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
14th March 2008, 07:00 PM
#106
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
joe
முரளி சார்,
'நெஞ்சிருக்கும் வரை' பற்றி முழுவதும் எழுதப்போவதில்லை என்றாலும் ,ஒரு சின்ன விவாதம் நடத்தலாம் என நினைகிறேன்.
நெஞ்சிருக்கும் வரை படத்தில் பாடல்கள் ,நடிப்பு அனைத்தும் அருமை .ஒப்பனை இன்றி நடித்திருக்கும் நடிகர் திலகம் ,முத்துராமன் ,நண்பராக வரும் இன்னொருவர் (பெயர் மறந்து விட்டது) கே.ஆர்.விஜயா அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்கள்.
தொடக்கத்திலிருந்து முத்துராமன் நடிகர் திலகத்தையும் ,கே.ஆர்.விஜயாவையும் சந்தேகப்பட ஆரம்பிக்கும் வரை படம் குறை சொல்ல முடியாத வகையில் மிக நிறைவாக அமைந்துள்ளது ..ஆனால் அதற்கு பின்னர் ஸ்ரீதர் எங்கோ கோட்டை விட்டது போன்ற உணர்வு.
மிக அரிய குணங்கள் கொண்டவராகவும் ,நட்பை பெரிதாக மதிப்பவராகவும் காண்பிக்கப்படும் முத்துராமனின் காதலை நடிகர் திலகம் மனமார ஏற்றுக்கொண்டதை முத்துராமன் அறிவார் ..ஆனால் யாரோ ஒருவர் சுவரில் கிறுக்கி வைத்ததை பார்த்து ,யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டு ,நடிகர் திலகமும் கே.ஆர்.விஜயாவில் ஒன்றாக வீட்டிலிருந்து வருவதை பார்த்தவுடன் முத்துராமன் தீர்க்கமான முடிவுக்கு வருவது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது .
முன்பின் விசாரிக்காமல் இருவரிடமும் ஒரு வார்த்தை கூட கேட்காமல் கடைசி வரை வன்மத்தோடும் எதிர்மறையாக இந்த அளவு மோசமாக நடந்து கொள்வதற்கு வலு சேர்க்கும் காரணங்களோ ,காட்சி அமைப்புகளோ சரியாக இல்லை என்பது என் கருத்து .
பல முறை நடிகர் திலகமும் கே.ஆர்.விஜயாவும் முன்பு போலவே துளியும் சலனமின்றி பேசும் போது கூட முட்டாள் தனமாக நடந்து கொள்வது முதலில் சொல்லப்பட்ட முத்துராமனின் பாத்திரப்படைப்போடு கொஞ்சமும் ஒட்டவில்லை.
70% படத்தை அற்புதமாக கொண்டு சென்ற ஸ்ரீதர் மீதி படத்தில் கொஞ்சம் சொதப்பி விட்டார் என்பது என் கருத்து .இது பற்றி உங்கள் கருத்து?
திரு ஜோ அவர்கள் எனது அபிமான படங்களின் ஒன்றான நெஞ்சிருக்கும் வரை படத்தைப் பற்றி எழுதியுள்ளார். இதைப்பற்றி சில சம்பவங்கள். இடம் சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில். நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் வீ. கோபாலகிருஷ்ணன். பாடல் காட்சி. கூட்டமான கூட்டம். அத்தனையும் மெய் மறந்து லயித்துள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் தடுமாறுகிறார். அவர் கோபாலகிருஷ்ணன். மற்ற அனைத்துக் காட்சிகளிலும் தன் திறமையை வெளிக்காட்டியவர் அப்பாடல் காட்சியில் மட்டும் நடிகர் திலகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. சில முறை அவரால் படப்பிடிப்பு டேக் வாங்கியது என்றால் சில முறை ரசிகர்கள் மற்றும் பொது மக்களால் சில டேக் வாங்கியது. இருந்தாலும் நடிகர் திலகத்தின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் அமைதி காத்தனர். அந்த படப்பிடிப்பு இரண்டு மூன்று நாட்களுக்கு நீடித்தது. அந்த ஸ்டைலான நடையை நேரில் பார்க்க ரசிகர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செஇதிருக்க வேண்டும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி பள்ளி மாணவர்களில் நானும் ஒருவன். இது எந்த ஜென்மத்திலும் மறக்க முடியாது. மற்றபடி அந்த படத்தில் சிறீதர் அவர்கள் சிறிது தடுமாற்றம் அடைந்தார் என்று தோன்றுவது இயற்கையே. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
ராகவேந்திரன்.
-
14th March 2008, 07:05 PM
#107
ஜோ,
நெஞ்சிருக்கும் வரை படத்தை பொறுத்தவரை நீங்கள் சொல்வது உண்மையே. அதாவது ஒரு உயர்ந்த தளத்தில். தமிழில் அபூர்வமாகவே நாம் பார்த்திருக்கக்கூடிய ஒரு யதார்த்தமான தளத்தில் பயணிக்கக்கூடிய இந்த படம் இடைவேளைக்கு பிறகு மாறுபட்டு சஞ்சரிக்க தொடங்கும். இதை ஸ்ரீதர் அவர்களே வருத்தப்பட்டு எழுதியிருந்தார். " அதுவரை என் சொந்த கண்ணோட்டத்தின்படி எடுத்து வந்த நான் இடைவேளைக்கு பிறகு வரும் காட்சியமைப்புகளை விநியோகஸ்தர்கள் விருப்பப்படி மாற்றாமல் இருந்திருந்தால் ----" என்று வாக்கியத்தை முழுமையாக்காமல் விட்டிருந்தார். ஆனால் முத்துராமனின் பாத்திர படைப்பை பற்றிய உங்கள் பார்வையுடன் முற்றிலுமாக ஒத்து போக முடியவில்லை.
நீங்கள் சொல்ல வருவது என்னவென்றால் தன்னுடன் பழகிய நண்பனையும் நேசித்த காதலியையும் எப்படி புரிந்து கொள்ளமால் இப்படி சந்தேகப்படலாம். அது அந்த பாத்திர படைப்பை ஊனப்படுத்தி விடுகிறது என்பது உங்கள் வாதம். கொஞ்சம் யோசித்தால் அது வெளியே இருந்து பார்க்கும் ஒரு மூன்றாவது மனிதன் கருத்தாக உங்களுக்கு தோன்றவில்லையா? என்னதான் நட்பின் புனிதமும் காதலின் ஆழமும் தெரிந்தவனாக இருந்தாலும் தனக்கு என்று வரும் போது அவன் மனதில் ஒரு சந்தேகம் தோன்றுவது மனித இயல்பு, பலவீனம். மனோதத்துவ முறையில் பார்த்தாலும் முதலில் பழகும் போது தன் காதல் வெற்றி பெறுமா என்ற மனோநிலையிலே இருப்பவன் பெங்களுர் சென்று வேலை கிடைத்தவுடன் தான் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பெண் என்று தன் மனதில் அந்த பெண் மேல் ஒரு உரிமையை ஏற்படுத்திகொள்கிறான். தனக்கு சொந்தமான பொருளை வேறொருவன் உரிமை கொண்டாடி விட்டான் என்று கேள்விப்பட்ட போது ஒரு சராசரி ஆணாகத்தான் அவனால் சிந்திக்க முடிகிறது.
மேலும் அவன் அந்த வீட்டை விட்டு கிளம்பும்போது காதலியின் தந்தை (வி.எஸ்.ராகவன்) மற்றும் நண்பன் பீட்டர் (வி.கோபாலகிருஷ்ணன்) உயிரோடு இருக்கின்றனர். ஆனால் திரும்பி வரும் போது காதலியின் தந்தையும் இல்லை, நண்பனும் இல்லை. நடிகர் திலகமும் விஜயாவும் தனியாக அந்த வீட்டில் வசிக்கின்றனர் என்பதை கேள்விப்படும்போதும் நேரில் பார்க்கும் போதும் அவனால் நிதானமாக சிந்திக்க முடியவில்லை. சந்தேகம் அவனை ஆட்கொண்டு விடுகிறது.
ஜோ, நாம் வேறொன்றையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறைகளே மாறி போன சூழ்நிலையில்,ஆண் பெண் நட்பு பற்றிய கண்ணோட்டங்களும் மாறுதல்கள் அடைந்திருக்கின்றன. படம் நடக்கும் கால கட்டம் 1966 -67. இன்றைய நமது சமூக பார்வையோடு அன்றைய மனிதர்களை எடை போடுவது என்பதும் முழுக்க சரியாக இருக்காது என்பது என் எண்ணம்.
ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம். முத்துராமன் விஜயாவிடமோ நண்பனிடமோ பேசி தெளிவுபடுத்தி கொண்டிருக்கலாம் என்பதே அது. ஆனால் இப்படிப்பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேச எல்லோராலும் முடியாது. மேலும் பேசி விட்டால் கதை முடிந்து விடும்.
அன்புடன்
PS: ஜோ படத்தை பற்றி உங்கள் பார்வையை மேலும் தொடருங்கள்
Groucho, come out with a post atleast for this, one of your top drawer favourites.
-
14th March 2008, 07:56 PM
#108
Senior Member
Veteran Hubber
டியர் முரளி.
ஜோ அவர்கள் முத்துராமனின் பாத்திரப்படைப்பின் குறைபாடுபற்றிக் குறிப்பிட்டபோது, அவருடைய கோணத்தில் அது சரியென்று பட்டது. உங்கள் விளக்கம் படித்தபின் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. எனினும், தான் அடைய விரும்பிய ஒருத்தியோடு திருட்டுத்தனமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதாக தன்னால் சந்தேகிக்கப்படும் தன் நண்பன், மனமுவந்து அவளைத் தனக்கு வலிய வந்து திருமணம் செய்து வைக்க நினைப்பானா, அத்துடன் அதற்காக வாதாடுவானா என்று முத்துராமன் ஏற்ற பாத்திரம் நினைத்திருக்க வேண்டும். அதுவும் அவளுடைய அண்ணன் ஸ்தானத்தில் இருந்து அவளை தனக்கு திருமணம் செய்து வைத்த பின்னும் நண்பனையும், மனைவியையும் சந்தேகக் க்ண்ணோடு பார்ப்பது கொடுமை. (ஆனால் அப்படிப்பட்ட அவலங்கள் இன்னும் கூட சமுதாயத்தில் நடந்துகொண்டிருக்கின்றன என்பது நிதர்சன உண்மை என்பதை தினந்தோறும் பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன). இந்த இடத்தில் இயக்குனர் சற்று சறுக்கி விட்டார் என்றாலும் கூட, அதுதானே மீதிப்படத்தை இழுத்துச்செல்ல உதவுகிறது?.
'நெஞ்சிருக்கும்வரை' படம் பற்றி ஒருமுறை இயக்குனர் SREEDHAR சொன்னபோது "நான் எடுக்க நினைத்த கதை வேறு, ஆனால் எடுத்து முடித்த கதை வேறு" என்று சொல்லியிருந்தார். (1981ம் ஆண்டில் வெளியான 'பொம்மை' மாத இதழில் வந்திருந்த அவரது பேட்டி)
-
14th March 2008, 10:00 PM
#109
Senior Member
Diamond Hubber
Originally Posted by
saradhaa_sn
எனினும், தான் அடைய விரும்பிய ஒருத்தியோடு திருட்டுத்தனமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதாக தன்னால் சந்தேகிக்கப்படும் தன் நண்பன், மனமுவந்து அவளைத் தனக்கு வலிய வந்து திருமணம் செய்து வைக்க நினைப்பானா, அத்துடன் அதற்காக வாதாடுவானா என்று முத்துராமன் ஏற்ற பாத்திரம் நினைத்திருக்க வேண்டும். அதுவும் அவளுடைய அண்ணன் ஸ்தானத்தில் இருந்து அவளை தனக்கு திருமணம் செய்து வைத்த பின்னும் நண்பனையும், மனைவியையும் சந்தேகக் க்ண்ணோடு பார்ப்பது கொடுமை. (ஆனால் அப்படிப்பட்ட அவலங்கள் இன்னும் கூட சமுதாயத்தில் நடந்துகொண்டிருக்கின்றன என்பது நிதர்சன உண்மை என்பதை தினந்தோறும் பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன). இந்த இடத்தில் இயக்குனர் சற்று சறுக்கி விட்டார் என்றாலும் கூட, அதுதானே மீதிப்படத்தை இழுத்துச்செல்ல உதவுகிறது?.
நான் நினைத்ததை அப்படியே சொல்லிவீட்டீர்கள்.
முரளி சார் ,
உங்கள் கருத்துக்கு நன்றி ..சில தெளிவு ஏற்பட்டது .ஆனால் முத்துராமன் அப்படி மாறவே கூடாது என்பதல்ல என் எதிர்பார்ப்பு .ஆனால் முத்துராமன் ஒரேடியாக தலைகீழாக மாறிவிடுவதற்கு நியாயமான பின்புலமும் காட்சியமைப்புகளும் (60-களின் சமூக நிலையை கணக்கிலெடுத்துக்கொண்டாலும்) வலுவாக அமைக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
-
15th March 2008, 04:44 AM
#110
Senior Member
Veteran Hubber
What a beautiful song...
செல்லக் கிளிகளாம் பள்ளியிலே - எங்க மாமா
http://youtube.com/watch?v=sC2pTtBRv6o&feature=related
Bookmarks