விஜய் விருதுக்கு நீதிபதிகள் நியமனம்


விஜய் தொலைக்காட்சி ஆண்டு தோறும் சிறந்த சினிமா கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. 2014ம் ஆண்டுக்கான 9வது விஜய் விருது விழா வருகிற ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இதற்காக சிறந்த படங்களை, கலைஞர்களை தேர்வு செய்ய நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இயக்குனர் பால்கி, கே.பாக்யராஜ், கே.வி.ஆனந்த், நடிகை நதியா, யூகி சேது ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.


யூகி சேது கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து நீதிபதியாக இருக்கிறார். கே.பாக்யராஜ் கடந்த 3 ஆண்டுகளான நீதிபதியாக இருக்கிறார். நதியாவும், கே.வி.ஆனந்தும் புதிய நீதிபதியாகி இருக்கிறார்கள். இயக்குனர் பால்கி முதன் முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த ஆண்டு விழாவில் சவுண்ட் என்ஜினீயரிங், விசுவல் எபெக்ட்ஸ், டப்பிங், போன்ற பிரிவின் கிழும் விருது வழங்க முடிவு செய்திருக்கிறார்கள்.



நன்றி: தினமலர்