அவர் வேறு யாருமில்லை. விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர்தான். அவர் தமிழராகவும் இருக்கலாம். ஆண், பெண் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இது தான் யார் அவர் நிகழ்ச்சி.

மக்கள் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு நேரலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. நேயர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தொகுப்பாளரிடம் கேள்விகள் கேட்கலாம்.

அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவரா? உயிருடன் இருக்கிறாரா? இப்படி ஆம், இல்லை என்று பதில் வரக் கூடிய 15 கேள்விகள் மட்டும் தான் தொகுப்பாளரிடம் கேட்கலாம். அதற்குள் போட்டியாளர் சரியான பதிலைக் கண்டு பிடித்து தொகுப்பாளரிடம் சொன்னால் பரிசு. இந்த நிகழ்ச்சியை சொல்விளையாட்டு கார்த்திகா தொகுத்து வழங்குகிறார்.