Page 42 of 63 FirstFirst ... 32404142434452 ... LastLast
Results 411 to 420 of 626

Thread: TV tid bits

  1. #411
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மாற்றுதிறனாளி மாணவர்களின் ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் தென்றல் டிவி!


    பணிகளில் சிறந்தது ஆசிரியர் பணி. அதிலும் காதுகேளாத, வாய்பேச முடியாத, பார்வையற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களின் சேவை ரொம்பவே பெரிது. இதை உணர்ந்த தென்றல் தொலைக்காட்சி அப்படி ஒரு உயரிய சேவையை செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது அளித்து கவுரவப்படுத்த இருக்கிறது. அந்த விருதுக்கு ஹெலன் கில்லெர் விருதுகள் என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.


    அமெரிக்காவில் பிறந்து குழந்தையிலேயே காதுகேற்கும் திறனையும், வாய்பேசும் திறனையும் இழந்த ஹெலன் கில்லர் என்ற பெண்மணி தனது 24வயதில் பட்டம் பெற்றார். உலகிலேயே இதுபோன்ற குறைகளை வைத்துகொண்டு, படித்து பட்டம் பெற்ற முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இவருடைய பெயரிலேயே ஹெலன் கில்லர் விருது வழங்குகிறது. தென்றல் தொலைக்காட்சி.


    இந்த ஆண்டு முதல் இந்த விருதினை வழங்கும் தென்றல் தொலைக்காட்சி இனி ஒவ்வொரு ஆண்டும் இதே பெயரில், இதுபோன்ற சிறப்பு குழந்தைகளுக்கும் , அவர்களுக்கு ஆசிரியர் சேவை செய்பவர்களுக்கும விருதினை வழங்க இருக்கிறது. இந்த விருதுடன் அவர்களுக்கு பரிசு தொகையாக பணம் முடிப்பும் வழங்கப்படுகிறது. இந்த முதலாம் ஆண்டு விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் 24ஆம் தேதி சென்னை, காமராஜர் அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஜெகத் ரட்சகன் கலந்துகொள்கிறார். மேலும் திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல் துறை பிரபலங்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார்கள். இதை தென்றல் தொலைக்காட்சியின் முதன்மை மேலாளர் செழியன் ராதாகிருஷ்ணன் மற்றும் முதன்மை மார்கெட்டிங் மேலாளார் உதயகுமார் இருவரும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்கள். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது தென்றல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பல புதுமையான நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.


    இதுப்பற்றி கூறிய செழியன் ராதாகிருஷ்ணன், "தென்றல் டிவி மற்ற டிவி சேனல்களில் இருந்து வேறுபட்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் அழுகாச்சி சீரியல்களை நாங்கள் தவிர்த்திருக்கிறோம். மக்களுடைய வாழ்க்கைக்கும், அவர்களை மேம்படுத்தும் வகையிலும் தென்றல் டிவியின் நிகழ்ச்சிகள் இருக்கும். ஒவ்வொரு மணி நேரமும் செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படும். அதே போல தினமும் சமூதாயத்தில் நடைபெறும் குற்றங்களையும், அதன் பின்னணிகளையும் நேரடியாக குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்தே, அந்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்துவோம். இது போன்ற பல புதுமையான நிகழ்ச்சிகளோடும், உடனுக்கு உடன் செய்திகளோடும் தென்றல் டிவி ஒளிபரப்பாகும்." என்றார்.


    தென்றல் டிவியின் முதன்மை மார்கெட்டிங் மேலாளரும், ஹெலன் கில்லர் விருது நிகழ்ச்சியை உருவாகியவருமான உதயகுமார் பேசும் போது, "இது போன்ற மாற்றுத்திறனாலிக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களை கெளரவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நெடுநாட்களாக இருந்தது. தென்றல் டிவி மூலம் அதை சாத்தியப்படுத்த முடிந்தது சந்தோசம். இந்த ஆண்டு முதல் இந்த விருதை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்குவோம். தற்போது இந்த விருதை பெரும் ஆசியர்கள் சென்னையைச் சேர்ந்த பள்ளியில் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இனி வரும் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள இதுபோன்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்குவோம். இந்த விருதுக்காக தேர்வு குழு ஒன்றையும் உருவாக்குவோம்." என்றார்.


    இந்த ஆண்டு ஹெலன் கில்லர் விருது 15 ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களுடன் 5 சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகிறது.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #412
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நான் ரொம்ப பிஸியானவள்: அபர்ணா


    இப்போதைக்கு நடிப்பதற்கோ, சீரியல் இயக்கவோ, தயாரிக்கவோ எனக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை. கையில் நிறைய புராஜக்ட்ஸ் இருக்கிறது. நான் ரொம்ப பிஸியானவள்' என்கிறார் "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை அபர்ணா.இவர் நீண்ட நாட்களாக சின்னத்திரை தயாரிப்பாளராக வலம் வருகிறார். தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் புதியதாக ஆரம்பமாகியிருக்கும் "ஆயிரத்தில் ஒருவன்' என்ற நிகழ்ச்சியின் இயக்கம், தயாரிப்பும் இவரே. இந்நிகழ்ச்சி வாரந்தோறும் வியாழன்- வெள்ளி கிழமைகளில் இரவு 9.30மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. "ஆயிரத்தில் ஒருவன்' என்பது ஒரு கேம் ஷோ. நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகக்கு சரியான பதில் சொல்பவர்கக்கு பரிசு தொகை வழங்கப்படும். இது வரை எந்த சேனலிலுமே வராத, ரொம்ப புதுமையான, வித்தியாசமான நிகழ்ச்சியாக வடிவமைத்திருக்கிறாராம். ஒரு சராசரி மனிதனால் பெரிய பெரிய கேம் ஷோக்களில் கலந்து கொள்ள முடியாது. அதற்கு போதுமான அளவு திறமை அவர்களிடம் இருக்காது. ஆனால் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை நிறைய இருக்கும்.அப்படிப்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் "ஆயிரத்தில் ஒருவன்' ஆகலாம். இதன் முக்கிய அம்சம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருமே அவரவர் திறமைக்கு ஏற்றாற் போல் ஏதாவது ஒரு பரிசு பெறும்படி அமைத்திருக்கிறோம் என்கிறார் அபர்ணா.
    "அன்பே சிவம்.

  4. #413
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Remember Shruti, who played the protagonist in K. Balachander’s Kalki which released in the mid-nineties? The cute-looking Shruti stunned many of her fans and movie-goers by taking on a character which was rather unusual. Even many of director Balachander’s ardent fans would agree that the veteran goofed up with the script and the screenplay.

    Shruti didn’t do many films in Tamil and starred in few more Telugu and Kannada films before marrying Kannada actor Mahendra and settling into matrimony. After a few years, though, the couple started developing many ‘misunderstanding’ which soon reached a point of no return. Mahendra and Shruti then filed separately for divorce and legal separation.

    The divorce came through last year and now Shruti has decided to again give vent to her ‘acting instincts’. She returns to the limelight not as a heroine but by playing the lead role in a tele-serial titled Karthigai Pengal aired at prime time in the night on a popular regional television channel. This serial is produced by Thirumurugan and has Banuchander playing the male lead.

    The serial has gone on air starting this Monday (30th July) and Shruti hopes her ‘second innings’ as an actress in tele-serials turns out to be as successful as her stint in movies was prior to her marriage with Mahendra.
    "அன்பே சிவம்.

  5. #414
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஊருக்குப் பெருமை சேர்த்த விருது!


    1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம்தேதி சென்னை தொலைக்காட்சி தொடங்கப்பட்ட தினத்தில் ஒளிபரப்பான `வாலிபம் திரும்பினால்' சிறப்பு நாடகத்தில் நடித்தவர் ஏ.ஆர்.எஸ். ஒய்.ஜி.எம். நாடக குழுவின் நாடககுழு சார்பில் அந்த நாடகம் அரை மணிநேரம் ஒளிபரப்பாகி நேயர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தூர்தர்ஷனில் முதன்முதலாக ஒளிபரப்பான `நல்லதோர் வீணை' தொடரிலும் நடித்தார், ஏ.ஆர்.எஸ்.


    இப்போதும் அவள், சூர்ய புத்திரி என தொடர்களில் பிசியாக இருக்கும்


    ஏ.ஆர்.எஸ், இதுவரை 63 தொடர்களில் நடித்தவர். நடித்துக் கொண்டிருப்பவர். சினிமாவிலும் 104 படங்களைத் தாண்டியிருக்கிறார். மேடை நாடகங்களிலும் முத்திரை பதித்திருக்கிறார். நின்று நிமிர்ந்த தோற்றம், கணீர் குரலில் தெளிவான உச்சரிப்பு, கடந்து போகும் வார்த்தைகளிலேயே இணைந்து கொள்ளும் நடிப்பு இவரின் ஸ்பெஷல்.


    நாடக உலகில் நீண்டகால சேவை புரிந்து வருவோருக்கு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டின் சிறந்த நாடக நடிகருக்கான இந்த விருது


    ஏ.ஆர்.எஸ்.சுக்கு கிடைத்தது. சமீபத்தில் ஜனாதிபதி பிரணாப்


    முகர்ஜி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த விருதை ஏ.ஆர்.எஸ்.சுக்கு வழங்கினார்.


    இவருக்கு முன் இந்த விருதை 1959-ல் பம்மல் கே.சம்பந்த முதலியார், 1962-ல் டிகே.சண்முகம், 1968-ல் எஸ்.வி.சஹஸ்ரநாமம், 1992-ல் பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் மட்டுமே பெற்றிருக்கிறார்கள் என்பது இந்த விருதின் சிறப்பை சொல்லும்.


    இந்த விருது பெற்ற அனுபவம் பற்றி ஏ.ஆர்.எஸ்.சிடம் கேட்டபோது, ஜனாதிபதி மாளிகையில் என்னை விருதுக்காக அழைக்கும்போது `ஆலங்காடு ராமமூர்த்தி சீனிவாசன்' என்று என் ஊர்பெயர், தந்தை பெயர் என் பெயரோடு சேர்த்து அழைத்தார்கள். அந்த நிமிடத்தில் நான் பிறந்த ஊருக்கும் என் பெற்றோருக்கும் இந்த விருது மூலம் பெருமை சேர்த்த என் இதயப் பரவசத்தை வார்த்தைகளில் விவரித்து விட


    முடியாது!''நெகிழ்ச்சியாகவே சொல்கிறார், ஏ.ஆர்.எஸ்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #415
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    டிவி சீரியல் ஷூட்டிங்கில் நடந்த சோகம்


    ஐதராபாத்தில் டிவி சீரியல் ஷூட்டிங் ஒன்று நடந்த போது, ஏற்பட்ட விபத்தில் 5 வயது சிறுவன் பலியானான். ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுவன் நடிகை ஓட்டிய கார் ஏறியது, இதனையடுத்து சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். நடிகை கோபத்துடன் கார் ஓட்டிச் செல்வது போல் காட்சி படமாக்கபட இருந்தது. அப்போது எதிர்பாரதவிதமாக நடிகையின் கட்டுப்பாட்டை இழந்த கார் சிறுவன் ஏறியது. மேலும், சிறுவன் அருகே உட்கார்ந்திருந்து 9 வயது சிறுமியின் மீதும் கார் மோதியது.


    இதனால் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். மேலும் பலத்த காயத்துடன் இருந்த சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு விசாரித்தனர். விசாரணையில், நடிகைக்கு சரியான ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் கார் ஓட்ட தெரியாது என்றும் தெரிய வந்துள்ளது. நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    "அன்பே சிவம்.

  7. #416
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரை நடிகையின் டைரக்டர் ஆசை!


    சின்னத்திரை நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யாவுக்கு சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். வந்தாளே மகராசி தொடரின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா, தற்போது திரைவிழாக்களைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ஆகியிருகிறார். அத்துடன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 7சி தொடரில் நடித்தும் வருகிறார். நடிப்பு, தொகுப்பு என எப்போதும் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு வருங்காலத்தில் டைரக்ஷன் செய்யும் ஆசையும் இருக்கிறதாம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருக்கிறது. அந்த கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் கலையுலக பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
    "அன்பே சிவம்.

  8. #417
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    அடம் பிடித்த ரோஜா

    11/22/2012 3:53:12 PM

    தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ‘லக்கா, கிக்கா' நிகழ்ச்சி நடத்தும் ரோஜா புடவை சரியில்லை என்று நிகழ்ச்சியின் சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டாராம்.
    சின்னத்திரையில் சினிமா நடிகைகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக செலவு என்றால் அவர்களுக்கான காஸ்ட்யூம்தான். ஜீ தமிழ் டிவியில் ரோஜா ‘லக்கா கிக்கா' நிகழ்ச்சியில் புடவை, நகை அலங்காரம் பிரம்மாண்டமாக இருக்கும். புடவை மட்டுமே ஒரு லட்சம் ரூபாயாம்.

    சமீபத்தில் டிவி நிர்வாகம் சார்பில் வேறு புடவை கொடுத்திருக்கின்றனர். ஆனால் அதை உடுத்த மறுத்துவிட்டாராம் ரோஜா. ஒரு லட்சம் ரூபாய் புடவை தந்தால்தான் நிகழ்ச்சிக்குத் தருவேன் என்று சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டராம். டிவி நிர்வாகத்தினர் பாடுதான் திண்டாட்டமாகிவிட்டது
    http://http://cinema.dinakaran.com/c...?id=7872&id1=6

    2சன் டிவியில் இந்தவாரம் பாக்யராஜ் வாரம்

    11/20/2012 11:01:51 AM

    சன் டிவியில் இந்தவாரம் பாக்யராஜ் வாரம் தொடங்கியுள்ளது. இரவு 11 மணிக்கு நடித்த தூறல் நின்னு போச்சு, மௌனகீதங்கள் போன்ற பிரபலமான படங்களை ஒளிபரப்புகின்றனர்.

    இயக்குநர் கே. பாக்யராஜ் படங்களுக்கு என்று தனி ரசிகர் வட்டம் உண்டு. ஆண் ரசிகர்களைப் போல பெண் ரசிகர்களும் அதிகம் உண்டு. அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு சமாச்சாரம் இருக்கும். இன்றைக்கும் டிவியில் பாக்கியராஜ் படம் போட்டால் அது ரசித்து பார்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். அந்த அளவிற்கு அவருடைய படத்தின் திரைக்கதையும், கதாபாத்திரங்களும் ரசிக்கும் படியாக இருக்கும்.

    சன் டிவியில் இந்தவாரம் இரவு 11 மணிக்கு பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்புகின்றனர். இன்று இரவு ருத்ரா, புதன்கிழமை இரவு தூறல் நின்னு போச்சு படம் ஒளிபரப்பாகிறது.

    1982 லேயே வரதட்சணை கொடுமை பற்றி கூறிய படம் 'தூறல் நின்னு போச்சு'. நம்பியாரை வில்லான பார்த்த தமிழ் ரசிகர்கள் இதில் வித்தியாசமான கெட்டப்பில் பார்த்திருப்பார்கள். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனவை. நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத படம் இது. வியாழக்கிழமை இரவு இன்று போய் நாளை வா என்ற நகைச்சுவை படமும் வெள்ளிக்கிழமை இரவு அந்த காலத்தில் சூப்பர் ஹிட்டான மௌனகீதங்கள் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மௌனகீதங்கள் படத்தில் பாக்யராஜ், சரிதா ஜோடி கெமிஸ்ட்ரி சூப்பர் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. தினசரி 11 மணிக்கு தூக்கம் வராமல் இருந்தால் பாக்யராஜ்

    http://http://cinema.dinakaran.com/c...?id=7853&id1=6

  9. #418
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    என்னோட படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறேன். அதற்கான பலன் கிடைக்கிறது என்கிறார் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் விஜய்சேதுபதி. சீனுராமசாமி இயக்கத்தில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகனவர் விஜய்சேதுபதி. தற்போது இவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் பீட்சா வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் பீட்சா படத்திற்கு முன்பு வெளிவர வேண்டிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.​

    படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிறகு படம் வெளிவராமல் தள்ளிப்போனது. இப்போது வருகிற 30-ம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது. இதுபற்றி நிருபர்களிடம் விஜய் சேதுபதி கூறியதாவது:-

    சினிமா எண்ட்ரி என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நடிக்க வந்த பிறகுதான் தெரிந்துக் கொண்டேன். என்னோட முதல் படம் சீனுராமசாமி சார் இயக்கிய தென் மேற்கு பருவக்காற்று. இந்த படம் வெளிவந்து அதிக நாட்கள் ஓடவில்லை. ஆனால், படப்பிடிப்பு நடந்த போது படம் பேசப்படும் படமாக இருக்கும் என்றேன். அதேபோல பேசப்பட்டது. தேசிய விருதுகளை வாங்கி கொடுத்தது. அப்போது நிறைய வாய்ப்புகள் வந்தன. கதை சரியில்லாததால் ஒத்துக் கொள்ளவில்லை. பீட்சா கதை பிடித்திருந்தது, நடித்தேன். இப்போது எதிர்பாராத அளவில் வெற்றி பெற்றியிருக்கிறது.

    பீட்சாவுக்கு முன்பு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் வெளிவந்திருக்க வேண்டும். வெளிவரவில்லை அதற்கு முக்கிய காரணம் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு முன்னதாக பத்திரிக்கையாளர் காட்சி போடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் ரசித்து சிறந்த படம் என்று பாராட்டினார்கள். அப்போது முப்பது பிரிண்ட்டுகள் போடுவதாக இருந்தது. இந்த ரிசல்ட் கேட்ட பிறகு இன்னும் நல்லா விளம்பரபடுத்தி அதிக பிரிண்ட் போடலாம் என்று கருதினோம். அதனால் அப்போது படத்தை ரிலீஸ் செய்யவில்லை. தற்போது ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக எஸ்.சதிஷ்குமார் ரிலீஸ் செய்கிறார். இவர் ஏற்கனவே ஆரோகணம் படத்தை ரிலீஸ் செய்தவர். நூற்று ஐம்பது பிரிண்ட் தமிழ்நாடு முழுக்க போடப்பட்டிருக்கிறது. வருகிற 30-ம் தேதி படம் திரைக்கு வருகிறது. அடுத்து ரம்மி, சூதுகவ்வும், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் படத்தின் தெலுங்கு, இந்தி ரீமேக் உரிமையை நடிகர் இயக்குனர் தியாகராசன் வாங்கியிருக்கிறார். என்னோட படங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறேன். அதற்கான பலன் கிடைக்கிறது. அதேபோல கூத்துப்பட்டறையின் பயிற்சி எடுத்திருந்தாலும் படப்பிடிப்புக்கு முன்பு நடிக்க வேண்டிய காட்சிகளை ரிகல்சர் செய்த பிறகுதான் கேமரா முன்பு நிற்பேன்.
    http://http://www.thinaboomi.com/2012/11/22/17192.html

  10. #419
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரையில் மீண்டும் சூர்யா




    நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த நடிகர் சூர்யா, மீண்டும் அதே நிகழ்ச்சியில் அதே டிவியில் தொடர்கிறாராம்.


    சூர்யா இப்போது சிங்கம் 2 படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கின்றனர.


    இந்தப் படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படம் முடிந்த பிறகு படங்களில் நடிக்க சில மாதங்கள் தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டு, கோடிகளை அள்ளித்தரும் டிவி நிகழ்ச்சிக்கு திரும்பப் போகிறாராம். தொடர்ச்சியாக பல எபிசோடுகளை ஒரே நேரத்தில் முடித்துக் கொடுத்துவிட்டு, கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


    ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படங்களின் ரிசல்ட் மாற்றான் மாதிரி அமைந்துவிட்டால், டிவியில் தோன்றும் முடிவு மாறக்கூடும்!

    http://cinema.dinakaran.com
    "அன்பே சிவம்.

  11. #420
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமா துறைக்கு வருவதற்கு எனக்கு எந்த பின்னணியும் இல்லை: சிவா


    சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் பேசிய சிவா தன்னுடைய சினிமா, காதல், பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொண்டார்.


    படிப்பதை விட தனக்கு நடிப்பதில் தான் ஆர்வம் அதிகம் என்று கூறிய சிவா, முதலில் நாடகத்தில் நடித்து பின்னர் எப்.எம், அப்புறம் சினிமா துறைக்கு வந்ததாக கூறினார்.


    சினிமா துறைக்கு சென்றதற்கு தன்னுடைய வீட்டில் யாரும் விரும்பவில்லை என்று கூறிய சிவா, பின்னர் ரஜினி படத்தை வீட்டில் மாட்டிய பின்னர்தான் தனக்கு அதிகமான வரவேற்பு கிடைத்ததாக கூறினார்.


    நடிகர் அஜீத் தனக்கு அண்ணன் மாதிரி என்றும், நடிகர் விஜய்யின் ரசிகன் என்றும் கூறினார். தன்னுடைய படங்களைப் பார்த்து விஜய் பாராட்டியும், ஆலேசானைகளையும் கூறியுள்ளார் என்றார் சிவா.


    சினிமா துறைக்கு வருவதற்கு எனக்கு எந்த பின்னணியும் இல்லை. அதுதான் தனக்கு ப்ளஸ் என்று கூறிய சிவா தன்னால் சுதந்திரமாக செயல்பட முடிவதற்கு அதுதான் காரணம் என்றார். சினிமாவில் நுழைவதற்கு நானும் போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் அதுதான் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அந்த நாட்களில் நான் மிகவும் சந்தோசமாக சிரித்துக்கொண்டு நம்பிக்கையோடு காத்திருந்தேன் என்று கூறிய சிவா இப்போதைய வெற்றிக்கு அந்த நம்பிக்கைதான் காரணம் என்றார்.

    http://cinema.dinakaran.com
    "அன்பே சிவம்.

Page 42 of 63 FirstFirst ... 32404142434452 ... LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •