Page 54 of 63 FirstFirst ... 4445253545556 ... LastLast
Results 531 to 540 of 626

Thread: TV tid bits

  1. #531
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    குறும்பட ஹீரோயின் ஆனார் திவ்யா


    ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் கெஞ்சம் காபி நிறைய சினிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி திவ்யா, தற்போது நடிகையாகிவிட்டார். மேஜிக் என்ற குறும்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பானுஹாசன் என்பவர் நடித்திருக்கிறார். விஜயசுந்தர் என்பவர் இயக்கி உள்ளார். ஹேமந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷரன் சூர்யன் இசை அமைத்துள்ளார்.
    வாழ்வில் எல்லா நிலைகளிலும் ஒரே பெண்ணை காதலித்து அவளுக்காகவே அவளுக்கு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனின் கதை. இதில் காதலிக்கப்படுகிற பெண்ணாக திவ்யா நடித்திருக்கிறார். இது சினிமாவில் நடிப்பதற்கான முன்னோட்டமா? என்று கேட்டால் "பட யூனிட்டை சேர்ந்தவர்கள் என் நண்பர்கள். அவர்கள் சொன்ன கதை பிடித்திருந்தது. நடித்துக் கொடுத்தேன். சினிமா வாய்ப்புக்காக நடிக்கவில்லை. ஆனாலும் நாளை நடப்பது யாருக்குத் தெரியும்"" என்று சிரிக்கிறார் திவ்யா.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #532
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் குட்டிபத்மினி


    1962ம் ஆண்டு வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுமான குட்டிபத்மினி, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட அந்தக்கால நடிகர்களுடன் நடித்தவர். அதன் பிறகு நாயகியாக, குணசித்திர நடிகையாக பல படங்களில் நடித்தார். அதன் பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார். ஆரம்பத்தில் தொடர்களில் நடித்தவர், பின்னர் தயாரிப்பாளர் ஆனார். தற்போது ராமானுஜர், ரோமாபுரி பாண்டியன் தொடர்களை தயாரித்து வருகிறார்.
    பல வருட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். விக்னேஷ் தயாரித்து நடிக்கும் 'அவன் அவள்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
    இதுகுறித்து அவர் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நான் முழுமையாக ஈடுபட்டேன். விஷால் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து அவர் பக்கம் நின்றேன். இப்போது அவர் அணியுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இதனால் எனக்கு நிறைய அன்பு உள்ளங்கள் கிடைத்திருக்கிறது. எனக்கு மூன்று பெண் குழந்தைகள், ஆண்குழந்தைகள் இல்லை. நடிகர் சங்கத்திற்கு வந்த பிறகு எனக்கு நிறைய மகன்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் என்மீதுள்ள அன்பால் நடிக்க அழைக்கிறார்கள். நானும் அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு நடிக்கிறேன். என்றார்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  4. #533
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இளையராஜா 1000: லோகோ வெளியீடு


    விஜய் தொலைக்காட்சி ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்த இளைராஜாவுக்கு வருகிற 27ந் தேதி பிரமாண்ட பாராட்டு விழாவை நடத்துகிறது. இதில் ஒட்டுமொத்த திரையுலகமும் கலந்து கொள்கிறது. பிரமாண்ட இசை, நடன நிகழ்ச்சிகளுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் லோகோவை இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் வெளியிட்டார். இதனை இளையராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் பெற்றுக் கொண்டார்
    நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா, நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் பிரபு, பெப்சி தலைவர் ஜி.சிவா, விஜய் தொலைக்காட்சியின் பொதுமேலாளர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    >இதுகுறித்து இளையராஜா கூறும்போது "ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்தது என்னை பொறுத்தவரை வெறும் எண்ணிக்கைதான். இதற்காக நான் கர்வப்பட முடியாது. இதை எனக்கு அளிக்கும் பாராட்டு விழாவாக கருதாமல் எனக்கு இசை கொடுத்த கடவுளுக்கு நடத்தும் பாராட்டு விழாவாக இதனை கருதுகிறேன். என் ரசிர்களின் கைதட்டல்தான் எனக்கு பாராட்டு" என்றார்.




    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  5. #534
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஹீரோவானார் - ;ஆபீஸ்-; கார்த்தி


    விஜய் டி.வியில் ஒளிபரப்பான -;ஆபீஸ்- ; தொடரில் நடித்தவர் கார்த்தி. ஏற்கெனவே சினிமாவில் கார்த்தி இருப்பதால் தனது இயற்பெயரான கார்த்திகேயன் என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு, 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல- ;. நாயகன் படத்தில் கமல் பேசும் வசனம் இது. எல்லோரும் ரஜினி டயலாக்கில் படம் எடுக்கும்போது கமல் டயலாக்கில் படம் எடுக்கிறார் தினேஷ் செல்வராஜ்.
    இவர் பிரபல கதாசிரியரும், இயக்குனருமான ஆர்.செல்வராஜின் மகன். அன்னக்கிளி, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, சின்ன கவுண்டர், அலைபாயுதே உள்பட ஏராளமான பஙகளுக்கு கதை எழுதியவர். கார்த்திகேயனுடன் ஷரியா, யுவன்ஸ்ரீ, ஜெகதீஷ், அரவிந்த், அருள் ஜோதி நடித்துள்ளனர். நவின் மற்றும் பியோன் சுரா இசை அமைத்துள்ளனர். ஏ.டி.பகத்சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    நேர்மையாக அப்பா சம்பாதித்த சொத்தை நண்பர்களுடன் சேர்ந்து தவறான வழியில் அழிக்கிறார் மகன். ஒரு கட்டத்தில் நண்பர்களை பற்றி தெரிந்தபோது விஷயம் எல்லை மீறிபோகிறது. அதிலிருந்து எப்படி மகன் மீள்கிறார் என்பது கதை. இந்தப் படத்தை தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் கார்த்திகேயன்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #535
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ராதிகாவிடம் சின்னத்திரை வாய்ப்பு கேட்ட எஸ்.ஏ.சி.,


    70 படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர், அதில் 7 இந்திப் படங்களும் அடங்கும். மகன் விஜய்யையும், விஜயகாந்தையும் உயரத்திற்கு கொண்டு வந்தவரும் அவர்தான். இயக்குனராக, தயாரிப்பாளராக இருந்த எஸ்.ஏ.சி சமீபகாலமாக நடிகராகிவிட்டார். தனது படங்களில் ஒரு சில காட்சியில் தோன்றும் எஸ்.ஏ.சி. டூரிங் டாக்கீஸ் படம் மூலம் முழு நடிகரானார். பிப்,26ம் தேதி அவர் ஹீரோவாக நடித்துள்ள நையப்புடை வெளிவர இருக்கிறது. கொடி படத்தில் தனுஷின் தந்தையாக நடித்து வருகிறார்.
    சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார் எஸ்.ஏ.சி.,. நையப்புடை படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ராதிகாவிடம் மேடையிலேயே நேரடியாக அவரது தொடர்களில் நடிக்க வாய்ப்புக் கேட்டார்
    முழு நடிகனாகிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஏதாவது ஒன்றில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரையிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது. அதனால் உங்கள் தொடரில் எனக்கு வாய்ப்பு தாருங்கள், என்ன வேடமாக இருந்தாலும் பரவாயில்லை" என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். "எனக்கு ஜோடியாக நடிக்கிறீங்களா?" என்று சொல்லி அதிர வைத்தார் ராதிகா.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #536
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சீரியல் வில்லி ரோஜாவுக்கும் வில்லன் ஈஸ்வருக்கும் திருமணம் நடந்தது
    டிவி சீரியல் வில்லி ஜெயஸ்ரீ வில்லன் நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சொந்த பந்தங்கள் மட்டுமே இவர்கள் திருமணத்தில் பங்கெடுத்த நிலையில் ஜனவரி 30ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஆண்டு கணக்கில் ஒரே சீரியலில் நடிப்பதால் காதல், கல்யாணம் என ஒரே குடும்பமாக மாறுவது சகஜமான விசயம்தான். வம்சம் தொடரில் ரோஜாவாக நடித்து கலெக்டர் அர்ச்சனாவிற்கு டார்ச்சர் கொடுக்கும் ஜெயஸ்ரீ சின்னத்திரை நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம், காதல் திருமணம்தான் என்றாலும் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    "அன்பே சிவம்.

  8. #537
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    .......
    பப்லுவை குறித்து இணையத்தில் வதந்தி
    பப்லு தற்கொலை செய்து கொண்டார் என்ற அந்த வதந்தியுடன், அவர் பேசியதாக ஒரு ஆடியோவும் வெளியானது. அதில் பப்லு, "என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் பிறந்த பாவம். அழும்போது சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள். நான் சிரித்துக்கொண்டே சாகிறேன். சுற்றி இருப்பவர்கள் அழட்டும். என் சாவு இந்த உலகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். நான் வாழும்போது என்னுடைய அருமை தெரியல. நான் செத்ததுக்கு அப்புறம் தெரியட்டும்" என்று பேசியிருந்தார். இதனால் வதந்திக்கு வலு சேர்ந்தது.

    ஆனால், அந்த அடியோ, அவர் குறும்படம் ஒன்றிற்காக பேசியது என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை பப்லுவை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனாலும், அவர் நலமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
    "அன்பே சிவம்.

  9. #538
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பாரதிராஜா - பாலா மோதிக் கொள்வது சரியா.?


    குற்றப் பரம்பரை' பட விவகாரத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களான பாரதிராஜாவும், பாலாவும் மோதிக் கொண்டிருக்கும் விவகாரம்தான் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 'குற்றப் பரம்பரை' என்பது ஒரு வரலாறு அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். அதை விட்டுவிட்டு, அந்தக் கதையை படமாக எடுத்தால் வழக்கு தொடுப்பேன் என்று சொல்வது முட்டாள் தனம் என இயக்குனர் பாலா நேற்று காட்டமாகவே தெரிவித்திருந்தார். அதோடு, தான் எடுக்க உள்ள படம் 'குற்றப்பரம்பரை' கதையே அல்ல, அந்தக் காலக் கட்டத்தில் நடந்த வேறு ஒரு கதையை கற்பனை கலந்து எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
    பாலா எடுக்க உள்ள படத்தில் விஷால், ஆர்யா உள்ளிட்டவர்கள் நடிக்கப் போகிறார்கள். வெவ்வேறு தளத்தில் உள்ள நான்கைந்து இளைஞர்கள் ஒரே விஷயத்தால் பாதிக்கப்பட, அவர்கள் அந்த விவகாரத்தில் என்ன செய்கிறார்கள் என்பதுதான் பாலா எடுக்க உள்ள படத்தின் கதை என்றும் சொல்கிறார்கள். இந்தக் கதையைத்தான் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியுடன் இணைந்து பாலா படத்திற்காக எழுதி வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
    இதனிடையே பாலாவின் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், தான் 'குற்றப்பரம்பரை' படத்தை படமாக்குவதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்
    தமிழ் சினிமாவில் திரையுலகத்தினரும், ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இரண்டு முக்கிய கலைஞர்கள் இப்படி மோதிக் கொள்வதை இயக்குனர்கள் சங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாகத் தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றே பல இயக்குனர்களும் விரும்புகிறார்கள்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #539
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தமிழ் புத்தாண்டில் ராஜ் டிவியில் அச்சாரம், எட்டுதிக்கும் மதயானை


    வருகிற ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகளை சேனல்கள் போட்டி போட்டு தயாரித்து வருகிறது. புதிய படங்களையும் திரையிட இருக்கிறது. சேனல்கள் ஒளிபரப்ப போகும் படத்தை கடைசி நேரம் வரை ரகசியமாக வைத்திருக்கும். ராஜ் டி.வி. இப்போதே அறிவித்து விட்டது.
    தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக உயிரே உயிரே படத்தில் நடித்த சித்து, ஹன்சிகாவில் கலகலப்பான உரையாடல், மதுரை முத்து தலைமையில் நடந்த காமெடி பட்டிமன்றம், என் இனிய தமிழ் மக்களே என்ற சிறப்பு நிகழ்ச்சி, நடிகை நிகிஷா பட்டேலின் சிறப்பு பேட்டி ஆகியவை ஒளிபரப்பாகிறது.
    புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக எட்டுதிக்கும் மதயானை படம் பகல் 12 மணிக்கும், அச்சாரம் படம் மாலை 6.15 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. எட்டுதிக்கும் மதயானையில் ஆர்யாவின் தம்பி சத்யா, ஸ்ரீமுகி நடித்துள்ளனர், மனுரமேசன் இசை அமைத்துள்ளார், ஜெய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராட்டினம் தங்கசாமி இயக்கி உள்ளார். அச்சாரம் படத்தில் கணேஷ் வெஙங்கட்ராம். முன்னா, பூனம் கவுர் நடித்துள்ளனர் ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார், பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். மோகன் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  11. #540
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கேளடி கண்மணியின் சைலன்ட் கில்லர் நான்! - ஏகவள்ளி
    சீரியல்களில் வரும் சம்பவங்கள், பிரச்சினைகள் அனைத்துமே நிஜ வாழ்க்கைளின் பிரதிபலிப்புகளே என்பதால், எந்தமாதிரியான சூழலாக இருந்தாலும் அதை என் வாழ்க்கையில் நடப்பதாக எண்ணிக்கொண்டு ரியலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன் என்கிறார் சின்னத்திரை நடிகை ஏகவள்ளி. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
    >தற்போது நான் கேளடி கண்மணி, அபூர்வ ராகங்கள் என்ற இரண்டு தொடர்களில் நடித்து வருகிறேன். இரண்டிலுமே வெயிட்டான வேடங்கள். இதில் கேளடி கண்மணியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் சைலன்ட் கில்லராக நடிக்கிறேன். நெகடீவ் வேடம். நல்ல சஸ்பென்சாக போய்க்கொண்டிருக்கிறது. என்னை சாதாரணமாக பார்க்கையில் அப்பாவி பெண்ணாக தெரியும். ஆனால் நான் அந்த கேரக்டராக மாறி நடிப்பது அதிரடியாக இருக்கும்.
    அதேபோல் அபூர்வ ராகங்களில் பாசிட்டிவான வேடம். இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு எனது கேரக்டரில் சில ட்விஸ்ட்டுகள் வரும். அப்போது கதையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள், விறுவிறுப்பு என எனது கதாபாத்திரமே அபூர்வ ராகங்களை ஆக்ரமித்துக்கொள்ளும். நேயர்களுக்கு அது பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் இருக்கும் என்று கூறும் ஏகவள்ளி, சீரியல்களில் வரும் சம்பவங்கள், பிரச்சினைகள் அனைத்துமே நிஜ வாழ்க்கைளின் பிரதிபலிப்பே என்பதால், எந்தமாதிரியான சூழலாக இருந்தாலும் அதை என் வாழ்க்கையில் நடப்பதாக எண்ணிக்கொண்டு ரியலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன் என்கிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

Page 54 of 63 FirstFirst ... 4445253545556 ... LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •