Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 20

Thread: GnAnakoothan

Hybrid View

  1. #1
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like

    GnAnakoothan

    எனக்கு மிக விருப்பமான தமிழ்க்கவிஞர் ஞானக்கூத்தன். அவரது படைப்புகளைப் பற்றிப் பேச இந்தத் திரியை பயன்படுத்துவோம்.

    ஞானக்கூத்தன் கவிதைகள் இந்த வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    அவருடைய முதல் (?) கவிதையே பிரமாதம்

    யோசனை
    உனக்கென்ன தோன்றுது
    கருத்துக்கு மாறாகப் போலீஸார்கள்
    கட்டிவைத்துக் கையெழுத்து வாங்கலாமா

    எனக்கென்ன தோன்றுது
    வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
    யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
    போச்சு
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  4. #3
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Such situations persist everyday in every issue very subtly hinted I should say

  5. #4
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    Such situations persist everyday in every issue very subtly hinted I should say
    In one sweep he has passed a comment on Tamil literature itself.


    கை அது கடன் நிறை யாழே
    மெய் அது புரவலர் இன்மையின் பசியே

    என்று புறநானூற்றில் ஒரு வரி வரும்.

    Even Bertrand Russel writes something like :" In these days of democracy one if apt to forget the debt art owes aristocracy".

    That bounded feeling of indebtedness is brought out with its searing painfulness in this poem.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  6. #5
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    ஞானக்கூத்தனின் அரசியல் இயங்குதளம் புரிய அவருடைய தமிழ் என்னும் கவிதை உதவும்:

    தமிழ் (1973)
    ----------

    "எனக்கும் தமிழ்தான் மூச்சு
    ஆனால்
    பிறர்மேல் அதைவிட மாட்டேன்"


    திராவிட இயக்க/தமிழ் அடையாள அரசியல் மறுப்பும், பகடியும் தொனிக்கும் எழுத்துக்குச் சொந்தகாரர்; ஆனால் அதை மீறியும் கவர்கிறவர்.

    எனக்கு அவருடைய "மேசை நடராசர்" கவிதையின் இயல்பான தொனியும், ஓட்டமும் மிகப் பிடிக்கும்.

    மற்றபடி தமிழ் / திராவிட அரசியல் எதிர்ப்புணர்வு - அவருடைய "நாய் குரைக்கும்" கவிதை ஒன்று எண்பதுகளில் இந்தியா டுடேயில் வந்தபோது படித்தேன் - திராவிட இயக்க/ இட ஒதுக்கீட்டுக்கு எதிரான, அந்தக் கவிதை எழுதப்பட்டது 1969இல் என்று நினைவு - இந்தியா டுடே வில் வெளியிட்டபோது மிக கனத்த எதிர்ப்பை / விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது நினைவுக்கு வருகிறது!

    1960-களில் அவர் எழுதிய அரசியல் (உள்ளீட்டுக்) கவிதைகள் அவர் வலையில் உள்ளன - ஆனால் 1975 முதல் 1978 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் அவர் - எதுவும் " இந்திய அரச பயங்கரவாத அங்கதக் கவிதை" எழுதினாரா என்பது காணக் கிடைக்கவில்லை; அப்படி இருப்பது ஒரு கவிஞனின் அக நேர்மைக்குச் சான்றாக அமையும் - அவர் எழுதியிருக்காவிட்டாலும் யாரும் அவரது இலக்கியப் பங்களிப்பை மறுத்துவிடப்போவதில்லை..ஒரு பதிவாக சொல்லத் தோன்றியது.

    1970-கள் வரைக்குமான அவரது அரசியல் உள்ளீட்டுக் கவிதைகள் அனைத்தும் தமிழ் அடையாள/திராவிட பண்பாட்டு அரசியலுக்கு எதிரான பகடிகள், எள்ளல்களே என்பதைப் புரிந்து கொள்வதற்கு 'உரை'கள் எதுவும் தேவையில்லை!


    "நந்தா எந்தன் நிலா' என்றொரு எஸ்பிபி பாடல் உண்டு; அந்தப் பாட்டின் உள்ளீடாக வரும் உவமைகள் / அலங்காரங்கள் எதுவும் என் கருத்துக்கு ஏற்புடையவை அல்ல (அகத்தியன் செய்த அருந்தமிழ் நீயே) - ஆனால் என்னுடைய மிகப் பிடித்த பத்து பாடல்களில் அதுவும் ஒன்று. கலைக்கும், கவிதைக்கும் உள்ளடக்கத்தை மீறி ஆட்கொள்ளும் தன்மை உண்டு!
    Last edited by geno; 10th February 2013 at 02:28 AM.
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  7. #6
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    ஞானக்கூத்தனின் 'புகழ்' பெற்ற நாய் கவிதை:

    நாய் (1969)

    காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
    எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
    ஆள் நடவாத தெருவில் இரண்டு
    நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
    ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
    அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
    நகர நாய்கள் குரைப்பது கருதிச்
    சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
    நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
    கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
    வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
    சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
    கடைசி நாயை மறித்துக்
    காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?



    இதற்குப் பின்னால் தெரிகிற 'வர்ணக்' கடுப்பு! ..
    Last edited by geno; 10th February 2013 at 01:26 AM.
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  8. #7
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    ஞானக்கூத்தனின் சைவ சமய நக்கலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு! (irir & kalyan எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!)

    விட்டுப்போன நரி (1969)

    குதிரையாகாமல்
    விட்டுப்
    போனதில் ஒருவன் சாமீ
    குதிரையாகாமல்
    விட்டுப்
    போனதில் ஒருவன் சாமீ

    மேற்படிக்
    குரலைக் கேட்டார்
    மாதொரு
    பாகர். குற்றம்
    ஏற்பட
    வியந்தார். தேவி
    ஏளனம்
    செய்தாள் சற்று

    “வாதவூரடிகட்காக
    நரிகளைத் தேர்ந்த போது
    நீதியோ என்னை மட்டும்
    விலக்கிய செய்கை சாமீ!”

    திருவருட்
    திட்டம் பொய்த்த
    தற்கொரு
    ஊளைச் சான்றாம்
    நரி எதிர்
    உதித்துக் கீற்று
    நிலாத் திகழ்
    ஈசர் சொன்னார்:

    நரிகளைப் பரிகளாக்கும்
    திருவிளையாடல் முற்றும்
    விடுபட்ட பேரை நாங்கள்
    கவனிக்க மாட்டோம் போய்வா.



    அடப்பாவி! இந்தாளு உண்மையிலேயே ரங்கராஜ நம்பியின் தொண்டரடிப் பொடியாழ்வார் வம்சமா இருப்பாரோ?!
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  9. #8
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by geno View Post
    ஞானக்கூத்தனின் சைவ சமய நக்கலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு! (irir & kalyan எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!)
    ..
    அடப்பாவி! இந்தாளு உண்மையிலேயே ரங்கராஜ நம்பியின் தொண்டரடிப் பொடியாழ்வார் வம்சமா இருப்பாரோ?!
    மோசுகீரனார் கவிதைக்கு (அந்தத் தலைப்பு 'தோழர்' மோசுகீரனார் ) உங்க ரியாக்*ஷனைப் பார்த்தப்புறம் இதையெல்லாம் in-jest சொல்றீங்களா, இல்லை நிஜமாலும் சொல்றீங்களான்னு தெரியலை.

    It is a fantastic poem. The comic absurdity of the situation, the 'insolence of office' with which God replies, the மாதொருபாகன் is still a man being laughed at by his woman. It takes its own meanings in how one contends with the apparently final denial of prayers (of course, that's just me, each to his own). But merely resisting reducing it to - potshot at Sivan. Really hope that's not how you are really reducing this.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  10. #9
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    மோசுகீரனார் கவிதைக்கு (அந்தத் தலைப்பு 'தோழர்' மோசுகீரனார் ) உங்க ரியாக்*ஷனைப் பார்த்தப்புறம் இதையெல்லாம் in-jest சொல்றீங்களா, இல்லை நிஜமாலும் சொல்றீங்களான்னு தெரியலை.

    It is a fantastic poem. The comic absurdity of the situation, the 'insolence of office' with which God replies, the மாதொருபாகன் is still a man being laughed at by his woman. It takes its own meanings in how one contends with the apparently final denial of prayers (of course, that's just me, each to his own). But merely resisting reducing it to - potshot at Sivan. Really hope that's not how you are really reducing this.
    முதல் விஷயம் - எதிர்வினையாற்றுவதால், ஞானக்கூத்தனை - சோ ராமசாமி, சுப்பு சாமி, ராம கோஆலன், ராதா ராஜன் போன்றோருடன் சேர்த்துவிடப்போவதில்லை. எனக்குத் தெரிந்து - தீவிர திராவிட இயக்கவாதிகளில் பலருக்கு அவரோடு உரையாடல் உண்டு.

    ஆனால் நுட்பமான வேறுபாடுகலை பதிவு செய்வதை நாம் தடுக்க, மறுக்க தேவையில்லை.

    புராணிகம், தொன்மம் ஆகியவற்றின் மீதான எள்ளல் - வெறும் தத்துவ - சித்தாந்த அலவில் எதிர் நோக்கக் கூடியது. தமிழ்த்தேசிய அரசியல் மீதான் பகடி என்அது - ஒரு பக்கச் சார்பு நிலையை எடுத்து விட்டதை அறிவிக்கற அரசியல் நகர்வே. அதில் தவறு ஏதுமில்லை. 50களில், 60களில் நிகழ்ந்த மிகத் தீவிரமான, militant திராவிட தமிழ்தேசிய அடையால அரசியல் பார்ப்பனர்களுக்கு, சித்தாந்தம் கடந்து, ஏற்படுத்தியிருக்கும் வெறுப்பு, அந்த தளத்தில் புரிந்து கொள்ளக் கூடியது.

    உருவ வழிபாடு, சடங்கு மீதான எள்ளல், பொதுமையாக எல்லா சமயங்களுக்கும் உரியதாக உள்ளது; அடையாள அரசியல்வேறு.
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  11. #10
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by geno View Post
    50களில், 60களில் நிகழ்ந்த மிகத் தீவிரமான, militant திராவிட தமிழ்தேசிய அடையால அரசியல் பார்ப்பனர்களுக்கு, சித்தாந்தம் கடந்து, ஏற்படுத்தியிருக்கும் வெறுப்பு, அந்த தளத்தில் புரிந்து கொள்ளக் கூடியது.
    அந்த எதிர்நிலையை 'வெறுப்பு' 'வர்ணக்கடுப்பு' என்று வகைப்படுத்துவதைத் தான் குறுகல் என்கிறேன். அறிவுலக நிராகரிப்பு என்று ஒன்று திராவிட அரசியலுக்கு நிகழ்வே இல்லை, எல்லா எதிர்நிலைகளும் vested interests மட்டுமே என்று நீங்கள் சொல்வதாகப் படுகிறது.

    முன்பே ஒரு விவாதத்தில் சொன்னதுபோல திராவிட அரசியலை 'natural threat'ஆக ஏற்று insecure ஆவது இயல்பானது. அது ஒன்றும் incidental side-effectடும் அல்ல.

    That said, அதன் சமகாலத்திலேயே ஒரு intellectual core அற்ற உணர்ச்சி அறுவடை இயக்கம் என்று அதை விமர்சித்தவர்கள் எல்லாருக்கும் 'வர்ணக்கடுப்பு' என்று வகைப்படுத்தி சிறுமைப்படுத்துவதும் ஒத்துக்கொள்ளத்தக்கது அல்ல. ஆனால் அது தான் அடையாள அரசியலின் signature.

    Note: this is NOT to say there were no vested interests in the criticism of the Dravidian movement. But to classify every criticism as motivated by 'preservation' interests is not only flawed, it is a brazen attempt to besmirch anyone making the criticism and thusly impede it.

    எனக்கென்ன பிரச்சனைன்னா ஞானக்கூத்தனை நிறைய பேர் இப்படி reduce பண்ணிருக்காங்க. அவரை defend பண்றவங்க கூட தங்களோட அரசியல் சட்டகத்துக்குள்ள வச்சே பண்ணிருக்காங்க:

    ஓரு பழைய கணையாழில(ன்னு நினைக்கிறேன்), இவரோட பட்டிப்பூ, விடுமுறை தரும் பூதம் போன்ற anti-work கவிதைகளை யாரோ (ப்ரமிள்?) விமர்சனம் பண்ணதுக்கு ஒரு இடதுசார்புள்ள எழுத்தாளர் டிஃபெண்ட் பண்ணி இந்த தோரணைல ஒண்ணு எழுதியிருந்தார்: "ஞானக்கூத்தனின் கவிதைகள் உழைப்பையே நிராகரிக்கவில்லை. மாறாக இந்த சமுதாய-அரசியல் சூழலில் தன் உழைப்பை தர மறுக்கும் மனநிலையை அவை பிரதிபலிக்கின்றன".

    நான் வெடிச்சு சிரிச்சேன்

    சைவத்தொன்மத்தைப் பகடி செய்யும் போது இயல்பாக தோன்றுவதும், தமிழ்த்தொன்மத்தைத் தொடும்போது touchy ஆகி, agenda-attribute செய்வதும் எங்கிருந்து வருகிறது? தமிழ்மரபுக்கும் 'இவர்களு'க்கும் சம்மந்தமம் இல்லை 'இவர்'கள் ப்ரேமைக்குரிய விஷயங்கள் வேறு, உஷாராக இரு.. என்றெல்லாம் நினைக்கவைக்கும் உங்கள் அரசியல் நிலைப்பாடு. அதைத் தான் சுட்டிக்காட்டினேன்.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Page 1 of 2 12 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •