-
25th July 2014, 03:19 PM
#571
ஊர்கோலம் போகின்ற கிளி கூட்டங்கள் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் இன்று ரவி யின் நினைவு நாள் என்று
ரவிச்சந்திரன் – அற்புதமான ஒரு திரைப்படக் கலைஞன்
ரவிச்சந்திரன் திருச்சியில் பிறந்த ஒரு தமிழர்; ஆனால் அவரது இளமைக் காலம் மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில்தான் கழிந்தது. அவர் 1951ஆம் ஆண்டு தனது சகோதரியின் திருமணத்திற்காக இந்தியா திரும்பினார். அதன்பின் திருச்சியில் பட்டப்படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியில் மேற்கொண்டார்.
1963ல் பிரபல இயக்குநர் ஸ்ரீதரைப் பார்த்தபொழுது அவரது வாழ்க்கையில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டது. 1964ல் தமிழில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான ‘காதலிக்க நேரமில்லை’ வெளிவந்தபொழுது, அதன் நேர்த்தியான கதை அமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் நடிகர்கள் நாகேஷ், பாலையா போன்றோரின் நகைச்சுவை, புதிய பொலிவுடன், துடுக்கான இளைஞனாக கதாநாயகனாக அறிமுகமாகிய ரவிச்சந்திரனை மிகவும் எதிர்பார்ப்புடன் மக்கள் கவனிக்கத் தொடங்கினர்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் தியாகராஜ பாகவதரா, பி.யூ. சின்னப்பாவா? எம்.ஜி. ராமச்சந்திரனா அல்லது சிவாஜி கணேசனா என்ற ரசிகர்களின் போட்டியின் தொடர்ச்சியாக ரவிச்சந்திரனா, ஜெய்சங்கரா என்ற போட்டியும் விவாதமும் ஆரோக்கியமான வளர்ச்சியாக அமைந்தது.
ரவிச்சந்திரன் தனது ஆளுமையால் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களின் பல நுணுக்கங்களையும், பெற்றிருந்தார். நடிப்புடன் நில்லாது தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, பாடல்கள், படத்தொகுப்பு என பல்துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார். பல குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.
ஒருகாலகட்டத்தில் தமிழ்ப்பட வளர்ச்சியில், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினர். அந்த வகையில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற அரவிந்தராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஊமை விழிகள்’ படம் இளந்தலைமுறையை ஒரு உசுப்பு உசுப்பியது. அதில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் உள்ளத்தில் மாறாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.
பிரபல மலையாள நடிகை ஷீலாவைத் திருமணம் செய்த இவர், பின்னர் அவரை விட்டு பிரிந்து, மீண்டும் முதல் மனைவியிடம் தஞ்சம் அடைந்தார்
அண்மையில் இவரது மகனான அம்சவிர்தனை வைத்து ‘மந்திரன்’ என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
நடிகர் ரஜினிகாந் நடித்த ‘அருணாச்சலம்’, கமல்ஹாசனின் ‘பம்மல் கே சம்பந்தம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் அண்மையில் வெளிவந்த ‘ஆடு புலி’ திரைப்படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ்த் திரைப்படத்தில் ஸ்டைல் நடிப்பை புகுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக இவர் விளங்குகிறார்.
(நன்றி - ஆம்பல)
நடிகர் ரவிச்சந்திரன் மரணம்- தினமலர்:-ஜூலை 25,2011,21:06 IST
சென்னை: தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.”காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் டைரக்டர் ஸ்ரீதரால் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டவர் ரவிச்சந்திரன்,71. இதயக்கமலம், குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, மாடி வீட்டு மாப்பிள்ளை, அதே கண்கள், அருணாச்சலம், ரமணா <உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. இதனால், இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில்,”டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.<உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்த நிலையில், அவருக்கு கடந்த 19ம் தேதி இரவு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் இருந்ததால், செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், இரவு 8.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு விமலா என்ற மனைவியும், இரண்டுமகன்களும் உள்ளனர்.
Last edited by gkrishna; 25th July 2014 at 03:33 PM.
gkrishna
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
25th July 2014 03:19 PM
# ADS
Circuit advertisement
-
25th July 2014, 04:17 PM
#572
ரவிச்சந்திரன் நடித்த சில மலையாள படங்கள்
விமோச்சனசமரம் (1971)
அக்னிம்ருகம் (1971)
ஆரோமளுண்ணி (1972)
ஓமனா (1972)
சிஹரங்கள் (1979)
-
26th July 2014, 08:24 PM
#573
Junior Member
Veteran Hubber
ரவிச்சந்திரன் ஜெயலலிதா நடிப்பில் வண்ணமயமான இரண்டு பாடல் காட்சிகள்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd August 2014, 09:20 PM
#574
Junior Member
Veteran Hubber
வெள்ளிவிழா நாயகராக ரவியும் வெள்ளிக்கிழமை கதாநாயகராக ஜெய்யும் வலம்வந்த வசந்தகால நினைவலைகளில் மகிழ்ச்சி பொங்கும் நண்பர்கள் தினத்தை கொண்டாடுவோம்
Last edited by sivajisenthil; 3rd August 2014 at 09:24 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th August 2014, 07:10 PM
#575
Junior Member
Newbie Hubber
-
5th August 2014, 07:18 PM
#576
Junior Member
Newbie Hubber
எதிரிகள் ஜாக்கிரதை படம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் சற்றே வித்தியாசமான நல்ல படம்.மனோகர் ஏறக்குறைய ஹீரோ போல வருவதால் ரவி ரசிகர்களுக்கு ஏமாற்றம்.அதனால் படம் சுமாராக போனது. ஆனாலும் ரவி-விஜி pair அவ்வளவு அழகு.(ரவி பக்கம் நின்றாலே கதாநாயகிகளுக்கு ஒரு ஒளி வந்து விடும்)
நேருக்கு நேர் நின்று ,எனக்கொரு ஆசை இப்போது,நீயாக என்னை தேடி வருகின்ற நேரம்,அஹ்ஹாஹா இன்று தேன் நிலவு,ஜிலுக்கடி ஜிலுக்கடி,அம்மா பக்கம் வந்தா என்று வேதா கிளப்பியிருப்பார்.(videos-Thanks Madhu)
ஜிலுக்கடி ஜிலுக்கடி ஜிகினா பாட்டின் வீடியோ இந்தாங்கோ..
நீயாக எனைத்தேடி வருகின்ற நேரம்
ஆஹாஹா.. இன்று தேனிலவு
Last edited by Gopal.s; 5th August 2014 at 08:19 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2014, 08:15 PM
#577
Junior Member
Newbie Hubber
காதலிக்க நேரமில்லை- 50 ஆவது வருட பூர்த்தி விழா.
காதலிக்க நேரமில்லை வெற்றியில் கோபு -விஸ்வநாதன்-ராமமூர்த்தி-வின்சென்ட்-பாலைய்யா-நாகேஷ்-முத்துராமன் -ஸ்ரீதர்- ஈஸ்ட்மன் கலர் என்று பல அம்சங்கள் இருந்தாலும் ,50 நாள் ஓடி வெற்றி பெற்றிருக்க வேண்டிய படத்தை, 200 நாள் படமாக்கியது ,இந்த எழில் புது முக நாயகனே.
ரவி சந்திரன் நினைவு எழுகிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th August 2014, 09:52 PM
#578
Junior Member
Veteran Hubber
ரவிச்சந்திரனின் நடன அசைவுகளில் ஒரு நளினம் இளமைத்ததும்பலோடு இசையுடன் இசைந்து வெளிப்படும் காதலிக்க நேரமில்லை மட்டுமின்றி இதயக் கமலம், நடிகர்திலகத்துடன் இணைந்த மோட்டார் சுந்தரம்பிள்ளை, நான், அதே கண்கள், மூன்றெழுத்து.....அவரது அலட்டல் இல்லாத நடனதிறமைக்கு கட்டியம்
கூறும் படங்களாக அமைந்து இன்றளவும் மக்களால் ரசிக்கப்படுகின்றனவே!
Last edited by sivajisenthil; 16th August 2014 at 10:07 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th August 2014, 03:18 AM
#579
Junior Member
Newbie Hubber
இன்று மாலை காமராஜர் அரங்கில் காதலிக்க நேரமில்லை படத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது. நமது ஒய் ஜி மகேந்திரா அவர்கள் initiative எடுத்து நடத்தினார். அவருக்கு தமிழ் ஹிந்து நாளேடு கை கொடுக்க சிறப்பான விழாவாக நடந்தது.
சும்மா சொல்லக்கூடாது. YGM அவர்கள் மிகுந்த முயற்சி எடுத்து படத்தில் பங்கு பெற்ற அனைவரையும் வரவழைத்திருந்தார். ரவியின் மனைவி விமலா,காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, விஎஸ் ராகவன், ஜூனியர் பாலையா, ஆனந்த் பாபு, அவரின் மகன் (இப்போது திரையில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்), யேசுதாஸ், ஈஸ்வரி, சிவசிதம்பரம், PBS மகன் பனீந்தர், சித்ராலயா கோபு, CVR, தேவசேனா ஸ்ரீதர் என்று அனைவரையும் மேடையேற்றி கௌரவித்தார். கார்த்திக்கை தொடர்பு கொள்ள முடியவிலையாம், வழக்கம் போல் MSV வரவில்லை. வர வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தும் உடல் நலம் ஒத்துழைக்காத வின்சென்ட், சுசீலாம்மா ஆகியோர் மட்டுமே ஆப்சென்ட்.
இவர்களைப் பாராட்டும் சிறப்பு அழைப்பாளர்களாக சேரன், மனோபாலா, கிரேஸி மோகன், ARS, வித்யாசாகர் என்று ஏராளமான VIPஸ். அங்கேயும் நடிகர் திலகத்தை மறக்காத சேரன் (சிவந்த மண் பற்றி அபப்டி சொன்னார்), கூடுதலாக வித்யாசாகர் பெரிய சிவாஜி ரசிகர் என்பதையும் வெளிப்படுத்தினார். கோபுவின் நகைச்சுவை இழையோடும் fluent நினைவு கூறல் [அவரும் தான் ஒரு முறை நாடகத்தில் நடித்த போது நடிகர் திலகம் நாடகம் பார்க்க வந்திருந்ததையும் மறுநாள் வீட்டிற்கு கூப்பிட்டு பாராட்டியதையும் சொன்னார் (எனக்கு கிடைத்த ஆஸ்கார் பரிசு]. மனோபாலா தான் காதலிக்க நேரமில்லை படத்தின் ரீமேக் உரிமையை ஸ்ரீதரிடம் வாங்கியதையும் பின் அதை பண்ண முடியாது என்று தெரிந்தவுடன் திருப்பிக் கொடுத்ததையும் விவரித்தார். குறிப்பாக பாலையா ரோலிற்குதான் தன்னால் யாரையும் யோசிக்கவே முடியவில்லை என்றார். விஎஸ் ராகவன் நெஞ்சிருக்கும் வரை படபிடிப்பு சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை விவரித்து விட்டு ஸ்ரீதருக்கு சிவாஜி எந்தளவிற்கு மரியாதை கொடுத்தார் என்பதை சொன்னார்.
கடைசி வரை இருந்தது மட்டுமல்லாமல் மேடையேறிய போது பேசியதோடு மட்டுமல்லாமல் என்ன பார்வை உந்தன் பார்வையை ஒரு பிடி பிடித்த தாஸேட்டன் பலத்த கைதட்டல்களை அள்ளிக் கொண்டு போனார். ஈஸ்வரி மேடைக்கு வரும் போது இரண்டு வரியாவது பாடுவார் என எதிர்பார்த்திருக்க அவர் பாடவில்லை. [வாசு உங்கள் நினைவுதான் அப்போதெல்லாம்].
முக்கியமான காட்சிகளையெல்லாம் கிளிப்பிங்க்ஸ் போட்ட YGM, அது மட்டுமல்லாமல் ரீ ரெகார்டிங் பற்றி விவரிக்கவும் செய்தார். அவரின் இசைக்குழு படத்தின் அனைத்து பாடல்களையும் பாட மாடி மேல மாடி வைத்து பாடல் காட்சி மட்டும் ஒரிஜினல் வாய்ஸுடன் கிளிப்பிங் ஆக வந்தது. சிவசிதம்பரம் காதலிக்க நேரமில்லை பாடினார்.
மேடையேறிய அனைவருமே அளவோடு பேசியது மகிழ்ச்சியான விஷயம். வழக்கம் போல் கிரேஸி மோகன் தன trade mark ஸ்டைலில் கலக்கினார். பெருமாள் கோவிலில் சடாரி வைப்பார்கள். சடாரிக்கு மற்றொரு பெயர் சடகோபம். அந்த சடகோபம்தான் இந்த கோப்பு என்றார். அந்த சடாரி சாற்றிக் கொண்டால் நகைச்சுவை எழுத்து தானாக வரும் என்றார். ஆங்கில் கிளாஸிக் படங்களை நினைவு கூற MGM, தமிழ் கிளாஸிக் படங்களை நினைவு கூற YGM என்றார். அவரும் தன பங்கிற்கு நடிகர் திலகம் பற்றி குறிப்பிட்டு விட்டு தான் கல்கியில் கேள்வி பதில் எழுதியபோது வந்த ஒரு கேள்வியைப் பற்றி சொன்னார். அந்த கேள்வியை அனுப்பிய வாசகர் சிவாஜி ஓவர் ஆக்டிங் என என் நண்பன் சொல்லுகிறானே என்று கேட்க அதற்கு கிரேஸி மோகன் இப்படி பதில் சொன்னாராம். உங்கள் நண்பரிடம் கூறுங்கள், சிவாஜிக்கு அப்புறம் ஆக்டிங் ஓவர் என்று.
இறுதியாக நெஞ்சத்தை அள்ளித்தா பாடலை குழுவினர் பாட YGM அருமையாக விஸில் அடிக்க அதன் பிறகு திருமதி தேவசேனா ஸ்ரீதர் மேடையேற்றப்பட்டு படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அவரை கௌரவித்தனர். பிறகு அனைவரும் சேர்ந்து YGM அவர்களை கௌரவித்தனர்.
அருமையான மாலைபொழுது! இனிமையான விழா!
அன்புடன்
கிருஷ்ணாஜி, உங்களை கூட்டி செல்லலாம் என்று அலைபேசியில் விளித்தால் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
YGM நடத்தும் விழா என்று சொல்லும்போது மேடையின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் நமது ராகவேந்தர் சார் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
Courtesy -Murali.(But he has no direct courtesy to post it in the most deserving thread.)
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th August 2014, 09:45 AM
#580
Junior Member
Veteran Hubber
அந்த கேள்வியை அனுப்பிய வாசகர் சிவாஜி ஓவர் ஆக்டிங் என என் நண்பன் சொல்லுகிறானே என்று கேட்க அதற்கு கிரேஸி மோகன் இப்படி பதில் சொன்னாராம். உங்கள் நண்பரிடம் கூறுங்கள், சிவாஜிக்கு அப்புறம் ஆக்டிங் ஓவர் என்று.
சிரிப்பு மூட்டும் கேள்வி சிந்திக்க வைக்கும் பதில்.
Bookmarks