Page 147 of 150 FirstFirst ... 4797137145146147148149 ... LastLast
Results 1,461 to 1,470 of 1500

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6

  1. #1461
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    அன்பான ரசிகர்களுக்கு,
    பாரதிராஜா பற்றி நான் துவக்கிய வாதத்துக்கு நானே முற்றுப்புள்ளி வைக்கிறேன். விவாதம் வேறு திசைக்குப் போகும் முன் இதோடு விட்டுவிடுங்கள் ப்ளீஸ்.

    டியர் பம்மலார்,

    உங்கள் 'கேள்வி பிறந்தது, நல்ல பதில் கிடைத்தது' பகுதியில் கேள்விகள் கேட்டிருக்கும் அன்பர்களின் பெயரகளைப்பார்க்கும்போது, பழைய நினைவுகள் எல்லாம் அலமோதுகின்றன. இணையதளங்கள் இல்லாத அன்றைய காலகட்டங்களில், வாரப்பத்திரிகைகளே கதி என்றிருந்த நாட்களில்.... 'வேலூர் லட்சுமி செங்குட்டுவன், பூதப்பாண்டி ராமலிங்கம், திருவனந்தபுரம் எஸ்.எஸ்.மணி' ஆகியோரின் கேள்விகள் இடம்பெறாத பத்திரிகைகளே இல்லையெனலாம். அதிலும் அண்ணன் எஸ்.எஸ்.மணி அவர்கள் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் நடிகர்திலகத்தைப்ப்ற்றி கேட்கும் கேள்விகளில் ஒரு மறைமுகமான கிண்டல், குசும்பு, நாசூக்கான நையாண்டிகள் இருக்கும். ஆனால் நல்ல மனிதர். அதுபோல பூதப்பாண்டி திரு ராமலிங்கம், பின்னாளில் ஒரு பத்திரிகையாளராக ஆனார். திரை நட்சத்திரங்களை சந்திக்கும் வாய்ப்புக்காகவே பத்திரிகைத்துறையில் நுழைந்ததாக ஒருமுறை சொல்லியிருந்தார். வேலூர் லட்சுமி செங்குட்டுவனின் பெயரை அடிக்கடி குமுதம் வார இதழ்களில் பார்த்திருக்கிறேன்.

    இத்தனை கேள்வி பதில்களையும் சேகரித்து வைத்திருக்கும் உங்களைப்பார்க்க மிகவும் மலைப்பாக இருக்கிறது. உங்களை இன்னொரு கல்கி, இன்னொரு சாண்டில்யன் என்று சொன்னதுபோல இப்போது இன்னொரு 'பிலிம்நியூஸ் ஆனந்தன்' என்றும் சொல்லலாம்.

    டியர் முரளி,
    சிவந்தமண் காட்சிகள் பற்றி இன்னும் நாம் நிறைய பேச வேண்டியிருக்கிறது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1462
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Since new thread starting, oru poll podalama? With the revisit on Sivantha Man, why not have a list of NT's action films? I for one, would love to vote for and discuss Tanggachuranggam (NT: Nan James Bond-am )
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  4. #1463

    Join Date
    Jul 2010
    Location
    Pune
    Posts
    67
    Post Thanks / Like
    Dear Friends & Fans of NT,

    Gud morning to everybody. Im Shivram now based on Pune though born and brought up in chennai. Im 40 years old and an HARDCORE NADIGAR THILAGAM FAN from my childhood days. My first meeting with NT on screen was when my parents took me to Bharata Vilas in Tanjore when I was around 4 or 5years old. From that day onwards i became an avid fan of NT and the devotion had grown thousandfolds till now.

    My first darshan of NT was during a shooting in Mylapore post office for the movie "Anandha Kaneeer" where he took a long walk from the post offfice tll its entrance for a shot. There was no dialogue and only the walk was hot by Director K. Vijayan. Myself and a group of friends cut the class at school and watched the shooting ( I studied in Santhome High School). I carried a photo of NT and got it autographed by him at the shooting spot. I still treasure that photograph having it framed. Noticing our school uniform, NT asked us if we had come with permission of school or otherwise. We said that we cut the class and came to see him.
    He smiled and asked to us leave the place immediately and go back to school and avoid this practise in future. He stressed that studies should be the only priority for students and everything comes next.

    We were overjoyed that day and felt on top of the world having seen & spoken to NT and also got his autograph ( That we were suspended for a day from school for cutting class is a different matter).

    Times rolled by and then i used to frequent his party office (TMM)in South usman road just to have his darshan.

    I am an avid reader of this forum and a fan of writings of Mr.Pammalar, Mr.Ragavendran, Mr.Murali Srinivas and Sharada madam.

    I am happy and proud that we all breathe and live by NT's acting and this forum is a platform for all NT Bhaktargal to share thier views and experiences of our Acting GOD.

    Hope I have not bored you all too much. Hence forth I shall take active participation in this forum.

    regards

    Shivram

  5. #1464
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சகோதரி சாரதா அவர்களின் கருத்துக்கள் முற்றிலும் சரியானவை. நாம் சிவந்த மண் திரைப்படத்தைப் பற்றி இன்னும் விரிவாக அலச வேண்டும்.

    தாங்கள் சொன்னது போல் மேலும் பல சிவாஜி ரசிகர்கள் பத்திரிகைகளிலும் வானொலியிலும் இடம் பெறுவர். திருவல்லிக்கேணி சிவாஜி பாஸ்கர் 60களின் பிற்பகுதி மற்றும் 70களின் முற்பகுதியில் மிகவும் பிரபலமான ரசிகராவார். மற்றும் திருவல்லிக்கேணி சிவாஜி ராஜசேகரும் பின்னர் எழுதுவார். மற்றும் இளம் பிறை பாரூக் உள்ளிட்ட பலர் எழுதியுள்ளனர். சில சமயங்களில் அடியேனுக்கும் அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. குறிப்பாக 1971ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டபோது வானொலியில் இரவு 10.00 மணிக்கு விரும்பிக் கேட்டவை நிகழ்ச்சியில் நானும் என்னைப் போன்ற மற்ற ரசிகர்களும் கேட்டிருந்ததாக அறிவித்து சுமதி என் சுந்தரியில் இடம் பெற்ற கல்யாண சந்தையிலே பாடலை ஒலிபரப்பினார்கள். அவை யாவையும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன.

    அண்மையில் ஒரு பழைய நண்பரைச் சந்தித்தேன். அவர் பாரகன் திரையரங்கில் புதிய பறவை வெளியீடு அன்றே அப்படத்தைப் பார்த்த்வர். கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை இணைய தளங்களில் பார்த்து என்னிடம் தன் மகிச்சியைப் பகிர்ந்து கொண்டார். முன்னமே தெரிந்திருந்தால் தானும் அன்று கலந்து கொண்டிருக்கக் கூடும் என்று கூறினார். இனிமேல் முடிந்த வரை வந்த வாய்ப்பை விடப் போவதில்லை என்றார்.

    இது போல் பல சிவாஜி ரசிகர்கள் தம்முடைய வயது, உடல் நிலை அனைத்தையும் கடந்து நடிகர் திலகத்தின் பால் இன்றும் பாசத்துடன் உள்ளனர்.

    சிவந்த மண் வெளியான அன்றைக்கு சென்னை குளோப் திரையரங்கில், அந்தப் படத்தின் பெயரில் ரசிகர் மன்றம் துவங்கிய சைதை ராம்தாஸ் மற்றும் அவர்களின் மன்ற உறுப்பினர்கள் நடிகர் திலகத்தின் அழகிய சிறு படம் ஒன்றையும் சாக்லேட் ஒன்றையும் அனைவருக்கும் வழங்கினர். குளோப் திரையரங்கே கோலாகலமாக இருந்தது. 22 வாரங்கள் நன்றாக மக்கள் வரவேற்போடு வெற்றி நடை போட்ட படம் மேலும் மூன்று வாரங்கள் தொடர்ந்திருந்தால் வெள்ளி விழா கண்டிருக்கும்.

    இப்படி பல நினைவுகள் அவ்வப்போது நிழலாடிக் கொண்டுள்ளன.

    அன்புடன்

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1465
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சிவராம்,
    முதற்கண் தங்களுக்கு நமது அனாத்து நண்பர்கள் சார்பிலும் அன்பான வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுடைய முதற் பதிவே நடிகர் திலகத்தின் ரசிகர்களுடனான அறிமுகமாக பதிந்துள்ளது மிக்க மகிழ்ச்சி யளிக்கிறது. சிவாஜி ரசிகர் சிவராம் என்று சொல்லும் போதே தமிழின் பெருமை வியக்க வைக்கிறது. அதுவும் தாங்கள் தமிழக முன்னேற்ற முன்னணி அலுவலக்திற்கு வந்துள்ளதை நினைவு கூறும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த அளவிற்கு தங்களுக்குள் நடிகர் திலகம் இடம் பெற்றுள்ளார் என்பதை அறிய முடிகிறது. எனக்கு முந்தைய தலைமுறையினர் அந்தக் காலத்தில் என் தலைமுறையைப் பார்த்து வியந்து பாராட்டுவர், நான் சொல்வது 60களின் மைய கால கட்டத்தில். அதே உணர்வை நான் இப்போது பெறுகிறேன். தங்களைப் போன்ற புதிய தலைமுறை, சொல்லப் போனால் தங்களுக்கும் அடுத்த தலைமுறையினர் இதே ஹப்பில் நடிகர் திலகத்தின் பால் தங்கள் அன்பை வெளிப்படுத்தி தாங்கள் எவ்வாறு சிவாஜி ரசிகர்களானோம் என்பதை எழுதியுள்ளனர், அப்படி புதிய தலைமுறைகளை ஈர்க்கும் வல்லமை நடிகர் திலகத்திற்கு உண்டு.

    அது மட்டுமல்ல பலபுதிய பரிணாமங்களில் நடிகர் திலகத்தின் நடிப்புப் புலமை அலசப் படுவதும் இங்கே சிறப்பாகும். இந்த சமயத்தில் இந்த ஹப்பிற்கும் நமது நன்றிகள் உரித்தாகட்டும்.

    தங்களுடைய பதிவுகளைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். தங்களுடைய அனுபவங்கள், படங்களைப் பற்றிய கருத்துக்கள், பலவற்றையும் நம் அனைவருடனும் பகிரந்து கொள்ளுங்கள்.

    அன்புடன்

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1466
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Welcome, Shivram. That's a nice anecdote. I was touched by NT's concern about children and education. I am three years younger than you and am a latecomer when it comes to NTism (only in 90s I really started appreciating him), looking forward to more anecdotes and posts from you.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  8. #1467
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    சாரதா,

    நீங்கள் குறிப்பிட்ட இரண்டு மூன்று காட்சிகள் - ஒன்று முத்துராமனின் மறைவிற்கு பின் வீட்டிற்கு வந்து பேசும் காட்சி. அந்த காட்சியின் இறுதியில் எனக்கும் அந்த உணர்வுகள் இருக்கின்றன என்று சொல்லும் தந்தையிடம் வலது குதிங்காலை சற்றே உயர்த்தி நெஞ்சு விரித்து வலது கையை ஒரு நாட்டிய முத்திரை போல் இயக்கி "உணர்ச்சிகள் வார்த்தைகளில் அல்ல செயல்களில், செயல்களில் இருக்க வேண்டும் அப்பா" என்று உணர்வுபூர்வமாய் பேசும் நடிகர் திலகம்!

    'கோபால்' கோலோச்சிக் கொண்டிருக்கும் நேரத்தில் 'பாரத்' உள்ளே நுழைந்து பெயர் தட்டிக் கொண்டு போவதற்கு sorry.
    இன்றைக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இருக்கும் உணர்ச்சிமயமான சூழ்நிலையில், சிவந்த மண் திரையங்குகளில் திரையிடப்பட்டால், ரசிகர்களின் அலப்பறையில் மேற்சொன்ன காட்சியில் ஒரு வசனம் கூட கேட்க முடியாது என்பது திண்ணம். (அதற்கென்று தனியாக இன்னொரு நாள் பார்க்க வேண்டியிருக்கும்). அந்த அளவுக்கு இந்தக்காட்சியில் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டலும் விசிலும் பறக்கும். இக்காட்சிக்குத்தேவையான அவரது பாடி லாங்குவேஜ். குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களின்போது....

    "....... அதற்கு உங்கள் ஆட்சி கொடுத்த பரிசு உயிர்ப்பலி, ரத்தம்" இந்த இடத்தில் அவரது கையசைவு.

    "......... திவானைக் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும். அல்லது அந்தப்பதவியையும் அதற்கான உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு" (இந்த இடத்தில் அவர் கையசைவு) "திவானுக்கு எதிராக புரட்சிக்குரல் எழுப்ப வேண்டும்".

    "பாராட்டு... வெறும் வார்த்தையில் இருந்தால் போதாது. செயலிலே காட்ட வேண்டும்" (நீங்கள் சொன்ன அந்த நாட்டிய முத்திரை).

    "ஒரு தேச விரோதிக்கு உங்கள் சட்டம் பாதுகாப்பு தருகிறதென்றால், அந்தச்சட்டத்தை உடைத்தெறியவும் தயங்க மாட்டோம்" (இந்த இடத்தில் கையை உயர்த்தி இரண்டு சொடக்குப்போடுவார்)

    "இல்லையம்மா... நான் இந்த சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்" (இந்தக் கட்டத்தில் அவர் கண்களில் தெரியும் தீர்க்கம்)

    இறுதியாக தியேட்டரையே அதிர வைக்கும் அந்த சல்யூட்.

    ----------------------

    'பாரத்'துக்கும் வசந்தி (என்கிற சித்திரலேகா) வுக்கும். எதிர்பாராவண்னம் திருமணம் நடந்துவிடும் அந்தச்சூழல் மிகவும் சுவையானது. ராணுவத்தின் துரத்தலுக்குத் தப்பி, ஒரு திருமண வீட்டில் தஞ்சம் புக, தேசப்பற்று மிக்க அம்மக்களால் நடிகர்திலகமும் காஞ்சனாவுமே திருமண தம்பதிகளாய் மாற்றப்பட,
    மந்திரம் தெரியாமல் தடுமாறும் ஐயர் நாகேஷ்,
    கண்ணடித்தவாறே டிரம்ப்பட் வாசிக்கும் (இயக்குனர்) விஜயன்,
    ஸ்டைலாக தலையாட்டிக்கொண்டே பேண்ட் டிரம் வாசிக்கும் மாலி,
    என அந்த சூழலே களை கட்டுகிறது.

    ('ஜெனரல் பிரதாப்' ஆக வருபவர், எம்.எஸ்.வி.யின் உதவியாளர் ஹென்றி டேனியலா...?)

    இன்றைக்கு ஐந்து இயக்குனர்களை ஒரு படத்தில் நடிக்க வைத்திருப்பதாக பெருமைப்படும் முன், அன்றைக்கே மூன்று இயக்குனர்களை (ஜாவர் சீதாராமன், விஜயன், தாதாமிராஸி) தனது சிவந்த மண்ணில் நடிக்க வைத்த பெருமை ஸ்ரீதருக்கே. (இயக்குனர்கள் எல்லாம் படங்களில் தலைகாட்டாத காலம் அது).

  9. #1468
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    வாருங்கள் சிவராம்....

    உங்களைப்போன்ற நடிகர்திலகத்தின் அதி தீவிர ரசிகர்களின் வருகையால் இத்திரி பெருமை அடைகிறது. உங்களது முதற்பதிவே முத்தான, சத்தான பதிவாக அமைந்து களையூட்டியுள்ளது. நடிகர்திலகத்தின் நேரடி தரிசனம், அவரிடம் கையெழுத்துப்ப்பெற்றது, அப்போதே உங்கள் தலையெழுத்து நன்றாயிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அட்வைஸ் பண்ணியது என எல்லாமே அற்புதம்.

    உங்களிடம் நிறையப் புதையல்கள் இருப்பது தெரிகிறது. தொடர்ந்து பங்கு பெறுங்கள். உங்கள் திரையரங்க அனுபவங்களை அள்ளித்தெளியுங்கள். அனுபவிக்கக் காத்திருக்கிறோம்.

    ஏழாம் பகுதி துவங்க இருக்கும் இவ்வேளையில் 'நடிகர்திலக ஜோதி'யில் கலந்துகொள்ள வந்திருக்கும் உங்கள் வரவு களையூட்டுகிறது.

    வருக... வரைக.... வாழ்க... வளர்க...

  10. #1469
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    வருக திரு.சிவராம் அவர்களே! த.மு.மு அலுவலகத்திற்கு அடிக்கடி வருகை புரிந்திருப்பதால் அங்கு In-charge ஆக இருந்த என்னை சந்தித்திருக்க வாய்ப்புண்டு. ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு த்ங்களைபோன்ற ரசிக நண்பர்களை சந்திக்க வைத்த இந்தத் திரிக்கும், முன்னெடுத்துச் செல்லும் நண்பர்களுக்கும் எனது நன்றி.

    Touching 100th page in Part-6 - என்னுடைய Active Participation இல்லை என்றாலும் நான் தொடர்ந்து இத்திரியை வாசிப்பவன் என்ற முறையில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #1470

    Join Date
    Jul 2010
    Location
    Pune
    Posts
    67
    Post Thanks / Like
    Dear Mr.Ragavendran/Saradha madam/Groucho

    Many thanks for your welcome note. I would like to start with 2 songs of NT' 175th film "Avanthan Manithan". Wow, what a style and mannerism by NT in this movie!!!. Particularly the Singapore scenes......., I think Singapore had made itself proud by allowing NT to walk on its soil ( particularly the walk with a boquet in hand in the beginning of the song Oonjalukku Poochooti, will put even the dignitaries to shame). before that a 10 minute scene, where NT will chase Manjula in singapore with only the BGM is a class apart. Kudos to Mellisai Ma mannar for the BGM piece. No Music Director (past or present) can ever think of matching this BGM piece for a foreign location.

    Just close your eyes and hear the BGM and you will feel like being in S'pore. Coming to the Song "Engiruntho oru kural vanthathu' NT just bowls us over with his small smiles, looks and mannerism. A typical rich business man with graceness written all over!! When VJ starts the song with a humming, the camera moves with NT's close up from right to left and NT with a curious look and short smile moves his eyes from right to left trying to find out where the humming comes from. God... what an expression and acting......

    This movie is very close to my heart because after seeing this movie in my school days, i dreamt of working abroad, and by God's and NT's grace, I landed up in a Job at Singapore itself and was working there for 5 years (till 2008).

    I am proud and thank god that I was born in NT 's era where i was able to see and enjoy such movies and acting.

    Thanks

    Shivram

  12. Thanks senthilvel thanked for this post

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •