-
28th July 2010, 01:54 AM
#1341
Senior Member
Veteran Hubber
திரு.கார்த்திக் சார்,
ஆடிப் பெருக்கைப் போல துள்ளி வரும் தங்களின் உள்ளப் பாராட்டுக்கு எனது பணிவான நன்றிகள்! தங்களது ஆவலை விரைவில் பூர்த்தி செய்கிறேன்.
டியர் கோல்ட்ஸ்டார், சந்திரசேகரன் சார், செந்தில் சார், குமரேசன்பிரபு சார், ரங்கன் சார்,
பாராட்டுக்கு நன்றி!
டியர் மகேஷ் சார்,
"புதிய பறவை" பற்றி ஆங்கில நாளிதழான டெக்கான் க்ரோனிகிளில் வெளிவந்த செய்தியையும், தினமலர் இணையதள நாளிதழில் வெளிவந்த தகவலையும் பதிவிட்டமைக்கு நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
-
28th July 2010 01:54 AM
# ADS
Circuit advertisement
-
28th July 2010, 02:20 AM
#1342
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது மனம் திறந்த பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
நடிகர்திலகம்.காம் இணையதளத்திற்கு கிடைத்திருக்கும் பாராட்டு குறித்து எல்லையில்லா மகிழ்ச்சி. நமது நடிகர் திலகம் பல படங்களில் ஒன்மேன்ஷோ புரிந்திருக்கிறார். நடிகர்திலகம்.காம் இணையதளமும் ஒரு ஒன்மேன்ஷோ தான். அதாவது, ராகவேந்திரன் என்கின்ற ரசிக திலகத்தின் ஒன்மேன்ஷோ.
நடிகர்திலகம்.காம் மென்மேலும் வளர்ந்து வான்புகழ் அடைய வளமான வாழ்த்துக்கள்!
அன்புடன்,
பம்மலார்.
-
28th July 2010, 07:29 AM
#1343
Senior Member
Seasoned Hubber
Dear Pammalar,
Thank you for your kind words of appreciation. It was possible only because of friends and fans like you. There are many more assignments we have to complete.
Times of India has covered the Pudhiya Paravai success:
http://timesofindia.indiatimes.com/c...ow/6224856.cms
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th July 2010, 08:14 AM
#1344
Senior Member
Devoted Hubber
Raghavendra,
Please accept my delayed congratulation of receiving this year's Sivaji Award. You, along with Girija, totally deserve it. Good luck in managing one and only web site: www.nadigarthilagam.com
Pammalar and others,
Hats off to your energetic coverage of Pudhiya paravai show.
It is sad to note that Murali couldn't attend Sunday festive event. Can someone give a beautiful presentation of the show please? This is taking me back to my viewing of PP during rerelease at Madurai Alankar.
Total collection so far please. Any idea of extending PP to 2nd week?
Regards
NT fan
-
28th July 2010, 12:00 PM
#1345
Senior Member
Regular Hubber
Ilaya thilakam Prabhu on Puthiya paravai's release... as reported by TOI.
"We screened Pudhiya paravai' because of demands form fans to mark his 9th death anniversary on Friday, but now the request for a Sivaji' film mela has come up," said actor Prabhu, son of Sivaji Ganesan. "The state of the prints of all his films need to be examined," he added.
The negatives of Pudhiya paravai' were cleaned up' at a lab, much to the delight of Sivaji's die-hard fans. Made in 1964, the film, has Sivaji playing the role of a man tortured by guilt over his past. "It came as a shock when people called me up for tickets," said Prabhu, in whose family-held theatre, Shanthi, the film could not be released in 1964. "Bollywood film Sangam' was running in the theatre and we had to release it at Paragon theatre, which does not exist anymore," he recollected"
http://timesofindia.indiatimes.com/c...ow/6224856.cms
Few other links...
Dinamalar - website
http://cinema.dinamalar.com/tamil-ne...ning-again.htm
Deccan Chronicle
http://www.deccanchronicle.com/tablo...eatre-271[
Sify
http://sify.com/movies/fullstory.php?id=14951195
Behindwoods.com
http://www.behindwoods.com/tamil-mov...-27-07-10.html
Kolly-theater
http://www.kolly-theater.com/2010/07...luxe.html[
Review by a viewer
http://cinema.theiapolis.com/movie-1...e-1000583.html
-
28th July 2010, 12:20 PM
#1346
Senior Member
Seasoned Hubber
Dear Mahesh,
Thank you for providing links covering the Sunday event.
Here is another video hosted. This is the dance and gala at the entrance before the garland was taken in.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th July 2010, 01:30 PM
#1347
Senior Member
Devoted Hubber
ராகவேந்தர் சார், பம்மலார் சார்
சாந்தி தியேட்டர் நிகழ்வுகளை நேரடியாக பார்த்தது போல் இருந்தது.
நன்றி !!!
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
28th July 2010, 02:00 PM
#1348
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
tacinema
Raghavendra,
Please accept my delayed congratulation of receiving this year's Sivaji Award. You, along with Girija, totally deserve it. Good luck in managing one and only web site:
www.nadigarthilagam.com
NT fan
Dear Sir,
Thank you very much for your kind words. There are many more people like Murali Sir, Pammalar, who should get recognised. Hope it materialises soon.
Dear Radhakrishnan,
Thank you for your kind compliments.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th July 2010, 12:31 AM
#1349
Senthil & tac,
Sorry folks! Couldn't make it for Sunday evening show. But Ragavendar sir and Swami have made it more than enough.
I had gone to the theatre though I didn't go to the movie. It was a fantastic celebration by any yardstick and the two hours I had spent there was joyous. There was so much crowd and we were happy to see many youngsters turning up.
வந்திய தேவன் ஆடிப்பெருக்கு அன்று வீர நாராயண ஏரியை சுற்றி நடைபெறும் காட்சிகளை கண்டு களித்துக் கொண்டு வரும் போது அந்த காட்சிகளை வாசகன் உணர அத்துணை அழகாக விவரித்திருப்பார் கல்கி. அதே போல் நமது சுவாமி அவர்களும் கவிதை கலந்த நடையிலே ஆரம்பித்திருக்கும் அரங்கு நிகழ்வுகளை படிக்க நானும் ஆவலாய் உள்ளேன்.
அன்புடன்
-
29th July 2010, 05:09 AM
#1350
Senior Member
Veteran Hubber
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 2
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]
வெள்ளித்திரை விடிவெள்ளியின் "புதிய பறவை" புதுக்காவியத்தின் ஆறரை மணி ஆட்டம் ஆரம்பிக்கப் போகிறது என அறிந்து அனைவரையும் போல் அடியேனும் அரங்கினுள் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்கு பக்கத்து இருக்கையில் நமது ராகவேந்திரன் சார், தங்கச்சுரங்கம் சிவாஜி போல் துடிப்புடன் இருந்தார். அவர் எப்பொழுதுமே அப்படித்தானே!
'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என டைட்டில் கார்ட் ரீட் செய்ய, ஆர்ப்பரிக்கிறது அரங்கம். அதிலிருந்து, 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்கின்ற நாமகரணம் வரும் வரை ஒரே கரவொலி, விசிலொலி மயம்! பெயர்ப்பலகை திகிலோடு முடிவடைந்து திரைப்படம் மென்மையுடன் மொட்டு விடுகிறது. சிங்காரச் சென்னையை நோக்கி சிருங்காரப் பயணிகள் கப்பல், பொற்றாமரைக்குளத்தில் மிதந்து வரும் கோயில் தெப்பம் போல், ஆழ்கடலில் அழகுற மிதந்து அக்கரைச்சீமையிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கப்பலில் பயணம் செய்யும் கோபால்(நடிகர் திலகம்), பைனாகுலர் மூலம் ஃபைனான காட்சிகளை ரசித்த வண்ணம் அதே தளத்தில் சற்று தள்ளி 'டைம்' மேகஸின் படித்துக் கொண்டிருக்கும் சகபயணி லதாவின்(சரோஜாதேவி) காலை தெரியாமல் இடற, இருவரும் தங்களை பரஸ்பரம் தெரிந்து கொள்கிறார்கள். கோபால் பைனாகுலர் மூலம் உலகத்தைக் காண, கோபாலின் கோபியர்களோ (நடிப்புக்கடவுளின் பக்தர்கள்) இங்கே அவரையே உலகமாகக் காண்கிறார்கள். அகன்ற திரையில் நடிகர் திலத்தின் நல்லுருவம் தெரிந்தவுடன் ஆர்ப்பரிக்கும் அடலேறுவாகிறது அரங்கம்.
அடுத்து டைனிங் ஹால் காட்சி. நடிகர் திலகம், சரோஜாதேவி, விகேஆர். தனது மகளிடம் விகேஆர் 'இது இடம்' என்று அமர வேண்டிய இருக்கையையும், 'இது தமிழ்' என்று தமிழர் திலகத்தையும் காட்ட, 'தமிழே தலைவர் தான்' என்கின்ற கோஷம் கேட்கிறது. தனக்கு பிடித்தமான பலகாரம் பால்பேணி எனக் கூறிவிட்டு, சரோஜாதேவியின் ரசனையை வியக்கும் நடிகர் திலகம், அதற்குப்பின் மொழியும் வசனங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. "வாழ்க்கையில ரசனை ரொம்ப முக்கியம். ரசிக்கத் தெரிஞ்சவங்க தான் உலகத்தினுடைய அழக பூரணமா அனுபவிக்க முடியும். நல்லா இருக்குன்னு சொல்றோம் பாருங்க, அந்த வார்த்தையே ரசனையிலேர்ந்து தான் உற்பத்தியாகுது." எவ்வளவு ரசித்து நடிக்கிறார். இதை ரசித்த விகேஆர், "வயசு இளமையாயிருந்தாலும் வார்த்தை முதுமையாயிருக்கு" என சிலாகிக்கிறார். உண்மை. அதை இவ்விதமும் கூறலாம். இளம் வயதிலே நடிப்பில் முதிர்ச்சி முத்திரை பதிப்பவர் நடிகர் திலகம் என்று.
விகேஆர் வினாக்களை விட அதற்கு விடைகளை அளிக்கிறார் நடிகர் திலகம். தனது பெயர் கோபால் என்றும், சொந்த ஊர் ஊட்டி என்றும், வியாபார விஷயமாக சிறுபிராயத்திலிருந்தே சிங்கப்பூரில் இருப்பதாகவும், தற்பொழுது தாயகம் திரும்புவதாகவும் கூறுகிறார். விகேஆரும் தன் பங்குக்கு தனது ஊர் ஊட்டிக்கு அருகாமையில் உள்ள கோயமுத்தூர் என்றும், தனது மகள் அக்கரைச்சீமைக்கு சுற்றுலா செல்ல விரும்பியதால் சிங்கப்பூர், மலேயா போன்ற நாடுகளுக்கு சென்று விட்டு மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். அதே சமயத்தில், லதா கோபாலிடம், தனது உள்ளம் அவரோடு நெருங்கி விட்டதையும் சூசகமாகத் தெரிவித்து, ஊரும் நெருங்கி விட்டது என்கிறார். பால்பேணி வருகிறது. நாம் எல்லோரும் தான் பலகாரம் சாப்பிடுகிறோம். ஆனால் இங்கே நடிகர் திலகம் பால்பேணி சாப்பிடுகிறார் பாருங்கள். எத்தனை அழகு! எத்தனை நேர்த்தி! பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய நடிப்புப்பெட்டகம் அவர். கப்பல் கேப்டன் வருகிறார். வெள்ளைக்காரரான அவர், தனது அளகு தமிளில் வெளுத்து வாங்குகிறார். (இன்றைய காலகட்டத்தில் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும், வானொலியிலும், இன்னும் பற்பல விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பல பீடைகள் மொழிக்கொலையை துணிந்து செய்யும் போது வெள்ளைக்கார கேப்டன் தமிழ் பேசுவதை, தமிழ் பேச முயற்சிப்பதை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.). நாளை கப்பல் சென்னைத் துறைமுகத்தை அடைவதாகவும், அதனால் இன்றிரவு கப்பலில் கேப்டன்ஸ் நைட் ஃப்ங்ஷன் வைத்திருப்பதாகவும், அதில் ஆட்டம், பாட்டம் எல்லாம் உண்டு என்று கூறும் கேப்டன், "ஆல் கலந்துக்கணும்" என அன்புக் கட்டளையிடுகிறார்.
அடுத்த காட்சியாக கேப்டன்ஸ் நைட் ஆரம்பமாகிறது. பக்தர்கள் இங்கே அந்த அற்புத இசைக்கு ஆடியபடியே திரையை நோக்கி நெருங்குகின்றனர். மெல்லிசை மன்னர்கள் மேற்கத்திய இசையிலும் மன்னர்கள். கேப்டனும், மற்றவர்களும் பாடிக் கொண்டே ஆடும் அந்த இசைக்கு நமது கால்களும் நம்மை அறியாமல் தாளம் போடுகின்றன. பக்தர்களைப் பற்றி சொல்லவா வேண்டும். கேப்டன் எவராவது பாட வேண்டும் என வேண்டுகோள் விடுக்க, எவரும் பாட முன்வராததால், தானே ஒரு அளகான தமில் பாட்டு பாடப் போவதாகக் கேப்டன் கூற, விகேஆர் உடனே "தமிழைக் காப்பாற்றுங்கள் கோபால்" என அறைகூவல் விட, கலைத்துறை என்னும் கடலில் தமிழைத் தன்னிகரற்ற முறையில் காப்பாற்றிய நடிகர் திலகம், ஆழிப்பெருங்கடலில் அசையும் இந்த அழகிய கப்பலிலும் தாய்மொழியைக் காப்பாற்ற தயார் ஆகிறார். திரைக்கு அருகே உள்ள மேடையிலும் வரிசையாக அகல் விளக்குகளைப் போல சூடங்களை வைத்து அக்னி பகவானுக்கு ஆக்யஞை(கட்டளை) கொடுக்க ஆயத்தமாகிறார்கள் பக்தர்கள். விகேஆரின்(இராமதுரை) மகள் லதா ஒரு அழகான தமிழ்ப் பாட்டு பாடுவார் என கோபால் அறிவித்ததுதான் தாமதம், அரை அரங்கமே திரையை நெருங்குகிறது.
கோபாலின் கைகள் கிளாப் அடிக்க, பின்னர் விரல்கள் பியானோவில் விளையாட, பியானோவை எந்த இசைக்கலைஞர் மெல்லிசை மன்னர்களின் குழுவில் வாசித்தாரோ அவர் தோற்றார், நடிகர் திலகம் இங்கே ஜெயித்து விட்டார். எத்தனை தத்ரூபமாக, கம்பீரமாக கைவிரல்களை அசைத்தும், சிரத்தை சற்று உயர்த்தியும், அங்க அசைவுகளைக் கொடுத்தும் தாளக்கட்டோடு வாசிக்கிறார். திரு.ஜோ கூறிய புகழுரை நினைவுக்கு வருகிறது. "இன்னொருத்தன் பொறந்துதான் வரணும்". பியானோ இசைக்கு திரைமேடையில் ஏறிய பக்தர்கள் ஆட, மேடைக்கு அருகே குழுமியிருந்தவர்கள் ஆட, அரங்கத்தில் ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் ஆட, இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து ஆட, ஆக அரங்கமே ஆடுகிறது.
(தொடரும்...)
பக்தியுடன்,
பம்மலார்.
Bookmarks