-
28th March 2010, 03:45 AM
#331
Senior Member
Veteran Hubber
Chevaaliye Sivaji Week at Chennai Mahalakshmi (Latest Update):
http://pammalar.webs.com/apps/photos...lbumid=8540602
Happy Viewing,
Pammalar.
-
28th March 2010 03:45 AM
# ADS
Circuit advertisement
-
28th March 2010, 06:49 AM
#332
Thanks Murali Saar for the update.
-
28th March 2010, 12:25 PM
#333
It's feel like we are back to 70s
-
28th March 2010, 09:36 PM
#334
Senior Member
Devoted Hubber
Sivajiganesan reg
பம்மலார் அவர்களே தங்களின் சிவாஜி இயல் கேள்வித்தாள் நன்றாக இருந்தது. அதை பார்க்கும் போது நடிகர்திலகத்தின் சகோதரர் மறைந்த திரு சண்முகம் அவர்கள் பற்றி தகவல்கள் எதுவும் தங்களிடம் உள்ளதா?
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
28th March 2010, 10:49 PM
#335
Senior Member
Seasoned Hubber
1973 திரும்பியது...
இதைத்தான் மனது சொல்ல நினைக்கிறது
28.03.2010 மாலை சென்னை பட்டாளம் மஹாலக்ஷ்மி திரையரங்கில் எங்கள் தங்க ராஜா படத்துக்கு வருகை புரிந்த என்னைப் போன்ற பழைய ரசிகர்கள் மனதில் ஒரு மனதாக உருவாகிய கருத்து இதுவாகத்தான் இருக்க முடியும்.
ஒரு பத்து நிமிடம் முன்னதாக சென்றிருந்தால் தளபதி ராம்குமார் அவர்கள் பேச்சைக் கேட்டிருக்க முடியும். தாமதமாகி விட்டது. அது ஒரு குறை.
மற்றபடி சுமார் 5.30 மணியளவில் அரங்கிற்குச் சென்றபோது அங்கே கூடியிருந்த ரசிகர்களைக் கண்டவுடன் உள்ளத்தில் பொங்கிய உவகைக்கு அளவேது.
வெடிச்சத்தம் ஒரு பக்கம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஒலிபெருக்கியில் கேட்டுக்கோடி, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், மயக்கமெனன என்று தலைவர் பாடல்கள் ....
மற்றொரு பக்கம் தலையை நிமிர்த்தினால்...
ஆஹா ...
கண் கொள்ளாக் காட்சி ...
தலைவரின் கட் அவுட்டுகள் ...
ஆளுயரத்திற்கும் அதிக நீளத்தில் மலர் மாலைகள் ...
ரசிகர்களின் பாலாபிஷேகம்....
வேறு சில ரசிகர்கள் சூடம் காட்ட...
இங்கே இன்னொரு பக்கம் ஆட்டம் பாட்டம்...
இன்னொரு பக்கம் தொலைக்காட்சியினரின் படப்பிடிப்பு
இவையனைத்தையும் பார்த்தவாறு பழைய நினைவுகளில் மூழ்கிய பழைய ரசிகர்கள்..
குழந்தைகுட்டிகளுடனும், தாய்மார்களுடனும், குடும்பத்துடனும் படத்தைப் பார்க்க அரங்கினுள் நுழையும் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்...
வேறொரு பக்கம் பார்த்தால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் நின்று நிதானித்து பார்வையிட்டுப் பின் கடந்து செல்லும் காட்சி...
பேருந்துகளில் செல்பவர்கள் வைத்த் கண் வாங்காது பார்த்த காட்சி...
இவ்வளோ வருஷமானாலும் சிவாசிக்கு கூட்டம் பார்த்தியா ... இது ஒரு மூதாட்டி இன்னொரு மூதாட்டியிடம் பகிர்ந்து கொள்ளும் நெகிழ்ச்சி...
...
இத்தருணத்தில் வசந்தகுமார் எம்.எல்.ஏ.அவர்கள் வருகிறார்..
தன்னுடைய வழக்கமான நினைவுகளினூடே அவர் சொன்ன இரு கருத்துக்ககள் பெருத்த கரவொலி...
தலைவரிடம் எதையும் எதிர்பாராமல் தொண்டாற்றிய தொண்டன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ...
அவரிடம் எதையும் எதிர்பாராமல் தொண்டாற்றும் தொண்டர்க்ள் சிவாஜி ரசிகர்கள்...
இந்த வரிகள் பலத்த் கரகோஷத்தைப் பெற்றன எனச் சொல்ல்வும் வேண்டுமோ..
இவையனைத்தும் அரங்கிற்கு வெளியே ...
இனி உள்ளே...
பெரும்பாலானோர் தாமதமாக உள்ளே வந்தாலும் ... ஒன்றும் நஷ்டமில்லை...
அனைவரும் நடிகர் திலகத்தின் முதல் தோற்றத்தைக் காண ஆவலோடு காத்திருந்தனர்...
அவர் வந்தார்...
கரகோஷம்...
மீண்டும் மற்றொரு முறை..
இம்முறை பட்டாக்கத்தி பைரவன் வருகை...
அரங்கம் அதிர்ந்து குலுங்கியது...
இவை யெல்லாம் சாதாரண வர்ணனைகள்...
ஆனால் இன்றைய அளப்பறையோ...
வர்ணிப்பில் அடங்காது...
1973 ஜூலை 14 அன்று சாநதி திரையரங்கில் கண்ட காட்சிகள் மீண்டும் கண்ணெதிரே மலரும் என
நாங்கள் ஆசைப்பட்டது நடந்தேறியது...
இப்படிக் கூட்டம் வரும் போது எதற்கு புதிய படங்களைப் போட்டு ரிஸ்க் எடுக்க்ணும்...
இது தான் திரையரங்கு உரிமையாளர்க்ளின் மனதில் தோன்றியிருக்கக் கூடிய எண்ணம்...
மொத்தத்தில்...
1973 திரும்பியது...
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th March 2010, 11:45 PM
#336
இங்கே சங்கரா தற்செயலாக சொன்னாரா இல்லை சுவாமி இங்கே கொண்டு வந்து குவித்திருக்கும் புகைப் படங்களைப் பார்த்து விட்டு சொன்னாரா என்று தெரியவில்லை, 1973 ஜூலை 14 சனிக்கிழமை காலை 10.30 மணி மதுரை நியூசினிமாவில் நடந்த ஓபனிங் ஷோ மீண்டும் ஒரு முறை கால இயந்திரத்தின் மூலமாக 2010 ஆண்டில் மகாலட்சுமி திரையரங்கில் மீண்டு வந்ததோ என்று வலுவான ஒரு எண்ணம்.
அண்மைக் காலத்தில் அந்த அரங்கிற்கு வெளியே இவ்வளவு கோலாகல கொண்டாட்டங்கள் நடந்திருக்காது என்பது உறுதி. இங்கே சுவாமி அவர்கள் எடுத்த புகைப்படத்தில் அவன்தான் மனிதன் அதன் அருகில் திருவிளையாடல் படங்களின் ஸ்டில்-கள் அடங்கிய நீண்ட வடிவிலான போஸ்டர்களை அனைவரும் பார்த்திருக்க கூடும். இன்று அந்த போஸ்டர்களே தெரியாத அளவிற்கு ஏராளமான மாலைகள். எத்தனை விதங்கள் உண்டோ அத்தனை மாலைகளும் அங்கே அணிவிக்கப்பட்டன. பூசணிக்காய் சூட, தீப ஆராதனைகள் நடக்க மலர் மாரி பொழிய வாழ்த்தொலிகள் விண்ணை பிளக்க அந்த சாலையில் பேருந்துகள், வான்கள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் தியேட்டர் வாசலில் நின்று வியப்போடும்
ஆச்சர்யத்துடனும் நகர்ந்தன. எதிர்வரிசையில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் [முன்பு அங்குதான் சரஸ்வதி திரையரங்கம் அமைந்திருந்ததாக சொன்னார்கள்] இருப்பவர்கள் இப்படிப்பட்ட காட்சியை இதற்கு முன் இங்கே பார்த்ததில்லையே என்ற நினைப்போடு பார்க்க, பட்டாசுகள் முழங்கின. இன்னும் சொல்லப் போனால் இன்றைக்கு இருக்கக் கூடிய முன்னணி நடிகர்கள் கூட இந்த காட்களை கண்டிருந்தால் இது போன்ற ஒரு ரசிகர் கூட்டம் நமக்கு இல்லையே என்று நிச்சயமாக ஏங்கியிருப்பார். அந்த இடத்தில் வந்த ஒரு கமண்ட் " ஆஃக்ஷன் ஹீரோக்களுக்கு மாஸ் இருப்பது ஆச்சர்யமில்லை. ஆனால் ஒரு ஆக்டருக்கு இவ்வளவு பெரிய மாஸ் இருப்பது உலகில் இவரை விட்டால் யாருக்கும் இல்லை".
வசந்தகுமார் அவர்கள் வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு. அவர் பேசும் போது நடிகர் திலகத்தின் பல்வேறு பாத்திரப் படைப்புக்களை குறிப்பிட்டார். நடிகர் திலகம், பெருந்தலைவர், காங்கிரஸ் பேரியக்கம் தொடர்புகளை சுட்டிக் காட்டி பேசி விட்டு விரைவில் நடிகர் திலகத்திற்கு சென்னையில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றார். அந்த மணி மண்டப திறப்பு விழா நாளன்று சென்னையே சிவாஜி ரசிகர்களால் நிறைய வேண்டும், நிறையும் என்று சொன்ன வசந்தகுமார் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு உழைத்தவர் நடிகர் திலகம் அதே போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நடிகர் திலகத்தின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவே இன்றும் இருப்பவர் உழைப்பவர் அவரது ரசிகர்கள் என்ற போது ரசிகர்களின் பெரும் ஆரவாரம். பேசி முடித்து விட்டு அவர் கிளம்பினார்.
தியேட்டருக்கு வெளியே நண்பர் மோகனரங்கனை சந்தித்தோம். அவர் மாலையில் ஒரு வேலை இருந்ததால் மதியக் காட்சியே பார்த்து விட்டு வெளியே நின்றிருந்தார். நண்பர் சுவாமி மற்றும் ராகவேந்தர் சாரையும் சந்தித்தோம். படம் போட்டு விட்டார்கள் என்ற செய்தி அறிவிக்கப்பட உள்ளே நுழைந்தோம்.
தியேட்டர் நிகழ்வுகள் நாளை. அதற்கு முன் தியேட்டர் உள்ளே வெளியே நடந்த கொண்டாட்டங்களின் புகைப்பட குவியலோடு சுவாமி இங்கே போஸ்ட் செய்வார். அவர் சொல்வது போல் Happy Viewing.
அன்புடன்
தியேட்டருக்கு வெளியே நடந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் வசந்த் தொலைக்காட்சி நிறுவனத்தினரால் படமாக்கப்பட்டன. எனவே வசந்த் டி.வியில் இது ஒளிப்பரப்பாகும் என தோன்றுகிறது.
-
29th March 2010, 06:34 AM
#337
Senior Member
Diamond Hubber
ஆகா ! சென்னையில் இல்லாமல் போனோமே என மனம் ஏங்குகிறது .
-
29th March 2010, 06:56 AM
#338
Senior Member
Diamond Hubber
Originally Posted by
joe
ஆகா ! சென்னையில் இல்லாமல் போனோமே என மனம் ஏங்குகிறது .
The things I have been missing and still missing.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
29th March 2010, 07:04 AM
#339
Administrator
Platinum Hubber
Rakesh, we need to do something in Malaysia
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
29th March 2010, 07:07 AM
#340
Senior Member
Diamond Hubber
Originally Posted by
NOV
Rakesh, we need to do something in Malaysia
Don't know how, man. You are in the business, if you can pull some string. All I can is pull my muscle
Now, Joe is thinking about doing the same in Singapore.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
Bookmarks