Page 51 of 150 FirstFirst ... 41495051525361101 ... LastLast
Results 501 to 510 of 1500

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6

  1. #501
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    பம்மலார் அவர்களே

    20 படங்களும் அருமை.

    அரங்கில் அமர்ந்திருந்த உணர்வை அளித்தன.


    அழியாது நம் நடிகர்திலகம் புகழ்!

    படங்களுக்கு நன்றி பம்மலாரே!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #502
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar
    மெலொடி கிங் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், முதன்முதலில், நமது நடிகர் திலகத்திற்கு "நான் சொல்லும் ரகசியம்" திரைக்காவியத்தில் பின்னணி பாடினார். "கண்டேனே உன்னைக் கண்ணாலே, காதல் ஜோதியே" எனத் தொடங்கும் இந்த டூயட்
    Thalaivar attagasama shorts-la varuvar
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  4. #503
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    திரு ராகவேந்தர் சார் & திரு பம்மல் சார்,
    தங்கள் வர்னனை மற்றும் புகைப்படங்களால் படத்தை நேரில் பார்த்த உனர்வை ஏற்ப்படுத்தி விட்டீர்கள்.நன்றிகள் பல கோடி.
    "வர்னனை திலகம்" முரளி சார் அவர்களின் பதிவை ஆவலோடு எதிற்பார்த்து காத்துகொன்டிருக்கிறோம்
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  5. #504
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Sunday evening PASA MALAR turned out to be a great show. It was a GRAND GALA EVENT and I CANNOT HAVE ASKED FOR MORE !!! And, watching the film with RASIGA MANIGAL, Murali sir, Raghavendra sir & Pammalar was another reason for me to rejoice.

    The theatre, both outside & inside, bore a festive look and the fans were literally uncontrollable. A few minutes before show time, they burst crackers & broke coconuts on the road. Quite similar to last week, the policemen found it difficult to control the anxious & cheerful crowd.

    After a long time, I was seeing such a lively and blasting audience response inside the theatre. For every song, there was deafening whistle sound, applause and cheers. A part of the crowd went on top of the stage near the screen and started performing “ arathis “ and began to dance and cheer. Particularly, for the famous confrontation scene between NT & Gemini in the factory, the fans went berserk and brought the roof down. For that entire scene, which almost ran for about 5 minutes, I couldn’t hear a single piece of dialogue – such was the response!!! Throughout “ Malarndhum malaradha…”, the fans lit number of candles on the stage in a horizontal row besides doing “ arathis”. It was a very touching moment and I could say that for most part I had a blurred vision as my eyes were moist.

    Gemini and B.S. Gyanam earned the wrath of fans whenever they uttered a word against NT. Pammalar’s comment was, “ In Karnan they used to abuse even Lord Krishna “ .

    It was unbelievable and amazing to see the over whelming response for a black & white movie that was released in the 60’s ( date of release : 27-05-1961). Finally, when people began to leave the cinema hall, I saw a few ladies and even some gents wiping their eyes!!!

    As usual, the die-hard fan, Ms. Girija was present for the occasion.

    By and large, there was a considerable number of family audience including many youngsters. Seeing so many youngsters enjoying the film shattered all my apprehensions and worries about making the present generation aware about the greatness of NT. The needful has been done already.

    YES ! OUR NADIGAR THILAGAM WILL CONTINUE TO LIVE FOREVER IN THE HEARTS OF MILLIONS AND MILLIONS OF FANS AND THERE IS NOT AN IOTA OF DOUBT ABOUT IT.

    THREE CHEERS TO PASA MALAR
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  6. #505
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    தங்களின் தொடர் பாராட்டுகளுக்கு பாசமிகு நன்றிகள் திரு.காவேரிக் கண்ணன்.

    மிக்க நன்றி திரு.செந்தில்.

    ராகவேந்திரன் சாரும், திரு.மோகனும் மீண்டும் அரங்கிற்கே - அந்த பொன் மாலைப் பொழுதிற்கே - அழைத்துச் சென்று விட்டார்கள். அவர்களோடும், முரளி சாரோடும், முரளி சாரின் உறவினரோடும் இக்காவியத்தைக் கண்டு களித்ததே ஒரு இனிய அனுபவம்.

    திரு.டாக்,

    பாராட்டுக்கு நன்றி! தாங்கள் கூறியுள்ள ஒவ்வொரு காட்சியிலும் மற்றும் இன்னும் அநேக காட்சிகளிலும் அரங்கமே ஆர்ப்பரித்து அலறியது, கதறியது. குறிப்பாக பாடல் காட்சிகளுக்கு பக்தர்கள் செய்த ஆரவாரங்களை அளவிடவே முடியாது. "எங்களுக்கும் கால்ம் வரும்" பாடலில் ஆர்ப்பரிக்கும் அடலேறுவாக அலறியது அரங்கம். "நெஞ்சில் ஒரு களங்கமில்லை, சொல்லில் ஒரு பொய்யுமில்லை, வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை" என்ற வரிகளுக்கு எழுந்த ஆர்ப்பரிப்புகளை, ஆரவாரங்களை வார்த்தைகளால் வருணிக்க இயலாது. நேரே பார்த்துத்தான் அனுபவிக்க வேண்டும்.அவ்வளவு அட்டகாசம். அந்த ஒரு பாட்டிற்கே மஹாலட்சுமி தியேட்டரின் கூரை பிய்த்துக் கொண்டது போங்கள்! பாடலின் முடிவில் போலீஸ் அரங்கிற்குள்ளே வந்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். [முரளி சார் சொன்னது போல் வழக்கம் போல் போலீஸ் வந்து விட்டது]. "மக்களை ஏமாற்றாத ஒரே தலைவர், எங்கள் தலைவர் சிவாஜி, அவரது புகழ் வாழ்க!" என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. "பாட்டொன்று கேட்டேன்" பாடலில், பியானோ வாசிக்கும் ஒவ்வொரு அசைவுக்கும், ஸ்டைலுக்கும் அம்சமான அப்ளாஸ்,அபாரமான ஆரவாரம். "மயங்குகிறாள் ஒரு மாது" பாடலுக்கு கேட்கவே வேண்டாம். பலத்த காகோஷம், ஆரவாரம். நடிகர் திலகத்திற்கு நடிப்பில் அடக்கி வாசிக்கத் தெரியாது எனக் கூறும் அறிவிலிகளுக்கு, அவரது பற்பல காவியங்களிலிருந்து எண்ணிலடங்கா காட்சிகளையும், ஏட்டிலடங்கா பாடல்களையும் கோடிட்டுக் காட்ட முடியும். அந்த வகையில் மிக முக்கியமானதொரு உதாரணம், "மயங்குகிறாள் ஒரு மாது" பாடல். எவ்வளவு ஸப்டுலாக செய்திருக்கிறார். ஸப்டில் நடிப்பு பற்றி கூரை மேல் ஏறிக் கூவுவோரெல்லாம் நடிகர் திலகத்திடம் பாடம் படிக்க வேண்டும். திரு.சோ அவர்கள் ஒரு முறையல்ல, ஒவ்வொரு முறையும் கூறுவார், "கேமராவுக்கு முன், சிவாஜி அவர்களுக்கு தெரியாத ஆக்டிங்கே இல்லை" என்று. எவ்வளவு கரெக்டான கணிப்பு. இக்கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. ["மயங்குகிறாள் ஒரு மாது" பாடலின் போது முரளி சார் ஒன்றை நினைவு கூர்ந்தார். ஒரு முறை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் 'சிங்கம் வெட்கப்பட்டு யாரேனும் பார்த்ததுண்டா?! இந்தப் பாடலில் பாருங்கள்' என்று கூறியதை முரளி சார் சரியான தருணத்தில் நினைவில் பதித்தார்]. "மலர்ந்து மலராத" பாடலின் போது பக்தகோடிகள் எமோஷனலாகி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு கதறியதை, அழுததைக் கண்ட அனைவரது கண்களும் குளமாகியது. கிளைமாக்ஸின் போது அரங்கமே அமைதி, பின்னர் கண்ணீர்க்கடலில் மூழ்கியது. நிறைவடைந்து வெளியே வரும் போது, அனைவரும் கண்களில் நீர்த்துளிகளுடன், கனத்த இதயத்துடன் அரங்கை விட்டு வெளியே வந்தனர்.விரைவில் பொன்விழாக் காணப் போகும் இக்காவியத்தின் நாயகனான நமது நடிகர் திலகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியே இதுதானே!!!

    மாலைக் காட்சி தொடங்குவதற்கு முன்னர் அரங்கிற்கு வெளியே நடந்தவற்றையும், காட்சியின் போது அரங்கினுள்ளே நிகழ்ந்தவற்றையும், ஏட்டில் பதிக்க, அருமை நண்பர் வர்ணனை வித்தகர் முரளி சார் அவர்கள் தமது வளமான வர்ணனைகளின் மூலம் தூள் கிளப்ப வருகிறார்.

    ஓவர் டு முரளி சார்!!!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #506
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar
    வர்ணனை வித்தகர் முரளி சார் அவர்கள் தமது வளமான வர்ணனைகளின் மூலம் தூள் கிளப்ப வருகிறார்.
    விரைந்து வருக ! விருந்து தருக!

  8. #507
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    திரு ரங்கன் அவர்களில் வர்ணனை தேன்..

    நம் பம்மலார் வர்ணிப்பு பசும்பால்..

    தேனும்பாலும் அருந்தினால் கண்களில் புன்கணீர் அரும்புமா என்ன?


    அசத்திய ரசிகமணி நெஞ்சங்களுக்கு நன்றி..

    ---------------

    வரும் சித்திரை முதல்நாள் கலைஞர் தொலைக்காட்சியில் பிற்பகல் 2.30 மணிக்கு

    நடிகர்திலகத்தின் '' பணம்'' காட்சியளிக்கிறது.


    இயக்கம் : கலைவாணர்
    திரைக்கதை வசனம் : கலைஞர் மு கருணாநிதி
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  9. #508
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நமது அருமை நண்பர்கள் எல்லோரும் நிகழ்வுகளை அழகாக எடுத்துச் சொல்லி விட்ட பின் தனியாக என்ன எழுதுவது என்று தெரியவில்லை. இருப்பினும் முயற்சிக்கிறேன்.

    சுவாமி அவர்கள் குறிப்பிட்டது போல நமது ரசிகர்களுக்கும் காவல் துறையினருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அது நேற்றும் தொடர்ந்தது. மாலைக் காட்சிக்கு முன்னரே வந்து விட்ட ரசிக உள்ளங்கள் வழக்கம் போல் போஸ்டருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சூடம் காண்பித்து ஒரு பட்டாஸ் வெடித்தவுடன் போலீஸ் வந்து விட்டது. தியேட்டருக்கு அருகாமையில் அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் திரு நிதின் கட்காரி அவர்கள் கொடியேற்ற வந்திருக்கிறார். ஆகவே பாதுகாப்பு காரணம் கருதி இங்கே பட்டாஸ் வெடிக்கக் கூடாது என்று தடுக்க ரசிகர்கள் கொந்தளிப்பானார்கள். சற்று நேரத்தில் பா.ஜ. கட்சியினர் அங்கே வெடி வெடிக்க இங்கே சூடு ஏறியது. உடனே கட்காரி கிளம்பி விட்டார். அவர் கார் அதை தொடர்ந்து பல வாகனங்கள் வந்தன. ரசிகர்கள் இருபுறமும் திரண்டு நிற்க அவர் கடக்கும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நடிகர் திலகம் வாழ்க! சிங்கத் தமிழன் வாழ்க! எங்களின் ஒரே தலைவன் சிவாஜி வாழ்க! என்று பலத்த கோஷம் எழுப்ப கட்காரியோ தன்னை வாழ்த்தித்தான் கோஷம் போடுகிறார்கள் என நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கை அசைத்தவாறே சென்றார். நமது கூட்டத்தின் காரணமாக நின்று நின்று சென்றன வாகனங்கள். பஸ்சிலிருந்த ஒருவர் இது பழைய படம்தானே என்று கேட்க ரசிகர் ஒருவர் எங்களுக்கு என்னிக்கும் இது புது படம்தான் என்று சொன்னார். அதுவரை பொறுமையாக இருந்தவர்கள் ஒரு 10000 வாலா சரத்தை கொளுத்த, அந்த ஏரியாவே சத்தத்தில் சின்னாபின்னமானது. எதிர் அடுக்கு மாடி குடியிருப்புகளின் வசிப்போர் அனைவரும் பால்கனியில் குவிந்து விட்டனர். பட்டாஸ் முடிந்தவுடன் சரமாரியாக கணேசருக்கு தேங்காய் உடைக்கப்பட்டன. குறைந்தது ஒரு 50 காய் உடைத்திருப்பார்கள். தெரு முழுக்க சில்லு தேங்காய். வெளியே ஆரவாரம் தொடர உள்ளே படம் தொடங்க நாங்கள் அரங்கில் நுழைந்தோம். வெளியே எந்த அளவிற்கு அலப்பறை என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். என்னுடைய நண்பர் ஒருவர் [நமது சுவாமி, ஜோ வயதையொத்தவர்] சிவாஜி ரசிகர், தன்னை விட இளையவர்கள் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியில் நடந்த மாலை சார்த்துதல், சூட ஆராதனை, வாண வேடிக்கை போலீஸ் காவல் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு மிரண்டு விட்டார்கள். படம் பார்க்க வந்தவர்கள் பயந்து போய் திரும்பி போய்விட்டார்கள்.அவர்களால் நண்பரும் பார்க்கும் வாய்ப்பை
    துறந்தார்.

    நடிகர் திலகம் அறிமுக காட்சி. ஒரே ஆரவாரம். தங்கைக்கு அடிப்பட்டு விட்டது என்று தெரிந்து மேஸ்திரியிடம் போய்யா என்று சொல்வது, பிறகு கையெழுத்து போட மறைந்து மறைந்து வருவது, முதலாளியிடம் போய் பேசும் போது ஜெமினி சொல்வதை அபப்டியே பார்ப்பது இவை எல்லாவற்றிற்கும் கைதட்டல் இருந்துக் கொண்டே இருந்தது. ராகவேந்தர் சார் சொன்னது போல் சும்மா கத்தும் கூட்டம் இல்லை ரசனையுள்ள கூட்டம் என்பதற்கு சாட்சி உடனே கிடைத்தது. வெளியே வரும்போது நடிகர் திலகம் தலையை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஆட்டிக் கொண்டே வருவார். அதற்க்கெல்லாம் அப்படி ஒரு கைதட்டல். நீ முதலாளி கிட்டே பேசினது இது இல்லை ஆனா என் தங்கச்சியை காப்பாத்தினேன் சொன்ன பாரு அதுதான் இது என்ற வசனத்திற்கு எல்லாம் பெரிய ஆரவாரம்.

    அடுத்து ஜெமினி வீடு தேடி வரும் சீன். ஆனந்தா அது சிரிச்சா நான் சிரிப்பேன். அது அழுதா ஐயையோ என்னாலே தாங்கவே முடியாது என்ற வசனத்திற்கும், இந்த உலகம் என்னை பத்தி கவலைப்படுதோ என்ற வசனத்திற்கும் சுயநலத்திலிருந்துதான் பொது நலமே பிறக்குது என்ற வசனத்திற்கு எல்லாம் ஒரே கைதட்டல்.

    வந்தது மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் பாடல். அதிர ஆரம்பித்தது அரங்கு. ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட, திரையின் முன்னால் ரசிகர்கள் கூட, ஆரவாரம் ஆரம்பமானது.எவ்வளவு ரசனையான ரசிகர்கள் என்பதற்கு மீண்டும் ஒரு குறிப்பு. முதல் சரணத்தில் மாவிலை தோரணம் ஆடிட கண்டாள் என்ற வரிகளுக்கு வலது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவார், அதிர்ந்தது அரங்கு. அது போல் இரண்டாவது சரணத்தில் தங்கைக்கு கற்பனை கல்யாணம் முடிந்தவுடன் காலில் விழும் தங்கையை தூக்கி ஒரு கையால் அணிந்திருக்கும் கண்ணாடியை சற்றே மேலே தூக்கி கண்ணீர் துடைப்பார். இங்கே எழுந்தது கூட்டம். அது போல் மருமகள் கண்ணில் அன்பு மாமன் தெய்வம் கண்டான் என்ற போதும் கைதட்டல் பறந்தது.

    பிறகு ஸ்ட்ரைக் காட்சி. வந்து தங்கையிடம் புலம்புவார். தங்கை இவர் கலந்து கொள்ளாவிட்டாலும் வேலை போயிருக்கும் என்பதை விளக்கியவுடன் வரும் முகபாவம், ஆயிரம் ரூபாய் என்று கேட்டவுடன் வரும் அதிர்ச்சி + ஆனந்தம் இவை எல்லாம் அடுத்து வரும் திருவிழாவிற்கு கட்டியம் கூறுவது போல் அமைந்திருந்தது.

    சுவாமி சொன்னது போல் எங்களுக்கும் காலம் வரும் ஆரம்பமே அமர்க்களம். சின்னதாய் ஒரு சுற்று சுற்றி பாட தொடங்குவார். அப்போது ஆரம்பித்த ரகளை கூடி கூடி போனது. மேடையில் ஏறவிடாமல் தடுப்பதற்கே இரண்டு மூன்று பேர் வேண்டியிருந்தது. இதற்கிடையில் தீபம் வேறு. மேலே பால்கனியில் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவர் சூடத்தை கொளுத்தி [கையில்?] சுத்த, அவர் கையைப் பற்றியும், எரியும் சூடம் கிழே விழுந்தால் என்ன ஆவது என்ற பயமும் வந்தன. ஆனால் அவர் லாவகமாக அதை சுற்றி கிழே கைப்பிடி சுவரில் வைத்து அணைத்தார். பாடல் ஓட ஓட அதிகமாகி போன டெசிபல் லெவல் சுவாமி சொன்னது போல் நெஞ்சில் ஒரு களங்கமில்லை வரியில் ஆரம்பித்து வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை என்ற உச்சக்கட்ட வரிகளுக்கு டி.எம்.எஸ்-ன் குரலையும் தாண்டிய அலப்பறை- தெருவிற்கே கேட்டிருக்கும். எங்கள் தங்க ராஜாவை விட ஆர்ப்பாட்டம் அதிகம் என்று புரிந்தவுடன் போலீஸ் உள்ளே நுழைய,ரசிகர்கள் மேலும் ஆவேசமானார்கள். மன்றத்தினரும் மற்ற சிலரும் சேர்ந்து சமாதானப்படுத்த சிறிது அமைதி திரும்பியது.

    அன்புடன்

    (தொடரும்)

    tac,

    நீங்கள் எழுதியது சென்னை ரசிகர்களை உசுப்பி விட்டது என்று நினைக்கிறேன். தியேட்டரை ரெண்டு பண்ணி விட்டார்கள்.

    அரங்கிற்கு வெளியில் கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவாஜி மன்றத்திலிருந்து பாசமலர் சாதனைகளை பற்றியும் 1961-ல் நடிகர் திலகத்தின் ஏனைய படங்களை பற்றியும் ஒரு நோட்டீஸ் [சாதனை தகவல் உபயம் நமது சுவாமி] கொடுத்தார்கள். சுவாரசியமானதாக இருந்த அதை பலரும் விரும்பி கேட்டு வாங்கி சென்றார்கள்

  10. #509
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    தேனும் பாலும் என வர்ணனைகளை வருணித்த தங்களது வரிகள், பதிவுகள் ஒவ்வொன்றும் தொடக்கத்திலிருந்தே தெவிட்டாத தெள்ளமுது. மிக்க நன்றி திரு.காவேரிக் கண்ணன்.

    முரளி சார், ஸ்பெஷல் நன்றிகள்! நிஜமாகவே தூள் கிளப்பி விட்டீர்க்ள்.அடுத்த பதிவைக் காண ஆவல் மேலிடுகிறது.

    இன்று (12.4.2010), வாழ்வியல் திலகத்தின் வணங்காமுடி (12.4.1957) திரைக்காவியத்திற்கு 54வது உதய தினம்.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #510
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    ரசிகர்கள் இருபுறமும் திரண்டு நிற்க அவர் கடக்கும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நடிகர் திலகம் வாழ்க! சிங்கத் தமிழன் வாழ்க! எங்களின் ஒரே தலைவன் சிவாஜி வாழ்க! என்று பலத்த கோஷம் எழுப்ப கட்காரியோ தன்னை வாழ்த்தித்தான் கோஷம் போடுகிறார்கள் என நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கை அசைத்தவாறே சென்றார்.

Page 51 of 150 FirstFirst ... 41495051525361101 ... LastLast

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •