டியர் கார்த்திக்,
ஜஸ்டிஸ் கோபிநாத் திரையரங்க வெளியீடு பற்றிய நினைவுகள் பலருக்கு புதிய செய்தியாய் இருக்கக் கூடும். தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
டியர் வாசுதேவன்
வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களின் பேட்டி சுவாரஸ்யமாய் இருந்தது. நடுவில் அவர் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் போது என்ன காரணத்தாலோ பாதியிலேயே வெளியேறியது நெருடலாக இருந்தாலும் பின்னர் வேறொரு கால கட்டத்தில் அதை எண்ணி வருத்தப் பட்டிருக்கிறார். இருந்தாலும் ஒரு நல்ல நடிகை என்பதை மறுக்க முடியாது.
டியர் ராமஜெயம் சார்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
வேறோர் இணைய தளத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பில் உளவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் உள்ள சிறப்புகளை நண்பர் ஒருவர் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார். அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்து அதனை இங்கே தர விரும்புகிறேன்.
மருத்துவப் படிப்பில் .....
மன நோயில் இரண்டு
வகைகள் உண்டு !
அவை : SPHYCHOSIS
AND
NEUROSIS.
இவைகளில் முதலில் எழுதிய வகை
எளிதல் குணப்படுத்துக்கூடியவை!
இரண்டாவது குணப்படுத்த சற்று
கடினம் அல்லது முடியாது !
இதில் முதலில் வரும் SPHYCOSIS
வகையில் வருவதுதான் : DEPRESSION !
இந்த மனத்தளர்ச்சி எளிதில்
குணப்படுத்தக்குடியது !
.....
FAMILY PHYSICIAN
கூட நிறைய பேர்களை குணப்படுத்தி
யிருக்கிறார்கள்!
அடியேனிடம் நிறைய " மனத்தளர்ச்சி" நோயாளிகள்
வருவதுண்டு ! அவர்களை " பேசியே" அதாவது
SPHYCOTHERAPY
யைப் பயன்படுத்தி குணப்படுத்தியும் உள்ளேன் !
.....
NEUROSIS.
...nostalgic thoughts
வகை இந்த இரண்டு பிரிவுகளில் வரவே
இல்லை என்பது உறுதி !
.... " நினைப்பு" !
வியாதி அல்ல !
nostalgic thoughts
க்கும்
DEPRESSION
இதற்குள் என்ன வித்தியாசம் !
இனி சினிமாப் பாடல் !
படம் :
"உயர்ந்த மனிதன் "
பாடல் :
" அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே "
பணக்கார சிவாஜி கணேசன் தன் பள்ளி
மாணவனும் பின் தன் காரோட்டியான
" மேஜர்" சுந்தர்ராஜனின் தோளில் கை
போட்டு , ஒரு சிறிய கைத்தடியுடன்,
கொடைக்கானல் " கால்ப்" மைதானத்தில்
நடமாடிக்கொண்டே பாடியே
தன் பள்ளி - இளமைப்
பருவத்தை அசை போட்டுப் பாடுவது......
nostalgic thoughts தானே !
ஆனால் அதே பாட்டில் , கடைசியில் அவர்
என்ன பாடி வருந்துகிறார்!
" பாசமென்றும் , நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும் ,
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதி எங்கே- அமைதி எங்கே?"
என்று அவர் துயரத்துடன் பாடுவது :
DEPRESSION
அல்லவா !
போதாக்குறைக்கு மெல்லிசை மன்னரின் துயரை சுட்டிக்காட்டும் வயலின் இசை !
அது மட்டுமா !
கடைசியில் பாடும் வரிகளை
பாருங்கள் :
" எண்ணமே சுமைகளாய், இதயமே
பாரமாய்,
தவறுகள் செய்பவன் எவனுமே அழுகிறான் ! "
என்று சொல்லும் இட்த்தில் நடிகர் திலகம்
மரத்தின் அருகே சென்று யாருக்கும் தெரி
யாமல் அழுவதைப் பாருங்கள் !
" உயர்ந்த மனிதன் " அல்லவா! அவர் அழுவதை
யாரேனும் பார்த்துவிட்டால் !
இதுவும்
DEPRESSION தானே கோபால் சார் !
ஆக, ஒரே பாடலில்
nostalgic thoughts உம் DEPRESSION
வருவதும் ஆக இருக்கும் இந்த பாடல்
ஒரு மிக உயர்ந்த பாடல்தானே !
நடிகர் திலகத்தின் படங்கள்
எதெற்கெல்லாம் பயன்படுகிறது
பார்த்தீர்களா !
இனி...
C . M. E . PROGRAMME
( CONTINUENIG MEDICAL EDUCATION PROGRAMME )
கூட அந்த காலத் தமிழ்த் திரைப் படங்களைப்
பயன்படுத்தலாம் போல !
....
Last edited by RAGHAVENDRA; 17th December 2011 at 06:24 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பிற்கும், பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள்.
அரிய பொக்கிஷமான ஜஸ்டிஸ் கோபிநாத் ஆவணங்கள் தங்கள் கைவண்ணத்தில் பதிவானது அருமை. அதற்காக என் அளவிடற்கரிய நன்றிகள்.
வேறோர் இணைய தளத்தில் நண்பர் ஒருவர் வழங்கிய மருத்துவ ரீதியான விளக்கங்களை நம் நடிகர்திலகத்தின் பாடல் மூலம் வழங்கி அனைவரையும் குதூகலிக்கச் செய்தார் என்றால் அதை நமது திரியில் பதிவிட்டு நீங்கள் எங்களைத் திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள். இருவருக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றிகள். நம் நடிகர் திலகம் எங்கெல்லாம் எதெற்கெல்லாம் உதவுகிறார் பாருங்கள்! நல் இதயம் கொண்ட நாயகரல்லவா அவர்!
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு கார்த்திக் சார்,
தங்கள் மகத்தான பாராட்டுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், பம்மலார் சார், முரளி சார் மற்றும் சாரதா மேடம்,
தங்கள் அனைவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள். நேரம் கிடைக்கும் போது முடிந்தால் "கலைநிலவு" ரவிச்சந்திரன் அவர்களுக்கான திரியைப் பார்க்கவும். சிரமத்திற்கு பொறுத்துக் கொள்ளவும. நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
மார்கழி மாத பிறப்பான இன்று [17.12.2011], ஆண்டாள் அருளிய 'திருப்பாவை' பாசுரங்களை, செந்தாமரை(1962) திரைக்காவியப் பாடலின் காணொளி மூலமாக கண்டு, கேட்டு மகிழுங்கள்:
பக்தியுடன்,
பம்மலார்.
pammalar
டியர் வாசுதேவன் சார்,
"நமது திரியும் எங்கள் வாசுதேவனும்" போல் தங்கள் "பாட்டும் பரதமும்" பதிவுகள் பசுமை !
'ஜமீன்தார் சிவலிங்கம்', "ஜஸ்டிஸ் கோபிநாத்" : குறுந்தாடி கம்பேரிஸன் Class !
நமது நடிகர் திலகம் பற்றி 'வெண்ணிற ஆடை' நிர்மலா, 'பிலிம் நியூஸ்' ஆனந்தன் ஆகியோர் கூறிய கருத்துக்கள் அசத்தல் !
தங்களின் பரமானந்தமான பாராட்டுதல்களுக்கு எனது பாசமிகு நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
pammalar
டியர் mr_karthik,
தங்களின் பாங்கான பாராட்டுக்கு எனது ஸ்ட்ராங்கான நன்றிகள் !
"ஜஸ்டிஸ் கோபிநாத்" மலரும் நினைவுகள் மிக அருமை ! 16.12.1978 சனிக்கிழமையன்று காலைப்பொழுதில் 'லிபர்ட்டி' வாயிலில் நடந்த நிகழ்வுகளை தாங்கள் எழுதியிருந்தவிதம் சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் செய்துவிட்டது. அட்டகாசப் பதிவை அளித்த தங்களுக்கும், அதற்கு நல்லதொரு தொடர்ச்சியாக மேலதிக விவரங்களை வழங்கிய வாசு சாருக்கும், தங்களின் இப்பதிவுக்கு வலுவூட்டும் வகையில் விளம்பர ஆவணங்களை அள்ளி அளித்த ராகவேந்திரன் சாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
pammalar
Demi-God's December Delicacies
நீதி
[7.12.1972 - 7.12.2011] : 40வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி(மதுரை) : 7.12.1972
முதல் வெளியீட்டு விளம்பரம் : பிலிமாலயா[பொங்கல் மலர்] : ஜனவரி 1973
பின் அட்டை விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1973
காவிய விளம்பரம்
ரசிகர் மன்ற குறும்பிரசுரம்(Notice)
'சென்னை 'தேவிபாரடைஸ்' அரங்கில் 100 CHF' விளம்பரம்
காவிய விமர்சனம் : குமுதம் :1972
குறிப்பு:
1. சிறந்த வெற்றிக்காவியமான "நீதி" 99 நாட்கள் ஓடிய அரங்குகள்:
அ. சென்னை - தேவிபாரடைஸ்
ஆ. சேலம் - சங்கம்
2. "நீதி", சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் மொத்தம் 107 தொடர் கொட்டகை நிறைந்த காட்சிகள் / Continuous House Full shows(CHF).
3. இக்காவியத்தின் 50வது நாள் மற்றும் இதர சாதனை விளம்பரங்கள் கிடைத்தவுடன் இங்கே இடுகை செய்கிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
pammalar
டியர் பம்மலார் சார்,
நீதி திரைப்பட விளம்பரம், ரசிகர் மன்ற குறும்பிரசுரம் மற்றும் குமுதம் விமர்சனம் அசத்தல்!
தொடரட்டும் தங்கள் திருப்பணி!
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
Bookmarks