-
14th December 2011, 06:37 PM
#1481
Senior Member
Veteran Hubber
அன்புள்ள முரளி சார்,
'மனிதரில் மாணிக்கம்' பட்த்தைப்பற்றி எழுதத்துவங்கி 71 தீபாவளி முதல் 74 தீபாவளி வரையிலான கால கட்டத்தை தீர்க்கமாக அலசிவிட்டீர்கள். மிக அருமையான சுவையான விவரங்கள். மதுரை மாநகர் நிலவரங்களை அப்படியே கண்முன் கொண்டு வருகிறீர்கள்.
(மதுரையின் கடந்த கால நிலவரங்கள் பற்றி நீங்களும், சென்னை நிகழ்வுகள் பற்றி சாரதா, ராகவேந்தர் சார், மற்றும் நான், கடலூர் நிகழ்வுகள் பற்றி வாசுதேவன் சார், செல்லை பற்றி சதீஷ் போன்றோர் எழுதுவது போல மற்ற பெருநகரங்களான திருச்சி, சேலம் நகரங்களில் நடிகர்திலகத்தின் திரைப்பட நிகழ்வுகள் பற்றி அப்பகுதி ரசிகர்கள் எழுதினால் சுவையாக இருக்குமே).
மனிதரில் மாணிக்கம், சிவகாமியின் செல்வன் தலைப்புகளைப்போல, தலைவர்களை நினைவு கூர்ந்த இன்னொரு படத்தலைப்பு 'ரோஜாவின் ராஜா'.
திரைப்பட வரலாற்றை எழுதும்போது, அன்றைய அரசியல் சூழலையும் மறவாமல் சேர்த்து எழுதி சுவையூட்டுவது தங்களுக்கே உரிய ஸ்பெஷாலிட்டி. அதைப்படிக்கும்போது மனம் பின்னோக்கிச்சென்று அந்த காலகட்டத்தில் சஞ்சரிக்கிறது.
எல்லோரும் விடுக்கும் வேண்டுகோள்தான் நானும் உங்களுக்கு வைப்பது. அது 'முன்போல அடிக்கடி வாருங்கள், அள்ளித்தாருங்கள்' என்பதுதான்.
-
14th December 2011 06:37 PM
# ADS
Circuit advertisement
-
14th December 2011, 06:59 PM
#1482
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
அன்னை இல்லத்தில் ரஜினிகாந்த் கலந்துகொண்ட நிக்ழச்சியையும், ரஜினியின் ஆஸ்ரமத்தில் லதா ரஜினி நடத்திய விழாவில் நடிகர்திலகம் கலந்துகொண்ட நிகழச்சியையும் அப்படியே பத்திரிகைகளில் வந்த ஒரிஜினல் வடிவில் பதிப்பித்து அசத்தி விட்டீர்கள். ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்வதிலும் கூட நடிகர்திலகத்தை சம்மந்தப்படுத்தியே பதிவிட்டிருப்பது, எங்கும் எதிலும் நடிகர்திலகத்தையே பார்க்கிறீர்கள் என்பதை இன்னொருமுறை மெய்ப்பிப்பதாக உள்ளது.
'மனிதனும் மிருகமும்' படத்தின் பாட்டுப்புத்தக கவரேஜும் அருமை. அதுபோல அப்படத்தில் இடம்பெற்ற காட்சியின் புகைப்படமும்.
தொடர்ந்து அசத்துங்கள். 'நீதி' திரைக்காவியத்தின் ஆவணப்பொக்கிஷங்களை வரவேற்கக் காத்திருக்கிறோம்.
-
14th December 2011, 11:51 PM
#1483
மனிதரில் மாணிக்கம் பதிவைப் பாராட்டிய சுவாமி, வாசுதேவன், ராதாகிருஷ்ணன் மற்றும் கார்த்திக்கிற்கு மனங்கனிந்த நன்றிகள். கார்த்திக், நீங்கள் குறிப்பிட்டது போல் ரோஜாவின் ராஜாவையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்தப் படம் நினைவில் இருந்த போதும் எழுதும் போது சேர்க்க மறந்து விட்டேன்.
NOV,
Thanks for effecting the breakup in thread without disturbing anything. Like we used to do earlier, can you please give the links for the earlier threads, reviews and other important posts here in the first page so that new entrants can benefit.
Regards
-
15th December 2011, 05:23 AM
#1484
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் பாசமான பாராட்டுக்கு எனது பசுமையான நன்றிகள் !
"மண்ணுக்குள் வைரம்" பதிவு வைரமாய் மின்னுகிறது !
டியர் mr_karthik,
தங்களின் அசத்தல் பாராட்டுக்கு எனது அற்புத நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
15th December 2011, 05:29 AM
#1485
Senior Member
Veteran Hubber
-
15th December 2011, 07:00 AM
#1486
Senior Member
Diamond Hubber
-
15th December 2011, 07:52 AM
#1487
Senior Member
Diamond Hubber
-
15th December 2011, 11:37 AM
#1488
Senior Member
Veteran Hubber
அன்புள்ள் பம்மலார் சார்,
எல்லோருக்கும் பிடித்த 'பாட்டும் பரதமும்' திரை ஓவியத்தின் ஆவணப்பொக்கிஷப்பதிவுகள் மிக மிக அருமை. ஆவணங்கள் ஒவ்வொன்றும் கடந்தகால நினைவுகளை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகின்றன. எத்தகைய அற்புதமான நடிப்பு. இப்படத்தின் 50-வது நாள் விளம்பர ஏடு கிடைத்தால் தவறாது பதிவிடுங்கள். அதில் தமிழகத்தில் 50 நாட்கள் ஓடிய அனைத்து அரங்குகளும் இடம்பெற்றிருந்ததாக நினைவு. இந்த அருமையான படத்துக்கு, அன்றைய அரசியல் சூழலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஏற்கெனவே முரளி சார், ராகவேந்தர் சார், சாரதா ஆகியோர் விரிவாக அலசியது நினைவில் தங்கியுள்ளது.
அன்புள்ள வாசுதேவன் சார்,
'பாட்டும் பரதமும்' படத்தின் ஸ்டில்களும், பாடல்களின் வீடியோ இணைப்புகளும் வழக்கம்போல மிகவும் அற்புதம். நீங்களும் நமது பம்மலாரும் சேர்ந்து 'பாட்டும் பரதமும்' வெளியீட்டு தினத்தை மிக சிறப்பாக நினைவு கூர்ந்துள்ளீர்கள்.
தங்களின் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
-
15th December 2011, 11:39 AM
#1489
Senior Member
Veteran Hubber
'ஜஸ்டிஸ் கோபிநாத்' 34வது உதய தினம்
(16.12.1978 - 16.12.2011)
1878-ம் ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் எட்டு படங்களில் (தமிழ் 7, மலையாளம் 1) சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி என்ற லக்கி காம்பினேஷனில் வெளிவந்தது 'தியாகம்' ஒரு படம் மட்டுமே. ஜெனரல் சக்ரவர்த்தி சாந்தி, மகாராணி, அபிராமியிலும், தச்சோளி அம்பு சாந்தியில் மட்டும் ரிலீஸ் ஆயின. மற்ற படங்கள் மற்ற தியேட்டர்களில் வெளியிடப்பட்டன. பட்டியல் போட்டால் தெளிவாகும். (1977 தீபாவளியன்று வெளியான 'அண்ணன் ஒரு கோயில்' மார்ச் 3 அன்று சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியில் 114 நாட்களைக்கடந்த நிலையில், அதே அரங்குகளில் 'தியாகம்' திரையிடப்பட்டது).
அந்தமான் காதலி - லியோ/மிட்லண்ட், மகாராணி, ராக்ஸி
தியாகம் - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி
என்னைப்போல் ஒருவன் - தேவிபாரடைஸ், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா
புண்ணிய பூமி - சித்ரா, பிராட்வே, உமா
ஜெனரல் சக்ரவர்த்தி - சாந்தி, மகாராணி, அபிராமி
தச்சோளி அம்பு (மலையாளம்) - சாந்தி
பைலட் பிரேம்நாத் - அலங்கார், மகாராணி, ஈகா
ஜஸ்டிஸ் கோபிநாத் - பாரகன், ஸ்ரீகிருஷ்ணா, பால அபிராமி, லிபர்ட்டி
இவற்றில் அந்தமான் காதலி, தியாகம், ஜெனரல் சக்ரவர்த்தி, பைலட் பிரேம்நாத் ஆகிய நான்கும் 100 நாட்களைக்கடந்து ஓடின. என்னைப்போல் ஒருவன் 10 வாரங்களும், மற்றவை 50 நாட்களும் ஓடின. தியாகம் சாந்தியிலும், புவனேஸ்வரியிலும் 104 நாட்களில் மாற்றப்பட, கிரௌனில் தொடர்ந்து ஓடியதும், அங்கே வெள்ளி விழாவைக்கடக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கொண்டு ஒரு வாரம் ஓடிய நிலையில் 111 நாட்களில் வேறு படம் வெளியிடப்பட்டு, ரசிகர்களை ஏமாற்றினர்.
ஆனால், மதுரை சிந்தாமணியில் தியாகம் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளிவிழாப்படமாக அமைந்து ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தது. (முரளி சாருக்கும் மதுரை ரசிகர்களுக்கும் நன்றி). ஜஸ்டிஸுக்கு வருவோம்...
அக்டோபர் 26 அன்று வெளியான பைலட் பிரேம்நாத் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், டிசம்பர் 16 அன்று 'ஜஸ்டிஸ் கோபிநாத்' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. ரிசர்வேஷன் துவங்கும் அன்று காலை பேப்பரைப் பார்க்கும் வரை பாரகன் தவிர மற்ற தியேட்டர்கள் முடிவாகாமலே இருந்தது. காலை தினத்தந்தியைப் பார்த்ததும்தான் சென்னையில் நான்கு தியேட்டர்களில் வெளியாவதாக விளம்பரம் இடப்பட்டிருந்தது. அதில் ஒரு ஆச்சரியம், கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலிருந்த 'லிபர்ட்டி' தியேட்டரும் இடம் பெற்றிருந்ததுதான்.
ஆச்சரியத்துக்குக் காரணம் இருந்தது. லிபர்ட்டி தியேட்டரில் ஆரம்ப காலத்தில் புதுப்படங்கள் வெளியாகியிருக்கும் போலும். ஆனால் பல ஆண்டுகளாக புதுப்படங்கள் எதுவும் திரையிடப்படாமல், பழைய படங்களே திரையிடப்பட்டு வந்தன. அந்த தியேட்டரில் ஜஸ்டிஸ் கோபிநாத் ரிலீஸாகிறதென்பது ரசிகர்களுக்கு அதிசயமாக இருந்தது. (இதற்கு ஒன்றரை ஆண்டுகள் கழித்து அதில் 'ஒருதலை ராகம்' திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடி, லிபர்ட்டி மீண்டும் நட்சத்திர அந்தஸ்தைப்பெற்ற விஷயமும் பின்னர் நடந்தது).
1971-க்கு முன்னர் நடிகர்திலகத்தின் எங்க ஊர் ராஜா, எங்க மாமா, குலமா குணமா போன்ற படங்கள் லிபர்ட்டியில் ரிலீஸாகின. ஆனால் அதன்பின்னர் நான்காவது ஏரியா தியேட்டர் என்றால் கிருஷ்ணவேணி, ராம், கமலா, நூர்ஜகான் என்றுதான் படங்கள் வெளியாயின.
ஜஸ்டிஸுக்குப்பின்னர், நடிகர்திலகத்தின் கவரிமான், நான் வாழ வைப்பேன் படங்களும் லிபர்ட்டியில் ரிலீஸானது
பேப்பர் பார்த்ததும் மண்ணடியிலிருந்த மளிகைக்கடையிலிருந்து தி.நகர் நண்பர் வீரராகவனுக்கு போன் செய்து விவரம் சொல்ல (அப்போது லோக்கல் கால் 15 பைசா) அவனும் விளம்பரத்தைப் பார்த்ததாகவும், முதல்நாள் முதல் காட்சியே பார்ப்பதற்கு லிபர்ட்டிதான் சரியான தியேட்டர், மற்றவைகளில் முதல்நாள் டிக்கட் கிடைக்காது என்று சொல்லி, என்னை கோடம்பாக்கம் வரச்சொல்ல, பீச் ஸ்டேஷனிலிருந்து புறநகர் ரயிலில் கோடம்பாக்கம் விரைந்தேன். சைக்கிளில் வந்த வீரராகவன் ஸ்டேஷனில் காத்திருக்க, இருவரும் லிபர்ட்டிக்கு விரைந்தோம். அப்போதுதான் ருசிகர சம்பவம் நடந்தது.
அந்த நேரத்திலும் (காலை 8 மணிக்கு) தியேட்டர் கேட் முன்னால் சுமாராக கூட்டம் கூடியிருந்தது. கேட்டைப்பிடித்துக்கொண்டு நிற்கும் கூட்டத்தைப்பார்த்த தியேட்டர் சிப்பந்திகள் இருவருக்கு ஆச்சரியம். "எதுக்குய்யா எல்லாரும் வந்திருக்கீங்க?" என்று கேட்க, பலர் கோரஸாக "புதுப்படத்துக்கு டிக்கட் ரிசர்வ் பண்ண வந்திருக்கோம்" என்று சொன்னதும்...
"என்னது? புதுப்படமா? இங்கே புதுப்படமெல்லாம் போடறதில்லைங்க. நீங்க தியேட்டர் தப்பா வந்துட்டீங்க. போங்க... போங்க" என்று விரட்டினர். "இல்லேப்பா, பேப்பர்ல பார்த்துட்டுதாம்பா வந்திருக்கோம்" என்று (சொல்லாதே யாரும் கேட்டால் இடையில் வரும் வசனம் போல) சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. அடுத்து அவர்கள் சொன்னதுதான் இன்னும் வேடிக்கை "அப்படியா? அப்போ பேப்பர்காரங்க தப்பா போட்டிருப்பாங்க" என்று சொன்னார்களே தவிர கேட்டைத் திறக்கவில்லை.
"இது ஏதுடா வம்பா போச்சு, பேசாம வேறு தியேட்டருக்குப்போயிடலாம் போலிருக்கே. போயும் போயும் இந்த தியேட்டரை புக் பண்ணியிருக்காங்க" என்று ரசிகர்கள் முனகியபடி நிற்க (இத்தனைக்கும் நடிகர்திலகமும், ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கும் முதல்படம்), அப்போதுதான் தியேட்டர் மேனேஜர் பைக்கில் வந்தார். அவருக்கு மட்டும் சிறிதாக கேட்டை திறந்து விட்ட சிப்பந்தி, "சார், நம்ம தியேட்டர்ல புதுப்படம் ரிலீஸாகப்போறதாக எல்லோரும் தப்பாக வந்து நிற்கிறாங்க" என்று சொல்ல,
"இல்லேப்பா ஜஸ்டிஸ் கோபிநாத் படம் நம்ம தியேட்டர்லதான் ரிலீஸாகுது. நேத்துராத்திரிதான் நம்ம தியேட்டர் கன்பர்ம் ஆச்சு. அதுனாலதான் இன்னும் போஸ்ட்டர்கள் வரலை. நீ மெயின் கேட்டையும் கவுண்ட்டர் கேட்டையும் திறந்து எல்லாரையும் உள்ள விடு" என்று சொல்லிவிட்டு உள்ளே போக, எல்லோரும் சரியான நகைச்சுவை கிடைத்து போல 'ஓ'வென்று கூச்சலிட்டு சிரித்தனர். தியேட்டர் சிப்பந்திகள் முகத்தில் அசடு வழிந்தது. அவ்வளவு சீக்கிரம் போயும் முதல்நாள் மாலைக்காட்சிக்குத்தான் டிக்கட் கிடைத்தது. மற்ற நண்பர்களுக்கும் சேர்த்து ஆறு டிக்கட்டுகள் வாங்கிக்கொண்டோம். இந்த சம்பவத்தை இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு வரும்.
என்ன காரணமோ தெரியவில்லை. அந்த ஒருமுறை மாலைக்காட்சி பார்த்தபின் ஜஸ்டிஸ் கோபிநாத் படத்தை இன்றுவரை மறுமுறை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்போதே சிலமுறைகள் பார்க்க முயன்றும், வேறு சில தடங்கல்கள் வந்து இடையூறு செய்து பார்க்கமுடியாமல் போனது. வீடியோ கேஸட்டிலும் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. அதனால் படத்தின் கதை சரியாக நினைவில்லை. ஆனால் படம் நன்றாகவே இருந்தது.
நடிகர்திலகத்தின் ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், ரஜினிகாந்த்தின் ஜோடியாக சுமித்ராவும் நடித்திருந்தனர். சி.ஐ.டி.சகுந்தலா ஏதோ கிராமத்துப்பெண் ரோலில் நடித்திருந்ததாக நினைவு. ஜாக்கெட் போடாமல் நடித்திருந்தார். Heron ராமசாமிதான் பிரதான வில்லன் என்று நினைவு. படத்தில் நடிகர்திலகம் மற்றும் ரஜினியை விட தேங்காய் சீனிவாசனுக்கு அதிக சீன்களில் வரும் வாய்ப்பு. அவருக்கு ஒரு பாட்டு கூட இருந்தது. ரஜினிக்கும் சுமித்ராவுக்குமான ஒரு டூயட் பாட்டு வாகினி ஸ்டுடியோ புல்வெளியில் எடுக்கப்பட்டிருந்தது. சுமித்ரா ரோஸ்கலர் பெல்பாட்டமெல்லாம் போட்டுக்கொண்டு வந்து ஒரு வழி பண்ணுவார். அந்தப்பாடலை மட்டும் சில மாதங்களுக்கு முன் பார்த்திருந்ததால் நினைவிருக்கிறது.
இப்போது மீண்டும் 'ஜஸ்டிஸ் கோபிநாத்' முழுப்படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறது.
-
15th December 2011, 11:58 AM
#1490
Administrator
Platinum Hubber
Originally Posted by
Murali Srinivas
Thanks for effecting the breakup in thread without disturbing anything. Like we used to do earlier, can you please give the links for the earlier threads, reviews and other important posts here in the first page so that new entrants can benefit.
Will do Murali, after I have completed moving Parts 7 & 8, with 50 pages of 40 posts each. (System is very slow now). Thanks.
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks