Page 50 of 191 FirstFirst ... 40484950515260100150 ... LastLast
Results 491 to 500 of 1901

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2

  1. #491
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,174
    Post Thanks / Like
    நான் தான் முட்டாளோ
    முதல் ஆளாய் வந்துவிட்டு
    முழிக்கிறேன் நேரம் தவறாமை
    மறந்த விழாக் கூட்டத்தினர் முன்
    முதல் ஆளாய் கண்டிக்கிறேன்
    கண் முன்னே அக்கிரமம் நடக்கையில்
    மௌனமாய் மற்றவர் பார்க்கையில்
    முதல் ஆளாய் கொதிக்கிறேன்
    கலாசாரம் காற்றில் பறக்கையில்
    கைதட்டி பிறர் அதை ரசிக்கையில்
    கேவலமில்லை இந்த மௌடீகம்
    நான் இருப்பேன் நானாகத்தான்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #492
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நானாகத் தானிருந்த கால மெப்போ
    ...நலமாகத் தானிருந்த பொழுது மெப்போ.
    தானாடி என்னுடனே ஓடி யாடி
    ..தயங்காமல் என்மழலைப் பேச்சி லாடி
    ஆணாக எனைவளர்த்த அன்னை கூட
    ..அழ்காக இருந்திருந்த நாட்க்ள் தானா..
    தேனாகப் பலவாறாய்ப் பேசி வானில்
    ..திசைக்கெல்லாம் பறந்திருந்த இளமைப் போதா

    ஊனாசை உயிராசை எல்லாம் கொண்டே
    ..உறங்காமல் ப்லவாறாய்ச் செல்வம் சேர்த்து
    காணாமல் போய்விட்ட வெள்ளை உள்ளம்
    ..கண்களிலே மறுபடியும் தெரியுங் காலம்
    வீணாசை என்றேதான் அறிந்த போதும்
    ...வேடிக்கை தனைக்கூட்டும் விந்தை நெஞ்சால்
    தானாகத் தோன்றிடுமோ என்றே உள்ளே.
    ..தவித்தபடி கேட்கின்றேன் விடைதான் எங்கே...

  4. #493
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,174
    Post Thanks / Like
    எங்கே உளது உணவென்று
    உயிரினங்கள் முகர்ந்துவிடும்
    வண்டறியும் தேன் இருக்கும்
    மலர்களின் இருப்பிடம்
    வீசும் நறுமணத்திலே
    இரவு மலர்களின் வெண்மை
    எளிதாய் கண்டுபிடிக்கவே
    தேனை கொடுப்பதின் விளைவு
    மகரந்த சேர்க்கையல்லவோ
    தானும் பிழைத்துப் பெருகி
    தன் சங்கிலி கண்ணிகளும்
    வலுவாய் நலமாய் தொடர
    அமைந்த அழகிய ஒழுங்கை
    குலைக்கிறான் பாவி மனிதன்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. #494
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மனிதனைக் கட்டுப்படுத்த வேண்டும்..
    என்ற தலைப்பில் பேச வந்தன மிருகங்கள்..
    மனிதன் மிக மோசம்
    என்றது ஆடு
    என்றது மாடு
    என்றது கோழி..
    கடைசியாய் வந்த நாய்
    மனிதன் மிக நல்லவன் எனச் சொல்லி
    வள் எனக் குலைத்துப் பாய
    கலைந்தன கூட்டம்

  6. #495
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,174
    Post Thanks / Like
    கூட்டம் வேண்டுமா கொண்டாடிக் களிக்க
    அணிகலன் அலங்காரமுடன் அளவளாவ
    அறுசுவை விருந்துண்டு மகிழ்ந்திருக்க
    மனம் லேசாகி கவலைகள் மறந்துவிட
    தன்னம்பிக்கையும் தெம்பும் ஊற்றெடுக்க
    போதுமே அழ ஆதரவாய் ஒரு தோள்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  7. #496
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தோள்
    இல்லை தோள்கள்
    கொஞ்சம் தேன் கொஞ்சம் வெண்ணெய்
    இரண்டும் அள்வாய்க் க்ல்ந்த நிறம்...

    நிறைய அழகாயிருந்ததாலோ என்னவோ
    அழகிய திருஷ்டியாய்
    இரண்டு அம்மைத் தழும்புகள்..
    அதுவும் அழகாய்த்
    தெரியும் வ்ண்ணம்
    கையில்லாமல் ரவிக்கோ என்ன பெயரோ
    அதில் வருவாள்
    அக்காவின் நண்பி
    கம்லா நாக்ராஜ்ராவ்...

    வேலை சேர்ந்த புதிது
    அன்னிய தேசம்
    அக்காவின் வீட்டில் ஜாகை..
    பெண்களைப் பார்க்காத கண்கள்...

    இருந்தும்
    வீட்டுக்கு வரும் அவர் மேல்
    சின்னதாய் ஈரவிழிப் பார்வைகள்
    படியும்...

    நல்ல பிள்ளை எனக்
    காட்ட
    ஏன்க்கா ஏன் இது இப்படி வருது
    எனக் கேட்பேன் மதுரை பாஷையில்..

    ஒன்ன யாரு பாக்கச் சொன்னா
    அவ்ளுக்கு ரெண்டு குழந்தை
    இருக்காக்கும்
    படவா ஒழுங்கா இரு
    திட்டிய ப்டியே செல்வாள் அக்கா...

    இருந்தாலும் கைகள்..
    கொழுக் மொழுக்கென
    வ்ரம்பு மீறாமல்
    பார்ப்பதில் கொஞ்சம் மகிழ்ச்சிதான்..

    பழைய உவமையான
    வாழ்க்கைச் சக்கரம் சுழன்று
    எனக்கானவள் வந்த போது
    அவ்ளிடமும் சொல்லிவிட்டேன்...
    எனில்
    நான்
    ப்ளாஸ்டிக் ஃபோல்டர் போல
    தூய்மையானவன் எனத் தெரிவதற்காக..
    (ஏய்..கள்ளா..)

    மறுபடியும் காலம் கடமையைச் செய்ய
    இருபதாவது திருமண ஆண்டு இப்போது...

    முந்தா நாள் வந்தாள் ஒரு பெண்..
    சின்னவள்..முகம் கறுத்திருந்தாலும்
    சிவ்ந்தவள்...

    என் மனைவியின் மாணவி...
    அதே
    கைகளை மறைப்பதை
    மறுதலித்த உடை...
    ஜாடையாய் நோக்குகையில்
    கொஞ்ச்ம்
    தேக்கு மரம் நினைவில் வந்தாலும்...
    அதுவும் அழகு தான்...

    வழக்கம் போல்
    மனைவியிடம்
    பாவ மன்னிப்பா..கண்காட்சிக்கு நன்றி நவிலலா
    எனத்தெரியாமல்
    கொஞ்சம் கடுகு மிளகு உளுத்தம் பருப்பு சேர்த்து
    அப்பாவியாய்
    ஏன் இது இப்படி டிரஸ் பண்ணிக்குது
    எனச் சொன்ன போது
    என்னவள் ஒரே ஒரு பார்வை...

    பின் சொன்னாள்...
    எந்த வயதானாலும்
    ஆண்க்ள் ஆண்க்ள்தான்..
    Last edited by chinnakkannan; 11th January 2012 at 09:10 AM.

  8. #497
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,174
    Post Thanks / Like
    ஆண்கள்தான் இங்கு ஆழ் உறக்கத்தில்
    சுற்றும் பூமியில் எத்தனை சுழற்சிகள்
    ஆயின் இவரோ கிணற்றுத்தவளைகள்
    காண்பது மிடுக்கான மிராசுக் கனவுகள்
    வீசுவது அதே ஆபாச வசவு வார்த்தைகள்
    அரதப்பழசான அந்த ஆணாதிக்க ஆயுதங்கள்
    அவையோ இன்று வெறும் அட்டைக்கத்திகள்
    எப்பவோ தொலைந்தன தொழுவத்து மாடுகள்
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  9. #498
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மாடுகள் தான்
    எனக்குப் புகழைத் தந்தன..

    பேச்சி பேச்சி எனப் பாடியே
    மாடுகளையும்
    மனிதர்களையும்
    மயக்கியது ஒரு காலம்...

    மக்கள்
    என் பாட்டை ரசித்து
    உயரத்தில் வைத்தார்கள்..

    வண்ணமயமான அந்தக் காலத்தில்
    கண்ணைப் பறிக்கும் வண்ணச் சட்டைகள்
    அணிந்து பயமுறுத்தி விட்டேன் போலும்..

    படக்கென
    இறக்கியும் விட்டார்கள்..

    காரணத்தைத் தேடியதில்
    வயது கூடியது தான் மிச்சம்..

    அரசியலில் சேர்ந்தால்
    பிழைக்கலாம் என
    சேர்ந்தேன்..
    பின் தான் புரிந்தது
    கைக்குழந்தையான நான்
    பெரிதெற்கெல்லாம்
    ஆசைப்படக் கூடாதென..

    இப்போது யோசித்தால்
    மெலிதாகத் தெரிகிறது.
    எனக்கு
    திரைப்படத்திலும்
    வாழ்விலும்
    வ்ராது நடிப்பு

  10. #499
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,174
    Post Thanks / Like
    நடிப்பு அத்தனையும் நடிப்பு
    மகனிடம் பசப்புறா மாமியா
    மண்டூகமாய் நம்பும் மனுஷன்
    மாட்டிக்கிட்டு முழிக்கிறா பாவி
    முக்காக் கிழவிக்கு யோகமில்ல
    முடிஞ்சிக்க முடியல முந்தானியில
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #500
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முந்தானியை
    ஒருகை இறுக்கிப் பிடித்திருக்க
    ஒருகை என்னவளைச்
    சுற்றிப்போட்டிருக்க
    ஒரு கால் மட்டும் போட்டு
    கண்ணை இறுக்கி மூடித்
    தூங்கும் மகளைப்பார்த்து
    என்னவளை எழுப்பமுடியாது என்ற
    இயலாமையால் சற்றே கோபம் வந்தாலும்
    மகளின் தலையை வ்ருடி
    அந்தப் பக்கம் படுத்தால்
    பச்ச்சென்று கன்னத்தில் முத்தம்
    குட் நைட் டாடி
    திரும்பிப் பார்த்தால் ஆழ்ந்த உறக்கம்..
    புன்முறுவலுடன் என் குட்டியைப்
    பார்த்தபடியே இருந்ததில்
    போன இடம் தெரியவில்லை என் நித்திரை...
    Last edited by chinnakkannan; 12th January 2012 at 10:05 AM.

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 1486
    Last Post: 23rd December 2010, 03:53 PM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •