Page 167 of 199 FirstFirst ... 67117157165166167168169177 ... LastLast
Results 1,661 to 1,670 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1661
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    டியர் பம்மலார்,
    நான் என்ன சொல்லி விட்டேன் பாடலைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும். பாடலின் துவக்கத்தில் வரும் ஒரு சிறிய அளவிலான இசை அட்டகாசமாக இருக்கும், கடிகாரத்தின் பெண்டுலம் வழியாக அந்தகாலத்தில் அலாரம் போன்று ஒலிக்கும் அந்த ஒலியை பாடலின் சூழலுக்கேற்ப மெல்லிசை மன்னர் கொடுத்திருப்பார். பிரமாதம். அந்த பொம்மை மிகவும் பிரபலம். இந்தப் படம் வந்த காலத்தில் அந்த பொம்மை எங்கு பார்த்தாலும், குறிப்பாக சென்னை கடற்கரையில் விற்றுக் கொண்டிருப்பார்கள். கடை விரித்து அல்ல, ஆனால் சுண்டல் விற்பவர்களைப் போல ஒவ்வொருவரிடமும் கேட்டுச் செல்வார்கள். அப்போது நான் மிகவும் சிறியவன் என்றாலும் அந்த பொம்மை மட்டும் என் நெஞ்சில் அப்படியே நிலைத்து விட்டது.
    அன்புடன்
    டியர் ராகவேந்திரன் சார்,

    அறிந்திராத அரிய தகவல்களைத் தந்தமைக்கு கனிவான நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1662
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by V_S View Post
    Thanks pammalar sir for sharing NT's evergreen classic 'Naan Enna Sollivitten', one of the most lilting duet (eventhough only TMS sir sings) and calms us whenever we hear this song. One of my favorite film too. No words to describe NT's action and his adorable charisma.
    Seeing those old posters always makes me nostalgic and remind of my kid days.

    Nice insights Raghavendra sir about the song and thanks for sharing the Hindu article, very nice read.
    Dear V_S,

    Thanks a lot !

    Warm Wishes & Regards,
    Pammalar.
    pammalar

  4. #1663
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் முரளி சார், நெஞ்சார்ந்த நன்றி !

    டியர் சந்திரசேகரன் சார், மனமார்ந்த நன்றி !

    டியர் பார்த்தசாரதி சார், பாராட்டுக்கு நன்றி ! All the best for a century of centuries & even more !

    Dear Mahesh Sir, Welcome back !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #1664
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் முரளி சார்,
    தங்களுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நனறிகளும். விளக்கு நான் என்றால் ஒளி நடிகர் திலகம் அன்றோ...இதற்கும் அவர் பாடல் வைத்து வி்ட்டாரே... விளக்கே நீ தந்த ஒளி நானே.. விழியே நீ இட்ட திரை நானே....
    டியர் பம்மலார்,
    தாங்கள் கூறுவது போல் அடுத்த முறை நாம் அனைவரும் கூடி - இது வரை வராதவர்களும் வர வேண்டும் - ஒன்றாய் புகைப்படம் எடுத்து இங்கே பதிவிடுவோமே.

    இதோ நான் கூறிய பலே பாண்டியா பொம்மை


    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1665
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Due to unavoidable reasons I could not post my views here for a long period,but never missed out viewing the thread daily.
    As usual the giants murali sir,raghavendar sir,pammal sir,parthi sir,saradha madam and many others are taking this thread to a great height which is unparallalled in this hub .
    thanks pammal sir and raghavendra sir for the photos of TC sunday gala.
    eagerly waiting for murali sir's live relay of sunday's happenings

    thankyou
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  7. #1666
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    சென்ற வாரம் ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இயக்குனர் ஏ.ஜெகன்னாதன் பங்குபெற்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

    (திரு ஏ.ஜெகன்னாதன், இயக்குனர் ப.நீலகண்டனின் உதவி இயக்குனராக இருந்தபோது ஏராளமான எம்.ஜி.ஆர்.படங்களுக்கு பணியாற்றியவர். இதயக்கனி படத்தின் இயக்குனர் மற்றும் பிற்காலத்தில் சத்யா மூவீஸின் ஆஸ்தான இயக்குனர்).

    "நான் சிவாஜி சாரை வைத்து இயக்கிய ஒரே படம் 'வெள்ளை ரோஜா'. அப்படத்தின் தயாரிப்பாளர்களான பிலிம்கோ நிறுவனத்தினர் முதலில் சிவாஜி சாரை புக் பண்ணிவிட்டு என்னிடம் வந்து படத்தை இயக்க வேண்டுமென்று கேட்டார்கள். சிவாஜி சாரை வைத்து இயக்கும் அரிய வாய்ப்பு என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன். அதன்பின்னர் தயாரிப்பாளர்களுக்கு புதிய சந்தேகம் வந்துள்ளது. 'இவர் எம்.ஜி.ஆர்.டைரக்டராச்சே, இவரைப்போட்டால் சிவாஜி ஒப்புக்கொள்வாரா' என்ற ஐயம் ஏற்பட்டதால், பிலிம்கோ உரிமையாளர் காதர் மற்றும் சிலருடன் எனக்குத்தெரியாமல் சிவாஜிசாரைப்போய்ப்பார்த்து, 'வெள்ளை ரோஜா படத்துக்கு டைரக்டராக ஏ.ஜென்னாதனைப் போட்டிருக்கிறோம். நீங்க விரும்பலைன்னா சொல்லுங்க, நீங்க சொல்ற வேற் டைரக்டரைப் போட்டுடலாம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    அதற்கு சிவாஜி சார் சிரித்துக்கொண்டே “அவர் எங்க அண்ணனையே டைரக்ட் பண்ணியவராச்சே. என்னை டைரக்ட் பண்ண மாட்டாரா என்ன?. அதெல்லாம் மாற்ற வேண்டாம். அவரே இருக்கட்டும்” என்று சொல்லியனுப்பி விட்டார். இச்சம்பவம் நடந்தபோது நான் இல்லை. ஆனால் சிவாஜி சார் சொன்ன விஷயம் கேள்விப்பட்டதும் அப்படியே புளகாங்கிதம் அடைந்தேன்.

    படப்பிடிப்பின்போது நான் வைக்கும் சில ஷாட்களை மனதாரப் பாராட்டுவார். போலீஸ் ஆபீஸராக வரும் அவர் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் கட்டத்தில் நான் அவரது கண்ணுக்கு மட்டும் பக்கவாட்டில் குளோஸ்-அப் ஷாட் வைத்ததை பலமாக முதுகில் தட்டிப்பாராட்டினார். அமைதியான பாதிரியாராகவும், ஆக்ரோஷமான போலீஸ் ஆபீஸராகவும் இருவேறுபட்ட நடிப்பை அற்புதமாகத் தந்திருந்தார்.

    சிவாஜி சாரைப்போன்ற அற்புத நடிகர் Never Before and Never After.

    சிவாஜி சாரை வைத்து நான் இயக்கிய 'வெள்ளை ரோஜா' படமும், ரஜினி சாரை வைத்து இயக்கிய 'தங்க மகன்' படமும் ஒரே தீபாவளியன்று வெளிவந்தன. அந்த தீபாவளிக்கு வேறு எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தபோதிலும், இவ்விரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்று முதல் இரண்டு இடங்களைப்பிடித்தன. மீண்டும் அதுபோன்ற ஒரு பொற்காலத்துக்காக காத்திருக்கிறேன்".

    (Thank you A.Jagannathan sir)

  8. #1667
    Senior Member Regular Hubber Mahesh_K's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    186
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn View Post
    சென்ற வாரம் ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இயக்குனர் ஏ.ஜெகன்னாதன் பங்குபெற்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

    (திரு ஏ.ஜெகன்னாதன், இயக்குனர் ப.நீலகண்டனின் உதவி இயக்குனராக இருந்தபோது ஏராளமான எம்.ஜி.ஆர்.படங்களுக்கு பணியாற்றியவர். இதயக்கனி படத்தின் இயக்குனர் மற்றும் பிற்காலத்தில் சத்யா மூவீஸின் ஆஸ்தான இயக்குனர்).

    "நான் சிவாஜி சாரை வைத்து இயக்கிய ஒரே படம் 'வெள்ளை ரோஜா'. அப்படத்தின் தயாரிப்பாளர்களான பிலிம்கோ நிறுவனத்தினர் முதலில் சிவாஜி சாரை புக் பண்ணிவிட்டு என்னிடம் வந்து படத்தை இயக்க வேண்டுமென்று கேட்டார்கள். சிவாஜி சாரை வைத்து இயக்கும் அரிய வாய்ப்பு என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன். அதன்பின்னர் தயாரிப்பாளர்களுக்கு புதிய சந்தேகம் வந்துள்ளது. 'இவர் எம்.ஜி.ஆர்.டைரக்டராச்சே, இவரைப்போட்டால் சிவாஜி ஒப்புக்கொள்வாரா' என்ற ஐயம் ஏற்பட்டதால், பிலிம்கோ உரிமையாளர் காதர் மற்றும் சிலருடன் எனக்குத்தெரியாமல் சிவாஜிசாரைப்போய்ப்பார்த்து, 'வெள்ளை ரோஜா படத்துக்கு டைரக்டராக ஏ.ஜென்னாதனைப் போட்டிருக்கிறோம். நீங்க விரும்பலைன்னா சொல்லுங்க, நீங்க சொல்ற வேற் டைரக்டரைப் போட்டுடலாம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    அதற்கு சிவாஜி சார் சிரித்துக்கொண்டே “அவர் எங்க அண்ணனையே டைரக்ட் பண்ணியவராச்சே. என்னை டைரக்ட் பண்ண மாட்டாரா என்ன?. அதெல்லாம் மாற்ற வேண்டாம். அவரே இருக்கட்டும்” என்று சொல்லியனுப்பி விட்டார். இச்சம்பவம் நடந்தபோது நான் இல்லை. ஆனால் சிவாஜி சார் சொன்ன விஷயம் கேள்விப்பட்டதும் அப்படியே புளகாங்கிதம் அடைந்தேன்.

    படப்பிடிப்பின்போது நான் வைக்கும் சில ஷாட்களை மனதாரப் பாராட்டுவார். போலீஸ் ஆபீஸராக வரும் அவர் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் கட்டத்தில் நான் அவரது கண்ணுக்கு மட்டும் பக்கவாட்டில் குளோஸ்-அப் ஷாட் வைத்ததை பலமாக முதுகில் தட்டிப்பாராட்டினார். அமைதியான பாதிரியாராகவும், ஆக்ரோஷமான போலீஸ் ஆபீஸராகவும் இருவேறுபட்ட நடிப்பை அற்புதமாகத் தந்திருந்தார்.

    சிவாஜி சாரைப்போன்ற அற்புத நடிகர் Never Before and Never After.

    சிவாஜி சாரை வைத்து நான் இயக்கிய 'வெள்ளை ரோஜா' படமும், ரஜினி சாரை வைத்து இயக்கிய 'தங்க மகன்' படமும் ஒரே தீபாவளியன்று வெளிவந்தன. அந்த தீபாவளிக்கு வேறு எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தபோதிலும், இவ்விரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்று முதல் இரண்டு இடங்களைப்பிடித்தன. மீண்டும் அதுபோன்ற ஒரு பொற்காலத்துக்காக காத்திருக்கிறேன்".

    (Thank you A.Jagannathan sir)
    அந்த தீபாவாளிக்கு வந்த படங்களில் முதல் மூன்று இடங்கள் முறையே வெள்ளை ரோஜா , தூங்காதே தம்பி தூங்காதே மற்றும் தங்கைக்கோர் கீதம் படங்களுக்குத்தான்.

    வெள்ளை ரோஜா பேரு வெற்றி பெற்று சென்னை நகரில் மட்டும் 6 திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓடியது.

  9. #1668
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு சகோதரி சாரதா அவர்களின் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சி பற்றிய பதிவு நம்மையெல்லாம் 83ம் ஆண்டிற்கு அழைத்து செல்கிறது. அந்த தீபாவளியன்று வெளியான அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றன என்பது சிறப்பாகும். தீபாவளி என்றதும் நமக்கு முதல் படமான பராசக்தி நினைவுக்கு வராமல் இருக்காது. அந்த பராசக்தி படத்தைப் பற்றி நாளைய 24.04.2011 ஹிந்து நாளிதழில் வெளிவர உள்ள கட்டுரையினை இச்சுட்டியில் காணலாம்.
    ராண்டார் கய் எழுதிய பராசக்தி கட்டுரை

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1669
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் - 6

    இந்த நாடு நன்றாய் இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்கிற எண்ணத்தில் தன் கொள்கையை இந்த நாட்டுப் பற்றை அடிப்படையாக வைத்து, சுய நலம் பாராமல், வணிக நோக்கம் பாராமல், சுய பெருமை பாடாமல், தேசப் பற்றையும் இறையாண்மையையும் தன் படங்களிலும் பாடல்களிலும் பறை சாற்றியவர் நடிகர் திலகம். இதை அடிப்படையாகக் கொண்டு நமது அடுத்த கொள்கைப் பாடல் இங்கே இடம் பெறுகிறது. படுத்துக் கொண்டே நடித்து வெற்றி பெற்றவர் நடிகர் திலகம் என்பதற்கு இப்பாடல் சாட்சி. இப்பாடல் முடிவில் கண்களில் நீர் வரவில்லை என்றால் அவர் தன் தேச பக்தியை இன்னும் தீவிரமாக உணர வேண்டும் என்பதே பொருளாகும். இடம் பெறும் பாடல் லீலா அவர்கள் பாடி ஜி.ராமனாதன் அவர்கள் இசையமைத்த பாரதியார் பாடல். வ.உ.சி. யாக வாழும் நடிகர் திலகம் நடித்த கப்பலோட்டிய தமிழனில் இடம் பெற்று, சற்று அபூர்வமாக ஒலிக்கக் கூடிய பாடல் இது. மரணப் படுக்கையில் இருந்தும் கூட என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்கிற வரியின் போது தன்னுடைய கைகளை விலங்குடைத்து விடுவிபபதாக செய்து, விடுதலையை எண்ணி புன்னகை பூக்கும் காட்சியில் இந்த உலகத்தில் இதற்கு மேல் கண்களால் தேச பக்தியைக் கூறக்கூடிய நடிகர் வேறு யாரேனும் உண்டா என்கிற எண்ணத்தை நம்முள் தோற்றுவிக்கும் அந்தக் காட்சி....
    இதோ நீங்களும் உணருங்கள்



    பாடல் காட்சியில் இடம் பெற்ற கலைஞர்கள்
    ருக்மணி, டி.எஸ்.துரைராஜ் மற்றும் பலர்.

    அன்புடன்

    பம்மலார்
    ராகவேந்திரன்
    Last edited by RAGHAVENDRA; 24th April 2011 at 08:45 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1670
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் - 6

    இந்த நாடு நன்றாய் இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்கிற எண்ணத்தில் தன் கொள்கையை இந்த நாட்டுப் பற்றை அடிப்படையாக வைத்து, சுய நலம் பாராமல், வணிக நோக்கம் பாராமல், சுய பெருமை பாடாமல், தேசப் பற்றையும் இறையாண்மையையும் தன் படங்களிலும் பாடல்களிலும் பறை சாற்றியவர் நடிகர் திலகம். இதை அடிப்படையாகக் கொண்டு நமது அடுத்த கொள்கைப் பாடல் இங்கே இடம் பெறுகிறது. படுத்துக் கொண்டே நடித்து வெற்றி பெற்றவர் நடிகர் திலகம் என்பதற்கு இப்பாடல் சாட்சி. இப்பாடல் முடிவில் கண்களில் நீர் வரவில்லை என்றால் அவர் தன் தேச பக்தியை இன்னும் தீவிரமாக உணர வேண்டும் என்பதே பொருளாகும். இடம் பெறும் பாடல் லீலா அவர்கள் பாடி ஜி.ராமனாதன் அவர்கள் இசையமைத்த பாரதியார் பாடல். வ.உ.சி. யாக வாழும் நடிகர் திலகம் நடித்த கப்பலோட்டிய தமிழனில் இடம் பெற்று, சற்று அபூர்வமாக ஒலிக்கக் கூடிய பாடல் இது. மரணப் படுக்கையில் இருந்தும் கூட என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்கிற வரியின் போது தன்னுடைய கைகளை விலங்குடைத்து விடுவிபபதாக செய்து, விடுதலையை எண்ணி புன்னகை பூக்கும் காட்சியில் இந்த உலகத்தில் இதற்கு மேல் கண்களால் தேச பக்தியைக் கூறக்கூடிய நடிகர் வேறு யாரேனும் உண்டா என்கிற எண்ணத்தை நம்முள் தோற்றுவிக்கும் அந்தக் காட்சி....
    இதோ நீங்களும் உணருங்கள்



    பாடல் காட்சியில் இடம் பெற்ற கலைஞர்கள்
    ருக்மணி, டி.எஸ்.துரைராஜ் மற்றும் பலர்.

    அன்புடன்
    டியர் ராகவேந்திரன் சார்,

    மிக்க நன்றி ! இந்தப் பாடல் எப்பேர்ப்பட்ட நெஞ்சையும் உருக்கி விடும் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  12. Thanks senthilvel thanked for this post

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •