-
5th May 2013, 07:30 PM
#3271
Junior Member
Newbie Hubber
என்னை போல் ஒருவன்- சில நினைவுகள்.(நன்றி சௌரி ராஜன் சார்.)
நான் சென்னை வந்த புதிதில், அனைத்து புது படங்களையும் ஜெமினி colour lab இல் ரிலீஸ் முன்பே பார்த்து விடுவேன். அப்படி நான் நான் பார்த்த படங்களில் ஒன்று என்னை போல் ஒருவன். 1975 இல் Re -Recording செய்யாமல் ஒரு முறையும், செய்த பிறகு இரு முறைகளும் எல்லா projection இலும் பார்த்தேன்.
ராமண்ணா ,இந்த படம் வளரும் போது ,நிறைய சிறு படங்கள் எடுத்து , இந்த படம் லேபில் இருந்து clear பண்ண முடியாத சங்கடத்தில் மாட்டியிருந்தார். (ஸ்ரீதர் வைர நெஞ்சத்தின் போது இதே தவறை செய்தார்.அவளுக்கென்று ஓர் மனம்,அலைகள், ஒ மஞ்சு என்று). பிறகு இந்த படம் 1978 இல் வந்து நன்றாகவே ஓடியது.(லேப் ரிலீஸ் செய்த ஞாபகம். சென்னையிலும்,வெளியூர் களிலும் வேறு வேறு தினங்களில்) இது வந்திருக்க வேண்டிய 1973/1974 இல் வந்திருந்தால் வெள்ளி விழா கண்டு block buster ஆகியிருக்கும்.
சிவாஜி-ராமண்ணா இணைவில் வந்த மிக சிறந்த படம் இதுதான். படு விறுவிறுப்பான neat &clean திரைகதை. சக்தி கிருஷ்ணசாமி வசனங்கள் படு crisp .ராமண்ணா மிக நன்றாக இயக்கி இருப்பார். ஹிட் பாடல்கள். சாரதா,உஷாநந்தினி,ஆலம் (படு cute pair .வேலாலே,மௌனம் இரண்டுமே என் favourite .)மற்றவர் காணாத ஒரு கட் ஆன பாடலை நான் லேப் projection இல் பார்த்தேன். அது கிளைமாக்ஸ் காட்சியில் உஷா நந்தினியுடன் இழு இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் என்கிற ஹிப்பி டான்ஸ்.
சிவாஜியின் ஆரம்ப காட்சிகள் அமர்க்களம். அம்மாவிற்கு மருந்து,சிகிச்சை பற்றி துச்சமாக பேசி shock குடுப்பார்.(இமேஜ் ஆவது மண்ணாவது, பாத்திரம்தான் எங்கள் தலைவருக்கு).சாரதாவுடன் ஒரு duet வைத்திருக்கலாம்.நல்ல ஜோடி.
ஆள் மாறாட்ட காட்சிகளில் அத கள காமெடி. மாறு வேடங்கள் ரொம்ப (christian father ,electrician ) sensible ஆக கையாள பட்டிருக்கும்.சிவாஜி படு casual ஆக இரண்டு ரோல்களை பண்ணியிருப்பார். பொழுது போக்கு படத்திற்கு உரிய relaxed நடிப்பு. பிரமாதமாய் வந்திருக்கும். ரொம்ப நாள் தயாரிப்பினால் உருவத்தில் கொஞ்ச continuity மிஸ் ஆகும் சில காட்சிகளில் மட்டும். ஆனால் நடிப்பில் consistency காட்டி NT குறை தெரியாமல் கவனித்து கொள்வார். அனாவசிய காமெடி track கிடையாது.படம் படு சுறுசுறுப்பு. ரெண்டு பார்ட் கிளைமாக்ஸ் -ரெண்டுமே விறு விறுப்பு .
என்னுடைய favourite entertainer .
Last edited by Gopal.s; 5th May 2013 at 07:39 PM.
-
5th May 2013 07:30 PM
# ADS
Circuit advertisement
-
5th May 2013, 09:30 PM
#3272
Senior Member
Seasoned Hubber
மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரையாக மலர்ந்து வரும் இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரின் முந்தைய பாகங்களுக்கான இணைப்புகள். இவையனைத்தும் அந்தந்த பதிவுகளுக்கான இணைப்புகள்.
பாகம் – 1
பாகம் – 2
பாகம் – 3
பாகம் – 4
பாகம் – 5
பாகம் – 6
பாகம் – 7
பாகம் – 8
பாகம் – 9
பாகம் – 10
பாகம் – 11
பாகம் – 12
பாகம் – 13
பாகம் – 14
பாகம் – 15
பாகம் – 16
பாகம் – 17
பாகம் – 18
பாகம் – 19
பாகம் - 20
பாகம் - 21
கோபால் சாரின் பட்டியலில் விட்டுப் போன 14, 18, 19, 20, 21ம் பதிவுகளும் இணைக்கப் பட்டுள்ளன. இனி வரும் பதிவுகள் ஒவ்வொரு பத்து பதிவுகள் முடிந்த பின்னும் இணைக்கப் படும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th May 2013, 09:33 PM
#3273
Senior Member
Seasoned Hubber
டியர் சித்தூர் வாசுதேவன் சார்
நீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் வருகை. இனி தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th May 2013, 01:02 AM
#3274
கோபால் அவர்களே,
எடுத்துக்கொண்ட ஒரு காரியத்தை அதன் வீரியம் கெடாமல் முன்னெடுத்து செல்ல வேண்டிய நேரத்தில் வழக்கம் போல் உங்கள் விளையாட்டுத்தனம் குறுக்கே வந்து எழுதும் நோக்கத்தை சிதைப்பதை நீங்கள் உணரவில்லையா?
நான் திரியிலிருந்தும் சரி வேறு இடங்களிருந்தும் சரி விருப்ப ஒய்வு எதுவும் பெறவில்லை. இதை உங்களிடம் அலைபேசியிலும் சொன்னேன். நீங்கள் ஒரு தவத்தில் ஈடுபட்டிருக்கீறீர்கள். அதாவது ஹாலிவுட் மற்றும் பல மேலை நாட்டு திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் எவ்வாறு தங்கள் நடிப்பை வரையறுத்துக் கொள்கிறார்கள் அந்த பாணிகள் ஒவ்வொன்றையும் எப்படி வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஒன்று சேர்த்து இவை அனைத்தையும் நடிகர் திலகம் எப்படி கையாண்டார் என்பதை அழகாக தொகுத்து வருகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் பல விஷயங்களும் எனக்கு புதிய செய்திகள் நீங்கள் எழுதுவதைப் பற்றி ஓரளவிற்கு அறிந்தவர் ராகவேந்தர் சார் அவர்கள்.அதனால் அவர் சில inputs கொடுக்கிறார். நண்பர் சாரதியும் நானும் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒன்று குறிப்பிட்டார் அதாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிகர் திலகம் எப்படி நடித்தார் என்பதை எங்களால் எழுத முடியும். ஆனால் அவை எந்த school of acting கீழ் வருகிறது என்பது பற்றியெல்லாம் எங்களுக்கு point out பண்ண தெரியாது. அதனால்தான் உங்கள் எழுத்துக்களுக்கு ஒரு இடையூறாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் பதிவுகள் இடவில்லை.
நீங்கள் சில நேரத்தில் விளையாட்டாக சில விஷயங்களை கையாள்வதுண்டு. அது சிலரை காயப்படுத்தி விடுகிறது என்பதை தாங்கள் உணர மறுக்கிறீர்கள். இன்று எழுதியதும் அப்படிதான். நான் மீண்டும் பதிவுகள் இட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி எழுதினீர்கள் என்றால் என் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கலாமே! தேவையில்லாமல் ராகவேந்தர் சார் பெயரை எழுத வேண்டிய அவசியமில்லையே!
எனக்காக ஒன்றை குறிப்பிடுகிறீர்கள் என்றால் என்னை பற்றி மட்டும் சொல்லவும். என்னை சீண்டுவதற்காக இந்த திரியில் வேறு யாரும் எழுதி புகழ் பெறுவதை நான் விரும்ப மாட்டேன் என்று கூட சொன்னீர்கள். அதை கூட நான் ஆமாம் என்று சிரித்துக் கொண்டேதானே பதிலளித்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்!
இனிமேலாவது இந்த மாதிரி விஷயங்களில் யார் பெயரையும் குறிப்பிடாமல் எழுதுங்கள் எனபதே என் விருப்பம்! நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள பணி இணையதளத்தில் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்கப் போவது உறுதி! அதிலிருந்து கவனம் சிதறி விடாமல் இலக்கை அடைய முன்னேறுங்கள்! அட்வான்ஸ் வாழ்த்துகள்!
அன்புடன்
-
6th May 2013, 01:06 AM
#3275
கோபால்,
இரண்டு நாட்களுக்கு முன் உங்கள் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த போது தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் பாடல் தொகுப்புகள் ஒளிப்பரப்பட்டுக் கொண்டிருந்தது! அவற்றில் விக்ரமனும் விஜய்யும் இடம் பெற்றார்கள்.
காத்திருப்பான் கமலக்கண்ணன் பாடல்! அங்கே பார்த்திபன் அமுதாவிற்காக காத்துக் கொண்டிருக்க இங்கே மகாராணியின் முன் மாட்டிக் கொண்ட அமுதா தன தோழி (ராகினி) கிருஷ்ணர் வேடம் புனைய ராதையாக ஆடும் காட்சி! அந்த காட்சியில் விக்ரமனின் உடல் மொழி! காதல் கனிவு பாசம் போன்ற எந்த பாசாங்கும் இல்லாமல் ஆதி மனிதனின் உடல் சார்ந்த வேட்கையை ஆசனத்தில் அமரும் முறையிலே உணர்த்தி விடும் உடல் மொழி! நான் உங்களிடம் குறிப்பிட்ட ஷாட் அதாவது நம்பியாரின் காதோடு [அவர் தன தாய் மாமன் என்ற உறவு முறையெல்லாம் மறந்து] ஒரு காமம் சார்ந்த என்று நமக்கு தோன்றும் விதம் அடிக்கும் கமண்ட், பத்மினி அலட்சியமாக சுழன்றாட இரண்டு கைகளையும் நாற்காலியின் கைபிடிகளை சற்று அழுத்தமாக பிடித்து காட்டும் gesture, நான்கே நிமிட பாடலில் விக்ரமன் என்ற அந்த கேரக்டர்-ஐ அவர் establish செய்யும் அழகு!
இந்த nuances என்று சொல்லப்படுகிற நடிப்பின் நுண்ணியல்புகளை நீங்கள் எழுதும் விதம் பிரமாதமாக அமைந்திருக்கிறது. அதிலும் இன்றைய பதிவு! தொடருங்கள்.
இரணடாவது காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் பாடல் காட்சி! அதில் spoiled child விஜய் தன மனம் கவர் பெண்ணோடு ஆடி பாடும் காட்சி. பாடலின் இறுதியில் இங்கும் அந்த கதாபாத்திரத்திற்கு சற்றே காமம் தலை தூக்க அவர் நகத்தை கடித்துக் கொண்டே [la Sridhar?] நாயகியை பார்ப்பது, வேறு புறம் பார்ப்பது என்று மாறி மாறி செய்து விட்டு நாயகியை தூக்கி கொண்டு செல்லும் அந்த காட்சி! எத்துனை வித்தியாசம்!
செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட ஒரு செல்வந்தர் வீட்டு பிள்ளையின் அத்துணை மானரிசங்களையும் வெளிப்படுத்தும் பாங்கு! அந்த convent educated language! வில்லன் ஆட்களால் கட்டி வைக்கப்படும்போது கூட thirstyயாக இருக்குடா! ஐஸ் வாட்டர் கொடுங்கடா என கேட்கும் அந்த பாத்திர தன்மை! அவரால் மட்டுமே முடிந்த ஒன்றல்லவா!
அது போல கண்ணன் பாத்திரத்தை எப்படி ஒரு மிருகமாகவே வார்தெடுத்திருக்கிறார் என்பதை நேர்த்தியாக எழுதியிருந்தீர்கள்! குறிப்பாக தன்னுடன் அன்பாக பேசும் நிம்மியின் கனிவை காதல் என்று தவறாக நினைத்து டாக்டரிடம் காதல் பற்றி சந்தேகம் கேட்க டாக்டர் சொல்லும் ஒதெல்லோ டெஸ்டிமோனா காதல் கதையை கேட்டு விட்டு உணர்ச்சி மிகுதியால் டாக்டரின் கையை நொறுக்குவது போல் அழுந்தப் பிடிப்பது போன்ற உடல் மொழியிலே அந்த பாத்திரத்தை எப்படி பார்வையாளனின் மனதில் பதிய வைக்கிறார்!
சங்கர் எப்படி தன் பணத்தினாலும் வெற்றிகரமான தொழிலதிபர் என்ற அந்தஸ்தினாலும் தன் மேல் எல்லையற்ற அன்பு செலுத்தும் மனைவியினாலும் தன் குறையை அதாவது தன் முக விகாரம் அவன் வாழ்க்கையை பாதிக்காத வகையில் அமைத்துக் கொள்கிறான் என்ற புதிய கோணத்தை சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.
சங்கர் டாக்டர் ராஜூவை சந்திக்க வரும் காட்சியைப் பற்றியும் சிலாகித்து சொல்லியிருக்கிறீர்கள்! காமிராவிற்கு பதிலாக அவர் கண்களே டாக்டர் படியிறங்கி வருகிறார் என்பதை பார்வையாளனுக்கு உணர்த்தி விடும் எனபதை சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்! ஆனால் இதை அவர் 9 வருடங்களுக்கு முன்பே செய்து விட்டார். 1960-ல் வந்த விடிவெள்ளி படத்தில் கொடுத்துப் பார் பார் உண்மை அன்பை பாடல் காட்சியில் இறுதி சரணத்திற்கு முன்னால் வைக்கோல் போர் அமைக்கப்பட்டிருக்கும் பரண் மீது ஏணிப்படி வழியாக சரோஜாதேவி ஏறி செல்கிறார் எனபதை நடிகர் திலகத்தின் கண்கள் வழியாகவே ஸ்ரீதரும் வின்சென்டும் பார்வையாளன் உணரும் வண்ணம் காட்டியிருப்பார்கள்.
இன்னும் இப்படி பலவற்றையும் எழுதலாம்! நேரம் கிடைக்கும்போது அதை செய்வோம்!
அன்புடன்
-
6th May 2013, 01:09 AM
#3276
வாசு அவர்களே,
உத்தம புத்திரன் விளம்பரம் அருமை! நான் ஒரே நாளில் வெளிவந்த இரண்டு விளம்பரங்களையும் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் பார்த்ததில்லை. அதை பதிவிட்டதற்கு நன்றிகள் பல!
என்னுடைய நினைவு சரியாக இருக்குமென்றால் இந்த விளம்பரம் 1956-ல் வெளிவந்தது என்று படித்திருக்கிறேன். அமர தீபம் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்த பின் வீனஸ் பிக்சர்ஸ் தங்கள் அடுத்தப் படத்தையும் அதே combination-ல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து படத்திற்கான கதையை தேடியபோது முன்னாட்களில் PU சின்னப்பா அவர்கள் நடிப்பில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான உத்தம புத்திரன் படத்தை மீண்டும் எடுத்தால் என்ன என்று யோசித்து அதை செயல்படுத்தும் நேரத்தில்தான் அதே கதையை எம்.ஜி.ஆர் அவர்களும் எடுக்க இருக்கிறார் என்ற செய்தி வந்து விளம்பரமும் வெளிவந்தது என்று சொல்வார்கள். பின் அவர் அந்த படத்தை drop செய்துவிட்டு நாடோடி மன்னன் எடுத்தார்.
இதுதான் நடந்த உண்மையே தவிர ஸ்ரீதர் முதலில் அவரை வைத்து எடுக்க இருந்தார் என்பதெல்லாம் தவறான தகவல்கள். காரணம் ஸ்ரீதர் அன்று வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு பங்குதாரரே தவிர இந்தப் படத்தை பொறுத்தவரை வசனம் மட்டுமே அவர் பொறுப்பில் இருந்தது.இயக்குனர் பிரகாஷ் ராவ் அவர்கள்.
நண்பர் srs எழுப்பிய ஒரு சந்தேகத்திற்கும் ஒரு பதில். நடிகர் திலகம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது 1957-ல். அது முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது 1957 தீபாவளிக்கு வெளிவந்த அம்பிகாபதி படத்தில்தான்.இந்த விளம்பரமோ 1956-ல் வெளிவந்தது. ஆகவேதான் நடிகர் திலகம் என்ற அடைமொழி சேர்க்கப்படவில்லை.
வாசு அவர்களே!
உங்கள் தாம்பத்தியம் பதிவை பற்றியும் குறிப்பிட வேண்டும்! மிக சிறப்பாக அதை கையாண்டிருந்தீர்கள். கருடா சௌக்கியமா, காவல் தெய்வம், துணை போன்ற தங்கள் முத்திரை பதித்த பதிவுகளில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.படத்தை பற்றிய positive எண்ணங்கள் உருவாக்குவதில் மீண்டும் தங்களுக்கு வெற்றி. தொடருங்கள்!
அன்புடன்
-
6th May 2013, 05:02 AM
#3277
Junior Member
Newbie Hubber
மிக்க நன்றி முரளி. மிக்க நன்றி ராகவேந்தர் சார். நாராயண, நாராயண, நன்மையிலேயே முடிந்தது.
-
6th May 2013, 05:18 AM
#3278
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
வாசு அவர்களே,
நண்பர் srs எழுப்பிய ஒரு சந்தேகத்திற்கும் ஒரு பதில். நடிகர் திலகம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது 1957-ல். அது முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது 1957 தீபாவளிக்கு வெளிவந்த அம்பிகாபதி படத்தில்தான்.இந்த விளம்பரமோ 1956-ல் வெளிவந்தது. ஆகவேதான் நடிகர் திலகம் என்ற அடைமொழி சேர்க்கப்படவில்லை.
அன்புடன்
"சிவாஜி" என்பதுதான் அவருக்கு கிடைத்ததிலேயே உன்னத பட்டம். அது அவர் முதல் படத்திலிருந்தே பயன் படுத்த பட்டு வருகிறது. அது ஒரு உன்னத நடிப்பின் brand name ஆகவே 1952 முதல் பயன் படுத்த பட்டு வருகிறது. இன்றும் கூட ஏதாவது உணர்ச்சியை வெளியிட முயல்வோரை பார்த்து, இவர் பெரிய சிவாஜி என்று சொல்லும் வகை உள்ளது. இது என் நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை அப்படியே.
-
6th May 2013, 05:27 AM
#3279
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
கோபால் அவர்களே,
எடுத்துக்கொண்ட ஒரு காரியத்தை அதன் வீரியம் கெடாமல் முன்னெடுத்து செல்ல வேண்டிய நேரத்தில் வழக்கம் போல் உங்கள் விளையாட்டுத்தனம் குறுக்கே வந்து எழுதும் நோக்கத்தை சிதைப்பதை நீங்கள் உணரவில்லையா?
இனிமேலாவது இந்த மாதிரி விஷயங்களில் யார் பெயரையும் குறிப்பிடாமல் எழுதுங்கள் எனபதே என் விருப்பம்! நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள பணி இணையதளத்தில் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்கப் போவது உறுதி! அதிலிருந்து கவனம் சிதறி விடாமல் இலக்கை அடைய முன்னேறுங்கள்! அட்வான்ஸ் வாழ்த்துகள்!
அன்புடன்
அதாவது, பெயரை குறிப்பிடாமல் insult செய்யும் முறையே மிக சிறந்தது என்று குறிப்பிடுகிரீர்கள். அந்த அளவு தேர்ச்சி பெற நான் இன்னும் வளர வேண்டும்.
-
6th May 2013, 06:08 AM
#3280
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Sowrirajan Sree
இதுவன்றோ சாதனை - வசந்த மாளிகை திருநெல்வேலியில் வெள்ளி மற்றும் சனிகிழமை (அதாவது இன்று) ஆறு காட்சிகள் முடிய ருபாய் 87,635 வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.
புதிய திரைப்படங்கள் அரங்கு நிறைவு காண தவறி, வசந்தமாளிகை இன்று மாலை காட்சி அரங்கு நிறைவு மற்றும் இரவு காட்சி கிட்டத்தட்ட அரங்கு நிறைவு ஏற்பட்டிருப்பதாக ஊராட்சி ஒன்றிய செயலாளரும் என் இனிய நண்பருமான திரு.குருமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
நாளை மாலை ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம் மற்றும் சீருடை இளைஞர் அணி சார்பாக வழங்கபோவதாக அறிவித்துள்ளார்..!
"தொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இந்த சக்கரம் சுற்றுதடா ....ஹா...ஹா....அதில் நான் சகரவர்தியடா ஹே...ஹே....! " - நிரூபித்துவிட்டீர்களே மறுபடியம் ஒருமுறை நடிகர் திலகமே !
ஆறு காட்சிகளில் பல படக்களின் ஒரு வார வசூலை வசந்த மாளிகை முறியடித்து திருநெல்வேலியில், இதே வசந்த மாளிகை மதுரை சரஸ்வதி திரை அரங்கில் ஒரே நாளில் பல பழைய படக்களின் ஒரு வார வசூலை முறியடித்து, அப்போதும் இப்போதும் இனி எப்போதும் வசூல் சக்கரவர்த்தி நிலை நாட்டும் நடிகர் திலகமே உன்னை வணக்குகிறோம்
Bookmarks