-
13th May 2013, 12:56 PM
#3501
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Sowrirajann Sri
நீ செய்த ஒரே தவறு இந்த திராவிட கொள்ளை கூடமாம் தமிழ்நாட்டில் பிறந்ததுதானோ ?

Originally Posted by
Sowrirajann Sri
அந்தளவிற்கு தமிழக மக்களிடம் ஒரு உள்ளதை உண்மையாக சிந்தித்து செயல் படும் மூளை இருந்திருந்தால்...தமிழகத்தை சின்னாபின்ன படித்தி வைத்துள்ள திராவிட கட்சிகள் என்றோ மூட்டையை கட்டிக்கொண்டு குப்பை போருக்க போயிருப்பார்கள்.
தமிழகத்தின் சீர்குலைவிற்கு காரணம் இந்த திராவிட கட்சிகள் தான் !
This is unwarranted here .
Last edited by joe; 13th May 2013 at 01:03 PM.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
13th May 2013 12:56 PM
# ADS
Circuit advertisement
-
13th May 2013, 01:47 PM
#3502
Moderator
Platinum Hubber
காங்கிரஸ் ஊழல் சிரிப்பா சிரிக்குது, இதுல இந்த பேச்சு அவ1சியம் தானா 
அன்னை இந்திரா காந்தி அவர்கள் நல்லாசியுடன் எப்படிப்பட்ட ஒரு காங்கிரஸ் ஆட்சி வந்திருக்கக் கூடும் என்பதெல்லாம் தெரியாதது போலவே பேசுவது ஏனோ?
காங்கிரஸும் பிற தேசிய கட்சிகளும் ஆட்சி நடத்தும் அனேக மாநிலங்களைக் காட்டிலும் எல்லா விதத்திலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குவது நன்கு தெரிந்தும், 'எல்லாம் நாசமாப் போச்சு' என்று இலம்பாடுவது ஏனோ?
மொத்த க்ரெடிட்டையும் காமராஜ் போட்ட விதை'க்கு மட்டுமே தருவேன் என்று அடம் பிடித்தாலும் (escape route நானே போட்டுத் தரேன் பாருங்க) - நாப்பத்தாறு வருஷம் அதுக்கு தண்ணி ஊத்தி தோட்டம் ஆக்கியிருக்காங்க. அதை acknowledge பண்ணாம பொத்தாம்பொதுவா திட்டக்கூடாது.
அரசியல் தரம் தாழ்வதைப் பத்தி எல்லாம் காங்கிரஸுக்கு பேச யோக்யதையே கிடையாது. சத்யமூர்த்தி பவன்'ல சட்டை கிழிப்பு, மண்டை உடைப்பு எல்லாம் வருடாந்திர சடங்கு தானே.
காமராஜ் ஒரு exception. அவர் தலைமுறைல, இந்தியால நிறைய இடத்துல சுதந்திரப் போராட்டத்துல ஈடுபட்ட, அர்ப்பணிப்போட அரசியலுக்கு வந்த idealists ஆட்சில இருந்தாங்க. அதுக்கு அடுத்து அந்த கட்சில வந்தவங்களோட கொள்ளை எல்லாம் பேர் போனது.
இந்த macro-context எல்லாம் விட்டுட்டு, என்னமோ 'கொள்ளை' என்பது திராவிடக் கட்சிகளின் கண்டுபிடிப்பு என்பது போலவும், அவர்கள் இல்லையென்றால் தேனாறும் பாலாறும் ஓடி வழுக்கி விழுந்திருப்போம் என்பது போல பிம்பத்தை எழுப்புவது ஒரு ஏமாற்றுவேலை.
எல்லாருக்கும் விமர்சனம் இருக்கும். அதை எப்படி சொல்றது'ன்னு இருக்கு.
ஒரு 50-60 பக்கம் backlog இருக்கு
எடுத்ததும், இதுக்கு ரியாக்ட் பண்ண வேண்டி இருக்கு.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
13th May 2013, 01:58 PM
#3503
Senior Member
Seasoned Hubber
இங்கே தற்போதைக்கு நடிகர் திலகத்தின் நடிப்பும் அவருடைய புகழும் மட்டுமே விவாதிக்கப் பட்டு வருகிறது. இங்கே திடீரென அரசியல் கருத்துப் பரிமாற்றம் ஏன் இடம் பெறுகிறது. புரியவில்லை.
சௌரிராஜன் இங்கே அரசியல் பதிவு எதுவும் பதிந்து விட்டு எடுத்து விட்டாரா ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th May 2013, 02:02 PM
#3504
Junior Member
Newbie Hubber
பிரச்சினை அது இல்லை . ஒரு மாநில கட்சி ,ஒரு தேசிய கட்சி என்று இருந்திருந்தால் balanced ஆக இருந்திருக்கும். ஒரே கட்சி இரண்டாகி, அதே ஆட்கள் இரண்டிலும் பிரித்து, மாறி மாறி ஆட்சி செய்யும் வினோதம் ,நம் மாநிலத்தில் மட்டுமே. காங்கிரஸ் வந்திருந்தால் பாலும் தேனும் ஓடியிருக்கும் என்ற நம்பிக்கை ரொம்பவே ஓவர். காமராஜ் ஆட்சி இன்றைய சூழ்நிலையில் யார் வந்தாலும் கனவுதான். என்னையே தேர்ந்தெடுத்தாலும் SherShaw அல்லது lee kwan yu ஆட்சிதான் try பண்ணுவேன்.
ஆனால் இங்கு தேசிய கட்சிகளுக்கு நாம் ஒரு hope கூட கொடுக்காததால் முல்லை பெரியார்,பாலாறு, காவேரி,ஹோகனேகல் ,இலங்கை பிரச்சினை, மீனவர் பிரச்சினை மற்றும் நிதி ஒதுக்கீடு அனைத்திலும் நம் மாநிலம் வஞ்சிக்க படுகிறது.
சரி,சரி எதையோ ஆரம்பித்து விட்டோம். நடிகர்திலகத்தை தொடர்வோம்.
Last edited by Gopal.s; 13th May 2013 at 04:38 PM.
-
13th May 2013, 02:09 PM
#3505
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
இங்கே தற்போதைக்கு நடிகர் திலகத்தின் நடிப்பும் அவருடைய புகழும் மட்டுமே விவாதிக்கப் பட்டு வருகிறது. இங்கே திடீரென அரசியல் கருத்துப் பரிமாற்றம் ஏன் இடம் பெறுகிறது. புரியவில்லை.
சௌரிராஜன் இங்கே அரசியல் பதிவு எதுவும் பதிந்து விட்டு எடுத்து விட்டாரா ...
ஹா ! நான் யார், எங்கிருக்கிறேன்?நீங்களெல்லாம் யார்?
-
13th May 2013, 03:42 PM
#3506
Senior Member
Diamond Hubber
சிவாஜி ரசிகன் காங்கிரஸ் காரனாயிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
திராவிட இயக்கத்தவன் சிவாஜி ரசிகனாக இருப்பதில் எந்த குழப்பமும் இல்லை
பெரியார் நேசன் நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எம்.ஜி.ஆர் ரசிகன் கருணாநிதியின் தமிழை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை.
காமராஜரை மதிப்பவன் சோனியாவுக்குத் தான் வாக்களிக்க வேண்டுமென்பதில்லை .
அது தான் பகுத்தறிவு .
இங்கே அரசியல் பேசுவதல்ல பிரச்சனை . இந்த பிரச்சனையில் இவர் செய்தது தவறு என குறிப்பிட்டு பேசுங்கள் ..போகிற போக்கில் ஒட்டு மொத்த திராவிட இயக்கத்தின் மீதும் சேறு வீசி விட்டுச் சென்றால் கேட்க ஆளில்லை என்கிற எண்ணம் வேண்டாம் . என்னைப் போன்றோர் பெரியாருக்கும் பேரன் தான் . அசைக்க முடியாத சிவாஜி ரசிகனும் தான் .
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
13th May 2013, 03:54 PM
#3507
Junior Member
Seasoned Hubber
GRAHAPRAVESAM
வெகு நாட்களாக எனக்கு தமிழில் எழுத ஆசை மேலும் சில நண்பர்களும் தமிழில் எழுதுமாறு கேட்டுகொண்டனர் . அந்தன்படி ஒரு சின்ன முயற்சி . தவறு இருந்தால் மன்னிக்கவும்.
கிரஹப்பிரவேசம் இந்த படம் வெகு சிலருக்கு மட்டும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறன் .
ஆனால் 1976 ல் முதல் வெளியிட்டில் இந்த படம் 100 நாட்கள் வெற்றி நடை போட்டது .
ஏற்கனவே பொன்னூஞ்சல் பற்றிய பதிவின் பொது சொன்னதை போல இந்த படம் அதே தயாரிப்பாளர்கள்காக செய்யப்பட்ட படம் . இந்த படத்தின் டைரக்டர் திரு யோகானந்த் .
இந்த படம் பார்க்காதவர்களுக்கு இந்த படத்தின் கதை இதோ :
NT ஒரு லாரி டிரைவர் . அவர் தம்பி சிவகுமார் இன்ஜினியரிங் படித்துகொண்டு இருக்கிறார் அதற்காக NT வாயை கட்டி வயதை கட்டி சம்பாதிக்கிறார். அவரின் மனைவி வேற யார் நம்ம KR விஜயா.அவர்களுக்கு ஒரு சின்ன பையன். இந்த நேரத்தில் சிவகுமார் தன் படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் சேருகிறார் . அவரின் முதலாளி மேஜர். அவரின் மகள் ஜெயா . ஜெயா வுக்கும் சிவகுமார்க்கும் கல்யாணம் நடக்குறது . முதல் இரவில் அவள் ஒரு hysteria patient என்று NTக்கு தெரியவருகிறது . ஜெயா நல்ல குணம் உள்ள பெண் . அனைவரிடமும் அன்புடன் பழகிறார். சிவகுமார் பண உதவி செய்ய NT இப்போ ஒரு mechanic ஷாப் வைத்து
இங்கே ஜெயா கிர விஜயாவின் குழந்தையை தன் குழந்தையை வளர்கிறார். இதற்குள் 6 வருடம் ஓடிவிடிகிறது . இந்த நேரத்தில் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வீடு கட்ட எண்ணுகிறார்கள், இதன் அணைத்து செலவையும் ஜெயா ஏற்று கொள்கிறார் .
இந்த நேரத்தில் நடத்துகிறார் இந்த நேரத்தில் சிவகுமார் அமெரிக்க செல்கிறார் . அவர் சென்று சில நாட்களில் NT ஒரு விபத்தில் அவர் கை செயல் இழந்து விடுகிறது .
கிரஹப்பிரவேசம் நடக்க சில நாட்கள் முன்பு குடும்பம் பிரிகிறது .
NT குடும்பத்தை காப்பாற்ற நாடகத்தில் பாட்டு பாடுகிறார். சிவகுமார் தாய் நாட்டுக்கு வந்த உடன் நடந்த அனைத்தும் அவருக்கு தெரியவருகிறது
பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்றாக இணைந்து கிரஹப்பிரவேசம் நடந்ததா ?
இந்த மாதிரி கேரக்டர் NTக்கு அல்வா சாப்பிடுவது போல . சும்மா பூந்து விளையாடுவர் மனுஷன் இந்த படம் முதல் பரமே முதல் கடைசி வரை அவரின் ராஜ்யம் தான் . தம்பிடம் உருகுவது ஆகட்டும் அதே தம்பி ஒரு பணகர பெண்ய் கல்யாணம் செய்ய சம்மந்தம் பேச சொன்ன உடன் கோவம் படுவதும் , தம்பி மேல தப்பு இல்ல என்று தெரிந்து மேஜர் ய் சந்திக்கும் பொழுது , வெள்ளந்தியை தான் ஒரு ஏழை என்று உண்மைய் சொல்லும் இடம் . பெண்ய் செக் செய்யும் பாங்கு, அதே பெண் ஒரு மன நோயாளி என்று தெரிந்ததும் மேஜர்யிடம் உங்க பொண்ணு இங்க வந்து உடல்நலம் குறித்து அறிந்துகொல்ல்வதும் மேஜர் யிடம் மீண்டும் தன் வீட்டுக்கு வந்ததால் இந்த நோய் வரவில்லை என்று தெரிந்துடன் நிம்மதி அடையும் இடம் டாப் கிளாஸ் .
ஜெயாவிடம் அதித அன்பு கலந்த பயம் காடும் NT தன் இஷ்டபடி தான் அனைத்தும் நடக்கும் என்று ஒரு மாயை உருவாகிறார் . கை உணமுற்றுடன் kr விஜயா விடம் கம்பை உன்றி கொண்டு உனக்கு ஒரு சகலத்தி வந்து இருக்கா பாரு என்று கண் கலங்கி சொலும் பொழுது பார்வையாளர்கள் கண் கலங்க செய்யகிறார்.
சண்டை வந்த உடன் மேஜர் யிடம் தன் மனைவிகாக ஆதரவாக பேசுவதும் அதே சமயம் அவளை கடித்துகொல்வதும் NT மட்டுமே சாத்தியம்.
NT அப்புறம் இந்த படத்தில் அதிக நடிக்க வாய்ப்பு உள்ள பாத்திரம் ஜெயாவுக்கு. அவரும் நன்றாக நடித்திருக்கிறார் . சிவகுமார் வழக்கம் போல பாந்தம் . kr விஜயாவுக்கு கடைசி 30 நிமிடங்கள் மட்டுமே நடிக்க வாய்ப்பு.
இந்த படத்தில் NT இமேஜ் பூஸ்டிங் காட்சிகளும் உண்டு . அவர் நாடகம் நடிக்கும் பொழுது ஒரு நடிகர் முதலாளி யிடம் தகறாரு செய்வர் . அப்போ அந்த முதலாளி சொல்வர் அவர் மாதிரி நடிக்க ஆசைபடாதே அது முடியாது
கை ஊனமுற்ற நிலையில் படும் பொழுது மக்கள் அவரை கிருஷ்ணர் வேஷம் போட சொல்வார்கள் அப்போ அவர் மீது கல் வீசப்படும் . அப்போ NT என் வளர்சிக்கு என் விரோதிகள் போடும் அஸ்திவாரம் இவை என்று எடுத்துகொள்கிறேன் என்று சொல்லும் யிடம் நம்ம கலா மாஸ்டர் ஸ்டைல் சொல்லவேண்டும் என்றால் கிழி கிழி .
இந்த படத்தின் மிக பெரிய பலம் திரைக்கதை . எப்போ இவர் பிரிவார்கள் என்று எதிர்பாத்து இருக்கும் பொழுது அவர்கள் சேர்த்தே வாழ்வதும் . நாம் எதிர்பாராத பொழுது பிரிவதும் தான் highlight .
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்
-
13th May 2013, 04:07 PM
#3508
Senior Member
Seasoned Hubber
மேற்கோள் காட்டப் பட்ட சௌரிராஜனின் பதிவு இங்கு இடம் பெறவில்லை. அதற்கு விளக்கங்களும் தொடர் பதிவுகளும் இங்கு இடம் பெறுவதன் நோக்கம் புரியவில்லை...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th May 2013, 04:10 PM
#3509
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
ஆனால் இங்கு தேசிய கட்சிகளுக்கு நாம் ஒரு hope கூட கொடுக்காததால் முல்லை பெரியார்,பாலாறு, காவேரி,ஹோகனேகல் மற்றும் நிதி ஒதுக்கீடு அனைத்திலும் நம் மாநிலம் வஞ்சிக்க படுகிறது.
சரி,சரி எதையோ ஆரம்பித்து விட்டோம். நடிகர்திலகத்தை தொடர்வோம்.
நண்பர் சவுரி சொன்னதில் எந்த தவறும் இல்லை.
தமிழ் நாட்டின் கலாசார சீரழிவிற்கு காரணம் திராவிட கட்சியே.
சரியான சமயத்தில் அந்த கட்சியை விட்டு வெளியே வந்ததால் தான்
நம் மாநிலத்தின் இரண்டு பிறவிமேதைகள் தப்பினர்.(நடிப்பரசர்,கவியரசர்)
அவர்களுக்கு அங்கு கிட்டிய அவமானம் நாடறிந்ததே.
அங்கு பல கலைஞர்களுக்கு இடமில்லை.ஒரே ஒருவருக்குத்தான் இடமுண்டு.
இப்பொழுதுள்ள காங்.என அழைக்கப்படும் கட்சி காங்கிரஸ் கட்சியே இல்லை.(காலி ஹார்லிக்ஸ் பாட்டிலில் போடப்பட்டுள்ள மைதா மாவு)மகாத்மா காந்திக்கும் சோனியா காந்திக்கும் உள்ள ஒற்றுமைதான் இந்திய தேசீய காங்கிரசிற்கும்,இந்திரா காங்கிரசிற்கும் உள்ள ஒற்றுமை.
அதே சமயம் 1972 இல் நம் சாத்தான் ஒரு குட்டியும் போட்டு விட்டதால்,இரண்டும் மாறி மாறி செங்கோலோச்சி வருகின்றன.நீங்கள் சரியாக சொன்னதுபோல,நாம்(தமிழ் மக்கள்) 45 ஆண்டுகளாக நேரடியாக குண்டர்களிடம் report செய்யாமல்,அவர்களின் இரு அடியாட்களிடம் report செய்வதால்,
கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு,பதவி உயர்வு அனைத்தும் பறி போய் அம்போ என்று நிற்கிறோம்.
ஒரே உதாரணம்.1990 களின் முற்பாதியில் மாநில அரசிறகு சரியான திட்டமிடுதல் இருந்திருந்தால்,இன்று பெங்களுரு,ஹைதராபாத் நகரங்கள் பெற்றுள்ள IT நிறுவனக்களில் ஒரு 80 சதவிகிதமாவது நம்மிடம் இருந்திருக்கும்.
-
13th May 2013, 04:11 PM
#3510
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
மேற்கோள் காட்டப் பட்ட சௌரிராஜனின் பதிவு இங்கு இடம் பெறவில்லை. அதற்கு விளக்கங்களும் தொடர் பதிவுகளும் இங்கு இடம் பெறுவதன் நோக்கம் புரியவில்லை...
பதிவு எண் 3486.
Bookmarks