-
11th June 2015, 01:22 PM
#3541
Senior Member
Diamond Hubber
சினிமா விமர்சனம் : காக்கா முட்டை
தமிழ் சினிமாவின் 'பொன் முட்டை’ இந்தக் 'காக்கா முட்டை’. உலகத்துக்கான தமிழ் சினிமா இது!
சென்னை மாநகரத்தின் 'சிங்காரச் சென்னை’ அந்தஸ்துக்காக, நகர வாழ்வில் இருந்து ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, விளிம்பைத் தாண்டியும் துரத்தப்பட்ட மண்ணின் மைந்தர்களை மனம் நிறையக் கரிசனத்துடன் அணுகி, தமிழ் சினிமாவின் பெருமிதப் படைப்பாக மிளிர்கிறது 'காக்கா முட்டை’. இயக்குநர் மணிகண்டனுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறான் விகடன்!
'ஒரு பீட்சா சாப்பிட வேண்டும்’ என ஆசைப்படும் குப்பத்துச் சகோதரர்கள் இருவரும், அந்த ஆசைக்கு அடுக்கடுக்காக வரும் முட்டுக்கட்டைகளும்தான் இந்த 'முட்டை’க் கதை. சுவாரஸ்யம் என்ற பெயரில் வழக்கமான வணிகச் சமாசாரங்களைத் திணிக்காமல், கதை ஓட்டத்திலேயே அத்தனை சுவாரஸ்யங்களையும் அள்ளித் தந்திருப்பது அசல் வெற்றி.
கோழி முட்டை வாங்கக்கூட 'வசதி’ இல்லாத குப்பத்துச் சகோதரர்கள் விக்னேஷ் (பெரிய காக்கா முட்டை), ரமேஷ் (சின்ன காக்கா முட்டை) இருவரும் காக்கா முட்டையைக் குடித்து உடலுக்குப் புரதம் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், அந்தச் சொற்பப் புரதச்சத்தையும் சிறுவர்களிடம் இருந்து பறித்துக்கொள்கிறது புதிதாகக் கட்டப்பட்ட ஒரு பீட்சா கடை. கடையின் திறப்பு விழாவில் நடிகர் சிம்பு பீட்சா சாப்பிடுவது, சுண்டி இழுக்கும் விளம்பரங்கள்... என சிறுவர்களுக்கு பீட்சா மீது பைத்தியமே பிடிக்கிறது. ஒரு கிலோ மூன்று ரூபாய் எனக் கரி அள்ளிச் சம்பாதிக்கும் சிறுவர்களால், 300 ரூபாய் சம்பாதிக்க முடிந்ததா, அப்படிச் சம்பாதித்தாலும் பீட்சா சாப்பிட முடிந்ததா... எனத் தடதடப்பும் படபடப்புமாகக் கடக்கிறது படம்!
'குப்பத்துச் சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்பட்டால் என்ன நடக்கும்?’ என்ற ஒற்றைக் கேள்வியில் தொடங்கும் சினிமா, நுகர்வுக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் உலகமயமாக்கல், எளிமையும் அழகும் நிறைந்த உழைக்கும் மக்களின் வாழ்க்கை, நகரத்து மனிதர்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத... அவர்கள் அறிந்தேயிராத விளிம்புநிலை மக்களின் வாழ்வு... எனப் பல விஷயங்களை, போகிறபோக்கில் போட்டுத் தாக்குகிறது.
இதே சைதாப்பேட்டை பாலத்தை நாம் எத்தனை முறை கடந்திருப்போம்? பாலத்துக்கு அந்தப் பக்கம் வசிக்கும் இந்த மனிதர்கள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அநாவசியத்தை அத்தியாவசியமாக 'மாற்றும்’ விளம்பரங்கள், பொங்கித் தின்ன அரிசி இல்லாத வீட்டில் பொழுதுபோக்க இரண்டு 'விலையில்லா’ டி.வி பெட்டிகள், சினிமாவில் ஹீரோ எகிடுதகிடாகப் பேசுவதை வீட்டில் வயதுக்கு மீறிப் பிரதிபலிக்கும் சிறுவர்கள், 'ஃப்ளெக்ஸ் பேனர்’ அரசியல், 'கெட்டுப்போனாத்தான்டா நூல் நூலா வரும்’ என வெள்ளந்தியாக வெளிப்படும் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் உணவு அரசியல், 'பீட்சாதான் வேணும்... அப்பா எல்லாம் வேணாம்’ எனும் அளவுக்கு மகனை முறுக்கேற்றும் போலி நாகரிக அழுத்தங்கள், சென்னையின் காஸ்ட்லி ஸ்தலங்களுக்குள் தங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்கிற பூர்வகுடிகளின் தயக்கம், ஊடகங்களின் சென்சேஷன் பசி... என ஏராளமான விஷயங்கள், சின்னச் சின்னக் காட்சிகளாகவும் கலீர் சுளீர் உரையாடல்களாகவும் மனதில் ஆணி அடிக்கின்றன!
தூக்கத்தில் டவுசரை ஈரமாக்கும் ஓப்பனிங்குடன் அட்டகாசமாக அறிமுகமாகும் ரமேஷ§ம், 'அவன் சாப்பிட்ட பீட்சாவைக் கொடுப்பான்... அதை நீ வாங்கித் தின்னுவியா?’ என, தம்பியை அதட்டும் விக்னேஷ§ம் அதகளம்... அமர்க்களம்! பாட்டி சுடும் பீட்சாவைச் சாப்பிட்டு கடுப்படிப்பதும், 'தண்ணி வண்டி’யைத் தள்ளு வண்டியில் இழுத்து வந்ததற்குக் காசு கிடைத்ததும் கண்கள் விரிவதுமாக, படம் முழுக்கப் பசங்க ராஜ்ஜியம்.
துண்டுப் பிரசுரம் பார்த்து பீட்சா சுடும் அந்தப் பாட்டி சாந்திமணி... அழகு அப்பத்தா! மருமகளின் திட்டுக்களில் இருந்து பேரன்களைக் காபந்து பண்ணுவதும் 'ஹோம்மேடு பீட்சா’ முயற்சியில் கலகலப்பது என பாச-நேசமாக ஜொலிக்கிறார். சினிமா கேரியரில் ஐஸ்வர்யாவுக்கு இது அர்த்தமுள்ள அடையாளம். அழுக்கு மேக்கப், எப்போதும் சோகம்... என வளையவருபவர், மகன் படுக்கையை நனைப்பதை நிறுத்தும்போதும், 'ரொம்ப அடிச்சுட்டாங்களா?’ எனப் பதறும்போதும்... ரசனை உணர்வுகளைக் கடத்துகிறார். ரமேஷ் திலக், 'பழரசம்’ ஜோ மல்லூரி, கரியை எடைக்கு வாங்கும் அக்கா, 'முந்திரிக்கொட்டை’யாகச் சொதப்பும் கிருஷ்ணமூர்த்தி... என ஒவ்வொருவருமே கச்சிதமான காஸ்ட்டிங்.
பாட்டி குளிக்கும்போது கேரிபேக்கில் தண்ணீர் பிடித்து வருவது, 30 ரூபாய் திருட்டுக் கேபிளுக்கு நுகர்வோர் உரிமை மறுக்கப்படுவது என, குப்பத்துக் காட்சிகளில் அத்தனை இயல்பு. 'தமிழ் சினிமாவின் பிஞ்சிலேயே பழுத்த சிறுவர்களு’க்கு எதிர் துருவமாக படத்தின் கதை நாயகர்களான சிறுவர்கள் இருப்பது பெரும் நிம்மதி. 'அடிக்கக் கூடாதுனு பாலிசி வெச்சிருக்கேன்’ எனும் அம்மாவின் வளர்ப்பில் நேசமும் நேர்மையுமாக வளர்பவர்களை, சமூகம் எப்படியெல்லாம் கறைப்படுத்தக் காத்திருக்கிறது என்பது திரைக்கதையில் அழுத்தமாகப் பின்னப்பட்டிருக்கிறது.
'ஏன்... சிம்பு ரசம் சாதம் சாப்பிட மாட்டானா?’, 'கெட்டுப்போனாத்தான்டா நூல் நூலா வரும்’, 'சத்தியமா நம்மளை உள்ளே விட மாட்டாங்க’, 'இல்லாதவங்க இருக்கிற இடத்துல கடை போட்டு ஏன் உசுப்பேத்தணும்’ - நக்கலும் நையாண்டியுமாகக் கடக்கும் ஆனந்த் அண்ணாமலை, ஆனந்த் குமரேசன் கூட்டணியின் வசனங்கள், சிரிப்பு செருப்பு அடிகள்.
படத்தில், சிம்பு நடித்திருக்கிறார்... சிம்புவைக் கலாய்க்கிறார்கள்... 'நான்தான் லவ் பண்ணலைனு சொல்லிட்டேன்ல’ என ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் சிம்பு. ஹேய்... சூப்பரப்பு!
எது மாதிரியும் இல்லாத புது மாதிரி சினிமாவின் அந்த க்ளைமாக்ஸ், அத்தனை நெகிழ்ச்சி. எந்தச் செயற்கைப் பூச்சும் இல்லாமல் கண்களைக் கலங்கச்செய்யும் ஈர அத்தியாயம். ஏரியாவையே பதறவைத்த ஏக களேபரங்களுக்குப் பிறகு, பீட்சா குறித்து இரண்டு காக்கா முட்டைகளும் அடிக்கும் அந்த கமென்ட்... கலக்கல்!
இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருப்பதில் எத்தனை வசதி என்பதை ஒவ்வோர் ஒளிச்சிதறலிலும் நிரூபித்திருக்கிறார் மணிகண்டன். இண்டு இடுக்கு, சந்துபொந்து, வீட்டுக்கூரை... எனச் சிறுவர்களோடு சிறுவர்களின் மனநிலையிலேயே பயணிக்கிறது படம். ஆக்ஷன் அவசரமோ, மாஸ் பன்ச் நவரசமோ இல்லாத 'ரியல் டைம்’ நிகழ்வுகள்தான் படம் முழுக்க. அதிலும் கச்சித டைமிங்கால் சீனுக்கு சீன் விறுவிறுக்கவைக்கிறது கிஷோரின் எடிட்டிங். மிஸ் யூ கிஷோர்! 'கறுப்பு கறுப்பு கறுப்பு நிறத்தை வெறுத்து வெறுத்து...’ பாடலில் மெல்லிசையுடன் மென்சோகம் படரவிடுகிறது ஜி.வி.பிரகாஷின் இசை. 'விட்டமின் ப’ போஷாக்கு இல்லாமல் முடங்கிக்கிடக்கும் இப்படியான 'முட்டை’களைப் பொறிக்கச்செய்ய, தயாரிப்பாளர்கள் தனுஷ§ம் வெற்றிமாறனும் முன்வந்ததற்கு வாழ்த்துகள்.
குழந்தைகளை வைத்து பெரியவர்களுக்குக் கதை சொன்ன, அதுவும் உலகமயமாக்கலின், உணவு அரசியலின், விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை மனதுக்கு நெருக்கமாகச் சொன்ன 'காக்கா முட்டை’... நம் சினிமா!
Vikatan verdict
60%100
-
11th June 2015 01:22 PM
# ADS
Circuit advertisement
-
11th June 2015, 03:24 PM
#3542
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
காக்கா முட்டையும் கோழி முட்டையும்!
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காக்கா முட்டை’ படத்தில் சுவாரசியமான காட்சிகள் நிறைய உண்டு. சிறுவர்கள், மரத்திலிருக்கும் காக்காவின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, கூட்டிலிருந்து காக்கா முட்டைகளை எடுத்துக் குடிப்பதும் அவற்றில் ஒன்று. அடுத்தடுத்த காட்சிகளில் அவர்கள் காக்கா முட்டைகளைக் குடிப்பதற்காகத் திட்டு வாங்கும்போது அவர்களுக்கு வக்காலத்துக்கு வரும் பாட்டி, “கோழி முட்டை விக்குற விலையில வாங்கிக் குடிக்க முடியுமா, காக்கா முட்டை குடிச்சா என்ன; அதுவும் பறவைதானே?” என்பார். இந்தக் காட்சியைப் பார்த்த உடன் வந்த நண்பர் அதிர்ச்சியடைந்தார். “இது யதார்த்தமாக இல்லை. கோழி முட்டைகூட வாங்க முடியாத குடும்பங்கள் இருக்கின்றனவா என்ன? காக்கா முட்டை குடிப்பதை நியாயப்படுத்திக் காட்டுவதற்கு இதெல்லாம் ஒரு சாக்கு” என்றார். உண்மையில், மிக யதார்த்தமான காட்சிதான் அது. எளிய மக்களின் உணவுப் பண்பாட்டின் நியாயத்தை இயல்பாகப் பேசும் காட்சியும்கூட!
சென்னை வந்த பிறகுதான் முதன்முதலில் ஈசல் விற்பவர்களையும் அதை வாங்கிச் சாப்பிடுபவர்களையும் பார்த்தேன். சைதாப்பேட்டை சந்தை வாசலில் ஒரு வயதான ஆயா கூடையில் வைத்து விற்றுக்கொண்டிருப்பார். ஒரு பொட்டலம் பத்து ரூபாய். அரைப்படி அளவுக்கு இருக்கும். ஆரம்பத்தில் ஏதோ ருசிக்காக வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். அப்புறம் ஒரு நாள் அந்த ஆயாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். “ஏம்பா, கோலா மீன்ல ஆரம்பிச்சு வஞ்சிரம், சுறா வரைக்கும் உள்ள வெச்சிருக்கான். அதுல எல்லாம் இல்லாத ருசியா இந்த ஈசல்ல இருக்கு? இல்லாதப்பட்டவன் கவுச்சியை மோந்துக்க இதெல்லாம் ஒரு வழிப்பா. அப்படியே பழக்கிக்கிறது” என்றார் அந்த ஆயா.
மாட்டிறைச்சி தொடர்பான விவாதம் ஒன்றிலும் இதே நியாயத்தைக் கேட்டிருக்கிறேன். பாஜக அரசு கொண்டுவந்த மாட்டிறைச்சித் தடைக்கு எதிராகக் கடுமையாக வாதிட்டுக்கொண்டிருந்தார் அந்த இளைஞர். நம்முடைய ஆதி வரலாறு, உணவுக் கலாச்சாரம், சைவ மேட்டிமைவாதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தவர் ஒருகட்டத்தில் உடைந்துபோய் சொன்னார்: “யோவ், மாட்டுக்கறி ஒண்ணும் ஆட்டுக்கறியவிட ருசி கிடையாது. ஆனா, ஆட்டுக்கறி கிலோ ஐநூறு ரூபா விக்கிது. மாட்டுக்கறி இருநூறு ரூபா. ஆட்டுக்கறி வாங்க எங்கெ போறது? நீங்க வாங்கித் தர்றீங்களா?”
அதுவரை எல்லாவற்றுக்கும் பதில் வாதம் பேசிக்கொண்டிருந்த எதிர்த்தரப்பு அப்படியே மௌனமானது.
ஒரு சமூகத்தின் உணவுப் பழக்கம் பின்னாளில் உணவுக் கலாச்சாரமாக உருவெடுப்பது வேறு விஷயம். ஆனால், தேவையும் கிடைப்பதும்தான் எல்லா உணவுப் பழக்கங்களையும் தீர்மானிக்கின்றன.
இந்தியாவில் 43 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகச் சொல்கிறது 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. உண்மையான எண்ணிக்கை இதுபோல 10 மடங்கு இருக்கலாம். எனினும், அரசு தரும் குறைந்தபட்ச எண்ணிக்கையேகூட, உலகில் அதிகமான குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடு என்ற இடத்தைப் பெற இந்தியாவுக்குப் போதுமானதாக இருக்கிறது.
இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள் நாளெல்லாம் உழைப்பது பத்துக்கும் இருபதுக்கும்தான். உள்ளபடி டீக்கடைகளிலோ, மளிகைக் கடைகளிலோ வேலை பார்ப்பவர்கள் இவர்களில் பாக்கியசாலிகள். பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலைக்குச் செல்பவர்கள். நாடோடிகள்போல அலைபவர்கள். தலைநகர் டெல்லியில் மட்டும் 3 லட்சம் பேர் குப்பை பொறுக்குகிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் குழந்தைகள்தான். இப்படிப்பட்டவர்களில் இருவரின் வாழ்க்கையைத்தான் சொல்கிறது ‘காக்கா முட்டை’. ரயில் தடங்களின் ஓரத்தில் சிதறிக் கிடக்கும் நிலக்கரித் துண்டுகளைப் பொறுக்கித் தந்து, ஒரு கிலோவுக்கு மூன்று ரூபாய் வாங்கிக்கொள்ளும் சிறுவர்களுக்கு மூணரை ரூபாய்க்கு விற்கும் கோழி முட்டை ஆடம்பர உணவாக இருப்பதில் ஆச்சரியம் என்ன?
ஒருகாலத்தில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் விசேஷமாக அசைவ உணவைச் சாப்பிடும் ஒரு முதல்வர் தமிழகத்தில் இருந்தார். அந்த விசேஷ உணவை அவர் ஆடம்பரமானதாகவும்கூட நினைத்தார். அப்படி அவர் ஆடம்பர உணவாகச் சாப்பிட்ட அந்த அசைவ உணவு கோழி முட்டை. காமராஜருக்குப் பிந்தைய இந்த நான்கு தசாப்தங்களில் அரசியல்வாதிகள் எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்கலாம். ஏழை மக்களின் நிலையை அப்படிச் சொல்வதற்கு இல்லை.
இரு வாரங்களுக்கு முன்புதான் பூமியிலேயே அதிகமான ஊட்டக்குறைபாடு உள்ளவர்களைக் கொண்ட நாடு என்ற ‘பெருமை’யை இந்தியாவுக்கு அளித்திருக்கிறது ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாயப் பிரிவு வெளியிட்ட உணவுப் பாதுகாப்பு அறிக்கை. ஐ.நா. சபையின் புத்தாயிரமாண்டு இலக்கு, உலக உணவு மாநாடு இலக்கு இரண்டிலுமே இந்தியா தோல்வியடைந்துவிட்டது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஊட்டக்குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 19.4 கோடி. அதாவது, உலகின் ஊட்டக்குறைபாடு உள்ளவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியர். உலகிலேயே அதிகமான ஊட்டக்குறைபாடுள்ள குழந்தைகளைக் கொண்ட நாடும் இதுதான். ஒவ்வொரு ஆண்டும் ஊட்டக்குறைவால் பாதிக்கப்பட்ட 13 லட்சம் குழந்தைகளை மரணத்துக்குப் பறிகொடுக்கிறோம். தவிர, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஆகப் பெரும்பாலான மரணங்களுக்கான அடிப்படைக் காரணமும் ஊட்டக்குறைவுதான்.
சுதந்திரத்துக்குப் பின் 67 ஆண்டுகள் கழித்தும் ‘மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசு’ நடப்பதாகச் சொல்லப்படும் நாட்டில், இப்படியான நிலை நீடிப்பது அவலம் மட்டும் அல்ல; அத்தனை ஆட்சியாளர்களுக்குமே அசிங்கம். ஆனால், எப்போதுமே வக்கற்ற நாட்டின் ஆட்சியாளர்களிடம்தானே வியாக்கியானங்கள் அதிகம் ஒலிக்கும்? நாட்டிலேயே ஊட்டக்குறைவுள்ள குழந்தைகளை அதிகம் (52%) கொண்ட மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் கதை இது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் முட்டை வழங்கும் திட்டத்துக்கு மத்தியப் பிரதேசத்தில் தடை விதித்திருக்கிறார் பாஜக முதல்வர் சிவராஜ் சௌகான். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான மேனகா காந்தியும் இதற்கு ஒத்தூதியிருக்கிறார். “முட்டையிலுள்ள புரதச்சத்து தொடர்பாக மிகையாகப் பேசுகிறார்கள்; முட்டைக்குப் பதில் காய்கறிகளையே கொடுக்கலாம்” என்பது அவருடைய யோசனை. எல்லாம் சைவ மேட்டிமைவாதத்திலிருந்து பிறக்கும் வார்த்தைகள்.
ஒரு குழந்தைக்குப் பலவித காய்கறிகள் மூலம் கிடைக்கும் சரிவிகித சத்துகளை ஒரேயொரு முட்டையால் நிச்சயம் கொடுக்க முடியாது. ஆனால், குழந்தைகளுக்குத் தேவைப்படும் காய்கறிகளைக் கொடுக்கும் திராணி நம்முடைய அரசாங்கத்துக்கு இருக்கிறதா?
ஒரு 5 வயதுச் சிறுவன் இருக்க வேண்டிய சராசரி உயரம் 109.9 செ.மீ.; எடை 18.7 கிலோ. இந்த வயதில் அவனுடைய ஒரு நாள் புரதச்சத்து தேவை தோராயமாக 16 கிராம். ஒரு முட்டை வெறும் 6 கிராம் புரதச்சத்தையே கொண்டிருக்கிறது. சரி. ஆனால், நம்முடைய அங்கன்வாடிகள் / சத்துணவுக் கூடங்களில் அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளில் உள்ள புரதம் எவ்வளவு? 100 கிராம் காய்/கனிகளில் உள்ள புரதத்தின் அளவு இது: கேரட் - 0.93 கிராம். முட்டைகோஸ் - 1.44 கிராம், பீட்ரூட் - 1.61 கிராம், உருளைக்கிழங்கு - 1.81 கிராம், வாழைப்பழம் 1.1 கிராம்.
நம்முடைய அங்கன்வாடிகள் / சத்துணவுக்கூடங்களில் ஒரு மாணவருக்கான அரசின் அதிகபட்ச காய்கறி, மளிகை ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா? பருப்பு 15 கிராம், மளிகைக்கு 36 பைசா, காய்கறிக்கு 80 பைசா. இதிலும் பருப்பு பயன்படுத்தப்படும் நாட்களில் காய்கறிக்கான ஒதுக்கீட்டில் 10 பைசா குறைந்துவிடும். ஒரு கிலோ 40 ரூபாய்க்குக் குறையாமல் காய்கறிகள் விற்கும் காலத்தில் இந்த 80 பைசா ஒதுக்கீட்டில் ஊழல் போக குழந்தைகளுக்கு எத்தனை காய்கறித் துண்டுகள் கிடைக்கும். அதில் எவ்வளவு புரதம் இருக்கும்? தன்னுடைய குழந்தைகளுக்காக மதிய உணவுத் திட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஒரு ரூபாய்கூடக் காய்கறிக்கு ஒதுக்க முடியாத அரசாங்கம் அவர்களுக்குக் கிடைக்கும் முட்டைக்கும் தடை விதித்துவிட்டு வேதாந்தம் பேசுவது எவ்வளவு அராஜகம்?
அவர்களால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது. இப்படியான அற்ப மத அரசியல் விளையாட்டு பல்லாயிரக் கணக்கான உயிர்களுடனான விளையாட்டு என்பதைக் கூட அவர்களால் உணர முடியாது. அவர்கள் அறிந்திருக்கும் சைவம் அப்படி. நொறுக்குத்தீனி நேரத்திலும்கூட -100 கிராம் எடையில் 20 கிராமுக்குக் குறைவில்லாத புரதத்தைக் கொண்ட பருப்புகளில் புரளுபவர்கள் அவர்கள். பாதாம்கள், பிஸ்தாக்களின் உலகம் வேறு. காக்கா முட்டைகள், கோழி முட்டைகளின் உலகம் வேறு!
-
11th June 2015, 06:56 PM
#3543
Junior Member
Devoted Hubber
watched a german movie yesterday Lola rennt pretty good.. romba peru butterfly effect, chaos theorynnu screenla explain panna try pannirukkanga... intha moviela romba simpla atha puriyira mathiri senche kattirukkanga.. time kedacha i recommend everyone to watch it..
-
11th June 2015, 07:40 PM
#3544
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
PR218
watched a german movie yesterday Lola rennt pretty good.. romba peru butterfly effect, chaos theorynnu screenla explain panna try pannirukkanga... intha moviela romba simpla atha puriyira mathiri senche kattirukkanga.. time kedacha i recommend everyone to watch it..
I watched about 8 years back and got the DVD from local public library... When i watched themovie "oru kanniyum moonu kalavaniyum" ...this movie came to my mind.
In theory there is no difference between theory and practice; in practice there is
-
11th June 2015, 08:03 PM
#3545
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Avadi to America
I watched about 8 years back and got the DVD from local public library... When i watched themovie "oru kanniyum moonu kalavaniyum" ...this movie came to my mind.
i just read it in wiki its based on the the movie i said.. wow.. i thought simbu devan was a film maker with original ideas.. lost respect for him..
-
11th June 2015, 08:36 PM
#3546
Junior Member
Devoted Hubber

Originally Posted by
PR218
i just read it in wiki its based on the the movie i said.. wow.. i thought simbu devan was a film maker with original ideas.. lost respect for him..
Okmk inspired from Hindi movie run Lola run..chimbudevan gave credits at the end of the movie
-
12th June 2015, 05:17 PM
#3547
Senior Member
Senior Hubber

Originally Posted by
interz
Kaaka Muttai - states the fact if a movie wins NA it wont make any impression on the average moviegoer. I felt sleep after 25 mins, I have no idea what happened after wards, last scene I remember is they showed the pizza store catalogue to the kid behind the fence.
Sorry Kaakka mottai is a borefest for me. I hope others with patience will enjoy the movie.
quite the opposite for me. absolutely loved it.
pisasu is the best film i have seen so far in 2015. kaaka muttai comes 2nd.
இலக்கியத்தில் நான் வண்ண தமிழ் மழலைக்கு பாலூட்டும் தாய்
சினிமாவில் விட்டெரியும் காசுக்கு வாலாட்டும் நாய்
-Vaali
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
NOV liked this post
-
12th June 2015, 07:51 PM
#3548
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
mexicomeat
quite the opposite for me. absolutely loved it.
pisasu is the best film i have seen so far in 2015. kaaka muttai comes 2nd.
I watched it multiple time and loved it... haven't seen kaaka muttai...hope to see soon.
In theory there is no difference between theory and practice; in practice there is
-
13th June 2015, 06:44 PM
#3549
Senior Member
Veteran Hubber
jurassic world- They could have stopped the series with second part...<<<< Jurassic park I & II
-
14th June 2015, 12:37 PM
#3550
Junior Member
Senior Hubber
Inimey Ippadithan - Not bad. A decent watch with reasonably funny movements. Climax was a surprise.
Romeo Juliet - Did not like it.
Bookmarks