Page 95 of 401 FirstFirst ... 45859394959697105145195 ... LastLast
Results 941 to 950 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #941
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    நடிகர்திலகம் அவர்களுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கான, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பு மனதில் தேன் பாய்ச்சுகிறது.

    மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி.

    இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு மிக விரைவில் செயல் வடிவம் பெறும் நாளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

    அயராது பாடுபட்ட சகோதரர் சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  2. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #942
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear k c s sir,
    many many happy returns of the day.what a memorable gift to you on your birthday.
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  5. #943
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear aadhavan sir,
    a warm welcome to the glorious thread of nadigar thilagam
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  6. #944
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Yesterday 3.30 show sathyam 90% full as per the status at 2.15pm
    today 3.30 show sathyam 80% full as per the status at 1.00pm
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  7. #945
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Daily Thanthi



    மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு




    முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களையும், தமிழ்மொழியின் வளர்ச்சிக் காகவும், உரிமைக்காகவும் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்த தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்து வதிலும், அவர்களது பெருமை களை வருங்கால சந்ததியி னர் அறிந்து பின்பற்றும் வகை யில் நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்கள் எழுப்பி மரியாதை செய்வ திலும் எனது தலைமை யிலான அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கு கிறது.

    அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், பொறியியல் அற்புதமான கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன், தென் தமிழகத்தின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் ஆகியோருக்கு மணி மண்டபங்களும் தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டு என்னால் திறந்து வைக்கப்பட்டன.

    மேலும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியா தைச் சுடரொளி ஜீவரத்தினம், மனு நீதிச் சோழன், சுவாமி சகஜானந்தா, ஹைதர் அலி - திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்க வும், தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்ப வும் என்னால் ஆணையிடப் பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

    நடிகர்களில் சிறப்பிடத்தைப் பெற்றவரும், 'இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தன் திறமையை வெளிப் படுத்தியதன் காரணமாக தந்தை பெரியாரால் 'சிவாஜி கணேசன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவரும், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவரும், 'நடிகர் திலகம்' என்று மக்களால் போற்றப்பட்டவரும், 'கலைமாமணி', 'பத்ம ஸ்ரீ', 'பத்மபூஷன்', 'செவாலியே', 'தாதா சாகேப் பால்கே விருது' ஆகிய விருதுகளுக்கு சொந்தக்காரரும், 'வீர பாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்', போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்து, அவர்களின் பங்களிப்பினை திரைப்படங்கள் மூலம், பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றவருமான சிவாஜி கணேசனின் கலைச் சேவையை பாராட்டிடும் வகையிலும், அவரது நினைவைப் போற்றிடும் வகையிலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டு கோளை ஏற்று, நடிகர் சங்கம் சார்பாக நினைவகம் அமைக்கும் வகையில், சென்னை மாவட்டம், அடையாறு பகுதி சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தினை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கிட 26.9.2002 அன்று நான் உத்தர விட்டேன்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சிவாஜி கணேசனுக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கித் தரும்படி, கேட்டுக் கொண்ட தன் பேரில் நான் இந்த உத்தரவை வழங்கினேன். அதன் பேரில் மைலாப்பூர் வட்டாட்சியர் அவர்களால் இந்த இடம் தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைக் கப்பட்டது.

    அவ்வாறு ஒப்படைக்கப் பட்ட இடத்தின் ஊடே நீதியரசர்கள் குடியிருப்பு களுக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால், நீதியரசர்கள் குடியிருப்புக்குச் செல்ல தனியே சாலை அமைப்பதன் செலவான 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்திட வேண்டுமென அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களால் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க இயலும் என தெரிவித்து அதனை 26.7.2004 அன்று வழங்கினர். எனவே, புதிய அணுகு சாலையை அமைப்பதற்கான மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எனது தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.

    சிவாஜி கணேசன் மணி மண்டபம் அமைப்பதற்கு வழங்கப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் ஒன்றை 13.2.2006 அன்று எனது தலைமையிலான அரசே அமைத்தது. தென்னிந்திய நடிகர் சங்கம், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தாங்களே அமைத்து விடுவோம் என்று தெரிவித்த காரணத்தால் எனது தலைமையிலான அப்போதைய அரசு மணி மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும் என்று அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் நான் அப்போதே வழங்கியிருப்பேன்.

    சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக எனது அரசால் வழங்கப்பட்ட இடத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இதுவரை நினைவகம் அமைக்கப்படவில்லை. அந்த இடத் தில் தமிழக அரசே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  8. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Georgeqlj, Subramaniam Ramajayam liked this post
  9. #946
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இனிமையான, மகிழ்சிகரமான செய்தி - உலக தமிழர்க்கு உண்மையான தமிழர்க்கு !

    நமது நடிகர் திலகம் அவர்களுக்கு உண்மையான ரசிகர்களுக்கு, அவர் மீது பற்றும் அன்பும் கொண்ட அனைத்து நல உள்ளங்களுக்கு மிக நல்ல செய்தியாக இது இப்போதாவது வந்தது.



    சட்டசபையில் நடிகர் சங்கத்தின் கையாலாகாதனத்தை முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் குறிப்பிட்டு பேசியது மிகவும் வரவேற்க தகுந்த விஷயம். எங்களுக்கு அதை கட்டுவதற்கு எங்களுக்கு வழியில்லை என்று அப்போதே நடிகர் சங்கம் கூறியிருந்தால் மணிமண்டபத்தை என்றோ நான் கட்டியிருப்பேன் என்று கூறிய முதல்வர் செல்வி ஜெயலலிதா, "நாங்களே கட்டுகிறோம்" என்று வாய் சவடால் விட்டு வாய்தா வாங்கிய நடிகர் சங்கத்தின் இப்போதைய தலைவர் சரத்குமார் மற்றும் கும்பலுக்கு மிக பெரிய குட்டு கொடுத்தார் என்பது கூடுதல் தகவல்.

    CONGRESS இன் INSTANT சதி !
    CONGRESS அமைச்சர் ஒருவர் நடிகர் திலகம் CONGRESS ஐ சேர்ந்தவர் என்று ஒரு EGO முதல்வருக்கு கிளப்பி அதன் மூலம் மணிமண்டபம் கட்டுவதை தடை செய்யலாம் என்று மனப்பால் குடித்து சதியை சட்டசபையில் கட்டவிழ்த்தார்.

    அந்த அமைச்சர் முகத்தில் அறைந்தாற்போல, தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் உடனே இடைமறித்து நடிகர் திலகம் என்பவர் எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல ! அவர் இந்தியாவுக்கு, இன்னும் சொல்லபோனால் உலக தமிழர்களுக்கு சொந்தமானவர் என்று புகழுரை கூறியது அனைவரயும் மெய் சிலிர்க்கவைத்து மிகுந்த ஆரவாரத்தை கைதட்டல் மூலம் சட்டசபையில் ஏற்படுத்தியது !

    முதல்வர் அவர்கள் நமது நடிகர் திலகத்துடன் சுமார் 17 படங்கள் நடித்துள்ளார். அதில் முக்கால் வாசி SUPERHIT ரக படங்கள், நடிகையாக இருந்த காலத்தில் FORMALITY க்கு மட்டும் கதாநாயகியாக இல்லாமல் நடிகர் திலகம் திரைப்படங்களில் மிக சிறந்த நடிகையாகவும் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது !








    முதல்வருக்கு எங்கள் நன்றி !

    MOST IMPORTANTLY -

    SIVAJI SAMUGA NALA PERAVAI FOUNDER Mr. CHANDRASEKHAR Sir !

    What can i say about the time at which you started the KOARIKKAI UNNA VIRADHAM !!
    GURU HORAI ! SUBAMUGOORTHTHAM ! PATTOLI VEESIDUM VETRI !!

    YOUR REQUEST HAS BEEN FAVOURABLY CONSIDERED..! THANKYOU SIR...

    NADIGAR THILAGAM's SOUL is With You by all means is what this announcement indicates !

    ATLEAST NOW, WE WISH, THE DIFFERENCE OF OPINION BETWEEN GROUPS VANISH & STAY UNITED FOREVER !!!

    RKS
    Last edited by RavikiranSurya; 26th August 2015 at 01:37 PM.

  10. #947
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Atleast now, we wish, the difference of opinion between groups vanish & stay united forever !!!



    Exactly.

  11. Likes Georgeqlj liked this post
  12. #948
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    நடிகர் சிவாஜி கணேசன் யாருக்கு சொந்தம்?- விஜயதாரணிக்கு ஜெயலலிதா பதில்


    நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தம் கொண்டாடி பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.

    மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி விதி எண் 110-ன் கீழ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, "பேரவைத் தலைவர் அவர்களே, நடிகர் திலகm சிவாஜி கணேசன் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. அவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல.

    இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானவர். ஆகவே, அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

  13. Likes Georgeqlj liked this post
  14. #949
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    என்றென்றைக்கும் புத்தம்புது பொலிவுடன் திகழும் நடிகர்திலகத்தின் வரலாற்றுக்காவியமான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைக்காவியத்தின் மெருகேற்றப்பட்ட வடிவத்தின் கோலாகல வெளியீட்டையும், அதன் இமாலய வெற்றியையும் தாங்கள் அனுபவித்தது மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் என்னைப்போன்ற பல்லாயிரக் கணக்கான ரசிகர்களும் கண்டுகளிக்கும் வண்ணம் எழுத்து வடிவத்திலும், நிழற்படங்களாகவும், வீடியோ வடிவமாகவும் அளித்து மகிழ்வுற வைத்த அனைத்து நண்பர்களுக்கும், ரசிக நெஞ்சங்களுக்கும் நன்றி.

    வீரபாண்டிய கட்டபொம்மன் ரசிகர்கள் மட்டும் பார்க்கவேண்டிய படமல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் காண வேண்டிய காவியம் என்று கட்டுரை வாயிலாக வடித்த சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.

  15. #950
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Courtesy: Tamil Hindu

    நடிகர் சிவாஜி கணேசன் யாருக்கு சொந்தம்?- விஜயதாரணிக்கு ஜெயலலிதா பதில்


    நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தம் கொண்டாடி பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.

    மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி விதி எண் 110-ன் கீழ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, "பேரவைத் தலைவர் அவர்களே, நடிகர் திலகm சிவாஜி கணேசன் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. அவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல.

    இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானவர். ஆகவே, அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
    great great news GOLDEN MOMEMENTS IN MY-OUR LIFE kattabomman really made us to remember him for ever.
    THANK YOU AMMA AMMA FOR YOUR MAGNAMIOUS GENEROCITY,
    aS RAGHAVENDER mentioned it should a milestone in all aspects AND NOT A SIMPLE MADAPAM
    VALGA VALRGA NADIGARTHILAGAM PUGAL.

  16. Likes eehaiupehazij, Georgeqlj liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •