-
1st June 2016, 06:08 PM
#2111
Senior Member
Veteran Hubber
'ஜில் ஜங் ஜக்' படத்துக்கு பின் சித்தார்த்தின் அடுத்த திட்டங்கள்
'ஜில் ஜங் ஜக்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சித்தார்த்.
'ஜில் ஜங் ஜக்' படத்தை தயாரித்து அதில் நாயகனாக நடித்தார் சித்தார்த். அப்படத்தைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் குறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சித்தார்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் தனது அடுத்த திட்டங்கள் குறித்து சித்தார்த், "கப்பல் இயக்குநர் கார்த்திக் க்ரிஷ் இயக்கத்தில் 'சைத்தான் கா பச்சா' வெளிவரவிருக்கிறது. இது ஒரு நகைச்சுவை பொழுதுபோக்குப் படம். அடுத்ததாக இயக்குநர் சசியின் இயக்கத்தில் ஓர் உணர்வுப்பூர்வமான படத்தில் நடிக்கிறேன். அவரோடும், அதில் இசையமைக்கும் ஜிவி பிரகஷோடும் இணைவதில் மகிழ்ச்சி.
தொடர்ந்து விளம்பரப்பட இயக்குநர் ரதிஷ் அம்பட் இயக்கத்தில், முரளி கோபியின் திரைக்கதையில் பிரபல மலையாள நடிகர் திலீப்புடன் எனது முதல் மலையாளப் படத்தை தொடங்கவுள்ளேன். 2016-ஆம் ஆண்டு எனது நான்காவது படமாக, ஒரே சமயத்தில் இந்தி-தமிழ்-தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரு படம் உருவாகவுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜுன் 10-ஆம் தேதி வெளியாகும்.
எனது இந்தப் படங்கள் மூலம் என் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியும் என நம்புகிறேன். தொடர்ந்து வரும் உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. அதுதான் எனக்கு தூண்டுகோலாக இருக்கிறது.
மற்ற மொழிகளில் நடித்ததைப் போல எனது (முதல்) மலையாள படத்திலும் எனக்கு நானே பின்னணி பேசவிருக்கிறேன். அதில் சந்தேகம் வேண்டாம்." என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
1st June 2016 06:08 PM
# ADS
Circuit advertisement
-
2nd June 2016, 11:45 AM
#2112
Senior Member
Veteran Hubber
Taiwanese Film Festival Inauguration
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
2nd June 2016, 03:55 PM
#2113
Senior Member
Veteran Hubber
திருமண வாழ்க்கைக்கு உண்மையும் விட்டுத்தருவதும் முக்கியம்: சன்னி லியோன் பேட்டி - Tamil THE HINDU
வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு உண்மையும், விட்டுக்கொடுத்தலும் தான் முக்கியம் என்கிறார் நடிகை சன்னி லியோன். திரையுலக நட்சத்திர தம்பதிகளுக்கிடையில் பிரச்சினைகள் எழுவது சகஜம். இந்த வருடம் பாலிவுட்டில், இரண்டு ஜோடிகள் பிரிந்துவாழ முடிவு செய்துள்ள நிலையில், சன்னி லியோன் தன்னுடைய திருமண வாழ்வின் ரகசியத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
2009-ல் டேனியல் வெபரைத் திருமணம் செய்துகொண்டார் சன்னி லியோன். அவர் சினிமா, திருமண வாழ்க்கை குறித்துப் பேசியதாவது:
வெற்றிகரமான மணவாழ்க்கைக்கு என்ன தேவை?
திருமண வாழ்க்கைக்கு முக்கியம் உண்மை பேசுவதும், விட்டுக்கொடுப்பதுதான். 'மகிழ்ச்சியான மனைவி இருந்தால், மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்கும்' என்ற கூற்றை நம்புகிறேன். ஆனால் அதைத் தாண்டி, விட்டுக்கொடுப்பது, எல்லையில்லாத அன்பு, மனம் விட்டுப் பேசுவது, உண்மையாய் இருப்பது ஆகியவையும் முக்கியம்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்காமல் சில விஷயங்களுக்கு விட்டுக்கொடுத்துப் போகவேண்டும். அதுதான் முக்கியத்தேவை.
2012-ல் வெளியான ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நீங்கள், சினிமா துறையில் அந்நியன் போல உணர்வதாகக் கூறினீர்கள். இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
எல்லாத் துறையிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். சில நல்ல மனிதர்களை இங்கு சந்தித்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
தற்போது ராகுல் தோலக்கியா இயக்கத்தில் ஷாருக் கானுடன், ரயீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறீர்கள். அந்தப்பாடல் 1980-ல் வெளியான குர்பானி படத்தின் லைலா ஓ லைலா பாடலை ஒத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் ஃபெரோஸ் கானும், ஜீனத் அமனும் நடித்திருப்பார்கள். இப்போது ஷாரூக்குடனான உங்கள் அனுபவம் எப்படி இருக்கிறது?
என்னுடைய கனவு இப்போது நனவாகி இருக்கிறது. அவருடன் வேலை பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ஷாரூக்கானுடன் நாயகியாக நடிக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
படங்களின் தோல்வி உங்களை வருத்தமடையச் செய்யுமா?
கண்டிப்பாக. ஒரு படத்தில் வேலை பார்க்கும்போது முழு மனதோடுதான் பணிபுரிகிறோம். படம் சரியாகப் போகாமல், தோல்வி அடைந்தால் கண்டிப்பாய் அது என்னை பாதிக்கும்.
திரைப்படங்களில் நடிப்பது தவிர?
இளைஞர்கள் சம்பந்தமான உண்மைச் சம்பவத் தொகுப்பான எம்டிவியின் 'ஸ்பிளிட்ஸ்வில்லா சீசன் 9'-ஐ தொகுத்து வழங்க இருக்கிறேன். என்னுடன் ரண்விஜய் சின்ஹாவும் இணைந்துள்ளார். இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் வாழ்க்கையின் உண்மைத் தன்மையை வெளிக்காட்டுகின்றன.
முந்தைய 'ஸ்பிளிட்ஸ்வில்லா' நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு இடையே நடந்த வார்த்தைப் பூசல்கள் குறித்து?
மனிதர்கள் திடீரென்று வருத்தப்படுவார்கள்; கோபப்படுவார்கள். அவர்களுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரியாது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமாக இருப்பதால்தான் அவற்றைப் பார்க்கிறோம். இப்போது அடுத்தவரின் வாழ்க்கை அதைவிட சுவாரஸ்யமாக இருப்பதால் ரியாலிட்டி ஷோக்களைப் பார்க்கிறோம். நானும் ரண்விஜய்யும் நிகழ்ச்சிகளில் தனிமனித தாக்குதல்களை அனுமதிக்கப் போவதில்லை. அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வோம்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
3rd June 2016, 03:26 PM
#2114
Senior Member
Veteran Hubber
Pichaikkaran in Telugu
was a dull one for Tollywood box office as Rayudu(Marudhu) failed to make an impression. Despite drawing the attention of the masses, Rayudu failed to make use of it as it didn’t suit the sensibilities of our audience. Bichagadu(Pichaikkaran) made use of the vacuum and went on to become a much bigger hit.
As per trade sources Bichagadu has grossed around 6 crore until now. The investors that bought the film’s rights for half a crore have hit a jackpot. Brahmotsavam’s dismal show is another reason for Bichagadu’s phenomenal success
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
8th June 2016, 01:38 PM
#2115
Senior Member
Veteran Hubber
அந்தக் குழந்தையே நான்தான் - ‘ சந்திரமுகி பொம்மி’ - பிரகர்ஷிதா ஜாலி பேட்டி - VIKATAN
''கொக்கரக்கோ சேவல் வந்து என்ன பேரு கூவுது ?
வேல் வேல் வேல்முருகா வேல்..
இந்தப் பாட்டைக் கேட்டதும் ‘வேலன்’ நாடகம் ஞாபகம் வருதா? அந்த வேலன் நாடகத்துல நடிச்ச இந்த வேலாயி-தான் , ‘ஏ பொம்மி... ஏஏ பொம்மி... ’ என்று ரஜினி சந்திரமுகியில் அழைத்த ’குழந்தை’. இப்ப என்ன பண்ணுது அந்தக் ‘குழந்தை’?
சென்னை மயிலாப்பூரில் ஷாப்பிங்ல பிஸியாயிருந்த பொம்மியை மடக்கிப் பிடித்தோம். '' அய்யோ அக்கா என் பேர் " பிரகர்ஷிதா " என்றார், சந்திரமுகியில் பார்த்த அதே குழந்தை சிரிப்புடன்..
உங்களை இப்போ டி.வில பார்க்கமுடியலையே?
கடைசியா சிம்ரன் மேடம் பொண்ணா "அனுவும் நானும்" சீரியல்-ல நடிச்சேன். அப்போ நான் சிக்ஸ்த் படிச்சிட்டு இருந்தேன் .தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தது. ஒரு நாள் அம்மா ''நடிக்கபோறியா இல்ல படிக்கப்போறியா’ன்னு கேட்டாங்க. நான் படிப்பு தான்னு முடிவெடுத்துட்டேன்.
அது சரி.. அதுக்குன்னு இவ்ளோ பெரிய இடைவெளியா ?
ஒரு தடவ நான் கபாலீஸ்வரர் கோயில் போயிருந்தேன். அங்க ஒரு 6 வயசு பாப்பா, அம்மாவைத் தொலைச்சுட்டு அழுதுட்டு இருந்துச்சு. அந்தக் குழந்தைய தூக்கிட்டு அவங்க அப்பா அம்மாவைத் தேடினேன். கடைசியா சிவன் சன்னதியில அவங்க அம்மா சாமி கும்பிட்டுட்டு இருந்தாங்க. குழந்தையை பதறி வாங்கினவங்க, என்னைப் பார்த்து ‘நீதானே சந்திரமுகியில நடிச்ச?’ன்னு கேட்ட கேள்வியை இப்ப வரைக்கும் மறக்க முடில. குழந்தை காணாம போன பதற்றம் கூட அவங்க முகத்துல பார்க்கலை. என்னவோ அந்த நிமிடம், கொஞ்ச நாள் ஃபீல்டுக்கு பிரேக் விடலாம்னு தோணுச்சு அவ்வளவு தான்.
இப்போ என்ன பண்றீங்க ?
எம்.ஓ.பி வைஷ்ணவ் காலேஜ்ல பிஎஸ்சி எலக்ட்ரானிக் மீடியா செகண்ட் இயர் படிக்கிறேன். அடுத்து பிஜி படிக்கணும். ஸ்கிரிப்ட் எழுதுறதுக்கான முயற்சிகள் பண்ணிட்டு இருக்கேன் .
காலேஜ்ல உங்களுக்கு ஃபேன்ஸ் இருக்காங்களா?
நானே போய் யார் கிட்டயும் சொன்னதில்லை. யாரும் அப்படி கண்டுபிடிச்சாலும் சிரிச்சிட்டே போய்டுவேன்.
சரி, உங்க எதிர்கால திட்டம் தான் என்ன?
சின்ன வயசுல டாக்டர் ஆகணும்னு நினைச்சேன். இப்போ சினிமா தான் கனவே. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி மாதிரி பெரிய இயக்குநர் ஆகணும். என் படத்துல மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கணும். ஹாலிவுட் “ரூம்” மாதிரி ஒரு படம் பண்ணனும்.
நீங்க நடிச்சதுலயே பிடிச்ச படம் அல்லது சீரியல் ?
கண்டிப்பா சந்திரமுகி படத்துல நடிச்ச பொம்மி கேரக்டர் தான். கொஞ்ச நேரம் வந்தாலும் நல்ல ரீச். எல்லாரும் பொம்மிதான் என் பேருன்னு நினைச்சி பொம்மி பொம்மின்னு கூப்பிட்டாங்க .
உங்க ட்ரீம் பாய், கேர்ள்?
''கங்கனா ரனாவத், ட்ரீம் பாய்னா ஃபவாத் கான், மேடி
உங்க குடும்பம் பத்தி?
என் பாட்டிதான் டானிக், டேப்லட் எல்லாம். என் கனவுக்கு அவங்க தான் வழிகாட்டி.
ராஜராஜேஸ்வரி சீரியலில் முருகனா வந்து உபதேசம் கொடுப்பீங்கல்ல, அப்படி ஒரு மெசேஜ் சொல்லுங்க?
யாருக்காகவும் உங்க கனவை விட்டு கொடுக்காதிங்க. கனவை நோக்கி ஓடுங்க.
சிறந்த இயக்குநராக வாழ்த்துகள் பொம்மி... ஸாரி.. ஸாரி.. பிரகர்ஷிதா!
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
mappi thanked for this post
-
8th June 2016, 02:30 PM
#2116
Junior Member
Newbie Hubber

Originally Posted by
balaajee
Time goes by so fast.
-
8th June 2016, 03:58 PM
#2117
Senior Member
Veteran Hubber
ஐ 8, என்னை அறிந்தால், பாபநாசம் 5.. ஃபிலிம்ஃபேர் முழுமையான பரிந்துரைப் பட்டியல்!
தேசிய விருதையடுத்து, மிகப்பெரிய கௌரவமாக திரையுலகினரால் மதிக்கப்படும் ஃபிலிம்ஃபேர் விருதுகளின் 63வது ஆண்டின் விருதுக்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. கடந்த வருடத்திற்கான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
விருது வழங்கும் விழா வரும் ஜுன் 18ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த விருதுகளுக்கு தமிழில் விக்ரமின் ‘ஐ’ 8 பிரிவுகளிலும், அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ , கமலின் ‘பாபநாசம்’ ஜோதிகாவின் 36 வயதினிலே, மற்றும் ஜெயம்ரவியின் தனி ஒருவன் படங்கள் தலா ஐந்து பிரிவுகளிலும் என அதிகமான பரிந்துரைகளில் இடம்பிடித்துள்ளன. ஃபிலிம் ஃபேர் விருதுகளுக்கான முழுமையான பரிந்துரைப் பட்டியல்:
சிறந்த படம்
36 வயதினிலே |
ஐ |
காக்கா முட்டை |
ஓ காதல் கண்மணி |
பாபநாசம் |
தனி ஒருவன் |
சிறந்த நடிகர்
அஜித் குமார் (என்னை அறிந்தால்) |
தனுஷ் (அனேகன்) |
ஜெயம் ரவி (தனி ஒருவன்) |
கமல்ஹாசன் (பாபநாசம்) |
விக்ரம் (ஐ) |
சிறந்த நடிகை
ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை) |
கௌதமி (பாபநாசம்) |
ஜோதிகா (36 வயதினிலே) |
நயன்தாரா (நானும் ரௌடிதான்) |
நித்யா மேனன் (ஓ காதல் கண்மணி) |
சிறந்த துணை நடிகை
ஆஷா சரத் (பாபநாசம்) |
தேவதர்ஷினி (36 வயதினிலே) |
லீலா சாலமன் (ஓகே கண்மணி) |
பார்வதி நாயர் (என்னை அறிந்தால்) |
ராதிகா சரத்குமார் (தங்கமகன்) |
சிறந்த இசை
அனிருத் ரவிச்சந்தர் (மாரி) |
அனிருத் ரவிச்சந்தர் (நானும் ரௌடிதான்) |
ஏ.ஆர்.ரகுமான் (ஐ) |
ஏ.ஆர்.ரகுமான் (ஓ காதல் கண்மணி) |
ஹாரிஸ் ஜெயராஜ் (என்னை அறிந்தால்) |
சிறந்த பாடலாசிரியர்
கபிலன் (என்னோடு நீ இருந்தால் - ஐ) |
மதன் கார்க்கி (பூக்களே சற்று - ஐ) |
தாமரை (உனக்கென்ன வேணும் சொல்லு - என்னை அறிந்தால்) |
விக்னேஷ் சிவன் (தங்கமே - நானும் ரௌடிதான்) |
விவேக் (வாடி ராசாத்தி - 36 வயதினிலே) |
சிறந்த பின்னணிப் பாடகர்
அனிருத் ரவிச்சந்தர் (தங்கமே - நானும் ரௌடிதான்) |
ஏ.ஆர்.ரகுமான் (மென்டல் மனதில் - ஓ காதல் கண்மணி) |
தனுஷ் (ஓ... ஓ... - தங்கமகன்) |
சித் ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால் - ஐ) |
விஜய் (ஏண்டி ஏண்டி - புலி) |
சிறந்த பின்னணி பாடகி
கரிஷ்மா ரவிச்சந்திரன் (காதல் கிரிக்கெட் - தனி ஒருவன்) |
நீத்தி மோகன் (நீயும் நானும் - நானும் ரௌடிதான்) |
ஸ்ரேயா கோஷல் (பூக்களே சற்று - ஐ) |
ஸ்ருதிஹாசன் (ஏண்டி ஏண்டி - புலி) |
ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல - தங்கமகன்) |
சிறந்த இயக்குனர்
மோகன் ராஜா (தனி ஒருவன்) |
ஜித்து ஜோசப் (பாபநாசம்) |
மணிரத்னம் (ஓ காதல் கண்மணி) |
மணிகண்டன் (காக்கா முட்டை) |
ரோஜன் ஆண்ட்ரீவ்ஸ் (36 வயதினிலே) |
ஷங்கர் (ஐ) |
Last edited by balaajee; 8th June 2016 at 04:04 PM.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
8th June 2016, 04:39 PM
#2118
Senior Member
Veteran Hubber
'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' 'U/A' உடன் ஜூன் 17-ல் ரிலீஸ்
சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் ஜூன் 17ம் தேதி வெளியாகவுள்ளது.
'டார்லிங்' படத்தைத் தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வந்த படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. ஆனந்தி, சரவணன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டன.
பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் சில இருப்பதால் 'U/A' சான்றிதழ் அளித்தார்கள்.
தணிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம், இப்படம் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
9th June 2016, 11:34 AM
#2119
Senior Member
Veteran Hubber
BOLLYWOOD
'உட்தா பஞ்சாப்' படத்தில் 89 'வெட்டு'- அரசியல் நெருக்கடி குற்றச்சாட்டுக்கு சென்சார் தலைவர் மறுப்பு
சர்ச்சைக்குரிய ‘உட்தா பஞ்சாப்’ திரைப்படம் ஜூன் 17-ம் தேதி ரிலீஸாக வேண்டும்
“ஆம் ஆத்மியிடம் பணம் பெற்றுக் கொண்டு அனுராக் காஷ்யப் பஞ்சாப் மாநிலத்தை மோசமாக சித்தரித்துள்ளார்” என்று சென்சார் வாரியத் தலைவர் பலஜ் நிஹலானி கூறியுள்ளார்.
அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் தயாரித்துள்ள ‘உட்தா பஞ்சாப்’ படத்தை வெளியிடுவது தொடர்பாக பஞ்சாப் அரசு தனக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்கவில்லை என்/று சென்சார் வாரியத் தலைவர் பலஜ் நிஹலானி தெரிவித்துள்ளார்.
அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் பஞ்சாப் மாநிலம் போதை மருந்து வசம் சிக்கியுள்ளது பற்றி விரிவாகச் சித்திரப்படுத்தியுள்ளதாக எழுந்த செய்திகளையடுத்தே கடும் சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான அனுராக் காஷ்யப்பின் ஃபேண்டம் பிலிம்ஸ் விவகாரத்தை கோர்ட் ரீதியாக எதிர்கொள்ளும் அதேவேளையில் அரசியல் தலைவர்களோ, சென்சார் வாரியத் தலைவர் பஞ்சாப் அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
படத்தின் காட்சிகளில் 89 இடங்களில் கத்தரி போட வேண்டுமென்று சென்சார் வாரியம் முடிவெடுத்ததோடு, தலைப்பிலிருந்து ‘பஞ்சாப்’ என்பதை அகற்றவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் சென்சார் வாரியத்தின் மீது சாடல் மழை பொழிந்துள்ளார்.
ஆனால் சென்சார் வாரியத் தலைவர் நிஹலானியோ, “அனுராக் காஷ்யப் ஆம் ஆத்மியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பஞ்சாப் மாநிலத்தை மோசமாகக் காட்டியுள்ளார் என்று நான் கேள்விப்பட்டேன்” என்று கூறி வருகிறார்.
இதற்கிடையே ஆம் ஆத்மியின் ஆஷிஷ் கேத்தன் கூறும்போது, “உட்தா பஞ்சாப் பட விவகாரத்தில் மோடி அரசு தனது கறைபடிந்த அரசியல் விளையாட்டை விளையாடக்கூடாது” என்று கூறியுள்ளார்.
சென்சார் வாரியத் தலைவர் நிஹலானி ‘சர்வாதிகாரி’ போல் செயல்படுகிறார் என்று அனுராக் காஷ்யப் கூறியது குறித்து நிஹலானியிடம் கேட்ட போது, “இது அவரது சொந்தக் கருத்து. அது அவரது தெரிவு. பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்திற்காக போராடி வருகின்றனர், இது அவர்களது பொறுப்பு. ஆனால் ஒரு படம் பொதுமக்கள் பார்வைக்குச் செல்லும் போது அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் வழிதான் நாங்கள் இயங்க முடியும்” என்றார்.
தலைப்பிலிருந்து பஞ்சாப் என்ற வார்த்தையை நீக்க வலியுறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு நிஹலானி கூறும்போது, “அவர்கள் உரிமைத் துறப்ப்பு வாசகங்களைச் சேர்த்திருந்தாலும் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனையே என்றாலும் ஒட்டுமொத்த படமும் பஞ்சாப் பற்றியதாக உள்ளது, பெயர்கள் பஞ்சாப் பெயர்களாக இருக்கின்றன. எனவே எங்களுக்கான காரணங்கள் உள்ளன, விதிமுறைகளின் படி நாங்கள் ‘கட்’ செய்யலாம். அதனால்தான் கட் செய்தோம்.
படத்திலிருந்து நீக்கிய காட்சிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய கடிதத்தை நாங்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் அளிக்க மறுக்கவில்லை, அவர்கள்தான் கடிதத்தை பெறவில்லை. ஆனால் நேராக ஊடகங்களிடம் சென்று விவகாரத்தை பெரிது படுத்துகின்றனர்.
நாங்கள் படத்தயாரிப்பாளர்களை திங்களன்று சந்தித்து நீக்கிய பகுதிகள் குறித்து தெரிவித்தோம். அதற்கு அவர்களும், நீக்கியபிறகு சான்றிதழ் அளிப்பீர்களா? என்றனர், நானும் ஆம் என்றேன். ஆனால் அவர்கள் கடிதத்தை பெற்றுக்கொள்ள வரவில்லை. அவர்கள் நேரடியாக ஊடகங்களிடம் சென்றனர். இன்று கடிதத்தை பெற்றுக் கொள்ள வந்தனர்” என்றார்.
தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
சென்சார் வாரியத் தலைவர் நிஹலானிக்கும், படத்தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் இப்போது ஏற்பட்டது அல்ல. கடந்த ஆண்டு அவர் நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகள் ஏற்பட்ட வண்ணமே இருந்தன.
ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ‘ஸ்பெக்டர்’ படத்தில் வந்த முத்தக்காட்சியின் நீளத்தைக் குறைத்தார், அனுஷ்கா சர்மாவின் என்.எச்.10, மற்றும் அலிகார் போன்ற படங்களில் ஏகப்பட்ட காட்சிகளை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
9th June 2016, 02:21 PM
#2120
Senior Member
Veteran Hubber
'உறியடி' மீண்டும் ரிலீஸ்: இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள்
'உறியடி' திரைப்படத்தை மீண்டும் வெளியிடுவது தொடர்பாக அப்படத்தின் இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜயகுமார், மைம் கோபி, சந்துரு குமார், சிவகுமார், ஜெயகாந்த் வேலு உள்ளிட்ட பலர் நடிக்க விஜயகுமார் இயக்கி, தயாரித்த படம் 'உறியடி'. மே 27ம் தேதி வெளியான இப்படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டிய திரைப்படம் என்று தங்களது ஆதரவை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தார்கள். இப்படம் வெளியான போது, தமிழகத்தின் சில இடங்களில் வெளியாகவில்லை. இப்படம் வெளியாகி 2 வாரங்கள் முடிவடைய இருப்பதால், பல திரையரங்குகளில் இருந்து எடுத்துவிட இருக்கிறார்கள்.
இது குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் விஜயகுமார், "அன்பு ரசிகர்களே, நீங்கள் சென்னைவாசி என்றால், உங்களுக்கு 'உறியடி' படம் பார்க்க வேண்டும் என்றால் நாளை திரையரங்கத்துக்கு செல்லுங்கள். வெள்ளிக்கிழமை ஒரு காட்சியை தாண்டி படம் நீட்டிக்கப்படுமா எனத் தெரியவில்லை.
மற்ற நகரங்களிலும் படத்தின் வெளியீட்டை விரிவுபடுத்த அதிகபட்ச முயற்சிகள் எடுத்து வருகிறோம். படத்தைப் பற்றி மக்கள் ட்விட்டர்/பேஸ்புக் போன்ற இடங்களில் பேசி, விவாதித்து, படத்தை தங்கள் ஊரில் பார்க்க விரும்புகிறார்கள் என வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நிரூபித்தால் மட்டுமே படம் வெளியாகும்.
உங்கள் ஊர்களில் படம் வெளியாகுமா என நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் தான். ஆனால் முடியவில்லை. விரைவில் திரையரங்க பட்டியலை வெளியிடுகிறேன். பண்பலை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. 'உறியடி' படத்தை கொண்டு சேர்க்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு விட்டேன்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
Bookmarks