-
29th March 2010, 12:10 PM
#141
Senior Member
Seasoned Hubber
விஜய் டி.வி.யின் காதல் இசை நிகழ்ச்சி
1960 முதல் 2010 வரையில் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் காதல் பாடல்களுக்கென விஜய் டி.வி. ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.
ஐம்பதாண்டு கால காதல் பாடல்களை ஒரே மேடையில் முற்றிலும் இளையதலைமுறைப் பாடகர்களின் குரலில் ஒலிக்கச் செய்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
இதற்காக, தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக 'மாஷ்பிட்' என்ற புதிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கத்திய நாடுகளின் ராக் இசை நிகழ்ச்சியில் இடம்பெறுவது போல ரசிகர்கள் மேடைக்கு மிக அருகில் சென்று உற்சாகமாக நிகழ்ச்சியை ரசிக்கவும் நடனமாடவும் செய்யலாம்.
இதில் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஷ்ருதிஹாசன் பங்கேற்று காலத்தால் அழியாத பல பழைய மற்றும் புதிய காதல் பாடல்களைப் பாடுகிறார். அவருடன் நேகாபஸின், சுனிதாசாரதி, பிளாசே, ஹரிசரண், விஜய்பிரகாஷ் போன்ற பிரபல இளம் பாடகர்களும் இணைந்து பாடுகிறார்கள்.
இந்த இசை நிகழ்ச்சி, சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்) வரும் சனிக்கிழமை (மார்ச் 27) மாலை நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை சென்னை நுங்கம்பாக்கம், ஜகன்னாதன் சாலையில் உள்ள விஜய் டி.வி. அலுவலகத்தில் நேரில் (வியாழக்கிழமை மட்டும்) பெற்றுக்கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
இந்த காதல் இசை நிகழ்ச்சியின் தொகுப்பு, ஏப்ரல் 14}ம் தேதி விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
http://dinamani.com/edition/story.as...41&SEO=&Title=
-
29th March 2010 12:10 PM
# ADS
Circuit advertisement
-
29th March 2010, 12:17 PM
#142
Senior Member
Seasoned Hubber
ஞாயிறு கொண்டாட்டம்
நடிப்பதில் ஆர்வம் இல்லை!
விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கொஞ்சும் தமிழில் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷில்பா. "நம் வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்தில் அவரைச் சந்தித்தோம். நம்மிடமும் கொஞ்சும் தமிழில் பேசினார். இனி அவருடன்..
* உங்களைப் பற்றி சொல்லுங்கள்?
எனக்கு பூர்வீகம் கேரளா. நான் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். ஐந்து வருடமாக இந்துஸ்தானி மியூசிக் கற்று வருகிறேன். என் தங்கை என்ஜினீயரிங் படிக்கிறாள். எங்களுடையது சிறிய அன்பான குடும்பம்.
* தற்போது என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகிறீர்கள்?
"நம் வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியை ஒன்றரை வருடமாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். அதைத்தவிர டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறேன். தற்போது விஜய் டிவியில் புதியதாக தொடங்கியிருக்கும் "சினிமா சினிமா' நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இருக்கிறேன்.
* பிரபலங்களின் திருமணத்தை "நம் வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சி மூலம் தொகுத்து வழங்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
புது மையான அனுபவம். பிரபலங்களின் திருமணத்தை நேரில் சென்று பார்க்க முடியாதவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே அவர்களுடைய சடங்குகள், சம்பிரதாயங்களைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. அதைத் தவிர திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்களைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இந்தக் கான்சப்ட்டே ரொம்ப புதுமையானது. மக்களிடம் நிறைய வரவேற்பு இருக்கிறது.
* தொடர்களில் ஏன் நீங்கள் நடிக்கவில்லை?
தொடர்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நடிப்பதில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை.
* நிகழ்ச்சி தொகுப்பாளினி தவிர வேறு எதில் கவனம் செலுத்துகிறீர்கள்?
ஸ்டேஜ் ஷோக்களில் இந்துஸ்தானி இசையில் பாடல்கள் பாடுகிறேன். பாட்டு தான் ரொம்ப பிடித்திருக்கிறது. இப்போதைக்கு முழுக்க முழுக்க இந்துஸ்தானி இசை பாடல்களில்தான் கவனம் செலுத்துகிறேன்.
* பின்னணி பாடகி ஆவதற்கு ஏதும் முயற்சி செய்கிறீர்களா?
கன் னடப் படம் ஒன்றில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். தமிழில் பாடுவதற்கான முயற்சிகள் செய்து வருகிறேன். அதற்காக இசையமைப்பாளர்களிடம் டெமோ சிடிகள் கொடுத்து வருகிறேன்.
* இந்துஸ்தானி இசையைத் தேர்தெடுத்தது ஏன்?
என் குரலுக்கு இந்துஸ்தானி இசை பொருத்தமாக இருக்கிறது. சிறுவயதில் கர்நாடக இசை கொஞ்சம் கற்றுக்கொண்டேன். மேற்கத்திய மற்றும் இந்துஸ்தானி இசை பிடித்தமானவை. எனவே அவற்றை விரும்பி கற்றுக்கொண்டேன். பொதுவாகவே எனக்கு மெலோடியான இசையைக் கேட்க ரொம்ப பிடிக்கும்.
* நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
மக் களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவதால், நிதானமாகவும், கவனமாகவும் பேசவேண்டியுள்ளது. ஏதாவது தவறாகி போனாலும் திருத்திக் கொள்ள முடியாது. மக்கள் நம்மை நேரடியாக திட்டிவிடுவார்கள். அதனால் மிக கவனத்துடன் பேச வேண்டும். சிரமங்களுக்கு ஆண்,பெண் என்ற வேறுபாடு தெரியாது. பிற துறைகளில் உள்ள சிரமங்கள் இத்துறையிலும் இருக்கின்றன.
* உங்களைப்பற்றி ரசிகர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
நிகழ்ச் சியைத் தொகுத்து வழங்கும்போது என் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். மேலும், நளினமாகப் பேசுவதாகவும் சொல்லுகிறார்கள். இப்படி மக்கள் நம்மிடம் நேரடியாக சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதை எனக்கு கிடைக்கும் பரிசாக நினைக்கிறேன்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
-
30th June 2010, 10:58 PM
#143
Senior Member
Diamond Hubber
சைமன் கோபிநாத் மற்றும் ஆண்டனியின் சமூக விரோதப் போக்கு -- சாரு நிவேதிதா June 30th, 2010
என் எழுத்தில் பரிச்சயமுள்ளவர்களுக்குத் தெரியும், நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல என்பது. கடவுள் நம்பிக்கை உள்ளவனே தவிர எனக்கென்று மத அடையாளம் கிடையாது. எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லும் வழக்கம் உள்ளவன். ஆனால் எந்த மதத்தையும் இன்னொரு மதத்தினர் புண்படுத்துவது இன்றைய கால கட்டத்தில் சமூக அமைதிக்கு ஊறு விளைவிப்பதாகவே அமையும். இந்த நிலையில் விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சி தொடர்ந்து இந்து மதத்தினரை மிகக் கேவலமாக அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்பது பற்றி ஏற்கன்வே எழுதியிருந்தேன். கூடவே சமயம் கிடைத்தால் இஸ்லாமையும் அவர்கள் சீண்டிப் பார்ப்பதும் எதிர்ப்பு வந்தால் உள்ளே அடங்கிக் கொள்வதுமாக இருக்கின்றனர். இதற்குக் காரணமானவர்கள் இரண்டு பேர். ஆண்டனி மற்றும் சைமன் கோபிநாத்.
ஒரு தாலி தேவையா இல்லையா என்ற நிகழ்ச்சியில் தாலி தேவை என்று வாதிடுகிறார் ஒரு பெண். ஆனால் குழந்தைப் பேறு சமயத்தில் டாக்டர் தாலியைக் கழற்றி வைக்கச் சொன்ன போது என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார் சைமன் கோபிநாத். கழற்றி வைத்தேன் என்கிறார் அந்தப் பெண்மணி. உடனே கோபிநாத் என்ற சமூக விரோதி அந்தப் பெண்மணியைப் பார்த்து ஆபாசமாகக் கேட்கிறார்: டாக்டர் என்ன சொன்னாலும் கேட்பீர்களா?
ஆண்டனி, கோபிநாத் என்ற இரண்டு சமூக விரோதிகளும் என்னை மட்டும் அவமானப்படுத்தவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எல்லோரையும் அவமானப்படுத்துகிறார்கள். உடனடியாக அந்த நீயா நானா நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும். இதற்கு வாசகர்கள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இது சம்பந்தமாக ஒரு இணைப்பு இதோ:
http://www.tamilhindu.com/2009/11/te...ious-feelings/
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
30th August 2010, 10:37 PM
#144
Moderator
Diamond Hubber
Originally Posted by
anbupani
-
2nd December 2010, 09:02 PM
#145
Moderator
Diamond Hubber
-
4th January 2011, 01:12 PM
#146
Senior Member
Seasoned Hubber
விஜய் டி.வி.யில் யுவன்
ஜனவரி 16-ம் தேதி யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்துகிறது விஜய் டி.வி. யுவன் ஷங்கர் ராஜாவின் இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், திரை இசைக் கலைஞர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.
பின்னணிப் பாடகர்கள் ஷங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், கார்த்திக், ஹரிசரண், ஆண்ட்ரியா, ராகுல் நம்பியார், விஜய் ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடல்களைப் பாடுகின்றனர்.
யுவனின் சகோதரர்களான பிரேம்ஜி, கார்த்திக்ராஜா, பவதாரிணி ஆகியோருடன் இளையராஜாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். "யுவன் லைவ் இன் கான்ஸர்ட்' என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்க உள்ளது.
http://dinamani.com/edition/story.as...41&SEO=&Title=
-
31st January 2011, 11:43 AM
#147
Senior Member
Seasoned Hubber
மகாராணி
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `மகாராணி' தொடர், புதிய திருப்பத்தில் பயணிக்கிறது.
பிரகாஷை எப்படியும் திருமணம் செய்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வரும் ராணி, அவன் மேல் கற்பழிப்பு என்ற பொய்யான வழக்கைத் தொடர்கிறாள். ராணி கேட்டுக்கொண்டதற்காக பொய் சாட்சி சொல்ல பிரகாஷின் சகோதரியான சுஜாவும், ஆனந்தும் தயாராக, ஆனந்தின் தாய் பங்கஜம், அப்படி அவர்கள் செய்தால் தான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறி அவர்களை தடுத்து நிறுத்துகிறார்.
மகளிர் மன்றத்தில் நீதிபதி மங்கையர்க்கரசி மற்றும் சந்தியா முன்னிலையில் ராணிக்கு ஆதரவாக தோப்பியாஸ் பொய்சாட்சி சொல்கிறான். அதன் அடிப்படையில் மகளிர் மன்றத்தின் தீர்ப்பை ராணிக்கு சாதகமாக வாசிக்க ஆரம்பித்த நேரத்தில் முக்கிய திருப்பமாக சந்தியா இடையில் வருகிறாள். ராணி வழங்கிய மருத்துவ சான்றிதழ் போலியானது என்று நிரூபிக்கிறாள். இதனைத் தொடர்ந்து வழக்கு தள்ளுபடியாகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்த அதிரடி காட்சிகள் அரங்கேறுகின்றன. ராணி, மகாவை ஒரு உயர்ந்த கட்டிடத்திற்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்கிறாள்.அவளை அங்கிருந்து பிடித்து தள்ளும்போது கால் இடறி ராணியே கீழே விழுகிறாள். அடுத்து ராணி எடுக்கும் அதிரடி நடவடிக்கை என்ன?
தாமரைக்கண்ணன் தொடரை இயக்க, பைஜ×தேவராஜ் தயாரிக்கிறார். சுலக்ஷனா, பிரவீனா, சுஜிதா, அர்ச்சனா நடிக்கிறார்கள்.
Nandri: Dailythanthi
-
31st January 2011, 12:13 PM
#148
Senior Member
Seasoned Hubber
டாப் டென் காமெடி
கலைஞர் குழுமத்தின் சேனல்களில் ஒன்றான `சிரிப்பொலி' தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ``டாப் டென் காமெடி'' நிகழ்ச்சி நூறாவது எபிசோடை தாண்டியிருக்கிறது.
நிகழ்ச்சியை ராஜி தொகுத்து வழங்க, தயாரித்து வெளியிடுபவர் சுரேஷ் குமார். ஒவ்வொரு லொகேஷனிலும் படப்பிடிப்பு நடத்தி, அந்த லொகேஷன் தொடர்பான காமெடி காட்சியை ஒளிபரப்பாக்கி வருவது நிகழ்ச்சியின் சிறப்பு.
-
31st January 2011, 12:54 PM
#149
Senior Member
Seasoned Hubber
காதல் மீட்டர்
பிரபல ஜோடிகளின் ஜாலியான ஜோடிப் பொருத்த நிகழ்ச்சி, காதல் மீட்டர். பிரபல தம்பதியர்கள் பங்குபெறும் புதுமையான இந்த நிகழ்ச்சியில் திருமணமான ஜோடிகள் ஒருவரை ஒருவர் எவ்வளவு தூரம் தெரிந்துவைத்துள்ளனர்? இருவருக்கும் பொதுவான பிடித்த விசயங்கள் என்னென்ன? என்பதை அவர்கள் அளிக்கும் பதில்களில் இருந்து வெளிக்கொண்டு வருவார்கள்.
புதுமையான இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்தி வருபவர் நடிகர் சுரேஷ். ஜோடிகளை மனம்திறந்து பதிலளிக்க வைப்பதில் இவரது சாமர்த்தியம் மகத்தானது.
இன்றும், நாளையும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி தனது மனைவியுடனும், `லொள்ளுசபா' புகழ் சுவாமிநாதன் தனது மனைவியுடனும் கலந்து கொள்கிறார்கள். முதல் சுற்றான மெமரி ரவுண்டில் அவர்களின் காதல், திருமணம், கணவன் வீட்டார்கள், பெண் வீட்டார்கள் என்ற வகையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.
கேள்விகளை முதலில் தம்பதிகளில் ஒருவரை தனியாக அழைத்து கேட்பார்கள். பிறகு அதே கேள்விக்கு தம்பதிகளில் அடுத்தவர் பதில் சொல்ல வேண்டும். இதுவும் தனியறையில் தான் நடக்கும் என்பதால், தங்கள் ஜோடி ஏற்கனவே இந்தக் கேள்விக்கு சொன்ன பதில் இவர்களுக்கு தெரியாது. ஒருவர் சொன்ன அதே விடையை மற்றவரும் சொல்வதைப் பொறுத்து பாயிண்டுகளும், பரிசுகளும் கிடைக்கும்.
-
31st January 2011, 12:56 PM
#150
Senior Member
Seasoned Hubber
காதல் மீட்டர்
பிரபல ஜோடிகளின் ஜாலியான ஜோடிப் பொருத்த நிகழ்ச்சி, காதல் மீட்டர். பிரபல தம்பதியர்கள் பங்குபெறும் புதுமையான இந்த நிகழ்ச்சியில் திருமணமான ஜோடிகள் ஒருவரை ஒருவர் எவ்வளவு தூரம் தெரிந்துவைத்துள்ளனர்? இருவருக்கும் பொதுவான பிடித்த விசயங்கள் என்னென்ன? என்பதை அவர்கள் அளிக்கும் பதில்களில் இருந்து வெளிக்கொண்டு வருவார்கள்.
புதுமையான இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்தி வருபவர் நடிகர் சுரேஷ். ஜோடிகளை மனம்திறந்து பதிலளிக்க வைப்பதில் இவரது சாமர்த்தியம் மகத்தானது.
இன்றும், நாளையும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி தனது மனைவியுடனும், `லொள்ளுசபா' புகழ் சுவாமிநாதன் தனது மனைவியுடனும் கலந்து கொள்கிறார்கள். முதல் சுற்றான மெமரி ரவுண்டில் அவர்களின் காதல், திருமணம், கணவன் வீட்டார்கள், பெண் வீட்டார்கள் என்ற வகையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.
கேள்விகளை முதலில் தம்பதிகளில் ஒருவரை தனியாக அழைத்து கேட்பார்கள். பிறகு அதே கேள்விக்கு தம்பதிகளில் அடுத்தவர் பதில் சொல்ல வேண்டும். இதுவும் தனியறையில் தான் நடக்கும் என்பதால், தங்கள் ஜோடி ஏற்கனவே இந்தக் கேள்விக்கு சொன்ன பதில் இவர்களுக்கு தெரியாது. ஒருவர் சொன்ன அதே விடையை மற்றவரும் சொல்வதைப் பொறுத்து பாயிண்டுகளும், பரிசுகளும் கிடைக்கும்.
Bookmarks