-
4th August 2011, 09:32 PM
#821
Senior Member
Seasoned Hubber
டியர் கார்த்திக்,
தங்களுடைய அன்பான பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி.
டியர் பாலா சார்,
தாங்கள் வழங்கிய ரவியின் கவிதை சூப்பர். குறிப்பாக சிவப்பு வண்ணத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள் உண்மையானவை. அந்த ரவி அவர்களை நம் அனைவருக்கும் அறிமுகப் படுத்த முடிந்தால் அல்லது அவரையும் நம் திரியில் பங்கேற்கச் செய்தால் மிக்க மகிழ்ச்சியாயிருக்கும்.
டியர் குமரேசன் பிரபு,
தாங்கள் வழங்கிய படங்களுக்கு நன்றி. அவற்றைக் கீழே தருகிறேன்.
1. நடிகர் திலகம் மறைந்த நேரமான இரவு 7.45 மணிக்கு 21.07 அன்று ஆண்டு தோறும் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செய்யும் பெங்களூரு ரசிகர்கள் இவ்வாண்டும் அதே போல் செய்யும் காட்சி

2. அந்த மெழுகுவர்த்தி ஜொலிக்கும் காட்சி

அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th August 2011 09:32 PM
# ADS
Circuit advertisement
-
4th August 2011, 11:49 PM
#822
To be very honest, I never ever imagined that Aravind, you would be a product of 90s.Especially when you corrected me in Kamal thread regarding the Kurathi Magan star cast by uploading the video clip. I felt that you should be in your 30s or 40s. It is amazing to hear people like you talking about Deiva Magan. I thought Gopala krishnan and Sura are the young guns who frequent this thread but I think you should be younger than them. Welcome Aravind and let your tribe grow!
இன்று காலையில் மனிதனும் தெய்வமாகலாம் திரைப்படத்தில் இடம் பெற்ற பால் பொங்கும் பருவம் பாடல் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தேன். படம் வெளிவந்த 1975 ஜனவரி காலகட்டத்தில் பார்த்த பிறகு அதாவது 36 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். இடையில் இந்த பாடலை பார்த்த நினைவு இல்லை.
பாடல் காட்சி ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் மதன மாளிகையை நினைவூட்டுகிறது. ஒரு வேலை அந்த பாடல் காட்சி பெற்ற வெற்றியை மனதில் கொண்டு பி.மாதவன் [அவர்தானே ராஜபார்ட்டையும் இயக்கினார்] அதை அடிப்படையாக கொண்டு எடுத்திருப்பாரோ என தோன்றுகிறது.
ஆனால் மெல்லிசை மன்னரின் மெட்டு சிருங்காரமான ராகமாலிகை என்றால் குன்னகுடியார் மெலடியை பொறுத்தவரை பின்தங்கி விட்டார். ஸ்வர பிரஸ்தாரங்களை டூயட் பாடலில் புகுத்துவது தவறில்லை. ஆனால் அதை செய்யக் கூடிய முறை ஒன்று இருக்கிறது. அப்படி இல்லாத பட்சத்தில் அது ஒரு காமடியாக [unintentional] மாறிப் போகும்.
ஆனால் யார் எந்தக் காட்சியில் சொதப்பினாலும் நடிகர் திலகம் மட்டும் தன் வேலையில் சோடை போக மாட்டார். இதிலும் அப்படியே. அந்த ஸ்டைல், காலை தூக்கி நிற்கும் போஸ், கையை அசைப்பது போன்ற காரியங்களை கச்சிதமாக செய்கிறார். குறிப்பாக இரண்டாவது சரணத்தின் தொடக்கத்தில் பாரத தேவியின் மடியில் இந்த பசுந்தளிர் விரிப்பது எதற்கு என்று உஷாநந்தினி பாட, காதலின் தேவியை அணைத்து நான் காவியம் பாடிட நினைத்து என்ற வரிகளுக்கு white pant shirt மற்றும் red inner jacket அணிந்து அவர் கொடுக்கும் போஸ் மறக்க முடியாதவை.
பாடல் காட்சி காண்பிக்கப்படுவதால் விரைவில் படத்தின் டிவிடியும் வெளிவரும் என நம்புவோம்.
அன்புடன்
-
5th August 2011, 06:01 AM
#823
Senior Member
Seasoned Hubber
டியர் முரளி,
மனிதனும் தெய்வமாகலாம் பாடல் காட்சியைப் பற்றிய தங்கள் பகிர்வு பல நினைவுகளைக் கிளறி விடுகிறது. நன்றாகப் போயிருக்க வேண்டிய படம், இசையினால் ஏமாற்றி விட்டது என்பதே உண்மை. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை இசையமைப்பாளராக வெற்றிகரமாக பயன்படுத்த ஏ.பி.என். அவர்களால் மட்டும் தான் முடிந்தது, காரணம், கதைக்களம். காதல் காட்சியில் ஸ்வரப் பிரஸ்தாரம் செய்து கச்சேரி மேடை போல் ஆக்கி விட்டு திரையரங்குகளில், சிகரெட், பீடி, தேனீர் போன்றவை நல்ல வியாபாரம் ஆவதற்கு வழி வகை செய்த நல்ல எண்ணம் மட்டுமே அந்தப் படம் கண்ட சாதனை. ஒரு ஸ்டால் உரிமையாளரிடம் ஒரு ரசிகர் பேசிக் கொண்டது இன்றும் நன்கு நினைவில் உள்ளது. இந்த மாதிரி படம் 4 வந்தால் போதும் நமக்கு பிழைப்பு நல்லா இருக்கும். அதை அவர் சொல்லி முடிப்பதற்குள் ரசிகர்கள் வந்து விட நைசாக நழுவி விட்டார். இது நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு பக்கம் மனசு கஷ்டமாயிருந்தது என்பதும் உண்மை. காவலுக்கு வேலுண்டு என்கிற சீர்காழி கோவிந்தராஜன் பாடல் மட்டுமே அப்படத்தில் ஆறுதல். பாடல்கள் மட்டும் மிகப் பிரபலமாக அமையும் விதத்தில் வேறு இசையமைப்பாளரிடம் கொடுத்திருந்தால் அப்படமும் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கும். அது மட்டுமின்றி, பால் பொங்கும் பருவம் பாடல் அதற்கு சில காலத்துக்கு முன் தான் வந்த ஒரு பிரபலமான பாடலை நினைவு படுத்தியதும் ஒரு காரணம்.
மேற்கூறிய வரிகளை அப்படியே ராஜ ராஜ சோழன் படத்திற்கும் பொருத்திக் கொள்ளலாம். அதுவும் குறிப்பாக அப்பேர்ப்பட்ட காவிய நாயகனின் வரலாற்றுப் புதினத்தில், எம்.ஆர்.விஜயா வின் குரலில் காபரே நடனம் போன்ற இசையும் ஆங்கில இசைக் கருவிகளும் பயன் படுத்தி இதே போல் கேன்டீன் வியாபாரத்தை லாபகரமாக்கிய பெருமை குன்னக்குடிக்கு உண்டு.
மொத்தத்தில் முழு சுமையினையும் தன் தலை மேல் தாங்கி படத்தை தூக்கி நிறுத்திய நடிகர் திலகத்தின் படங்களுள் இதுவும் ஒன்று.
பி.கு. - எந்த தொலைக் காட்சியில் இப் பாடல் ஒளிபரப்பப் பட்டது என்பதைக் கூற முடியுமா.
அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 5th August 2011 at 06:05 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th August 2011, 06:18 AM
#824
Senior Member
Seasoned Hubber

Where there’s Mahendra there’s bound to be a Sivaji Ganesan angle, but how will the thespian be accommodated in ‘Nadagam’? His voice will be a special attraction of the play, is all the promo says. “That’s for you to wait and watch. Chinni Jayanth has helped us on this score,” Mahendra smiles.
We wish Y.Gee.Mahendra all success in his endeavour of propagating NT in whatever opportunity that comes across.
Raghavendran
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th August 2011, 07:06 AM
#825
Senior Member
Seasoned Hubber
மிக நீண்ட நாட்களுக்குப் பின் காணக் கிடைக்காத அபூர்வ பாடல், வணங்காமுடி திரைக்காவியத்திலிருந்து. இப்பாடல் நம் நாட்டில் வெளியிடப் பட்ட குறுந்தகடு மற்றும் நெடுந்தகடுகளில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஹெலன் நாட்டியமாட நடிகர் திலகம் பார்வையிடும் பாடல் காட்சி, இப்படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணங்களில் ஒன்று என்பது மிகையன்று. ஏ குமுர்தகும்மா கொய்யாப்பழம் போலே அய்யாவைப் பாரு... என்று துவங்கும் இப்பாடலைப் பாடியவர் ஜிக்கி, இசை ஜி.ராமநாதன்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th August 2011, 09:46 AM
#826
Senior Member
Regular Hubber
Thank u raghavendra sir any luck on the Video coverage
Hi murali sir thank u
-
5th August 2011, 12:41 PM
#827
Senior Member
Senior Hubber

Originally Posted by
Arvind Srinivasan
just saw dheiva magan two days back. Just a great film and what a performance from NT right from the first scene where the elder shivaji waits for the birth of his son till the climax. It must have been the nth time i watched the movie, but NT makes sure that its an enriching experience every time. NT definitely transcends across generation. Also its very nice to see that there are people who are still propagating the legend of NT. To the persons incharge of this thread a big


. Surely this thread will help me explore more of NT's films as i was born in the nineties and wasn't able to watch most of his films. Let the legend of Nadigar Thilagam Shivaji Ganesan live on......
A warm welcome to Mr. Arvind Srinivasan to this glorious thread.
It's not a surprise that a youngster (in 20's) has become NT's fan because we've been continuously coming cross many youngsters becoming his fans.
Deiva Magan is the movie which is closest not only to my heart, but for most of NT's fans along with Vasantha Maaligai. In fact, my first posting in this thread is a short note on Deiva Magan only.
Most of NT's fans will be thinking alike in terms of great scenes in many films, which is unique only to NT. Still, an youngster like you may come up with something different, which we may have left out. We are eager to know more from you TOO.
Once again, we welcome you to this thread and come and rejoice us.
Regards,
R. Parthasarathy
Last edited by parthasarathy; 5th August 2011 at 01:23 PM.
-
5th August 2011, 01:16 PM
#828
Senior Member
Senior Hubber

Originally Posted by
raghavendra
டியர் முரளி,
மனிதனும் தெய்வமாகலாம் பாடல் காட்சியைப் பற்றிய தங்கள் பகிர்வு பல நினைவுகளைக் கிளறி விடுகிறது. நன்றாகப் போயிருக்க வேண்டிய படம், இசையினால் ஏமாற்றி விட்டது என்பதே உண்மை. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை இசையமைப்பாளராக வெற்றிகரமாக பயன்படுத்த ஏ.பி.என். அவர்களால் மட்டும் தான் முடிந்தது, காரணம், கதைக்களம். காதல் காட்சியில் ஸ்வரப் பிரஸ்தாரம் செய்து கச்சேரி மேடை போல் ஆக்கி விட்டு திரையரங்குகளில், சிகரெட், பீடி, தேனீர் போன்றவை நல்ல வியாபாரம் ஆவதற்கு வழி வகை செய்த நல்ல எண்ணம் மட்டுமே அந்தப் படம் கண்ட சாதனை. ஒரு ஸ்டால் உரிமையாளரிடம் ஒரு ரசிகர் பேசிக் கொண்டது இன்றும் நன்கு நினைவில் உள்ளது. இந்த மாதிரி படம் 4 வந்தால் போதும் நமக்கு பிழைப்பு நல்லா இருக்கும். அதை அவர் சொல்லி முடிப்பதற்குள் ரசிகர்கள் வந்து விட நைசாக நழுவி விட்டார். இது நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு பக்கம் மனசு கஷ்டமாயிருந்தது என்பதும் உண்மை. காவலுக்கு வேலுண்டு என்கிற சீர்காழி கோவிந்தராஜன் பாடல் மட்டுமே அப்படத்தில் ஆறுதல். பாடல்கள் மட்டும் மிகப் பிரபலமாக அமையும் விதத்தில் வேறு இசையமைப்பாளரிடம் கொடுத்திருந்தால் அப்படமும் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கும். அது மட்டுமின்றி, பால் பொங்கும் பருவம் பாடல் அதற்கு சில காலத்துக்கு முன் தான் வந்த ஒரு பிரபலமான பாடலை நினைவு படுத்தியதும் ஒரு காரணம்.
மேற்கூறிய வரிகளை அப்படியே ராஜ ராஜ சோழன் படத்திற்கும் பொருத்திக் கொள்ளலாம். அதுவும் குறிப்பாக அப்பேர்ப்பட்ட காவிய நாயகனின் வரலாற்றுப் புதினத்தில், எம்.ஆர்.விஜயா வின் குரலில் காபரே நடனம் போன்ற இசையும் ஆங்கில இசைக் கருவிகளும் பயன் படுத்தி இதே போல் கேன்டீன் வியாபாரத்தை லாபகரமாக்கிய பெருமை குன்னக்குடிக்கு உண்டு.
மொத்தத்தில் முழு சுமையினையும் தன் தலை மேல் தாங்கி படத்தை தூக்கி நிறுத்திய நடிகர் திலகத்தின் படங்களுள் இதுவும் ஒன்று.
பி.கு. - எந்த தொலைக் காட்சியில் இப் பாடல் ஒளிபரப்பப் பட்டது என்பதைக் கூற முடியுமா.
அன்புடன்
அன்புள்ள திரு. ராகவேந்தர் மற்றும் திரு. முரளி அவர்களுக்கு,
நான் பொதுவாக தினமும் காலை எட்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விடுவேன். நேற்று, ஒரு முக்கியமான வேலை இருந்ததால், பத்து மணிக்குப் பிறகு கிளம்பினேன். எப்போதெல்லாம் காலை பத்து மணி வரை வீட்டிலிருக்க நேரிடுகிறதோ, அப்போதெல்லாம் கூடுமானவரை, எட்டு மணி முதல் மெகா, கலைஞர், ஜெயா மற்றும் வசந்த் டிவிக்களில் ஒளிபரப்பப்படும் பழைய பாடல்களைப் பார்ப்பேன். நேற்று, மனிதனும் தெய்வமாகலாம் படத்தின் "பால் பொங்கும் பருவம்" பாடலை நானும் பார்த்துப் பழைய நினைவுகளில் மூழ்கினேன்.
நீங்கள் கூறியது போல், அந்தப் பாடல், குறிப்பாக அந்த ஸ்வர சங்கதிகளால் நிறைய கேலிக்குரிய விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக, "கப கப" என்னும்போது. இருப்பினும், நடிகர் திலகம் மட்டும் விடாமல் வழக்கம் போல், அந்தப் பாடலுக்குப் பெருமை சேர்த்திருப்பார்.
நடிகர் திலகம், உலகத்தில் இதுவரை தோன்றிய எண்ணற்ற பல அற்புதக் கலைஞர்களில், "ஜீனியஸ்" என்று சொல்லக்கூடிய, மிகச்சிறிய வட்டத்துக்குள், முதல் இடம் வகிப்பவர் என்பது எல்லோரும் அறிந்ததே. இவர்கள், எப்போதும் தொடர்ந்து சோதனை முயற்சிகளில் ஈடுபடுபவர்கள். ஆதலால், இந்த வகைப்பட்ட கலைஞர்களுக்கு, தோல்விதான் அதிகம் கிடைக்கும். இருப்பினும், தொடர்ந்து சோதனை முயற்சிகளைத் தொடருவர். ஆனால், இந்த வகையிலும், நடிகர் திலகம் நிறைய வெற்றிகளைத் தான் பெற்றார். இந்தப் பாடல், அவருடைய சோதனை முயற்சிகளில் தோல்வியைத் தழுவிய சில முயற்சிகளில் ஒன்று.
இந்தப் படத்தின் மூலம் "புத்தி மந்துடு" என்னும் தெலுங்குப் படம். அறுபதுகளின் இறுதியில், அக்கினேனி நாகேஸ்வர ராவ் இரட்டை வேடத்தில் நடித்து, மிகப் பெரிய வெற்றியை அடைந்த படம். ஆந்திர தேசத்தில், சமூகப் படங்களில், எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம், இறையாம்சத்தைப் புகுத்தி வெற்றி பெறுவார்கள். ராமனையும், கிருஷ்ணனையும் சிறிய சந்தர்ப்பத்தில் கூட, நினைவு கூர்ந்து, வெற்றியை அடைவார்கள். தமிழிலோ, சொற்பமாக வெகு சில படங்கள் தான், இந்த முயற்சியில் வெற்றி அடைந்திருக்கிறது. "எம கோலா" தமிழில் "எமனுக்கு எமன்" ஆகி, தோல்வியைத் தழுவியது ஒரு சிறிய உதாரணம். (ஏற்கனவே இது பல வருடங்களுக்கு முன் வெளி வந்த "ரம்பையின் காதல்" படத்தின் தழுவல் தான் என்பது வேறு விஷயம். இதுவே பின்னர் "அதிசயப்பிறவி" ஆகி, ரஜினி நடித்தே தோல்வியைத் தான் தழுவியது.) மனிதனும் தெய்வமாகலாம் படம் தோல்வி அடைந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம், நீங்கள் கூறியது போல், குன்னக்குடியாரின் இசை. நடிகர் திலகத்துக்கு சீர்காழி குரல் கொடுத்து மூன்று பாடல்கள். பாடல்கள் கேட்க நன்றாயிருந்தாலும், அந்தக் குரல் நடிகர் திலகத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே, சோதனை செய்து, தோல்வியைக் கொடுத்த குரல். படத்தின் தோல்விக்கு இன்று காரணம், ஜோடிப் பொருத்தம். உஷா நந்தினி அவருக்கு முதலில் இருந்தே சரியாக அமையாத ஜோடி. (இது என் சொந்த அபிப்பிராயம்.).
நான் தெலுங்குப் படத்தை பல வருடங்களுக்கு முன்னர் பார்த்திருந்தாலும், தமிழில், இது வரை இந்தப் படத்தைப் பார்த்ததில்லை. ஏனோ சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. நீங்கள் கூறியது போல், dvd சீக்கிரம் வந்தால், உடனேயே வாங்கிப் பார்க்க வேண்டும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
5th August 2011, 01:33 PM
#829
Senior Member
Devoted Hubber
டியர் பம்மல் சார் மற்றும் ராகவேந்திரா சார்,
நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு தாங்கள் அளித்துவரும் சேவை மகத்தானது .எள் என்றால் எண்ணெய்யாக வந்து நிற்கிறீர்கள். இதற்க்கெல்லாம் கைமாறாக நன்றி என்ற ஒற்றை சொல்லில் எங்கள் உணர்ச்சிகளை சொல்லிவிட முடியாது .பெற்றவர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளுக்கு எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சேவை செய்வார்களோ அதேபோல் சிவாஜி ரசிகர்களுக்கு தாங்கள் சிரமம் பார்க்காமல் சேவையாற்றி வருகிறீர்கள் .கண்டிப்பாக நடிகர்திலகத்தின் ஆத்மா தங்களை வாழ்த்திகொண்டிருக்கும்.
DEAR ARAVIND,
A VERY WARM WELCOME TO YOU,PLEASE CONTINUE YOUR VIEWS ON NT.
DEAR KUMARESAN SIR,
Thankyou very much for the sweet news which every sivaji rasigan was waiting for.please make sunday evening gala the talk of the town.In my opinion instead of releasing a classic try to get the movies which has mass appeal such as vasantha maaligai,thangapadhakkam,deivamagan,engal thanga raaja etc...
please let me know the events related to NT.my no.9632227017
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
5th August 2011, 01:34 PM
#830
Senior Member
Platinum Hubber
Yet another generation. Yet another fancy dress competition. The same veera pandiya kattabomman.
Dressed up my daugther as the great freedom fighter, showed her youtube of the great scenes, taught her the lines - and she picked up really well - and paraded her only to find that 279* other parents had got the same idea. I should have known.
Anyway, daughter got stage fear and conked out at vayalukku vandhAyA, that's another story. But the baton's been passed on - and He continues to dazzle - registered in the minds of my daughter as *sivaji uncle* - uncle to a generation young enough to be great-grand daughter.
Duty done.
* exaggeration alert - prosaic licence
Bookmarks