-
10th February 2013, 10:08 AM
#11
Moderator
Platinum Hubber
Originally Posted by
geno
ஞானக்கூத்தனின் 'புகழ்' பெற்ற நாய் கவிதை:
நாய் (1969)
காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?
இதற்குப் பின்னால் தெரிகிற 'வர்ணக்' கடுப்பு! ..
என்னங்க இது!
ஏன் இப்படி ஒரு interpretation?
கோஷமும் எதிர்கோஷமும், அவற்றலிருந்து பிரிந்த கோஷமுமாய் இருக்கும் சூழலில் (அரசியல்) புரிதல்னு ஒண்ணும் இருக்காது. இன்னைக்கு கத்துறவனுக்கு தான் எதுக்கு கத்துறோம்னு கூட தெரியாது, அவன் கிட்ட கோவிச்சிக்க எதுவும் இல்லைங்கிறார்.
The absurdity of it all, how little we know about the things we think we grapple with perfectly and get motivated by ன்ற மாதிரி'ல்ல விரியுது.
இதுல எங்கேர்ந்து வர்ணக்கடுப்பு?
எல்லாரையும் "பார்ப்பானின் எச்சிற்களைக்கு அடித்துக்கொள்ளும் நாய்கள்" ன்னுட்டார்னப் போறீங்களா??
'அந்தத் தெரு'வுக்கு
தனிப்பட வர மாட்டாமல்
கடவுளின் துணையில்
அங்கே
வருகிறான் பார்ப்பான்
சாமி
வலம் வர வேதம்பாடி.
கடவுள்னு தனியாப் போட்டப்புறம் 'சாமி'ன்ற வார்த்தையை பயன்படுத்துறார்- 'பார்ப்பான் சாமி'ன்னு அர்த்தம் வர்றாப்ல.
அந்தக் கிண்டல், stinging indictment எல்லாம் தான் அவரோட style.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
10th February 2013 10:08 AM
# ADS
Circuit advertisement
Bookmarks