-
26th April 2014, 09:10 AM
#1
Junior Member
Veteran Hubber
Makkal thilgam m.g.r. Part-9
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ்!
மக்கள் திலகத்துக்கென்று தனியொரு மகத்துவம் உண்டு.
குடும்ப தெய்வமாய் நாங்கள் போற்றி வணங்கும் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களின் ஆசியுடன்,
மக்கள் திலகம் எம்..ஜி. ஆர். திரியின் 9வது பாகத்தை துவக்கி வைப்பதில் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறேன்.
இத்திரியினில், புரட்சித்தலைவரின் புகழ் பாடும் செய்திகளை மட்டுமே பதிவிட வேண்டும் என்பதே என் விருப்பம்.
தமிழ் திரையுலகில் பாடத்தெரிந்த நடிகர்கள் மட்டுமே நிலைத்திருக்க முடியும், நீடித்திருக்க முடியும், சோபிக்க முடியும் என்றிருந்த
நிலையினை மாற்றிக் காட்டி, " கூத்தாடிகள் " என்று அழைக்கப்பட்ட நடிக சமுதாயத்துக்கு ஒரு சமூக அந்தஸ்தினையும், கவுரவத்தையும் ஏற்படுத்தி,
நடிக இனத்துக்கே ஒரு தனி பெருமையை உருவாக்கி தந்த நம் நடிகப்பேரரசர் எம்..ஜி. ஆர். அவர்கள், எவருடனும் ஒப்பிட முடியாத மாமனிதர்.
1956ம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் " வசூல் சக்கரவர்த்தி " பட்டத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொண்டிருப்பவர்தான் நமது கலை வேந்தன் எம். ஜி. ஆர் அவர்கள், குறைந்த எண்ணிக்கையில் கதாநயாகனாக (115 காவியங்களில்) நடித்து, அதிக அளவில் வெற்றிக் காவியங்களையும், வெள்ளி விழாக்காவியங்களையும், வழங்கி வரலாறு படைத்தவர்
சோதனைகளை சந்தித்து, அதனை சாதனைகளாக மாற்றிக்காட்டி சரித்திரம் படைத்த நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் அறவழி நின்று, இத்திரியினை சுமூகமாக எடுத்துச் செல்லும் பொறுப்பு நம் அனைவரையும் சார்ந்தது.
நம் மக்கள் திலகம் திரியினை பார்வையிடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. நம் திரிக்கு தனியொரு பெருமையும், மதிப்பும் உண்டு. அதை கவனத்தில் கொண்டு பதிவிடுமாறு, வேண்டுகோள் விடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன். .
தமிழக அரசியல் வரலாற்றிலும், பொன்னேட்டில் பொறிக்கத்தக்கவகையில் பொற்கால ஆட்சியினை வழங்கியவர் நமது பொன்மனச்செம்மல் அவர்கள். மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பெற்ற பெருமை, சத்துணவு தந்த நம் சரித்திர நாயகனுக்கே உண்டு. தனிப்பட்ட கொள்கை, வேறாக, மாறாகயிருந்தாலும், நாட்டு மக்களின் வாட்டம் போக்கிட அவர்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, மத்திய அரசுடன் மோதல் போக்கினை தவிர்த்து, நல்லுறவு கொண்டு திட்டங்கள் பல நிறைவேற்றிய பெருமையும் நமது நிருத்தய சக்கரவர்த்தி எம்.
ஜி. ஆர். அவர்களுக்கே உண்டு.
காலத்தை வென்ற நமது காவிய நாயகனின் புகழை, தங்களின் தற்காலிக தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டு பின்னர் அவரை மறந்துவிடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் துதி பாடும் செய்திகள் பதிவிடுவதை தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாம் பதிவிடும் எண்ணிக்கைகள் நமக்கு முக்கியமல்ல, அந்த பதிவினில் இடம் பெறும் செய்திகள் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதே எனது ஆவல்.
மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட பல அரிய ஆவணங்கள், அவரது அபூர்வ புகைப்படங்கள் மற்றும் அவரின் பெருமைகளை பறை சாற்றும் திரையுலக மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும், நமது கொள்கை வேந்தனாம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களின் இதய தெய்வம், அவர் போற்றிய, வணங்கிய தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி கரிபால்டி, பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றிய செய்திகளையும் இந்த திரியில் பதிவிடவிருக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றியை முன்னதாகவே தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வாய்ப்பினை நல்கிய மையம் திரியின் நிறுவனர்களுக்கும் , மக்கள் திலகம் திரியின் முந்தைய பாகங்களை துவக்கி சிறப்புடன் எடுத்து சென்ற
மூத்த அன்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை மக்கள் திலகம் திரியின் அனைத்து பாகங்களிலும் பங்கு பெற்ற எல்லா அன்பர்களும், நண்பர்களும் தொடர்ந்து இந்த திரியிலும் பங்கு பெற்று மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாய் இன்றும் திகழும் கலியுக கடவுள் எம். ஜி. ஆர். புகழ் பாடுவது ஒன்றே நோக்கம்' என எண்ணம் கொண்டு, தங்களின் மேலான பதிவினைத் தந்து சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
நம் இதய தெய்வத்தின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருப்புகழுக்கு இத்திரியினை அர்ப்பணிக்கிறேன்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 26th April 2014 at 11:19 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th April 2014 09:10 AM
# ADS
Circuit advertisement
Bookmarks